Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயில்.... வில் மற்றும் அம்புகளை எய்து... மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் வில் மற்றும் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

நோர்வேயில்... வில் மற்றும் அம்புகளை எய்து, மக்கள் மீது தாக்குதல் -5 பேர் வரையில் உயிரிழப்பு!

நோர்வேயில் வில் அம்புகளை எய்து மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, சம்பவத்தோடு தொடர்படைய 37 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நோர்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில் காங்ஸ்பெர்க் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார். மேலும் துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் 5 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், கைது செய்யப்பட்ட  சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1244777

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகம் எங்கும்… பொது மக்களை குறி வைத்து, கொல்லும் கிறுக்கு பிடித்தவர்கள் இருந்தாலும்…

இவ(ன்)ர் ஏன்… வில்லு, அம்பை… தெரிந்தெடுத்தா(ன்)ர் என்பதுதான் புரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உலகம் எங்கும்… பொது மக்களை குறி வைத்து, கொல்லும் கிறுக்கு பிடித்தவர்கள் இருந்தாலும்…

இவ(ன்)ர் ஏன்… வில்லு, அம்பை… தெரிந்தெடுத்தா(ன்)ர் என்பதுதான் புரியவில்லை. 

காட்டுவாசி 

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kapithan said:

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

அதை ஆதவன் நியூஸ்காரரிட்டை போய் கேளுங்க சார் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

சிறியர் மன்னிக்கோணும்.. 

தலையங்கம் வில் மற்றும் அம்புகளை எய்து என்றிருக்கிறது.

வில்லால் அம்பு எய்தப்படும்.  அம்புதான் சேதத்தை ஏற்படுத்தும். 

 

6 hours ago, குமாரசாமி said:

அதை ஆதவன் நியூஸ்காரரிட்டை போய் கேளுங்க சார் 🤣

 

On 14/10/2021 at 05:44, தமிழ் சிறி said:

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் விம், அம்புடன் வந்த மர்ப நபர் மக்களை அம்புகள் எய்தி தாக்கியுள்ளார்.

கபிதன் சார்...   நீங்கள்,  
தலையங்கத்தை மட்டும்  வாசித்து விட்டு,  குற்றம் கண்டு பிடிக்கிறீர்கள்.
உள்ளுக்கு ஒரு இடத்தில்... "விம்" என்று எழுதியுள்ளார்கள்.
அதுக்கு... என்ன சொல்லப் போகிறீர்கள்.   🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கபிதன் சார்...   நீங்கள்,  
தலையங்கத்தை மட்டும்  வாசித்து விட்டு,  குற்றம் கண்டு பிடிக்கிறீர்கள்.
உள்ளுக்கு ஒரு இடத்தில்... "விம்" என்று எழுதியுள்ளார்கள்.
அதுக்கு... என்ன சொல்லப் போகிறீர்கள்.

வில் அம்புடன் வந்த நபர் ...ஒருகட்டத்தில் வீட்டிற்கு போய் விம் சோப்பையும்  எடுத்துக்கொண்டுவந்து அதன் மூலமும்  தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ராம்போ பட பிரியர் போல 
நோர்வெ காவல்துறை  சில்வஸ்டெர் ஸ்டாலோனையும் விசாரிப்பது நல்லது நிறைய துப்புக்கள் கிடைக்கலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வில் அம்புடன் வந்த நபர் ...ஒருகட்டத்தில் வீட்டிற்கு போய் விம் சோப்பையும்  எடுத்துக்கொண்டுவந்து அதன் மூலமும்  தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ராம்போ பட பிரியர் போல 
நோர்வெ காவல்துறை  சில்வஸ்டெர் ஸ்டாலோனையும் விசாரிப்பது நல்லது நிறைய துப்புக்கள் கிடைக்கலாம் 

கொரோனாவில் இருந்து... தப்பிக்க,
"விம்"  சோப்பையும்.... கொண்டு திரிகிறார் போலுள்ளது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரிடம் இஸ்லாமிய தீவிரமயமாக்கலின் அறிகுறிகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், அவர் மீது பொலிஸார் முன்னதாக சந்தேகம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

37 வயதான டேனிஷ் குடிமகனான அவர், காங்ஸ்பெர்க்கில் நேற்று (புதன்கிழமை) இரவு நான்கு பெண்களையும் ஒரு ஆணையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

68 கிலோமீட்டர் தெற்கே நோர்வேயின் காங்ஸ்பெர்க்கின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்தது

பிராந்திய பொலிஸ்துறைத் தலைவர் ஓலே பிரெட்ரூப் சவெருட் இதுகுறித்து கூறுகையில், ‘அதிகாரிகள் கடைசியாக அந்த மனிதருடன் 2020இல் தொடர்பு கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 50 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள். அவர் கைது செய்யப்பட்டு ஒரே இரவில் பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1244937

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வேயில் நடந்த கொடிய வில் மற்றும் அம்பு தாக்குதலில் கைது செய்யப்பட்டவர் இஸ்லாமியராக மாறியவர்

 ஓ அமைதி மார்க்க பேர்வழியா ....அப்பவே தோணிச்சு இருந்தாலும் அடக்கி வாசிப்போம் என்று வெளியாலை விடலை 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நோர்வே வில்- அம்பு தாக்குதல்: சந்தேக நபர் பொலிஸாருக்கு நன்கு அறியப்பட்டவர்!

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2021 at 06:27, அக்னியஷ்த்ரா said:

விஜயகாந்த் படத்தில் வெள்ளை போலீஸ்காரங்களை எப்பவும் அரை லூசுகளாக தான் காட்டுவினம் 
இப்போ  கேள்விப்படும் செய்திகளை பார்த்தால் அது உண்மை போலத்தான் படுது. 
நியூசிலாந்தில் என்னவென்றால் கத்தியால் குத்தி கிழறி முடிக்கும்வரை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்து வேடிக்கை பார்த்தர்களாம், இந்த நோர்வே ஆள் என்னவென்றால் அதேபோல் புதுசாக இன்னொரு கதையை விடுது   

 

On 15/10/2021 at 09:12, தமிழ் சிறி said:

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

 

29 minutes ago, nochchi said:

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

 

 

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

நோர்வே மற்றும் லண்டன் கொலைகள் தொடர்பாக யேர்மனியின் DLFஎன்ற செய்திநிறுவனம் சுட்டியதோடு தங்களது செய்தியாளர்களின் கண்ணோட்டங்களையும் பதிவு செய்திருந்தது.

யேர்மனியிலே ஒருபுறம் மதவாமும் சமாந்தரமாக வலதுசாரிகளின் எழுச்சியும் நகர்கிறது. இரண்டாலும் அதிகம் பாதிப்பினை எதிர்கொள்ளப்போவதென்னவோ எம்மைப் போன்ற அகதிகளாக வந்தோராகத்தானிருக்க வாய்ப்புள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

அதிகம் பாதிப்பினை எதிர்கொள்ளப்போவதென்னவோ எம்மைப் போன்ற அகதிகளாக வந்தோராகத்தானிருக்க வாய்ப்புள்ளதாகவே நோக்க வேண்டியுள்ளது.

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாத்தியார் said:

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

எமது அடுத்தலைமுறை பிரச்சனைகளைச் சந்திக்கத்தொடங்கிவிட்டது. ஆனால் பெரிய அளவில் இல்லை. அதற்கு அவர்களுக்குள்ள மொழியறிவும் சட்டப்பாதுகாப்பும் கரணியாமனபோதும் , எவளவு நாள் என்பதே விடைதெரியாத வினாவாகும். எங்கள் தேசம் விடுதலையடையாதவரை என்னதான் உயரங்களை எமது இளவல்கள் தொட்டாலும், மிகக்குறைந்த தொகையினரான  எம்மால் பெரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாதென்பதே மெய்நிலை.  எமது இனத்தின் வாழ்வு எம் தேசவிடியலிலேயே தங்கியுள்ளது. துருக்கியருக்கு ஒருமுறை பிரச்சினை என்றவுடன் துருக்கிய அதிபர் வந்தார். ஆனால், எமக்கு? திரள்நிலையடைவேண்டிய எமது இனம் பிளவுண்டு துகள்களாகி வருகின்ற ஆரோக்கியமற்ற சூழலை யார் மாற்றுவார் என்றே புரியவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வாத்தியார் said:

எங்களைவிட எங்களின் பிள்ளைகள் தான் அதிகம் பாதிக்கப்படப் போகின்றனர்
நான் ஊருக்குத் திரும்ப ஆயத்தம் செய்கின்றேன்

 

12 minutes ago, nochchi said:

எமது அடுத்தலைமுறை பிரச்சனைகளைச் சந்திக்கத்தொடங்கிவிட்டது. ஆனால் பெரிய அளவில் இல்லை. அதற்கு அவர்களுக்குள்ள மொழியறிவும் சட்டப்பாதுகாப்பும் கரணியாமனபோதும் , எவளவு நாள் என்பதே விடைதெரியாத வினாவாகும். எங்கள் தேசம் விடுதலையடையாதவரை என்னதான் உயரங்களை எமது இளவல்கள் தொட்டாலும், மிகக்குறைந்த தொகையினரான  எம்மால் பெரிய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவரமுடியாதென்பதே மெய்நிலை.  எமது இனத்தின் வாழ்வு எம் தேசவிடியலிலேயே தங்கியுள்ளது. துருக்கியருக்கு ஒருமுறை பிரச்சினை என்றவுடன் துருக்கிய அதிபர் வந்தார். ஆனால், எமக்கு? திரள்நிலையடைவேண்டிய எமது இனம் பிளவுண்டு துகள்களாகி வருகின்ற ஆரோக்கியமற்ற சூழலை யார் மாற்றுவார் என்றே புரியவில்லை.
 

வேறு வழியில்லை இந்த நாடுகள்தான் எமது எம் சந்ததிகளுனதும் நாடுகள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கும், வெள்ளை இன துய்மைவாத அடிப்படைவாததுக்கும் எதிரான அணியில் நாமும் பிள்ளைகளும் இணைந்து  இந்த இரெட்டை எதிர்களை எதிர்த்து போராடுவதே ஒரே வழி.

இந்த அடிப்படையில்தான் என்னால் முடிந்தவரை பிரெக்சிற்றை எதிர்த்து வேலை செய்தேன்.

இனியும் விடுவதாக இல்லை.

இலங்கை போல இல்லை - இங்கே நாம் முயன்றால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2021 at 04:12, தமிழ் சிறி said:

நோர்வே பொலிஸ்காரர்… ரொம்ப மென்மையானவர்கள் போலுள்ளது. 😂

அவர்கள்…  ஜேர்மன், பிரான்ஸ் பொலிஸ்காரரிடம்… “ட்ரெயினிங்” எடுப்பது நல்லது. 🤣

சுவிசை விட்டதை மென்மையாக கண்டிக்கிறேன்.😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, nunavilan said:

சுவிசை விட்டதை மென்மையாக கண்டிக்கிறேன்.😃

அடி பலமோ? 😁

Vadivelu Look GIF - Vadivelu Vadivel Look - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அடி பலமோ? 😁

Vadivelu Look GIF - Vadivelu Vadivel Look - Discover & Share GIFs

 சா சா 😃சுவிஸ் பொலிசை ஒப்பிடாமல் என்ன ஒப்பீடு அண்ணை.😄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நேற்று யூகேயில் ஒரு எம்பியை அவர் மக்களிடம் குறை கேட்டு கொண்டிருக்கும் போது குத்தி கொன்று விட்டார்கள். 

கொலையாளி - இஸ்லாமிய அடிப்படைவாதிதான்.

அவர்கள் தான் இஸ்லாமியர்கள் என்றால் உருகி ஊத்துப்படும் ஆட்கள் ஆயிற்றே ....பொல்லை கொடுத்துவிட்டு அடி வாங்குரினம், கட்டுப்பாடின்றி  உள்ளவிட்டால் இப்படி  செத்து செத்து விளையாடவேண்டியதுதான்   

11 hours ago, nochchi said:

மிகவும் ஆபத்தானதொரு சூழல்.  மதவாதம் உலகை அழித்துவருகிறது. இலங்கை, இ(கி)ந்தியா, இஸ்ரவேல், ஆப்கானிஸ்தான்.....  எனத் தொடரும் நிலை மனிதகுல அழிவுக்கே வழிவகுத்து வருகின்றது. மதபோதனைகள் மனிதர்களைப் பக்குவப்படுத்துகிறதா அல்லது பழியெடுக்கப்பயிற்றுவிக்கப்படுகின்றதா? என்ற ஐயம் எழுவது தவிர்க்கமுடியாதது.     

அதற்குத்தானே தமிழில் சரியாக பெயர் வைத்துள்ளனர். 

'மதம்'

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, manimaran said:

அதற்குத்தானே தமிழில் சரியாக பெயர் வைத்துள்ளனர். 

'மதம்'

'மதம்' பீடிக்கக்கூடாதது. அது எந்த மதமாயினும். அதனால்தான் என்னவோ தமிழர்கள் 'சமயம்' என்றழைத்தனர் என்று நினைக்கின்றேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.