Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சுரேன் ராகவன் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

November 11, 2021
spacer.png

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தமக்கு 2021 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி 10 மில்லியன் ரூபாவில் இரண்டு மில்லியன் ரூபாவை முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் புனர்நிர்மாண நடவடிக்கைக்களுக்காக ஒதுக்கியுள்ளார்.

ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 4 மில்லியன் ரூபா ஒதுக்கியிருந்த நிலையில் மேலும் 2 மில்லியன் ரூபாவை ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஆலய நிர்வாகசபைத் தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக ஒதுக்கியுள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் 14 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதுடன் மக்களுக்கான பல அபிவிருத்தித் திட்டங்களும் உள்ளடங்குகின்றன.

இதேவேளை மன்னார் மாவட்டத்திற்கு 1.25 மில்லியனும் வவுனியா மாவட்டத்திற்கு 1.25 .மில்லியனும் கொழும்பு மாவட்டத்திற்கு 1 மில்லியனும் கம்பஹா மாவட்டத்திற்கு 0.5 மில்லியன் ரூபாவும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://globaltamilnews.net/2021/168537

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்று வந்துவிட்டால் பாமரனும் கலாநிதியும் ஒன்றுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

மழை, தண்ணீருக்கு பின் சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மறுபடியும் விலை ஏறி விட்டதாக அறிய முடிகிறது.. கோயில், குளம் என்று குடுக்கும் பணத்தை வறுமைக்குள் வாழுகின்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க யாருக்கும் மனசு வராதா..?

  • கருத்துக்கள உறவுகள்

7320-AF43-EA39-43-BE-9721-20355807338-C.
சுரேன் ராகவனின் முகநூலில், 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

மழை, தண்ணீருக்கு பின் சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மறுபடியும் விலை ஏறி விட்டதாக அறிய முடிகிறது.. கோயில், குளம் என்று குடுக்கும் பணத்தை வறுமைக்குள் வாழுகின்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க யாருக்கும் மனசு வராதா..?

எங்கட பக்கம் சில Youtube channel  பொடியங்கள் தன்னார்வலர்களாக இறங்கி மக்களின் குறைகளை காட்ட அதனைப் பார்க்கும் புலம்பெயர் உறவுகள் தம்மாலான உதவிகளை செய்கின்றனர்.

பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு போட்டால் கையாடல் செய்துபோட்டார்கள் என்று குற்றம் சுமத்தமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, யாயினி said:

மழை, தண்ணீருக்கு பின் சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மறுபடியும் விலை ஏறி விட்டதாக அறிய முடிகிறது.. கோயில், குளம் என்று குடுக்கும் பணத்தை வறுமைக்குள் வாழுகின்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க யாருக்கும் மனசு வராதா..?

அவர் இப்போ தான் முதலீடு செய்து கடை விரிக்க ஆரம்பிக்கிறார், அதற்கிடையில் கடையை மூடும் யோசனையை வைக்கிறீர்கள். அவர் ஒன்றும் தன் சொந்தப்பணத்தை செலவிடவில்லை. செலவிடவும் மாட்டார். ஏழைகளுக்கு செய்தால் அந்தச் செய்தி வெளியில் வராது, பிரபல்யமான செயல்களுக்கு செய்தால் அவர் பிரபல்யமாவார். பலர் கூடுகிற இடமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

மழை, தண்ணீருக்கு பின் சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மறுபடியும் விலை ஏறி விட்டதாக அறிய முடிகிறது.. கோயில், குளம் என்று குடுக்கும் பணத்தை வறுமைக்குள் வாழுகின்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க யாருக்கும் மனசு வராதா..?

நியாயமான கேள்விதான்.

ஆனால் இந்த பணத்தை அவர் இஸ்டபடி பகிர்ந்தளிக்க முடியுமா என தெரியவில்லை.

அப்படி என்றால் எல்லாரும் “வறுமையில் வாடும்” தமது உறவினர்க்கு கொடுத்து விடுவார்கள்.

இந்த பணத்தை ஒரு அங்கீகரிக்கபட்ட developmental project இற்கே பயன்படுத்த முடியுமோ? சரியாக தெரியவில்லை.

ஆனால் இதை இன்னொரு ஏழைகளின் மீட்பு திட்டத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம் (கல்வி, அடி கட்டுமான வசதி).

ஆனால், யாழ்பாணத்துக்கு வெளியே உள்ள கோவில்கள் புலம் பெயர் காசை காண்பதில்லை.  நான் 2016ம் வருடம் போன போது கோவில் அதிக மாற்றம் இன்றியே இருந்தது.

செம்மணி சுடலை ரோட் வளைவை, யாழில் கோவில்களை பெரும் எடுப்பில் கட்ட சொல்லபடும் காரணம் “தமிழர் மரபுரிமை சின்னங்களை பேணல் அவசியம்” என்பதே.

நாயாறு குடியேறற்றங்களில் இருந்து சில மைல் தொலைவில், கேப்பாபுலவு இராணுவ ஆக்கிரமிப்பு பகுதியியை ஒட்டி இருக்க்கும் வற்றாபளைக்கு, யாழில் இருக்கும் கோவில்களை விட இந்த காராணம் அதிகம் பொருந்தும்.

அது சரி ஏனைய தமிழ் எம்பிக்களுக்கு ஒதுக்கபடும் பணம் என்னாகிறது?

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, MEERA said:

7320-AF43-EA39-43-BE-9721-20355807338-C.
சுரேன் ராகவனின் முகநூலில், 

அப்படியே சுமந்திரனின் முகநூலில் இருந்து அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில்  செய்யப்பட்டவைகளையும் போடலாம் தானே 🤪

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போய் விடும் என்று நினைக்குமாம்.🤣

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, zuma said:

அப்படியே சுமந்திரனின் முகநூலில் இருந்து அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில்  செய்யப்பட்டவைகளையும் போடலாம் தானே 🤪

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போய் விடும் என்று நினைக்குமாம்.🤣

தேசியப்பட்டியல் தான் எங்களுக்கு தெரியும்🤪🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்
On 13/11/2021 at 03:19, ஏராளன் said:

எங்கட பக்கம் சில Youtube channel  பொடியங்கள் தன்னார்வலர்களாக இறங்கி மக்களின் குறைகளை காட்ட அதனைப் பார்க்கும் புலம்பெயர் உறவுகள் தம்மாலான உதவிகளை செய்கின்றனர்.

பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு போட்டால் கையாடல் செய்துபோட்டார்கள் என்று குற்றம் சுமத்தமாட்டார்கள்.

பல இளைஞர்கள் நன்மை செய்கின்றனர்...பாராட்ட பட வேண்டிய விடயம் ....தங்களுக்கு கிடைக்கும் வருமானத்திலும் சிறு தொகையை உதவிசெய்ய இவர்கள் பயன் படுத்துகிறார்கள்....அது மிகவும் சிறப்பானது

பயனாளிகள் சிலரின் தேவைகள் ஏற்று கொள்ள கூடியதாகவும் இல்லை...பாடசாலைக்கு செல்ல .சைக்கிள் தேவை என அதிகம் பேர் கேட் கின்றனர் ....ஒரு காலத்தில் மாணவர்கள் பல தூரம் நடந்து தான் பாடசாலை சென்றனர்...

  • கருத்துக்கள உறவுகள்

கூழுக்கு பருக்கை இல்லை என்போருமுண்டு, பாலுக்கு சீனி இல்லையென்போருமுண்டு. இதுதான் உலகம்! அவரவர்க்கு அவரவர் தேவை பெரிது.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2021 at 19:08, யாயினி said:

மழை, தண்ணீருக்கு பின் சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் மறுபடியும் விலை ஏறி விட்டதாக அறிய முடிகிறது.. கோயில், குளம் என்று குடுக்கும் பணத்தை வறுமைக்குள் வாழுகின்ற மக்களுக்கு பகிர்ந்து கொடுக்க யாருக்கும் மனசு வராதா..?

நியாயமான கேள்விதான் ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கான தேவை என்பது குறைந்தபாடில்லை எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு கொடுத்தாலும் தமிழ் மக்களின் தேவை என்பது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது

On 14/11/2021 at 00:56, putthan said:

பல இளைஞர்கள் நன்மை செய்கின்றனர்...பாராட்ட பட வேண்டிய விடயம் ....தங்களுக்கு கிடைக்கும் வருமானத்திலும் சிறு தொகையை உதவிசெய்ய இவர்கள் பயன் படுத்துகிறார்கள்....அது மிகவும் சிறப்பானது

பயனாளிகள் சிலரின் தேவைகள் ஏற்று கொள்ள கூடியதாகவும் இல்லை...பாடசாலைக்கு செல்ல .சைக்கிள் தேவை என அதிகம் பேர் கேட் கின்றனர் ....ஒரு காலத்தில் மாணவர்கள் பல தூரம் நடந்து தான் பாடசாலை சென்றனர்...

புத்தர் அண்ணா நீங்கள் எனக்கு திரும்பவும் அனுப்பிய பணத்தில் உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணம் இதுவும்  ஒன்று

 ஒருவருக்கு கொடுத்தால் இன்னொருவருக்கு கோபம் அதைவிட பணத்தேவைகள் அதிகம் காட்டுகிறார்கள்.இதனால் எனக்கு கெட்ட பெயரும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நியாயமான கேள்விதான் ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ் மக்களுக்கான தேவை என்பது குறைந்தபாடில்லை எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு கொடுத்தாலும் தமிழ் மக்களின் தேவை என்பது இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது

 

உண்மை புரிகிறது..சில வேளைகளில் ஒன்றை கேட்டு செய்து முடிக்க முதல் மற்றைய தேவைகளை அடுக்கி கொண்டே போகிறார்கள்... அமைதியாக நாம் கதைத்தால் வெளி நாட்டில் தானே இருக்கிறியள் கேக்கிறத செய்யுங்களன் என சொல்கிறார்கள்..இது என் காதால் கேட்டு எனக்கு வேணுமா என்று நினைத்த தருணமும் இருக்கிறது..🙆✍️

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

உண்மை புரிகிறது..சில வேளைகளில் ஒன்றை கேட்டு செய்து முடிக்க முதல் மற்றைய தேவைகளை அடுக்கி கொண்டே போகிறார்கள்... அமைதியாக நாம் கதைத்தால் வெளி நாட்டில் தானே இருக்கிறியள் கேக்கிறத செய்யுங்களன் என சொல்கிறார்கள்..இது என் காதால் கேட்டு எனக்கு வேணுமா என்று நினைத்த தருணமும் இருக்கிறது..🙆✍️

தற்போது வெளிநாடு என்றவுடன் அதிக எதிர்பார்ப்புடன் நமது மக்கள் உள்ளார்கள் சிறிய உதவிகளை விட பெரிய உதவிகளை விரும்புகின்றனர். அவர்களும் பழகிவிட்டார்கள் அவர்களையும் மாற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே?

ஆனால் தற்போது நாட்டில் உள்ள நிலைமையைப் பொறுத்த வரையில் இனி வெளிநாட்டிலுள்ள உதவிகளே பாரிய சுமையை குறைக்கும் என்று நான் நினைக்கிறேன் காரணம் இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றம் பொருட்களுக்கு அதிகளவான விலையும் பொருட்கள் தட்டுப்பாடும் இறக்குமதி குறைவும். இயற்கை அழிவும் மழை வெள்ளம் நிலச்சரிவு போக்குவரத்து தடைப்பட்டு இருக்கிறது தற்போது அதனால் மரக்கறி வகைகள் சரியான தட்டுப்பாடாக உள்ளது அதிக விலை 

தக்காளி கிலோ 600 ரூபாவுக்கு மேல் இங்க 

  • கருத்துக்கள உறவுகள்

காலில் வந்த ஒரு வருத்தத்திற்கு அங்கேயே வெற்றிகரமாக அரச மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றிருக்கலாம் ஆனால் வாடகை கார் பிடித்து கொழும்பிற்கு மருத்துவமனைக்கு வந்தார்களாம்.இப்படியும் செய்கிறார்களாம் உறவினர் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒலை குடிசையில் வாழும் மக்களும் இருக்கின்றனர் அவர்களுக்கு உ தவிசெய்யலாம்...
படிக்க பாடசாலை போக சைக்கிள் தேவையாம் ....எமது நண்பர்கள் பல மைல்கள் நடந்து வந்து கல்விகற்று மருத்துவர்கள்,பொறியியளாலர்கள் என  வந்துள்ளனர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.