Jump to content

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்


Recommended Posts

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்

விடை பெறுகிறார் வில்லியர்ஸ்

 

தென்னாபிரிக்கா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஏபிடி வில்லியர்ஸ் ஓய்வை அறிவித்துள்ளார்.

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்.

இவர் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,765 ஓட்டங்களை குவித்துள்ளார்.

228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,577 ஓட்டங்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1,672 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

மேலும், ஐபிஎல் போட்டித் தொடரில் ரோயல் செலன்ஞர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டி வில்லியர்ஸ் 5,162 ஓட்டங்களை குவித்திருக்கிறார்.

மேலும் நான் விளையாட்டை முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை என பதிவிட்டுள்ளார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கவலைதான் ஆனாலும்  பை .....பை    சென்றுவாருங்கள்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான துடுப்பாட்டக்காரரும், சிறந்த களத்தடுப்பு வீரரும். 💐

The one and only 360 degree Batsman. Everything needs to end at one point. All the very best AB.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கட் வீரர்களில் கிறிஸ் கெயில் மாதிரி இவரும் ஒருவர்.

ஒரு காலத்தில் இவரைப் பார்க்கவே சனத்திரள் கூடும்.

அடித்தா  மொட்டை இல்லாவிட்டால் குடும்பி.

குடும்பத்துடன் ஓயவாக இருங்கள்.

தகவலுக்கு நன்றி நுணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துவிதமான கிரிக்கெட் என்று லீக் போட்டிகளையும் சேர்த்து சொன்னாரா தெரியவில்லை.

போன ஐபி எல்லில் வில்லியர்ஸ் ஜொலிக்கவில்லை  , ஆனாலும் அதற்கு முந்திய போட்டிகளில் எல்லாம் நொருக்கி தள்ளினார் மனுசன்.

தென்னாப்பிரிக்க அணியிலிருந்து உச்சக்கட்ட ஆடும் திறமையில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்தார் . பின்னர் அணிக்கு திரும்ப வாய்ப்பு கேட்டார் மறுத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

இதுவும் ஒரு அவசர முடிவாயிருக்கலாம், இந்திய  அணியில்  சச்சின் தோனி டிராவிட்  சேவாக் உட்பட கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளும்வரை கட்டையை போட்டுக்கொண்டு அணியில் அடம்பிடித்து நின்றார்கள்.

அந்த வகையில்  ஆட்டத்திலும் ஓய்விலும் எப்போதும் அதி உச்ச கெளரவத்தை கடைபிடிக்கும் வில்லியர்ஸ் மானஸ்தன்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

அனைத்துவிதமான கிரிக்கெட் என்று லீக் போட்டிகளையும் சேர்த்து சொன்னாரா தெரியவில்லை.

போன ஐபி எல்லில் வில்லியர்ஸ் ஜொலிக்கவில்லை  , ஆனாலும் அதற்கு முந்திய போட்டிகளில் எல்லாம் நொருக்கி தள்ளினார் மனுசன்.

தென்னாப்பிரிக்க அணியிலிருந்து உச்சக்கட்ட ஆடும் திறமையில் இருக்கும்போதே ஓய்வை அறிவித்தார் . பின்னர் அணிக்கு திரும்ப வாய்ப்பு கேட்டார் மறுத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

இதுவும் ஒரு அவசர முடிவாயிருக்கலாம், இந்திய  அணியில்  சச்சின் தோனி டிராவிட்  சேவாக் உட்பட கழுத்தை பிடிச்சு வெளியில் தள்ளும்வரை கட்டையை போட்டுக்கொண்டு அணியில் அடம்பிடித்து நின்றார்கள்.

அந்த வகையில்  ஆட்டத்திலும் ஓய்விலும் எப்போதும் அதி உச்ச கெளரவத்தை கடைபிடிக்கும் வில்லியர்ஸ் மானஸ்தன்தான்.

அவுஸ்ரேலியாவில் ந‌ட‌க்கும்  விக்வாஸ் விளையாட்டிலும் விளையாடினார் அங்கையும் பெரிசா சாதிக்க‌ வில்லை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா சாதிக்காட்டியும் வ‌ங்ளூர் அணியின் ப‌ல‌ வெற்றிக்கு இவ‌ரே முக்கிய‌ கார‌ண‌ம்

கிறிஸ் கெயில‌ விட‌ இப்ப‌வே ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடும் ஏபி வில்லியர்ச‌ பாராட்ட‌னும்

இவ‌ர் மைதான‌த்தில் நின்றால் அணி எவ‌ள‌வு ஓட்ட‌ம் எடுப்பார்க‌ள் என்று க‌ணிக்கிற‌து சிர‌ம‌ம்

ஜ‌பிஎல்ல‌ இர‌ண்டு அணிக்காக‌ ம‌ட்டுமோ விளையாடினார்
ஆர‌ம்ப‌த்தில் டெல்லி பிற‌க்கு வ‌ங்க‌ளூர்..................😀😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் நன்கு பிடித்த கிறிக்ட் வீரர் என்பதை விட மிகவும் நல்ல மனிதர் .உங்கள் ஓய்வு காலங்களில் வேறு விதங்களில் கிரிக்கற் உலகத்தில் பங்காற்றுவீர்கள் என்று எதிர் பாக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள விளையாட்டுக்களில் இருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அணியைப் பலப்படுத்தும் வகையில் பயிற்றுனர் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது

வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

கள விளையாட்டுக்களில் இருந்து ஒய்வு பெற்றாலும் தொடர்ந்தும் அணியைப் பலப்படுத்தும் வகையில் பயிற்றுனர் குழுவில் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது

வாழ்த்துக்கள் 

வாத்தி
தென் ஆபிரிக்கா அணியில் தேர்வுக்குழுவில் இருந்து வீர‌ர்க‌ளுக்குள் ஒற்றுமை இல்லை

இன‌ வெறி இப்ப‌வும் விளையாட்டில் இருக்கு..............எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ளை சீக்கிர‌மே அணியில் இருந்து ஓர‌ம் க‌ட்டின‌வ‌ர்க‌ள்

ஓர‌ம் க‌ட்ட‌ ப‌ட்ட‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் இங்லாந் உள்ளூர் கில‌ப்பில் விளையாடின‌ம்

தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து
இங்லாந் நாட்டுக்காக‌ விளையாடின‌ வீர‌ர்க‌ள் ப‌ட்டிய‌ல் நீள‌ம் வாத்தி.....................😁😀
 

Link to comment
Share on other sites

வேறு நாடுகள் இவரை பயிற்சியாளராக நிச்சயமாக தேர்ந்தெடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்று நிம்மதியாக ஓய்வெடுக்க வாழ்த்துக்கள் 360..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.