Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

ஹாஹஹா…. நுணாவிலான் இப்ப அடிச்சது “சிக்ஸர்” 👍🏼 🏏 🤣

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

இன்னொருதடவை சுமந்திரனை கனடாவிற்குக் கூப்பிட்டு அடிச்சுத் துரத்தினால் US இந்த இளைய(🤪) குண்டர் கூட்டத்தின் சமராடும்(தூசண) திறனைக் கணடு, தனிநாடு தருவினம் எதற்கும் ஒருக்கா முயற்சி செய்யுங்கோ...🤪

2 tweet ஐப் பார்த்து தனது வெளியுறவுக் கொள்கையை USA மாற்றியது என்று நம்பும் அரசியல் மேதாவிகளை என்னவென்று சொல்வது? 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

தலைவர் அரசியலை நம்பி போராட தொடங்கவில்லை, ஆயுதத்தை நம்பியே தொடங்கினார். ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அமைதிப்படை காலத்திலேயே உணர்ந்திருந்தார். 

****
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

 

10 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

Expand  

சாமான்யர்களுக்கு இது புரியாது ஐயா. தயவுசெய்து நேரத்தை இவர்களுக்காக வீணாக்காதீர்கள்.

🤪

10 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

Expand  

இணைந்த வடக்கு கிழக்கு Union (?) க்கு சுமந்திரன் அல்லது சாணக்கியன்  முதலமைச்சர் ஆக வருவார் இருந்து பாருங்கள்.

 

 

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதோ, இரெண்டாவதோ, இடையில் ஒன்றோ - இப்போதைக்கு அதை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

புலம்பெயர் வீரக்குட்டிகள் இதை ஏற்காயினம். பரவாயில்லை அவர்கள் தமக்கு தெரிந்த வழியில் முயலட்டும்.

முன்பே சொன்னது போல இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

வட அயர்லாந்தின் இயன் பேஸ்லி சீனியர் தம்பக்கத்தில் இருந்த “வீரகுட்டிகளை” இப்படி மிக லாவகமாக பயன்படுத்தி ஐ ஆர் ஏ உடனான தன் பேரம் பேசும் வலுவை அதிகரித்தார். 

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots 🤣.

7 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

பதிலுக்கு நன்றி.

ஓம், கோவா, லட்சதீவு, பாண்டிச்சேரி, டெல்லி - இவை யூனியன் டெரிடரிகள்.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

7 minutes ago, goshan_che said:

இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும்

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MullaiNilavan said:

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

முல்லை,

நான் சுத்துமாத்தின் ஆதரவாளன் இல்லை. அவரின் தனிபட்ட ஊர் தடிப்பு, attitude பற்றி நீங்கள் முந்திய பதிவில் எழுதியதுதான் என் கண்ணோட்டமும்.

இதுவரை தன் சுத்மாத்தை தமிழரிடம் காட்டினார். இப்போதாவது மாற்று தரப்புகளி காட்டமாட்டாரா என்ற நப்பாசைதான்.

சும்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

அதே போல் டயஸ்போரா அலையன்ஸ் அமெரிக்க வெளியுறவு கொள்கையை மாற்றியது என்று எழுதினால் ஆதாரம் கேட்காமல் பக்தி பரவசமாகவும் முடியாது.

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MullaiNilavan said:

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

11 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

 

3 hours ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

நுணா, 

நான் கூறிய வசனத்தை நீங்கள் சரிவர வாசித்து விளங்கியுருந்தால் உங்கள் வசனத்தை எனக்கு எழுதவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்

conflict of interest policy and evolution yield management

Just now, goshan_che said:

ம்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

👍 நன்றி.

 

2 minutes ago, goshan_che said:

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

 ஐயா Robert O. Blake- (American Ambassador at a time of conflict), and Gordon Weiss அவர்களின் பதிவுகள் எங்களுடைய அயல் நாட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு  உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் தமிழர் தரப்புக்கு பல நியாயத் தன்மைகளை அநியாயங்களை கோடிட்டு காட்டியது.

அதே காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓடித்திரிந்த ராஜதந்திரிகளை உங்களுக்குத் தெரியும் அவர்கள் அயல் நாட்டு காரர்களுடன் மிக நெருங்கி உறவுகளோடு சில தழுவல் போக்குகளும் கிட்டத்தட்ட எங்கட எங்களின் அரசியல்  தத்துவ ஞானி ஐயா அண்டன் பாலசிங்கம் அவர்களும் மேலோட்டமாக அவர்களுடைய செல்வாக்கு உள்ளாகி இருந்தார் என அறியக் கிடைத்தது.

 இதுவரை எங்களுடைய விடிவு   conflict of interest policy and evolution yield management ஒளிந்திருக்கிறது.

கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் அவர்களுடைய பதிவுகளை தங்களுக்கு  ஆதாரமாகக் கொள்கிறார்கள் இது வெளிநாட்டில் உள்ள அடிப்படை தன்மை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

ஓம் ஆனால் - மாகாண/மாநில பொலிஸ் அதிகாரம் மூலம் அடைய விழையும் இலக்கை, ஒரு நேர்மையான, இனப்பரம்பல் உள்ள பொலீஸ் சுயாதீன குழுவை அமைத்து, அதை அரசியலுக்கு அப்பாற்படுத்துவதன் மூலம் சாதிக்க முடியும் என நினைகிறேன்.

Alternative dispute resolution இல் positions, interest என இரெண்டை சொல்வார்கள்.

மாகாண பொலிஸ் அதிகாரம் வேண்டும் - இது எமது position.

அந்த அதிகாரம் மூலம் பொலிஸ் இனவாத அராஜகத்தை தடுக்க வேண்டும் - இது எமது interest.

Position இல் தொங்காமல் interest ஐ அடையமுயற்சிப்பதும் ஒரு வழிதான்.

கூடவே நீங்கள் சொன்னது போல், மாவை சும் போன்றவர் பொலிஸ் அமைச்சர் ஆவதை விட ஒரு சுயாதீன குழு இருப்பதும் நல்லதுதானே.

18 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

 

🤣 உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் லிங்கம் கூல் பார் ஆபிரகாமின் மூதாதைகளினது என்பது🤣?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

உங்கட மச்சான்ர பெயரில் இங்கிலாந்தில் ஒரு நகரம், ஒரு county எல்லாம் இருக்கு. பேய்காய்தான் ஆள்🤣.

https://en.m.wikipedia.org/wiki/Lincoln,_England
 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

நீங்களும் ,நானும் சாதாரணமான ஆட்கள் ...தலைவர் அடிப்படியல்ல ....ஒரு குழுவை வழி நடத்தியவர் ...மற்றவர்களை விட அவருக்கு இது பற்றிய அறிவு அதிகம் இருக்க வேண்டும் ...தவிர , ஊரில் இருந்த பல சாதாரணமானவர்கள் அப்பவே ஆயுத போராட்டத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று சொன்னதை நான் கேட்டு இருக்கிறேன் ..இதில் பாலசிங்கத்திடமும் பிழை இருக்கின்றது ..ஆரம்பத்திகேயே ஆயுதத்தால் சாதிக்க முடியாது என்பதை தலைவருக்கு எடுத்து சொல்லி இருக்க வேண்டும் .
ஆயுதப் போராட்டத்தால் தான் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள் ....ஆனால் என்ன பிரயோசனம் சந்தர்ப்பங்களை சரியாய் பயன் படுத்தினரா?
ஏதாவது ஒரு நாட்டின் நற்பையாவது புலிகள் பெற்று இருக்கிறார்களா?....ஒரு சிறிய நாட்டின் ஆதாரவாவது எங்களுக்கு இருந்ததா?
இந்தியா விடாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ...எங்களால் இந்தியாவின் எதிரி நாடுகளை கூட கைக்குள் போட்டு கொள்ள முடியவில்லை .
இலங்கை ஒரே நேரத்தில் எல்லா நாடுகளையும் சமமாய் கையாண்டது .பலன் பெற்றது .
தலைவரை நான் மதிக்கிறேன் ...எம் மக்கள் சுத்தந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடினார் ...போராட்ட ஆரம்பம் சரி ஆனால் இடையிலே தான் மட்டும் தான் சரி...என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு ...உலகில் மிகப் பெரிய போதை "புகழ்" .

இதை  வாசிக்க கஸ் டமாய்  தான் இருக்கும் . இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்..மக்களும் விரும்பியோ அல்லது கட்டாயத்திலோ பின்னாலே போனார்கள்..உண்மையான அர்பணிப்பாளர்கள் என்றால் போராளிகள் மட்டும் தான் ...மற்ற எல்லோரும் தங்களது சுயநலத்திற்காய் போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டனர் குறிப்பாய் வெளி  நாட்டில் இருப்பவர்கள்...இனி மேல் தலைவரே திரும்பி வந்து போராட வாங்கோ என்றால் யாராவது போவார்கள் என்கிறீர்களா ?...போராளிகளாய் இருந்தவர்களே தங்கட பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள்     
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நான் அவரின் உறவினர், அவுஸ்ரேலிய நட்பு வட்டத்தில் விசாரித்து அறிந்துகொண்டேன்.

தமிழில் பாராளுமன்ற்றில் சரளமாக பேசும் ஒருவருக்கு, தமிழில் எழுதவே தெரியாது என கூறும் நீங்கள்தான் அதை நிறுவ வேண்டும்.

 

அவர் உங்கட மனிசியின் சொந்தக்காரரோ?
அவர் தமிழ் அரசியல்வாதி தமிழில் தான் படித்தார் என்று சொல்லுவார்கள் ...ஆதாரத்தை கேட்டால் நான் எங்கே அவரது பாடசாலைக்கு போய் சேட்டிபிக்கேட் வாங்கி இணைக்கிறதா ?...இங்க லண்டனில் பிறந்த பிள்ளைகள் கூட நல்லா தமிழ் கதைக்கிறார்கள்..தவிர  எழுதும் போது அவர் தான் எழுத வேண்டும் என்றில்லை ...எழுதி கொடுப்பதற்கு அவருக்கு என்று ஒரு பட்டாளம் இருக்கு   

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்.

அப்படி நினைக்கவில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், ஓர்மமும் உள்ள மக்களாக மாற்ற முனைந்தார். ஆனால் தமிழ் மக்களில் பலர் இயல்பிலேயே சுயநலம் பிடித்த, குறுக்குவழிகளில் வாழ்வில் முன்னேறலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் இருந்ததால் நாட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தின் பார்வையாளர்களாகவே மாறினோம். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும்

சிங்களவருடன் சரிசமனாக உரிமைகளோடு வாழமுடியாது என்பதால் தனிநாடு ஒன்றே தீர்வு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நீண்டதூரம் பயணித்துத்தான் இருந்தார். மற்றையவர்களிடம் அந்தளவு ஓர்மமும் இல்லை. சமரசமாக சிங்களவர்களுக்கு ஒரு படி கீழே இருக்க தயாரானார்கள். இப்போதும் சிங்களவர்கள் இனவாதிகளாகவும், மற்றைய இனங்களை ஒடுக்குவதில் குறியாகவும் இருக்கின்றார்கள். அவர்களின் இனவாத மனநிலையை மாற்றாமல் மேலும் வளர்க்கவே ராஜபக்‌ஷக்கள் அரசியல் செய்கின்றார்கள். 
 

இந்த டிக்டொக் வீடியோ இன்றைய நிலையைக் காட்டுகின்றது.

https://vm.tiktok.com/ZM8GvEobB/

அத்தகைய கடும்போக்காளர்களிடமிருந்து இணக்கமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலை. அதை சுமந்திரன் ஐயா நன்குணர்ந்துதான் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், பிரித்தானியாவுக்கும் பிரயாணமானார். ஆனால் தமிழர்களிடமுள்ள கடும்போக்காளரிடமிருந்தும் வசவைக் கேட்கவேண்டியிருக்கின்றது!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

புலிகளையும் புலிகளின். போராட்டங்களையும் வெறுப்பவார்கள்    தான் தமிழினியின் புத்தகத்தை. உதாரணம் காட்டுவார்கள்   2009. க்கு. பின்.  புலிகள் அமைப்பு இயங்கவில்லை’ புத்தகம் எழுதியபோது தமிழினி  விடுதலை புலி அங்கத்தவர் இல்லை அவரது புத்தகத்தை. சான்றாக எற்றுக் கொள்ள முடியாது 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

போரில் தோத்த பின்பும் ,எப்படி நீங்கள் அவர்களிடம் சரி சமமாய் உரிமையை எதிர் பார்க்கிறீர்கள் ?...அவர்கள் இனவாதிகள் தான் ...மாறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் ...இதே தமிழர்கள் பெரும்பான்மையாய் இருந்து ஆட் சியில் இருந்திருந்தால் இலங்கையில் ஒரு சிங்களவர்கள் இப்ப இருந்திருக்க மாட்டார்கள் ...அதான் வெள்ளைக்காரன் சிங்களவர்களிடம் தூக்கி கொடுத்தவன் .
சும்மா இப்படி நொண்டி சாட்டுக்களை எழுத வேண்டும் என்பதற்காய் எழுத வேண்டாம் ...அப்பவே பேச்சு வார்த்தை மூலம் ஏதாவது தீர்வை கண்டு இருந்தால் மக்கள் இப்ப ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்ந்திருப்பர் ...இவ்வளவு மோசமாய் நிலைமை மாற புலிகளும் காரணம் 
எல்லாம் சரி கடைசியில் எழுதினீங்கள் பாருங்கள் அது தான் கொமடி ...மகிந்தா சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட அவர்களிடமே ஆசிர்வாதம் வாங்கி வந்த ஆள் சும்மாத் தான் இருப்பார் 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

இப்ப எம்பெட் வீடியோவை நீக்கிவிட்டேன். இணைப்பை அழுத்திப் பாருங்கள். இவ்வளவு அழகான பெண்ணுக்கே இனவாதிகளால் தொல்லை என்பதைத் தாங்ங்கமுடியவில்லை!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.