Jump to content

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்

spacer.png

தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி முற்பகல் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும்  மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் என தன்னை அடையாளப்படுத்திய நபர் ஒருவரும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பொன்றை மேற்கொண்டு நாம் அந்த பக்கமாக வருகிறோம். 

வந்ததும் சந்திப்போம் என கூறியுள்ளனர். பின்னர் குறிப்பிட்ட நாளில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற குறித்த இருவரும் , தாம் திட்டமிட்டுள்ள தோண்டும் பணிகளுக்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இரகசியமாக அதனை செய்ய உதவுமாறும் கோரியுள்ளனர்.

சில நாட்கள் கழித்து முல்லைத்தீவு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு இரண்டு செயலாளர்களின் வருகை தொடர்பில் தகவல் கிடைத்து விசாரிக்கும் வரையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஷ்ட அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்திருக்கவில்லை.

இதன்படி, அவர் ஏதேனும் கடமை மீறலில் ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்த முல்லைத்தீவு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் வடமாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார, பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 

https://www.thaarakam.com/news/e5b4e1aa-cab7-480b-bf77-808ab5b8bc6b

 

Link to comment
Share on other sites

19 minutes ago, கிருபன் said:

தமிழீழ விடுதலை புலிகளின் தங்கத்தை தேடிய இரு சிங்கள அமைச்சர்கள்

 

தமிழீழ விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடிய இரு அமைச்சரவை அமைச்சர்களின் தனிப்பட்ட பணிக்குழுவை சேர்ந்த இரு செயலாளர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  

அவர்கள் இருவரும் சட்டம், ஒழுங்கு மற்றும் கடற்றொழில் அமைச்சர்களின் செயலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

.

 

 

 

 

 

கடற்றொழில் அமைச்சர் எங்கட அத்தியடி குத்தியன் அல்லவா, அவர் எப்ப சிங்களவனாக மாறினவர்?

Link to comment
Share on other sites

3 hours ago, zuma said:

 

 

கடற்றொழில் அமைச்சர் எங்கட அத்தியடி குத்தியன் அல்லவா, அவர் எப்ப சிங்களவனாக மாறினவர்?

அவர் எப்ப தமிழனாக இருந்தவர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

அவர் எப்ப தமிழனாக இருந்தவர்?

அவரின்ற எடுபிடி, பாராளுமன்றில, ஆமைக்கறியைப் பற்றிக் கதைக்க, இவர் டோஸ் விட்டாராம்..... நீ வாயை மூடு.... கொலை வழக்கு சிக்கலிருக்கிறதால,  நானே வாய் திறக்கிறேல்ல.... வாயை திறந்தா.... வம்பு... இதுக்கிள நீ வேற எண்டு ஓவ் ஆக்கிப் போட்டாராமே.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

எனினும், கடந்த வாரம் முழுவதும் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டதால் தோண்டும் பணிகள் நாளை (02) வரை ஒத்தி வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

 

12 வருடங்கள் ஆகிவிட்டன போர் நிறைவடைந்து. இது அண்மையில் புதைக்கப்பட்டதா? நாள், நட்சத்திரம் பார்த்து தோண்டுவது என்றால்.. 🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

விடுதலை புலிகளினால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத் தொகை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கடந்த மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட இருந்தது.

தமிழ் மக்களிடம் வீட்டுக்கு ஒருவரை போராட அனுப்பவேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு 3-6 லட்சம் தரவேண்டுமென்று அடித்து பிடுங்கியதெல்லாவற்றையும் யாரோ சம்பந்தமில்லாத ஒருவன் வந்து தூக்கிக்கொண்டு போகிறான். எல்லாவற்றையும் பல்லைக்கடித்துக்கொண்டு சகித்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஈற்றில் பரிசாக  கிடைத்தது முழு  அம்மணம் மட்டுமே, நாம் போராட்டத்தை ஆதரிப்பவர்களாக இருந்தாலும் மிகப்பெரிய இமாலய தவறுகளை எமது பக்கமும் இழைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவசியம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போதும் இப்ப ஒராள் தலைதெறிக்க ஓடோடி வரப்போறார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அக்னியஷ்த்ரா said:

தமிழ் மக்களிடம் வீட்டுக்கு ஒருவரை போராட அனுப்பவேண்டும் இல்லாவிட்டால் தலைக்கு 3-6 லட்சம் தரவேண்டுமென்று அடித்து பிடுங்கியதெல்லாவற்றையும் யாரோ சம்பந்தமில்லாத ஒருவன் வந்து தூக்கிக்கொண்டு போகிறான்

இது ரெம்ப அபந்தமான வார்த்தைகள். 16 கிராம் தங்கம் தான் தமிழீழ மண்மீட்பு நிதிக்காகக் கோரப்பட்டது. (ஒரு தொகையினர் அதை விடக் கூடக் கொடுத்திட்டு கொழும்புக்கு போக அப்படியே வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆக தாமாக அள்ளிக்கொடுத்தது போக) அதிலும் பலருக்கு குலுக்கல் முறையில் அது தங்கமாகவோ பணமாகவோ திருப்பியும் கொடுக்கப்பட்டது. ஏற்பவரின் விருப்புக்கு அமைய. 

எங்கட அனுபவத்தில்.. எங்கட வீட்டில் அம்மா கொடுத்த தங்கம்.. 1997 இல் வன்னிக்கு வரச் சொல்லி அழைப்பு அனுப்பப்பட்டு திருப்பி தமிழீழ தங்க நாணயமாகக் கையளிக்கப்பட்டிருந்தது. 

இதில எங்கு கட்டாயம்.. எங்கு பிடுங்கினது..???!

தமிழீழ வைப்பகத்தில் வைப்பு வைக்கப்பட்டிருந்த மக்களின் நகைகள் தான்.. போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ வைப்பகத்தால்.. பாதுகாக்கப்பட முடியாத நிலையில்.. எதிரிகளிடம் சிக்கியது. அது புலிகளின் சொத்தல்ல. தமிழ் மக்கள் தங்களின் தங்கத்தை பாதுக்காக்க வைத்த இடத்தில் சிங்களம் அபகரித்துக் கொண்டது. இதனை தெளிவு படுத்தியும்.. மகிந்த கும்பல்.. அதனை திருப்பிக் கொடுக்கவில்லை... இன்னும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

இதில எங்கு கட்டாயம்.. எங்கு பிடுங்கினது..???!

நீங்கள் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் இறுதிப்பகுதியிலும் கிழக்கில் இருந்தநீங்களோ ....? 
எனது தலையை காப்பாற்றவே எனது அம்மா இழந்தது 6 லட்சங்கள்...எனது தாய்வழி உறவினர்கள் அநேகம் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் தொடர்பான தகவல்களை எடுத்துக்கொண்டு கடைக்கு பிரிஸ்டல்(Bristol தற்போதைய பெயர் Viceroy ) வாங்கச்சென்ற அம்மப்பாவை சைக்கிளில் ஏற்றி  எங்கேயோ கொண்டுபோய் வைத்துக்கொண்டு வீட்டிற்கு ஆளனுப்பி கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்ட அளவு பணம் போராட்டத்திற்கு தந்தால் மட்டுமே விடமுடியுமென்று சொல்ல எனது அம்மம்மா இரண்டு தங்கச்சங்கிலிகளை அடமானம் வைத்துவிட்டு மீட்டு வந்ததை கண்கூடாக பார்த்தவன். 
இதற்கு பிறகும் வந்து அது கிழக்கின் விடிவெள்ளி அணி,கொம்மான் அணி என்றும் புலிகள் பெயரால்  ஒட்டுக்குழு என்றும் சப்பைக்கட்டு கட்ட வரவேண்டாம்,
செய்தது யார் அவர்களுக்கு கிழக்கு மாகாண அணியில் என்ன பொறுப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக எனக்குத்தெரியும். ஆகவே மேற்கொண்டு வானத்தை பார்த்து துப்ப விரும்பாமையால் நான்  அமைதி காப்பது எமது போராட்டத்தின் விம்பத்தையாவது குலையாமல் வைத்திருக்கக்கூடும் (இத்தனைக்கும் மத்தியில் எனது குடும்பத்திலும் ஒரு மாவீரன் உண்டு)     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பவுண் கொடுக்காதவர்களை பங்கருக்குள் போட்ட வரலாறும் உண்டு. சரி, அதை விடுவோம்..

வடக்கில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களிடம் பட்டகடன் இந்த தங்கப்புதையல் பறிகொடுப்பில் ஈடு செய்யப்படுகின்றது என ஒரு கதைக்கு வைத்து கொள்வோம். 

தங்கம் கைவிட்டு போனால் பரவாயில்லை. அடுத்த தடவை சிங்களவனிடம் குடும்பத்துக்கு நாலு பவுண் டபிளாய் கேட்டு கணக்கை சமன் செய்யலாம்.

ஆனால், சாரை சாரையாக பறி கொடுக்கப்பட்ட  ஆயிரமாயிரம் லட்சம்  உயிர்களை எப்படி ஈடு செய்வது?

சிந்திய இரத்தம், கொட்டிய இரத்தம் எல்லாம் எப்படி ஈடு செய்யப்பட முடியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இரண்டு பவுண் கொடுக்காதவர்களை பங்கருக்குள் போட்ட வரலாறும் உண்டு. சரி, அதை விடுவோம்..

வடக்கில் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களிடம் பட்டகடன் இந்த தங்கப்புதையல் பறிகொடுப்பில் ஈடு செய்யப்படுகின்றது என ஒரு கதைக்கு வைத்து கொள்வோம். 

தங்கம் கைவிட்டு போனால் பரவாயில்லை. அடுத்த தடவை சிங்களவனிடம் குடும்பத்துக்கு நாலு பவுண் டபிளாய் கேட்டு கணக்கை சமன் செய்யலாம்.

ஆனால், சாரை சாரையாக பறி கொடுக்கப்பட்ட  ஆயிரமாயிரம் லட்சம்  உயிர்களை எப்படி ஈடு செய்வது?

சிந்திய இரத்தம், கொட்டிய இரத்தம் எல்லாம் எப்படி ஈடு செய்யப்பட முடியும்.

 

நியாயத்தை கதைப்பம் என்று பெயரை வைச்சிட்டு.. எப்ப பார் ஒரு தலைப்பட்சமாவே கதைக்கிறீங்கண்ணே.

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பாதுகாப்பு இடம்பெயர்வு செய்ய முன்.. கிழக்கில் இருந்து அதே தொகையிலும் அதிகமான தமிழ் மக்கள் முஸ்லிம்களால் விரட்டி வெட்டி அலற அலற அகதியாக களைக்கப்பட்டதை எப்படி மறந்தீர்கள். 

கல்முனை முதல்.. மூதூர் வரை எம் மக்கள் உடுத்த உடுப்போடு உயிரை பணயம் வைத்து கிழக்கில் இருந்து வடக்கிற்கு கடல்வழியாக வந்திறங்கிக் கொண்டிருந்த காலங்கள் எப்படி மறந்து போச்சுது. அந்த மக்கள் யாழ் இந்துக் கல்லூரி உட்பட பல இடங்களில் இடைத்தங்கலாக தங்கி இருந்த நினைவுகள் இப்பவும் கண்ணில் நிலைநாடுது. ஆனால்.. உங்கள் பலருக்கு சோனிய.. போய் வாங்க என்று பத்திரமா அனுப்பி வைச்சது.. அதுவும் பல சதித்திட்டங்களை எல்லாம் மன்னித்து அனுப்பி வைத்தது மறந்து போச்சுது.

இதே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள்.. அதே முஸ்லிம்களுக்கு ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது வழங்கிய அடைக்கலத்தைக் கூட மறந்து.. தமிழ் மக்களை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளோடும் இனப்படுகொலை அரசுகளோடும் சேர்ந்து நின்று கொன்றது.. கொள்ளையடிச்சது.. விரட்டி அடிச்சது.. இப்படியான நியாயங்களையும் கதையுங்கோவன். 

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

நீங்கள் தொண்ணூறுகளிலும் இரண்டாயிரத்தின் இறுதிப்பகுதியிலும் கிழக்கில் இருந்தநீங்களோ ....? 
எனது தலையை காப்பாற்றவே எனது அம்மா இழந்தது 6 லட்சங்கள்...எனது தாய்வழி உறவினர்கள் அநேகம் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் தொடர்பான தகவல்களை எடுத்துக்கொண்டு கடைக்கு பிரிஸ்டல்(Bristol தற்போதைய பெயர் Viceroy ) வாங்கச்சென்ற அம்மப்பாவை சைக்கிளில் ஏற்றி  எங்கேயோ கொண்டுபோய் வைத்துக்கொண்டு வீட்டிற்கு ஆளனுப்பி கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்ட அளவு பணம் போராட்டத்திற்கு தந்தால் மட்டுமே விடமுடியுமென்று சொல்ல எனது அம்மம்மா இரண்டு தங்கச்சங்கிலிகளை அடமானம் வைத்துவிட்டு மீட்டு வந்ததை கண்கூடாக பார்த்தவன். 


இதற்கு பிறகும் வந்து அது கிழக்கின் விடிவெள்ளி அணி,கொம்மான் அணி என்றும் புலிகள் பெயரால்  ஒட்டுக்குழு என்றும் சப்பைக்கட்டு கட்ட வரவேண்டாம்,


செய்தது யார் அவர்களுக்கு கிழக்கு மாகாண அணியில் என்ன பொறுப்பு என்று அக்கு வேறு ஆணி வேறாக எனக்குத்தெரியும். ஆகவே மேற்கொண்டு வானத்தை பார்த்து துப்ப விரும்பாமையால் நான்  அமைதி காப்பது எமது போராட்டத்தின் விம்பத்தையாவது குலையாமல் வைத்திருக்கக்கூடும் (இத்தனைக்கும் மத்தியில் எனது குடும்பத்திலும் ஒரு மாவீரன் உண்டு)     

ஏனோ நமக்கு இப்படியான அனுபவங்கள் அமையல்ல. ஆனால்.. தமிழின விடுதலைக்கான போராட்டத்திற்காக இழந்தவை பல. அதை வைச்சு ஒரு அனுதாபமோ சலுகையோ ஏன் அகதி அந்தஸ்தோ கோரியதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்ட தங்கம்-  அகழ்வு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்

நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்றைய தினமும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே நேற்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

இத்தகையநிலையிலேயே ஏற்கனவே நீதிமன்றம்  அறிவித்த திகதியான நேற்று, மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://athavannews.com/2021/1254008

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த வியட்நாம் அமைசர் இப்ப சிறீலங்காவுக்கு விசிட் அடிச்சு ..கருவாடு குறைந்தவிலக்கு தருகிறோம் என்று நம்ம மீன்பிடி அமச்சருக்கு சொன்னாலே போதும்...அதற்கு ஒரு கமிசன் போட்டு மக்கள்  தலையில் கட்டிவிடுவார்கள்....வியட்நாமிலும்  செத்தமீன் கிளீயராகிவிடும்..😄
    • சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது கஞ்சா வழக்கு.. டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீஸ்! Nantha Kumar RUpdated: Saturday, May 4, 2024, 22:25 [IST]   தேனி: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். பெண் போலீஸ் குறித்து அவதூறாக பேசிய நிலையில் கோவை சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் உள்ளிட்டவர்கள் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்பிறகு யூடியூப் விவாதங்களில் பங்கேற்று வந்தார். அப்போது தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயரதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில் தான் காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இததொடர்பாக கோவை சைபர் க்ரைம் போலீசில் புகார் பதிவாகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலையில் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்ய சென்றபோது அவரது காரில் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு மற்றும் உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோர் மீதும் கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது தனியார் விடுதியில் சவுக்கு சங்கரை கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு போலீசார் அவரது காரை சோதனையிட சென்றனர். அந்த சமயத்தில் சவுக்கு சங்கரின் டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் உள்ளிட்டவர்கள் காரில் சோதனையிட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தகாத வார்த்தையில் போலீசாரை திட்டி பணிக்கு இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து வைத்து காரில் சோதனையிட்டனர். சவுக்கு சங்கர் சர்ச்சைப் பேச்சு! தேனியில் கைது செய்த போலீஸ்! இத்தனை செக்சனில் வழக்கா? என்னென்ன? அப்போது காரில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது. மொத்தம் 400 கிராம் கஞ்சா இருந்துள்ளது. இதையடுத்து கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து டிரைவர் ராம் பிரபு, ராஜரத்தினம் உள்ளிட்டவர்களை தேனி பழனிச்செட்டிபட்டி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் சவுக்கு சங்கர், அவரது உதவியாளர் ராஜரத்தினம், டிரைவர் ராம் பிரபு உள்ளிட்டவர்கள் மீது போலீசார் 294(b),353,506(I),8(c)8(w),20(b)(2)(a),29(I),25 ndps act உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://tamil.oneindia.com/news/theni/ganja-case-registered-against-savukku-shankar-and-his-2-associates-in-theni-police-603425.html  
    • வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.  தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.   சீரழிந்த அரசியல் கலாசாரம் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.   அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும். அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன். அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது. நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர். இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528
    • இவர்களைத் (கடைக்காரர்களை) திருத்த முடியாது..வெளி நாட்வர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி புரிய வைக்கலாம்.உங்களுக்கு மட்டும் இந்த விலைகள் அல்ல.யார் எல்லாம் வெளியிலிருந்து வருகிறோமோ அவர்கள் எல்லோருக்குமே இந்த நிலை என்பதை சொல்ல வேண்டும்.
    • வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......!  (suvy) புதனும் புதிரும்  ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே    ( சுப.சோமசுந்தரம்)  (தீ) சுவடு  (தனிக்காட்டு ராஜா)  இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.  ( ஈழப்பிரியன்)  மரணம்  (ரஞ்சித்)  களியாட்டத்தில் கலாட்டாவா  ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா?   (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன்.   ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும்   ( Kavi arunasalam)  மயிலம்மா.  ( suvy)  வல்வை மண்ணில் பிரித்  (nedukkalapoovan) ஆதி அறிவு   ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை   ( ரசோதரன்)  என்ன பார்ட்டி இது??  (விசுகு)  முடிவிலி  (ரசோதரன்)  மழைப் பாடல்கள்  (ரசோதரன்)  மின் காற்றாலைத் தோட்டம்.  ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும்   (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா.   (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம்   (ரசோதரன்)  இந்த ஏழு நாட்கள்  (ரசோதரன்)  தோற்கும் விளையாட்டு  (ரசோதரன்)  அன்றுபோல் இன்று இல்லையே!  ( பசுவூர்க்கோபி)  வாசலும் வீடும்  (ரசோதரன்)   வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam)  மேய்ப்பன்  (ரசோதரன்)   ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்)   தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி)  விழல்  (ரசோதரன்)  தம்பி நீ கனடாவோ..?  (alvayan) என் இந்தியப் பயணம்  (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை  (ரசோதரன்) புளுகுப் போட்டி  (ரசோதரன்) சிறந்த நடுவர்  (ரசோதரன்) ஒரு பொய்  (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன்  (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க…  (alvayan) புலம் பெயர்ந்த புகை  (ரசோதரன்) பிஞ்சுக் காதல்…  (alvayan) கனத்தைப் பேய்க்  கவிதை…..  (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….  (goshan_che) காந்தி கணக்கு  (ரசோதரன்) சனாதன வருத்தம்  (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு  (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு  (theeya) தோற்ற வழு  (ரசோதரன்) பாக்குவெட்டி  (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல  (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால்  (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும்  ( P.S.பிரபா)  எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை  (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம்  வெட்டி வீழ்த்தப்பட்டது.  (தமிழ் சிறி)  அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம்  (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய்  (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....?  (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள்  (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள்  (ரசோதரன்) உயிர்த்தெழுதல்  (ரசோதரன்) குரு தட்சணை  (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..  (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்"  (kandiah Thillaivinayagalingam)  தேனும் விஷமும் (ரசோதரன்)  சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா  (விசுகு) நிலவே நிலவே கதை கேளு!  (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ.  (ஈழப்பிரியன்)  நூலறிவு வாலறிவு  (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு!  (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த  உறுப்பினர் @ரசோதரன்  31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு:  யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்  பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.