Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பு

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும்.ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சதவீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச்செலுத்த வேண்டும்.

எனினும் இலங்கை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் ஊடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டொலர் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது.கடந்த ஓகஸ்ட் 19 இல் 50 மில்லியன் டொலர்களையும் 100 மில்லியன் டொலர் இரண்டாவது தவணை ஓகஸ்ட் 30 அன்றும் 50 மில்லியன் டொலர் இறுதி தவணை செப்டம்பர் 21 அன்றும் வழங்கப்பட்டது.(15)

 

http://www.samakalam.com/பங்களாதேஷ்-வங்கியிடம்-இர/

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ் குடுத்த கடன்… மூன்று மாதம் என்ன,

மூண்டு வருசம் போனாலும்… திரும்ப கிடைக்காது.

அதை… மறக்கிறதுதான், பங்களாதேஷுக்கு நல்லது. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஸிடம் கடன்வாங்குமளவுக்கு சிறிலங்காவின் பொருளாதரம் இருப்பதே அவமானம். இந்த நிலையில் திருப்பி செலுத்தும் காலத்தை நுpடிப்பது சிறிலங்காவுக்கு பெருத்த அவமானம். பெரும் போர் நடந்த பாலத்திலும் தள்ளாடாத பொருளாதாரம் இப்போது தள்ளாடுவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

போரிட்டுத்தான் ஒரு நாட்டை தன் காலடியில் வீழ்த்த வேண்டும் என்றில்லை, கடன் வாங்கியும் அதைத் தன் காலடியில் வீழ்த்தலாம் ........!  😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன் வாங்கினாலும் கர்ஜிப்போம்...🤣

Bild

Bild

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பங்களாதேஷ் குடுத்த கடன்… மூன்று மாதம் என்ன,

மூண்டு வருசம் போனாலும்… திரும்ப கிடைக்காது.

அதை… மறக்கிறதுதான், பங்களாதேஷுக்கு நல்லது. 😂😂😂

இதுக்குத்தான் கந்துவட்டி சீனாக்காரன் மாதிரி அலேட்டா, இருந்திருக்க வேணும்.

குடுத்த காசுக்கு.... கையோட கம்மாரிசு.... அம்பாந்தோட்ட, கோல்பேஸ் சிற்றி அடகு....

மேலதிகமாக காசுவேணுமா...... நல்லார் கோயில தாருங்கோ எண்ட மாதிரி..... பார்த்திட்டு போட்டினம்.......

பங்களாதேஸ்...... முழிசிக் கொண்டு.....அறவிட முடியாக் கடன்..... புத்தி கொள்முதல் எண்டு எழுதிப்போட்டு இருக்க வேண்டியது தான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

பங்களாதேஸிடம் கடன்வாங்குமளவுக்கு சிறிலங்காவின் பொருளாதரம் இருப்பதே அவமானம். இந்த நிலையில் திருப்பி செலுத்தும் காலத்தை நுpடிப்பது சிறிலங்காவுக்கு பெருத்த அவமானம். பெரும் போர் நடந்த பாலத்திலும் தள்ளாடாத பொருளாதாரம் இப்போது தள்ளாடுவது ஏன்?

பொருளாதாரத்தை..... உற்பத்தி துறையில் தங்க வையாமல், உல்லாச பயணத்துறையில் தங்க வைத்ததன் விளைவு.

தனக்கு மூக்குப் போனாலும், எதிரிக்கு சகுணப் பிழை வேண்டும் என்பது போல, புலம் பெயர், இலங்கையர் என்றாலே.... தமிழர் மட்டுமே..... அவர்கள் மளிகைப் பொருள், மீன், வடக்கில் இருந்து போவதை உறுதி செய்யத்தேவையில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தாய்லாந்திலிருந்து போனால் எமக்கென்ன என்று இருந்து வருடம் குறைந்தது, இரண்டு பில்லியன் இழப்பு. விளைவு, சிங்களவரும், இஸ்லாமியரும்..... பிறதேச பொருட்களை வாங்கும் புல நிலைமை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பங்களாதேஷ் குடுத்த கடன்… மூன்று மாதம் என்ன,

மூண்டு வருசம் போனாலும்… திரும்ப கிடைக்காது.

அதை… மறக்கிறதுதான், பங்களாதேஷுக்கு நல்லது. 😂😂😂

செத்தது எந்த ராமசாமி.? எனக்கு கடன் தரவேண்டிய ராமசாமியா.? 

ஆமாண்ணே அவரேதான் ..

போய்ட்டானா ..

"வடக்குபட்டி ராமசாமிக்கு குடுத்த பணம் ..ஊ..ஊ.." 😊

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

தனக்கு மூக்குப் போனாலும், எதிரிக்கு சகுணப் பிழை வேண்டும் என்பது போல, புலம் பெயர், இலங்கையர் என்றாலே.... தமிழர் மட்டுமே..... அவர்கள் மளிகைப் பொருள், மீன், வடக்கில் இருந்து போவதை உறுதி செய்யத்தேவையில்லை. தமிழகம், கேரளா, ஆந்திரா, தாய்லாந்திலிருந்து போனால் எமக்கென்ன என்று இருந்து வருடம் குறைந்தது, இரண்டு பில்லியன் இழப்பு. விளைவு, சிங்களவரும், இஸ்லாமியரும்..... பிறதேச பொருட்களை வாங்கும் புல நிலைமை.

தங்களைவிட தமிழன் முன்னுக்கு போகக்கூடாது எனும் இனத்துவேசமே முழுகாரணமும் பூநகரி மொட்டைக்கறுப்பன் பெயர்  தஞ்ஜை விளை பூமியில் விளைந்த அரிசிக்கு மலையாளியின் ஏற்றுமதி கொம்பனி பெயர் வைத்து இங்குள்ள நாடுகளில் வந்து இறங்கியது பற்றி எழுதியபோது சிங்களமும் சிங்களத்துக்கு வால்பிடிக்கும் கூட்டமும் கொடுப்புக்குள் சிரித்து கொண்டு இருந்தவை அதன் பலன் மீளவே முடியாத நரகத்துனுள் இலங்கை .

பின்னே நைஜிரியாவிடம் கூட வெட்கம் கெட்டு  கடன் வாங்குதுகள் இதே சிங்கள கூட்டம் 

சோம்பேறி சிங்களவனுக்கு காட்டை அழித்து பூமியின்  சொர்க்கமாய் இலங்கையை  மாற்றிய மலையக தமிழருக்கு கொடுக்க மனமின்றி அவர்களை நரகதுக்கு ஒப்பான லயன்களில்  வாழவைத்த   பலன் சிங்களவனை நரகத்தில் தள்ளியுள்ளது. 

6 hours ago, suvy said:

போரிட்டுத்தான் ஒரு நாட்டை தன் காலடியில் வீழ்த்த வேண்டும் என்றில்லை, கடன் வாங்கியும் அதைத் தன் காலடியில் வீழ்த்தலாம் ........!  😎

உண்மையில் 2005க்கு பிறகுதான் வரம்பற்ற கடன் வாங்குதலில் இலங்கை இறங்கியது என்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

வரப்போற வருஷம் பூராவும் கடன் திரும்புமாங்குர பீதியிலையே கழிய....பங்காளதேஷ்க்கு புத்தாண்டு வாழ்த்துகள்... 😂😂

  • கருத்துக்கள உறவுகள்

இதன் தாக்கம்.. லண்டனில் சாதாரண பங்காளியிடம் கூட இருந்து வெளிப்படுகிறது. நக்கலோ நக்கல் அடிக்கிறாய்ங்க. இது தான் சொன்னது அப்பவே சொறீலங்கன் என்று சொல்லாதேங்க.. தமிழர்கள் உங்களை தமிழீழத்தவர் என்று சொல்லுங்கன்னு. கேட்டாத்தானே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

பங்களாதேஸிடம் கடன்வாங்குமளவுக்கு சிறிலங்காவின் பொருளாதரம் இருப்பதே அவமானம். இந்த நிலையில் திருப்பி செலுத்தும் காலத்தை நுpடிப்பது சிறிலங்காவுக்கு பெருத்த அவமானம். பெரும் போர் நடந்த பாலத்திலும் தள்ளாடாத பொருளாதாரம் இப்போது தள்ளாடுவது ஏன்?

உப்பிடி சத்தம் போட்டெல்லாம் கதைக்க கூடாது நாட்டுப்பற்றாளரும் இருக்கினம், 

  • கருத்துக்கள உறவுகள்

மந்திரத்தில மாங்காய் பிடுங்குறது எண்டுவினம்..... அதைப்போல..... இண்டைக்கு காலம..... கப்பராலு.... மத்திய வங்கி டொலர் இருப்பு....$3.1b ஆகீட்டுது எண்டு அறிவிக்க...... எப்படி என்று சனம் கேட்குது.

https://www.dailymirror.lk/latest_news/CBSL-foreign-reserves-reach-USD3-1Bn-Cabraal/342-227890

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நீட்டிய தட்டில் யாரோ போட்டிருக்கிறார்கள் போலுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.