Jump to content

உலகின் விலை உயர்ந்த பொருள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது..

spacer.png

பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி  மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன்ரி மேட்டரில் ஒரே ஒரு துகள் என்ற அளவில் அன்ரி மேட்டருக்கு ஏதோ நடந்துவிட அதே ஒரு பில்லியனுக்கு ஒரு துகள் என்ற கணக்கில் அன்ரி மேட்டருடன் மோதாமல் தப்பிய மேட்டர் துகள்கள்தான் நாங்களும் இந்த பூமியும் பேரண்டமும்.. பில்லியனில் ஒரு துகள் என்ற கணக்கில் தப்பி உருவான இந்த அண்டமே கற்பனை பண்ண முடியா பேரண்டமாக விரிந்திருக்கையில் பெருவெடிப்பின் போது உருவான அத்தனை  மேட்டரும் தப்பி இருந்தால்..? நினைத்து பார்க்கவே சிறுமூளை இருக்கும் தலைசுத்தி மயக்கம் வருது.. எப்படி பெருவெடிப்பின் போது தப்பிய நேர் ஏற்றம் உள்ள மேட்டரால் உருவான இந்த அண்டமும் பூமியும் நாமும் இருக்கிறோமோ அப்படியே ஒருவேளை பெருவெடிப்பின் போது நேர் ஏற்றம் கொண்ட மேட்டருடன் மோதாமல் தப்பிய அன்ரி மேட்டர்களால் இன்னொரு திசையில்  அன்ரி மேட்டர் பேரண்டம் தோன்றி அங்கும் பூமி மாதிரி ஏதும் ஒரு கோளில் மனிதர்கள் போல் உயிரினங்களும் வாழலாம் யார்கண்டார்.. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.. பூரா நேர் எதிர் ஏற்றம் பெற்ற துகள்களால்(particles) உருவாகி இருக்கலாம்.. பரிசோதித்து பார்த்தால் மட்டுமே தெரியும் வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்.. ஆனால் தப்பித்தவறி எமது பேரண்டத்துக்கு கிட்ட வந்து தொலைச்சுதெண்டா அவ்வளவுதான்.. நொடிப்பொழுதில் பஸ்பமாகி தூய ஒளிசக்தியாகி இரண்டு பேரண்டமும் அற்ற வெற்றிடமாய் மயான அமைதி நிலவக்கூடும்..

spacer.png

 

சரி நேர்மறை ஏற்றத்தை கொண்ட எமது பேரண்டத்தில் எங்காவது விஞ்ஞானிகள் அன்ரி மேட்டரை கண்டிருக்கிறார்களா என்றால் இல்லையாம். ஏறக்குறைய அன்ரி மேட்டர் எதுவும் இல்லை - இது சில கதிரியக்கச் சிதைவுகளிலும், காஸ்மிக் கதிர்களின் ஒரு சிறிய பகுதியிலும் மட்டுமே தோன்றுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்... இன்றுவரை பெருவெடிப்பின்( இது பெரு வெடிப்பு அல்ல பெரு விரிவாக்கம் என்பது அனைவரும் அறிந்ததே) போது காணாமல் போன அன்ரி மேட்டர் என்னாச்சு அல்லது எப்படி இவ்வளவு மேட்டர் தப்பியது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.. ஒரு டீஸ்பூன் அன்ரி மேட்டர் இப்பூமியில் ஏதாவது ஒரு வழியில் உருவாகுமானால் அடுத்த நொடியே அது அமெரிகாவின் Manhattan நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு போதுமான அளவு வெடிப்பை ஏற்படுத்துமாம்.. 

அதெல்லாம் சரி அந்த விலை உயர்ந்த பொருள் என்ன அது எங்க இருக்கெண்டா.. அது வேற ஒண்டும் இல்ல இதே அன்ரி மேட்டர்தான்.. எங்க இருக்கெண்டால் சுவிஸ் எல்லையை ஒட்டி பிரான்சில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில்.. துகள்களை மோதவிட்டு ஆய்வு செய்யும் சுவிசில் அமைந்துள்ள அனைவருக்கும் தெரிந்த cern ஆய்வுகூடத்துடன் இணைந்து இது ஒரு பகுதி ஆய்வுகூடமாக அமைந்துள்ளதாம்.. துகள்களின் மோதலின் போது பெருவெடிப்பில் உருவானதுபோல அன்ரி மேட்டரும் cern ஆய்வுகூடத்தில் உருவாகிறதாம்.. அதை இங்கு அனுப்பி பரிசோதிக்கிறார்கள்.. 200 அன்ரி புரோட்டன்களை வெறும் நானூறு நாட்கள்தான் அங்கு பாதுகாத்து வைக்கலாம்.. கருதமுடியாத அளவுக்கு மிகச்சிறியது என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்.... அந்த அன்ரி மேட்டரால் ஒரு பந்தை உருவாக்கி கீழ போட்டால் ரெகுலர் மேட்டர் போல் அந்த பந்தும் கீழ விழும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.. கீழ விழுவது மட்டுமல்ல நம்மைப்போல ரெகுல மேட்டருக்கு உள்ள எல்லா தன்மைகளும் அன்ரி மேட்டருக்கு இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இதன் விலை(அதாவது அதை உருவாக்க ஆகும் செலவு) என்னவென்றால் வெறும் ஒரு கிராம் அன்ரிமேட்டர் 2700 ட்ரில்லியன் டொலர்சாம்..🤭🤭 
 

Sources:👇

https://www.spacetv.net/antimatter/


Current estimate of Antimatter, courtesy of Elise: 
Stefan Ulmer made a back-of-the-envelope calculation based on energy and power consumption. The explanation goes as follows: 
1. CERN produces 3e7 antiprotons per AD cycle or about 1e15 per year
2. This is about 1e15*1.67e-27kg = 1.67 nanogram per year
3. 1 gram of antiprotons has an energy (E=mc^2) of 9e13 Joule
4. The efficiency of the antiproton production process is 1e-9, so you need a billion times more energy: 9e22 Joule
5. The cost of power for CERN is 1kWh = 3.6e6 Joule = 0.1 euro
6. So that would make 0.1/3.6e6*9e22 = 2.5e15 euro
7. And it would take CERN 6e8 years

https://ntrs.nasa.gov/archive/nasa/ca...

https://nuclearsecrecy.com/nukemap/- you can see the nuke city

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

நன்றி இணைப்புக்கு .

வருகைக்கு நன்றி அண்ணை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

What Was It Like When We Lost The Last Of Our Antimatter?

மாட்டர் - ஆன்ரிமாட்டர் சிதைவு மட்டுமல்ல.. ஆக்கமும் நிகழ்கிறது.

ஆதலால் தான்.. மாட்டரால் ஆன.. பிரபஞ்சத்துக்கு ஒப்பான ஆன்ரிமாட்டராலான.. பிரபஞ்சமும் இருக்க வாய்ப்புள்ளதான கருதுகோள்கள் உள்ளன. 

ஒரு மனிதனை.. ஒத்த இன்னொரு ஆன்ரிமாட்டர் மனிதனும் இருக்க வாய்ப்புள்ளது.. ஏனெனில்.. சோடிப் பொருளாக்கத்தில் சக்தி.. மாட்டரை மட்டுமல்ல.. அதற்கு ஒத்த எதிர்நிலை ஆன்ரிமாட்டரையும் உருவாக்குகிறது. 

Our universe has antimatter partner on the other side of the Big Bang, say  physicists – Physics World

https://physicsworld.com/a/our-universe-has-antimatter-partner-on-the-other-side-of-the-big-bang-say-physicists/

Our universe has antimatter partner on the other side of the Big Bang, say physicists

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாசமும் உணவும் தண்ணீரும் தேவையில்லாத இனமும் இருக்கலாம் என நினைக்கத்தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஓணாண்டி ........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 20:33, பாலபத்ர ஓணாண்டி said:

வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்

ஆன்ரிமாட்டர்களுக்கு எதிரேற்றம் மட்டுமல்ல.. பரயோன் இலக்கங்களின் அளவும் எதிர்மறையாக மாறி இருக்கும்... குறிப்பாக.. ஹட்ரோன்களில்.ஹட்ரோன்களின் வகுப்பில் தான் புரத்தோன்களும் அன்ரிபுரத்தோன்களும்.. நியுற்றோன்களும் அன்ரிநியுற்றோன்களும் அடங்குகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிதைவுத் தொழில்நுட்பம்.. ஏலவே.. PET (positron emission tomography) ஸ்கானர்களில் பாவிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

மருத்துவத்துறையில்.. பெட் ஸ்கானர்கள் மகத்தான பங்களிக்கின்றன. 

Positron Emission Tomography - ScienceDirect

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 20:33, பாலபத்ர ஓணாண்டி said:

உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது..

spacer.png

பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி  மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன்ரி மேட்டரில் ஒரே ஒரு துகள் என்ற அளவில் அன்ரி மேட்டருக்கு ஏதோ நடந்துவிட அதே ஒரு பில்லியனுக்கு ஒரு துகள் என்ற கணக்கில் அன்ரி மேட்டருடன் மோதாமல் தப்பிய மேட்டர் துகள்கள்தான் நாங்களும் இந்த பூமியும் பேரண்டமும்.. பில்லியனில் ஒரு துகள் என்ற கணக்கில் தப்பி உருவான இந்த அண்டமே கற்பனை பண்ண முடியா பேரண்டமாக விரிந்திருக்கையில் பெருவெடிப்பின் போது உருவான அத்தனை  மேட்டரும் தப்பி இருந்தால்..? நினைத்து பார்க்கவே சிறுமூளை இருக்கும் தலைசுத்தி மயக்கம் வருது.. எப்படி பெருவெடிப்பின் போது தப்பிய நேர் ஏற்றம் உள்ள மேட்டரால் உருவான இந்த அண்டமும் பூமியும் நாமும் இருக்கிறோமோ அப்படியே ஒருவேளை பெருவெடிப்பின் போது நேர் ஏற்றம் கொண்ட மேட்டருடன் மோதாமல் தப்பிய அன்ரி மேட்டர்களால் இன்னொரு திசையில்  அன்ரி மேட்டர் பேரண்டம் தோன்றி அங்கும் பூமி மாதிரி ஏதும் ஒரு கோளில் மனிதர்கள் போல் உயிரினங்களும் வாழலாம் யார்கண்டார்.. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்.. பூரா நேர் எதிர் ஏற்றம் பெற்ற துகள்களால்(particles) உருவாகி இருக்கலாம்.. பரிசோதித்து பார்த்தால் மட்டுமே தெரியும் வெறும் எதிர்மறை ஏற்றத்தை தவிர வேற எந்த வித்தியாசமும் இருக்காதாம்.. அதாவது எங்க உலகத்தில் உள்ள எலெக்ரோன்களுக்கு எதிர்மறை ஏற்றம்(-) போல் அவர்கள் உலகத்தில் எலெக்ரோன்களுக்கு நேர்மறை ஏற்றம்(+) அவ்வளவுதான்.. ஆனால் தப்பித்தவறி எமது பேரண்டத்துக்கு கிட்ட வந்து தொலைச்சுதெண்டா அவ்வளவுதான்.. நொடிப்பொழுதில் பஸ்பமாகி தூய ஒளிசக்தியாகி இரண்டு பேரண்டமும் அற்ற வெற்றிடமாய் மயான அமைதி நிலவக்கூடும்..

spacer.png

 

சரி நேர்மறை ஏற்றத்தை கொண்ட எமது பேரண்டத்தில் எங்காவது விஞ்ஞானிகள் அன்ரி மேட்டரை கண்டிருக்கிறார்களா என்றால் இல்லையாம். ஏறக்குறைய அன்ரி மேட்டர் எதுவும் இல்லை - இது சில கதிரியக்கச் சிதைவுகளிலும், காஸ்மிக் கதிர்களின் ஒரு சிறிய பகுதியிலும் மட்டுமே தோன்றுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்... இன்றுவரை பெருவெடிப்பின்( இது பெரு வெடிப்பு அல்ல பெரு விரிவாக்கம் என்பது அனைவரும் அறிந்ததே) போது காணாமல் போன அன்ரி மேட்டர் என்னாச்சு அல்லது எப்படி இவ்வளவு மேட்டர் தப்பியது என்பது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.. ஒரு டீஸ்பூன் அன்ரி மேட்டர் இப்பூமியில் ஏதாவது ஒரு வழியில் உருவாகுமானால் அடுத்த நொடியே அது அமெரிகாவின் Manhattan நகரத்தையே அழித்துவிடும் அளவுக்கு போதுமான அளவு வெடிப்பை ஏற்படுத்துமாம்.. 

அதெல்லாம் சரி அந்த விலை உயர்ந்த பொருள் என்ன அது எங்க இருக்கெண்டா.. அது வேற ஒண்டும் இல்ல இதே அன்ரி மேட்டர்தான்.. எங்க இருக்கெண்டால் சுவிஸ் எல்லையை ஒட்டி பிரான்சில் உள்ள ஒரு ஆய்வு கூடத்தில்.. துகள்களை மோதவிட்டு ஆய்வு செய்யும் சுவிசில் அமைந்துள்ள அனைவருக்கும் தெரிந்த cern ஆய்வுகூடத்துடன் இணைந்து இது ஒரு பகுதி ஆய்வுகூடமாக அமைந்துள்ளதாம்.. துகள்களின் மோதலின் போது பெருவெடிப்பில் உருவானதுபோல அன்ரி மேட்டரும் cern ஆய்வுகூடத்தில் உருவாகிறதாம்.. அதை இங்கு அனுப்பி பரிசோதிக்கிறார்கள்.. 200 அன்ரி புரோட்டன்களை வெறும் நானூறு நாட்கள்தான் அங்கு பாதுகாத்து வைக்கலாம்.. கருதமுடியாத அளவுக்கு மிகச்சிறியது என்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லையாம்.... அந்த அன்ரி மேட்டரால் ஒரு பந்தை உருவாக்கி கீழ போட்டால் ரெகுலர் மேட்டர் போல் அந்த பந்தும் கீழ விழும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.. கீழ விழுவது மட்டுமல்ல நம்மைப்போல ரெகுல மேட்டருக்கு உள்ள எல்லா தன்மைகளும் அன்ரி மேட்டருக்கு இருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்..

சரி இதன் விலை(அதாவது அதை உருவாக்க ஆகும் செலவு) என்னவென்றால் வெறும் ஒரு கிராம் அன்ரிமேட்டர் 2700 ட்ரில்லியன் டொலர்சாம்..🤭🤭 
 

Sources:👇

https://www.spacetv.net/antimatter/


Current estimate of Antimatter, courtesy of Elise: 
Stefan Ulmer made a back-of-the-envelope calculation based on energy and power consumption. The explanation goes as follows: 
1. CERN produces 3e7 antiprotons per AD cycle or about 1e15 per year
2. This is about 1e15*1.67e-27kg = 1.67 nanogram per year
3. 1 gram of antiprotons has an energy (E=mc^2) of 9e13 Joule
4. The efficiency of the antiproton production process is 1e-9, so you need a billion times more energy: 9e22 Joule
5. The cost of power for CERN is 1kWh = 3.6e6 Joule = 0.1 euro
6. So that would make 0.1/3.6e6*9e22 = 2.5e15 euro
7. And it would take CERN 6e8 years

https://ntrs.nasa.gov/archive/nasa/ca...

https://nuclearsecrecy.com/nukemap/- you can see the nuke city

 

சொந்த ஆக்கமோ புலவர் ?

சும்மா பிச்சி மேஞ்சிட்டீயள் போங்கோ🔝.

உந்த ஜெனீவாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை நானும் 2016 சுவிஸ் பயணத்தின் போது போய் பார்த்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியகுடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிற்குள்ளே எமது பூமிக்கு மட்டும் தான் அதிக (பணப்)பெறுமதி உண்டு என பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் சொல்கின்றன. பூமியிலுள்ள செல்வத்தின் மொத்த பெறுமதி ஏறத்தாள 5 ஆயிரம் திரில்லியன் அமெரிக்க டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் பூமியில் உள்ள அனைத்து சொத்துக்களையும் சுரண்டியெடுத்து (யாரவது வேற்றுக்கிரக வாசிகளுக்கு) விற்றாலும் இந்த அண்டி மாட்டர்லை வெறும் 2 கிராம் கூட வாங்கமுடியாதே. இல்லையென்றால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் வருட உற்பத்தியின்(GDP) வருமானத்தை 100 வருடங்களுக்கு இலவசமா தர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவரும் பகிடியளோட நில்லாது இது போல விடயங்களையும் எங்களுக்கு பகிர்ந்தால் நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2022 at 01:09, goshan_che said:

சொந்த ஆக்கமோ புலவர் ?

சும்மா பிச்சி மேஞ்சிட்டீயள் போங்கோ🔝.

உந்த ஜெனீவாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையத்தை நானும் 2016 சுவிஸ் பயணத்தின் போது போய் பார்த்தேன்.

ஆள்லை விசயம் இருக்கு...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, குமாரசாமி said:

ஆள்லை விசயம் இருக்கு...:cool:

நிச்சயமாக. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தெற்கின் தேர்தல் வெற்றி தினம் தமிழர்களுக்கு கரி நாள் – அருட்தந்தை மா.சத்திவேல். தனியார் காணிகளில் புத்தர் சிலைகளை வைத்தல், விகாரைகளை கட்டுதல் போன்றவற்றிற்கு வருத்தமோ தடுத்து நிறுத்துவதாகவோ கருத்து கூற மறுத்துள்ளமை அவையெல்லாம் தமது காலத்திலும் தொடரும் என்பதையே உணர்த்துகிறது. இதுவும் ஒருவகையில் யுத்த பிரகடனமே என அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிக் கதிரையை தமதாக்க தமிழர்களை வெறும் கறிவேப்பிலையாகவும் ரம்பையாகவும் பாவித்து விட்டு தூக்கி எறியவே முற்படுகின்றனர்.சுயநல அரசியலுக்கு தம்மை இரையாக்கிக்கொண்ட தமிழ் தேசிய கட்சியினரும் அரியதரம் பூசிக்கொண்ட தமிழ் அரசியல் தரப்பினரும் தேர்தல் அரசியல் களத்தில் நின்று தமிழர்களை பலி கொடுக்கும் அரசியலை முன்னகர்த்துகின்றனர். சமாதானப்படையாக தமிழர் தாயகத்தில் காலடி வைத்த இந்திய இராணுவத்தையும், இந்தியாவின் முகத்தையும் இதற்கு அவர்கள் யார் என்பதையும் உலகிற்கு வெளிக்காட்டிய தியாகி திலீபனின் உயிர்தியாக மாதம் இதுவாகும். அவரின் உண்ணாவிரத போராட்டம் எமது அரசியலுக்கும் தேசியம் காக்கும் செயற்பாட்டுக்கும் உந்து சக்தியாக இருப்பதோடு எதிராளிகளில் முகத்திரையை கிழிக்க தேசமாக ஒன்று சேர வேண்டும் என தெரிவித்துள்ளார். தெற்கின் தேர்தல் வெற்றி தினம் என்பது தமிழர்களுக்கு இன்னும் ஒரு கரி நாள் என்பதை வெளிப்படுத்துவோம். அதுவே எமக்கான தேர்தல் வெற்றியாக அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/2024/1398515
    • அரியநேத்திரனுக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை. 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், சங்கு சின்னத்தில் தமிழ் மக்களின் இன்னல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித் தமிழ் பொது வேட்பாளராக அரியநேத்திரனை களமிறக்கியுள்ள நிலையில் , அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் சிவில் சமூக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கமைய குறித்த கோரிக்கையை அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கை பின்வருமாறு, 21 செப்டம்பர் 2024 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலில் முதற் தடவையாக தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஒற்றுமையாக ஒன்றிணைந்து தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற அமைப்பொன்றை உருவாக்கித்  தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்காக சங்குச் சின்னத்தில் திரு பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக  நிறுத்தியுள்ளோம். காலங்காலமாகச் சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பை எதிர்கொண்டு போராடி வருகின்ற தமிழ்த் தேசம் தனது உயிரினும் மேலாகக் கருதி வரும் தேசிய அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கான ஒருவாய்ப்பாக வரவிருக்கின்ற தேர்தலைப் பயன்படுத்துவதற்காக தேர்தலில் எம்மால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் பணிவன்புரிமையுடன் தமிழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம். 1982 முதல் இன்றுவரை இலங்கையில் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல்கள் எல்லாம் சிங்கள-பௌத்த பேரினவாதத் தலைவரைத் தேரந்தெடுப்பதாகவே அமைந்தன. இத் தேர்தல்களில் தமிழ் மக்கள் ஆதரவளித்த, தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர்கள் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டதுமில்லை, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற சனாதிபதிகளும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவழிப்பு நடவடிக்கைகளைக் கைவிட்டதுமில்லை. அதனால் இனிவரும் சனாதிபதித் தேர்தல்களிலும் வழமைபோல் தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிப்பதில் எமக்கு எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதே வரலாறு எமக்குத் தரும் வழிகாட்டலாகும். எனவேதான் இம்முறை நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தலைத் தமிழ் தேசத்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பான தமிழ் மக்களின் தெளிவான ஆணை ஒன்றைச் சர்வதேசத்திற்கும் சிங்கள மக்களுக்கும் வெளிப்படுத்தும் வகையிலான தேர்தலாக மாற்றிப் பயன்படுத்தும் நோக்கில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் கூட்டு முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையமும் இணைந்து கொண்டது. சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப்பொது வேட்பாளரான திரு அரியநேத்திரனுக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒரு தனி நபருக்கான வாக்குகள் எனக் கருதாமல், அவ்வாக்குகள் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கான வாக்குகளே என்ற புரிதலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் எனும் இச்செயற்திட்டத்தில் நாம் இணைந்து கொண்டோம். எமது பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்படும் வேளையில், ஒற்றையாட்சியைத் தமிழ் மக்களால் தீர்வாக ஆராயவும் முடியாது எனக்கூறியது போல, 13ம் திருத்தத்தையும் தீர்வொன்றின் அடிப்படையாகக்கூட ஏற்க முடியாது என வெளிப்படையாக நிராகரிக்க வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எப்போதும் போல உறுதியாகக் கோரியிருந்தோம். எனினும் பல்வேறு பங்கீடுபாட்டாளர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் என்ற அடிப்படையில் எமது கருத்துக்கள் அனைத்தும் முழுமையாகவும், நாம் விரும்பிய மொழிப் பிரயோகத்திலும் உள்ளடக்கப் பட முடியாத யதார்த்த சூழ்நிலையையும் நாம் கருத்திற் கொள்கிறோம். இத்தகைய பின்னணியில், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான எமது விரிவான வாசிப்பையும் நிலைப்பாட்டையும், பின்வரும் விடயங்கள் தொடர்பிற் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். அரசியற் தீர்வின் பகுதியாக உருவாக்கப்படும் புதிய அரசியலமைப்பானது ஒரு புதிய கூட்டு அரசை இத்தீவில் உருவாக்குவதாக அமைய வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, இறைமை ஆகியவற்றினை ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் தேசங்களின் ஒன்றிணைவாக அமையும் அரசாக அது அமைய வேண்டும். அதாவது புதிய அரசானது ஒரு பன்மைத்தேசிய அரசு (Plurinational) என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். ஒற்றையாட்சி அரசு முறைமையையும் அதனது ஒரு அங்கமான 13ம் திருத்தத்தையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதோடு, இவை அரசியற் தீர்வுப் பேச்சுவார்த்தைக்கான ஆரம்பப் புள்ளியாகக்  கூட அமைய மாட்டாது என்பதே தமிழர்களின் நிலைப்பாடாகும். ஒற்றையாட்சி அரசுக்குட்பட்ட எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்புப் பங்குபற்றக் கூடாது. தமிழர்களின் சுயநிர்ணய அலகானது, அவர்களின் தாயகமானது, ஒன்றிணைந்த (தற்போதைய) வடக்கு கிழக்கு மாகாணங்களை கொண்டதாக அமைய வேண்டும். குறித்த சுயநிர்ணய அலகிற்குள் முஸ்லீம் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகள் தொடர்பில் திறந்த மனதோடு தமிழ்த் தரப்பு பேச்சுவார்த்தை நடாத்தத் தயாராக இருக்க வேண்டும். . பாதுகாப்பு, நாணயக் கொள்கை உட்பட ஒரு சில விடயங்கள் மாத்திரமே மத்திய அரசின் அதிகார எல்லைக்குள் இருப்பதோடு எஞ்சிய அதிகாரங்கள் (Residual Powers) மாநிலங்களிற்கு உரியவையாக அமைய வேண்டும். குறிப்பாக கல்வி, அரச காணி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, வரி இறுக்கும் அதிகாரம் ஆகியன நிச்சயமாக மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை விடயங்களை உள்ளடக்கி தமிழ் மக்கள் பேரவையால் தமிழ் மக்களின் கருத்துகளை உள்வாங்கி உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு முன்மொழிவைத் தமிழ் மக்கள் தமது அரசியல் நிலைப்பாடாக முன்வைக்க வேண்டும். தொடரும் இனவழிப்பின் ஒரு பகுதியாக போரின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு பன்னாட்டு குற்றவியல் விசாரணையை தமிழ் மக்கள் வேண்டுவதோடு, உண்மையைக் கண்டறிதல் உள்ளிட்ட உள்ளக செயன்முறைகள் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் சாத்தியமற்றவை எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். 2009ல் ஆயுதப்போர் முடிவடைந்த பின்பும் வழமைபோன்றும், பல்வேறு புதிய வழிகளிலும் முன்னரிலும் விட மூர்க்கமாகவும் வேகமாகவும் தமிழ் மக்களின் மேலாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைச் சிறீ லங்கா அரசுகள் தொடர்வதைத் தடுத்து நிறுத்த சர்வதேச தலையீடும், சர்வதேச அனுசரணையுடன் கூடிய பொறிமுறையும் கட்டாயமானதும் அவசரமானதுமான தேவைகளாகும். தமிழ் தேசம் தமக்குரித்தான சுயநிர்ணய உரிமையின்பாற்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழிமுறையான பொது வாக்கெடுப்பு (ஒப்பங் கோடல்) ஒன்றின் மூலம் தமது அரசியல் தெரிவை மேற்கொள்ளும் வகையில் ஐ.நா.வினால் மேற்பார்வை செய்யப்படும் ஒரு பொது வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றனர். ஆனால், 13ஆம் திருத்தத்தை நிராகரித்து தேர்தல் விஞ்ஞாபனமானது தெளிவாக நிலைப்பாடு எடுக்கவில்லை என நாம் கருதுகிறோம். ஆயுத மோதல்களுக்குப் பின்னர் இனப்பிரச்சனைக்கான தீர்வைப் 13ம் திருத்தத்திற்குள்   முடக்குவதை நோக்கமாகக் கொண்டு உரையாடல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அனுபவ ரீதியாக மாகாண சபை முறையானது எவ்விதத்திலும் எமது நாளாந்த பிரச்சனைகளைக்கூடக் கையாள்வதற்குப் போதுமானதன்று என்பது எமது பட்டறிவு. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிற் பெரும்பாலானவை ஒற்றையாட்சியை மறுப்பதாகத் தமிழ் மக்களுக்குச் சொன்னாலும், பிராந்திய மற்றும் பூகோள அரசியற்  சக்திகளின் அழுத்தத்தின் காரணமாக நடைமுறையில் “13 அல்லது 13 பிளஸ்” என்ற வரையறைக்குள்ளேயே, அதாவது ஒற்றையாட்சி முறைமைக்கு உட்பட்டே, தமது நடைமுறை அரசியலைச் செய்து வருகின்றனர். இது தவறானது எனத்  தமிழ் சிவில் சமூக அமையம் கடந்த 15 வருடங்களில் பல முறை சுட்டிக் காட்டியுள்ளது. ஆனாலும் இன்று எமது தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,  13ம் திருத்தம் தொடர்பில் வெளிப்படையான நிராகரித்தல் அற்ற ஒரு மௌனத்தொனியே வெளிப்பட்டுள்ளது.தமிழ்ப் பொது வேட்பாளரின் விஞ்ஞாபனம் ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றமையானது 13ஆவது திருத்தத்தை அரசியல் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட தமிழ் மக்கள் கருத முடியாது என்று கூறுவதாகவே அர்த்தம் கொள்ளப்பட வேண்டும் என நாம் கருதுகிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் தனது நிலைப்பாடுகளாகவும், விஞ்ஞாபனம் தொடர்பான விரிவான வாசிப்பாகவும்,  பகிர்ந்து கொண்டவற்றில், இத் தேர்தல் விஞ்ஞாபனம், சில விடயங்களை  வெளிப்படையாகவும், சில விடயங்களைப்  பூடகமாகவும் வெளிப்படுத்துகிறது. இதனால் மக்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை நாம் அவதானிக்கிறோம். தமிழ் சிவில் சமூக அமையம் இந்நிலை தொடர்பில் ஆழ்ந்த கவலையும் கரிசனையும் கொள்கின்ற அதே வேளை தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு என்ற தமிழ்த் தேசிய அரசியல் முயற்சி வெற்றி பெற வேண்டும் என நாம் வலுவாக நம்புகின்றோம், விரும்புகின்றோம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே நாம் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிக்கக் கோருகின்றோம். இத்தகைய அணுகுமுறையில் இருந்து – வாசிப்பிலிருந்து எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை நாம் வேண்டுகிறோம். தமிழ் அரசியல் நேர்மைப் பாதையில் தடம் பதிக்க நாம் உளச்சுத்தியுடன் தொடர்ந்து பயணிப்போம். தமிழ்ப் பொதுக் கட்டமைப்பு அத்தகைய பாதையில் செல்வதை உறுதி செய்ய எம்மாலான அனைத்தையும் நாம் தொடர்ந்து செய்வோம். 2009இன் பின்னர் நடைபெற்ற மூன்று சனாதிபதித் தேர்தல்களிலும் தமிழ் மக்கள், தென்னிலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளைச் சேர்ந்த சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தனர். எமது வாக்கைப் பெற்றவர்கள் தேர்தலில் வென்று பதவிக்கதிரை ஏறினாலும் அல்லது தோற்றாலும் ஒரு போதும் சிங்கள் பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து அவர்கள் வெளியேறவில்லை என்பதே எமது அனுபவமாகும். இந்நிலையில் இம்முறை இனவாதிகளான சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை விட தமிழ் மக்களின் அபிலாசைகளை தனது தேர்தல் கோரிக்கைகளாக முன்வைத்துள்ள, தமிழ்ப் பொதுக்கட்டமைப்பால் முன்மொழியப்பட்டுள்ள திரு பா. அரியநேத்திரன் அவர்களுக்கு எமது வாக்குகளை வழங்கி எமது இலட்சிய உறுதியை வெளிப்படுத்துவோம் என தமிழ் மக்களைக் கோருகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/2024/1398550
    • ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம் – ஒருவர் மட்டுமே பங்கேற்பு. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்கும் நேரடி விவாதம் இன்று நடைபெற்றிருந்தது. இருப்பினும் விவாதத்தில் ஒரு வேட்பாளர் மட்டுமே கலந்து கொண்டார். மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, மற்றும் நாமல் ராஜபக்ஷ, பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் திலித் ஜயவீர மாத்திரமே இன்றைய விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார். இதேவேளை மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் இன்றைய விவாதத்தில் 16 வேட்பாளர்கள் மாத்திரமே பங்கேற்பதாக உறுதியளித்திருந்தபோதும் இன்று ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதுடன் நாளையதினமும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1398554
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • எண்பது வயதை கடந்த ஒரு பெண்ணுடன் 46 வயதான ஒருவர் வாழ்தல் என்பது தாம்பத்ய குடும்பம் அல்ல அதற்கு வேறு பெயர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இதனுடைய பின் விளைவுகள் மற்றும் விளையாட்டுகள் பற்றி பின்னர் பேசப்படும்???
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.