Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள்

February 19, 2022
spacer.png


 

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை  உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர்.

யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு வருகை தந்த கொழும்பு மாநகர முதல்வர் அடங்கிய குழுவினரை யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர் துரைசாசா ஈசன், மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள்  வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

 

spacer.png

https://globaltamilnews.net/2022/173175

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கிருபன் said:

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க

spacer.png

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி... 
பெயருக்கு ஏற்ற மாதிரி, ரோஸ் நிறத்திலை  இருக்கிறா. 😛 😁

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி... 
பெயருக்கு ஏற்ற மாதிரி, ரோஸ் நிறத்திலை  இருக்கிறா. 😛 😁

இவர்போன்று பலர் இந்த நிறத்தில் இருக்கின்றனர், எப்படி என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் அதற்கான ஊட்டத்தை யாழ்களத்தில் ஊட்டமுடியாது, ஊட்டினால் வெட்டுவிழும். ஊட்டியவருக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த யாழ்களம் இத்தனைகாலமும் மிகவும் சிறப்பாக நடைபோடுவதற்குக் காரணம் அதன் சிறப்பான மட்டுறுத்தினர்களே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

இவர்போன்று பலர் இந்த நிறத்தில் இருக்கின்றனர், எப்படி என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் அதற்கான ஊட்டத்தை யாழ்களத்தில் ஊட்டமுடியாது, ஊட்டினால் வெட்டுவிழும். ஊட்டியவருக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த யாழ்களம் இத்தனைகாலமும் மிகவும் சிறப்பாக நடைபோடுவதற்குக் காரணம் அதன் சிறப்பான மட்டுறுத்தினர்களே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

குங்குமப்பூ  சாப்பிட்டு, இந்த நிறத்தை எடுத்திருக்கிறா என்று சொல்ல வருகிறீர்கள் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

குங்குமப்பூ  சாப்பிட்டு, இந்த நிறத்தை எடுத்திருக்கிறா என்று சொல்ல வருகிறீர்கள் போலுள்ளது. 🤣

பேர்கர் இனப் பின்னணியில் வந்திருப்பார். பேர்கர் இலங்கையில் மும்மொழியும் பேசுபவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களில் பெரும்பான்மையானோர்.. கிறிஸ்தவர்கள். இவருடைய பெயரும்.. கிறிஸ்தவப் பெயராகவே தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

பேர்கர் இனப் பின்னணியில் வந்திருப்பார். பேர்கர் இலங்கையில் மும்மொழியும் பேசுபவர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவர்களில் பெரும்பான்மையானோர்.. கிறிஸ்தவர்கள். இவருடைய பெயரும்.. கிறிஸ்தவப் பெயராகவே தெரிகிறது. 

மகிந்தவின் பாரியாரும், உதே...  நிறம்தான்.
பறங்கியர்.... கொழும்பு மாநகரசபையின் முதல்வர் ஆகலாம்.
தமிழன், முதல்வர் பதவிக்கு வந்திருந்தால்.....
சிங்களவன், சோனகன் எல்லாருக்கும்.... வயித்துக் குத்து வந்து,
விசர் நாய் மாதிரி... ஒடித் திரிந்து இருப்பாங்கள்.  🤣

 

1 hour ago, தமிழ் சிறி said:


தமிழன், முதல்வர் பதவிக்கு வந்திருந்தால்.....
சிங்களவன், சோனகன் எல்லாருக்கும்.... வயித்துக் குத்து வந்து,
விசர் நாய் மாதிரி... ஒடித் திரிந்து இருப்பாங்கள்.  🤣

 

கொழும்பின் மேயராக தமிழர் கணேசலிங்கம் 1996 ஜூன் இல் இருந்து 1997 மார்ச் வரை பதவி வகித்தவர். யூ என் பி யில் இருந்தவர் பின் கட்சி மாறி 1997 இல் தேர்தலில் நின்று பதவியை இழந்தார். இவற்றுக்கு முன் சில வருடங்கள் பதில் மேயராகவும் இருந்தார்.

 

இவர் 97 இல் தேர்தலில் தோற்றதால், கரு ஜயசூரிய முதன் முதலாக அரசியலில் ஒரு பதவியை பிடிக்க முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

இவர்போன்று பலர் இந்த நிறத்தில் இருக்கின்றனர், எப்படி என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால் அதற்கான ஊட்டத்தை யாழ்களத்தில் ஊட்டமுடியாது, ஊட்டினால் வெட்டுவிழும். ஊட்டியவருக்கும் தடுப்பூசி போடப்படும். இந்த யாழ்களம் இத்தனைகாலமும் மிகவும் சிறப்பாக நடைபோடுவதற்குக் காரணம் அதன் சிறப்பான மட்டுறுத்தினர்களே என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

 

என் தம்பி  நிழலியை  நீங்கள் இப்படி  காட்டிக்கொடுக்கக்கூடாது அண்ணை??😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

என் தம்பி  நிழலியை  நீங்கள் இப்படி  காட்டிக்கொடுக்கக்கூடாது அண்ணை??😜

உங்கள் தம்பியால் ஊகிக்க முடியும் என் பின்னூட்டத்தின் காரண வித்துக்களை. இப்போதெல்லாம் சிறியவர்கள் சொல் கேட்டுத்தான் பெரியவர்கள் வாழ்க்கை நடக்கிறது.🤗

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்கள் பதவியில் இருப்பது நன்று.👌 சபையில் வீண் குழப்பங்கள் , அடி தடி , அமளி துமளி, உள் கட்சி-உள்ளடி வேலைகள் , பாதீட்டு தோற்கடிப்பு இவை எதுவும் இல்லாமல் சுமூகமாக நடத்த இயலும் .😊 

எல்லோரும் வச்ச கண் வாங்காமல் அமைதியாக இருப்பினம் ☺️

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள்

நல்லதொரு விடயம்  இது?

இது  போன்ற ஒத்துழைப்புக்கள் சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் தொடரணும்

நாளை ஏதாவது  சிக்கல்கள்  வரும்போது தொடர்பு கொள்ளவும் ஒருமித்து  நின்று  எதிர்க்கவும் பயன்படும்??

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள்

நல்லதொரு விடயம்  இது?

இது  போன்ற ஒத்துழைப்புக்கள் சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் தொடரணும்

நாளை ஏதாவது  சிக்கல்கள்  வரும்போது தொடர்பு கொள்ளவும் ஒருமித்து  நின்று  எதிர்க்கவும் பயன்படும்??

விசுகர்,
சிக்கல்கள் வரும் போது.... சிங்களவர்  ஒரு அணியில்  நிற்பார்கள்.
தமிழர்கள் 10 அணியில் பிரிந்து நின்று, 
சிங்களவர்களுக்கு  பொல்லு எடுத்து கொடுப்பார்கள்.

இதனை நான் சொல்ல வில்லை.
கடந்த கால வரலாறு.. அப்படித்தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

கொழும்பின் மேயராக தமிழர் கணேசலிங்கம் 1996 ஜூன் இல் இருந்து 1997 மார்ச் வரை பதவி வகித்தவர். யூ என் பி யில் இருந்தவர் பின் கட்சி மாறி 1997 இல் தேர்தலில் நின்று பதவியை இழந்தார். இவற்றுக்கு முன் சில வருடங்கள் பதில் மேயராகவும் இருந்தார்.

 

இவர் 97 இல் தேர்தலில் தோற்றதால், கரு ஜயசூரிய முதன் முதலாக அரசியலில் ஒரு பதவியை பிடிக்க முடிந்தது.

தகவலுக்கு, நன்றி நிழலி. 
2009´ற்குப் பின், தமிழனை கண்டால்....
சிங்களவன், சோனகனுக்கு... அலர்ஜி வருத்தம் உண்டாகி 
உள்ளதை அவதானித்துப் பார்த்தால் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை  உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர்.

இந்த நுhலகம் உங்கள் ஆட்களால்த் தான் தீ மூட்டி எரிகப்பட்டது என்றதை யாரும் சொல்லலையோ?

10 hours ago, கிருபன் said:

யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர்.

தமிழ் புத்தகங்களா?

சிங்கள புத்தகங்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

விசுகர்,
சிக்கல்கள் வரும் போது.... சிங்களவர்  ஒரு அணியில்  நிற்பார்கள்.
தமிழர்கள் 10 அணியில் பிரிந்து நின்று, 
சிங்களவர்களுக்கு  பொல்லு எடுத்து கொடுப்பார்கள்.

இதனை நான் சொல்ல வில்லை.
கடந்த கால வரலாறு.. அப்படித்தான் இருக்கின்றது.

இதில் மாற்றுக்கருத்தில்லை  சிறி

ஆனால்  நாம்  நிச்சயமாக  முயலணும்

தொடரணும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

இதில் மாற்றுக்கருத்தில்லை  சிறி

ஆனால்  நாம்  நிச்சயமாக  முயலணும்

தொடரணும்

உண்மை விசுகர்.
எட்டப்பர்களுக்கும், காக்கை வன்னியர்களுக்கும், ஒட்டுக் குழுக்களுக்கும்...   முடிவு கட்ட வேண்டும். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

யாழ் சென்ற கொழும்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள்

நல்லதொரு விடயம்  இது?

இது  போன்ற ஒத்துழைப்புக்கள் சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் தொடரணும்

நாளை ஏதாவது  சிக்கல்கள்  வரும்போது தொடர்பு கொள்ளவும் ஒருமித்து  நின்று  எதிர்க்கவும் பயன்படும்??

தமிழன் தொடர்ந்தும் இலவுகாத்த கிளிதானா? மாற்றம்வராதென்பதற்கு அண்மைய பல சான்றுகள் உண்டு. அதில் இருவரைச் சுட்டலாம் ஒருவர் பேராசிரியராக இருந்து இனவாதியாகச் சிங்களத்தை அனைத்துலகிலும் காக்கப் போராடிவரும் ஜீ.எல். பீரில். அடுத்தவர் தேர்தல் காலத்தில் நீலப்படையாகிச் சமத்துவத் தத்துவம் பேசிய மகிந்தக்குட்டி(நாமல்). 

வந்தவர்கள் சிநேகபூர்வரவா?  முதலில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்நிலங்களை விடுவதிலிருந்தே சினேபூர்வம் மலரமுடியும். இதெல்லாம் ஜெனீவாவுக்கான முன்னேற்பாடுகள்!

3 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்,
சிக்கல்கள் வரும் போது.... சிங்களவர்  ஒரு அணியில்  நிற்பார்கள்.
தமிழர்கள் 10 அணியில் பிரிந்து நின்று, 
சிங்களவர்களுக்கு  பொல்லு எடுத்து கொடுப்பார்கள்.

இதனை நான் சொல்ல வில்லை.
கடந்த கால வரலாறு.. அப்படித்தான் இருக்கின்றது.

சிறப்பாகச் சுட்டியுள்ளீர்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை  உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர்.

சாம்பலாகிப்போயிருப்பாங்கள் என்று தீயிட்டோம், இப்படி எழும்பி நிக்கிறாங்களே என்று பிரமிச்சிருப்பா!

மாற்றியெழுதப்பட்ட வரலாற்றுப்புத்தகங்களாய் இருக்குமோ? நாசூக்காய் செருகிப்போடுவா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.