Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை மாநகர சபையின் முதலாவது பட்டியல் சமூகத்தை ( தலித்) சேர்ந்த பெண் மேயராக, ஆர் பிரியா பதவியேற்க உள்ளார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Mayor-new.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்.🤪

May be an image of 20 people and text that says "03-03-2022 abp நாடு திமுக மேயர் வேட்பாளர்கள் ஆர்.பிரியா சென்னை அன்பழகன் திருச்சி இந்திராணி எணி மதுரை பி.எம்.சரவணன் நெல்லை கல்பனா கோவை ராமச்சந்திரன் ராமச்சந் சேலம் தினேஷ் குமார் திருப்பூர் நாகரத்தினம் ஈரோடு என்.பி.ஜெகன் தூத்துக்குடி உதயகுமார் உதயகு ஆவடி வசந்தகுமாரி தாம்பரம் மகாலட்சுமி காஞ்சிபுரம் சுஜாதா வேலூர் சுந்தரி கடலூர் சண்.ராமநாதன் தஞ்சை கவிதா கணேசல் கரூர் எஸ்.ஏ சத்யா ஓசூர் இளமதி திண்டுக்கல் சங்கீதா இன்பம் சிவகாசி மகேஷ் நாகர்கோவில்"

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

சாதிகளை அடிக்கடி நினைவு படுத்திக்  கொண்டு இருப்பதே... 
உந்த பத்திரிகைகளும் அரசியல் வாதிகளும் தான்.
அதில் தான்... அவர்களுக்கு வருமானம் அதிகம்.

திராவிட அரசுகள்... எத்தனை வருடமாக, சாதி ஒழிப்பு செய்கிறார்கள்.
இருந்ததை.... விட, அதிகமானதுதான் கண்ட பலன்.

ஏலுமென்றால்... பாடசாலைக்கு, சேர வரும் பிள்ளைகளிடம் 
சாதி கேட்பதை.. தடை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
செய்யக் கூடியதாக இருந்தும், செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால்... வாக்கு வங்கி, விழுந்திடும்.

27 minutes ago, zuma said:

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

தமிழ்நாட்டில்.... இவர்களை முன்னுக்கு விட்டுட்டு 
பெண்களுக்கு.... பின்னால்  இருந்து,  அவர்களை இயக்குவது....
அவர்களின் கணவரும், தந்தையும் தான்.

தேர்தலில் செலவழித்த காசை, யாராம்... கறாராக, வசூல் செய்வது. 🤣
இந்த ரெக்னிக்... பலமுறை வெளிச்சத்துக்கு  வந்து, பஞ்சாயத்து நடந்தது.

Edited by தமிழ் சிறி

1 minute ago, தமிழ் சிறி said:

 

ஏலுமென்றால்... பாடசாலைக்கு, சேர வரும் பிள்ளைகளிடம் 
சாதி கேட்பதை.. தடை செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்.
செய்யக் கூடியதாக இருந்தும், செய்ய மாட்டார்கள்.
அப்படி செய்தால்... வாக்கு வங்கி, விழுந்திடும்.

அப்படி செய்ய முடியாது இந்தியாவில். அப்படி செய்தால், பாதிப்பு தீண்டாமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் மக்கள் தான். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் அவர்களால் ஓரளவுக்கேனும் சமூகத்தின் மேல் மட்டத்துக்கு வரக்கூடியதாக இருப்பது இந்த இடக்கீட்டால் மட்டுமே. அதுவும் இல்லாவிடின், மேல் சாதியினர் காலம் காலமாக காலில் போட்டு மிதித்துக் கொண்டே இருப்பார்கள் அங்கு.

 

1 hour ago, zuma said:

Mayor-new.jpg

மனமார வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர். பிரியாவுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, zuma said:

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்.🤪

நான் சொல்லுறது தமிழரை தமிழர் எண்டு சொன்னாலே காணும். அப்பிடி சொல்லாட்டி கட்டிவைச்சு பச்சைமட்டையடி வைத்தியம் குடுக்க எல்லாம் தானாய் அழியும்..

41 minutes ago, zuma said:

அநேகமான மேயர் பதவிகளை பெண்கள் அலங்கரிக்கின்றார்கள்.👏

இதை முதல்ல நாம் தமிழர்கட்சிதான்50/50 என அமுல் படுத்தியது 💪💪💪💪💪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் சொல்லுறது தமிழரை தமிழர் எண்டு சொன்னாலே காணும். அப்பிடி சொல்லாட்டி கட்டிவைச்சு பச்சைமட்டையடி வைத்தியம் குடுக்க எல்லாம் தானாய் அழியும்..

 

உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை   கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். 😋

11 minutes ago, குமாரசாமி said:

இதை முதல்ல நாம் தமிழர்கட்சிதான்50/50 என அமுல் படுத்தியது 💪💪💪💪💪

எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, தமிழ் சிறி said:

 

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

tenor.gif

ஸ்ராலின்... படிச்ச  பள்ளிக்கூடத்திலை தான், இவவும் படித்து இருக்கிறா போலுள்ளது. 🤣
காசையும், சாராயத்தையும்....  வாங்கிக் கொண்டு, 
வாக்குப் போட்டால்... இப்பிடியான,  அரை வேக்காடுகள் தான் வரும்.  😮

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:
3 hours ago, குமாரசாமி said:

சாதிகளை ஒழிக்க வேண்டுமானால் முதலில் செய்திகளில் சாதியை ஒழிக்க வேண்டும். அல்லது அழி(டி)க்க வேண்டும்.😎

உதை  தான் சிங்களவனும் சொல்லுகின்றான்,  நாம் எல்லோரையும் இலங்கையர் என அழைக்க வேண்டும். அப்படி அழைப்பதினால் இனப்பிரச்சனை தீர்ந்து விடுமாம்

நீங்கள் சொல்வது இனத்தைப் பற்றியே.

மேலே சொன்னது சாதி பற்றி.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசமுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அப்படி செய்ய முடியாது இந்தியாவில். அப்படி செய்தால், பாதிப்பு தீண்டாமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் மக்கள் தான். பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு மூலம் அவர்களால் ஓரளவுக்கேனும் சமூகத்தின் மேல் மட்டத்துக்கு வரக்கூடியதாக இருப்பது இந்த இடக்கீட்டால் மட்டுமே. அதுவும் இல்லாவிடின், மேல் சாதியினர் காலம் காலமாக காலில் போட்டு மிதித்துக் கொண்டே இருப்பார்கள் அங்கு.

 

மனமார வாழ்த்துகின்றேன்.

இந்த வாழ்த்தில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ என ஐயம் எழுகிறது!🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் சொல்வது இனத்தைப் பற்றியே.

மேலே சொன்னது சாதி பற்றி.

இரண்டுக்கும் பாரிய வித்தியாசமுண்டு.

அதை என்னெண்டு சொல்லுறது......வெளிநாடு வந்தும் இன்னும் வெளிக்கேல்லை எண்டால் என்னதை செய்யிறது????? 😂☺️

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்க பாருங்க  சிறித்தம்பி  சத்தியப்பிரமாண அலங்காரத்த....😂 😋🤪

 

குமாரசாமி அண்ணை… இந்தக் காணொளியை,
இதுவரை… இருபது தரம் பார்த்து விட்டேன்.
அந்த அக்காவின் பெயர் கல்விக் கடவுள் சரஸ்வதியாம். 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

உதை தான் அவங்களும் சொல்லுகின்றார்கள், இலங்கையரை இலங்கையர் சொல்லாத ஆட்களை   கட்டிவைச்சு கருக்குமட்டையடி வைத்தியம் கொடுத்தால் எல்லாம் சரிவருமாம். தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்களுடைய இருப்புக்காக இனவாதத்தை பரப்புகின்றார்களாம், அவர்களை தடை செய்யவேண்டுமாம். 😋

எங்கை அய்யா, இணை பிரபஞ்சத்திலா?😄

அடேயப்பா  சிங்களம் அப்படியே புத்த்சீல கொள்கையை பின்பற்றிய படி தானே இருக்கிறார்கள்.  இந்த தமிழரும் முஸ்லிம்களும் தான் இனவாதத்தை கக்குகிறார்கள்.

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 🙃

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மாநகர சபையின் பெண் மேயராக, ஆர் பிரியா பதவியேற்க உள்ளார்.

இப்படித் தலையங்கம் வந்திருந்தால் உயிரும் பாதுகாப்பாக இருக்கும். மயிரும் பாதுகாப்பாக இருக்கும். எவருக்கும் கொடுக்க வேண்டியதில்லை.🙏

45 minutes ago, nunavilan said:

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 🙃

சுத்தமான தண்ணீர், அதாவது தண்ணீரைக் காச்சி வரும் ஆவியைக் குளிரச் செய்து வருவதுதான் மிக மிகச் சுத்தமான தண்ணீர். அப்படித் தமிழரும் காச்சப்பட்டு சுத்தமான தமிழராக வந்தவர்களுள் நாம் தமிழரும் உள்ளதாக எண்ணுகிறேன். இருப்பினும் மிக மிகச் சுத்தமான தண்ணீர் குடிப்பதற்கு அல்ல என்று எழுதி விற்கிறார்களே!🤔 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

tenor.gif

ஸ்ராலின்... படிச்ச  பள்ளிக்கூடத்திலை தான், இவவும் படித்து இருக்கிறா போலுள்ளது. 🤣
காசையும், சாராயத்தையும்....  வாங்கிக் கொண்டு, 
வாக்குப் போட்டால்... இப்பிடியான,  அரை வேக்காடுகள் தான் வரும்.  😮

IMG-20220304-012443.jpg

😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220304-012443.jpg

😢

தலைவன் எவ்வழியோ சிஷ்யர்களும் அவ்வழி.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

அடேயப்பா  சிங்களம் அப்படியே புத்த்சீல கொள்கையை பின்பற்றிய படி தானே இருக்கிறார்கள்.  இந்த தமிழரும் முஸ்லிம்களும் தான் இனவாதத்தை கக்குகிறார்கள்.

 

இது என்ன கோதரியாக இருக்குது, யார் சொன்னது சிங்களவர் புத்த சீலர்கள் என்று, அவர்கள் புத்த சீலர்ககளாக இருந்தால் நாம்  ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது.
 

Quote

 

நாம் தமிழர் என்று வாசித்தவுடனேயே சூமாவின் மூளை தானாகவே மூடிக்கொள்ளும். 


 

உண்மையை சொன்னால் ஏன் கோவிக்கின்றிர்கள், கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 90 % இடங்களில் டெபொசிட் இழந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

''வடசென்னை கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவேன்'' - சென்னை மேயர் ஆர்.பிரியா சிறப்புப் பேட்டி

chennai-mayor-priya-interview படம்: எல். சீனிவாசன்
 

"உங்கள் பக்கத்துட்டு வீட்டுப் பெண் மாதிரிதான் நானும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு" என்று மிக இயல்பாகப் பேசுகிறார். "வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு" என்று பிரச்சினைகளுடன் அடுக்குவதுடன், அதை தீர்வு காண்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்கிறார். பதவியேற்ற மறுநாளில் நம்மிடம் அரசியலுடன் பர்சனல் பக்கத்தையும் பகிர்ந்திருக்கிறார் சென்னை மேயர் ஆர்.பிரியா.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாவட்டச் செயலராக உள்ள பகுதிக்கு உட்பட்ட வார்டில், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர் ஆர்.பிரியா. முதல்வர் ஸ்டாலின் தந்த வாய்ப்பு, சேகர்பாபுவின் ஆதரவால் சென்னை மாநகராட்சி மேயராக பதவியேற்றுள்ளார். 28 வயதான இவர் சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயர் ஆவார். குறிப்பாக, வடசென்னையிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையும் இவரே பெற்றிருக்கிறார். பதவியேற்ற பிறகு பரப்பரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மேயர் பிரியாவிடம் ’இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்காக பேசினேன். அந்த உரையாடல் இதோ...

* அரசியலில் எப்போதிலிருந்து இருக்கிறீர்கள்?

"படிக்கும் காலத்தில், நான் ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், காலம் வேறு திசையைக் காட்டியது. கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால், இந்த நகர்ப்புற தேர்தலில்தான் நான் தீவிரமாக அரசியலில் இறங்கினேன்."

* அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

"என்னுடைய குடும்பம் பாரம்பரிய அரசியல் பின்னணி கொண்டது. என்னுடைய மாமா செங்கை சிவம், திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். என்னுடைய தந்தை திமுக தொகுதி துணைச் செயலாளராக இருந்தவர். அரசியல் பேச்சுகளைக் கேட்டு வளர்ந்ததால் எனக்கும் அரசியலில் ஆர்வம் வந்துவிட்டது. இந்த தேர்தலில் நிச்சயம் கவுன்சிலராக தேர்தெடுக்கப்படுவேன் என்று நம்பினேன். ஆனால், மேயர் பதவி கிடைக்கும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை."

16464682823057.jpg

* சென்னை மாநகராட்சிக்கு முதல் தலித் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து...

"மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கூடுதல் பொறுப்புணர்வுடன் இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை வழங்கி இருக்கிறார். இதுவரை எந்தக் கட்சியும் தலித் பெண் ஒருவரை மேயராக நியமித்தது இல்லை. ஆனால், முதல்வர் இந்த பெரிய முடிவை எடுத்து எல்லாருக்கு முன்மாதிரியாகியுள்ளார். எல்லாவற்றைவிட என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை முதல்வர் எனக்கு அளித்திருக்கிறார். அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்."

* மிக இளம் வயதில் மேயராகியிருக்கிறீர்கள்... உங்கள் தோழிகள், பகுதி மக்கள் என்ன சொன்னார்கள்..?

"இதுவரை யாரிடமும் தனிப்பட்ட முறையில் பேசவில்லை. கடந்த ஒரு வாரமாக நிற்பதற்குக் கூட நேரமில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். நம்மில் ஒருவர்தான் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அதைத்தான் நானும் விரும்புகிறேன்."

* அரசியலில் உங்கள் இன்ஸ்பிரேஷன் யார்?

"நிச்சயம், முதல்வர் ஸ்டாலின்தான். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர் தமிழக முதல்வரானார். கடந்த 8 மாதங்களில் மக்களின் நலனுக்காக நிறைய திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அவர் முதல்வராகவே முடியாது என்று விமர்சித்தவர்களுக்கு தனது செயல்பாடுகள் மூலம் பதிலளித்து வருகிறார். குறிப்பாக பெண்களுக்கும், திருநங்கைகளுக்கு நிறைய நலத்திட்டங்களை அறிவித்து, அதனை செயல்படுத்தி வருகிறார்.அவர்தான் என்றும் என்னுடைய இன்ஸ்பிரேஷன்."

* பிடித்த பெண் அரசியல் தலைவர்...

"குறிப்பிட்டு சொல்லும்படி, அப்படி யாரும் இல்லை."

16464683053057.jpg

*வட சென்னையில் இருந்து முதன்முதலாக சென்னை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். அங்கு உள்ள முக்கிய பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது... அதற்கான தீர்வாக என்ன வைத்துள்ளீர்கள்?

"வடசென்னையின் முக்கியப் பிரச்சினையாக எப்போதும் இருப்பது மழை நீர் தேக்கம், சுற்றுச்சூழல் மாசு இவை இரண்டுதான்.இதனை முதலில் சரிசெய்வதுதான் என்னுடைய கவனக் குவிப்பாக இருக்கும். இப்பிரச்சினைகளை தீர்க்க நிறைய திட்டங்களை கட்சியின் தலைமை வைத்துள்ளது. அதனை செயல்படுத்துவதுதான் எனது கடமை. வடசென்னையில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாட்டுகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் கொடுப்பேன்."

* அரசியல், திமுக... இவை எல்லாம் தவிர்த்து பிரியா என்பவர் யார்?

"உங்கள் பக்கத்துட்டு வீட்டு பெண் மாதிரிதான் பிரியாவும். ரொம்ப ஃபிரண்ட்லியான பொண்ணு, எல்லோர்கிட்டயும் சீக்கிரமாக ஃபிரண்ட் ஆகிவிடுவேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள். ஓவியத்தில் பிரியாவிற்கு ஆர்வம் உண்டு, நிறைய ஓவியம் வரைந்திருக்கிறேன். டூடுல் வரைவதிலும் ஆர்வம் உண்டு."

16464683243057.jpg

* அரசியலுக்கு வரவிரும்பும் இளம்பெண்களுக்கு மேயர் பிரியா கூறுவது...

"பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் உறுதியானவர்கள். பெண்கள் நிச்சயம் அரசியலுக்கு வரவேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளை பெண்கள் எளிதாக உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அதற்கான தீர்வைப் பெறுவதில் விரைந்து செயல்படுபவர்கள். பல புதிய திட்டங்களை அவர்களால் அறிமுகப்படுத்த முடியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். இளம்பெண்கள் அச்சம் கொள்ளாமல் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்."

* அடுத்த ஐந்து வருடங்கள் பிரியாவின் பயணம் எவ்வாறு இருக்கப் போகிறது?

"அடுத்து வரும் வருடங்கள் மக்கள் பணிதான் எனது பிராதானம். அதற்குதான் என்னை மக்களும், முதல்வரும் தேர்தெடுத்துள்ளார்கள். மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்ய முயற்சி செய்வேன்."

''வடசென்னை கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவேன்'' - சென்னை மேயர் ஆர்.பிரியா சிறப்புப் பேட்டி | chennai mayor priya interview - hindutamil.in

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.