Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்றில்.... யாருக்கு, பெரும்பான்மை உள்ளது – முக்கிய வாக்கெடுப்பு இன்று!

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.

பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்திருந்தார்.

அதற்கு ஜனாதிபதியினால் பதிலளிப்பதற்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, புதிய உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும், இதற்கமைய, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார்.

புதிய பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.

இதேநேரம், ஆளுங்கட்சி சார்பாகவும் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கையின் தற்போதைய நெருக்கடியின்போது நடைபெறும் முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

எனவே, நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை அறியும் வாய்ப்பையும் இது உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1280116

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தமிழ் சிறி changed the title to புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர்.

3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவுசெய்யப்பட்டன.

அதன்படி, 83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்ததையடுத்து, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1280225

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனோரை கண்டறிவதே காணாமற்போனோர் அலுவலகத்தின் கடமை- எம்.ஏ.சுமந்திரன்

பிரதி சபாநாயகர் தெரிவு... அரசாங்கத்தில் இருந்து, வெளியேறிவிட்டதாக கூறியவர்களின்... நாடகத்தை, அம்பலப்படுத்தியுள்ளது – சுமந்திரன்!

பிரதி சபாநாயகர் தெரிவு அரசாங்கத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறியவர்களின் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ருவிட்டரில் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் “பிரதி சபாநாயகர் பதவிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்மொழியப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஏனைய சிலர் அரசாங்கத்திலிருந்து விலகிவிட்டதாக அண்மைய நாட்களில் அரங்கேற்றிய நாடகத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1280245

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் சிங்கள மக்களின் ஒற்றுமை .
நீங்கள் என்றால் என்ன செய்திருப்பீர்கள் ?
ராஜபக்சாக்கள் வெளியேறினால் தான்
உங்களுக்குத் பெட்டிகள் கைமாறும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

புதிய... பிரதி, சபாநாயகராக... ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பில் வெற்றியடைந்ததையடுத்து, புதிய பிரதி சபாநாயகராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த வாக்கெடுப்பில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய 148 வாக்குகளையும் இம்தியாஸ் பாக்கிர் மார்க்கர் 65 வாக்குகளையும் பெற்றனர்.

3 வாக்குகள் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாக பதிவுசெய்யப்பட்டன.

அதன்படி, 83 மேலதிக வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மயந்த திசாநாயக்க, வினோ நோக இராதலிங்கம், உத்திக பிரேமரத்ன, இம்ரான் மௌரூப், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பதவி விலகலை ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி கடிதம் மூலம் அறிவித்ததையடுத்து, இன்றைய தினம் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1280225

என்னத்துக்காம் முதல் பதவி விலகினவர்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாதவூரான் said:

என்னத்துக்காம் முதல் பதவி விலகினவர்?

இவரையே அசைக்க முடியவில்லை. என்னையே அசைக்க போகிறீங்க என்று மகிந்த சொல்லும் செய்தி புரியுதா, இல்லையா? 🤗

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

அது தான் சிங்கள மக்களின் ஒற்றுமை .

வெளியே போகச் சொல்பவர்கள் சிங்கள மக்கள்.....

இது இருபக்கமும் உள்ள திருட்டு அரசியல் வாதிகள் கூட்டு....

அரசு கவிழ்ந்தால், எல்லோரும் உள்ள போவதுடன், திருடியதை பறி கொடுக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலே, கந்தறுந்து போன நாட்டை ஆட்சி செய்ய எதிர்கட்சிக்கும் விருப்பமில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியல் தலைவர்கள் மூக்கை நுழைக்காமல் விட்டாலே எமது பிரச்சனை தனித்துவமானது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம்.

நாசமாய் போனவர்கள் இருக்கும் வரக்கும் ஈழத்தமிழினத்திற்கு விடிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

பிரதி சபாநாயகராக செயற்பட்டிருந்த ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தனது பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

 

21 hours ago, தமிழ் சிறி said:

புதிய பிரதி சபாநாயகராக கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

எல்லாத்துக்கும் மறை களண்டு போச்சுது போலுள்ளதே. பதவி விலகலும் அதே பதவிக்கு மீண்டும்  போட்டியிடுதலும் சுத்த கோமாளித்தனம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவில்லையா? அல்லது மக்களை கோமாளியாக்குகிறார்களா?

9 hours ago, குமாரசாமி said:

சிங்கள அரசியலுக்குள் தமிழ் அரசியல் தலைவர்கள் மூக்கை நுழைக்காமல் விட்டாலே எமது பிரச்சனை தனித்துவமானது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைக்கலாம்.

 

21 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்,  வினோ நோக இராதலிங்கம்,   சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

எல்லாத்துக்கும் மறை களண்டு போச்சுது போலுள்ளதே. பதவி விலகலும் அதே பதவிக்கு மீண்டும்  போட்டியிடுதலும் சுத்த கோமாளித்தனம் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியவில்லையா? அல்லது மக்களை கோமாளியாக்குகிறார்களா?

May be an image of 3 people and text that says '20:16 மலைய... கோவணம் போராட்டம் நடைபெறாது... See more Like Comment Share Write a comment... Matale News shared a post. மீண்டும் பதவியை இராஜினாமா செய்தார் சியம்பலாபிட்டிய /.eo'

சியம்பலாப்பிட்டிய....  பிரதி சபாநாயகர் பதவியை,  
மீண்டும் ராஜினாமா செய்து விட்டார் என்று செய்திகள் வருகின்றது. 🤣

அட பாவி,  24 மணித்தியாலம் கூட ஆகவில்லை,
அதற்குள்... மீண்டும், ராஜினாமாவா..... 😂

tenor.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவி,  24 மணித்தியாலம் கூட ஆகவில்லை,
அதற்குள்... மீண்டும், ராஜினாமாவா..... 😂

 

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தனது பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பிரதி சபாநாயகராக நேற்று தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே பிரதி சபாநாயகராக பதவி வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் ஜனாதிபதியிடம் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்

எனினும் ஜனாதிபதி அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தார். இதையடுத்து கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார். அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.

இதையடுத்து ஏற்பட்ட  பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் போட்டியிட்டனர்.

இதையடுத்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்.

இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளதுடன் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

http://www.newswire.lk/wp-content/uploads/2022/05/Screenshot_20220506-193619_WhatsApp.jpg
 

 

https://www.virakesari.lk/article/127046

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

அட பாவி,  24 மணித்தியாலம் கூட ஆகவில்லை,
அதற்குள்... மீண்டும், ராஜினாமாவா..... 😂

 

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என நினைத்திருக்கலாம். 

இப்படித்தான்…. முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி ராஜினாமா பண்ணி விட்டு போக…
அடுத்த நாள்…  நிதி அமைச்சராக, பதவி ஏற்று…
அதற்கு அடுத்த நாள் ராஜினாமா செய்ய…
கோத்தா… அவரின் ராஜினாமவை ஏற்க மாட்டேன் என்று சொல்ல..
இப்ப… அலி சப்ரி, இரண்டு அமைச்சுப் பதவிகளை வைத்திருக்கிறார். 😁

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களர்கள் அடித்து கொள்வார்கள் பிறகு சேர்ந்து கொள்வார்கள்

rmNNz8.jpg

கவுண்டர் : உன்ன நினையட.. நம்மட ஊருல எத்தனை சந்து பொந்து இருக்குன்னு உனக்கு தெரியுமா.? 😊

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கேலிகூத்துக்களை மாதனமுத்தாக்களால் மட்டுமே செய்ய முடியும்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கடந்த ஏப்ரல் 30ஆம் திகதியுடன் தான் பதவியில் இருந்து விலகுவதாக சபையில் அறிவித்தார். அதற்கமைய, அவர் பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகினார்.

 

7 hours ago, கிருபன் said:

இதையடுத்து ஏற்பட்ட  பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடத்திற்கு புதிதாக ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் போட்டியிட்டனர்.

 

7 hours ago, கிருபன் said:

அதற்கமைய 148 வாக்குகளால் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவானார்

 

7 hours ago, கிருபன் said:

இந்நிலையில் தான் மீண்டும் பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலக உள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளதுடன் தனது இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாடு வங்குரோத்து, மக்கள் வறுமையோடு  நடுவீதியில் போராடுகிறார்கள், களஞ்சியங்கள் வெறுமை, பாராளுமன்றத்தில் வேலை இல்லை இவர்களுக்கு. இவர்கள் தங்கள் பாணியில் இப்படி போராட்டம் செய்கிறார்களா? அன்றி புதுசா ஒரு விளையாட்டை அறிமுகப்படுத்தி நேரத்தை செலவழிக்கிறார்களா புரியவில்லையே? விளையப்போகும் வினையை புரியாமல் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் முட்டாள்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.