Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே-18ஐ இனப்படுகொலை தினமாக அங்கீகரித்து கனேடிய பாராளுமன்றம்

(ஆர்.ராம்)

கனடா பாராளுமன்றத்தில் மே 18 ஆம் நாளை இனப்படுகொலை தினமாக  அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

No description available.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி மே 18ஆம் நாளை இனப்படுகொலை தினமாக அங்கீகரிக்கும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

No description available.

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில்,  தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/127781

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

காலையில் மிகவும்  நல்ல  செய்தி

நன்றி கனடா

  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு நேட்டோக்களும் நசிட்டுக்களும் நல்ல நாடுகள் தான்.  தங்கள் பலவந்தமாக கடத்திவந்த ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் வளமான வாழ்வு அளிப்பதோடு நிற்காமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடமும் அக்கறை கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

😏

19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

திருட்டு நேட்டோக்களும் நசிட்டுக்களும் நல்ல நாடுகள் தான்.  தங்கள் பலவந்தமாக கடத்திவந்த ரஷ்ய ஆதரவு இலங்கை தமிழர்களுக்கு மட்டும் வளமான வாழ்வு அளிப்பதோடு நிற்காமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களிடமும் அக்கறை கொள்கிறார்கள்.

புலம்பெயர் இலங்கையர்களின் வளமான வாழ்வுதான் ஐயாவுக்கு வவுத்தெரிச்சலைக் கிளப்புவதற்குக் காரணமோ? 

விளங்க நினைப்பவர் தமிழக அகதி முகாமிலா இருக்கிறீர்கள் ? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

பாராளுமன்றில் குறித்த பிரேரணை முன்நகர்த்தப்பட்டிருந்த நிலையில்,  தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை அங்கீகரிப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஏற்றுக்கொள்வதாகவும் சபை தெரிவித்துள்ளது.

இந்தப் பிரேரணைக்கு லிபரல், கன்சர்வேட்டி உட்பட பாராளுமன்றத்தினைப்

பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் 338உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அனைத்துக் கட்சிகளின் 338 உறுப்பினர்களும் ஏகமனதாக 
அங்கீகாரம் அளித்துள்ளமை மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும்....

கபிதனின்... கூற்று,  மிக நியாயமானது.
வரும் முன் அந்த மக்களின் உயிர்களை காப்பாற்றி இருந்தால்,
ஒன்றரை மக்கள் லட்சம்  மக்கள், இன்று உயிருடன் இருந்து இருப்பார்கள்.

19 minutes ago, Kapithan said:

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

😏

புலம்பெயர் இலங்கையர்களின் வளமான வாழ்வுதான் ஐயாவுக்கு வவுத்தெரிச்சலைக் கிளப்புவதற்குக் காரணமோ? 

விளங்க நினைப்பவர் தமிழக அகதி முகாமிலா இருக்கிறீர்கள் ? 

😉

 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்தியாவின் புலிதாக்குதல் கிலியூட்டும்  அறிவிப்புக்கு இதுவே காரணமாக  இருக்க வேண்டும். நிச்சயமாக கிந்தியாவிற்கு தெரிந்து இருக்கும் இந்த வாக்கெடுப்பு நடைபெறப் போகிறது என்று. 

கனடா தேசிய பாராளுமன்றம் ஏகமானதாஜெ நிறைவேறி இருப்பது, கிந்தியாவின் கொள்கைக்கு, நிலைப்பாட்டுக்கு  பலத்த குறியீட்டு அடி.

கனடா, மேற்கின் எதிர்கால போக்குகளை காட்டுவதாகவும் இருக்கலாம். 

1 hour ago, தமிழ் சிறி said:

 

 

கபிதனின்... கூற்று,  மிக நியாயமானது.
வரும் முன் அந்த மக்களின் உயிர்களை காப்பாற்றி இருந்தால்,
ஒன்றரை மக்கள் லட்சம்  மக்கள், இன்று உயிருடன் இருந்து இருப்பார்கள்.

 

ஹிட்லர் ஜேர்மனியில் யூதர்களை  இனப்படுகொலை செய்யும் போது அதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் யூத மக்கள் ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்று இன்று என்ன நிலையினை அடைந்து இருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றீர்கள். 

நாம்  தமிழ் மக்கள் எப்பவும் இப்படியான சாதகமான விடயங்கள் நடக்கும் போதும், மீண்டும் மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கி குறைகளை கண்டு பிடித்துக் கொண்டு இருப்போம்.
 

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய ஊதுகுலக்களில் எல்லாம் கோத்தாவின் பேச்சே பிரச்சாரமாக  இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஹிட்லர் ஜேர்மனியில் யூதர்களை  இனப்படுகொலை செய்யும் போது அதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதன் பின்னர் யூத மக்கள் ஏனைய நாடுகளின் ஆதரவை படிப்படியாக பெற்று இன்று என்ன நிலையினை அடைந்து இருக்கின்றார்கள் என்பதை பார்க்கின்றீர்கள். 

நாம்  தமிழ் மக்கள் எப்பவும் இப்படியான சாதகமான விடயங்கள் நடக்கும் போதும், மீண்டும் மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கி குறைகளை கண்டு பிடித்துக் கொண்டு இருப்போம்.
 

தமிழீழம் கிடைக்கும்  என்கிறீர்கள். 😃

குறை கண்டுபிடிப்பதல்ல  நோக்கம். அழிவைத் தடுத்திருக்கலாம் என்கிற  ஆதங்கம். அம்புட்டுதே. 😉

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜாக் லேற்றனை(மறைந்த) தவிர எனையோர் 2019ல் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பவில்லை. புலிகளின் அழிவில் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். 13 வருடங்கள் கழித்து எப்படி இந்த மனமாற்றம் வந்தது?
சில கிழமைகளில் நடக்க இருக்கும் ஒன்ராரியோ தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இடுகிறார்கள். ஆகவே தமிழ் வாக்காளர்களை கவர என்பது எனது சின்ன ஊகம்.
எமக்கு நல்லது நடப்பதில் சந்தோசம். ஆனால் ஒருவர் சுயநலத்துடன் செய்யும் உதவி ஆபத்தானது.

  • கருத்துக்கள உறவுகள்

மே 24,  25 இல், ஒண்டாரியோ பாராளுமன்ற தமிழ் இனப்படுகொலை வார பிரகடனம் சட்ட மன்றத்தில் வழக்கிற்கு வருகிறது.

இயலுமானவர்கள், சமூகமகளிக்கவும். 

அனால், நன்றாக இனப்படுகொலை சிறிலங்க அரசின் திட்டமிட்ட  தமிழ் அழித்தல், ஒடுக்குமுறை கொள்கைகளினால் (புலி எதிர்ப்பிலும்) மீட்க முடியாதபடி அரசிலும், (சிங்கள சமூகத்திலும் ???)  புரையோடிப்போயுள்ளது என்பதை தெளிவாக விளங்கி கொண்டு போகவும். 

ஏனெனில், சமூகமளிக்கும் பொதுமக்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு உள்ளது.

மேலே சொன்னதை உங்கள் தனிப்பட்ட அனுபவத்துடன் சேர்த்து விளங்கி கொண்டு போகவும்.

https://www.thestar.com/news/canada/2022/05/17/ontarios-tamil-genocide-education-week-faces-constitutional-challenge.html

30 minutes ago, Kapithan said:

தமிழீழம் கிடைக்கும்  என்கிறீர்கள். 😃

 

தமிழீழம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நேர்மையாக இருந்திருந்தால் நானோ நீங்களோ போராட போகாமல் வெளி நாட்டுக்கு ஓடி வந்து இருக்க மாட்டோம்.  

தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு கிடைத்தாலே போதும். அதற்காக குரல் கொடுக்க முன்வரும் எவரையும் அது கனடாவாக இருந்தால் என்ன, நாளைக்கே ரஷ்சியாவாக இருந்தால் என்ன, பேய் பிசாசாக இருந்தால் என்ன என்பதில் அக்கறை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

தமிழீழம் கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கை நேர்மையாக இருந்திருந்தால் நானோ நீங்களோ போராட போகாமல் வெளி நாட்டுக்கு ஓடி வந்து இருக்க மாட்டோம்.  

தமிழ் மக்களுக்கு நிம்மதியாக வாழ நிரந்தரமான ஒரு நியாயமான தீர்வு கிடைத்தாலே போதும். அதற்காக குரல் கொடுக்க முன்வரும் எவரையும் அது கனடாவாக இருந்தால் என்ன, நாளைக்கே ரஷ்சியாவாக இருந்தால் என்ன, பேய் பிசாசாக இருந்தால் என்ன என்பதில் அக்கறை இல்லை.

நீங்கள் கூறுவது உண்மை  நிழலி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, Kapithan said:

2009 வீதிகளில் பைத்தியக்காறர்களாக, கூக்குரலிட்டதற்கு, இப்போது 13 வருடங்கள் கழிந்து Remembrance Day ? 

கேட்டதோ இனப்படுகொலையை தடுக்கும்படி, இப்போது எல்லாம் முடிந்து தமிழர் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இறந்தவர்களுக்கு மலர் வளையம் வைக்கிறார்கள்.  

தேசியத்தலைவர் பிரபாகரனும் இதற்கு நன்றி கூறியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

ஜாக் லேற்றனை(மறைந்த) தவிர எனையோர் 2019ல் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க விரும்பவில்லை. புலிகளின் அழிவில் மிக விருப்பம் கொண்டிருந்தார்கள். 13 வருடங்கள் கழித்து எப்படி இந்த மனமாற்றம் வந்தது?
சில கிழமைகளில் நடக்க இருக்கும் ஒன்ராரியோ தேர்தலில் அனைத்து பெரிய கட்சிகளிலும் தமிழ் வேட்பாளர்கள் போட்டி இடுகிறார்கள். ஆகவே தமிழ் வாக்காளர்களை கவர என்பது எனது சின்ன ஊகம்.
எமக்கு நல்லது நடப்பதில் சந்தோசம். ஆனால் ஒருவர் சுயநலத்துடன் செய்யும் உதவி ஆபத்தானது.

 

இருக்கலாம், அனால், அவர்கள் எதிர்பாக்காத வடிவில், உத்வேகமும் தனக்கே உரிய வடிவமும் எடுப்பதற்கு இடமும், வாய்ப்பும் (உக்ரைன், தாய்வான்) இப்பொது ஏற்பட்டு இருக்கிறது.  

எல்லாவற்றையும் பார்க்கும் போது 

1. ஹிந்தியா பூச்சாண்டி துறையின் புஷ்வாணம் 2-3 நாட்களுக்கு முதல். 

2. சொறி சிங்களம் கடனுக்கு default 18 May, 19 மே அறிவித்தது.

3. சொறி சிங்களம் சீனாவுக்கு முற்றாக சாய்ந்து விட்டது ஆ;அல்லது சீன சொல்வதத்திற்கு பணிந்து விட்டது? 

4. கனடா வாக்கெடுப்பு மே 18. கனடா இதை அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் நிச்சயமாக இந்த முடிவை எடுத்து இராது.

5. இன்று செய்தி வருகிறது, IMF (அமெரிக்கா) கோத்தாவை பதவியை விட்டு இறங்குமாறு சொன்னதாக . .  

இவையெல்லம்  தற்செயலாக நடந்ததாக தெயரிவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

 

இருக்கலாம், அனால், அவர்கள் எதிர்பாக்காத வடிவில், உத்வேகமும் தனக்கே உரிய வடிவமும் எடுப்பதற்கு இடமும், வாய்ப்பும் (உக்ரைன், தாய்வான்) இப்பொது ஏற்பட்டு இருக்கிறது.  

எல்லாவற்றையும் பார்க்கும் போது 

1. ஹிந்தியா பூச்சாண்டி துறையின் புஷ்வாணம் 2-3 நாட்களுக்கு முதல். 

2. சொறி சிங்களம் கடனுக்கு default 18 May, 19 மே அறிவித்தது.

3. சொறி சிங்களம் சீனாவுக்கு முற்றாக சாய்ந்து விட்டது ஆ;அல்லது சீன சொல்வதத்திற்கு பணிந்து விட்டது? 

4. கனடா வாக்கெடுப்பு மே 18. கனடா இதை அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் நிச்சயமாக இந்த முடிவை எடுத்து இராது.

5. இன்று செய்தி வருகிறது, IMF (அமெரிக்கா) கோத்தாவை பதவியை விட்டு இறங்குமாறு சொன்னதாக . .  

இவையெல்லம்  தற்செயலாக நடந்ததாக தெயரிவில்லை 

யூக்ரேனுக்கு போர் தொடங்கி சில கிழமைக்குள் போர்க்குற்றம், ஆதாரம் என்று மேற்கு தொலைக்காட்சிகள்  24 மணி நேரமும் முழங்கி கொண்டிருந்தன. அத்தோடு ரஸ்யா செய்வது இனப்படுகொலை என்று ஒன்றுக்கு ஆயிரம் தடவை கூறினார்கள். எமது இனம் அழிந்த போது ஆயிரக்கணக்கில் ஆதாரங்கள் காட்டியும் அங்கு இனப்படுகொலை நடந்ததாக ஒருவரும் இன்னும் கூறவில்லை. இவர்களிடமா நீதியை எதிர்பார்க்கிறீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் தாக்குதல் தொடங்கி 3 நாளைக்குள் ரஷ்சியா மீது சொன்னதை.. ஈழத்தில் தமிழர்களுக்குச் சொல்ல இவ்வளவு காலம் இழுப்பும்.. நீட்டி முழக்கமும்.. அதுவும் உண்மைகள் தெளிவாகத் தெரிந்திருந்தும்.

எனி தமிழர்களால்.. எதுவுமே நடக்காது என்ற நிலையில்.. வாக்குக் கொள்ளைக்கான..கனடாவின் உண்மை முகத்தை இதில் இருந்து காணலாம். 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.