Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு  ஆதரவான ஒரு சிறு பகுதியினர் இருக்கலாம். எனினும் இவர்கள் வந்து இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மேலும், வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்

இலங்கையர்களுக்கு மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு! சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் 

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 

எனது காலத்திலேயே யாழ்ப்பாணத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டது. எனது காலத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மின் உற்பத்தி நிலையம் உருவாக்கப்பட்டது.

சுன்னாகத்தில் இருந்து வவுனியாவுக்கு ஒரு தொகுதியை அமைத்தோம். முல்லைத்தீவு மன்னார் போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கினோம்.

பிரபாகரன் உயிரிழந்த பின்னர் மூன்று மாதங்களில் புதுமாத்தளன் பகுதிக்கு மின்சாரம் வழங்கினோம். தற்போதுள்ள பிரச்சனை ‍டொலர் இன்மையால் டீசலை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாகும்.

அதனால் டீசலில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரம் போதுமானதாக இல்லை. எனவே நாம் தற்போது புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திக்கு செல்ல வேண்டும்.

புலம்பெயர் தமிழர்களுக்கு தென்னிலங்கையில் இருந்து ஓர் அழைப்பு! ஆனால் வடக்கு - கிழக்கை கேட்காதீர்

சூரிய ஒளியில் மின்சாரம் 

இலங்கையில் மிக அதிகமாக புதுப்பிக்கத்தக்க மின்சார ஆற்றல் காங்கேசன்துறை பூநகரி மன்னார் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி திட்டத்தை நானே கொண்டு வந்தேன்.

அதனை இலங்கை முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/economic-crisis-another-special-gazette-release-1656103345

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என்றால் மாங்காய் மடையர் என்கிற நினைப்பு இவருக்கு. நேற்றுதான் நம் தலைவரைப்பற்றி இவர் சொன்னது வெளிவந்திருந்தது, அதற்கிடையில் சுருதியை மாற்றி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒண்டும் புடுங்கித் தர தேவையில்லை...

தானே விழும்....

வரலாறில் இணைந்து நீண்டகாலம் இருந்ததில்லை. 1834ல் பிரிட்டிஷ் காரர் இணைத்தது. அது ஒரு ஓட்டுதல்... ஒட்டு விலகும்... காரணம் மதம்....

இந்தியாவில்.... மதம் தூக்கிப் பிடிக்கப்படுவதால்... இந்த ஒட்டு விலகும் நிலை தூரத்தில் தென் படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இனியும் மிளகாய் அரைக்க முடியாது😇

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

தமிழ் மக்களை அடக்கி அடிக்கும்போது வடக்கு கிழக்குக்கு அடிக்க வேண்டும் .
இப்பொது அபிவிருத்திக்கு  தமிழர் வேண்டும்.  முழு நாட்டுக்கும் . எவனை நம்பினாலும் மத வெறியும் இன வெறியும் கொண்ட சிங்க(கள )  இனத்தை  நம்ப முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

நீங்கள் தெளிவாக கூறினால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். 

இல்லை என்றால் என்ன இல்லை ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

நீங்கள் தெளிவாக கூறினால் புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும். 

இல்லை என்றால் என்ன இல்லை ? 

உங்கள் கேள்வி.. .இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?
அதற்க்கு பதில் தான் நாம் தயார் இல்லை என்றேன்.😄

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்கள் கேள்வி.. .இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?
அதற்க்கு பதில் தான் நாம் தயார் இல்லை என்றேன்.😄

நன்றி பிரியன்.

அப்படியானால, நாம் தயாராக இருக்க வேண்டுமா இல்லையா  ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

அவரது  நிபந்தனை எதுக்கு???

அவரே  நிபந்தனையுடன் தான் ஆட்டத்தை  ஆட  விரும்புகிறார்??

இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்

நிபந்தனை  மாறலாம்??

இப்ப  மௌனம்  தொடர்வதே சிறந்தது??

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

அவரது  நிபந்தனை எதுக்கு???

அவரே  நிபந்தனையுடன் தான் ஆட்டத்தை  ஆட  விரும்புகிறார்??

இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்

நிபந்தனை  மாறலாம்??

இப்ப  மௌனம்  தொடர்வதே சிறந்தது??

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம்

ஆமாம். நாங்கள் அவசரப்பட முடியாது. 

ஆனால், ******எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் ******ஆயத்தமாக இருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இப்படி ஒரு அழைப்பொன்றினை இலங்கை அரசு விடுத்தால் நாம் அதற்குத் தயாரா?

எங்கள் நிபந்தனைகள் என்ன ? 

தமிழ்மக்களின் ...தமிழ் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் சிங்கள அரசினால்....[அது எந்தக் கட்சி அரசு என்றாலும் ] வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்றை வரைத்து அமுல் செய்ய முடியுமா...?அல்லது இல்லையா?.  

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

வடக்கு-  கிழக்கை எமக்கு தாருங்கள் நாங்கள் செய்து காட்டுகிறோம் என்று கூறாமல் வட கிழக்கு உள்ளிட்ட முழு நாட்டையும் புலம்பெயர் தமிழர்கள்  முன்னேற்ற செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

என்னது! முழு நாடும் புலம்பெயர் தமிழர்களதா? நம்பவே முடியவில்லை. இதே தமிழர் வறிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியபொழுது தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது, இப்போ தனக்கு பசி எடுத்தவுடன் முழுநாட்டுக்கும் அழைப்பு. பறித்தவற்றை திருப்பி தர முடியாது, அழைப்பு விடுத்துக்கொண்டே, தமிழர் நிலங்களில் அடாவடி பண்ணிக்கொண்டு, அதை நிஞாயப்படுத்திக்கொண்டு, உதவுங்கள் என்று கேட்பதில் இருந்து தெரிவது என்னவென்றால்; மீண்டும் தமிழரின் முதுகில் சவாரி செய்யா தயார். அவ்வளவும்  திமிர். வயிறு காய அடங்குமது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இல்லை.
இல்லை என்ற பின் நிபந்தனைகளும் இல்லைத் தானே.

எங்களிடம் இருந்து பறித்ததெல்லாம் திருப்பித்தரவேண்டும், எங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களப்படை வெளியேறவேண்டும், எங்கள் நிலங்களில் முளைத்துள்ள விகாரைகள் அகற்றப்படவேண்டும், சிறைகளில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர் விடுவிக்கப்படவேண்டும், எங்களை நாங்களே ஆளும் சம உரிமை வேண்டும், எங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்பு கேட்கப்படவேண்டும், இன்னொரு தடவை இவ்வாறு நடவாதென உறுதி தந்து யாப்பாக்க வேண்டும். தயாரா?  எந்த இணக்கமும் இல்லாம மந்திரத்தால் மாங்காய் பிடுங்க புலம்பெயர் தமிழர் இணங்கக்கூடாது.நிபந்தையை முதலிடுவோர் வைத்து தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.