Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் – கூட்டமைப்பு வரவேற்பு!

ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்!

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த முகப்புத்தகக் கணக்கின் உரிமையாளர் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் இந்த முறைப்பாடு குறித்த விசாரணை நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமை தான்னால் மீறப்பட்டுள்ளது என்பதைக் குறித்த நபர் இங்கு ஏற்றுக்கொண்டமையால் இரு தரப்பினரின் இணக்கத்துக்கு அமைய நிபந்தனையுடன் குறித்த சம்பவம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய இது தொடர்பில் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கோரி பிரசித்தமான பத்திரிகையொன்றிலும் சம்பந்தப்பட்ட முகப்புத்தகத்திலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பொதுவாகப் நாடாளுமன்றம் தொடர்பில் அவதூறாகக் கருத்துக்களை வெளியிட்டால் நாடாளுமன்ற (தத்துவங்களும் சிறப்புரிமைகளும்) சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் உரிமை நாடாளுமன்றத்துக்கும், உயர் நீதிமன்றத்துக்கும் காணப்படுவதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் எச்சரிப்பதற்கு அல்லது ஆறு மாதங்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் உள் நுழைவதைத் தடுப்பதற்கான அதிகாரம் இருப்பதாகவும், ஏதாவது தவறு இழைக்கப்பட்டிருப்பதாக ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டால் அதனை உயர் நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

இதில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டால் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் எனத் தலைவரினால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

https://athavannews.com/2022/1303160

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

ஃபேஸ்புக் ஊடாக சம்பந்தனின் சிறப்புரிமையை மீறியதாக ஒப்புக்கொண்ட நபர் மன்னிப்புக் கோரினார்!

 

ஐயா யாழ் இணையத்திலும் சிலபேர் உங்கள் சிறப்புரிமையை மீறுகிறார்கள்.

அவர்களையும் கவனிப்பீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஐயா யாழ் இணையத்திலும் சிலபேர் உங்கள் சிறப்புரிமையை மீறுகிறார்கள்.

அவர்களையும் கவனிப்பீர்களா?

சம்பந்தனுக்கு... சிறப்பு என்று ஒன்று இருந்தால்தானே... அதை மீற முடியும்.  😂
இல்லாத ஒன்றுக்கு... ஏன், இந்த எடுப்பு எடுக்கிறார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின்  பொங்கல், தீபாவளி வெளியீடுகள் சிறப்பு உரிமைக்குள் அடங்குகிறதா?🙃

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சம்பந்தரின்  பொங்கல், தீபாவளி வெளியீடுகள் சிறப்பு உரிமைக்குள் அடங்குகிறதா?🙃

அது தான் அவர் ஆண்டு சொல்லவில்லையே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறப்புரிமை எண்டால் என்ன? 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சிறப்புரிமை எண்டால் என்ன? 😎

உள்ளுக்க தூக்கி போட்டு இரண்டு மிதி மிதிச்சா தான் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

உள்ளுக்க தூக்கி போட்டு இரண்டு மிதி மிதிச்சா தான் தெரியவரும்.

என்னததை தூக்கி போட்டு🤪

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தனுக்கு எழுந்து  நிற்கவே முடியலையாம் அதுக்குள்ள ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

சமூக ஊடகமான ஃபேஸ்புக் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறியதாக ஏற்றுக்கொண்ட நபர் அது தொடர்பில் தனது கவலையை வெளியிட்டு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

யார் அந்த நபர்?

19 hours ago, தமிழ் சிறி said:

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தொடர்பில் அவதூறான வகையில் வெளியிட்ட காணொளியின் ஊடாக அவருடைய சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகப் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய

அது சரி..... இந்த முறைப்பாட்டை முன்வைக்க சுமந்திரன் தகுதியானவரா? முன்னாள் முதலமைச்சரைப்பற்றி எத்தனை அவதூறுகளை இவர் பரப்பியிருப்பார்? ஆனால் அத்தனையையும் அவர் பொறுத்துக் கொண்டாரே? குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தாற்த்தான் குற்றம்!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

யார் அந்த நபர்?

அது சரி..... இந்த முறைப்பாட்டை முன்வைக்க சுமந்திரன் தகுதியானவரா? முன்னாள் முதலமைச்சரைப்பற்றி எத்தனை அவதூறுகளை இவர் பரப்பியிருப்பார்? ஆனால் அத்தனையையும் அவர் பொறுத்துக் கொண்டாரே? குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தாற்த்தான் குற்றம்!

அவர் எனது நண்பர்தான் பிள்ளையான் கட்சி உறுப்பினராக இருக்கிறார் ஏன் பாராளுமன்றத்தில் நடந்த வீடியோவை முகநூலில் வெளியீட்டு செய்தி ஆக்கினீர்கள் என வினவப்பட்டது

அதற்கு அவரது பதில் ஏற்கனவே பலமுறை பாராளுமன்றத்தில் செங்கோல் தூக்கியெறியப்பட்ட வீடியோவும் அதை எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோவும் அதேபோல மிளகாய் தூள் தூவிய வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.

 அப்போது அதை ஒளி பரப்பிய நபர்களுக்கு எதிராக ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என இவரால் கேள்வி எழுப்பப்பட்டது அதை ஏற்றுக்கொண்ட விஜயதாச ராஜபக்ஷ,மற்றும் சுமந்திரன் இருந்தாலும் மன்னிப்பு கூறவேண்டும் செய்தியாளர் முன் தெரிவித்தனர்  அவரோ எனது முகநூல் பேஜ்ஜ்லே அதை வெளியிட்டேன் அந்த பேஜ்ஜிலே கூறுகிறேன் என பதிலளித்து வந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி தனி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அது சரி..... இந்த முறைப்பாட்டை முன்வைக்க சுமந்திரன் தகுதியானவரா? முன்னாள் முதலமைச்சரைப்பற்றி எத்தனை அவதூறுகளை இவர் பரப்பியிருப்பார்? ஆனால் அத்தனையையும் அவர் பொறுத்துக் கொண்டாரே? குரு செய்தால் குற்றமில்லை, சிஷ்யன் செய்தாற்த்தான் குற்றம்!

சுமந்திரனுக்கு அந்தத் தகுதி… எள்ளவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சிறப்புரிமை எண்டால் என்ன? 😎

அவர் செய்யும் குற்றங்கள் தண்டனைக்கு உரியவை இல்லை அதே குற்றங்களை மற்றவர்கள் செய்தால் தண்டனை உண்டு” இவரை நீதிமன்றத்தில் நிறுத்தவே பகிங்கரமாக விமர்சிககவே முடியாது ஏனென்றால் அவர் சிறப்புரிமை உடையவர் பிழை எனில் திருத்துங்கள் 

16 hours ago, ஈழப்பிரியன் said:

அது தான் அவர் ஆண்டு சொல்லவில்லையே.

இல்லை சொன்னார் அடுத்த...அடுத்த....2021 இல் அடுத்த என்றால் 2022  தானே ஆனால் அவர் புத்தியோடுதான் இலக்கத்தை கூறுவது இல்லை  அடுத்த...அடுத்த   என்றே  சொல்லுவார். 🤣 இது யாழ் களத்தில் உள்ள ஒருவருக்கு நன்றாக தெரியும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kandiah57 said:

இது யாழ் களத்தில் உள்ள ஒருவருக்கு நன்றாக தெரியும்

அந்த ஒருவர் யாரென்று சுட்டினீர்களென்றால் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனக்குத் தெரிந்தவரையில் அவரை நன்கு தெரிந்தும், அவரை காதலிப்பவர்கள் இருவர். ஒருவர் சிறியர் மற்றவர் சாமியார்.  இவர்களிருவரை தவிர நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.