Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மான் படையணி உதயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் படையணி உதயம்

October 6, 2022

spacer.png

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம் என அக் கட்சியின் உப தலைவரும் அம்மான் படையணியின் தலைவருமான ஜெயா சரவணா தெரிவித்தார் . 

யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியில் அம்மான் படையணி என்ற இளைஞர் படையணியை உருவாக்கி இருக்கின்றனர். இதற்கு பலவிதமான கேள்விகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் எழுப்பப்பட்டிருந்தன. 

இந்த அம்மான் படையணி என்பது இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்கள் மூலம் சில வேலைத்திட்டங்களை வடக்கு, கிழக்கு மண்ணில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இது தலைவர் கருணாவின் நெறிப்படுத்தல். வடக்கு ,கிழக்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் ,உலகம் முழுவமுதும் விரிவடைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் எங்களுக்கு பின்னால் அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த இளைஞர் பட்டாளம் என்பது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். 

உதாரணத்திற்கு யாழ்ப்பாணத்தினை எடுத்துக்கொண்டால் இங்கு போதைப்பொருள் முக்கிய விடயமாக உள்ளது .

எனவே போதைப்பொருள் ஒழிப்பு என்பதனை அம்மான் படையணி கையில் எடுக்க இருக்கிறது.எங்களுக்கு வன்முறைகள் தேவையில்லை. 

இளைஞர்களை வழி மாறி போக விடாமல் எமது கட்டுப்பாட்டுக்குள் நேர்கோட்டில் பயணிக்க வைக்க வேண்டும் என்பது எமது விருப்பம். இதனை கட்டுப்படுத்த அம்மான் படையணி செயற்படும். 

சட்டத்தினை நாங்கள் கையில் எடுக்கின்றோம் என்ற சில வதந்திகள் உலா வருகின்றது. ஆனால் இது அவ்வாறு இல்லை. இவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்கப்படுவார்கள்.

வெறுமனே போதை தடுப்பு இல்லாமல் சமூக செயற்பாடுகள்,உதவித் திட்டங்கள், சிரமதானங்கள் போன்றவற்றில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இந்த கட்டமைப்பு சரியான முறையில் செயற்படுத்தப்படும். 

எங்கள் இந்த குழுவினை சமூக சீர்திருத்த குழு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.சட்டத்தினை கையில் எடுப்பது எங்கள் நோக்கம் அல்ல. 

எங்கள் தலைவரின் கருத்தினை பொறுத்த வரையில் ஒரே ஒரு தேசியத்தலைவன் பிரபாகரன் தான்.இது உலகம் அறிந்த விடயம். 

கருணா அம்மான் மற்றும் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்குமிடையில் அண்ணன் தம்பி சண்டையே தவிர மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததில்லை.  நாங்கள் பிரியவில்லை . கருணா அம்மான் பிரிந்து விட்டார் என்று சொல்லுகிறார்கள்  கருணா அம்மான் பிரிந்து விட்டதாக எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? 

சுப.தமிழ்ச் செல்வன் தான் கருணா அம்மானை நீக்கி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறாரே தவிர கருணா அம்மான் பிரிந்து செல்லவில்லை.அவரை இந்த கேள்வி கேட்டால் இந்த பதிலினை தான் கூறுவார். 

பிரதேசவாதம் என்பது முற்றிலும் அழிக்கப்பட வேண்டிய விடயமாகும்.மாகாணங்களுக்கு இடையிலான பிரிவு தேவையில்லை சில அரசியல்வாதிகள் இந்த பிரதேச வாதத்தினை முன்னெடுத்து வருகிறார்கள்.

அவர்களால் பிரதேசத்தினை விட்டு வெளியில் சென்று அரசியல் செய்ய முடியாத நிலை இருக்கிறது.அதற்காக பிரதேசங்களுக்குள் தங்களை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அரசியலில் இதனை எடுக்கிறார்கள்.புலம்பெயர் மண்ணிலும் இது இருக்கிறது. இது முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்றார்.

 

https://globaltamilnews.net/2022/181990/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பின்னால்… புலனாய்வுத் துறை, இராணுவம் எல்லாம் இருக்கும்.
கருணாவுக்கு… வெள்ளையடித்து, முன்னுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

கருணாவே… தண்ணிச்சாமி, அவர் போதைப் பழக்கத்தை ஒழிக்கப் போகிறாராம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

உவர் எனி தலைகீழா நின்றாலும் முன்னாள் அம்மான் ஆக முடியாது. உவரின் பின்னால் வர இளைஞர்கள் என்ன குடிகாரோ.. குடுக்காரரோ.. பொம்பிளைப் பொறுக்கிகளோ..??! ஆகவே உவரின் பின்னால் அவர் தரவழி ஒன்றிரண்டு வரலாம்.. உண்மையான தமிழ் இளைஞர்கள் வரமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதற்குப் பின்னால்… புலனாய்வுத் துறை, இராணுவம் எல்லாம் இருக்கும்.
கருணாவுக்கு… வெள்ளையடித்து, முன்னுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

கருணாவே… தண்ணிச்சாமி, அவர் போதைப் பழக்கத்தை ஒழிக்கப் போகிறாராம். 😂

எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும் இந்த போதை பழக்கத்தி எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவர்கள் முன்வருகிறார்கள் வரவேற்க வேண்டிய விடயம்தான் என கருதுகிறேன், இது காலத்தின் தேவையும் கூட.

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றியும் நெல்  அரிசியானால் சரி 

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் என்கின்ற பெயரைத் தவிர, மற்றவை எல்லாவற்றிலும் எனக்கு உடன்பாடே. 

வடபகுதித் தலைமையில் ஒன்றுமே ஈடேறாத நிலையில், கிழக்கிடம் தலைமைப் பொறுப்பைக் கொடுத்துப் பார்ப்பதில் தவறொன்றும் இல்லை. 

ஆனால் கிழக்கில் கூரையேறிக் கோழி பிடிக்காத அம்மான், எப்படி வானம் ஏறி வைகுண்டம் போவார்? 

எனக்கென்னமோ, வெகுவிரைவில் தேர்தல் ஏதும் வரும் என்பதுபோலத் தென்படுகிறது. 

குட்டையைக் குழப்புகிறார்கள்.....? 

🤨

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

இது தலைவர் கருணாவின் நெறிப்படுத்தல். வடக்கு ,கிழக்கு மட்டுமல்லாமல் இலங்கை முழுவதும் ,உலகம் முழுவமுதும் விரிவடைந்து உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் எங்களுக்கு பின்னால் அணிவகுத்து வந்துகொண்டிருக்கிறார்கள்.இந்த இளைஞர் பட்டாளம் என்பது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணியாகும். 

நம்பீட்டம் நம்பீட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகிடி said:

யார் குற்றியும் நெல்  அரிசியானால் சரி 

ஏற்கெனவே இருந்த நெல்லை குற்ற வெளிக்கிட்டு அரிசியெல்லாம் காணாமற்போய் பதர்தான் மிஞ்சி இருக்கு, நெல்லுக்குற்ற வெளிக்கிட்டவருக்கும் குற்றிய நெல்லில்  வாய்க்கரிசி போட்டாச்சு  இதில இனிவேற நெல்லுகுத்த போறார். திருப்பி மக்களை ஏமாற்றி பிழைக்க இது ஒரு தருப்பை காப்பு அவருக்கு. எல்லாம் நல்லாய்த்தானே நடந்தது, கண்டதெல்லாம் சீர்திருத்தம் பற்றி கதைக்க வேண்டிய தேவை ஏன் யாரால் வந்தது?

13 hours ago, கிருபன் said:

கருணா அம்மான் மற்றும் தலைவர் பிரபாகரன் ஆகியோருக்குமிடையில் அண்ணன் தம்பி சண்டையே தவிர மாறுபட்ட கருத்துக்கள் இருந்ததில்லை.  நாங்கள் பிரியவில்லை . கருணா அம்மான் பிரிந்து விட்டார் என்று சொல்லுகிறார்கள்  கருணா அம்மான் பிரிந்து விட்டதாக எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா? 

 

13 hours ago, கிருபன் said:

சுப.தமிழ்ச் செல்வன் தான் கருணா அம்மானை நீக்கி இருக்கின்றோம் என்று சொல்லி இருக்கிறாரே தவிர கருணா அம்மான் பிரிந்து செல்லவில்லை.

அப்ப போட்டது இப்பதான் முறிஞ்சிருக்கோ? பேசியது எல்லாம் பதியப்பட்டிருக்கு போட்டுவிட்டால் கேட்டுவிட்டு மறுபடி மூடிக்கொண்டு படுக்க வசதியாக இருக்கும். எங்கேயோ கிடந்ததுக்கு இந்த வாழ்வு கிடைத்தது தலைவரால், அது காலாவதியாகிறபடியால் அதை  புதுப்பிக்க மீண்டும் தலைவர்  தேவைப்படுகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

புதுசா புதுசா கெளம்பி வாராங்களே 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவனில்லாமல், வழி தெரியாமல் தவிப்பவர்களை அடித்து பிழைக்க ஒரு கூட்டம் புதுசு புதுசாய் ஒவ்வொரு காரணத்தை கண்டுபிடிச்சுக்கொண்டு வயிறு வளக்க கிளம்பிட்டுது! அதுக்கு ஒரு படை, அந்தப்படைக்கு காலாவதியான பெயர், ஆனால் சொல்லும் காரணத்தையும், சொல்பவர்களையும் பாத்தா பரிதாபமாய் இருக்கு. எல்லாவற்றுக்கும் வித்திட்டு, நீர்பாய்ச்சி வளர்த்தவர்கள் தாம் வளர்த்து விட்டதை ஒழிக்கப்போகிறார்களாம், அவ்வளவு அக்கறை சமுதாயத்தின் மேல்!

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

@nedukkalapoovan@கிருபன்@vasee@பகிடி@Kapithan@ஈழப்பிரியன்@satan@தனிக்காட்டு ராஜா@குமாரசாமி

👉  https://twitter.com/WaltersWatch/status/1581689094396338176  👈

முதலில்... கருணாவுக்கு... போதை வைத்தியம் பாருங்கப்பா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஆதாரம் இல்லாத வீடியோ!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

@nedukkalapoovan@கிருபன்@vasee@பகிடி@Kapithan@ஈழப்பிரியன்@satan@தனிக்காட்டு ராஜா@குமாரசாமி

👉  https://twitter.com/WaltersWatch/status/1581689094396338176  👈

முதலில்... கருணாவுக்கு... போதை வைத்தியம் பாருங்கப்பா...

போதையை நிற்பாட்ட போறம் என்றதும் நம்பீட்டியளா?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

போதையை நிற்பாட்ட போறம் என்றதும் நம்பீட்டியளா?

கருணா ... திருந்தி விட்டது, என கொஞ்சம்  நம்பினேன்.
சில நாட்களுக்கு முன்... கருணாவின் முகத்தில், பல கீறல்களுடன் 
ஒரு படத்தை பார்த்தபின் அந்த நம்பிக்கை அறவே போய் விட்டது.
உதுகள்... ஜென்மத்துக்கும், திருந்த சந்தர்ப்பம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கருணா ... திருந்தி விட்டது, என கொஞ்சம்  நம்பினேன்.
சில நாட்களுக்கு முன்... கருணாவின் முகத்தில், பல கீறல்களுடன் 
ஒரு படத்தை பார்த்தபின் அந்த நம்பிக்கை அறவே போய் விட்டது.
உதுகள்... ஜென்மத்துக்கும், திருந்த சந்தர்ப்பம் இல்லை.

....    வால் நிமிரும் என்று எண்ணுறியாள்?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2022 at 17:29, தமிழ் சிறி said:

கருணா ... திருந்தி விட்டது, என கொஞ்சம்  நம்பினேன்.
சில நாட்களுக்கு முன்... கருணாவின் முகத்தில், பல கீறல்களுடன் 
ஒரு படத்தை பார்த்தபின் அந்த நம்பிக்கை அறவே போய் விட்டது.
உதுகள்... ஜென்மத்துக்கும், திருந்த சந்தர்ப்பம் இல்லை.

நானும் பார்த்தேன் வேற மேட்டர் கேஸ் போல 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் பார்த்தேன் வேற மேட்டர் கேஸ் போல 

கருணாவின் முகத்தில்… நகத்தால், கீறல் விழுந்த படங்களை…
தற்போது இணையத்தில் காணவில்லை.
அசிங்கமாக, இருக்கின்றது என்று அகற்றி விட்டார்கள் போலுள்ளது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நானும் பார்த்தேன் வேற மேட்டர் கேஸ் போல 

இப்படியே அவர் தனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையையும் இல்லாமல் செய்துவிடுவார். 

அவராக இதைச் செய்யாவிட்டாலும், சிங்களம் இதைச் செய்யவைத்து, ஆளை அழித்துவிடும். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

இப்படியே அவர் தனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையையும் இல்லாமல் செய்துவிடுவார். 

அவராக இதைச் செய்யாவிட்டாலும், சிங்களம் இதைச் செய்யவைத்து, ஆளை அழித்துவிடும். 

என்னது கொஞ்ச நஞ்ச மரியாதையா?

சாக்கடை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்னது கொஞ்ச நஞ்ச மரியாதையா?

சாக்கடை.

தற்போதுதான் இது தொடர்பாக சில Vடயங்களை அறிந்தேன். 

நாங்கள் என்னதான் குத்தி முறிந்தாலும, போராட்டத்தில் முரளீதரனின் achievements ஐ யாராலும்  மறுக்க முடியாது . அவருக்கு கிழக்கில் தற்போதும் மக்கள் மத்தியில் மரியாதை இருக்கிறது. 

வடபகுதியில் வைத்து அவர் தாக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக இது திட்டமிட்டட செயல்தான். வடக்கு கிழக்குக்கிடையே வெறுப்பை உண்டுபண்ணும் செயற்பாடாகத்தான் பார்க்க முடியும். இப்படி ஒரு பகைமையை உருவாக்க வேண்டிய தேவை தற்போது ஏன் ஏற்படுகிறது என்பதுதான் கேள்வி? 

வேறு காரணங்கள் ஏதும் இருக்கலாமா? 

அந்தக் காரணங்கள் என்ன? 

அவரை அங்கு கொண்டுவந்தும், அங்கு வைத்து அவரைத் தாக்க வைத்ததும் யார் ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கருணாவின் முகத்தில்… நகத்தால், கீறல் விழுந்த படங்களை…
தற்போது இணையத்தில் காணவில்லை.
அசிங்கமாக, இருக்கின்றது என்று அகற்றி விட்டார்கள் போலுள்ளது. 😁

இது எப்போ, எங்கே, ஏன் நடந்தது? என்னது  ...... நகக்கீறலா? புலி? சாய் ..... எலி கீறி வைத்திருக்குமோ? பெண்நெலியாய்த்தான் இருக்கும் நகக் கீறல் என்கிறபடியால் .....  செ ....அந்தப்படத்தை காணகிடைக்கேல்லையே?  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இது எப்போ, எங்கே, ஏன் நடந்தது? என்னது  ...... நகக்கீறலா? புலி? சாய் ..... எலி கீறி வைத்திருக்குமோ? பெண்நெலியாய்த்தான் இருக்கும் நகக் கீறல் என்கிறபடியால் .....  செ ....அந்தப்படத்தை காணகிடைக்கேல்லையே?  

யாழ்ப்பாணம் போனபோது அங்கு பிரச்சனை ஏற்பட்டதாகக் கேள்வி. உண்மை தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இது எப்போ, எங்கே, ஏன் நடந்தது? என்னது  ...... நகக்கீறலா? புலி? சாய் ..... எலி கீறி வைத்திருக்குமோ? பெண்நெலியாய்த்தான் இருக்கும் நகக் கீறல் என்கிறபடியால் .....  செ ....அந்தப்படத்தை காணகிடைக்கேல்லையே?  

கடந்த 12´ம் திகதி கீழுள்ள பதிவில் படத்தை இணைத்திருந்தேன்.
இப்போ... அதனை, முகநூலில் நீக்கி உள்ளார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

யாழ்ப்பாணம் போனபோது அங்கு பிரச்சனை ஏற்பட்டதாகக் கேள்வி. உண்மை தெரியவில்லை. 

உவருக்கு உது தேவையில்லாத வேலை. எதுக்கு சீர்த்திருத்தம்,  புனர்வாழ்வு என்று  அங்கை ஆக்களில்லை என்று இவர் போனவரோ? இவருக்கு அதற்கான தகுதியிருக்கோ என்று முதலில் யோசிக்க வேண்டாம், அனுதாபத்தை பெறுவதற்காக, தானே ஆக்களை, ஆமியை வைத்து செய்திருக்கலாம், போதைப்பொருள் பங்குபிரிப்பில் மோதல் வந்திருக்கலாம்.   இவரே புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டியவர், யாழ்ப்பாணத்தார் தங்களை அடக்குகினம் என்று புட்டுக்கொண்டு படை குழப்பிக்கொண்டு போனவர்,  எதுக்கு வந்தவர்? முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைத்துப்போட்டு வந்திருக்கலாம். கொஞ்சம் அவசரப்பட்டிட்டார். அங்காலை சிவநேசதுரை சந்திரகாந்தன் இவரின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கிறார். இது வேறை .... இனி உதுக்கு எந்த அப்பாவிகளை பிடித்து உள்ளுக்கை போடுறதோ யாரறிவார்.   

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

உவருக்கு உது தேவையில்லாத வேலை. எதுக்கு சீர்த்திருத்தம்,  புனர்வாழ்வு என்று  அங்கை ஆக்களில்லை என்று இவர் போனவரோ? இவருக்கு அதற்கான தகுதியிருக்கோ என்று முதலில் யோசிக்க வேண்டாம், அனுதாபத்தை பெறுவதற்காக, தானே ஆக்களை, ஆமியை வைத்து செய்திருக்கலாம், போதைப்பொருள் பங்குபிரிப்பில் மோதல் வந்திருக்கலாம்.   இவரே புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்கப்படவேண்டியவர், யாழ்ப்பாணத்தார் தங்களை அடக்குகினம் என்று புட்டுக்கொண்டு படை குழப்பிக்கொண்டு போனவர்,  எதுக்கு வந்தவர்? முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைத்துப்போட்டு வந்திருக்கலாம். கொஞ்சம் அவசரப்பட்டிட்டார். அங்காலை சிவநேசதுரை சந்திரகாந்தன் இவரின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கிறார். இது வேறை .... இனி உதுக்கு எந்த அப்பாவிகளை பிடித்து உள்ளுக்கை போடுறதோ யாரறிவார்.   

திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பினம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.