Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

29.10.2020

முதலாம் இணைப்பு        

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | 15 Year Old Girl And A Boy Arrested Family

யாழில் தவறான நடவடிக்கையில் ஈடுபட்ட 15 வயது சிறுமி மற்றும் 21 வயது இளைஞன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியங்காடு பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டு, பிரான்ஸில் வசித்து வந்த 20 வயது இளைஞனுக்கும், அச்சுவேலியை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்த இளைஞன் தனது காதலியை திருமணம் செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.

 

மருத்துவ பரிசோதனைக்கு சிறுமி

 

 

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | 15 Year Old Girl And A Boy Arrested Family

இந்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விடயம் அச்சுவேலி காவல்துறையினரால் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனடிப்படையில் காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சிறுமியையும் குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி காவல் நிலையத்தில் பாரப்படுத்தவுள்ளதுடன், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

https://ibctamil.com/article/15-year-old-girl-and-a-boy-arrested-family-1667034973?itm_source=parsely-top

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கஸ்டமா கிடக்கு அங்கால கனடா பெண்மணி என்று அடுத்த செய்தி வந்திருக்கு சத்தம் போடாமல் இருப்பம்

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது. 😡

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

செய்திகளை பார்க்க மண்டை விறைக்குது. 😡

தமிழினம் எல்லாவிதத்திலும் மறைகழண்ட நிலைக்குச் சென்றுவிட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nochchi said:

தமிழினம் எல்லாவிதத்திலும் மறைகழண்ட நிலைக்குச் சென்றுவிட்டதா?

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

விசுகு எமது காலத்தில் ரியூசனுக்கு போகவில்ஐல என்றால் கேலி பண்ணுவார்கள்.

காலத்துக்கு காலம் ஒவ்வொரு பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அண்மையில் தாயகத்தில் இருந்து வந்த ஒரு சமூக சேவகியுடன் பேசிக்கொண்டிருந்த போது அவர் சாதாரணமாக சொன்னது. தற்போது பதின்ம வயது பெண் பிள்ளைகளுக்கு ஆண் நண்பர் இல்லை என்றால் அது ஒரு குறைபாடாக கேலிக்குள்ளாவதாக. 

புலம் பெயர்ஸ்  ரமில்ஸ் மத்தியில் இந்த நிலவரம் எப்புடி நோக்கப்படுகிறது..??

  • கருத்துக்கள உறவுகள்

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு சொல்லாம விட்டிட்டேனே என்று புலம்பெயர்ஸ் மம்ஸ் சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்த நேரம் பருத்தித்துறை சந்தையில் நூறு ரூபாய் நோட்டோன்றை குடுத்து கோவாவோ, கரட்டோ, கத்திரியோ ஞாபகமமில்லை, வாங்கிவிட்டு மிச்சத்திற்கு காவல் நிண்ட நேரம் நிண்ட நேரம், அந்த பெண்மணி ஏன் நிக்கிறாய் எண்டு கேக்க , நான் மிச்சத்திற்கு எண்டு பதில் சொல்ல,  அம்மணி உதட்டோரத்து புன்முறுவலுடன் நீங்கள் ரெண்டு ரூவா தரவேணும் இரண்டெண்டபடியால் கேக்கேல்லை என்று சொல்ல, அசடை துடைத்துக் கொண்டு இடத்தை காலி பண்ண வேண்டியதாயிற்று .

புலம் பெயர்சிற்கு ஊர் நேரம் அப்பிடியே உறைஞ்சு போச்சு.

இருக்கிற இடத்து நேரம் டபிள் ஸ்பீடில ஓடுது கச்சியேகம்பனே ....

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

நாய்க்கு கல்லால எங்க அடிச்சாலும் அது காலைத் தான் தூக்கிக் கொண்டு ஓடும் ??

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சாமானியன் said:

புலம் பெயர்ஸ்  ரமில்ஸ் மத்தியில் இந்த நிலவரம் எப்புடி நோக்கப்படுகிறது..??

உங்கள் கேள்வி சரியானதே 

புலம்பெயர் தமிழர்கள் வாழும் கலாச்சாரம் மற்றும் சட்டப்படி அவை ஏற்படையவை. 15 வயது வந்தும் தனது மகள் அந்த உணர்வு இல்லாமல் இருப்பதாக என்னுடைய முதலாளி என்னிடம் கவலைப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் நான் அவரை இவரெல்லாம் ஒரு தகப்பனா என்று பார்க்கும் அளவுக்கு தான் நான் வளர்ந்திருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பெருமாள் said:

சிங்களம் செய்த வேலை அது அவர்களுக்கே திருப்பி அடிக்கும் .

இதில் சிங்களம் செய்வதற்கு என்ன இருக்கிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

இதில் சிங்களம் செய்வதற்கு என்ன இருக்கிறது? 

யுத்தம் முடிந்தபின்னரும் வடகிழக்கில் இராணுவம் இராணுவ உளவுபிரிவு  குந்தியிருந்து கொண்டு  தமிழ் மக்களிடையே கலாச்சாரா சீரழிவு. போதைவஸ்த்து பாவனை ஊக்குவிப்பு  தராள மது பாவனை வன்முறை குழுக்களை   இவை எல்லாம் மறைமுகமாக வளர்த்து விடுவது உங்களுக்கு தெரியாதாக்கும்.😆 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

யுத்தம் முடிந்தபின்னரும் வடகிழக்கில் இராணுவம் இராணுவ உளவுபிரிவு  குந்தியிருந்து கொண்டு  தமிழ் மக்களிடையே கலாச்சாரா சீரழிவு. போதைவஸ்த்து பாவனை ஊக்குவிப்பு  தராள மது பாவனை வன்முறை குழுக்களை   இவை எல்லாம் மறைமுகமாக வளர்த்து விடுவது உங்களுக்கு தெரியாதாக்கும்.😆 

வடக்கு கிழக்கு பிரான்சில் இல்லையே பெருமாள். 

இளவயதினரின்/கட்டிளம் பருவத்தினரின் பாலியல் உந்தல் தொடர்பான விடயங்களுக்கெல்லாம் அனாவசியமாக மூன்றாம் தரப்பினை உள்ளிழுத்தல்  எங்கள் புரிதலில் தவறுஇருப்பதாகக் காட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

வடக்கு கிழக்கு பிரான்சில் இல்லையே பெருமாள். 

இளவயதினரின்/கட்டிளம் பருவத்தினரின் பாலியல் உந்தல் தொடர்பான விடயங்களுக்கெல்லாம் அனாவசியமாக மூன்றாம் தரப்பினை உள்ளிழுத்தல்  எங்கள் புரிதலில் தவறுஇருப்பதாகக் காட்டும். 

முன்றாம் தரப்பு அது இது என்று மாட்ட கட்டி போடுங்க என்றால் நிங்கள் கயிறு பிழை கொட்டில் பிழை என்று தொங்கிக்கொண்டு இருப்பது வழமையானது .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முன்றாம் தரப்பு அது இது என்று மாட்ட கட்டி போடுங்க என்றால் நிங்கள் கயிறு பிழை கொட்டில் பிழை என்று தொங்கிக்கொண்டு இருப்பது வழமையானது .

பெருமாள், 

கொஞ்சம் நோகாமல் எழுதினால் ......☹️

விபு காலத்தில் இளவயதினர் ஓடிக் கல்யாணம் கட்டவில்லையா? உங்கள் ஊரில் ஒருவருமே பெண்டிலைக் கூட்டிக்கொண்டு ஓடவில்லையா? 

எதற்கெடுத்தாலும் சப்பைக்கட்டு கட்டாதேயுங்கோ. வெளிநாடுகளில் living together என்பதெல்லாம் சர்வ சாதாரணம். இலங்கையில் மாத்திரம் எல்லோரும் மடக்கிக் கட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்களோ பழஞ்சீலை கிழிஞ்சமாதிரி எதற்கெடுத்தாலும் புறுபுறுத்துக்கொண்டு

கொஞ்சம் ஆற அமர இருந்து யோசியுங்கோ. புண்ணியமாப் போகும். 😏

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, சாமானியன் said:

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு சொல்லாம விட்டிட்டேனே என்று புலம்பெயர்ஸ் மம்ஸ் சில பேர் சொல்லி கேட்டிருக்கிறேன் ...

புலம் பெயர்சிற்கு ஊர் நேரம் அப்பிடியே உறைஞ்சு போச்சு.

இருக்கிற இடத்து நேரம் டபிள் ஸ்பீடில ஓடுது கச்சியேகம்பனே ....

வெளிநாடுகளில் உள்ள உண்மை நிலைமையை தெரிவித்து இருக்கிறீர்கள்.

17 hours ago, சாமானியன் said:

படி, படி எண்டு சொன்னதை விட பிடி,  பிடி எண்டு


அது சிங்கலவரோ தெலுங்கரோ அல்லது வெள்ளையரோ பூரண சம்மதம் என்கின்ற நிலை தான் வெளிநாட்டில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில ஒரு உக்ரைன் காரி கூடச் சிக்கவில்லையா...?! ஈழத்தில் போய் ஏன் இந்த அசிங்கங்களை அரங்கேற்றி அசிங்கப்படுகினமோ..?!

  • கருத்துக்கள உறவுகள்
On 1/11/2022 at 10:26, nedukkalapoovan said:

பிரான்சில ஒரு உக்ரைன் காரி கூடச் சிக்கவில்லையா...?! ஈழத்தில் போய் ஏன் இந்த அசிங்கங்களை அரங்கேற்றி அசிங்கப்படுகினமோ..?!

பிரான்சில் இருக்கக்ககூடிய ஒரு உக்ரைன்காரிக்கு இந்த அசிங்கம் என்று நீங்கள் சொல்லுவதை அரங்கேற்றுவதில் உங்களுக்கு ஒரு வித மான ஆட்சேபனையும் இல்லை போல தெரிகிறது.😡

நல்லா இருங்க ஸார் ...💚

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.