Jump to content

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Sri Lankan Peoples
 21 மணி நேரம் முன்

நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்)

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரசாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது “கொவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் எனக் கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது 0711295295 / 0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

 

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது” - என்றுள்ளது. 

https://ibctamil.com/article/till-launching-integrity-icon-sri-lanka-2022-23-1670868802?itm_source=parsely-api

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..!

Sri Lankan Peoples
 21 மணி நேரம் முன்

நேர்மைக்கு மகுடம் விருதிற்கு அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஊடக அறிக்கை மூலம் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்)

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயற்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது.

இப்பிரசாரமானது 2018ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் 9ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது.

கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரசாரமானது “கொவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்” எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது.

ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

நேர்மையான அரச ஊழியர் எனக் கருதும் எவரும் இவ்விருதுக்கு தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அதேபோல் பொது மக்களும் நேர்மையான அரச ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களை பரிந்துரைக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை எதிர்வரும் 2023 ஜனவரி 31ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விண்ணப்பம் மற்றும் கையேட்டினை www.integrityicon.lk எனும் இணையத் தளத்தினூடாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது 0711295295 / 0763223442 எனும் தொலைபேசியூடாகவோ அல்லது icon@tisrilanka.org எனும் மின்னஞ்சலூடாகவோ தொடர்பு கொள்வதனூடாகவும் குறித்த விண்ணப்பம் மற்றும் கையேட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்

நேர்மையான அரச ஊழியர்களுக்கு கிடைக்கவுள்ள உயரிய விருது - பொதுமக்களும் பரிந்துரைக்கலாம்..! | Till Launching Integrity Icon Sri Lanka 2022 23

 

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்தவுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் சுயாதீன நடுவர் குழுவினால் மதிப்பாய்வு மற்றும் நேர்காணல்கள் இடம்பெற்று தகுதிவாய்ந்த இறுதி பத்து விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

அதேபோல் 2023 ஜூன் மாதம் இடம்பெறவுள்ள இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருது வழங்கல் நிகழ்வின் போது குறித்த இறுதிப் பத்து விண்ணப்பதாரிகளிலிருந்து ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

ஐந்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய மற்றும் தனது சேவையிலிருந்து ஓய்வு பெற இன்னும் குறைந்தது ஐந்து வருட சேவைக் காலத்தினைக் கொண்ட நிரந்தர அரச ஊழியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது இத்தகுதியுடைய அரச ஊழியர்களை குறித்த விருதுக்கு பரிந்துரைக்கலாம்.

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கு பரிந்துரைத்து நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறிலங்கா நிறுவனமானது அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கிறது” - என்றுள்ளது. 

https://ibctamil.com/article/till-launching-integrity-icon-sri-lanka-2022-23-1670868802?itm_source=parsely-api

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

இலங்கை அரச சேவையில் மிக அதிகமானோர் உள்ளனர்.

பலரை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்கள். அப்போது போராட்டம் என்று வீதியில் நிற்பார்கள். ஆதரவு கேட்பார்கள்.

சிரித்து விட்டுப் போங்கோ.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

அரசு வேலை என்றால் ஓய்வூதியம் உறுதி எனும் மனநிலையும் அளவுக்கதிகமான அரச ஊழியர் நியமனங்களும் உயர் அதிகாரிகளின் பணித்துஸ்பிரயோகங்கள் எல்லாம் சேர மக்களுக்கான சேவையை ஒழுங்காக செய்யகிறார்களில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Elugnajiru said:

அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என

காகிதம், மை தட்டுப்பாடு? பிரதி எடுக்கத் தெரியவில்லை? இன்று பலர் கைலஞ்சம் மூலம் தொழில் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள், தொழில் அனுபவமில்லை, அல்லது தெரியாது, இல்லையேல் சோம்பல்.

 

10 hours ago, Elugnajiru said:

ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ

தமிழிற்தானே உரையாடியிருந்திருப்பார்கள், விளங்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

அப்படியாகில் 
யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகிய பிரதீபனுக்கு அந்த விருதினைக் கொடுக்கலாம். காரணம் கடந்த காலங்களில் ஏழாலை நலன்புரிச்சங்கம் எனும் எப்போதோ பதிவுசெய்யப்பட்ட ஒரு சங்கத்தின் பெயரில் இலட்சக்கணக்கான பணத்தினை அரசாங்கத்திலிருந்து பெற்றுப் பங்கு பிரித்த கைகாறன் இவர்.

இவரிடம் இதுபற்றிக் கேட்டபோது பணக்கையாடல் செய்த்ததுக்கான விசாரை நடைபெறுகிறது எனக்கூறியது நினைவில இருக்கு.

தவிர உடுவில் தொகுதி பிரதேச செயலகத்தில் பதிவுப் பத்திரங்கள் வழங்கல் பகுதியில் வேலை செய்யும் அனைவருக்குமே கொடுக்கலாம் காரணம் குளிரூட்டப்பட்ட அறையில் கிட்டத்தட்ட பத்துப் பேர் கைத்தொலைபேசியை நோண்டிக்கொண்டும் ஊர்க்கதை கதைத்துக்கொண்டும் நடுவில இருக்கிற மேசையில் மண்டையைப் போட்டு நித்திரை செய்தும் செம வேலை செய்கினம்.

நான் அண்மையில் எனது பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரத்யை எடுக்கபோனேன் விண்ணப்பத்தைக் கொடுக்கும்போது கண்ணியில் தேடிப்பார்த்தார்கள் முன்னால் மேசையில் இருந்த ஊழியர் கிடைக்கவில்லைபோலும் ஆகவே நடுவில இருந்த மேசையில் ஒருவர் நித்திரை கிள்வதும் எழும்பிறதுமாக இருந்தா (பெண்) அவரிடம் ஏதோ உதவி கோர அவவோ சரியான பதில் ஏதும் சொல்லாமல் தட்டிக்கழிக்க கடைசியில முன்னால இருந்தவ சொன்னா (பெண்) நீங்கள் யாழ் பிரதேச செயலகத்தில் போய் வேண்டுங்கோ என நானும்  அங்க போய் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் வாங்கும்போது கேட்டேன் உடுவிலில் இப்பத்திரம் கணணியில் ஏத்தவில்லை புத்தகத்திலதான் தேடி எடுக்கவேண்டும் எனச்சொன்னார்கள் உண்மையா என அவர்கள் கூறிய பதில் கணணியிலிருந்துதான் நாங்கள் பிரதி எடுத்துத் தாறம் என.

உடுவில் பிரதேச செயலகத்தில் மொத்தமாக முன்னூறு ஊழியர்கள் அதில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் முப்பதிலிருந்து முப்பத்தி ஐந்துவரக்கும் வரும் அதேபோல் எண்ணிக்கை அபிவிருத்தி ஊழியர்கள் மிச்சம் அந்த பிரதேச செயலகக் கட்டிடத்தை நிரப்பிக்கொண்டு இருக்கினம் என்ன செய்கினம் எண்டு எனக்குத் தெரியாது.

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு பிரதேச சபையிலும் எடுக்கலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

அரசு வேலை என்றால் ஓய்வூதியம் உறுதி எனும் மனநிலையும் அளவுக்கதிகமான அரச ஊழியர் நியமனங்களும் உயர் அதிகாரிகளின் பணித்துஸ்பிரயோகங்கள் எல்லாம் சேர மக்களுக்கான சேவையை ஒழுங்காக செய்யகிறார்களில்லை.

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

 @Kandiah57 அண்ணையும் குறிப்பிட்டவர் 5 மாடிக்கு மேல் அனுமதி இல்லை என, நான் நினைக்கிறேன் யாழின் நிலத்தடி சுண்ணக்கற்பாறைகளால் ஆனது. உயர்ந்த கட்டிடங்களை தாங்கும் திறன் குறைவால் அனுமதி வழங்கப்படுவதில்லையோ? என்றாலும் துறை சார் நிபுணர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Alankaa Resorts, Watagamuwa Haldummulla நுவரெலியாவில் இருந்து 58.8 கிலோமீற்றர் 2மணி நேரப்பயணம் என கூகுள் மப் காட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கையில் கரன்சியை வைத்தால் தானே அலுவல் நடக்கிது. இவையள் என்ன இண்டகிரிட்டி ஐக்கன் என்று புதுசா வாறீனம்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

நாடு முழுவதிலும் உள்ள எந்த ஒரு பிரதேச சபையிலும் எடுக்கலாம்.

 

இலங்கையிலே கொடுக்க முடியாது இந்த விருது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

முழு வீடியோவும் இப்போது தான் பார்த்தேன். 
அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டுவிட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Elugnajiru said:

இணைத்திருக்கும் காணொளியைப்பார்த்தால் இலங்கைத் தீவின் அவலநிலை தெரியும் ஆனால் அதானி இந்திய அரசது இரும்புக்கரங்களுடன் வந்தால் பொத்திக்கொண்டு இருப்பினம்.

இஞ்ச எத்தனை பேருக்கு “பின்னால வாறவர் பிலாப் பழத்தோட வாறார்” பகிடி தெரியும்?🤣.

இந்த ஐயாவின் பேட்டியை பார்த்ததும் என் கவலை எல்லாம் போயே போச்சு.

பிகு

பகிர்வுக்கு நன்றி எழுஞாயிறு.

ஐயா கட்ட கேட்ட 2 இடமும் (மணல்திட்டு, முதன்மைகாடு), சூழலியல் பிரச்சனைகள் உள்ள இடம்தான்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
    • இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன்.  வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.