Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் – அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

மிகத் தவறான கருத்து

உங்களுக்கு அவரின் பங்களிப்பு மற்றும் தேச நேசிப்பு பற்றி எதுவும் தெரியாது. இவ்வாறு எல்லோரையும் ஒரே சாக்கில் போடும் உங்கள் போன்றோர் தேசத்தை நேசித்திருக்க வாய்ப்பில்லை. 

 

ஓம் அண்ணா இப்படி சொல்லி சொல்லித் தான் ஒருவரும் உதவவாமல் அழிந்து போனீர்கள் ...தொடர்ந்தும் தனியே நின்று இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள் 

  • Replies 136
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2022 at 10:35, Nathamuni said:

 

பிரிட்டிஷ் சட்டம், படித்தவர்களால் (nobles) எழுதப்பட்டது. அமெரிக்க சட்டம் அடிமைகளை வைத்திருந்த வெள்ளை ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களால் எழுதப்பட்டது. அங்கே, அரச வழக்குரைஞர் பொய் சொல்லி தப்பிக்க முடியும். எதிராளி அப்படி அல்ல. ஆகவே, சுமத்தப்பட்ட பொய்யான குற்றசாட்டினை, எதிர்த்தால் நீண்ட சிறை தண்டனை கிடைக்கும் என்பதால், அவுட் ஒப் கோர்ட் செட்டில்மென்ட் முறைமை போலவே, கிரிமினல் விடயங்களில், குற்றசாட்டினை ஏற்றுக் கொள்வதாக சொல்லி, குறைந்த தண்டனையை பெறும் ஒரு கேவலமான முறைமை உள்ளது.

 

 

ஒரு கிரைம் டொக்குமெண்டரி பார்த்தேன். அமெரிக்காவில் இருவர் டக்சியில் போகும் போது சாரதியுடன் சண்டை பிடித்து அவரை சுட்டு விட்டு இறங்கி பயத்தில் ஓடி விட்டார்கள் ...சாரதி காயத்தோடு பயத்தில் வாகனத்தை எடுத்து கொண்டு விரைவாக ஓடி நிறுத்தி இருந்த வாகனத்தோடு அடிபட்டு இறந்து போகிறார்.
பொலீஸ் இருவரையும் கைது செய்து விட்டது....இருவரையும் அப்புருவராக மாற சொல்ல சுடாதவர் தனக்கு இதில்  பங்கு இல்லை.என்று அப்புருவராக மாற மறுக்கிறார் ...அவருக்கு 47 வருடம் ஆயுட் தண்டனை கொடுக்கப்பட்ட்து....சுட்டவர் அப்புருவராக மாற அவருக்கு 20 வருட ஆயுட் தண்டனை கொடுக்கப்பட்ட்து...அமெரிக்க நீதி இப்படித் தான் இருக்கும்😃 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

ஓம் அண்ணா இப்படி சொல்லி சொல்லித் தான் ஒருவரும் உதவவாமல் அழிந்து போனீர்கள் ...தொடர்ந்தும் தனியே நின்று இப்படி சொல்லிக் கொண்டே இருங்கள் 

ஏன் அழித்தோம் என்று எங்களுக்கு தெரியும்

இதனால் உருக்குலைந்தது தமிழினமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

ஏன் அழித்தோம் என்று எங்களுக்கு தெரியும்

இதனால் உருக்குலைந்தது தமிழினமே. 

ஓம் தெரியுமே🙂 எல்லாத்துக்கும் கண்ணைமூடிக் கொண்டு ஆமாம் போடுற ஆட்களால் தான் அழிந்தோம் என்பது உங்களுக்கும் தெரியுமே 
 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரதி said:

ஓம் தெரியுமே🙂 எல்லாத்துக்கும் கண்ணைமூடிக் கொண்டு ஆமாம் போடுற ஆட்களால் தான் அழிந்தோம் என்பது உங்களுக்கும் தெரியுமே 
 

ஆமாம் கண்ணை திறந்திருந்தவர்கள் கிழித்து கொட்டுவதை தான் 13 வருடங்களாக பார்க்கிறோமே.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2022 at 06:33, Kapithan said:

இனிவரும் காலப்பகுதியில் ராஜைப் போன்று பலரும் முன்வரப்போகிறார்கள். அவர்களையும் வரவேற்பீர்களா என்பதுதான் எனது கேள்வி. 

கண்டிப்பாக கிடையாது .....ஆனால் வரவேற்பு உண்டு....ராஜைக்கு. கொடுத்தது போன்று கண்டிப்பாக கொடுக்க முடியாது   ஏனெனில் இவர் போல் எவருமில்லை ......

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

கண்டிப்பாக கிடையாது .....ஆனால் வரவேற்பு உண்டு....ராஜைக்கு. கொடுத்தது போன்று கண்டிப்பாக கொடுக்க முடியாது   ஏனெனில் இவர் போல் எவருமில்லை ......

😀

இவர் இதுவரை தமிழினத்திற்குச்  செய்தவற்றைப் பட்டியலிட உங்களால் முடியுமா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

😀

இவர் இதுவரை தமிழினத்திற்குச்  செய்தவற்றைப் பட்டியலிட உங்களால் முடியுமா? 

 

ஏன். ?...மேலே நான் தந்த பதில் சரியா.....?இல்லை பிழையா....?அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லையா.  ?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

ஏன். ?...மேலே நான் தந்த பதில் சரியா.....?இல்லை பிழையா....?அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லையா.  ?

பிறருக்கு இதே வரவேற்பு கிடைக்காது என்கிறீர்கள் அதுதான் கேட்டேன். 

தனிப்பட்டரீதியில் அவரைத் தெரியும் போல் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

😀

இவர் இதுவரை தமிழினத்திற்குச்  செய்தவற்றைப் பட்டியலிட உங்களால் முடியுமா? 

 

உங்கள் பட்டியல்களை முதலில் போடுங்கள்

அவர் செய்ததில் எத்தனை வீதம் என்பதை நான் சொல்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

பிறருக்கு இதே வரவேற்பு கிடைக்காது என்கிறீர்கள் அதுதான் கேட்டேன். 

தனிப்பட்டரீதியில் அவரைத் தெரியும் போல் அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள். 

ஆமாம் தெரியும் ஆனால் பூரணமாக தெரியாது   ....இவரை விட  சிறந்தவர்கள் உண்டா    ? அடிபடவில்லை....அறிந்து கொள்ள கேட்கிறேன்     

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

உங்கள் பட்டியல்களை முதலில் போடுங்கள்

அவர் செய்ததில் எத்தனை வீதம் என்பதை நான் சொல்கிறேன். 

விசுகர் ,

நான் செய்தவற்றைச் சொன்னால் எனக்கு தமிழ்த் தேசியவாதி விருதா கொடுக்கப்போகிறீர்கள்? இல்லையே 🤣

ஆனாலும் மொத்த யாழ்கள தமிழ்த் தேசியவாதிகள் அத்தனைபேரும் செய்த்தை விட நான் அதிகமாக்ச் செய்திருக்கிறேன். செய்துKண்டிருக்கிறேன். உ+ம் 👇

 

யாழ் களத்திற்கு நன்கு பரிட்சயமான உதவு நிறுவனமொன்றினூடாக, யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

போதுமா? 

(எங்கே எனக்கான தமிழ்த் தேசியவாதி விருது 😉)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

ஆமாம் தெரியும் ஆனால் பூரணமாக தெரியாது   ....இவரை விட  சிறந்தவர்கள் உண்டா    ? அடிபடவில்லை....அறிந்து கொள்ள கேட்கிறேன்     

லைக்க சுபாஸ்கரன் செய்துகொண்டிருக்கிறார் என அறிகிறேன். பூரண விபரங்கள் இல்லை. 

கனடாவிலிருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் அங்கே NGO வை register செய்து அதனூடாக உதவுகிறார்கள். இப்படிப் பல்ர் உதவுகிறார்கள். அனேகர் தனிப்பட்ட ரீதியில் தொடர்ச்சியாக உத்வுகிறார்கள். 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன உதாரணம்...
அண்மையில் சிங்கள கிரிக்கெட்வீரர் ஒருவர் இன்னும் நீதிமனறத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லை... விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது... அவருக்கு யாழில் எழுதப்பட்ட கருத்துக்கள்...


ராஜ் ராஜரடணம் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றத்தால் தீர்க்களிப்பட்டு சிறை சென்றவர்.. இவர் கீரோ ஆக்கப்பட்டு வைக்கப்படும் கருத்துக்கள்..


பணம் பாதாளம் வரையும் பாயும்.. பணமிருந்தால் நீங்கள் எவ்வளவு குற்றம் செய்தாலும் உங்களுக்கு வெள்ளை அடிக்க இந்த சமூகம் வரிந்து கட்டிக்கொண்டு வரும்.. எனக்கு தெரிந்த தமிழ் முதலாளி ஒருவர்.. பத்துக்கடை வத்திருக்கிறார்.. ஆள் ஆரம்பத்தில் கள்ளமட்டை ஏஜென்சி வேலைல காசடிச்சது எண்டு எக்கச்சக்க ஓட்டு மாட்டு செய்தவர்.. இண்டைக்கு பெரிய பணமுதலாளி.. அநேக தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் வீட்டு நிகழ்வுகளில் அவர்தான் பெரியவர்.. பெரிய மரியாதை..

ராஜ் ராஜரடணம் செய்ததை ஒரு என்னைப்போன்ற சாதாரணமானவன் செய்திருந்தால் இதே யாழ்களத்தில் எப்படியான ஏச்சுக்களை நான் வாங்கி இருபேன் எண்டு காற்பணை பண்னிபாக்கிரன்.. இவனை மாதிரி கள்ளக்கூட்டத்தாலதான் ஒட்டுமொத்த தமிழருக்கும் கெட்ட பெயர்.. உழைச்சு தின்ன இவனுக்கு என்ன கைகால் சொத்தியோ.. எக்சர்ரா.. எக்சர்ரா..

வெக்கமே இல்லாமல் தப்புக்களை நியாப்படுத்தி தமிழர் போராட்டத்தை வேறு துணைக்கிழுத்து இவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து கல்லெறிந்தாலும் சரியெனப்படுவதை தொடர்ந்து சளைக்காது எழுதுவதற்கு ஒரு சல்யூட் கப்பிதன்...

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஆனாலும் மொத்த யாழ்கள தமிழ்த் தேசியவாதிகள் அத்தனைபேரும் செய்த்தை விட நான் அதிகமாக்ச் செய்திருக்கிறேன். செய்துKண்டிருக்கிறேன்

நல்ல விடயம்.👍🏾

Warm-glow giver ஆக இல்லாமல் இருந்தால் சரி. 

 

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

மொத்த யாழ்கள தமிழ்த் தேசியவாதிகள் அத்தனைபேரும் செய்த்தை விட நான் அதிகமாக்ச் செய்திருக்கிறேன். செய்துKண்டிருக்கிறேன்.

 

1 hour ago, Kapithan said:

யாழ் களத்தினர் கொட்டிக்கொடித்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

 

1 hour ago, Kapithan said:

(எங்கே எனக்கான தமிழ்த் தேசியவாதி விருது

விருதெல்லாம் கேட்டு வாங்குவதல்ல அன்பரே. எப்போதொருக்கா நீங்கள் பிறருக்கு கொடுத்ததை, செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டி விட்டீர்களோ அப்போதே அதற்குரிய சன்மானத்தை பெற்றுவிட்டீர்கள் நீங்கள்! கேட்ட ஞாபகம் வருகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

 

 

விருதெல்லாம் கேட்டு வாங்குவதல்ல அன்பரே. எப்போதொருக்கா நீங்கள் பிறருக்கு கொடுத்ததை, செய்ததை எல்லாம் சொல்லிக்காட்டி விட்டீர்களோ அப்போதே அதற்குரிய சன்மானத்தை பெற்றுவிட்டீர்கள் நீங்கள்! கேட்ட ஞாபகம் வருகிறதா?

என்ன செய்தீர்கள் எனக் கேட்டவர் திருவாளர் விசுகர், இவற்றைச் செய்தேன் எனும் பதிலும் அவருக்குரியதே. 

நீங்கள் இடையில் வந்து செய்த்தைச் சொல்கிக்காட்டக் கூடாது என்றால்? 

இதுதான் யாழ்கள தேசியவாதிகளின் நியாய தர்மமோ? 

🤣

  • கருத்துக்கள உறவுகள்

 எடுத்தவுடன் அவர் உங்களை கேட்கவில்லை, நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒருவர் தன்னிடமுள்ளவற்றுக்கு மேலானதிலிருந்து அள்ளியும், கொட்டியும் கொடுக்கிறார், இன்னொருவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுக்கிறார், வேறொருவர் தன்னிடமுள்ளதை தன்னை ஒறுத்து பகிர்ந்து கொடுக்கிறார், இதில் யார் கொடுத்தது அதிகம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? கொடுத்த அளவல்ல, கொடுக்க முன்வந்த மனம், விதமே பார்க்கப்படும்! யாரும் யாரையும் வற்புறுத்தி பெற முடியாது, கொடுக்க வைக்கவும் முடியாது. அதுபோக இங்கு பதியப்படும் கருத்துக்கள் பகிரங்கமானவை, யாரும் கருத்து பதியலாம், மற்றவர்களை பாதிக்காதவாறு மட்டுறுத்துனரால் அறிவுறுத்தப்படும்வரை, அல்லது தடுக்கப்படும்வரை வரையறைக்கு அப்பாற்பட்டதென்று. 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, satan said:

 எடுத்தவுடன் அவர் உங்களை கேட்கவில்லை, நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒருவர் தன்னிடமுள்ளவற்றுக்கு மேலானதிலிருந்து அள்ளியும், கொட்டியும் கொடுக்கிறார், இன்னொருவர் தன்னிடமுள்ள எல்லாவற்றையும் கொடுக்கிறார், வேறொருவர் தன்னிடமுள்ளதை தன்னை ஒறுத்து பகிர்ந்து கொடுக்கிறார், இதில் யார் கொடுத்தது அதிகம் என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? கொடுத்த அளவல்ல, கொடுக்க முன்வந்த மனம், விதமே பார்க்கப்படும்! யாரும் யாரையும் வற்புறுத்தி பெற முடியாது, கொடுக்க வைக்கவும் முடியாது. அதுபோக இங்கு பதியப்படும் கருத்துக்கள் பகிரங்கமானவை, யாரும் கருத்து பதியலாம், மற்றவர்களை பாதிக்காதவாறு மட்டுறுத்துனரால் அறிவுறுத்தப்படும்வரை, அல்லது தடுக்கப்படும்வரை வரையறைக்கு அப்பாற்பட்டதென்று. 

விசுகர் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து(பதில் )

சாத்தான் கேட்டதற்கு அவருக்கு ஒரு குத்து. 

அம்புட்டுதே 😀

1 hour ago, கிருபன் said:

நல்ல விடயம்.👍🏾

Warm-glow giver ஆக இல்லாமல் இருந்தால் சரி. 

 

மனிதன் எவ்வளவு கொடையாளியாக இருந்தாலும் அடிப்படையில் அவன் ஒரு சுயநலமிதானே 😀

(ஏதாகிலும் செய்கிறேன் என்கிற திருப்தியையும் கெடுத்துவிடுவீர்கள் போல 🤣)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

மனிதன் எவ்வளவு கொடையாளியாக இருந்தாலும் அடிப்படையில் அவன் ஒரு சுயநலமிதானே

அள்ளியும் கொட்டியும் கொடுப்பவர்கள் சன்மானம் எதிர்பார்த்தோ தங்கள் அந்தஸ்த்தை மற்றவர் அறியவேண்டும் என்பதற்காகவோ கொடுப்பார்கள் (சிலர் விதிவிலக்கு) இல்லையெனில் சொல்லிக் காட்டியும் பெருமையடிப்பார்கள், இருப்பதை பகிர்பவர் தன்னைப்போல் மற்றவரையும் நேசிக்கிறார். 

கபித்தான்! மற்றவர்களுக்கு வெறுப்பேற்றவேண்டாமே, நீங்கள் ஒரு பெரிய கொடையாளி ஒத்துக்கொள்கிறோம் விட்டுவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

விசுகர் ,

நான் செய்தவற்றைச் சொன்னால் எனக்கு தமிழ்த் தேசியவாதி விருதா கொடுக்கப்போகிறீர்கள்? இல்லையே 🤣

ஆனாலும் மொத்த யாழ்கள தமிழ்த் தேசியவாதிகள் அத்தனைபேரும் செய்த்தை விட நான் அதிகமாக்ச் செய்திருக்கிறேன். செய்துKண்டிருக்கிறேன். உ+ம் 👇

 

யாழ் களத்திற்கு நன்கு பரிட்சயமான உதவு நிறுவனமொன்றினூடாக, யாழ் களத்தினர் கொட்டிக்கொடுத்ததை விட(😉) மேலதிகமாகவே அதே நிறுவனத்தினூடாக (ஒரே தடவையில்)  நானும் என் நண்பனும் செய்திருக்கிறோம். 

போதுமா? 

(எங்கே எனக்கான தமிழ்த் தேசியவாதி விருது 😉)

உங்கள் பணிகளை பாராட்டுகிறேன்

ஆனால் எவருடனும் ஒப்பிடாதீர்கள்

அப்படி ஒப்பீடு என்று வரும்போது நாம் கூனி குறுக வேண்டி வரும். கிணற்று தவளை ஆகி விடுவோம். 

ஒரு முறை மட்டும் அவர் கொடுத்த தொகை அளவு நான் அறிந்தவரை யாழ் கள உறவுகளிடம் எவரிடமும் மொத்த சொத்துக்களே இல்லை.

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு சின்ன உதாரணம்...
அண்மையில் சிங்கள கிரிக்கெட்வீரர் ஒருவர் இன்னும் நீதிமனறத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லை... விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது... அவருக்கு யாழில் எழுதப்பட்ட கருத்துக்கள்...


ராஜ் ராஜரடணம் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றத்தால் தீர்க்களிப்பட்டு சிறை சென்றவர்.. இவர் கீரோ ஆக்கப்பட்டு வைக்கப்படும் கருத்துக்கள்..


பணம் பாதாளம் வரையும் பாயும்.. பணமிருந்தால் நீங்கள் எவ்வளவு குற்றம் செய்தாலும் உங்களுக்கு வெள்ளை அடிக்க இந்த சமூகம் வரிந்து கட்டிக்கொண்டு வரும்.. எனக்கு தெரிந்த தமிழ் முதலாளி ஒருவர்.. பத்துக்கடை வத்திருக்கிறார்.. ஆள் ஆரம்பத்தில் கள்ளமட்டை ஏஜென்சி வேலைல காசடிச்சது எண்டு எக்கச்சக்க ஓட்டு மாட்டு செய்தவர்.. இண்டைக்கு பெரிய பணமுதலாளி.. அநேக தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் வீட்டு நிகழ்வுகளில் அவர்தான் பெரியவர்.. பெரிய மரியாதை..

ராஜ் ராஜரடணம் செய்ததை ஒரு என்னைப்போன்ற சாதாரணமானவன் செய்திருந்தால் இதே யாழ்களத்தில் எப்படியான ஏச்சுக்களை நான் வாங்கி இருபேன் எண்டு காற்பணை பண்னிபாக்கிரன்.. இவனை மாதிரி கள்ளக்கூட்டத்தாலதான் ஒட்டுமொத்த தமிழருக்கும் கெட்ட பெயர்.. உழைச்சு தின்ன இவனுக்கு என்ன கைகால் சொத்தியோ.. எக்சர்ரா.. எக்சர்ரா..

வெக்கமே இல்லாமல் தப்புக்களை நியாப்படுத்தி தமிழர் போராட்டத்தை வேறு துணைக்கிழுத்து இவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து கல்லெறிந்தாலும் சரியெனப்படுவதை தொடர்ந்து சளைக்காது எழுதுவதற்கு ஒரு சல்யூட் கப்பிதன்...

இவரை பற்றி இன்றுதான் கேள்விப்படுகிறேன் 
இவர் செய்த மாபெரும் குற்றத்தை தெளிவாக எழுதுகிறீர்களா?
வாசிக்க ஆவலாக இருக்கிறேன் 

17 hours ago, ரதி said:

காசு எப்படி வந்திருந்தாலும் சரி, எப்படி ஏமாத்து வேலை செய்து இருந்தாலும் சரி புலி ,தேசியம் என்று சொன்னால் தப்பிக்கலாம் என்று இங்கே பல பேரது  எழுத்தை வாசிக்கும் போது தெரியுது 
 

இவர் எவ்வாறான தவறான வழிகளில் பணம் சேர்த்தார் என்று கொஞ்சம் தெளிவாக எழுதுகிறீர்களா?
வாசிக்க ஆவலாக இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு சின்ன உதாரணம்...
அண்மையில் சிங்கள கிரிக்கெட்வீரர் ஒருவர் இன்னும் நீதிமனறத்தால் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படவில்லை... விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது... அவருக்கு யாழில் எழுதப்பட்ட கருத்துக்கள்...


ராஜ் ராஜரடணம் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றத்தால் தீர்க்களிப்பட்டு சிறை சென்றவர்.. இவர் கீரோ ஆக்கப்பட்டு வைக்கப்படும் கருத்துக்கள்..


பணம் பாதாளம் வரையும் பாயும்.. பணமிருந்தால் நீங்கள் எவ்வளவு குற்றம் செய்தாலும் உங்களுக்கு வெள்ளை அடிக்க இந்த சமூகம் வரிந்து கட்டிக்கொண்டு வரும்.. எனக்கு தெரிந்த தமிழ் முதலாளி ஒருவர்.. பத்துக்கடை வத்திருக்கிறார்.. ஆள் ஆரம்பத்தில் கள்ளமட்டை ஏஜென்சி வேலைல காசடிச்சது எண்டு எக்கச்சக்க ஓட்டு மாட்டு செய்தவர்.. இண்டைக்கு பெரிய பணமுதலாளி.. அநேக தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழர் வீட்டு நிகழ்வுகளில் அவர்தான் பெரியவர்.. பெரிய மரியாதை..

ராஜ் ராஜரடணம் செய்ததை ஒரு என்னைப்போன்ற சாதாரணமானவன் செய்திருந்தால் இதே யாழ்களத்தில் எப்படியான ஏச்சுக்களை நான் வாங்கி இருபேன் எண்டு காற்பணை பண்னிபாக்கிரன்.. இவனை மாதிரி கள்ளக்கூட்டத்தாலதான் ஒட்டுமொத்த தமிழருக்கும் கெட்ட பெயர்.. உழைச்சு தின்ன இவனுக்கு என்ன கைகால் சொத்தியோ.. எக்சர்ரா.. எக்சர்ரா..

வெக்கமே இல்லாமல் தப்புக்களை நியாப்படுத்தி தமிழர் போராட்டத்தை வேறு துணைக்கிழுத்து இவர்கள் எவ்வளவு பேர் சேர்ந்து கல்லெறிந்தாலும் சரியெனப்படுவதை தொடர்ந்து சளைக்காது எழுதுவதற்கு ஒரு சல்யூட் கப்பிதன்...

ஓணாண்டியார்,

நீங்கள் நினைப்பது போல அல்ல இங்கே விடயம்.

insider dealing என்றால்..... நான் ஒரு கொம்பனி கணக்கர். கணக்கு தயாரிக்கும் எனக்கு தெரிகிறது, இந்த முறை கொழுத்த லாபம் அல்லது பெரு நஷ்டம் என்று. நான் பங்குசந்தையில் முதலிடும் உங்களுக்கு ரகசியமாக தகவல்களை தந்து விடுகிறேன் என்றால், தகவலுக்கு அமைய, கம்பெனி கணக்குகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்க முன்னம் நீங்கள் இருப்பதை வித்து அல்லது, வாங்கி பணம் பார்க்கிறீர்கள். மாட்டினால் எனக்கும், உங்களுக்கும் சிக்கல் தான்.

நீங்கள் பேராசை இல்லாமல் பணம் பார்க்கும் வரை எல்லாம் ஒகே. பேராசை வந்தால், இவர் எப்படி ஊகித்தார், இவர் எப்படி, ரிஸ்க் எடுத்து அதிக பங்குகளை விக்கிறார் அல்லது வாங்குகிறார், என்று உங்களை கண்காணிக்கும் போது, உங்கள் தொடர்புகளை அறிவர்.

ஆனால், நவீன உலகில், நீங்களும் நானும், பிடிபடும் அளவுக்கு தொடர்புற போவததில்லை அல்லவா.

உங்களை பிடித்து விசாரித்தாலும், நான் பெரிய வித்தகன், இந்த கம்பெனியின் சரித்திரமே ஆராய்ந்து தான் முடிவுகள் எடுத்தேன். போனமாதம் கம்பெனில இது நடந்தது, இந்தமாதம் இது நடந்தது, அதனால் பங்கு இறங்கும். ஏறும் என்று கணித்தேன் என்றால் ஒன்றுமே செய்ய முடியாது அவர்களால்.

உதாரணமாக, உங்கள் மனைவியின், கணக்காளர் நண்பி, எதேசையாக, கோஸ்டாவில் கோப்பி குடிக்கும் போது, இந்த முறை நல்ல போனஸ் வரும், கொம்பனிக்கு கொழுத்த லாபம் கிடைத்திருக்கிறது என்று வாயால் சொல்ல, அதனை மனைவி உங்களிடம் சொல்ல நீங்கள் பங்கினை வாங்கி பணம் பண்ணினால், அதனை insider dealing என்று நிரூபிக்க முடியாது. ஆனால் அந்த நண்பி, உங்கள் மனைவிக்கு சொன்னதை, யாராவது பதிவு செய்தால், அது ஓரளவுக்கு insider dealing கை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் மீது அதை வைத்து குத்தம் சொல்ல முடியாது. 

ஏனெனில் அவர் சொல்லவந்தது தனது போனஸ், அதுக்கு என்ன காரணம் என்ன என்று மட்டுமே. அந்த தகவலை நீங்கள் பயன்படுத்தினீர்கள். ஆக அடிப்படை நோக்கம் insider dealing அல்ல.

ஆக, சட்டத்தில் இருந்தாலும், நீதிமன்றில் உறுதிப்படுத்தக் கூடிய சான்று பெறுவது மிக கடினம்.

இவை (insider dealings ) வெள்ளைகள், பங்குசந்தையில் நசுக்கிடாமல் செய்யும் வேலைகள். கண்டும் காணாத மாதிரி இருக்கும், அமெரிக்க அதிகாரிகள், நம்மவர், அதுவும் அவர்கள் பார்வையில் வெள்ளை தோல் இல்லாத கறுப்பர் வெற்றியை பொறுக்க முடியாமல், அதுவும், புலிகளுக்காக ஆயுதங்கள் வாங்க பிரிட்டனில் இருந்து அமெரிக்கா வருமாறு டாக்டர் உள்ளிட்ட சிலரை அழைத்து மாட்டி விட்ட, சிவபெருமான் என்று புனை பெயர் கொண்ட எமது ஈழத்தமிழரை, வைத்தே, wire tapping செய்து மாட்ட வைத்தார்கள்.

சிவபெருமான் இவரை மாட்டவைத்ததன் காரணம், இவர் தமிழர் புனர் வாழ்வு அமைப்புக்கு (TRO) பணம் கொடுத்தவர் என்று, FBI  கண்டுகொண்டதால் தான். 

நான் மேலே சொன்ன, பேராசையும் ஒரு காரணமாக இருக்கும். மேலும், அதீத வெற்றி காரணமாக, இவர் பாதுகாப்பான தொடபுறலை மறந்து, டெலிபோன் ஊடாக பேசி, அதனை  wire tapping (தொலைபேசி ஒட்டுக்கேட்டல் ) சிக்கிக் கொண்டார்.

அதுவும், இவருடன் பேசிய இந்தியர், இவரை மாட்டி விடும் வகையில் பேசி சிக்க வைத்தார். அவர் FBI காக (approver) வேலை செய்தார். அவரை சிக்க வைக்கும், ஆதாரம் இவரிடம் இருந்தாலும் (இவர் அவர் முன்னாள் தந்த தகவல்களை பதிவு செய்துள்ளார் போலும்). சிறு பிள்ளைகளின் தந்தையான அந்த இந்தியரின் தூரோகத்தினை மன்னித்து, சிறை சென்றேன் என்கிறார் இவர். நான் அப்படி வளர்க்கப்படவில்லை என்கிறார்.

இதில் கொசுறு தகவல், இவரை சிக்க வைத்த சிவபெருமான், , இலங்கையில் மூன்றாவதாக ஒரு பெர்கர் இன பெண்ணை கலியாணம் செய்து கொழும்பில் வாழ்கிறார்.

ஆக, இவர் சிக்கவைக்கப்பட முக்கிய காரணம், இயக்க தொடர்பு. எனினும் அதனை அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

இவர் சிறை சென்றாலும் கூட, இவரது பணம், insider dealing சட்டப்படி பறிமுதல் ஆகாது. நாய் வித்த காசு குழைக்காது. ஆகவே அந்த பணத்தினால் எம்மவர்கள் பலன் அடைந்தால் நன்று.

***

சிங்களவர் செய்தது பாலியல் குற்றம். இவரது குற்றம் White-Collar Crime.

From FBI site: White-Collar Crime
These crimes are not violent, but they are not victimless. White-collar crimes can destroy a company, wipe out a person's life savings, cost investors billions of dollars, and erode the public's trust in institutions.

வெள்ளை காலர் குற்றம்
இந்தக் குற்றங்கள் வன்முறையானவை அல்ல, ஆனால் அவை பாதிக்கப்படுபவர்களை உருவாக்காதவை அல்ல. ஒயிட் காலர் குற்றங்கள் ஒரு நிறுவனத்தை அழிக்கலாம், ஒரு நபரின் வாழ்நாள் சேமிப்பை அழிக்கலாம், முதலீட்டாளர்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்கள் அழிக்கலாம் மற்றும் நிறுவனங்களின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கலாம்.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

லைக்க சுபாஸ்கரன் செய்துகொண்டிருக்கிறார் என அறிகிறேன். பூரண விபரங்கள் இல்லை. 

கனடாவிலிருந்து எனக்குத் தெரிந்த நண்பர்கள் அங்கே NGO வை register செய்து அதனூடாக உதவுகிறார்கள். இப்படிப் பல்ர் உதவுகிறார்கள். அனேகர் தனிப்பட்ட ரீதியில் தொடர்ச்சியாக உத்வுகிறார்கள். 

 NGO. ...என்னும் அமைப்பு அல்லது நிறுவனம்   நீர்கொழும்பு ..புத்தளத்திலிருந்து செயல்படுகிறது இல்லையா?. குறிப்பாக யாழ்ப்பாணம் இல். இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Kandiah57 said:

 NGO. ...என்னும் அமைப்பு அல்லது நிறுவனம்   நீர்கொழும்பு ..புத்தளத்திலிருந்து செயல்படுகிறது இல்லையா?. குறிப்பாக யாழ்ப்பாணம் இல். இல்லை 

நான் குறிப்பிட்ட நிறுவனம் வடக்கு கிழக்கில் இயங்குகிறத. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.