Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

இங்கே மாறுபட்ட கருத்துகள் இருப்போர் கூட அவர் டக்லசிடம் போய் வந்த பின்னும் அவர் மீது ஒரு நல்அபிப்ராயம் வைத்திருப்பதாகவே படுகிறது.

அதுதான் அவர் அங்கேயே மண்டியிட்டு கிடைக்காமல் திரும்பி வந்திட்டாரெல்லே! மணி தனது கட்சிக்காக உழைத்தது உண்மை, அதற்கு அவரது இளமை, விடா முயற்சி, செயற்திறன் துணையாயிருந்தது.  தான் கேட்ட பதவிக்கு தகுதியானவர் தான் என வாக்குவாதம் செய்ததும், நிஞாமானதுங்கூட என்று அவர் வாதிட்டதும்  உண்மை. அது மறுக்கப்பட்டபோது ஏற்பட ஆத்திரம், அவமானம் ஒரு களத்தை தேடியது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க. அதை சாதகமாக்கிக்கொண்டது சுமந்திரனின் ஆர்னோல்டை பழிவாங்கும்  திட்டமும் தாடியின் நரித்திடமும். ஆனால் ஒரு உண்மை! அப்போ மணியிடம் மக்களுக்கான சேவை செய்யும் பொது நலம் இருக்கவில்லை, தன்னை முன்னிலைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களை வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இருந்தது உண்மை. ஆனால் இப்போ இவர் எடுத்திருக்கும் முடிவு அப்படிபட்டதல்ல. காலம் அவருக்கு நல்ல பாடத்தை கற்று  கொடுத்திருக்கு, இனி மக்களுக்கான உண்மையான சேவையை எதிர்பாக்கலாம் என்பது எனது நம்பிக்கை. இல்லையென்றால் தாடியின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, பதவியை தக்க வைத்துக்கொண்டு அதன் ஊழிக்கூத்துக்கெல்லாம் தாளம் போட்டு நாறுவதற்கு அங்கு ஒன்றுமில்லை மணியின் பெயரே. மணியின் செயற்திட்டத்தை மக்கள் அறிய ஒரு வாய்ப்பேற்படுத்தப்பட்டது. கெட்டதிலும் ஒரு பெரிய நன்மை. இதற்கு கஜே பொன் குமாருக்கும் ஒரு நன்றி.     

  • Replies 73
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகரசபை தேர்தலும் அடங்கும்தானே?

அதில் மணி தலைமையில் ஒரு சுயேட்சை அணி இறங்கலாம்தானே?

இங்கே மாறுபட்ட கருத்துகள் இருப்போர் கூட அவர் டக்லசிடம் போய் வந்த பின்னும் அவர் மீது ஒரு நல்அபிப்ராயம் வைத்திருப்பதாகவே படுகிறது.

அவர் தேசியம், அபிவிருத்தி என்ற இரெட்டை குதிரை சவாரிக்கு ஏற்றவர் என பலர் கருதுவதாகவும், அவர் முன்னுக்கு வர வேண்டும் எனவும் நினைப்பதாக தெரிகிறது.

ததேமு, தமிழரசு, ஈபிடிபி - இல்லாத ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த சுயேட்சை அணியில் கேட்கலாம்.

அதிகாரத்தை பிடிக்க முடியா விட்டாலும், எதிர்கட்சியாகவாவது அமரலாம்.

நாம் எல்லாரும் எதிர்பார்க்கும் புதிய அரசியல் தலைமை இதன் வழி பிறக்கவும் கூடும்.

 

 

அதுசரி .... அங்காலை ஒருத்தர் இலங்கைக்கு போறேன் முதலிட, நீங்கள் என்ன சொல்லுறியள் என்று ஒலிபரப்பு செய்யிறார். அவருக்கு சொல்லக்கூடிய அறிவுரை ஏதும்  உங்களிடம் உண்டா? ஆளோ விடுகிற பாடாயுமில்லை, போற பாடாயுமில்லை! இல்லை ..... உங்களுக்கு ஏதும் அவரைப்பற்றிய (தனிக்குணாம்ஷம்) தகவல்கள் தெரிந்து இருக்கலாமென்று கேட்டேன்! கோவிச்சுக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

மணியை நீக்குகிறது கஜே குழு.

நான்: ஏன் நீக்கினார்களாம்?

சாத்ஸ்: கூட்டத்தில் தகராறு செய்தார், மேலும் டக்கி குழுவோடு சார்ந்தார்!

நான்: அது நீக்கிய பின்னர் அல்லவா? நீக்க என்ன காரணமாம்?

சாத்ஸ்: மேலே சொன்ன, நீக்கிய பின்னர் அவர் செய்தவை தான் காரணங்கள், அதிலேயே பதில் இருக்கே?

இல்லையில்லை, இது மணியின் அடுத்த நகர்வு. அதாவது நீக்கியதன் பின்விளைவு!

1 hour ago, satan said:
2 hours ago, Justin said:

அது தான் நீக்கக் காரணம் என்கிறீர்கள்.

இங்கேயே விடை இருக்கே!

 

2 hours ago, Justin said:

இதை நீக்கக் காரணமாக கஜே குழு சொன்னதாக எனக்கு நினைவில்லை! இது நீக்கப் பட்ட பிறகா அல்லது முன்னரா?

மணியின் நடத்தை பற்றிய குற்றச்சாட்டு, மணியை நீக்கிய முன்பா பின்பா என்று கேட்டிருந்தீர்கள். குற்றசாட்டு வைத்துதான் நீக்கினார்கள். நீக்கத்துக்குக்கு காரணம் முன்புதானே கூறுவது வழமை? என்று நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

வரும் உள்ளாட்சி தேர்தலில் யாழ் மாநகரசபை தேர்தலும் அடங்கும்தானே?

அதில் மணி தலைமையில் ஒரு சுயேட்சை அணி இறங்கலாம்தானே?

இங்கே மாறுபட்ட கருத்துகள் இருப்போர் கூட அவர் டக்லசிடம் போய் வந்த பின்னும் அவர் மீது ஒரு நல்அபிப்ராயம் வைத்திருப்பதாகவே படுகிறது.

அவர் தேசியம், அபிவிருத்தி என்ற இரெட்டை குதிரை சவாரிக்கு ஏற்றவர் என பலர் கருதுவதாகவும், அவர் முன்னுக்கு வர வேண்டும் எனவும் நினைப்பதாக தெரிகிறது.

ததேமு, தமிழரசு, ஈபிடிபி - இல்லாத ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த சுயேட்சை அணியில் கேட்கலாம்.

அதிகாரத்தை பிடிக்க முடியா விட்டாலும், எதிர்கட்சியாகவாவது அமரலாம்.

நாம் எல்லாரும் எதிர்பார்க்கும் புதிய அரசியல் தலைமை இதன் வழி பிறக்கவும் கூடும்.

இப்படியான புதிய அணிகள் உறுதியோடு உண்மையாக முன்வரவேண்டியது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, satan said:

அதுதான் அவர் அங்கேயே மண்டியிட்டு கிடைக்காமல் திரும்பி வந்திட்டாரெல்லே! மணி தனது கட்சிக்காக உழைத்தது உண்மை, அதற்கு அவரது இளமை, விடா முயற்சி, செயற்திறன் துணையாயிருந்தது.  தான் கேட்ட பதவிக்கு தகுதியானவர் தான் என வாக்குவாதம் செய்ததும், நிஞாமானதுங்கூட என்று அவர் வாதிட்டதும்  உண்மை. அது மறுக்கப்பட்டபோது ஏற்பட ஆத்திரம், அவமானம் ஒரு களத்தை தேடியது சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க. அதை சாதகமாக்கிக்கொண்டது சுமந்திரனின் ஆர்னோல்டை பழிவாங்கும்  திட்டமும் தாடியின் நரித்திடமும். ஆனால் ஒரு உண்மை! அப்போ மணியிடம் மக்களுக்கான சேவை செய்யும் பொது நலம் இருக்கவில்லை, தன்னை முன்னிலைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களை வஞ்சம் தீர்க்கும் எண்ணம் இருந்தது உண்மை. ஆனால் இப்போ இவர் எடுத்திருக்கும் முடிவு அப்படிபட்டதல்ல. காலம் அவருக்கு நல்ல பாடத்தை கற்று  கொடுத்திருக்கு, இனி மக்களுக்கான உண்மையான சேவையை எதிர்பாக்கலாம் என்பது எனது நம்பிக்கை. இல்லையென்றால் தாடியின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, பதவியை தக்க வைத்துக்கொண்டு அதன் ஊழிக்கூத்துக்கெல்லாம் தாளம் போட்டு நாறுவதற்கு அங்கு ஒன்றுமில்லை மணியின் பெயரே. மணியின் செயற்திட்டத்தை மக்கள் அறிய ஒரு வாய்ப்பேற்படுத்தப்பட்டது. கெட்டதிலும் ஒரு பெரிய நன்மை. இதற்கு கஜே பொன் குமாருக்கும் ஒரு நன்றி.     

மேலே டக்லசோடும் சேர்ந்து வேலை செய்வதை பற்றி வேறுபட்ட இருவர் சொன்னதை கவனத்தில் எடுத்து பார்க்கிறேன்.

அரசியல், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் “தீண்டதகாதவர்” என யாரும் இல்லை என்ற நிலை ஏற்படுவது ஆரோக்கியமானதே. 

சகல தரப்பிலும் 2009 முன்னான தலைவர்கள்… கொஞ்சம் விலகி போனால்…இந்த இனத்தில் பிளவுகளை நிரவ இலகுவாக இருக்கும். 

டக்லசும், மாவை, சிறிதரனும் கைகோர்க்கும் போது இருக்கும் நெருடல், திலீபனும் மணி வண்ணனும் கைகோர்க்கும் போது குறைவாகவே இருக்கும்.

அது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்பதும் தெரிகிறது.

 

1 hour ago, satan said:

அதுசரி .... அங்காலை ஒருத்தர் இலங்கைக்கு போறேன் முதலிட, நீங்கள் என்ன சொல்லுறியள் என்று ஒலிபரப்பு செய்யிறார். அவருக்கு சொல்லக்கூடிய அறிவுரை ஏதும்  உங்களிடம் உண்டா? ஆளோ விடுகிற பாடாயுமில்லை, போற பாடாயுமில்லை! இல்லை ..... உங்களுக்கு ஏதும் அவரைப்பற்றிய (தனிக்குணாம்ஷம்) தகவல்கள் தெரிந்து இருக்கலாமென்று கேட்டேன்! கோவிச்சுக்கக்கூடாது.

தினேஷ் ஷாப்டர் விடயத்தில் பகிடி விடுங்கோ, கொச்சை சிங்களமாவது தெரியும், சும்மா அறியாத வயசில தெரியாம சொல்லி போட்டன் எண்டு இலங்கை சிஐடி, டிஐடி, என் ஐ பி யிடம் கெஞ்சியாவது தப்பித்து விடுவேன்.

பிராந்திய வல்லரசு கட்டமைப்போடும் மோத எனக்கு திராணி இல்லை.

47 minutes ago, nochchi said:

இப்படியான புதிய அணிகள் உறுதியோடு உண்மையாக முன்வரவேண்டியது அவசியம்.

வெற்றிடமே பெரும் சூறையை பிரசவிக்கிறது.

இவருடன் ஜனநாயக போராளிகள் குழு கூட இணையலாம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கினேஸ்வரனை கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட்டு அவரை செயற்படவிடாமல் குற்றஞ்சாட்டுவதும், எள்ளி நகையாடுவதுமாய் இருந்ததனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் வெளியேறினார். அதுவே இப்போ மணிக்கும் நடந்திருக்கு. (அவர்களோடு சேர்ந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்ய வேண்டும் இல்லையேல் தாளம் போட்டுக்கொண்டு சும்மா இருக்கவேண்டும்). ஆனால் ஒருவரை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் எடுக்கும்  தன்னலமற்ற முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க விருப்பமில்லாவிட்டால் தள்ளியிருக்கலாம்.  மக்கள் நலன் கருதினால் அவர்கள் தவறு விடும்போது அதற்கான மாற்றுவழிகளை கூறி தடுப்பும் கடுப்பும் ஏற்படுத்தாமல் ஒத்துழைத்தால் மக்கள் பலன் பெறுவர் எதிரியும் வேறு வழியில்லாமல் இறங்கி வருவான். இங்கு எதிரிக்கு பாரிய அனுகூலம்  என்னவென்றால்  எம் தலைவர் பிரிந்து நின்று முன்னேறாமல் மற்றவர்களை விமர்சித்து தடைகளை ஏற்படுத்தி மக்களை திசை திருப்பி எதிரியின் பக்கம் சாய்ப்பதே. அதற்கான காரணமும், தாங்கள் மக்களை ஏமாற்றுவதை மற்றவர்கள் கவனியாமல், அவர்களை திசைதிருப்பி தாங்களே தேசிய வீரர்களாக வலம் வருவதற்கே.

15 minutes ago, goshan_che said:

தினேஷ் ஷாப்டர் விடயத்தில் பகிடி விடுங்கோ, கொச்சை சிங்களமாவது தெரியும், சும்மா அறியாத வயசில தெரியாம சொல்லி போட்டன் எண்டு இலங்கை சிஐடி, டிஐடி, என் ஐ பி யிடம் கெஞ்சியாவது தப்பித்து விடுவேன்.

பிராந்திய வல்லரசு கட்டமைப்போடும் மோத எனக்கு திராணி இல்லை.

தங்கள் கருத்தை தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறேன்.

16 minutes ago, goshan_che said:

“தீண்டதகாதவர்” என யாரும் இல்லை என்ற நிலை ஏற்படுவது ஆரோக்கியமானதே. 

சிலரை எப்போதும் தள்ளி வைப்பதே பொதுநலத்திற்கு நன்மை. நஞ்சென்று தெரிந்துகொண்டு குடிக்கலாமா? வாழ விருப்பமில்லாதவன் குடிக்கலாம் அது அவனவன் விருப்பம்.  சாகிறதற்கு பல வழிகளுண்டு அதிலிதுவும் ஒன்று. வாழத்துடிப்பவன் குடியான்.                   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

சிலரை எப்போதும் தள்ளி வைப்பதே பொதுநலத்திற்கு நன்மை. நஞ்சென்று தெரிந்துகொண்டு குடிக்கலாமா? 

உண்மைதான். தனி வாழ்விலும், யாழ்களத்திலும் கூட நாமே இப்படித்தானே விலகி நடக்கிறோம். தனி வாழ்வுக்கு இது மிகச் சரி.

ஆனால் பொதுவாழ்வில் - தீர்வு போன்ற விடயங்களிலாவது இவர்களை கொஞ்சம் தூரத்தில் வைத்தாவது டீல் பண்ண வேண்டும் என்றே நினைக்கிறேன்.

உதாரணமாக - எல்லாரும் 13 பிள்ஸ் சுக்கு கீழே போகமட்டம் என நிக்க, டக்லஸ் மாவட்ட சபை போதும் என்ற நிலை எடுத்தால் - அது ஏனையோரின் பேரம் பேசும் வலுவை பாதிக்கும்.

எனவே நீங்கள் 13 க்கு கீழே போகாதீர்கள் என்ற அளவிலாவது அவர்களுடன் ஒரு புரிந்துணர்வினை ஏற்படுத்தும் தேவை இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உதாரணமாக - எல்லாரும் 13 பிள்ஸ் சுக்கு கீழே போகமட்டம் என நிக்க, டக்லஸ் மாவட்ட சபை போதும் என்ற நிலை எடுத்தால் - அது ஏனையோரின் பேரம் பேசும் வலுவை பாதிக்கும்.

ஐயா! நீங்கள் அந்த மனிதனை எப்படி உயர்த்தி வைத்தாலும் அவரின் நிலையை மாற்றமுடியாது. ஏனெனில் அவர் தானாக முடிவெடுப்பத்தில்லை. இப்போ மக்களின் வாக்குக்காக யாரோ எழுதி கொடுப்பதை வாசிக்கிறார், நம்பாதீங்கோ! நீங்கள் தாடியின் தனித்திறமை, இல்லையில்லை பாம்பின் கதை தெரியாமல் பேசுகிறீர்கள். இதற்காகவா சிங்களம் மகுடியும் கையுமாய் இதுக்கு பின்னாலே அழைப்பு விட்டுக்கொண்டு தெரியுது. அதுக்கென்று ஒரு தனி சுதந்திரமான நிலை எடுப்பு இல்லேலை. அக்கினி அழகாக சொல்லுவார்; நீங்கள் இப்படிக்க  சுத்தினா அவர் அடுப்படிக்க சுத்துவார், நீங்கள் அடுப்படிக்க சுத்தினா அவர் இலுப்பையடியில் தேடுவார். இது அக்கினி சொல்லேலை. மற்றதொண்டை பாக்கலையே? நீங்கள் இனப்பிரச்சனைக்கு வழி கண்டு பிடியுங்கள்  என்றால் எதிரியின் பாசறையில போய் நிக்குதுகள்.  இதுகளை எதிரி வழிநடத்துறானா அல்லது இதுகளே எதிரிக்கு வழி சொல்லிக்குடுக்குதுகளா என்று தெரியவில்லை. இதுகளையெல்லாம் ஒரு வண்டியில கட்டி இழுக்கலாமென்றா நினைக்கிறீர்கள்? கருவாட்டுத்தலைக்கு பின்னால போனதுகள். தவறாய் நினைக்காதீங்கோ, எழுபத்தொன்பது ஆண்டுகளாய் எல்லாவற்றையும் இழந்து இழக்க ஏதுமின்றி, ஒரு தலைவனில்லையென்றில்லை, தன் இனத்தையே விற்று பிழைக்கும் தலைமையை வைத்துக்கொண்டு விலத்தவும் முடியலை, வீழ்த்தவும் முடியலை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு? இதுக்குமேல என்ன உண்டு என்கிற கோவத்தில் வருகுது. இதுகளை கட்டியாள ஒருவரில்லையே நம்மிடத்தில் என்கிற ஏக்கம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது-செ.பிரணவநாதன்

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது-செ.பிரணவநாதன்

யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இன்று (சனிக்கிழமை) ராஜினாமா செய்யவுள்ள நிலையில் யாழ் மாநகர சபையின் அடுத்த கட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ,மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது என்பதோடு அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டு தேர்வு நடைபெறும்.

இதேவேளை கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1318069

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் ஈபிடிபிக்கு வாக்குப் போடுற மந்தைகளாலும்.. தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே இல்லாத ஒற்றுமையாலும் வாற பிரச்சனை. இதற்கு சம் சும் கும்பல் தான் கால்கோள். 

தமிழ் தேசியக் கட்சிகள் மக்களுக்காக ஒற்றுமைப்பட்டிருந்தால்.. பதவி ஆசைக்கு இடம் கொடுக்காமல் இருந்திருந்தால்.. இந்த சபையை அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி செய்திருக்கலாம். மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்கி இருக்கலாம். ஒட்டுக்குழு ஓணான் குழுவை சார்ந்திருக்க வேண்டியதில்லை. 

16+13=29  தேவை 23 இடங்கள் தான் பெரும்பான்மைக்கு 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nedukkalapoovan said:

அப்ப உள்ளூராட்சி தேர்தல் வரப்போகுது. அதுதான் குத்தியர் அடி எடுத்து வைக்கிறார். இந்த யாழ் மாநகர சபை ஈபிடிபியின் பொன் முட்டையிடும் வாத்து. இதை வைச்சு அடிச்ச கொள்ளைகள் ஏராளம். இருந்தும்.. இவங்களுக்கு வாக்குப் போட ஒரு கூட்டமிருக்குது. அதுகளை மீண்டும் ஏமாற்ற.. மணிவண்ணனை வெளில தூக்கிக் கடாச வேண்டிய தேவை இருக்குது. ஏனெனில்.. மணிவண்ணன்.. புலிப் பினாமியாக பிம்பப்படுத்தப்பட்டவர். மேலும் ஆட்சியில் இருந்த சபையில் எதிர்கட்சி வரிசைக்குக் கூட ஆட்கள் கிடைக்காத நிலையில்... மணிவண்ணனை வைச்சு.. ஈபிடிபி புகுந்து விளையாடலாம் என்று நினைக்க.. மணிவண்ணணோ ஈபிடிபிக்கு கணக்கு விட்டுக் கொண்டிருந்ததால்.. கடைசி நேரத்தில் இந்த கழுத்தறுப்பு. 

இதனை ஈபிடிபிக்கு எதிராகவும் தனக்கான வாக்கிற்காகவும் மணிவண்ணன் பாவிப்பாரா.. இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈபிடிபி தோளில் இருந்து சதுராட்டம் போட அனுமதிக்க முடியாது என்று அதன் செயலாளர் நாய் அகம்.. அறிக்கை விட்டது நினைவு படுத்தத்தக்கது. குத்தியருக்கு இப்ப போட்டி ஆயுத அரசியல் செய்ய புலிகள் இல்லாத நிலையில்.. மணிவண்ணன் போன்றவர்களை வைச்சு குத்தியர் சவாரி செய்வதே நிகழ்கிறது. 

சிங்கள எஜமானர்களின் முன் தான் புறக்கணிக்கப்பட முடியாத கொம்பு என்று காட்ட வேண்டிய தேவை இப்ப குத்தியருக்கு எழுந்திருப்பதன் விளைவே இதெல்லாம். ரணில்.. ராஜபக்ச கும்பல் போல் அல்ல. வைக்க வேண்டியவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பதில் கில்லாடி நரி. கருணா என்றவர் இப்ப முகவரியில்லாமல் போயிருப்பது கவனிக்கத்தக்கது. 

கருணாவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.அதனால் ரணில் கருணாவை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. அனால் டக்கருக்கு வாக்களிக்க ஒரு குறிபிட்த்தக்க ஒரு கூட்டம் இருக்கிறது. ஒரு சீற் நிச்சயம் தமிழ்த்தெசியக் கூட்டமமைப்பின் ஒற்றுமையின்மையால் அது 2 சீற்ஆகவும் மாறக்கூடும்(யாழ்மாவட்டத்தில்)(அங்கையனுக்கு வாக்குப் போட்ட கூட்டம் அங்கையனை விட அமைச்சர்டக்ளசோடு நின்றால் சில சலுகைகளை அனுபவிக்கலாம்  என்று அடுத்த தேர்தலில் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது)மணி ஈபிடிபியோடு சேர்ந்தது பதவியாசையும் கஜன்களுக்கு பாடம் புகட்டவுமே. மணி ஈபிடிபியோடு சேராமல் தமிழரசுக்கட்சியோடு சேர்ந்திருந்தால் மணியின் எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இனி ஓட்டுப்பிரிப்பு வேலை செய்ய மட்டுமே அவரால் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

கருணாவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.அதனால் ரணில் கருணாவை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. அனால் டக்கருக்கு வாக்களிக்க ஒரு குறிபிட்த்தக்க ஒரு கூட்டம் இருக்கிறது. ஒரு சீற் நிச்சயம் தமிழ்த்தெசியக் கூட்டமமைப்பின் ஒற்றுமையின்மையால் அது 2 சீற்ஆகவும் மாறக்கூடும்(யாழ்மாவட்டத்தில்)(அங்கையனுக்கு வாக்குப் போட்ட கூட்டம் அங்கையனை விட அமைச்சர்டக்ளசோடு நின்றால் சில சலுகைகளை அனுபவிக்கலாம்  என்று அடுத்த தேர்தலில் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது)மணி ஈபிடிபியோடு சேர்ந்தது பதவியாசையும் கஜன்களுக்கு பாடம் புகட்டவுமே. மணி ஈபிடிபியோடு சேராமல் தமிழரசுக்கட்சியோடு சேர்ந்திருந்தால் மணியின் எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இனி ஓட்டுப்பிரிப்பு வேலை செய்ய மட்டுமே அவரால் முடியும்.

22 சுருங்கி 16 ஆகி இப்ப 10 நிற்குது.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த எம்பிக்கள்.

ஈபிடிபி ஒன்றில் இருந்து இரண்டாகிட்டு.. அதுவும் வன்னியில் இருந்து ஒருத்தர்.

சிங்கள எஜமானர்களின் தேவை குசிப்படுத்தலுக்காக.. தமிழ் தேசியத்தை சிதறிக்க கூட்டமைப்பை எப்ப சம் சும் கும்பல் உடைக்க ஆரம்பித்தார்களோ அப்பவே.. ஈபிடிபிக்கு வாக்குச் சேர்க்கவும் ஏன் சிங்களக் கட்சிகளுக்கு தமிழர்களிடம் வாக்குச் சேர்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சம் சும் வெட்டித் தலைமை உள்ளவரையும் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் கட்சிகளிடையே பலமான ஒற்றுமை எழாத வரையும்.. ஒட்டுக்குழுக்கள் காட்டில் மழை விட்டு விட்டு அடிக்கும். தவிர்க்க முடியாததே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

22 சுருங்கி 16 ஆகி இப்ப 10 நிற்குது.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த எம்பிக்கள்.

ஈபிடிபி ஒன்றில் இருந்து இரண்டாகிட்டு.. அதுவும் வன்னியில் இருந்து ஒருத்தர்.

சிங்கள எஜமானர்களின் தேவை குசிப்படுத்தலுக்கா.. தமிழ் தேசியத்தை சிதறிக்க கூட்டமைப்பை எப்ப சம் சும் கும்பல் உடைக்க ஆரம்பித்தார்களோ அப்பவே.. ஈபிடிபிக்கு வாக்குச் சேர்க்கவும் ஏன் சிங்களக் கட்சிகளுக்கு தமிழர்களிடம் வாக்குச் சேர்க்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சம் சும் வெட்டித் தலைமை உள்ளவரையும் தமிழ் தேசியத்தின் பெயரால் தமிழ் கட்சிகளிடையே பலமான ஒற்றுமை எழதா வரையும்.. ஒட்டுக்குழுக்கள் காட்டில் மழை விட்டு விட்டு அடிக்கும். தவிர்க்க முடியாததே. 

சம்சும்மை நீக்கினால் தமிழ்த்தலைமைகள் ஒரு குடையின் கீழ்வர வாய்ப்பிருக்கின்றது. அதற்குத் தலைமை தாங்க பொருத்தமானவர்யார்?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

புலவர், மணிக்குப் பதவி ஆசை வரமுதல் அவர் மூலம் சில ஆயிரம் வாக்குகளைப் பெற்று வென்ற கஜே குழு தேசியப் பட்டியல் ஆசையில் அவரைக் கட்சியில் இருந்து தூக்கிய பிறகு, முன்னணிக்குத் தடவி விட மணிக்கு என்ன தேவை இருந்தது என நினைக்கிறீர்கள்?

உலக வங்கி என்ன அடிப்படையில் இந்த 2022 தரப்படுத்தலை செய்திருக்கிறது என்று அறிய ஆவல், ஒதுக்கிய பண அடிப்படையிலா அல்லது பூர்த்தியான திட்டங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலா? எதுவாக இருந்தாலும் எங்கள் பகுதி நிர்வாகங்கள் நன்கு செயற்படுவதில் மகிழ்ச்சியே!

தமிழ்த்தேசிய முன்னனி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மணி 3வது இடத்தையே பிடித்திருந்திருந்தார்.  அவருக்கும் 4வதாக வந்த சுகாசுக்கும் இடையிலான வாக்குள் வெகு சொற்ப வித்தியாசங்களே. அத்துடன் தலைவர>செயலாளர் என்றவகையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மணி பொறுத்திருந்தால் அடுத்த தேர்தலில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.மணி தேர்தல் நேரங்களிலெயே குறுக்கோட்டம் ஓடத் தொடங்கி விட்டார். மணி அவசரப்பட்டு விட்டார். முன்னணியை உடைக்க சுமத்திரன் போட்ட திட்டத்திற்குப் பலியாகி விட்டார். தமிழ்தேசியக்மகூட்டமைப்போடு டீல்போட்டிருந்தால் தப்பியிருக்கலாம். டக்லசோடு டீல்போட்டு கடைசி நேரத்தில் அவமானப்பட்டு நிற்கிறார்.இன்னும் கொங்சநாட்கள் பதவிவிலகாமல் இருந்திருந்தால் சபை உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்காக சபை கலைக்கப்பட்டீருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

.இன்னும் கொங்சநாட்கள் பதவிவிலகாமல் இருந்திருந்தால் சபை உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்காக சபை கலைக்கப்பட்டீருக்கும்.

குத்தியர் குடுக்கிற குடைச்சலில் மணி ஒன்று அங்கொடைக்கு போகவேண்டி வந்திருக்கும் அல்லது நாண்டுகொண்டு செத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, மணி நிதானமாக சிந்தித்தால். விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

குத்தியர் குடுக்கிற குடைச்சலில் மணி ஒன்று அங்கொடைக்கு போகவேண்டி வந்திருக்கும் அல்லது நாண்டுகொண்டு செத்திருக்க வேண்டியிருந்திருக்கும். இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, மணி நிதானமாக சிந்தித்தால். விட்ட தவறுகளை மீண்டும் விடக்கூடாது.

மணவண்ணன் சிறந்த வினைதிறன்,  பொறுப்பு மிக்க மேயராக கடமையாற்றினார்.  

கஜேந்தரகுமாரே  தனது மூன்று தலைமுறை அரசியல்வாதிகள் குடும்பத்தில் இருந்து வந்துமே இப்போது மொட்டை விழுந்த பின்பும் கூட தனது தவறுகளை திருத்தாது தனது கட்சியை பழைய அதே பாணியிலான  உதவாக்கரை கட்சியாக கூட்டமைப்பு போலவே  செயற்படும் போது  போது இளையவரிடம் இருந்து மட்டும் அதை  எதிர்பார்பபது தவறு.  

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலகும் யாழ்.மாநகர முதல்வர் வாகன தரிப்பிட கட்டண குத்தகையையும் இரத்து செய்தார்!

By DIGITAL DESK 5

31 DEC, 2022 | 04:16 PM
image

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வாகன தரிப்பிட கட்டணங்களை வசூலிப்பதற்கு , தனியாருக்கு வழங்கப்பட்ட குத்தகையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் இரத்து செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் முன்பாக  , தனது வாகனத்தை நிறுத்தி விட்டு , வர்த்தக நிலையத்திற்கு சென்ற நபரிடம் பின் தொடர்ந்து வர்த்தக நிலையத்தினுள் சென்று , வாகன தரிப்பிட கட்டணத்தை தருமாறு கட்டணம் அறவிட நியமிக்கப்பட்ட நபர் கோரியுள்ளார். 

அதன் போது , கடையில் பணியாற்றும் நபர்கள் , கடைக்குள் வந்த வாடிக்கையாளருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் போது வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அந்நபர் மேலும் ஒரு கட்டணம் அறவிடும் நபரை கடைக்கு அழைத்து , கடையில் வேலை செய்யும் நபர்களுடன் , தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் , வீதியில் நின்று தகாத வார்த்தை பிரயோகங்களையும் மேற்கொண்டனர். 

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர முதல்வருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு முதல்வர் சென்ற வேளை தர்க்கத்தில் ஈடுபட்ட நபர்கள் அங்கிருந்து விலகி சென்று இருந்தனர். 

அதனை அடுத்து கடையில் வேலை செய்பவர்களிடம் முதல்வர் சம்பவம் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

அதேவேளை , வாகன தரிப்பிட கட்டணம் அறவிட குத்தகைக்கு எடுத்த நபரினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட நபர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் மாநகர முதல்வருக்கு கிடைத்த வண்ணம் இருந்தமையால் , கடந்த வாரம் குத்தகைதாரரை அழைத்து கடுமையாக எச்சரித்து , இனி வரும் காலங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் , குத்தகையை இரத்து செய்யவோம் எனவும் எச்சரித்து இருந்தார். 

இந்நிலையில் இன்றைய சம்பவத்துடன் குத்தகை தாரருடனான ஒப்பந்தத்தை யாழ்.மாநகர சபை முடிவுறுத்திக்கொள்கிறது. 

இனிவரும் காலங்களில் வாகன தரிப்பிட கட்டணங்களை யாழ்.மாநகர சபையே அறவிடும் என தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்.மாநகர சபை முதல்வர் இன்றைய தினம் நள்ளிரவுடன் தனது பதவியை இராஜினாமா செய்துக்கொள்ளும் நிலையில் , வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரருடனான ஒப்பந்தத்தை முடிவுறுத்தி , ஒப்பந்தத்தை இரத்து செய்ய கையொப்பம் இட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/144629

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

தமிழ்த்தேசிய முன்னனி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மணி 3வது இடத்தையே பிடித்திருந்திருந்தார்.  அவருக்கும் 4வதாக வந்த சுகாசுக்கும் இடையிலான வாக்குள் வெகு சொற்ப வித்தியாசங்களே. அத்துடன் தலைவர>செயலாளர் என்றவகையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மணி பொறுத்திருந்தால் அடுத்த தேர்தலில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.மணி தேர்தல் நேரங்களிலெயே குறுக்கோட்டம் ஓடத் தொடங்கி விட்டார். மணி அவசரப்பட்டு விட்டார். முன்னணியை உடைக்க சுமத்திரன் போட்ட திட்டத்திற்குப் பலியாகி விட்டார். தமிழ்தேசியக்மகூட்டமைப்போடு டீல்போட்டிருந்தால் தப்பியிருக்கலாம். டக்லசோடு டீல்போட்டு கடைசி நேரத்தில் அவமானப்பட்டு நிற்கிறார்.இன்னும் கொங்சநாட்கள் பதவிவிலகாமல் இருந்திருந்தால் சபை உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்காக சபை கலைக்கப்பட்டீருக்கும்.

தேர்தல் நேரமே குறுக்கோட்டம் ஓடியவரை தேர்தல் முடிந்து தேசியப் பட்டியலுக்கு ஆள் தேடும் வரை வைத்திருந்தமை ஏன் என்று தான் மக்கள் கேட்டார்கள், நானும் கேட்கிறேன் பதில் உங்களிடமும் இல்லை!

ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பெயின்ற் பேணியோடு வந்து கஜே குழுவின் பதவியாசையைப் பூசி மெழுக மட்டும் செய்கிறீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

சம்+சும் = கஜேx2 

 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

சம்+சும் = கஜேx2 

 

கோஷான்,

அடிக்கடி சம்பந்தன் சுமந்திரன் இரண்டு பேரும் தமிழினத்துக்குப் பாரிய துரோகம் இழைத்து விட்டதாக எழுதப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழினத்துக்கு செய்த பாரிய துரோகங்கள்தான் என்ன?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? அல்லது பன்னாட்டு சமுகத்தினால் பயங்கரவாதமாக முத்திரை குத்தபட்டு விட்ட எமது போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன? அதாவது இவர்கள் இருவரும் தானா இன்னும் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பயங்கரவாதமாக வைத்துள்ளனர். அதுக்கு வேறு எவரும் காரணம் இல்லையா?

எனக்கு விளங்காமல்தான் கேட்கின்றேன்.

சம்மந்தர் சிங்க கொடி பிடித்தார், சுமந்திரன் ரணிலுக்காக சட்டத்தரணியாக தோற்றினார் (ஆஜரானார்) என்ற பதில்கள் வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாலி said:

கோஷான்,

அடிக்கடி சம்பந்தன் சுமந்திரன் இரண்டு பேரும் தமிழினத்துக்குப் பாரிய துரோகம் இழைத்து விட்டதாக எழுதப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழினத்துக்கு செய்த பாரிய துரோகங்கள்தான் என்ன?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? அல்லது பன்னாட்டு சமுகத்தினால் பயங்கரவாதமாக முத்திரை குத்தபட்டு விட்ட எமது போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன? அதாவது இவர்கள் இருவரும் தானா இன்னும் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பயங்கரவாதமாக வைத்துள்ளனர். அதுக்கு வேறு எவரும் காரணம் இல்லையா?

எனக்கு விளங்காமல்தான் கேட்கின்றேன்.

சம்மந்தர் சிங்க கொடி பிடித்தார், சுமந்திரன் ரணிலுக்காக சட்டத்தரணியாக தோற்றினார் (ஆஜரானார்) என்ற பதில்கள் வேண்டாம்.

1.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாமல்வைத்திருந்தமை
2.அதன் கூலம் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் அதன் ஆதிக்கத்தில்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வழிநடத்தியமை.
3.போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து அவரைப்புனிதராக்கியமை.
4.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பேரில் தும்புக்கட்டையை நிறுத்தினாலும் வெல்லும் என்று கூறிமமதையில் மற்றைய கட்சிகளை ஓரங்கட்டியமை.
5. தமிழ்த்தேசியக் கூட்டமைhப்புக்குள் புலிகளால் உள்வாங்கப்பட்டலர்களை வெளியேற்றி புலிகளால் ஓரங்கட்டப்பட்டிருந்த புளொட்>ஆனந்தசங்கரி போன்றோரை உள்வாங்கியமை.
6.2010 இற்குப்பின் கட்சியில் சேர்ந்த சுமத்திரனுக்கு முடிவெடுக்கும் ஏகபோக உரிமையை வழங்கியமை.
7. கட்சிக்காக நீண்'ட காலம் உழைத்தவர்களை ஒதுக்கி பேரினவாதக்கட்சிகளுடன் இணைந்திருந்த சாணக்கியன்.மற்றும் சிறலங்காவின் பிரதிநிதியாக இருந்த அம்பிகா சற்குணநாதன் போன்றோரை உள்வாங்கியமை.
8.வடமாகாணசபை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்சுமத்திரன் சார்பு உறுப்பினர்களால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சிகுள் பிளவுகள் ஏற்படுத்தி பலரை வெளியேற வைத்தமை.
9.யாழ்மாநகரசபைக்குள்ளும் ஆர்னோல்ட் முதல் மணிவண்ணன் வரை பல குழப்பங்கள் உருவாக்கியமை.
10.நல்லாட்சி இவர்களால் வர்ணிக்கப்பட்டு நடந்த ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடன் இருபெரும் மதசியக்கட்சிகள் இணைந்து நடத்திய ஆட்சியில் தீர்வு தொடர்பாக எதுவும் செய்யாமலலும் இலங்கை அரசை அழுத்திக்கொண்டிருந்த ஐநா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல்.
11.அதன்பின்ரான ரணில் அரசின் வரவுசெலவுத்திட்டங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களின் காணி விடுவிப:ப >கைதிகள் விடுதலை போண்ற விடயங்களை க்கூட வலியுறத்தாது வாளாவிருந்தமை.
12.ரணிலின் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் போதும் எதுவித பேரம்பேசல்களும் இன்றி ரணிலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியமை.
13.13 போதும் என்று இந்தியஅரசின்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியமை.
14.மகிந்த பூச்சாண்டியைக்காட்டி எந்த ரணிலுக்கு ஆதரவு வழங்கினார்களோ இன்று அந்த ரணிலும் மகிந்தவும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் இன்னமும் ரணில் மீது நம்பிக்கை வைத்திருப்பது.
15. சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவதற்கு திருட்டுத்தனமாக வாக்களித்தமை.
16.மீண்டும் பேச்சு வார்ததை என்று தொடங்கியிருக்கும் நிலையில்  மற்றைய கட்சிகளுக்குத் தெரியாமல்  பினகதவால் ஜனாதிபதியைச் சந்திச்சமை.
17.இலங்கை கபாருளாதாரத்தில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் சுphவின் ஆதிக்கம் இஙை;கையில் வலுவாகி வருகின்ற சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான பூகோள அரசியலை சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசத்து நெருக்கn டகொடுக்காமல் சிங்களத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை;.18. சம்பந்தர் செயற்பட முடியாத நிலையில் இன்னொருவருக்கு அந்த வாயப்பை விட்டுக்கொடுக்காமலும் பாராளுமனறத்தில் திருகோணமலையின் மக்களின் குரலாக பேசுவதற்கு யாருமே இல்லாமல் வைத்திருத்தல்.
.18. மீண்டும் இந்தியாவை மட்டுமே நம்பியிருத்தல்.
19.பிரிந்து கிடக்கும் கட்சிகளை ஒன்றிணைக்காமல் மேலும பிளவுகள் உண்டாகும் வித்ததில் வருகின்ற ஊள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கட்சியின் அனுமதியில்லாமல் செய்திகளை வெளியிடல்.
20./ தமிழரசுக்கட்சிக்குள்ளே பல பிரிவுகளை உண்டாக்கி உட்கட்சிஜனநாயகமற்ற நிலையில் குழப்பங்களை உருவாக்குதல்.
இன்னும்பல விடயங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, வாலி said:

கோஷான்,

அடிக்கடி சம்பந்தன் சுமந்திரன் இரண்டு பேரும் தமிழினத்துக்குப் பாரிய துரோகம் இழைத்து விட்டதாக எழுதப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழினத்துக்கு செய்த பாரிய துரோகங்கள்தான் என்ன?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? அல்லது பன்னாட்டு சமுகத்தினால் பயங்கரவாதமாக முத்திரை குத்தபட்டு விட்ட எமது போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன? அதாவது இவர்கள் இருவரும் தானா இன்னும் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பயங்கரவாதமாக வைத்துள்ளனர். அதுக்கு வேறு எவரும் காரணம் இல்லையா?

எனக்கு விளங்காமல்தான் கேட்கின்றேன்.

சம்மந்தர் சிங்க கொடி பிடித்தார், சுமந்திரன் ரணிலுக்காக சட்டத்தரணியாக தோற்றினார் (ஆஜரானார்) என்ற பதில்கள் வேண்டாம்.

பாரிய துரோகம் இழைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் வினைத்திறனான தலைமையை வழங்க தவறியுள்ளார்கள்.

சுமந்திரன் மக்களை பேய்க்காட்டும் அரசியல் செய்கிறார், தாந்தோன்றித்னமாக நடக்கிறார், குறிப்பாக தன்முனைப்புடன் செயல்பட்டு, தனது “அகந்தை”யால், தான்மையால், மமதையால் தமிழர் தரப்புகளை சேர்த்து இயங்கும் ஒரு பக்குவப்பட்ட தலைமையை வழங்க தவறிவிட்டார். 

அதேதான் 3ம் பொன்னம்பலமும்.

தமிழர் தரப்பு கையறு நிலையில் இருப்பதும். பன்னாட்டு சமுகத்தின் நிலைப்பாட்டிலும் இவர்கள் அதிகம் தாக்கம் செலுத்த முடியாது. இவர்கள் அல்ல யாருமே அதிகம் செய்ய முடியாது. ஏற்று கொள்கிறேன்.

ஆனால் 2009 க்கு பின்னான காலத்தில், ஒரு வெளிப்படையான, உள்ளேயும், வெளியேயும் முடிந்தளவு நேச சக்திகளை கூட்டிணைத்து, தாயகத்தை அடிப்படையாக கொண்ட, ஆனால் ஒட்டு-மொத்த டயஸ்போராவையிம் பின்புலமாக கொண்ட ஒரு தமிழர் அரசியல் சக்தியை உருவாக்க வெளி இருந்தது.

அப்படி ஒன்றை ஆக்கி, அதன் மூலம் “பயங்கரவாத” காலத்தை நாம் தாண்டி விட்டோம், என்பதை மேற்கு ஏற்கும் வகை கூட செய்ய வழி இருந்தது (இன்னும் இருக்கிறது).

ஆனால் இந்த சக்தியை ஏற்படுத்த முடியாமல் போனது இவர்களின் குறை மட்டும் அல்ல, போகும் இடம் எல்லாம், இருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளிடம், புலம்பெயர் அமைப்புகளிடம், சொந்த கட்சிக்குள் என சதா சண்டை, பிளவை ஏற்படுத்தும் “சர்ச்சையின் மறுபெயராக” சுமந்திரன் திகழ்வதும், அதை நேர்படுத்த சம்பந்தன் முயலாமையும் ஒரு மிக பெரிய காரணம் ( மாறிவிட்ட கள யதார்த்தம் புரியாத அல்லது ஏற்க விரும்பாத புலம்பெயர் மனிதர்கள், குழப்பம் ஏற்படுத்தும் குப்பாடிகள் இன்னொரு பெரிய காரணம்).

ஆகவேதான் சொல்லிறேன். 

சம்+சும் = கஜேx2 

ஒரு பக்கத்தில் இருக்கும் அத்தனை வழுவும் மறு பக்கத்திலும் உண்டு.

இவர்கள் நால்வரதும் முதலாவது அரசியல் நோக்கம் (1st political priority) ஒரு எம்பி சீட்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

1.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாமல்வைத்திருந்தமை
2.அதன் கூலம் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் அதன் ஆதிக்கத்தில்  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வழிநடத்தியமை.
3.போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து அவரைப்புனிதராக்கியமை.
4.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பேரில் தும்புக்கட்டையை நிறுத்தினாலும் வெல்லும் என்று கூறிமமதையில் மற்றைய கட்சிகளை ஓரங்கட்டியமை.
5. தமிழ்த்தேசியக் கூட்டமைhப்புக்குள் புலிகளால் உள்வாங்கப்பட்டலர்களை வெளியேற்றி புலிகளால் ஓரங்கட்டப்பட்டிருந்த புளொட்>ஆனந்தசங்கரி போன்றோரை உள்வாங்கியமை.
6.2010 இற்குப்பின் கட்சியில் சேர்ந்த சுமத்திரனுக்கு முடிவெடுக்கும் ஏகபோக உரிமையை வழங்கியமை.
7. கட்சிக்காக நீண்'ட காலம் உழைத்தவர்களை ஒதுக்கி பேரினவாதக்கட்சிகளுடன் இணைந்திருந்த சாணக்கியன்.மற்றும் சிறலங்காவின் பிரதிநிதியாக இருந்த அம்பிகா சற்குணநாதன் போன்றோரை உள்வாங்கியமை.
8.வடமாகாணசபை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்சுமத்திரன் சார்பு உறுப்பினர்களால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சிகுள் பிளவுகள் ஏற்படுத்தி பலரை வெளியேற வைத்தமை.
9.யாழ்மாநகரசபைக்குள்ளும் ஆர்னோல்ட் முதல் மணிவண்ணன் வரை பல குழப்பங்கள் உருவாக்கியமை.
10.நல்லாட்சி இவர்களால் வர்ணிக்கப்பட்டு நடந்த ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடன் இருபெரும் மதசியக்கட்சிகள் இணைந்து நடத்திய ஆட்சியில் தீர்வு தொடர்பாக எதுவும் செய்யாமலலும் இலங்கை அரசை அழுத்திக்கொண்டிருந்த ஐநா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல்.
11.அதன்பின்ரான ரணில் அரசின் வரவுசெலவுத்திட்டங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களின் காணி விடுவிப:ப >கைதிகள் விடுதலை போண்ற விடயங்களை க்கூட வலியுறத்தாது வாளாவிருந்தமை.
12.ரணிலின் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் போதும் எதுவித பேரம்பேசல்களும் இன்றி ரணிலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியமை.
13.13 போதும் என்று இந்தியஅரசின்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியமை.
14.மகிந்த பூச்சாண்டியைக்காட்டி எந்த ரணிலுக்கு ஆதரவு வழங்கினார்களோ இன்று அந்த ரணிலும் மகிந்தவும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் இன்னமும் ரணில் மீது நம்பிக்கை வைத்திருப்பது.
15. சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவதற்கு திருட்டுத்தனமாக வாக்களித்தமை.
16.மீண்டும் பேச்சு வார்ததை என்று தொடங்கியிருக்கும் நிலையில்  மற்றைய கட்சிகளுக்குத் தெரியாமல்  பினகதவால் ஜனாதிபதியைச் சந்திச்சமை.
17.இலங்கை கபாருளாதாரத்தில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் சுphவின் ஆதிக்கம் இஙை;கையில் வலுவாகி வருகின்ற சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான பூகோள அரசியலை சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசத்து நெருக்கn டகொடுக்காமல் சிங்களத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை;.18. சம்பந்தர் செயற்பட முடியாத நிலையில் இன்னொருவருக்கு அந்த வாயப்பை விட்டுக்கொடுக்காமலும் பாராளுமனறத்தில் திருகோணமலையின் மக்களின் குரலாக பேசுவதற்கு யாருமே இல்லாமல் வைத்திருத்தல்.
.18. மீண்டும் இந்தியாவை மட்டுமே நம்பியிருத்தல்.
19.பிரிந்து கிடக்கும் கட்சிகளை ஒன்றிணைக்காமல் மேலும பிளவுகள் உண்டாகும் வித்ததில் வருகின்ற ஊள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கட்சியின் அனுமதியில்லாமல் செய்திகளை வெளியிடல்.
20./ தமிழரசுக்கட்சிக்குள்ளே பல பிரிவுகளை உண்டாக்கி உட்கட்சிஜனநாயகமற்ற நிலையில் குழப்பங்களை உருவாக்குதல்.
இன்னும்பல விடயங்கள் இருக்கின்றன.

நல்லதொரு குற்றப்பத்திரிகை

(இதில் சிலதில் எனக்கு மாற்றுகருத்து இருந்தாலும்).

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

பாரிய துரோகம் இழைத்தார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனால் வினைத்திறனான தலைமையை வழங்க தவறியுள்ளார்கள்.

சுமந்திரன் மக்களை பேய்க்காட்டும் அரசியல் செய்கிறார், தாந்தோன்றித்னமாக நடக்கிறார், குறிப்பாக தன்முனைப்புடன் செயல்பட்டு, தனது “அகந்தை”யால், தான்மையால், மமதையால் தமிழர் தரப்புகளை சேர்த்து இயங்கும் ஒரு பக்குவப்பட்ட தலைமையை வழங்க தவறிவிட்டார். 

அதேதான் 3ம் பொன்னம்பலமும்.

தமிழர் தரப்பு கையறு நிலையில் இருப்பதும். பன்னாட்டு சமுகத்தின் நிலைப்பாட்டிலும் இவர்கள் அதிகம் தாக்கம் செலுத்த முடியாது. இவர்கள் அல்ல யாருமே அதிகம் செய்ய முடியாது. ஏற்று கொள்கிறேன்.

ஆனால் 2009 க்கு பின்னான காலத்தில், ஒரு வெளிப்படையான, உள்ளேயும், வெளியேயும் முடிந்தளவு நேச சக்திகளை கூட்டிணைத்து, தாயகத்தை அடிப்படையாக கொண்ட, ஆனால் ஒட்டு-மொத்த டயஸ்போராவையிம் பின்புலமாக கொண்ட ஒரு தமிழர் அரசியல் சக்தியை உருவாக்க வெளி இருந்தது.

அப்படி ஒன்றை ஆக்கி, அதன் மூலம் “பயங்கரவாத” காலத்தை நாம் தாண்டி விட்டோம், என்பதை மேற்கு ஏற்கும் வகை கூட செய்ய வழி இருந்தது (இன்னும் இருக்கிறது).

ஆனால் இந்த சக்தியை ஏற்படுத்த முடியாமல் போனது இவர்களின் குறை மட்டும் அல்ல, போகும் இடம் எல்லாம், இருக்கும் ஏனைய தமிழ் கட்சிகளிடம், புலம்பெயர் அமைப்புகளிடம், சொந்த கட்சிக்குள் என சதா சண்டை, பிளவை ஏற்படுத்தும் “சர்ச்சையின் மறுபெயராக” சுமந்திரன் திகழ்வதும், அதை நேர்படுத்த சம்பந்தன் முயலாமையும் ஒரு மிக பெரிய காரணம் ( மாறிவிட்ட கள யதார்த்தம் புரியாத அல்லது ஏற்க விரும்பாத புலம்பெயர் மனிதர்கள், குழப்பம் ஏற்படுத்தும் குப்பாடிகள் இன்னொரு பெரிய காரணம்).

ஆகவேதான் சொல்லிறேன். 

சம்+சும் = கஜேx2 

ஒரு பக்கத்தில் இருக்கும் அத்தனை வழுவும் மறு பக்கத்திலும் உண்டு.

இவர்கள் நால்வரதும் முதலாவது அரசியல் நோக்கம் (1st political priority) ஒரு எம்பி சீட்.

சுமத்திரனையும் கஜேந்திரகுமாரையும் ஓரெ வண்டியில் பூட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

கோஷான்,

அடிக்கடி சம்பந்தன் சுமந்திரன் இரண்டு பேரும் தமிழினத்துக்குப் பாரிய துரோகம் இழைத்து விட்டதாக எழுதப்பட்டு வருகின்றது. இவர்கள் தமிழினத்துக்கு செய்த பாரிய துரோகங்கள்தான் என்ன?

ஒற்றையாட்சிக்குட்பட்ட இலங்கைப் பாராளுமன்றில் இவர்களால் என்ன செய்துவிட முடியும்? அல்லது பன்னாட்டு சமுகத்தினால் பயங்கரவாதமாக முத்திரை குத்தபட்டு விட்ட எமது போராட்டத்தில் இவர்களின் பங்கு என்ன? அதாவது இவர்கள் இருவரும் தானா இன்னும் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை பயங்கரவாதமாக வைத்துள்ளனர். அதுக்கு வேறு எவரும் காரணம் இல்லையா?

எனக்கு விளங்காமல்தான் கேட்கின்றேன்.

சம்மந்தர் சிங்க கொடி பிடித்தார், சுமந்திரன் ரணிலுக்காக சட்டத்தரணியாக தோற்றினார் (ஆஜரானார்) என்ற பதில்கள் வேண்டாம்.

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வினைதிறனான தலைமையை வழங்க தவறிய குற்றச்சாட்டில் உண்மை உண்டு.  பொறுப்புள்ள,  வயதில் மூத்த தலைவராக சம்பந்தர் இதை செய்வதில் படு தோல்வியடைந்தார் என்றே கூற வேண்டும். ஆனால் இதற்கான முழுக்குற்றாச்சடையும் அவர்கள் மீது மட்டும் போட முடியாது. பொதுவாக தமிழராகிய எம்மிடம் இருக்கும் ஒற்றுமையின்மை என்ற பலவீனம் அவர்களுடமும் இருந்தது. யுத்தம் முடிந்த கையோடு புலம் பெயர் தமிழ் அமைப்புகள் எல்லாம் ஆளுக்கொரு பக்கம் பிரிந்து தம்முள் சண்டையிட்டு கொண்டது போலான நிகழ்வுதான் அது. இன்றும் அது தொடர்கிறது. 

 கஜேந்திரகுமாரால்  அவரின் மூன்று தலைமுறை அரசியல் பாரம்பரியத்தைக்கொண்டு அதனைச் சிறப்பாக செய்திருக்க முடியும். ஆனால் படு மோசமான காழ்புணர்வு அரசியலையே அவர் தொடந்தும் செய்துவருகிறார்.  

 தற்போதைய நிலைக்கு அனைத்து  தமிழ்கட்சிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் எல்லாம் கூட்டுப்பொறுப்பை ஏற்க வேண்டும். அந்த கூட்டுப்பொறுப்பை ஏற்க தயாரில்லாத மோசமான அரசியல் தான் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுவே தமது  குற்றங்களை மறைக்க  ஆளையாள் குற்றம் சாட்டும் இந்த நிலை.  

எல்லோரும் தான் விசுவாசம் வைத்திருக்கும் தலைவரக்ளை, அமைப்புகளை, கட்சிகளை மட்டும் காப்பாற்றும்,  முண்டு கொடுக்கும் அரசியலே தற்போதைய தமிழ் அரசியல். அதுவே இங்கு யாழ் களத்திலும் பிரதிபலிக்கிறது. 

25 minutes ago, புலவர் said:

சுமத்திரனையும் கஜேந்திரகுமாரையும் ஓரெ வண்டியில் பூட்ட முடியாது.

ஏனென்றால் இரண்டுமே குதிரைகள் அல்ல ஒரே குணத்தை கொண்ட கழுதைகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.