Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு  கூட்டத்தின் போது  பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே  தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://athavannews.com/2023/1319053

  • Replies 148
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ...தலைவர் யார்  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

அப்போ...தலைவர் யார்  🤣

மாவையார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

மாவையார். 😂

அந்த மனுசன் நடக்கவே ஏலாமல் கிடக்க, இதில நீங்க வே..🤣

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களை கொலைக்களத்தில் பலியிட்ட மகிந்த ராஜபக்ஸவின் கைகளிலிருந்த இரத்தவாடை அகலாதபோது அவனது கைகளைக் குலுக்கி பிள்ளையானுடன் சேர்ந்து கிழக்கில் கொலைக்களமாடிய சாணாக்கியன் தந்தை செல்வாவால் வளத்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கு உபதலைவரக வருவது தமிழினத்தில் சாபக்கேடு

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அந்த மனுசன் நடக்கவே ஏலாமல் கிடக்க, இதில நீங்க வே..🤣

அப்போ..... உங்கள் தெரிவு யார்? சுமந்திரனை தெரிவோமா? சம்பந்தன் தலைவராக இருக்கும்போது இவர் இருந்தால் என்ன உடைந்தா போய் விடும் கதிரை?  இவர்கள் என்ன சாதிக்கவா போகிறார்கள், கதிரையில் ஒட்டிக்கொண்டு இருக்கத்தானே போகிறார்கள்,  கதிரைக்குத்தானே பாரம்? இருந்துவிட்டுப்போகட்டுமேன்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

அத்திவாரம் போட தொடங்கியாச்சு.....கிட்டடியிலை முகடும் வைச்சிடுவினம் 😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 தலைவராக இருக்கும்போது இவர் இருந்தால் என்ன உடைந்தா போய் விடும் கதிரை?  இவர்கள் என்ன சாதிக்கவா போகிறார்கள், கதிரையில் ஒட்டிக்கொண்டு இருக்கத்தானே போகிறார்கள்,  கதிரைக்குத்தானே பாரம்? இருந்துவிட்டுப்போகட்டுமேன்? 

அது 👆

சாத்தானா கொக்கா 😀

  • கருத்துக்கள உறவுகள்

 

4 hours ago, Elugnajiru said:

முள்ளிவாய்க்கால் அவலத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர் உயிர்களை கொலைக்களத்தில் பலியிட்ட மகிந்த ராஜபக்ஸவின் கைகளிலிருந்த இரத்தவாடை அகலாதபோது அவனது கைகளைக் குலுக்கி பிள்ளையானுடன் சேர்ந்து கிழக்கில் கொலைக்களமாடிய சாணாக்கியன் தந்தை செல்வாவால் வளத்தெடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கு உபதலைவரக வருவது தமிழினத்தில் சாபக்கேடு

 

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது.  கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, karu said:

 

 

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது.  கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை.. 

செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, karu said:

 

 

என்னது? சாணக்கியன் பிள்ளையனுடன் சேர்ந்து கொலைக்களமாடினாரா? எங்கே எப்போது.  கையிருப்பதற்காக மலத்தையள்ளிப் பிறரில் வீசலாமா.  சாணக்கியன் தமிழ்த்தேசியப் பரம்பரையில் வந்தவர்.  அவரது பாட்டனார் தந்தை செல்லவாவுடன் இணைந்து தமிழரசுக் கோட்பாட்டை வளர்த்தெடுத்தவர்.   சிலருக்குச் செக்கும் தெரிவதில்லை சிவலிங்கமும் தெரிவதில்லை.  எல்லாவற்றுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் ஆட்களைக் கொண்டுவரவேண்டுமா?

சாணக்கியன் சுதந்திரக்கட்சியில் இருந்தபோது கிழக்கில் பிள்ளையான் ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளை சாணக்கியனுக்குத் தெரியாது கிழக்கில் எதுவும் நடக்கச் சாத்தியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2023 at 14:43, தமிழ் சிறி said:

மாவையார். 😂

அவர் தான்  தற்போதும் தலைவர்..........கேட்டது  புதிய தலைவர் யார்  ? 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Elugnajiru said:

சாணக்கியன் சுதந்திரக்கட்சியில் இருந்தபோது கிழக்கில் பிள்ளையான் ராஜபக்சக்களின் செல்லப்பிள்ளை சாணக்கியனுக்குத் தெரியாது கிழக்கில் எதுவும் நடக்கச் சாத்தியமில்லை

சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது  குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை.  ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது.  அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது.  மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

சாணக்கியன் குடும்பம் பல தியாகங்களைச் செய்த குடும்பம்.  அவரின் பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் இந்திய அமைதிப் படையினரால் அனியாயமாகக் கொல்லப்பட்டார்.   தனது மனைவியுடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட   இந்திய இராணுவச் சிப்பாயைத் தாக்கித் தடுக்கமுற்பட்ட குற்றத்திற்காகவே அவர்மீது அந்தக் கொலைவெறித் தாக்குதல் கொடிய இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சும்மா கிழக்கைச் சேர்ந்தவர் என்ற காழ்ப்புணர்வில் சாணக்கியன்மீது பலர் ஏதாவது ஒரு சாக்கை வைத்து மலத்தையள்ளி வீசமுற்படுகிறார்கள்.   ஆனால் இன்றுள்ள இளந்தலைவர்களுள் மிகவும் தகுதிவாய்ந்த தமிழ் அரசியல்வாதி சாணக்கியனாவார்.  மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கும்வரை எந்த பொறாமை பிடித்த பிரதேச வெறியர்களாலும் அவரை அசைக்க முடியாது.  சும்மா குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

வழிவிடாது குறுக்கே நின்றபடியால் சிங்கள அருவருடியாகி ரவுடியாகியது தமிழ் தேசியத்தை காக்க என்ற உங்கள் குரைப்பை ஊரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிரதேசவாதத்தை வாந்தி எடுக்க வேண்டாம். திருகோணமலையைச் சார்ந்த சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக்கியது புலிகள். இன்றுவரை தொடர்கிறார்.

சிலவேளை திருகோணமலை கிழக்கில் இல்லையோ🤔

இந்த பெரியப்பா சித்தப்பா விடயங்கள் வடக்கிலும் நடந்துள்ளது, உங்களால் கழட்டி விடப்பட்ட திருகோணமலையிலும் நடந்துள்ளது.

எப்ப பார்த்தாலும் மலத்தோடேயே ……

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

வழிவிடாது குறுக்கே நின்றபடியால் சிங்கள அருவருடியாகி ரவுடியாகியது தமிழ் தேசியத்தை காக்க என்ற உங்கள் குரைப்பை ஊரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிரதேசவாதத்தை வாந்தி எடுக்க வேண்டாம். திருகோணமலையைச் சார்ந்த சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக்கியது புலிகள். இன்றுவரை தொடர்கிறார்.

சிலவேளை திருகோணமலை கிழக்கில் இல்லையோ🤔

இந்த பெரியப்பா சித்தப்பா விடயங்கள் வடக்கிலும் நடந்துள்ளது, உங்களால் கழட்டி விடப்பட்ட திருகோணமலையிலும் நடந்துள்ளது.

எப்ப பார்த்தாலும் மலத்தோடேயே ……

சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள்.  புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள்.    தக்க உதாரணங்கள்  காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, karu said:

சாணக்கியன் அரசியலுக்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் தமிழர் தரப்பிலிருந்த பலர் அவருக்கு வழிவிடாது  குறுக்கே நின்றார்கள் அதனால் அவரால் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைய முடியவில்லை.  ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி இதைச் சாதகமாக்கி அவரை உள்ளிழுத்தது.  அதனால் இளம் அரசியல் வாதியான அவர் தவிர்க்க முடியாமல் அவர்களுடன் இணைந்து சிலகாலம் செயலாற்ற வேண்டியிருந்தது.  மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

சாணக்கியன் குடும்பம் பல தியாகங்களைச் செய்த குடும்பம்.  அவரின் பெரியப்பா சக்கரவர்த்தி இராசமாணிக்கம் இந்திய அமைதிப் படையினரால் அனியாயமாகக் கொல்லப்பட்டார்.   தனது மனைவியுடன் அநாகரிகமாக நடக்க முற்பட்ட   இந்திய இராணுவச் சிப்பாயைத் தாக்கித் தடுக்கமுற்பட்ட குற்றத்திற்காகவே அவர்மீது அந்தக் கொலைவெறித் தாக்குதல் கொடிய இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டது. சும்மா கிழக்கைச் சேர்ந்தவர் என்ற காழ்ப்புணர்வில் சாணக்கியன்மீது பலர் ஏதாவது ஒரு சாக்கை வைத்து மலத்தையள்ளி வீசமுற்படுகிறார்கள்.   ஆனால் இன்றுள்ள இளந்தலைவர்களுள் மிகவும் தகுதிவாய்ந்த தமிழ் அரசியல்வாதி சாணக்கியனாவார்.  மக்கள் செல்வாக்கு அவருக்கு இருக்கும்வரை எந்த பொறாமை பிடித்த பிரதேச வெறியர்களாலும் அவரை அசைக்க முடியாது.  சும்மா குரைத்துவிட்டுப் போகவேண்டியதுதான்.

கரு அவர்களே,

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் தனக்கான அரசியல்தளம் இல்லாதபோது தமிழினத்தை இல்லாதொழிக்கிறேன்பேர்வழி எனக்கோசமிட்டு அதையே செய்த தம்ன எதிரிகளுடன் சேர்ந்து அரசல் செய்யப் புறப்பட்டவர் சாணாக்கியன் எனக்கூறுகிறீர்கள் உங்களுக்கு எபடி இந்தமாதிரிக்கூற மனம் வருகிறது?

சாணாக்கியனது கூட்டமைப்புக்குள்ளான வரவு என்பது ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்கான வரவாகும் அதாவது விஜாளேந்திரனது கூட்டமைப்பைவிட்டு வெளியேற்றம்தான் சாணாக்கியனை உள்வாங்கியது அல்லது சாணாக்கியன் உள்நுளையச் சந்தர்ப்பம் தந்தது மகிந்தவுடன் இணைந்திருக்கும்போது சாணாக்கியனுக்கு இருந்த தனிப்பட்ட வாக்குகள் மற்றும் விஜாளேந்திரனது வெளியேற்றத்தின் பின்னால் கூட்டமைப்பின் வாக்குகள் ஆகியவற்றைக் குறிவைத்தே சாணாக்கியன் உள் நுழைக்கப்பட்டார், தவிர சிங்களம் தனது நிகழ்சி நிரலை முன்னிறுத்த சுமந்திரனை எப்படி கூட்டமைப்புக்குள் நுழைத்ததோ அதன்பின்னரான சுமந்திரனின் தகிடுதித்தப்க்களால் தமிழர் மத்தியில் அவர் செல்லாக்கசாகிப்போகும்போது சாணாக்கியனது உள்நுழைவினான் சிங்களம் தனது நிகழ்சிநிரலைத் தங்குதடையின்றித் தொடரவே சிங்களத்தால் உள்நுளைக்கப்பட்டார். 

சிங்களத்தில் முழக்கமிடுவது கண்டித்திருத்துவக் கல்லூரியில் படித்த ஆங்கிலத்தில் முழங்குவது தமிழின் தனிநாடு எனக் கத்துவது இவைகளை ரஜனி கமல் அஜித் வஜை போன்ற நடிகர்களது விசிலடித்தான் ரசிகர்கள்போல் புழுகுவதை நிறுத்துங்கோ.

சுமந்திரனது வண்டவாளம் எப்படி வெளுத்துப்போனதோ அதேபோல் சிங்களத்தின் சிலீப்பர் செல் சாணாக்கியனது வண்டவாளமும் வெளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, karu said:

மக்கள் மத்தியில்  உரிய செல்வாக்கை அவர் தனது முயற்சியினால் தேடிக்கொண்ட போது, சம்பந்தர் போன்ற தமிழ் தேசியத் தலைவர்கள் அவரின் தகுதியையுணர்ந்து தமக்குள் உள்வாங்கிக் கொண்டார்கள்.

அதாவது முன்னைய கட்சியில் இருந்த மக்களின் செல்வாக்கை உதறித்தள்ளி, தளமைத்து கொடுத்த கட்சியை விட்டு வந்தவர், நாளைக்கே வேறொரு கட்சிக்கு தாவமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சஜித்தோடும் தாவலாம். சுமந்திரன் சொன்னார் "சாணக்கியன் இன்னும் மஹிந்தவுடன் தொடர்பிலிருக்கிறார் என" இது சாதாரண தொடர்பாயிருந்தால் அதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்? 

On 7/1/2023 at 09:27, குமாரசாமி said:

அத்திவாரம் போட தொடங்கியாச்சு.....கிட்டடியிலை முகடும் வைச்சிடுவினம் 😎

ஆங் ..... அது சுமந்திரனின் வேலை. சுமந்திரன்தான் இவரை கூட்டமைப்புக்குள் நுழைத்தது என்று கதை, பொறுத்திருந்து பாப்போம் முடிவை. முந்துவது யார் என்று?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

வழிவிடாது குறுக்கே நின்றபடியால் சிங்கள அருவருடியாகி ரவுடியாகியது தமிழ் தேசியத்தை காக்க என்ற உங்கள் குரைப்பை ஊரிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்ந்து பிரதேசவாதத்தை வாந்தி எடுக்க வேண்டாம். திருகோணமலையைச் சார்ந்த சம்பந்தனை கூட்டமைப்பின் தலைவராக்கியது புலிகள். இன்றுவரை தொடர்கிறார்.

சிலவேளை திருகோணமலை கிழக்கில் இல்லையோ🤔

இந்த பெரியப்பா சித்தப்பா விடயங்கள் வடக்கிலும் நடந்துள்ளது, உங்களால் கழட்டி விடப்பட்ட திருகோணமலையிலும் நடந்துள்ளது.

எப்ப பார்த்தாலும் மலத்தோடேயே ……

சும்மா ஏதோ காழ்ப்புணர்ச்சியில் பெரிய அரசியல்வாதி யென்ற எண்ணத்தில் குரைக்கிறீர்கள்.  புனைபெயருக்குள் ஒழிந்துகொண்டு உங்கள் பொறாமை பிடித்த அரசியல் வெறிக்குத் தீனி தேடுகிறீர்கள்.    தக்க உதாரணங்கள்  காரணங்களோடு சாணக்கியன் தமிழர்களுக்கு இழைத்த துரோகங்களைப் பட்டியலிடுங்கள்.  சாணக்கியனின் ஆதரவாளர்கள் அதற்குப் பதில் கூறுவார்கள்.  சாணக்கியனுக்கு  இருக்கும் செல்வாக்கு அவரது செயற் திறனால் ஏற்பட்டது.  ஊரில் வைத்து மட்டுமல்ல உலகத்திலும் இக்கருத்தை முன்வைக்கலாம்.   உங்கள் எழுத்தே உங்கள் பிரதேச வாதத்தை வாந்தியெடுக்கிறது.   அதை உங்கள் ஊரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

Edited by karu
சில விடயங்கள சேர்க்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

அதாவது முன்னைய கட்சியில் இருந்த மக்களின் செல்வாக்கை உதறித்தள்ளி, தளமைத்து கொடுத்த கட்சியை விட்டு வந்தவர், நாளைக்கே வேறொரு கட்சிக்கு தாவமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? சஜித்தோடும் தாவலாம். சுமந்திரன் சொன்னார் "சாணக்கியன் இன்னும் மஹிந்தவுடன் தொடர்பிலிருக்கிறார் என" இது சாதாரண தொடர்பாயிருந்தால் அதை ஏன் குறிப்பிட்டு சொல்கிறார்? 

ஆங் ..... அது சுமந்திரனின் வேலை. சுமந்திரன்தான் இவரை கூட்டமைப்புக்குள் நுழைத்தது என்று கதை, பொறுத்திருந்து பாப்போம் முடிவை. முந்துவது யார் என்று?

டியர் சாத்தான்! சும்மா ஊகங்களை முன்வைத்து அரசியல் அலம்பல்களைச் செய்யாதீர்கள்.   ஏதாவது உருப்படியான கருத்துகள் நிரூபணங்களிருந்தால்  அதை முன்வைத்து சாணக்கியன்மீது பழிபோடுங்கள்.  முன்பும் இவ்வாறே அன்ரன் பாலசிங்கம் அண்ணரைச் சில அரை வேக்காடுகள் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதால் பழிபோட முற்பட்டார்கள்.   ஆனால் தேசியத்தலைவரிடம் இத்தகைய குறுகிய மனப்பான்மை கிடையாததால் அவர்களின் பழிபோடல்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

அரை வேக்காடுகள் குரைப்புகள் மலம் வீசுதல் காழ்ப்புணர்ச்சி புனை பெயர் எல்லாம் உங்களுக்கே பொருந்துகிறது.

மகிந்த கூட்டாளிகளின் செல்லப்பிள்ளையாக இருந்து அவர்களின் கொலைவெறித்தாண்டவங்களுக்கு உடந்தையாக இருந்தவரை உங்களை போல் காழ்ப்புணர்ச்சி கொண்ட அரை வேக்காடுகள் குரைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு மலம் அள்ளி வீசுவதாக நினைத்துக் கொண்டு தங்களின் முகத்திலேயே பூசிக் கொள்கிறீர்கள்.

இங்கு பிரதேசவாதத்தை கையில் எடுத்தது தாங்கள்.

திருகோணமலை கிழக்கா இல்லையா என்று கூட உங்களுக்கு தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, karu said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணரைச் சில அரை வேக்காடுகள் அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவரென்பதால் பழிபோட முற்பட்டார்கள்.   ஆனால் தேசியத்தலைவரிடம் இத்தகைய குறுகிய மனப்பான்மை கிடையாததால் அவர்களின் பழிபோடல்கள் செல்லாக்காசாகிப் போய்விட்டன.

யார் அன்ரன் பாலசிங்கம் மீது பழிபோட்டார்கள்? தலைவர் தேர்ந்தெடுத்தார் எல்லோரும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டார்கள். அப்படியானால் வி. முரளிதரன் எவ்வாறு தளபதியானார்? அப்போ தலைவர் யார்? நாங்கள் தமிழர் என்றே எல்லோரையும் கருதுகிறோம், யார் தவறு விடும்போதும் விமர்சிக்கிறோம், அதில் வேறுபாடு இல்லை. தவறை மட்டுமே சுட்டுகிறோம். அதை நீங்கள் பிரதேசமாக்கினால் அது உங்களில் ஏதோ தவறு. அப்படியானவர்களோடு கருத்து பரிமாற நான் தயாராயில்லை. நன்றி, வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

அரை வேக்காடுகள் குரைப்புகள் மலம் வீசுதல் காழ்ப்புணர்ச்சி புனை பெயர் எல்லாம் உங்களுக்கே பொருந்துகிறது.

👆நானும் இதைத்தான் சொல்ல நினைத்தேன். புனை பெயரிலேயே (கரு..) தெரிகிறதே பிரதேச வாதம் பற்றி குரைப்பவரின் யோக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

இங்கு பிரதேசவாதத்துக்குள் திணிக்கிறார்கள், நாங்கள் யாரும் அதை தேடவுமில்லை, சொல்லவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

குசா அண்ணை, இது கொஞ்சம் ஓவர்!!🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.