Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. 
ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், 
சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂

சுந்தரம்  பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். 
அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂

இதே மாதிரி பருத்தித்துறை வீதி அரசடியில் பிரிந்து கந்தர்மடம் நோக்கி செல்கிறது.

  • Replies 50
  • Views 5.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது..  இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்ச

  • அண்ணா, பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே மாதிரி பருத்தித்துறை வீதி அரசடியில் பிரிந்து கந்தர்மடம் நோக்கி செல்கிறது.

ஈழப்பிரியன்… ஆம் பருத்தித்துறை வீதி, அரசடி வீதியிலும் இதே போல் இடம் உள்ளது.
ஆனால் பிரபா சிதம்பரநாதன் இணைத்த படத்தில் உள்ள சுந்தரம் பிறதர்ஸ் விளம்பரத்தை 
பெரிதாக்கி பார்க்க அதில்.. மணல்தறை லேன், கந்தர்மடம் என்று உள்ளது.
ஆன படியால் இது… பலாலிவீதி, பழம்வீதியில் உள்ள ஆலடி சந்தி. 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்… ஆம் பருத்தித்துறை வீதி, அரசடி வீதியிலும் இதே போல் இடம் உள்ளது.
ஆனால் பிரபா சிதம்பரநாதன் இணைத்த படத்தில் உள்ள சுந்தரம் பிறதர்ஸ் விளம்பரத்தை 
பெரிதாக்கி பார்க்க அதில்.. மணல்தறை லேன், கந்தர்மடம் என்று உள்ளது.
ஆன படியால் இது… பலாலிவீதி, பழம்வீதியில் உள்ள ஆலடி சந்தி. 🙂

பழம்வீதி போய் அம்மன் றோட்டில ஏறும், முந்தி இந்த சந்தியில இந்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் முயற்சியின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் நினைவுத் தூபி இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

பழம்வீதி போய் அம்மன் றோட்டில ஏறும், முந்தி இந்த சந்தியில இந்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் முயற்சியின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் நினைவுத் தூபி இருந்தது. 

பழம் வீதி ஆலடிச் சந்தியில தொடங்கி அரசடி வீதியில் முடியும். பிறகு வலப்பக்கமாக கொஞ்சத் தூரம் போக கந்தபுராண வீதி வரும் அதுதான் அம்மன் வீதிக்குப் போகும். 

பழம் ரோட் அரசடியில் சந்திக்கிற இடத்தில் தான் இந்தியப் படைகளுடனான மோதலில் லெப். கேர்ணல் மதி அவர்கள் வீரச்சாவு அடைந்தவர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. 
ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், 
சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂

சுந்தரம்  பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். 
அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂

எனக்கு இந்த இடம் அதிகம் பழக்கமில்லை.. ஆனால் இந்த வழியால் போவதுண்டு.. அப்படித்தான் ஒரு நாள்  போகும் பொழுது புதுசா சிவனின் சிலையைக் கண்டதும் ஒரு கிளிக்.. ஏனெனில் 2022வரை இந்த இடத்தில் சிலை இல்லை 

எனக்கு இதனை ஆலடிச் சந்தி எனக்கூறுவதும் தெரியாது ஹெட்டப்போல் (slingshot🤔) சந்தி எனத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன் .. தவறாகவும் இருக்கலாம்😊

நன்றி சிறி அண்ணா!

6 hours ago, நந்தன் said:

பழம்வீதி போய் அம்மன் றோட்டில ஏறும், முந்தி இந்த சந்தியில இந்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் முயற்சியின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் நினைவுத் தூபி இருந்தது. 

 

5 hours ago, வாலி said:

பழம் வீதி ஆலடிச் சந்தியில தொடங்கி அரசடி வீதியில் முடியும். பிறகு வலப்பக்கமாக கொஞ்சத் தூரம் போக கந்தபுராண வீதி வரும் அதுதான் அம்மன் வீதிக்குப் போகும். 

பழம் ரோட் அரசடியில் சந்திக்கிற இடத்தில் தான் இந்தியப் படைகளுடனான மோதலில் லெப். கேர்ணல் மதி அவர்கள் வீரச்சாவு அடைந்தவர்!

நன்றி நந்தன் அண்ணா & வாலி

எனக்கு எல்லாமே புதிதாகவே உள்ளது.. ஆனால் வீதிகளின் பெயர் தெரியாவிட்டாலும் படிக்கும் பொழுது இந்த இடங்களில் உலாவி இருக்கிறேன். 

இப்ப புது சிவன் வீதி என்று ஒன்று வந்துள்ளது.. பழைய பெயர் தெரியாது. பரமேஸ்வர சந்தியால் இடது பக்கம் திரும்பி சிவன் அம்மன் கோவில்களைத் தாண்டியவுடன் வரும் வீதிக்குத்தான் புதிய சிவன் வீதி எனப் பெயர் வைத்துள்ளார்கள். இந்த வீதி வந்து பாரதியார் சிலைக்கு முன்பாக முடியும். 
 

இந்தச் சிவன் வீதியில்தான் சிவரதனின் உருசிச்சட்டியும் உள்ளது. ஆனால் நான் நிற்கும் வரையிலும் இங்கே போய் உணவின் ருசியைப் பார்க்கமுடியவில்லை. உணவகம் பூட்டியிருந்தது. உருசிச்சட்டியின் படமும் உள்ளது, பின்பு ஒருநாள் இணைக்கிறேன். 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நந்தன் said:

பழம்வீதி போய் அம்மன் றோட்டில ஏறும், முந்தி இந்த சந்தியில இந்திய ராணுவத்துக்கு எதிரான தாக்குதல் முயற்சியின் போது வீரச்சாவடைந்த போராளிகளின் நினைவுத் தூபி இருந்தது. 

 

18 hours ago, வாலி said:

பழம் வீதி ஆலடிச் சந்தியில தொடங்கி அரசடி வீதியில் முடியும். பிறகு வலப்பக்கமாக கொஞ்சத் தூரம் போக கந்தபுராண வீதி வரும் அதுதான் அம்மன் வீதிக்குப் போகும். 

பழம் ரோட் அரசடியில் சந்திக்கிற இடத்தில் தான் இந்தியப் படைகளுடனான மோதலில் லெப். கேர்ணல் மதி அவர்கள் வீரச்சாவு அடைந்தவர்!

 

13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு இந்த இடம் அதிகம் பழக்கமில்லை.. ஆனால் இந்த வழியால் போவதுண்டு.. அப்படித்தான் ஒரு நாள்  போகும் பொழுது புதுசா சிவனின் சிலையைக் கண்டதும் ஒரு கிளிக்.. ஏனெனில் 2022வரை இந்த இடத்தில் சிலை இல்லை 

எனக்கு இதனை ஆலடிச் சந்தி எனக்கூறுவதும் தெரியாது ஹெட்டப்போல் (slingshot🤔) சந்தி எனத்தான் கேள்விப்பட்டிருக்கிறேன் .. தவறாகவும் இருக்கலாம்😊

நன்றி சிறி அண்ணா!

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

எல்லாரும்... நம்ம ஏரியாவிலை உலாவி இருக்கின்றார்கள். 😂

ஆலடி சந்தியை... கெற்றப்போல் சந்தி என்றும் சொல்வார்கள்.
அந்த இடத்தில்தான்... @nilminiயின் வீடும் உள்ளது. 

முன்பு அந்த ஆலமரம் பெரிதாக வளர்ந்து சடைத்து நிற்கும்.
இப்போ... அதன் கொப்புகளையும் வெட்டி, 
அசிங்கப் படுத்தி வைத்திருப்பதை பார்க்க கவலையாக உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 02:20, பிரபா சிதம்பரநாதன் said:

ஹெட்டப்போல் (slingshot🤔)

Slingshot என்பது சரியே. Catapult உம் ஆங்கில வார்த்தைதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2023 at 00:58, தமிழ் சிறி said:

எல்லாரும்... நம்ம ஏரியாவிலை உலாவி இருக்கின்றார்கள். 😂

 

அப்படித்தான் நினைக்கிறேன். 

On 25/2/2023 at 10:42, goshan_che said:

Slingshot என்பது சரியே. Catapult உம் ஆங்கில வார்த்தைதான். 

Catapult என்றது ஹெற்றபோல் ஆகிவிட்டது..

நன்றி Goshan!!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Catapult என்றது ஹெற்றபோல் ஆகிவிட்டது..

நன்றி Goshan!!

ஓம். இப்படி கனக்க இருக்கு. ஊரில் சைக்கிள் வச்சிருந்தா…

போக், ப்ரிவீல், சொக்கச்சோவர் போன்ற பதங்களை கேட்டிருப்போம்…..

அவை முறையே…fork, freewheel, shock absorber ஆகும்.

பிகு

படங்களை தொடரவும்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

90களில் அம்மன் றோட்டும் பழம் றோட்டும்(கந்தபுராணவீதி) சந்திக்கும் சந்தியில் ஒரு கடை இருந்தது. யாருக்கும் தெரியுமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

C634-A9-AA-DCFB-4-D91-8567-164-C04741-C0
முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்..

488-F10-FD-A2-A7-4958-9-BB2-82-FBBD980-D

கன்பரா - ஒரு கட்டிடத்தில்

இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. 

15 hours ago, நந்தன் said:

90களில் அம்மன் றோட்டும் பழம் றோட்டும்(கந்தபுராணவீதி) சந்திக்கும் சந்தியில் ஒரு கடை இருந்தது. யாருக்கும் தெரியுமோ

எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. 

ஒரு நவம்பர் மாதத்தில் பொப்பியையும், காந்தழையும் ஒப்பிட்டு என் மகனுக்கு நான் எழுதிய கவிதை கீழே 🙏🏾.

நினைவு மாதம்

 

மகனே,

 

போர் இடர் மிகுந்து

மானிடர் மடிந்து

வானது பிழந்து

வல்குண்டு வீழ்கையில்

 

தான் - அதை மறந்து

தன்னினம் நினைந்து

பூத்திடும் புன்னைகை சூடி

 

சா - அதை துணிந்து

செருக்களம் புகுந்து

சாக்களம் ஏகிய செல்வர்கள்

 

வானுள்ள வரைக்கும்

வையகம் வாழ்த்தும்

 

வயதில்லா வாலிபர் அவர்தாம்.

 

இதில் 

கசகசா ஒன்றே

காந்தழும் அதுவே

வீரமும், தியாகமும் ஒன்றே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

C634-A9-AA-DCFB-4-D91-8567-164-C04741-C0
முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்..

488-F10-FD-A2-A7-4958-9-BB2-82-FBBD980-D

கன்பரா - ஒரு கட்டிடத்தில்

இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. 

எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது.. 

கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…!

என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசிய பூவைப் பார்க்க சந்தோசமாக உள்ளது.
இணைப்புக்கு நன்றி சகோதரி.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 21:43, நந்தன் said:

90களில் அம்மன் றோட்டும் பழம் றோட்டும்(கந்தபுராணவீதி) சந்திக்கும் சந்தியில் ஒரு கடை இருந்தது. யாருக்கும் தெரியுமோ

நந்தன்...  நான் இருந்த காலங்களில், அவ்விடத்தில் கடை இருக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 28/2/2023 at 05:28, goshan_che said:

வானுள்ள வரைக்கும்

வையகம் வாழ்த்தும்

 

வயதில்லா வாலிபர் அவர்தாம்.

 

இதில் 

கசகசா ஒன்றே

காந்தழும் அதுவே

வீரமும், தியாகமும் ஒன்றே.

இரண்டுமே நினைவிற்கான குறியீடாக காட்டி ஒற்றுமையாக இருந்தாலும் கசகசாவைப் போற்றுபவர்கள் காந்தளினையும் போற்றும் காலம் வராதா! என நினைப்பதுண்டு.. 

வருகைக்கும் கவிதைக்கும் நன்றி Goshan..

On 28/2/2023 at 11:18, புங்கையூரன் said:

கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…!

என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!

காகிதப்பூக்கள் என்றாலும் கூட அவர்கள் அவற்றை பேணிப் பாதுகாக்கும் நிலை எங்களைவிட வித்தியாசமானதே....

கண்ணீர்ப் பூக்களாகிய காந்தளை நாங்கள் எப்படி நினைவூறுகின்றோம்?

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்திற்கும்

On 28/2/2023 at 11:49, ஈழப்பிரியன் said:

எமது தேசிய பூவைப் பார்க்க சந்தோசமாக உள்ளது.
இணைப்புக்கு நன்றி சகோதரி.

கொஞ்ச காலத்திற்கு முன்பு Canberraவில் உள்ள Australian War Memorial Museumத்திற்கு சென்றிருந்த பொழுது அங்கே சுவரில் பதிக்கப்பட்டிருந்த காதிக கசகசா பூக்களைப் பார்த்தவுடன் எனக்கு காட்டில் பூத்திருக்கும் எங்களது காந்தளே நினைவுற்கு வந்தது.. 

நன்றி அங்கிள் வருகைக்கும் கருத்திற்கும்.. 

அண்மையில் முள்ளிவாய்க்கலிற்கு போயிருந்த பொழுது வீதியோரத்தில் காந்தள் கொடி ஒன்றை வளர்ந்துவரும் பனையின் ஓலைகள் மூடி மறைத்து இருந்த காட்சி..

5-DF07923-D29-B-4790-8-D2-B-27-E5-FDCD64

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா .....கந்தளைப் பாதுகாக்க வடலியைவிட வேறேதும் உண்டோ .......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

ஆஹா .....கந்தளைப் பாதுகாக்க வடலியைவிட வேறேதும் உண்டோ .......!   👍

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவி அண்ணா!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

ஆஹா .....கந்தளைப் பாதுகாக்க வடலியைவிட வேறேதும் உண்டோ .......!   👍

அந்த வடலிக்கை இருந்ததையே பிரபாவின் கமராக்குள் அமுக்கி விட்டாவே.கெட்டிக்காரி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2023 at 22:50, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. 

நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!!

அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. 

உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 

முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. 

large.736CF981-49B5-4E9B-B1D4-65E9D669CD9C.jpeg.b42154c85c2b841306d1369adad166fa.jpeg

31613-A29-1-EF5-45-E3-90-C3-056-A710-B36

இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்..

படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். 

நன்றி..

மாதகல் மயிலிட்டி தொண்டமானாறு கரையோரமாக செல்லும் இந்து சமுத்திரத்தின் உப்புக்காற்றை கொண்டுவரும் வீதி வழி சென்று உள்ளேன். மிக மோசமான நிலையில் வீதி உள்ளது. நிறைய திருத்த வேலைகள் செய்யவேண்டும். வாகனத்தில் சென்று ஆசனம் புளிக்கின்றது. கிட்டத்தட்ட அந்த கரையோரம் முழுவதும் இப்படியான காட்சிகள் தொடரும். 

On 14/2/2023 at 07:50, பிரபா சிதம்பரநாதன் said:

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

 

இந்த பெரிய பிரபஞ்சம் எல்லைகள் இன்றி எவ்வளவு பரந்து விரிந்துள்ளது. சற்று உன் கண்களை அகலத்திறந்து பார்த்து, உணர்ந்து அமைதி கொள்வாய் மனிதா!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2023 at 19:34, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. 

இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. 

0-D5-B4327-29-AB-45-A1-9-E73-67-ADB4-A33

சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. 

இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று.. 

large.79170989-144E-4607-855F-38869E4EA494.jpeg.64fe869ab7deca33ef5ee7ea84834764.jpeg

 

மணல்வெளியை பார்த்தாலே மிதிவெடிகள், நேவி போர்ட், ஷெல் குண்டுகள், அடிபாடு இவைதான் கண் முன் முதலில் வருகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

ம் நன்றாக இருக்கிறது தொடரட்டும் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

பாராட்டுகள் பிரபா சிதம்பரநாதன்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 2/3/2023 at 15:03, ஈழப்பிரியன் said:

அந்த வடலிக்கை இருந்ததையே பிரபாவின் கமராக்குள் அமுக்கி விட்டாவே.கெட்டிக்காரி.

கெட்டிக்காரியோ இல்லையோ தெரியாது ஆனால் என்னோடு வந்தவர்களுக்கு ஏன்டா இவளோடு வந்தோம் என்றளவிற்கு காடுமேடு எல்லாம் சுத்தவைத்துவிட்டேன்😊

எப்பொழுதும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி அங்கிள்!

On 16/3/2023 at 02:12, நியாயத்தை கதைப்போம் said:

 

மணல்வெளியை பார்த்தாலே மிதிவெடிகள், நேவி போர்ட், ஷெல் குண்டுகள், அடிபாடு இவைதான் கண் முன் முதலில் வருகின்றன. 

அப்படியானால் இந்த இடத்திற்குப் போனால் இன்னமும் நிறையே கண்முன் வரும்.. 

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

958-B5-AAF-9522-4-A87-945-B-C9-AFC7-B33-

On 16/3/2023 at 02:04, நியாயத்தை கதைப்போம் said:

இந்த பெரிய பிரபஞ்சம் எல்லைகள் இன்றி எவ்வளவு பரந்து விரிந்துள்ளது. சற்று உன் கண்களை அகலத்திறந்து பார்த்து, உணர்ந்து அமைதி கொள்வாய் மனிதா!

இதனை வாசிக்கும் பொழுது இந்தப்பாடலே நினைவிற்கு வந்தது..

 

On 16/3/2023 at 03:43, தனிக்காட்டு ராஜா said:

ம் நன்றாக இருக்கிறது தொடரட்டும் 

மிக்க நன்றி..

On 24/3/2023 at 12:55, வல்வை சகாறா said:

நல்ல முயற்சி

பாராட்டுகள் பிரபா சிதம்பரநாதன்.

மிக்க நன்றி அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

நான் போன இடங்களுக்கும் நீங்ககளும் போயுள்ளீர்கள். தொடருங்கள்  

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.