Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்வினை முன்னிட்டு அப்பகுதியில் பெருமளவான இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2023/1330969

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த மயமாக்கத்தில்.. சொறீலங்கா கடற்படை தான் முக்கியமா செயற்படுகுது. இவ்வளவு பொருண்மிய நெருக்கடியிலும்.. அது தனது ஆக்கிரமிப்புக் கொள்கையில் உறுதியா இருக்குது என்றால்.. இதன் பின்னால் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் பக்கபலம் இல்லாமல் இல்லை.

அதுசரி.. இப்படியான விடயங்கள் குறித்து எங்கட தமிழ் அரசியல் வியாதிகள்... ஏன் பிரஸ்தாபிப்பதே இல்லை..??!

தையிட்டி என்ன முழு சிங்கள பெளத்த பிரதேசமா..??!

இதற்கு பதில் அளிக்கனுன்னா.. தென்னிலங்கை பூராவும் சைவ ஆலயங்கள் அமைக்கப்படனும். அதுதான் மத நல்லிணக்கமாகும்.. என்று சொல்லிக்கொள்ளனும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த மயமாக்கத்தில்.. சொறீலங்கா கடற்படை தான் முக்கியமா செயற்படுகுது. இவ்வளவு பொருண்மிய நெருக்கடியிலும்.. அது தனது ஆக்கிரமிப்புக் கொள்கையில் உறுதியா இருக்குது என்றால்.. இதன் பின்னால் சிங்கள பெளத்த பேரினவாத அரசின் பக்கபலம் இல்லாமல் இல்லை.

அதுசரி.. இப்படியான விடயங்கள் குறித்து எங்கட தமிழ் அரசியல் வியாதிகள்... ஏன் பிரஸ்தாபிப்பதே இல்லை..??!

தையிட்டி என்ன முழு சிங்கள பெளத்த பிரதேசமா..??!

இதற்கு பதில் அளிக்கனுன்னா.. தென்னிலங்கை பூராவும் சைவ ஆலயங்கள் அமைக்கப்படனும். அதுதான் மத நல்லிணக்கமாகும்.. என்று சொல்லிக்கொள்ளனும். 

இப்படி ஒரு விகாரை கட்டிக் கொண்டிருப்பதாக பத்திரிகைகள் கூட ஒரு செய்தியையும்
வெளியிடவில்லை. கட்டுமானத்துக்கு… தேவையான பொருட்கள் கனரக வாகனங்களில்
போகும் போது கூட… ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது தான்,
மர்மமாக இருக்கு.

இனி… கட்டி முடிந்த பின், நமது அரசியல் வாதிகள் 
வாயால் வடை சுட வெளிக்கிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இப்படி ஒரு விகாரை கட்டிக் கொண்டிருப்பதாக பத்திரிகைகள் கூட ஒரு செய்தியையும்
வெளியிடவில்லை. கட்டுமானத்துக்கு… தேவையான பொருட்கள் கனரக வாகனங்களில்
போகும் போது கூட… ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது தான்,
மர்மமாக இருக்கு.

இனி… கட்டி முடிந்த பின், நமது அரசியல் வாதிகள் 
வாயால் வடை சுட வெளிக்கிடுவார்கள்.

அவை இனி கேசுபோட்டு ..கட்டிடம் கட்டாமல் இருக்க தடைவாங்குவினம்?😄

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

இப்படி ஒரு விகாரை கட்டிக் கொண்டிருப்பதாக பத்திரிகைகள் கூட ஒரு செய்தியையும்
வெளியிடவில்லை. கட்டுமானத்துக்கு… தேவையான பொருட்கள் கனரக வாகனங்களில்
போகும் போது கூட… ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது தான்,
மர்மமாக இருக்கு.

இனி… கட்டி முடிந்த பின், நமது அரசியல் வாதிகள் 
வாயால் வடை சுட வெளிக்கிடுவார்கள்.

கச்சதீவில்.. இல்லாத அரசமரத்தை வைச்சு.. வளர்த்து.. அதில் புத்தரை இருத்தினவங்களுக்கு இது பெரிய வேலையா..??!

தீவகத்தில் முன்னர் ஏன் நயீனாதீவில் கூட பெளத்த விகாரை.. இருக்கவில்லை. எப்போ சிங்களக் கடற்படை ஆக்கிரமிப்பு வந்திச்சோ அப்ப தான் எல்லாமே முளைவிட்டது. இப்போ நயீனாதீவு.. நாகதீப ஆகிட்டுது. மயிலிட்டி.. மயிலிட்டிய புர என்று ஆனாலும் ஆச்சரியமில்லை.

எம் அரசியல் வியாதிகள்.. கட்டிலை வியாபித்திருக்கத்தான் சரி. 

வடக்குக் கிழக்கில் முக்கிய இடங்கள் எல்லாம் பெளத்த விகாரைகள் வந்திட்டுது. அதில் அநேகம் 2009 மே க்குப் பின் வந்தவை. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

கச்சைதீவில்.. இல்லாத அரசமரத்தை வைச்சு.. வளர்த்து.. அதில் புத்தரை இருத்தினவங்களுக்கு இது பெரிய வேலையா..??!

தீவகத்தில் முன்னர் ஏன் நயீனாதீவில் கூட புத்தகோவில் இருக்கவில்லை. எப்போ சிங்களக் கடற்படை ஆக்கிரமிப்பு வந்திச்சோ அப்ப தான் எல்லாமே முளைவிட்டது. இப்போ நயீனாதீவு.. நாகதீப ஆகிட்டுது. மயிலிட்டி.. மயிலிட்டிய புர என்று ஆனாலும் ஆச்சரியமில்லை.

எம் அரசியல் வியாதிகள்.. கட்டிலை வியாபித்திருக்கத்தான் சரி. 

கச்ச தீவில் கட்டிய புத்த விகாரைக்கு எழுந்த பலத்த எதிர்ப்பால்… அதனை அகற்றி விட்டார்களாம். ஆனால்… நம் ஊரில் எழுந்த நூற்றுக் கணக்கான விகாரைகளில் ஒன்றைக் 
கூட அப்புறப் படுத்த முடியாத அளவில் நம் அரசியல் தலைமையின் சாணக்கியம் இருக்கு.

இதற்குள் தம்மை புலி என்று சொல்ல வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுவரை எம் அரசியல்வியாதிகள்.. சிங்கள ஆக்கிரமிப்புப்படை வெளியேற்றம் குறித்து.. இணைத்தலைமை நாடுகளையோ.. நோர்வேயையோ.. ஹிந்தியாவையோ கேட்டதில்லை. மாறாக.. சிங்களப் படைகள் தமிழர் நிலத்தில் ஒரு மூலையிலாவது இருக்கட்டும் என்று தான் கருத்துச் சொல்லி இருக்கினம். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சுகம் தேடக் கூடிய அரசியல் வியாதிகளை வைச்சுக் கொண்டு தமிழர்கள்.. என்ன செய்ய முடியும்.. இவற்றையும் இன்னும் அரங்கேறப் போற இதை விட மோசமான நிகழ்வுகளையும் பார்த்து அங்கலாய்க்கத்தான் முடியும். 

Just now, தமிழ் சிறி said:

இதற்குள் தம்மை புலி என்று சொல்ல வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் பேசுகிறார்கள்.

சுமந்திரன் 2009 மே க்குப் பின் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு சிங்கள பெளத்த விசுவாசி. அது அப்படித்தான் பேசும். 

வேடிக்கை என்னவென்றால்... புலிகள் இல்லை என்றால் எப்பவோ தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்திருப்போம்.. புலிகள் தான் எல்லாத்துக்கும் தடை என்றவர்கள்.. இப்பவும் உயிரோடு தான் இருக்கினம். அவை கூட.. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் வெளியேற்றம் குறித்துப் பேசுவதில்லை.

வட அயர்லாந்தில்.. பெரிய வெள்ளி உடன்படிக்கையோடு.. பிரித்தானிய இராணுவ ஆக்கிரமிப்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்.. பிரித்தானியா கூட தமிழர்கள் நில ஆக்கிரமிப்பில்.. சிங்களப் படை வெளியேற்றம் குறித்துப் பேசுதில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் கூட அதனை தெளிவாக கால வரையறுத்துப் பேசுவதும் இல்லை.. வலியுறுத்துவதும் இல்லை.

சிங்களப் படை ஆக்கிரமிப்பு இருக்கும் வரை.. சிங்கள பெளத்த மயமாக்கம்.. மிக வேகமாக நிகழும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

இன்றுவரை எம் அரசியல்வியாதிகள்.. சிங்கள ஆக்கிரமிப்புப்படை வெளியேற்றம் குறித்து.. இணைத்தலைமை நாடுகளையோ.. நோர்வேயையோ.. ஹிந்தியாவையோ கேட்டதில்லை. மாறாக.. சிங்களப் படைகள் தமிழர் நிலத்தில் ஒரு மூலையிலாவது இருக்கட்டும் என்று தான் கருத்துச் சொல்லி இருக்கினம். இப்படிப்பட்ட ஆக்கிரமிப்புக்குள் சுகம் தேடக் கூடிய அரசியல் வியாதிகளை வைச்சுக் கொண்டு தமிழர்கள்.. என்ன செய்ய முடியும்.. இவற்றையும் இன்னும் அரங்கேறப் போற இதை விட மோசமான நிகழ்வுகளையும் பார்த்து அங்கலாய்க்கத்தான் முடியும். 

சுமந்திரன் 2009 மே க்குப் பின் அரசியலுக்குள் கொண்டு வரப்பட்ட ஒரு சிங்கள பெளத்த விசுவாசி. அது அப்படித்தான் பேசும். 

வேடிக்கை என்னவென்றால்... புலிகள் இல்லை என்றால் எப்பவோ தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்திருப்போம்.. புலிகள் தான் எல்லாத்துக்கும் தடை என்றவர்கள்.. இப்பவும் உயிரோடு தான் இருக்கினம். அவை கூட.. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் வெளியேற்றம் குறித்துப் பேசுவதில்லை.

வட அயர்லாந்தில்.. பெரிய வெள்ளி உடன்படிக்கையோடு.. பிரித்தானிய இராணுவ ஆக்கிரமிப்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால்.. பிரித்தானியா கூட தமிழர்கள் நில ஆக்கிரமிப்பில்.. சிங்களப் படை வெளியேற்றம் குறித்துப் பேசுதில்லை. புலம்பெயர் அமைப்புக்கள் கூட அதனை தெளிவாக கால வரையறுத்துப் பேசுவதும் இல்லை.. வலியுறுத்துவதும் இல்லை.

சிங்களப் படை ஆக்கிரமிப்பு இருக்கும் வரை.. சிங்கள பெளத்த மயமாக்கம்.. மிக வேகமாக நிகழும். 

இன்னும் 10 வருடத்தில்… தமிழர் நிலத்தில் கோவில், தேவாலயங்களை விட புத்த விகாரைகளே அதிகம் இருக்கும். அதற்கு சமாந்திரமாக… சிங்களப் பாடசாலைகளும்
வேகமாக கட்டி எழுப்பப் பட்டு தமிழரை…. மதம், இனம் என்று மாற்றி விடுவார்கள்.
அப்படி நடக்கப் போகும் ஆபத்தை உணராமல் நமது அரசியல் வாதிகள் 
தமது வயிறை வளர்க்க மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மறவன்புலவு சச்சி இதுக்கு வாய்திறக்கமாட்டாரா?👀

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாலி said:

மறவன்புலவு சச்சி இதுக்கு வாய்திறக்கமாட்டாரா?👀

அவர் கிறிஸ்தவத்துக்கு எதிரானவர். பெளத்தத்துக்கு ஆதரவானவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் விகாரை கட்ட, இந்தியன் ராமர் கோயில் கட்ட, கொஞ்ச சனம் பத்மநாபாவுக்கு சிலை கட்ட, மிச்ச தமிழ் சனம் கனவிலே கோட்டை கட்ட ... நம்ம நாடே கட்டி எழும்புது போல 

1 minute ago, nunavilan said:

அவர் கிறிஸ்தவத்துக்கு எதிரானவர். பெளத்தத்துக்கு ஆதரவானவர்.

சங்கி  in one word!!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

மறவன்புலவு சச்சி இதுக்கு வாய்திறக்கமாட்டாரா?👀

சிவசேன இலங்கையில் சிங்கள பெளத்த மயமாக்கலை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஏன் இலங்கையில் சைவத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு கோவில்கள் அழிக்கப்பட்ட போது கூட சிவசேன கவலை தெரிவிக்கவில்லை. தடுக்கக் கோரவில்லை.

ஆனால்.. தமிழர்கள் வெறுமனவே சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு விரிவாக்கத்துக்கு மட்டும் முகம் கொடுக்கவில்லை.. அதோடு இன்னும் பல திட்டமிட்ட செயற்பாடுகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதில் ஒன்று மதமாற்றங்கள். அதிலும் கிறிஸ்தவ மதமாற்றத்தை தான் சிவசேன எதிர்க்கிறது. இஸ்லாமிய மதமாற்றங்களை அது இலங்கையில் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

அந்தவகையில்.. வெளிப்படையாக தன்னை சிவசேன ஆள் என்று அறிவித்துவிட்டுள்ள சச்சியிடம் வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள்.

குறைந்தது மதமாற்றங்களையாவது எதிர்க்கினமே என்று தான் கொள்ள வேண்டி இருக்குது. ஏனெனில் ஈழத்தமிழர்கள் இன்று பலதலைக் கொள்ளி எறும்புகளிடம் மாட்டிய புழுக்களாகிக் கிடக்கின்றனர். புலிகளாய் வாழ்ந்த இனம்.. புழுவாகிக் கிடக்கையில் இதுதான் நிகழும். 

  • கருத்துக்கள உறவுகள்

மாவை தமிழரசுக்கட்சித் தலைவர் அவரின் ஊரில் விகாரை கட்டினது அவருக்குத் தெரியாது.இதே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் தொகுதியான தீரகோணமலையில் பல பெளத்த விகாரைகள் கன்னியாவும் பறிபோயிட்டுத. எல்லாத் தலைவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கினம்.சிங்களக்கடற்படை ஆரவாரம் காட்டினால் கட்டத் தொடங்கைக்கைேயே சனம் எதிர்புக்காட்டுவனினம் என்று தெரிந்து இரகசியமாக பொருட்களைக் கொண்டு வந்து கட்டிடிட்தைக் கட்டி விட்டு கலசம் வைக்கும்போதுதான் தெரியப்படுத்திறாங்கள். இனி யாரும் உடைக்க முடியாது. என்ற அவங்களுக்குத் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

மாவை தமிழரசுக்கட்சித் தலைவர் அவரின் ஊரில் விகாரை கட்டினது அவருக்குத் தெரியாது.இதே தமிழத்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் தொகுதியான தீரகோணமலையில் பல பெளத்த விகாரைகள் கன்னியாவும் பறிபோயிட்டுத. எல்லாத் தலைவர்களும் ஆழ்ந்த நித்திரையில் இருக்கினம்.சிங்களக்கடற்படை ஆரவாரம் காட்டினால் கட்டத் தொடங்கைக்கைேயே சனம் எதிர்புக்காட்டுவனினம் என்று தெரிந்து இரகசியமாக பொருட்களைக் கொண்டு வந்து கட்டிடிட்தைக் கட்டி விட்டு கலசம் வைக்கும்போதுதான் தெரியப்படுத்திறாங்கள். இனி யாரும் உடைக்க முடியாது. என்ற அவங்களுக்குத் தெரியும்.

இந்த வினைத்திறனற்ற இன தேசப்பற்றற அரசியல் வியாதிகளை பூண்டோடு அழிச்சிட்டாவது புலிகள் போயிருக்கலாம்... என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

ஏனெனில் இவங்கள் 2009 இலும் போனை நிற்பாட்டிட்டு ஒளிஞ்சு கிடந்தாங்கள்.

மாவீரர் நினைவிடங்கள் அழிக்கப்படும் போதும் சும்மா கிடந்தாங்கள்.

போர் முடிந்து இவ்வளவு காலமாகியும்.. இவ்வளவு சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளும் இருக்கவும் சும்மா கிடக்கிறாங்கள்.. ஏனெனில் இவங்களுக்கு அவங்கள் தான் பொடிகாட்.

இவ்வளவு போதைவஸ்து வந்தும்.. கண்முன்னாள் இளைய சமூகம் அழிக்கப்படும் போது கண்டுகொள்ளாமல் கிடக்கிறாங்கள்..

இப்ப மட்டும் பெளத்த விகாரைகள் கண்டு கிளம்புவாங்களா என்ன.

2009 மே க்குப் பின் சராணாகதி அரசியலை ஆரம்பிச்சாங்கள்.

இப்ப தூய புலி நீக்க அரசியலை செய்யுறாங்கள்.. அதில தான் அவங்களுக்கு பதவிகளும் மாடி வீடுகளும் சிங்களப் பொலிஸ் பாதுகாப்பும்.. சொகுசு வாகனங்களும்.. வாழ்க்கையும் கிடைக்கும். இவ்வளவும் கிடைக்கேக்க.. அவங்களுக்கு இதைப் பற்றி எல்லாம் கதைச்சு எதுக்கு எஜமானரின் விசரைக் கிளப்பனும். அப்பப்ப வெளிநாட்டு தூதுவர்கள் வந்து.. இவையை தட்டிக்கொடுத்திட்டுப் போகச் சரி. அதிலும் அண்டை நாட்டு அரசியல் வியாதிகள் வந்து கூட நின்று போட்டு எடுத்திட்டு.. எயார் போட்டும்.. போட்டும் துறக்கிறம் என்றிட்டு போனாலே போதும்.. அந்தக் கூச்சல் அடங்க முதல் 100 விகாரைகள் கட்டிடுவாங்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
சூப்பர் சிங்கர் புகழ் " Maanasi " யாழ் வருகை.. #supersinger @maanasik_singer3201 #jaffna #Maanasik Video link https://youtu.be/_YyuLJTjZjY
 
சூப்பர் சிங்கர் புகழ் " Maanasi " யாழ் வருகை.. #supersinger @maanasik_singer3201 #jaffna #Maanasik
 
இதுதான் இன்றைய டமிழ் தேசிய அரசியல்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

இப்படி ஒரு விகாரை கட்டிக் கொண்டிருப்பதாக பத்திரிகைகள் கூட ஒரு செய்தியையும்
வெளியிடவில்லை. கட்டுமானத்துக்கு… தேவையான பொருட்கள் கனரக வாகனங்களில்
போகும் போது கூட… ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது தான்,
மர்மமாக இருக்கு.

இனி… கட்டி முடிந்த பின், நமது அரசியல் வாதிகள் 
வாயால் வடை சுட வெளிக்கிடுவார்கள்.

அத்திவாரம் போடும் போதே ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை?

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:
சூப்பர் சிங்கர் புகழ் " Maanasi " யாழ் வருகை.. #supersinger @maanasik_singer3201 #jaffna #Maanasik Video link https://youtu.be/_YyuLJTjZjY
 
சூப்பர் சிங்கர் புகழ் " Maanasi " யாழ் வருகை.. #supersinger @maanasik_singer3201 #jaffna #Maanasik
 
இதுதான் இன்றைய டமிழ் தேசிய அரசியல்...

புலம் பெயர் நாடுகளில் ஒவ்வொரு திருமண, பிறந்த நாள் போன்ற தமிழர் வைபவங்களில் DJ இல்லாமல் இப்போது நடப்பதில்லை. அவ்வாறு நாம் மகிழ்வாக இங்கு  வாழ்வதைப் போல் அவர்களும் மகிழ்வாக இருப்பது நல்லது. 

1970 காலப்பகுதியில் இவ்வாறு யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழ் சிங்கள கலைஞர்களுடன் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறும். அக்காலப்பகுதியில் பொப்பிசை, பைலா பாட்டு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பிரபலம். ஒவ்வொரு மாதமும் பொப்பிசை நிகழ்வுகள் யாழ்பாணத்தில் நடைபெறும். 

மீண்டும் இவ்வாறான நிகழ்வுகளுடன் யாழ்பாண மக்கள் மகிழ்சியை அனுபவிப்பது  நல்லது. இதை அரசியலுடன் தொடர்பு படுத்தும் வீணர்களைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில விகாரை பழைய செய்தி பாருங்கோ. கலசம் யாழ்ப்பாணத்து விகாரைகளில் ரொம்ப உசத்தி என்பதுதான் புதுவிசயம். 

இதற்கு ஒரு பரிகாரம் உள்ளது பாருங்கோ.

அது என்ன என்றால்..

அது என்ன என்றால்..

என்ன என்றால்..

என்றால்..

வெளிநாட்டில் உள்ள சைவர்கள், இந்துக்கள் எல்லாரும் சேர்ந்து கே.கே.எஸ் இல் யாழ்ப்பாணத்திலேயே உயரமான கோபுரம் கொண்ட ஒரு சைவக்கோயிலை அமைத்துவிடுங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் விகாரை கட்ட காணியை நம்ம அங்கசன்ரை அப்பாதான் உதவினார் என்ற கதையும் உண்டு...அவருதான் விகாரை புரோக்கர்....இதுக்கு ஒருவழிதான் இருக்கு ...மோடியிடம் போய் ...சீனன் இந்தியாவை உளவு பாக்கத்தான் இந்த விகாரையை உயர்த்திக்கட்டினவை என்று ..ஒரு கதை எறிந்தால் காணும்...கச்சதீவு புத்தர் போல சொல்லாமல் கொள்ளமல் இடம் பெயர்ந்து விடுவார்...அல்லது 10 அல்லது 20 அடி உடைச்சுப்போட்டு   குறைந்த் உ யரத்தில்..கலசம் வைப்பினம்..  இல்லையோ மோடியே தன்னுடைய சிலையை 200 அடி உயரத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அத்திவாரம் போடும் போதே ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை?

தமிழ் அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். சச்சியர் கிறிஸ்தவர்களோடு பொருதி நடப்பவையை திசைதிருப்புகிறார். காட்டிக்கொடுத்ததுகள்; வாள்வெட்டு, போதைவஸ்து கடத்தல் இவற்றில் பிஸி. இவர்களை ஆடவிட்டு நம்ம தலைவர் என்று சொல்வோர் மவுனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இனிமேல் தடுப்பதற்கும் போராடுவதற்கும் ஒன்றும்இல்லை. புலிகள் அழிக்கப்பட்டது எத்தனை நரிகளுக்கு கொண்டாட்டம். சுதந்திரமாய் விருந்து கொண்டாடலாம், மக்களை ஏமாற்றலாம், வெளிநாடு சுற்றலாம். எங்கேயாவது மக்களின் துயரில், தேவையில் இழப்பில் இவர்கள் துணை நிக்கிறார்களா? மக்களை விலை பேசி பிச்சுத்தின்னும் ஓநாய் ஒன்று அங்குமிங்கும் ஓடித்திரியுது, இவர்கள்; அவரிடம் எல்லாவற்றையும்  கையளித்துவிட்டு மவுனம். சேர்ந்தியங்கினால் வாக்கு குறைந்துவிடும், தேர்தல் வர  அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு வீரவசனம் பேசிக்கொண்டு நாங்களே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு வருவினம். ஏதும் செய்யவும் மாட்டார்கள் செய்யிறவையை செய்யவும் விடமாட்டினம் பட்டடை மாடுகள்.

9 minutes ago, alvayan said:

.இதுக்கு ஒருவழிதான் இருக்கு ...மோடியிடம் போய் ...சீனன் இந்தியாவை உளவு பாக்கத்தான் இந்த விகாரையை உயர்த்திக்கட்டினவை என்று ..ஒரு கதை எறிந்தால் காணும்...கச்சதீவு புத்தர் போல சொல்லாமல் கொள்ளமல் இடம் பெயர்ந்து விடுவார்...அல்லது 10 அல்லது 20 அடி உடைச்சுப்போட்டு   குறைந்த் உ யரத்தில்..கலசம் வைப்பினம்..  இல்லையோ மோடியே தன்னுடைய சிலையை 200 அடி உயரத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..

சந்தர்ப்பமே இல்லை. புத்த மத பரம்பலுக்கு நிதியுதவியும் ஆலோசனையும் இந்தியா வழங்கியதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது, இந்தியா அதை மறுக்கவில்லை. நாங்கள் யாரிடம் முறையிட்டாலும் தீர்வு அவர்களால் வரப்போவதில்லை மாறாக பிரச்சனை அதிகரிக்கும். எங்களால் இயன்றவரை போராடுவதே மேல். அப்போ எங்களை வைத்து இருபக்கமும் விளையாடும் விளையாட்டு நிக்கும். இந்த விகாரைகள் கட்டுவது; சிங்களம், இந்தியா இரண்டும் சேர்ந்து ஆடும் விளையாட்டு. நம்மவர்க்கே கவலையில்லை. இந்தியா இது நடக்க வேண்டும், தமிழரை  தன் காலடியில் காத்துக்கிடக்க வைக்கவேண்டும் என்றே இதெல்லாம் செய்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்தியாவை தூர வைப்பதே நமக்கு பிரச்சனை அதிகரிக்காமல் இருக்கும் வழி. இந்தியா உதவுவதாக வந்தால்; இது  நமது பிரச்சனை, அதற்கான தீர்வு இது, முடிந்தால் இதற்கு உதவுங்கள் இல்லையேல் விலகி இருங்கள், உங்கள் தீர்வுகளை எங்கள் மேற் திணிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு நம் பிரச்சனையை நாமே கையாளவேண்டும். இது ம்... எண்ண முதல் இந்தியாவிற்கு ஓடுவது, இந்தியா இலங்கை இரண்டும் நம்மை வைத்து தாம் விளையாடுவது. எத்தனை நாளைக்கு அலுக்காமல் இழந்துகொண்டே காலடியில் கிடப்பது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அத்திவாரம் போடும் போதே ஏன் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவில்லை?

ஏற்கெனவே… பணம் கை மாறி வாயை அடைத்து இருப்பார்கள்.
ஈழப் போர் முடிந்த சில மாதங்களில்… மகிந்த அரசால், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. க்களுக்கு… ஆளுக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக்கப் பட்டதாக செய்திகள் வந்தது.

அதனை இவர்கள் மறுத்து இருந்தாலும்… பலர் அடுத்த சில வருடத்தில்,
பல கோடி ரூபாய் பெறுமதி உள்ள வீடுகளை கட்டி இருந்தமை அந்தச் செய்தியை உறுதிப் படுத்துவது போல் அமைந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

மறவன்புலவு சச்சி இதுக்கு வாய்திறக்கமாட்டாரா?👀

பாவம் , சச்சி ஐயாவுடைய நிலைமை அப்படி. இந்தியாவை மீறி அவர் ஒன்றும் பேச மாடடார். பவுத்த மதம் இந்து மதத்துக்குள் அடங்கியதென்று இந்திய கருதுவதால் அதட்கு எதிராக பேச மாடடார்கள். சைவ சமயம் என்று வரும்போது தான் பிரச்சினை உருவாகின்றது. கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக போராடுவதட்கு அவருக்கு அனுமதி உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தமிழ் அரசியல்வாதிகள் அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாகிவிட்டார்கள். சச்சியர் கிறிஸ்தவர்களோடு பொருதி நடப்பவையை திசைதிருப்புகிறார். காட்டிக்கொடுத்ததுகள்; வாள்வெட்டு, போதைவஸ்து கடத்தல் இவற்றில் பிஸி. இவர்களை ஆடவிட்டு நம்ம தலைவர் என்று சொல்வோர் மவுனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இனிமேல் தடுப்பதற்கும் போராடுவதற்கும் ஒன்றும்இல்லை. புலிகள் அழிக்கப்பட்டது எத்தனை நரிகளுக்கு கொண்டாட்டம். சுதந்திரமாய் விருந்து கொண்டாடலாம், மக்களை ஏமாற்றலாம், வெளிநாடு சுற்றலாம். எங்கேயாவது மக்களின் துயரில், தேவையில் இழப்பில் இவர்கள் துணை நிக்கிறார்களா? மக்களை விலை பேசி பிச்சுத்தின்னும் ஓநாய் ஒன்று அங்குமிங்கும் ஓடித்திரியுது, இவர்கள்; அவரிடம் எல்லாவற்றையும்  கையளித்துவிட்டு மவுனம். சேர்ந்தியங்கினால் வாக்கு குறைந்துவிடும், தேர்தல் வர  அடிச்சுப்பிடிச்சுக்கொண்டு வீரவசனம் பேசிக்கொண்டு நாங்களே மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொந்தம் கொண்டாடிக்கொண்டு வருவினம். ஏதும் செய்யவும் மாட்டார்கள் செய்யிறவையை செய்யவும் விடமாட்டினம் பட்டடை மாடுகள்.

சந்தர்ப்பமே இல்லை. புத்த மத பரம்பலுக்கு நிதியுதவியும் ஆலோசனையும் இந்தியா வழங்கியதாக சில மாதங்களுக்கு முன் செய்தி வந்தது, இந்தியா அதை மறுக்கவில்லை. நாங்கள் யாரிடம் முறையிட்டாலும் தீர்வு அவர்களால் வரப்போவதில்லை மாறாக பிரச்சனை அதிகரிக்கும். எங்களால் இயன்றவரை போராடுவதே மேல். அப்போ எங்களை வைத்து இருபக்கமும் விளையாடும் விளையாட்டு நிக்கும். இந்த விகாரைகள் கட்டுவது; சிங்களம், இந்தியா இரண்டும் சேர்ந்து ஆடும் விளையாட்டு. நம்மவர்க்கே கவலையில்லை. இந்தியா இது நடக்க வேண்டும், தமிழரை  தன் காலடியில் காத்துக்கிடக்க வைக்கவேண்டும் என்றே இதெல்லாம் செய்கிறது. என்னைப்பொறுத்தவரை இந்தியாவை தூர வைப்பதே நமக்கு பிரச்சனை அதிகரிக்காமல் இருக்கும் வழி. இந்தியா உதவுவதாக வந்தால்; இது  நமது பிரச்சனை, அதற்கான தீர்வு இது, முடிந்தால் இதற்கு உதவுங்கள் இல்லையேல் விலகி இருங்கள், உங்கள் தீர்வுகளை எங்கள் மேற் திணிக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு நம் பிரச்சனையை நாமே கையாளவேண்டும். இது ம்... எண்ண முதல் இந்தியாவிற்கு ஓடுவது, இந்தியா இலங்கை இரண்டும் நம்மை வைத்து தாம் விளையாடுவது. எத்தனை நாளைக்கு அலுக்காமல் இழந்துகொண்டே காலடியில் கிடப்பது?

தமிழ் அரசியல்வாதிகள்  அனுமதி மட்டும் இல்லை, அதற்கான கையூட்டும் பெற்று இருப்பார்கள்.
மாவையின் சொந்தத் தொகுதியில் நடந்த பிரமாண்ட விடயம், இவ்வளவு வருடங்களாக மூடி மறைக்கப் பட்டு… விகாரைக்கு கலசம் வைக்கும் போதுதான் வெளியே வதுகின்றது என்றால்…
இது திட்டமிட்டே… பொது மக்களிடம் இருந்து மறைத்து இருக்கிறார்கள் என்று கருத வேண்டி உள்ளது.
இந்த நிமிடம் வரை… எந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதற்காக குரல் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

புலம் பெயர் நாடுகளில் ஒவ்வொரு திருமண, பிறந்த நாள் போன்ற தமிழர் வைபவங்களில் DJ இல்லாமல் இப்போது நடப்பதில்லை. அவ்வாறு நாம் மகிழ்வாக இங்கு  வாழ்வதைப் போல் அவர்களும் மகிழ்வாக இருப்பது நல்லது. 

1970 காலப்பகுதியில் இவ்வாறு யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழ் சிங்கள கலைஞர்களுடன் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறும். அக்காலப்பகுதியில் பொப்பிசை, பைலா பாட்டு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பிரபலம். ஒவ்வொரு மாதமும் பொப்பிசை நிகழ்வுகள் யாழ்பாணத்தில் நடைபெறும். 

மீண்டும் இவ்வாறான நிகழ்வுகளுடன் யாழ்பாண மக்கள் மகிழ்சியை அனுபவிப்பது  நல்லது. இதை அரசியலுடன் தொடர்பு படுத்தும் வீணர்களைப் பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. 

 

நீங்கள் துரையப்பா காலத்து ஆள் என்பது விளங்குது. யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சிக்கு எப்பவும் குறை இருக்கவில்லை. போர் காலத்திலும் இசை நிகழ்ச்சிகள்.. முத்தமிழ் விழாக்கள் நடந்தன. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா போன்று பல தென்னிந்திய.. தமிழக கலைஞர்கள் வந்தே போயினர்.

நீங்கள் ஒருவேளை அந்த வேளைகளில்.. ஓடி ஒளித்திருந்திருக்கலாம்.

ஆனால்.. ஒரு பிரதான தமிழ் தேசியக் கட்சி என்று சொல்லுபவர்களின் அதுவும் இருதேசம் ஒரு நாடு கொள்கை கொண்டவர்களின் நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீக்கத்திற்கு எதிரான.. குறுகிய கால.. நீண்ட கால செயற்திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. களத்தில் எத்தனையோ முக்கிய விடயங்கள் வெளிக்கொணரவும் பேசப்படவும் தீர்க்கப்படவும் உள்ள நிலையில்..

மான்சியை தூக்கிப் பிடிக்க.. வேறு அமைப்புக்கள் இருக்கினம். அவை அதை மக்களுக்காகவும் வருவாய்க்காகவும் செய்து கொள்ளுவினம். அங்கு அதற்கு எந்தச் சவாலும் இல்லை.

ஆனால்.. மண்ணின் இருப்புக்கும் மக்களின் இருப்புக்கும் உள்ள ஆபத்தை சிறுமைப்படுத்தி.. பல விடயங்களை மறைக்க மான்சியை தூக்கிப் பிடிக்க வேண்டியது ஒரு அரசியல் கட்சிக்கு அவசியமா என்பது தான் கேள்வி..?! இது தானா தமிழ் தேசிய அரசியலின் தேவை இப்போ..??!

  • கருத்துக்கள உறவுகள்

நாம் மகிழ்வாக இங்கு  வாழ்வதைப் போல் அவர்களும் மகிழ்வாக இருப்பது நல்லது.  👍

அது.

11 hours ago, island said:

1970 காலப்பகுதியில் இவ்வாறு யாழ் முற்றவெளி மைதானத்தில் தமிழ் சிங்கள கலைஞர்களுடன் அடிக்கடி நிகழ்வுகள் நடைபெறும். அக்காலப்பகுதியில் பொப்பிசை, பைலா பாட்டு நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் பிரபலம். ஒவ்வொரு மாதமும் பொப்பிசை நிகழ்வுகள் யாழ்பாணத்தில் நடைபெறும். 

தகவல்களுக்கு நன்றி.
வெளிநாடுகளில் தமிழர்களின் சமத்திய சடங்கு  கூத்துகளை விட அந்த  சிங்கர் புகழ் இசை நிகழ்ச்சி சிறப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.