Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இன்று ஆரம்பம்

ranil-3.jpg

வடக்கு மற்றும் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் இன்று(11) மற்றும் நாளைய(12) தினங்களில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகள், காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை, காணி விடுவிப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள டெலோ மற்றும் புளொட் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இனப் பிரச்சினைக்கு தீர்வு – சமஷ்டி என்ற அடிப்படையிலேயே இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதாக புளொட் எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் போது வட மாகாண அபிவிருத்தி மற்றும் ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை(12) அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், அதில் பங்கேற்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நேற்று முன்தினம்(09) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் வடக்கு, கிழக்கின் அதிகாரப் பகிர்வு மற்றும் காணிப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

https://thinakkural.lk/article/253032

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு இந்த சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளன.

அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) மாலை இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய தினம் குறித்த சந்திப்பில், நல்லிணக்க பொறிமுறைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடுப்புச் சட்டம், காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளது.

இதேவேளை நாளைய சந்திப்பில், அதிகாரப் பகிர்வு தொடர்பாக, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1331669

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளிக்குத் தீர்வு தருவேன் என்றிருப்பார்...அய்யா பூம் பூம் மாடூமதிரி தலையாட்டியிருப்பார்...அப்புற என்ன ..நிறைஞ்ச பெட்டியுடன்  வீட்டை போயிருப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன  பேசியது  என்பதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, nunavilan said:

என்ன  பேசியது  என்பதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

என்ன கதைச்சனாங்கள் எண்டு வெளியிலை சொல்ல அவையளுக்கு என்ன விசரே? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

 இதனால் தமிழருக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. தனிழர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் நேர்மையாக போராடியவர் செல்வநாயகம் மட்டுமே. அவர் ஈடுபட்டிருக்காத பேச்சுவார்த்தைகளா, செய்திருக்காத ஒப்பந்தங்களா? ஆனால், அவரையே ஏமாற்றி தோற்கடித்தது பேரினவாதம். அன்று அவர் செய்தவற்றில் நூறில் இரண்டு வீதத்தைக் கூட செய்யமுடியாத இன்றைய கூத்தாடிகளின் “சந்திப்புக்களால்” ஒரு உரோமத்தையும் பிடுங்கமுடியாது. ஏமாற்றுப் பேர்வழிகள், அரசியல் சாக்கடைகள்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

என்ன  பேசியது  என்பதை அடித்து கேட்டாலும் சொல்ல மாட்டார்கள்.

கடந்த இரவு டிவி 1 , news first , News Line என்னும் நிகழ்ச்சியில் சாணக்கியன் நேரடியாக பங்கேற்று என்னென்ன பேசப்படடாதென்று விரிவாக கூறி இருந்தார். இது இன்று மதியமும் மறு ஒளிபரப்பு செய்யப்படுமென்று நினைக்கிறேன். Utube யிலும் இதனை பார்க்கலாம். 

3 hours ago, ரஞ்சித் said:

 இதனால் தமிழருக்கு எந்த விமோசனமும் கிடைக்கப்போவதில்லை. தனிழர்களின் உரிமைகளுக்காக ஜனநாயக ரீதியில் நேர்மையாக போராடியவர் செல்வநாயகம் மட்டுமே. அவர் ஈடுபட்டிருக்காத பேச்சுவார்த்தைகளா, செய்திருக்காத ஒப்பந்தங்களா? ஆனால், அவரையே ஏமாற்றி தோற்கடித்தது பேரினவாதம். அன்று அவர் செய்தவற்றில் நூறில் இரண்டு வீதத்தைக் கூட செய்யமுடியாத இன்றைய கூத்தாடிகளின் “சந்திப்புக்களால்” ஒரு உரோமத்தையும் பிடுங்கமுடியாது. ஏமாற்றுப் பேர்வழிகள், அரசியல் சாக்கடைகள்!

அப்படி என்றால் இலங்கையில் உள்ள மக்களுக்கு என்ன தீர்வு என்று கூறினாலும் நன்றாக இருக்கும். இங்கு பேச்சு வார்த்தையில் அரசியல் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள், அரசியல் ஒன்றுமே தெரியாத ஆயுதம்(??) தூக்கியவர்களும் இருக்கிறார்கள். வெளி நாடடவர் என்றால், சுயநலத்துடன் பங்கேற்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Cruso said:

அப்படி என்றால் இலங்கையில் உள்ள மக்களுக்கு என்ன தீர்வு என்று கூறினாலும் நன்றாக இருக்கும். இங்கு பேச்சு வார்த்தையில் அரசியல் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள், அரசியல் ஒன்றுமே தெரியாத ஆயுதம்(??) தூக்கியவர்களும் இருக்கிறார்கள். வெளி நாடடவர் என்றால், சுயநலத்துடன் பங்கேற்கலாம். 

அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் என்ன தீர்வு சம்பந்தமாக பேசப்போகினம் ...?
ஏக்கிய ராஜ்யவா, ஒரு நாடு இரு தேசமா ...கூவிக்கூவி விற்ற எது ..?
இல்லை பொத்துவில் முதல் பொலிகண்டி போல இலங்கையின் குறுக்காக மட்டக்களப்பு முதல் மட்டக்குளிய வரையா...? சொல்ல திராணி இருக்கா கூத்தமைப்பிற்கும் அதனது வால்களுக்கும் ...? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடனான சந்திப்பில் பேசப்பட்டது என்ன..! தமிழ் எம்.பிக்கள் ஏமாற்றப்பட்டனரா

10-7.jpg

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை எனும் தொனியில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சந்திப்பின் பின் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை்த் தெரிவித்துள்ளனர்.

‘சந்திப்பு பெரிதாக நன்மை இல்லாவிட்டாலும், சில விடயங்கள் ஆறுதல் தந்தது’ என  நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

‘இன்றைய சந்திப்பில் காணி, சிறைக்கைதிகள், பயங்கரவாத தடைச் சட்டம் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டது. ஆனால், தமிழர் தரப்புக்கு இன்றைய சந்திப்பு திருப்திகரமாக அமையவில்லை’ என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

‘ஒரு பேச்சுவார்த்தைக்கு வரும் போது பல எதிர்பார்ப்புடன் தான் நாம் வருகிறோம். ஆனால் பேச்சுவார்த்தை வாயிலாக எம்மை ஏமாற்ற நினைத்தால், அதிபருக்கே ஏமாற்றம் கிடைக்கும்’ என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கூறுகிறார்.

மாகாண காணி விடயங்களை கையாள ஒம்புயூஸ்மன் ,1986 பிற்பட்ட வன இலாகா கைப்பற்றிய காணிகள் விடுவிப்பு, இராணுவம் கைப்பற்றியுள்ள மக்களின் காணிகள் விடுவிப்பு , தொல் பொருள் திணைக்களத்தின் அடாவடித்தனமான செயற்பாடு போன்ற விடயங்கள் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://akkinikkunchu.com/?p=245384

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று!

ஜனாதிபதி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் நாள் சந்திப்பு இன்று!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் இரண்டாம் நாள் இன்று நடைபெறவுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவே;ளை .நேற்றைய தினம் நடத்தப்பட கலந்துரையாடலில் நல்லிணக்கப் பொறிமுறைகள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விவகாரம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எனினும் தீர்க்கமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், மற்றும் தமிழ் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1331699

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடங்களாக பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள்,  எத்தனை நாடுகளில், முன்னிலையில், எதுக்கு என்று தெரியாமலேயே. ஆபிரிக்க தீர்வு முறை, அயர்லாந்து தீர்வு முறை, எது என்று இன்னும் முடிவில்லை.  இதுக்குள்ள சுதந்திரத்தினத்துக்கு முதல், வருட பிறப்புக்கு முன், தீபாவளிக்கு முன் என அறிக்கை.  எதுக்கு ஓடி விழுந்து போகிறார்கள்?  என்ன இருக்கிறது கொடுக்க என்று அவர்களும் தீர்மானிக்கவில்லை? என்ன பேசுவது என்று இவர்களும் தீர்மானிக்கவில்லை? ஒவ்வொரு அரசும் மாறும்போதும், தேர்தலை சந்திக்கும்போதும் கூடுவதும் கலைவதும். ஓ ....  வேற என்ன வேலைதான் இருக்கு இவர்களுக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதைத்தான் நாங்களும் கேட்கிறோம் என்ன தீர்வு சம்பந்தமாக பேசப்போகினம் ...?
ஏக்கிய ராஜ்யவா, ஒரு நாடு இரு தேசமா ...கூவிக்கூவி விற்ற எது ..?
இல்லை பொத்துவில் முதல் பொலிகண்டி போல இலங்கையின் குறுக்காக மட்டக்களப்பு முதல் மட்டக்குளிய வரையா...? சொல்ல திராணி இருக்கா கூத்தமைப்பிற்கும் அதனது வால்களுக்கும் ...? 

இங்கு ஒரு தீர்வும்  வரப்போவதில்லை. இங்குள்ளவர்களாலும் முடியாது , புலம் பெயர்ந்தவர்களாலும் முடியாது. இங்கே எழுதுவதற்கும் பொழுது போக்குவதட்கும் நல்ல ஒரு விடயம். தொடர்ந்து எழுதுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text that says 'the morning daily SOLVING NATIONAL ISSUE 2023.05.12. Prudeep'

பானையில் இருந்தால்(தானே)... அகப்பையில் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20230513-213819.jpg

ஆக மொத்தத்தில் மலிபன் விசுகொத்து கம்பெனி ஒனருக்குதான் லாபம்..😢

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2023 at 13:58, Cruso said:

இங்கு ஒரு தீர்வும்  வரப்போவதில்லை. இங்குள்ளவர்களாலும் முடியாது , புலம் பெயர்ந்தவர்களாலும் முடியாது. இங்கே எழுதுவதற்கும் பொழுது போக்குவதட்கும் நல்ல ஒரு விடயம். தொடர்ந்து எழுதுவோம். 

 

இன்றைய பொருளாதார நெருக்கடியை  வைத்து தமிழர் தரப்பு  எதையாவது  பெறணும்

இல்லையென்றால்  எப்பொழுதும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

 

இன்றைய பொருளாதார நெருக்கடியை  வைத்து தமிழர் தரப்பு  எதையாவது  பெறணும்

இல்லையென்றால்  எப்பொழுதும் இல்லை

அப்படியாவது முயட்சிக்கட்டும். எதாவது கிடைத்தால் நல்லதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

இன்றைய பொருளாதார நெருக்கடியை  வைத்து தமிழர் தரப்பு  எதையாவது  பெறணும்

பெறுவதற்கும் தருவதற்கும் ஏதாவது இருந்திருந்தால்; நாடு நாடாக பேசி இப்போ எழுபது வருடங்களின் பின் எந்த நாட்டின் தீர்வு நமக்கு உகந்தது என மாறி மாறி அலைகிறார்கள். தமிழன் இவர்களை கேட்டுக்கொண்டிருக்கும்வரை இது தொடரும். அதற்கிடையில் விகாரைகளும், இராணுவ முகாம்களும், குடியேற்றங்களும் நிறைந்து விடும், பிறகு இவர்கள் கேட்பதற்கு என்று ஒன்றும் இருக்கப்போவதில்லை. முளையிலேயே கிள்ளவோ தடுக்கவோ முடியவில்லை பெருவிருட்ஷத்தை தறிக்கவா முடியும்? யதார்த்தத்தை சொன்னேன்!

8 hours ago, விசுகு said:

இன்றைய பொருளாதார நெருக்கடியை  வைத்து

அப்படியொன்று இருந்தால், தமிழருக்கு என்று ஏதாவது கொடுக்க நினைத்தால், தீர்வு பேசுவோம், முதலிட வாருங்கள்! என்று சொல்லிக்கொண்டு பெருமளவில் செலவு செய்து பிரமாண்டமான விகாரைகள், சவால்கள், நிஞாயப்படுத்தல்கள் எதற்கு?   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.