Jump to content

வவுனியாவில் மாணவனை தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

க. அகரன் 

வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் மீது ஆசிரியர் தாக்கியதில் பாதிப்படைந்த மாணவன் நேற்று (21.09) வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 9ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு, அப் பாடசாலையின் பகுதித் தலைவராகிய ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். 

ஆனாலும், குறித்த மாணவன் மீண்டும் மீண்டும் குறித்த ஆசிரியரிடம் ஏன் என்னை அடிக்கிறீர்கள் என்று கேட்டத்தற்கு பதில் கூறாது அதற்கும் தன்னை தாக்கியதாகவும் மாணவன் தெரிவித்துள்ளார்.

எனினும், மாணவன் பெற்றோருக்கு இது தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்துள்ளார். இதனால் அதிக மன அழுத்ததிற்கு உள்ளான மாணவன் நேற்றைய தினம் (20.09) ஒரு கடிதத்தை தனது வீட்டில் எழுதி வைத்துள்ளார். 

குறித்த கடிதத்தை  கண்ட பெற்றோர் மாணவனை விசாரித்த போது, நடந்தவற்றை கூறி தனது அடிகாயங்களையும் உட்காயங்களையும் காட்டியுள்ளார். தொடர்ந்து மாணவனை வைத்தியசாலையில் அனுமதித்த பெற்றோர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் மாணவன் மூலம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதுடன், மாணவனின் கடிதத்தினை கொண்டு வவுனியா தலமை பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் மாணவனின் தந்தையால் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. 

மாணவனால் எழுதப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

அன்புள்ள அப்பா, அம்மா நான் சுயநினைவுடன் எழுதும் கடிதம். எனக்கு பாடசாலை செல்ல விருப்பமில்லாத நிலை ஏற்படுகிறது. காரணம் 11.09.2023 தொடக்கம் எனது கற்றல் நடவடிக்கை தொடர்பாக என்னை வகுப்புக்குள் அனுமதிக்கவில்லை.

அதற்கு காரணம் கேட்ட போது, பகுதித் தலைவர் பிரதாஸ் என்னை கீழே விழுத்தி தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து காலால் மிதித்து என்னை மாணவன் என்றும் பார்க்காது சித்திரவதை செய்கிறார்.

அதற்கு பிறகு இடைவேளை நேரம் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது என்னை வெளியே செல்ல விடவில்லை.

சிறுநீர் கழிக்க செல்ல கேட்டத்தற்கு தும்புத் தடியால் அடித்து, சப்பாத்து கால்களால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் உதைந்தார்.

20.09.2023 அன்று என்னை தும்புத்தடியால் அடித்து என் கை விறைத்து நிற்கும் போது என்னை பாவம் என்றும் பார்க்காமல் பூங்கன்றுக்கு தண்ணீர் ஊற்ற விட்டார். எனக்கு உடல் எங்கும் வலியாக உள்ளது. மூச்சு விட கஸ்டமாகவுள்ளது.

பாடசாலைக்கு வருவதற்கு சைக்கிள் ஓட நெஞ்சு வலிக்கிறது. இதனால் எனக்கு பாடசாலை வரவே விருப்பமில்லாது இருக்கிறது. எனவே எனது உடம்பிற்கு ஏற்படுமாயின் அதற்கு முழுக் காரணம் எனது பகுதித் தலைவராகிய ந.பிரதாஸ் ஆசிரியர் ஆவார் என அதில் கூறப்பட்டுள்ளது. 

இதேவளை, குறித்த ஆசிரியரால் ஏற்கனவே ஒரு மாணவன் மீது தும்புத்தடி கொண்டு தாக்கிய சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக பாடசாலை பெற்றோர் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது. 

குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி  அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

image_be9d741647.jpgerror####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20200KB


  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

Edited by நிலாமதி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவனின் தவறை முதலில் சுட்டிக்காட்டவேண்டும், பின்னர் வன்முறை அற்ற வழியில் மாணவன் திருந்தும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

ஆசிரியர் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கும் மேலாக தும்புத்தடி மற்றும் சப்பாத்து கால்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் கொடூரம் தொடர்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பாடசாலை உள்முரண்களை தூக்கி பிடிக்காமல் எல்லாரும் சேர்ந்து அந்த பாடசாலைக்கு இன்னொரு தும்புதடி வேண்டி கொடுக்க வேண்டும்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இப்படியான பாடசாலை உள்முரண்களை தூக்கி பிடிக்காமல் எல்லாரும் சேர்ந்து அந்த பாடசாலைக்கு இன்னொரு தும்புதடி வேண்டி கொடுக்க வேண்டும்

ஓம் தமிழ் மணவர்கள் தமிழ் ஆசிரியர்கள் உறவு என்பது நல்ல நிலையில் உயர் தரத்தில் உள்ளது என்று  சிங்களவர்களும்,  முஸ்லிம்களும் நம்பவைக்கபட வேண்டியது முக்கியம். ஆசிரியர் தும்புதடியால் மாணவனை போட்டு  நல்லாக அடிக்கலாம். செய்திகளை வெளியே தெரியவிட கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

 

6 hours ago, ஏராளன் said:

மாணவனின் தவறை முதலில் சுட்டிக்காட்டவேண்டும், பின்னர் வன்முறை அற்ற வழியில் மாணவன் திருந்தும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். 

மாணவன் என்ன தான் தவறு செய்திருந்தாலும் இப்படி மிருகத்தனமாக துன்புறுத்தக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனது சொந்தப்பிள்ளையானால் இப்படித் தாக்குவாரா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம், பிழைகளை எப்படி சுட்டிக்காட்டுவது தண்டிப்பதென்று.  அவருக்கு உடலில் மனதில் பிரச்சனையென்றால், உரிய முறைப்படி கடமையிலிருந்து விடுப்பு பெற்று முறைப்படி  தகுந்த சிகிச்சை பெற்றபின் பணிக்கு வந்திருக்கலாம். அந்த மாணவனின் மனதையும் உடலையும் வருத்துவதால் இவருக்கு நலம் கிடைக்குமா? சரி.... மாணவன் தவறே செய்திருந்த்தாலும் அதை எப்படி திருத்துவது என்று தெரியாதவர்,  குறித்த மாணவனின் பெற்றோரிடமாவது கேட்டுத்தெரிந்திருக்கலாம், எப்படி அவர்களுக்கு உரிய வகையில் புரியும் முறையில் கற்பிப்பார் என்று தெரியவில்லையே. இப்படிப்பட்ட ஆசிரியர்களாலேயே மாணவர்கள் இடை நடுவில் பாடசாலையில் இருந்து விலகி  எதிர்காலத்தை தொலைத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பெற்றோரும் ஆசிரியரும் அதிகப்பொறுப்புடன் கையாளவேண்டும் அவர்களை. எதற்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு வைக்கிறார்கள்? இணைந்து செயற்பட்டாலே ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கலாம். ஆசிரியர்களை கௌரவிப்பதற்காக ஆசிரியர் தினம் என விசேஷமாக ஒரு நாளை ஒதுக்கி தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவிப்பது எதற்காக? "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்." சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும். உருவாகும் சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளா உருகுலைக்கும் சிந்தனை கொண்டவர்களா என்பதை மாணவரின் எதிர்காலம் சாட்சி பகரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

குறித்த பாடசாலையில் ஒருசில மாதங்களுக்கு முன் பிறிதொரு ஆசிரயரால் வேறு ஒரு மாணவனின் செவியில் தாக்கி  அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதுடன் பாடசாலையின் நற்பெயர் குறித்து பெற்றோர் குறித்த விடயத்தை பெரிது படுத்தாமல் விட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

இதுதான் பிரச்சனையே, குடும்பப்பெயர் கெட்டுவிடும் , பாடசாலை பெயர் கெட்டுவிடும், ஊர் பெயர் கெட்டுவிடும், சமூகத்தின் பெயர் கெட்டுவிடும் என்று பல பிரச்சனைகளை மூடி மறைப்பதால்தான், மன உளைச்சல் தொடங்கி தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. 

சிலர் மனசாட்சியும் இல்லை, பயமும் இல்லை. யார் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தாம் நினைத்தபடி இப்படியெல்லாம் நடக்கத்தூண்டுகிறது. 

மாணவன் தவறு செய்தால் அதனை விசாரிப்பதற்கு ஒரு முறை உள்ளது. இப்படி செய்தமையால் ஆசிரியரின் தரம்தான் தாழ்ந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிலாமதி said:

இருபக்க விவாதத்தினையும் கேடட   பின் தான் முடிவுக்கு வரவேண்டும்.இருப்பினும் ஆசிரியத் தொழில் கடவுளுக்கு சமமானது . இப்படிநடக்கலாமா ?

நீங்கள் கூறியது சரி . இரு பக்கமும் விசாரித்தால் நல்லது. அந்த நாட்களில் மாணவர்களாக இருந்த பொது ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்கள். நல்லஒழுக்கம் மிகவும் முக்கியமாக பேண படடது.

இப்போது மாணவர்களின் நடத்தையில் அப்படியெல்லாம் காண முடியாது. ஆசிரியருக்கு முன்னாலேயே தூசனத்தில் ஏசுவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படியாக நிறைய ஒழுக்க கேடுகள் நடக்கின்றன. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பதை தவறாக எடுக்க முடியாது.

இருந்தாலும் இங்கு காலால் அடிப்பது, தும்புத்தடி கொண்டு அடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரம்பை கையாடாதவன் தன பிள்ளையை பகைக்கிறான் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அளவுடன் பிரம்பை கையாடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவம் நடந்தது வவுனியா மத்திய மகா வித்தியாலயத்தில். இது அடிதடி, குத்து வெட்டு, அதிபரை அடித்து இரவில் வகுப்பில் பூனையோடு பூட்டி வைத்து கொடுமைப் படுத்தல் , டெலோ புளொட் மாணவர் அணி சண்டையில் சுடப்பட்டு சாவது என்று பல சாகச நிகழ்வுகளுக்குப் பெயர் பெற்றது. ஆனால் bio / maths Al ரிசல்ட் வரும் பொழுது இழந்த பெயரை காப்பாற்றிக் கொள்ளும்.

நான் தரம் ஐந்தில் இருந்து உயர்தரம் வரைக்கும் இங்கு தான் படித்தேன்.

இரு பக்க விசாரணை முக்கியம் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒவ்வொருவரும் எந்த மூலையில் இருந்து எழுதுகின்றார்களோ என்ற உங்கள் கூற்று உங்களுக்கும் சேர்த்தே  பொருந்தும்.   அரசியல் கட்டுரை அல்லது விமர்சனம்  சில விடயங்களை சுட்டிக்காட்டும் போது அதை எதிர் கொள்ள முடியாமல் சிங்கள இனவாத அரசை பற்றி கூறவில்லையே. அவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்பது போன்ற கேள்வியை கேட்பது உங்கள் வாடிக்கை.  தமிழ் அரசியல்வாதிகளின் சுயநலத்தை தனது சிங்கள அரசு பாவித்தது என்று ஒரு கட்டுரையில் கூறியதை கவனிக்க மட்டீர்களா? அவ்வாறு அவர்கள்  கூறாவிட்டாலும் அது தானே உண்மை.   மேற்கண்ட  இணைப்புகளில் இருக்கும் உண்மைகளை  உங்களால் சகிக்கமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ளுகிறேன்.  ஆனால்,  தமிழரசுகட்சி தனது அரசியல் பாதையில் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகளை விட தனது பாராளுமன்ற பதவிக்கு போட்டியாக வந்த தனது அரசியல் எதிரிகளை  ஒழித்துகட்டுவதற்கே முதலிடம் கொடுத்தது என்பதை  அன்றைய வரலாற்றை தெரிந்த அனைவரும் அறிவர்.  நேர்மையாக இவை பற்றி எழுதிய அன்றைய ஈழநாடு பத்திரிகை மீது அவதூறை அள்ளி வீசி,  எச்சரிக்கும் தொனியில்,  “ஈழநாடே வாயை மூடு”  என்று,   அன்று சுதந்திரன்  பத்திரிகை எழுதியது. அதன் பின்னர் எதிர்தது விமர்சனம் செய்தவர்களை வாயை மூட வைத்து இன்றைய மீள முடியாத  அவலநிலைக்கு தமிழ் மக்களை  இட்டு சென்றது இவர்களின் அரசியல் தொடர்ச்சியே.   நான் தமிழர் அரசியல் வரலாறு பற்றி  பேசும் போது  அவற்றின் உண்மைகளை  மறைப்பதற்காக என் மீது அவதூறு பொழிவதிலே நீங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றீர்கள். நீ அந்த முகாம் அந்த இயக்கம் என்பது போன்ற இந்தப் பாணியை  நீங்கள்  பெற்றதும் அந்த  தமிழ் அரசியல் தொடர்ச்சி தான்.   உலக நாடுகளின் ஆதரவு இல்லாத வெறும் வார்த்தை ஜாலங்களூடான  வெற்று  அரசியல் தமிழ் மக்களை மேலும் பலவீனமாக்கவே உதவும் என்பதையும் அது பற்றி உங்களைக்கோ உங்களை போல  மாய உலகில் சஞ்சரிப்பவர்களுக்கோ  கவலை இல்லை என்பதும் தெரிந்ததே.   நீங்கள் கூறியவாறு எவரையும் சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமே இல்லை. இவர்களை பற்றி உலகம் அறியும். போலி துவாரகா வரை இவர்களின் சுயநல அரசியல் நீண்டே  செல்கிறது. போலி துவாரகாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லோருமே தமிழ் தேசிய தூண்கள் என்ற பிம்பத்துடன் முன்னர் வலம் வந்து இன்று முகமூடி கிழிந்து நிற்பவர்களே.  தமிழ் தேசிய அரசியல்  உருவாக்கிய போலி பிம்பங்களை விற்று பணம் பண்ணும் அரசியலை செய்து அவர்கள் காசு பார்கிறார்கள்.  இலங்கை ஒற்றையாட்சியை  நான்  ஆதரிப்பவன் என்று என்னைக்க கூறுகின்றீர்கள்.   ஆனால்,  இன்று தேசியம் பேசும் அத்தனை பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றையாட்சிக்கு விசுவாசமாக உள்ளவர்களே. இன்றைய தாயக/ புலம்பெயர் மக்களில் மிக பெரும்பான்மையினரை அரசியல் கதைக்கவே  ஆர்வமற்றவர்களாக மாற்றி,  பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று விலகி வாழும்  நிலையை ஏற்படுத்தியவர்களும் இவர்களே.  உங்களை போல என்னை போல ஒரு சிறு பகுதியினர் மட்டுமே இன்று  இலங்கையில் தமிழரின் எதிர்காலம் எப்படி அமையும், அமைய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு  அரசியல் விவாதங்களிலாவது ஈடுபட்டுள்ளோம்.  மிக பெரும்பான்மை தாயக/ புலம் பெயர் தமிழ் மக்கள் அரசியலில் இருந்து தம்மை விடுவித்து  இலங்கை ஒற்றையாட்சியை ஏற்று அதன் கீழ் வாழ்வதை ஏற்று கொண்டவர்களாகவே உள்ளனர் என்ற ஜதார்தத நிலையை உங்களால் விளங்கி கொள்ள முற்படமாட்டீர்கள். ஆனல் இந்த உண்மையை கூறிய என் மீது வசைமாரி பொரிவீர்கள் என்பது அறிந்ததே. அது பற்றி கவலை இல்லை.   இந்த எனது பதிவுக்கு  பதிலாகவும் என்மீது  வசை மாரி தான் வரும் என்பதும் நான் அறிந்ததே. 
    • ஆசிய பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கை : கண்காணிப்பு விமானத்தை வழங்கும் அவுஸ்திரேலியா! ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பணியாற்றுவதற்கு இலங்கைக்கு சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அன்பளிப்பாக வழங்குவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் மற்றும் வர்த்தக திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பகுதி) பிரதி செயலாளர் மிச்சேல் சங் இதற்கான இணக்கப்பாட்டைத் தெரிவித்துள்ளார். மிச்சேல் சங்கின் அண்மைய இலங்கை விஜயத்தின்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமையவே சிறப்பு கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலங்கைக்கு வழங்குகிறது. சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் என்பவற்றை தடுப்பது உள்ளிட்ட இலங்கையின் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முதற்கட்டமாக இந்த விமானம் வழங்கப்படுவதாக மிச்சேல் சங் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1380118
    • ரஷ்ய எல்லை பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட 68 யுக்ரேனிய ஏவுகணைகள். யுக்ரேன் வான்பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரைவுபடுத்தவுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது யுக்ரேனுக்கான ராணுவ ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் தெரிவித்துள்ளார் ரஷ்ய படையினரின் வான் அச்சுறுத்தல் அதிகரித்துவருவதனால் அவசரமாக தமக்கு பாதுகாப்பு ஒத்துழைப்பு தேவைப்படுவதாக யுக்ரென் ஜனாதிபதி வொலேடிமிர் ஸெலன்ஸ்கி அமெரிக்காவிடம் கோரிக்னை முன்வைத்திருந்தார் இந்த நிலையில் யுக்ரேனுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியிலான ராணுவ உதவியில் 6 பில்லியன் பெறுமதியான வான்பாதுகாப்பு உதவித்தொகை அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது இதேவேளை யுக்ரேனில் ரஷ்யா இன்று அதிகாலை பாரிய விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் கார்கிவ் நகரில் உள்ள வைத்தியசாலை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ரஷ்ய எல்லை பகுதியில் சுமார் 68 யுக்ரேனிய ஏவுகணைகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1380087
    • எனக்கும் இதே கொள்கை தான், மற்றும் சொந்த இடம் சாவகச்சேரி தான் என்பதால் நீங்கள் சொல்லும் தகவல் உண்மை என இத்தால் அறிவிக்கப்படுகின்றது 🥹
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.