Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

இந்த பின்புலத்தில் - வழமையாக a man who goes where the evidence takes him என அறியப்படும் நீங்கள் கூட, எந்த முகாந்திரத்தில் இதை செய்தது, புலி, புலி, புலியேதான் என சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

வழமையாக இங்கே ஆதரவாளர்கள் கேட்பது போல ஒரு மர்மக்கொலைக்கு நான் கையும் களவுமான caught red handed ஆதாரத்தை கேட்கவில்லை. சந்தர்ப சாட்சியமாவது உள்ளதா?

இருப்பின் - எழுதுங்கள்.

ரஜனிக்கு செய்யும் அதிகபட்ச நினைவாஞ்சலியாக அதுவே இருக்கும்.

அதே. ..

  • Replies 100
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மண்ணின் சாபம் - பேனைகளை துப்பாக்கிகள் சந்தித்த பல நிகழ்வுகள்.... சில...

"என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கி விடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாறினை பகிர்ந்து கொள்ளும், இச் சமூகத்தில் வாழும், பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால், ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாகவே இருக்கும்."

- ராஜனி ராஜசிங்கம் ( 1954 - 1987 ) தனது நண்பரொருவருக்கு கடைசியாக எழுதிய கடிதம்.

"இறுதியாக நான் கொல்லப்படும்போது, என்னைக் கொலை செய்தது ஆளும் அரசாகவே இருக்கும்."

லசந்த விக்கிரமதுங்க. ஆசிரியர் சண்டே லீடர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

 

இன்று வரை ரஜனியை புலிகள்தானா கொன்றார்கள் என்பதில் எனக்கு பலத்த சந்தேகமே.

 

 

அவரது இரண்டு புதல்விகள் தமது தாயாரை கொலை செய்தது யார், அவை சம்மந்தமான தகவல்களை Twitter/X இல் விரிவாக பகிர்ந்து உள்ளார்கள். வாசித்து பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அவரது இரண்டு புதல்விகள் தமது தாயாரை கொலை செய்தது யார், அவை சம்மந்தமான தகவல்களை Twitter/X இல் விரிவாக பகிர்ந்து உள்ளார்கள். வாசித்து பாருங்கள். 

எல்லோரும் சென்று வாசித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் 
யாழ்ப்பாணத்தில் நடந்து திரிந்தோருக்கு உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை 

3-4 வயது குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கு 
தெய்வமும் குழந்தையும் ஒன்று என்று ஊரில் சொல்வார்கள் 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

அவரது இரண்டு புதல்விகள் தமது தாயாரை கொலை செய்தது யார், அவை சம்மந்தமான தகவல்களை Twitter/X இல் விரிவாக பகிர்ந்து உள்ளார்கள். வாசித்து பாருங்கள். 

முடிந்தால் இங்கே பதிந்து விடுங்கள். புதல்விகள் இந்த முடிவுக்கு வர எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டார்கள், அந்த ஆதாரங்களின் நம்பகதன்மை பற்றி நாமும் வெளிப்படையாக ஆராயலாம்.

இன்றுவரை ரஜீவ் கொலையை தனியே புலிகள் மட்டுமே செய்தார்கள், அதில் எந்த இந்திய/வெளி நாட்டு மறை கரங்களும் ஈடுபடவில்லை என்ற official explanation ஐதான் ராகுலும், பிரியங்காவும் நம்பி கொண்டுள்ளார்கள்.

ஆகவே பாதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் இதை சரியாக புரிந்து கொள்வார்கள் என்பதல்ல.

பிகு

எந்த கொலையையும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

இங்கே அடிக்கடி கேட்கும் கோசமாகிய, கோசான் மாவீரரை அவமதிக்கிறார்… என்பதை போல் கோசான் புலிகளின் கொலைக்கு வெள்ளை அடிக்கிறார் என்ற கோசமும் அர்தமற்றது.

சட்டத்தில், ஒரு விடயத்தை நிறுவ 3 Standard of proof (நிறுவல் தராதரங்கள்) பாவிப்பார்கள்.

1. Beyond reasonable doubt (சந்தேகத்துக்கு அப்பால் - இதை இவங்கள் செய்தார்கள் என நிறுவுதல்)

2. On the balance of probabilities ( இதை இவர்கள் செய்ய இருந்த நிகழ்தகவு, செய்யாது விட இருக்கும் நிகழ்தகவை விட அதிகம்).

3. Reasonable likelihood (இதை இவர்கள் செய்திருக்க நியாயமான வாய்ப்பு உள்ளது). 

இதில் 3 வதின் அடிப்படையில் கூட புலிகளை குற்றம் சாட்ட வகை செய்யும் சாட்சியங்கள் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

கொலையில் சந்தேக நபர்களாக இன்றும் இருக்கிற தரப்புகளை

யாரிந்தத் தரப்புக்கள்? 2009 உடன் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்களே? அப்படியிருக்க, நீங்கள் நம்புவதன்படி புலிகளே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றால், இன்றும் உயிர்வாழும் அவர்களை நீங்கள் அடையாளம் காட்டலாமே? 

ரஜிணியைக் கொன்றது புலிகளே என்கிற நிலைப்பாட்டிலிருந்துதான் இன்று அவரது நினைவுதினமோ விமர்சனமோ முன்வைக்கப்பட்டு வருகிறது. யாழ்க்களத்தில்க் கூட ரஜிணியின் கொலையினைப் பற்றி விமர்சனம் முன்வைப்போர் அது புலிகளால் செய்யப்பட்டது என்கிற நிலைப்பாட்டில் இருந்துதான் தமது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஒரு பேச்சிற்கு ரஜிணியைக் கொன்றது புலிகள் அல்லாமல் இன்னொரு இயக்கமாக இருப்பின் இன்று ரஜிணியின் கொலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், விமர்சனமும் இதே விமர்சகர்களால் கொடுக்கப்படுமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், ரஜிணியைப் போலவே தமிழ்ச் சமூகத்தில் இருந்த இன்னும் பல ஜனநாயகவாதிகளும், மனிதவுரிமைவாதிகளும் மாற்று இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவைகுறித்து பேசப்படுவதில்லை, குறைந்தது ரஜிணியின் கொலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவற்றிற்குக் கொடுக்கப்படுவதில்லை. இக்கொலைகள் ஒவ்வொன்றும்  பத்தோடு பதினொன்றாகக் கடந்து செல்லப்படுகிறது. இவர்களின் மரணங்களைச் சாதாரண தமிழர்கள் நினைவுகூர்கிறார்களே அன்றி ரஜிணியின் கொலையினை விமர்சிப்பவர்களோ, நினைவுகூர்பவர்களோ செய்வதில்லை. நினைவுதினப் பேருரைகளோ, கருத்தரங்குகளோ இவர்களுக்காக நடத்தப்படுவதில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவில்லை. இரண்டாவது அவர்கள் புலிகளை விமர்சிக்கவில்லை. ஆகவே அவர்களின் மரணம் பற்றிப் பேசுவது அவசியமற்றதாகிவிடுகிறது. 

ரஜிணியின் கொலை தமிழ் மக்களால் நினைவுகூரப்படவும், சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டுமானால் ரஜிணியின் கொலையின் விமர்சனத்திற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமமான அரசியல் களையப்பட வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத்தையும், அதனை முன்னெடுத்துச் சென்ற புலிகளையும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பயங்கரவாதப் போராட்டம் என்றோ பயங்கரவாதிகள் என்றோ நிறுவுவதற்கு ரஜிணியின் கொலை பாவிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.அடுத்ததாக, ரஜிணியின் கொலையினைக் கேடயமாகப் பாவித்து தமிழர் விரோத, புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துவருகின்ற மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எனும் அமைப்பினை தமிழர்கள் ஒரு இனமாக ரஜிணியிடமிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இந்த அமைப்பின் ரஜிணிக்குப் பின்னரான செயற்பாடுகள் ரஜிணியின் கொலை பற்றிய சுயவிமர்சனத்தை தமிழினம் நியாயமாகச் செய்துகொள்வதை இதுவரை தடுத்தே வருகிறது.  

முடிவாக, ரஜிணி தமிழர்களின் மனிதவுரிமைகளுக்காகப் பேசிய ஒரு தமிழிச்சி. தமிழருக்கு நண்மையினையன்றி தீங்கெதையும் எண்ணியும் பார்க்காத ஒரு உன்னதர். தான் கொண்ட இலட்சியத்திற்காக தனதுயிரைக் கொடுத்தவர் அவர். இந்த அநியாயத்தை எவர் செய்திருப்பினும் அது கண்டிக்கப்பட வேண்டும். அவரது நினைவுதினம் அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட்டு சாதாரண மக்களால் அனுட்டிக்கப்படும் நிலை தோன்ற வேண்டும். அவரது மரணத்தின் பின்னால் குளிர்காயும் தமிழர் விரோத சக்திகள் அடையாளம் காணப்பட்டுக் களையப்பட வேண்டும். 

இதுவே நாம் ரஜிணிக்குக் கொடுக்கும் இறுதி மரியாதையாக இருக்கும் !

Edited by ரஞ்சித்
இதுவே நாம் ரஜிணிக்குக் கொடுக்கும் இறுதி மரியாதையாக இருக்கும் !

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Maruthankerny said:

எல்லோரும் சென்று வாசித்து உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள் 
யாழ்ப்பாணத்தில் நடந்து திரிந்தோருக்கு உண்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை 

3-4 வயது குழந்தைகளுக்கு தெரிந்திருக்க நிறைய வாய்ப்பிருக்கு 
தெய்வமும் குழந்தையும் ஒன்று என்று ஊரில் சொல்வார்கள் 😂

 

 

தாய் கொலை செய்யப்பட்டபோது ஒருவருக்கு 11 வயது, மற்றவருக்கு 09 வயது. இதில் இளையவர் Stanford பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். 

அவர் பதிவு ஒன்றை விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் தளபதி கிட்டு அவர்களின் காதலி/மனைவி இதில் ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது மடியில் இருத்தி அவர்கள் தாய் கொலைசெய்யப்பட்ட பின்னர் வீட்டில் நின்று உளவு பார்த்ததாக கூறுகின்றார். 

31 minutes ago, goshan_che said:

முடிந்தால் இங்கே பதிந்து விடுங்கள். புதல்விகள் இந்த முடிவுக்கு வர எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டார்கள், அந்த ஆதாரங்களின் நம்பகதன்மை பற்றி நாமும் வெளிப்படையாக ஆராயலாம்.

இன்றுவரை ரஜீவ் கொலையை தனியே புலிகள் மட்டுமே செய்தார்கள், அதில் எந்த இந்திய/வெளி நாட்டு மறை கரங்களும் ஈடுபடவில்லை என்ற official explanation ஐதான் ராகுலும், பிரியங்காவும் நம்பி கொண்டுள்ளார்கள்.

ஆகவே பாதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் இதை சரியாக புரிந்து கொள்வார்கள் என்பதல்ல.

பிகு

எந்த கொலையையும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

இங்கே அடிக்கடி கேட்கும் கோசமாகிய, கோசான் மாவீரரை அவமதிக்கிறார்… என்பதை போல் கோசான் புலிகளின் கொலைக்கு வெள்ளை அடிக்கிறார் என்ற கோசமும் அர்தமற்றது.

சட்டத்தில், ஒரு விடயத்தை நிறுவ 3 Standard of proof (நிறுவல் தராதரங்கள்) பாவிப்பார்கள்.

1. Beyond reasonable doubt (சந்தேகத்துக்கு அப்பால் - இதை இவங்கள் செய்தார்கள் என நிறுவுதல்)

2. On the balance of probabilities ( இதை இவர்கள் செய்ய இருந்த நிகழ்தகவு, செய்யாது விட இருக்கும் நிகழ்தகவை விட அதிகம்).

3. Reasonable likelihood (இதை இவர்கள் செய்திருக்க நியாயமான வாய்ப்பு உள்ளது). 

இதில் 3 வதின் அடிப்படையில் கூட புலிகளை குற்றம் சாட்ட வகை செய்யும் சாட்சியங்கள் உள்ளதா?

 

கூகிழ் தேடலில் எல்லாம் வருமே. நேரம் உள்ளபோது பாருங்கள். 

விக்கியில் அதற்குரிய இணைப்பு உள்ளது. சாவு பகுதியில் உள்ள மேற்கோள் இணைப்பில் குறிப்பிட்ட சம்பாசணையின் டுவிட்டர் தொடுப்பு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நியாயத்தை கதைப்போம் said:

 

தாய் கொலை செய்யப்பட்டபோது ஒருவருக்கு 11 வயது, மற்றவருக்கு 09 வயது. இதில் இளையவர் Stanford பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். 

அவர் பதிவு ஒன்றை விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் தளபதி கிட்டு அவர்களின் காதலி/மனைவி இதில் ஒரு சிறுமியை வலுக்கட்டாயமாக தனது மடியில் இருத்தி அவர்கள் தாய் கொலைசெய்யப்பட்ட பின்னர் வீட்டில் நின்று உளவு பார்த்ததாக கூறுகின்றார். 

அதுதானே வாசித்து எல்லோரையும் உண்மைகளை அறிய சொல்லி உள்ளேன் 
ரஜனியும் கிட்டுவின்  காதலியும் நண்பர்கள் ( அந்த உண்மை 9 11 வயது குழந்தைகளுக்கு தெரியாமல் போயிருக்குமோ தெரியவில்லை) 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people smiling and text

காண்டீபன் ரஜனியை சுட்டு நாம் 20-25 வருசமா நினைவாண்டு கொண்டாடிவருகிறோம் 

30 ஆண்டு முடியும்போது காண்டீபன் கதை எதோ காரணத்தால் ஒத்துவரவில்லை 

இப்போ சுட்ட்து போஸ்க்கோ அண்ணராம் இப்போ ட்விட்டர் பேஸ்கபுக் எல்லாம் இதுதான் ட்ரெண்ட் 

89 இறுதியில் இந்திய இராணுவம் வெளியேறிக்கொண்டு இருக்கும்போது 
போஸ்க்கோ அண்ணர் எங்கிருந்தார் என்பதுகூட தெரியவில்லை பலருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

கூகிழ் தேடலில் எல்லாம் வருமே. நேரம் உள்ளபோது பாருங்கள். 

விக்கியில் அதற்குரிய இணைப்பு உள்ளது. சாவு பகுதியில் உள்ள மேற்கோள் இணைப்பில் குறிப்பிட்ட சம்பாசணையின் டுவிட்டர் தொடுப்பு உள்ளது. 

அதை இங்கே இணைக்க சொன்னதன் நோக்கம் - அந்த பிள்ளைகள் எவ்வளவு அப்பாவித்தனமாக இந்த கொலைக்கான ஆதாரங்கள் என சிலதை நம்பி கொண்டிருக்கிறார்கள் என காட்டவே.

அவர்களின்  நம்பிக்கையின் அடித்தளமே - கொலையின் போது சுட்டவர்கள் “தாம் புலிகள்” என்ற வகையில் ரஜனியிடம் பேசினார்கள் என்பதே…..

இந்திய கேணல் சசிகுமார், ஈபிஆர் எல் எவ் உறுப்பினரை வைத்து புலிகள் மீது பழி விழும் விதமாக ரஜனியை கொல்லும் போது, கொலையாளிகள் தாம் யாரெனெ அடையாளம் காட்டுவார்கள்? புலிகள் என்றுதானே?

ஒருவர் தானே கொலையாளி என முன்வந்த போதும்…

அந்த இயக்கத்தில் இருந்த அற்புதன் இதை பின்னர் வெளிக்கொணர்ந்த போதும்….

ஏன் இதை யாரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல்…

செய்தது புலியே, புலியே என மந்திர உச்சாடனம் செய்கிறனர்.

இதை பிள்ளைகள் நம்பலாம். 

நாம்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரஞ்சித் said:

யாரிந்தத் தரப்புக்கள்? 2009 உடன் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்களே? அப்படியிருக்க, நீங்கள் நம்புவதன்படி புலிகளே இதனைச் செய்திருக்கிறார்கள் என்றால், இன்றும் உயிர்வாழும் அவர்களை நீங்கள் அடையாளம் காட்டலாமே? 

ரஜிணியைக் கொன்றது புலிகளே என்கிற நிலைப்பாட்டிலிருந்துதான் இன்று அவரது நினைவுதினமோ விமர்சனமோ முன்வைக்கப்பட்டு வருகிறது. யாழ்க்களத்தில்க் கூட ரஜிணியின் கொலையினைப் பற்றி விமர்சனம் முன்வைப்போர் அது புலிகளால் செய்யப்பட்டது என்கிற நிலைப்பாட்டில் இருந்துதான் தமது விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். ஒரு பேச்சிற்கு ரஜிணியைக் கொன்றது புலிகள் அல்லாமல் இன்னொரு இயக்கமாக இருப்பின் இன்று ரஜிணியின் கொலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், விமர்சனமும் இதே விமர்சகர்களால் கொடுக்கப்படுமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், ரஜிணியைப் போலவே தமிழ்ச் சமூகத்தில் இருந்த இன்னும் பல ஜனநாயகவாதிகளும், மனிதவுரிமைவாதிகளும் மாற்று இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். ஆனால் அவைகுறித்து பேசப்படுவதில்லை, குறைந்தது ரஜிணியின் கொலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் அவற்றிற்குக் கொடுக்கப்படுவதில்லை. இக்கொலைகள் ஒவ்வொன்றும்  பத்தோடு பதினொன்றாகக் கடந்து செல்லப்படுகிறது. இவர்களின் மரணங்களைச் சாதாரண தமிழர்கள் நினைவுகூர்கிறார்களே அன்றி ரஜிணியின் கொலையினை விமர்சிப்பவர்களோ, நினைவுகூர்பவர்களோ செய்வதில்லை. நினைவுதினப் பேருரைகளோ, கருத்தரங்குகளோ இவர்களுக்காக நடத்தப்படுவதில்லை. இதற்கு இரு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டவில்லை. இரண்டாவது அவர்கள் புலிகளை விமர்சிக்கவில்லை. ஆகவே அவர்களின் மரணம் பற்றிப் பேசுவது அவசியமற்றதாகிவிடுகிறது. 

ரஜிணியின் கொலை தமிழ் மக்களால் நினைவுகூரப்படவும், சுய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டுமானால் ரஜிணியின் கொலையின் விமர்சனத்திற்குப் பின்னால் இருக்கும் சூட்சுமமான அரசியல் களையப்பட வேண்டும். தமிழ் மக்களின் போராட்டத்தையும், அதனை முன்னெடுத்துச் சென்ற புலிகளையும் உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பயங்கரவாதப் போராட்டம் என்றோ பயங்கரவாதிகள் என்றோ நிறுவுவதற்கு ரஜிணியின் கொலை பாவிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.அடுத்ததாக, ரஜிணியின் கொலையினைக் கேடயமாகப் பாவித்து தமிழர் விரோத, புலியெதிர்ப்பு அரசியலை முன்னெடுத்துவருகின்ற மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எனும் அமைப்பினை தமிழர்கள் ஒரு இனமாக ரஜிணியிடமிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால், இந்த அமைப்பின் ரஜிணிக்குப் பின்னரான செயற்பாடுகள் ரஜிணியின் கொலை பற்றிய சுயவிமர்சனத்தை தமிழினம் நியாயமாகச் செய்துகொள்வதை இதுவரை தடுத்தே வருகிறது.  

முடிவாக, ரஜிணி தமிழர்களின் மனிதவுரிமைகளுக்காகப் பேசிய ஒரு தமிழிச்சி. தமிழருக்கு நண்மையினையன்றி தீங்கெதையும் எண்ணியும் பார்க்காத ஒரு உன்னதர். தான் கொண்ட இலட்சியத்திற்காக தனதுயிரைக் கொடுத்தவர் அவர். இந்த அநியாயத்தை எவர் செய்திருப்பினும் அது கண்டிக்கப்பட வேண்டும். அவரது நினைவுதினம் அரசியலாக்கப்படுவது தவிர்க்கப்பட்டு சாதாரண மக்களால் அனுட்டிக்கப்படும் நிலை தோன்ற வேண்டும். அவரது மரணத்தின் பின்னால் குளிர்காயும் தமிழர் விரோத சக்திகள் அடையாளம் காணப்பட்டுக் களையப்பட வேண்டும். 

இதுவே நாம் ரஜிணிக்குக் கொடுக்கும் இறுதி மரியாதையாக இருக்கும் !

எந்த நாயும் தமிழரின் பாதையில் ஒரு புல்லை கூட புடுங்க போவதில்லை 
"குரைக்கிற நாய் கடிக்காது"  என்பதை கண்கூடே பார்க்கிறேன் 

குறைகிற நாய்களை அதன்பாட்டில் குரைக்க விட்டுவிட்டு 
நகருவதே பலவழியில் பயன் தருவதொன்று  

22 minutes ago, goshan_che said:

அதை இங்கே இணைக்க சொன்னதன் நோக்கம் - அந்த பிள்ளைகள் எவ்வளவு அப்பாவித்தனமாக இந்த கொலைக்கான ஆதாரங்கள் என சிலதை நம்பி கொண்டிருக்கிறார்கள் என காட்டவே.

அவர்களின்  நம்பிக்கையின் அடித்தளமே - கொலையின் போது சுட்டவர்கள் “தாம் புலிகள்” என்ற வகையில் ரஜனியிடம் பேசினார்கள் என்பதே…..

இந்திய கேணல் சசிகுமார், ஈபிஆர் எல் எவ் உறுப்பினரை வைத்து புலிகள் மீது பழி விழும் விதமாக ரஜனியை கொல்லும் போது, கொலையாளிகள் தாம் யாரெனெ அடையாளம் காட்டுவார்கள்? புலிகள் என்றுதானே?

ஒருவர் தானே கொலையாளி என முன்வந்த போதும்…

அந்த இயக்கத்தில் இருந்த அற்புதன் இதை பின்னர் வெளிக்கொணர்ந்த போதும்….

ஏன் இதை யாரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல்…

செய்தது புலியே, புலியே என மந்திர உச்சாடனம் செய்கிறனர்.

இதை பிள்ளைகள் நம்பலாம். 

நாம்?

89 இறுதியில் புலிகள் சுடாது போயிருந்தால் 
90இல் இந்திய இராணுவம் வெளியேறிய பின்பு ?? 

யாழ்ப்பாணத்தில் ரஜனியை புலிகளால் நெருங்கி கூட இருக்க முடியாது 
என்பதுதான் புலிகள் சுட்டதன் உண்மையான காரணமாக இருக்கும் என்று 
நான் முழுமையாக நம்புகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முடிந்தால் இங்கே பதிந்து விடுங்கள். புதல்விகள் இந்த முடிவுக்கு வர எந்த ஆதாரத்தை அடிப்படையாக கொண்டார்கள், அந்த ஆதாரங்களின் நம்பகதன்மை பற்றி நாமும் வெளிப்படையாக ஆராயலாம்.

இன்றுவரை ரஜீவ் கொலையை தனியே புலிகள் மட்டுமே செய்தார்கள், அதில் எந்த இந்திய/வெளி நாட்டு மறை கரங்களும் ஈடுபடவில்லை என்ற official explanation ஐதான் ராகுலும், பிரியங்காவும் நம்பி கொண்டுள்ளார்கள்.

ஆகவே பாதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் இதை சரியாக புரிந்து கொள்வார்கள் என்பதல்ல.

பிகு

எந்த கொலையையும் வெள்ளை அடிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

இங்கே அடிக்கடி கேட்கும் கோசமாகிய, கோசான் மாவீரரை அவமதிக்கிறார்… என்பதை போல் கோசான் புலிகளின் கொலைக்கு வெள்ளை அடிக்கிறார் என்ற கோசமும் அர்தமற்றது.

சட்டத்தில், ஒரு விடயத்தை நிறுவ 3 Standard of proof (நிறுவல் தராதரங்கள்) பாவிப்பார்கள்.

1. Beyond reasonable doubt (சந்தேகத்துக்கு அப்பால் - இதை இவங்கள் செய்தார்கள் என நிறுவுதல்)

2. On the balance of probabilities ( இதை இவர்கள் செய்ய இருந்த நிகழ்தகவு, செய்யாது விட இருக்கும் நிகழ்தகவை விட அதிகம்).

3. Reasonable likelihood (இதை இவர்கள் செய்திருக்க நியாயமான வாய்ப்பு உள்ளது). 

இதில் 3 வதின் அடிப்படையில் கூட புலிகளை குற்றம் சாட்ட வகை செய்யும் சாட்சியங்கள் உள்ளதா?

வணக்கம் கோஷான்,

2014 ஆம் ஆண்டு இதே திரியில் நீங்கள் எழுதிய கருத்துக்களையும் இன்று நீங்கள் எழுதும் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நிறையவே வித்தியாசம் தெரிகிறது. அதை ஏன் என்று நான் அறிந்துகொள்ளலாமா? உங்களை இப்படி மாற்றியது எதுவென்று கூறமுடியுமா? 

இப்படிக் கேட்பதால் நீங்கள் ரஜிணியின் கொலையினை நியாயப்படுத்துகிறீர்கள் என்றோ அல்லது புலிகள் இதனைச் செய்யவில்லையென்று வாதிடுகிறீர்கள் என்றோ நான் அர்த்தப்படுத்தவில்லை. அன்றைய உங்களின் எழுத்துக்களில் இதுகுறித்து நீங்கள் முன்வைத்த கோபமும், தீவிரமும் இன்றில்லை. அதனாலேயே கேட்கிறேன்.

உடனேயே, "அப்படியா, நான் அன்று எழுதியது போலவே இனி எழுதுகிறேன்" என்று போய்விட வேண்டாம். உங்களின் இன்றைய நடை பிடித்திருக்கிறது, அவ்வளவுதான்.

நன்றி 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

வணக்கம் கோஷான்,

2014 ஆம் ஆண்டு இதே திரியில் நீங்கள் எழுதிய கருத்துக்களையும் இன்று நீங்கள் எழுதும் கருத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். நிறையவே வித்தியாசம் தெரிகிறது. அதை ஏன் என்று நான் அறிந்துகொள்ளலாமா? உங்களை இப்படி மாற்றியது எதுவென்று கூறமுடியுமா? 

இப்படிக் கேட்பதால் நீங்கள் ரஜிணியின் கொலையினை நியாயப்படுத்துகிறீர்கள் என்றோ அல்லது புலிகள் இதனைச் செய்யவில்லையென்றோ வாதிடுகிறீர்கள் என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. அன்றைய உங்களின் எழுத்துக்களில் இதுகுறித்து நீங்கள் முன்வைத்த கோபமும், தீவிரமும் இன்றில்லை. அதனாலேயே கேட்கிறேன்.

உடனேயே, "அப்படியா, நான் அன்று எழுதியது போலவே இனி எழுதுகிறேன்" என்று போய்விட வேண்டாம். உங்களின் இன்றைய நடை பிடித்திருக்கிறது, அவ்வளவுதான்.

நன்றி 

இது சம்பந்தமாக நான் அன்றும், இன்றும் இதை செய்தது யார் என்ற முடிவுக்கு வரமுடியாமலேயே இருக்கிறேன்.

அன்று புலிகள் இதை மறுக்கவில்லை ஆகவே அவர்கள் செய்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அது தவறான நிலைப்பாடு என உணர்ந்து கொண்டேன்.

இந்த சிந்தனை மாற்றத்தை தந்தவை பல விடயங்கள் அதில் இரெண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

1.ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும்

2. யாழில் ஒருவர் ஊடுருவி சில வேலைகளை யாழ்கள உறவுகளை பாவித்து செய்ய முனைந்தமை

இந்த இரெண்டு சம்பவங்களும் திட்டமிட்டு ஒரு புலனாய்வு அமைப்பு நகரும் போது, “பழி ஓரிடம், பாவம் ஓரிடம்” என்ற நிலையை எவ்வளவு விரைவாக ஏற்படுத்தி விடலாம் என்பதை எனக்கு உணர்த்தியது.

இந்த பிண்ணனியிலேயே எனது ரஜனி கொலை பற்றிய புரிதலும் மீள் யோசனைக்கு உள்ளாகியது.

ஆனால் இன்றும் நான் இதை புலிகள் செய்யவில்லை என வாதாட தயாராக இல்லை. அவர்கள் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதே என் கேள்வி.

ஆனால் இதை புலிகள் ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி, விமர்சனம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

என்ன,  முன்னர் போல் வார்த்தைகள் கடுமையாக வருவதில்லை, வால்கள் மீதான கடுப்பை புலிகள் மீது காட்டுவதும் இல்லை….

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இது சம்பந்தமாக நான் அன்றும், இன்றும் இதை செய்தது யார் என்ற முடிவுக்கு வரமுடியாமலேயே இருக்கிறேன்.

அன்று புலிகள் இதை மறுக்கவில்லை ஆகவே அவர்கள் செய்திருக்கலாம் என்பதே என் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால் காலப்போக்கில் அது தவறான நிலைப்பாடு என உணர்ந்து கொண்டேன்.

இந்த சிந்தனை மாற்றத்தை தந்தவை பல விடயங்கள் அதில் இரெண்டு குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.

1.ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும்

2. யாழில் ஒருவர் ஊடுருவி சில வேலைகளை யாழ்கள உறவுகளை பாவித்து செய்ய முனைந்தமை

இந்த இரெண்டு சம்பவங்களும் திட்டமிட்டு ஒரு புலனாய்வு அமைப்பு நகரும் போது, “பழி ஓரிடம், பாவம் ஓரிடம்” என்ற நிலையை எவ்வளவு விரைவாக ஏற்படுத்தி விடலாம் என்பதை எனக்கு உணர்த்தியது.

இந்த பிண்ணனியிலேயே எனது ரஜனி கொலை பற்றிய புரிதலும் மீள் யோசனைக்கு உள்ளாகியது.

ஆனால் இன்றும் நான் இதை புலிகள் செய்யவில்லை என வாதாட தயாராக இல்லை. அவர்கள் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்பதே என் கேள்வி.

ஆனால் இதை புலிகள் ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி, விமர்சனம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

என்ன,  முன்னர் போல் வார்த்தைகள் கடுமையாக வருவதில்லை, வால்கள் மீதான கடுப்பை புலிகள் மீது காட்டுவதும் இல்லை….

 

நன்றி !

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நான் மேலே எழுதும் போதே இதற்கு இப்படி ஒரு எதிர்வினை வரும் என்று நான் எதிர்பாத்தே எழுதினேன்.

இதே நான் - ஆனந்தராஜ போன்ற நிச்சயமாக புலிகள் செய்தது என்று கருதப்படும் கொலைகளில் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

ஆனால் ரஜனியின் கொலை நடந்த அன்றே இதை இந்திய சார்பு இயக்கங்களே செய்ததாக யாழில் குசு குசுக்கப்பட்டது.

இங்கே நீங்களும், கீழே ரதி அக்காவும், ஏன் நிர்மலாவும் கூட இதுவரை ஒரு iota of evidence ஐ கூட இதை புலிகள்தான் செய்தார்கள் என காட்ட முன்வைக்கவில்லை.

1. புலிகளை போல அல்லது ஒரு படி மேலாக சகிப்புதன்மை அற்றவர்களாகவே அன்று இந்த இயக்கங்கள் இருந்தன.

2. இரெண்டு பகுதியிலும் கடை நிலை போராளி கூட பிஸ்டலை எடுத்து, ஒருவரை போட்டு தள்ளிவிட்டு போகும் நிலையில்தான் 87-89 யாழ்பாணம் இருந்தது.

3. இரெண்டு பகுதியும் ஆயுத வன்முறையில் நம்பிக்கை வைத்தோராகவே இருந்தனர்.

4. முறிந்த பனையில் சொல்லப்பட்டதுதான் கொலைக்கான காரணம் எனில் புலிகளை விட, இந்திய படைகளைத்தான் அந்த புத்தகம் அதிகம் அம்பலபடுத்தியுள்ளது.

இந்தியா இலங்கையில் போர்குற்றம் இழைத்தது என்பதை இந்த புத்தகம் ஆதாரத்தோடு நிறுவியது.

இந்த பின்புலத்தில் - வழமையாக a man who goes where the evidence takes him என அறியப்படும் நீங்கள் கூட, எந்த முகாந்திரத்தில் இதை செய்தது, புலி, புலி, புலியேதான் என சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

வழமையாக இங்கே ஆதரவாளர்கள் கேட்பது போல ஒரு மர்மக்கொலைக்கு நான் கையும் களவுமான caught red handed ஆதாரத்தை கேட்கவில்லை. சந்தர்ப சாட்சியமாவது உள்ளதா?

இருப்பின் - எழுதுங்கள்.

ரஜனிக்கு செய்யும் அதிகபட்ச நினைவாஞ்சலியாக அதுவே இருக்கும்.

 

 

புலிகள் தான் செய்தார்கள் என்று நிறுவும் திண்ணமான ஆதாரங்களெவையும் இல்லை. ஆனால், புலிகளை சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்து அகற்ற ஏதுவான exonerating evidence உம் இல்லை! எனவே தான் சந்தேக நபர்கள் என்று என் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் - புலிகள் தான் செய்தார்கள் என்று அல்ல!

நீங்கள் குறிப்பிடுவது போல, இஸ்ரேலிய மொசாட் பாணியில் "neither confirm nor deny" ஆக புலிகள் மௌனமாக இருந்தது உங்களைப் பொறுத்த வரை "சறுக்கல்" - எனக்கு அது தான் smoking gun ஆகத் தெரிகிறது. 1989 இல் கொலை நடக்கிறது, 1995 வரை புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் ஏதாவது திராணகம நினைவு நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா? குறைந்த பட்சம் பல்கலையினுள்ளாவது நடந்ததா? இல்லையெனில், ஏன்?

1995 வரையான காலப்பகுதியில், புலிகள் மக்களோடு பல வழிகளில் தொடர்பில் இருந்தார்கள் - எந்த சந்தர்ப்பத்திலாவது "தாம் செய்யவில்லை" என உத்தியோக பூர்வமில்லாமல் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.

உதாரணமாக, 1995 இல், இப்படி பட்ட ஒரு உத்தியோகப் பற்றற்ற ஆட்சேர்ப்புப் பிரச்சாரக் கூட்டத்தில், "ரஜனியை ஏன் கொன்றீர்கள்?" என்ற ஒரு கேள்வியை ஒரு 10 ஆம் ஆண்டு மாணவன் ஐங்கரனின் யுனிவேர்சல் கொட்டிலில் கேட்ட போது புலிகளின் குரலின் சிட்டு (?) கோபமாக மறுக்கவில்லை, ஆனால் "தம்பி உங்களோடு தனியே பேச வேணும்!" என்று கோபம் தான் கொண்டார். பின்னர் கூட்டத்தை நாமே முடிக்க வைத்து, 10 ஆம் ஆண்டு வகுப்பை மட்டும் வெளியே விடாமல் ஐங்கரன் வாத்தி வரும் வரை உள்ளே வைத்திருந்தோம் (சிட்டு வெளியே மோட்டர் பைக்கோடு காத்திருந்து, ஐங்கரன் தான் பேசி அனுப்பி வைத்தார்!). ஆக, 6 ஆண்டுகளாக, புலிகள் ஒவ்வொரு மறுக்கக் கிடைத்த சிறு வாய்ப்புகளையும் - இப்படியான ஒரு பிரபல குற்றச் செயலில் - தவற விட்டார்கள் என நான் நம்பவில்லை!

மேலும், இங்கே புலிகள் தமது நற்பெயருக்கு கேடு வரக்கூடிய கொலைகளைச் செய்ய மாட்டார்கள் என்பதும் பல தடவைகள் பொய்யாக்கப் பட்ட ஒரு நம்பிக்கை. ஆனந்த ராஜா, மிக லேற்றாக 2000 களில் ராஜதுரை ஆகியோர் பெயர் சொல்லத் தக்க உதாரணங்கள்.

இப்படிப் பல சந்தர்ப்ப சாட்சியங்கள் சுட்டுவது, ஏனைய தரப்புகளோடு சமமான சந்தேக நபர்களாக புலிகளும் இருக்கின்றனர்.

சுருக்கமாக, சிலர்  இங்கே தெரிந்தோ/தெரியாமலோ செய்வது வழமையான வெள்ளையடித்தல் முயற்சி தான்:  "புலிகள் சுட்டிருந்தால் அவர்கள் துரோகிகள், அப்படிக் கொல்லப் பட்டவர்களை துரோகிகளாக நிறுவ முடியா விட்டால், அவர்களைப் புலிகள் சுட்டிருக்க வாய்ப்பில்லை!"

எனவே, ஒரு சமமான சந்தர்ப்ப ரீதியான வாய்ப்புகள் (உங்கள் மேல் சட்ட நியமம் 2 அல்லது 3) கொண்ட ஒரு தரப்பை நல்ல ஒளியில் காட்ட முனைவது நிச்சயம் அமரர் திராணகமவிற்கு அஞ்சலியல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

நீங்கள் குறிப்பிடுவது போல, இஸ்ரேலிய மொசாட் பாணியில் "neither confirm nor deny" ஆக புலிகள் மௌனமாக இருந்தது உங்களைப் பொறுத்த வரை "சறுக்கல்" - எனக்கு அது தான் smoking gun ஆகத் தெரிகிறது. 1989 இல் கொலை நடக்கிறது, 1995 வரை புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் ஏதாவது திராணகம நினைவு நிகழ்வுகள் நடந்திருக்கின்றனவா? குறைந்த பட்சம் பல்கலையினுள்ளாவது நடந்ததா? இல்லையெனில், ஏன்?

இல்லை.

ஏன் எனில் இதுதான் புலிகள். தம்மை ரஜனி விமர்சித்து விட்டார். ஆகவே அவர் தமக்கு ஆகாதவர்.

அவரை வேறு யாரோ கொலை செய்து பழியை தம் மீது போட்டாலும் கூட அதை பற்றி அலட்டி கொள்ள மாட்டார்கள்.

ரஜனிக்கு நினைவேந்தலும் வைக்கமாட்டார்கள். தடுத்தும் கூட இருப்பார்கள்.

சிலவேளை எங்கே இதை மறுத்தால், தாம் செய்த சிலதை ஏன் மறுக்கவில்லை என்ற கேள்வி எழும் என்பது காரணமாயும் இருக்கலாம்.

தர்மலிங்கம், அமிர் கொலைகளை எடுங்கள். ஒன்று டெலோ, மற்றையது புலிகள். ஆனால் இரெண்டுக்கும் புலிகளின் ரியாக்சன் ஒன்றேதான்.

இப்போ விஜே குமாரதுங்க, அத்துலத்முதலி, கொபேகடுவ கொலைகளையும், பிரேமதாசவையும் எடுங்கள். அங்கேயும் அவர்தான் பலரின் சந்தேக நபர் - ஆனால் மனுசன் தான் சாகும் வரை மூன்றிலும் தன் பங்கு இல்லை என மேடை மேடையாக மறுத்தது.

இருவரின் இராஜதந்திர அணுகுமுறையும் மிக வித்தியாசமானது.

ஆகவே இதை எந்தளவுக்கு smoking gun ஆக கருதலாம் என தெரியவில்லை.

39 minutes ago, Justin said:

1995 வரையான காலப்பகுதியில், புலிகள் மக்களோடு பல வழிகளில் தொடர்பில் இருந்தார்கள் - எந்த சந்தர்ப்பத்திலாவது "தாம் செய்யவில்லை" என உத்தியோக பூர்வமில்லாமல் சொல்லியிருக்கிறார்களா? இல்லை.

இதையும் என் மேல் உள்ள பதில் தொட்டு சொல்வதாக எண்ணுகிறேன்.

39 minutes ago, Justin said:

உதாரணமாக, 1995 இல், இப்படி பட்ட ஒரு உத்தியோகப் பற்றற்ற ஆட்சேர்ப்புப் பிரச்சாரக் கூட்டத்தில், "ரஜனியை ஏன் கொன்றீர்கள்?" என்ற ஒரு கேள்வியை ஒரு 10 ஆம் ஆண்டு மாணவன் ஐங்கரனின் யுனிவேர்சல் கொட்டிலில் கேட்ட போது புலிகளின் குரலின் சிட்டு (?) கோபமாக மறுக்கவில்லை, ஆனால் "தம்பி உங்களோடு தனியே பேச வேணும்!" என்று கோபம் தான் கொண்டார். பின்னர் கூட்டத்தை நாமே முடிக்க வைத்து, 10 ஆம் ஆண்டு வகுப்பை மட்டும் வெளியே விடாமல் ஐங்கரன் வாத்தி வரும் வரை உள்ளே வைத்திருந்தோம் (சிட்டு வெளியே மோட்டர் பைக்கோடு காத்திருந்து, ஐங்கரன் தான் பேசி அனுப்பி வைத்தார்!). ஆக, 6 ஆண்டுகளாக, புலிகள் ஒவ்வொரு மறுக்கக் கிடைத்த சிறு வாய்ப்புகளையும் - இப்படியான ஒரு பிரபல குற்றச் செயலில் - தவற விட்டார்கள் என நான் நம்பவில்லை!

இதை பற்றி நான் இப்போதுதான் அறிகிறேன். 

ஆனால் டி ஆர் ஆர் ஓ கந்தசாமி கடத்தல், தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் கொலை,  என தாம் செய்யாத ஆனால் பழி சுமத்தபட்ட விடயங்களிலும், அவர்கள் செய்த விடயங்களிலும் புலிகள் இப்படித்தான் பொதுவில் மறுக்க கிடைத்த பல வாய்ப்புக்களை கடந்து போயுள்ளார்கள்.

இதை அவர்கள் ஒரு “மொசாட் பாணிய” தந்திரமாக கைக்கொண்டாலும், இது கடைசியில், செய்த, செய்யாக பழிகள் எல்லாம் அவர்கள் தலையில் கட்டப்பட்டு, அவர்களுக்கு counter productive ஆகவே அமைந்தது.

39 minutes ago, Justin said:

இப்படிப் பல சந்தர்ப்ப சாட்சியங்கள் சுட்டுவது, ஏனைய தரப்புகளோடு சமமான சந்தேக நபர்களாக புலிகளும் இருக்கின்றனர்.

👆🏼இதையேதான் நானும் கூறுகிறேன். முறிந்த பனையில் விமர்சிக்க பட்ட அனைவரும் சந்தேக வட்டத்துள் வருவோரே.

ஆனால் ஒவ்வொரு நினைவு தினத்திலும் இதை புலிகள்தான் செய்தார்கள் என்பதை ஏதோ gospel truth போல சிலர் (நீங்கள் அல்ல) யாழுக்கு வெளியே சொல்வது உண்மையின் தரிசனம் அல்ல.

39 minutes ago, Justin said:

சுருக்கமாக, சிலர்  இங்கே தெரிந்தோ/தெரியாமலோ செய்வது வழமையான வெள்ளையடித்தல் முயற்சி தான்:  "புலிகள் சுட்டிருந்தால் அவர்கள் துரோகிகள், அப்படிக் கொல்லப் பட்டவர்களை துரோகிகளாக நிறுவ முடியா விட்டால், அவர்களைப் புலிகள் சுட்டிருக்க வாய்ப்பில்லை!"

இது யாழில் நடப்பதுதான். ஆனால் நான் ரஜனி கொலையை இந்த “கவிண்ட லொஜிக்கில்” அணுகவில்லை🤣.

39 minutes ago, Justin said:

எனவே, ஒரு சமமான சந்தர்ப்ப ரீதியான வாய்ப்புகள் (உங்கள் மேல் சட்ட நியமம் 2 அல்லது 3) கொண்ட ஒரு தரப்பை நல்ல ஒளியில் காட்ட முனைவது நிச்சயம் அமரர் திராணகமவிற்கு அஞ்சலியல்ல!

இதை செய்யததான நியாமான சந்தேகம் 2 தரப்புகள் மீது சமனாக உள்ளது என சொல்வது, அதில் ஒரு தரப்பை நல்ல ஒளியில் காட்டுவதாக அமையும் என நான் நம்பவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது சமாதானப் பேச்சுக் காலம். பொதுஜன ஐக்கிய முன்னணியில் ரட்னஸ்ரீ விக்ரமநாயகா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து தூக்கப் பட்டு மகிந்த எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப் பட்ட சமயம். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமாதானமும் மனித உரிமையும் என்கின்ற கருப்பொருளில் இலங்கையின் எல்லா பாடசாலைகளுக்குள் ஒரு பொது அறிவுப் போட்டி ஒன்றை நாடாத்தியது. வவுனியா மாகா வித்தியாலயம் இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. எமது பாடசாலை குழுவின் தலைவர் நான்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. எமது பாடசாலை சார்பாக எனக்கு பரிசில் வழங்கப்பட்டது. எனக்கு பரிசில் கொடுத்தவர் அண்ணன் மகிந்த ராஜபாக்ச அவர்கள். ஆரத் தழுவி காசோலை, பதக்கத்துடன் அவர் கொடுத்த நூல் ரஜனி திரணகம எழுதிய முறிந்த பனை. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் கிடைத்தது. போட்டோ எல்லாம் எடுத்தோம். (வீட்டில் கொஞ்ச நாள் மகிந்தவோடு திருமாவளவன் போல் சிரித்துக்கொண்டே எடுத்த போட்டோவும் கிடந்தது என்பது கொசுறுத் தகவல் )

புத்தகத்தைப் படித்து விட்டு புலிகள் மீது விமர்சனதோடு இருந்த சமயம் பார்த்து எமது பாடசாலைக்கு புலிகளின்  வவுனியா அரசியல் துறை பொறுப்பாளர்( பின்னர் திருகோணமலை பொறுப்பாளர் )எழிலன் வந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தப்பொழுது நான் அவரிடம் எழும்பி நின்று  கேட்ட கேள்வி என்னத்துக்கு ராஜினி திரணகமவை சுட்டனீகள் என்பது தான். அதுக்குப் பிறகு A/L பெடியள் எனக்கு வைச்ச பெயர் துரோகி.

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

அப்பொழுது சமாதானப் பேச்சுக் காலம். பொதுஜன ஐக்கிய முன்னணியில் ரட்னஸ்ரீ விக்ரமநாயகா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து தூக்கப் பட்டு மகிந்த எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப் பட்ட சமயம். இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சமாதானமும் மனித உரிமையும் என்கின்ற கருப்பொருளில் இலங்கையின் எல்லா பாடசாலைகளுக்குள் ஒரு பொது அறிவுப் போட்டி ஒன்றை நாடாத்தியது. வவுனியா மாகா வித்தியாலயம் இலங்கை மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றது. எமது பாடசாலை குழுவின் தலைவர் நான்.பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் பரிசு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. எமது பாடசாலை சார்பாக எனக்கு பரிசில் வழங்கப்பட்டது. எனக்கு பரிசில் கொடுத்தவர் அண்ணன் மகிந்த ராஜபாக்ச அவர்கள். ஆரத் தழுவி காசோலை, பதக்கத்துடன் அவர் கொடுத்த நூல் ரஜனி திரணகம எழுதிய முறிந்த பனை. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் கிடைத்தது. போட்டோ எல்லாம் எடுத்தோம். (வீட்டில் கொஞ்ச நாள் மகிந்தவோடு திருமாவளவன் போல் சிரித்துக்கொண்டே எடுத்த போட்டோவும் கிடந்தது என்பது கொசுறுத் தகவல் )

புத்தகத்தைப் படித்து விட்டு புலிகள் மீது விமர்சனதோடு இருந்த சமயம் பார்த்து எமது பாடசாலைக்கு புலிகளின்  வவுனியா அரசியல் துறை பொறுப்பாளர்( பின்னர் திருகோணமலை பொறுப்பாளர் )எழிலன் வந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தப்பொழுது நான் அவரிடம் எழும்பி நின்று  கேட்ட கேள்வி என்னத்துக்கு ராஜினி திரணகமவை சுட்டனீகள் என்பது தான். அதுவரை மந்திரவாதி என்று அறியப்பட்ட எனக்கு அதுக்குப் பிறகு A/L பெடியள் வைச்ச பெயர் துரோகி.

 

 

ஏன் சுடடார்கள் என்பதை பின்னாளில் கண்டறிந்தீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடைபெறும் சம்பாசனைகளில் தெரியவருவது என்ன?

மொத்தத்தில் துரோகிகள், களையெடுப்பு நடவடிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு  பெரும்பாலான சந்தர்பங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவே உணர்கிறேன். காழ்புணர்வு, சகிப்புத்தன்மையீனம், உணர்சசி வசப்பட்டதால் புத்தி பேதலித்தமை ஆகிய இன்னாரென்ன காரணிகளே இதற்கு காரணமாக அமைந்தது ஆனால்,   இவை எல்லாமாக சேர்ந்து எதிரிக்கு பலம் சேர்தது எமது ஒட்டு மொத்த போராட்டத்தையும் பின்னோக்கி செலுத்தியதை உணராமலேயே நீண்ட காலத்தை நாம் கழித்தோம். இயக்க/ கட்சி  வேறுபாடு இன்றி அனைவரும் இதற்கு பொறுப்பு. 

இவற்றை பாடமாக எடுத்து எல்லோரும் ஒருங்கிணைந்து புதிய புதிய உத்திகளை பாவித்து எமது இனத்தின் இருப்பை தக்க வைப்பதே தற்போது சிந்திக்க வேண்டிய முதன்மைப் பணி. 

அது சரி இந்த “முறிந்த பனை” புத்தகத்தை எங்கு வாங்கலாம்? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, island said:

அது சரி இந்த “முறிந்த பனை” புத்தகத்தை எங்கு வாங்கலாம்? 

வாங்காமலும் படிக்கலாம்.

https://noolaham.net/project/11/1001/1001.pdf

Palmyra Fallen என ராஜன் ஹூல் 2015 இல் தனித்து ஒரு புத்தகம் வெளியிட்டவர். அதிலும் ராஜினி திரணகம பற்றி பல விடயங்கள் உள்ளன. அவற்றை நேரம் கிடைக்கும்போது பகிர்கின்றேன். ஹூல் தனியே எழுதியதால் அவருக்கு படியளந்தவர்களுக்கு விசுவாசமான தொனி இருக்கின்றது என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கின்றேன்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

 

இவற்றை பாடமாக எடுத்து எல்லோரும் ஒருங்கிணைந்து புதிய புதிய உத்திகளை பாவித்து எமது இனத்தின் இருப்பை தக்க வைப்பதே தற்போது சிந்திக்க வேண்டிய முதன்மைப் பணி. 

அது சரி இந்த “முறிந்த பனை” புத்தகத்தை எங்கு வாங்கலாம்? 

இனத்தை தக்க வைத்து  என்ன செய்வது?

2009இல் இருந்து எல்லோரும் தங்கித்தானே இருக்கிறார்கள்? 

புலிகள் செய்த தவறுகளை அப்படியே கண்கூடாக கண்டு தெரிந்தவர்கள் 
இங்கு யாழில் சும்மா குப்பைதானே கொட்டுகொண்டு இருக்கிறாரக்ள் 

அவர்களையும் கூட்டிக்கொண்டு சென்று நீங்கள் முன்னெடுக்கலாமே? 
எந்த தவறும் செய்யாது முன்னெடுக்க கூடிய அறிவும் தெளிவும் 
யாழ் கள அறிவாளிகளை தவிர வேறு எங்கு இருக்க போகிறார்கள்?

சென்று புடுங்கிப்பார்த்தால் மீதி உண்மைகளும் தெளிவும் இன்னமும் வரலாம் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

இங்கு நடைபெறும் சம்பாசனைகளில் தெரியவருவது என்ன?

மொத்தத்தில் துரோகிகள், களையெடுப்பு நடவடிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு  பெரும்பாலான சந்தர்பங்களில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவே உணர்கிறேன். காழ்புணர்வு, சகிப்புத்தன்மையீனம், உணர்சசி வசப்பட்டதால் புத்தி பேதலித்தமை ஆகிய இன்னாரென்ன காரணிகளே இதற்கு காரணமாக அமைந்தது ஆனால்,   இவை எல்லாமாக சேர்ந்து எதிரிக்கு பலம் சேர்தது எமது ஒட்டு மொத்த போராட்டத்தையும் பின்னோக்கி செலுத்தியதை உணராமலேயே நீண்ட காலத்தை நாம் கழித்தோம். இயக்க/ கட்சி  வேறுபாடு இன்றி அனைவரும் இதற்கு பொறுப்பு. 

இவற்றை பாடமாக எடுத்து எல்லோரும் ஒருங்கிணைந்து புதிய புதிய உத்திகளை பாவித்து எமது இனத்தின் இருப்பை தக்க வைப்பதே தற்போது சிந்திக்க வேண்டிய முதன்மைப் பணி. 

அது சரி இந்த “முறிந்த பனை” புத்தகத்தை எங்கு வாங்கலாம்? 

விதைத்தவர்களுக்கு அது சார்ந்த அறுவடை மட்டுமே குறியாக இருக்கும் இருக்கணும் 

களைகளில் சில நல்லவை என்பதற்காக விதைத்ததை மீறி வளர்த்து விடமுடியாது. இரண்டு தரம் மேலால் தட்டிவிட்டு அறுவடையில் கவனம் செலுத்தலாம். அதையும் மீறி வளருவேன் என்றால் புடுங்கி எறிவதை தவிர வேறு வழி ஏதும் விதைத்தவர்களுக்கு இருக்காது. 

இது வேலை இடம் திட்டம் ஏன் வாழ்க்கைக்கும் பொருந்தும். நூறு வீத தூய்மை என்று உலகில் எதுவுமே இல்லை என்று நாம் உணராதவரை. ...?

தூசுகளைத்தட்டி எடுத்து மூங்குக்குள் தான் விடுவேன் என்றால் வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் சும்மா இருப்பவரே சம்மதிக்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா எப்போதும் போல்.. இன்னும் புலி எதிர்ப்பு பாடித்திரியும் கூட்டங்களின் தனிநபர்.. கூட்டு இணையப் பிரசுரங்களை யாழில் இணைப்பதை தவிர்ப்பதில்லை. அது அவரின் வழமை.

புலிகள் இல்லாத 14 ஆண்டு காலத்தில்.. இந்த அறிவாளிகள் புலிகளை தொடர்ந்து திட்டுவதில் செலவழித்த வளம்.. நேரத்தை தமிழ் மக்களின் அரசியல் நில உரிமைக்காக செலவழித்து சிங்கள பெளத்தம்.. ஹிந்தியம்.. அமெரிக்கத்திடம் ஒரு மாற்றத்தை உருவாக்கி இருந்தால்.. அதன் மூலம் சிங்கள பெளத்த இராணுவ மயமாக்கலும்.. பெளத்த ஆக்கிரமிப்பும் தமிழர் மண்ணில் இருந்து அகற்றப்பட முயற்சிக்கப்பட்டிருந்தால் கூட..

இவர்களுக்கு இப்படியான கட்டுரைகளை.. தேவையான புனைவுகளுடன் எழுத.. மீள்பிரசுரம் செய்ய யோக்கியதை இருக்கு என்று நியாயப்படுத்த முடியும். 

ஒரு கல்வியாளராக.. ரஜனி திரணகம பாரட்டுக்குரியவர். ஒரு இடர்கால சமூகத்தின் வெளிப்பாடாக அவர் சொல்ல வந்த சில விடயங்களை முறிந்த பனை காவி வந்திருக்கிறது.

அதற்காக.. ஒரு இனப்படுகொலையை.. சொந்த நில ஆக்கிரமிப்பை.. சொந்த மக்களின் சுதந்திரத்தை.. உரிமையை எதிரிக்கு பறிக்கொடுக்க வக்காளத்து வாங்கி நின்ற யாழ் பல்கலைக்கழக விரிபுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது.. இன்று வரை வெளிச் சொல்ல தவறவிட்ட மனித உரிமை மீறல் விடயங்கள்.... சொந்த இன அழிப்புப் பற்றிய அக்கறையின்மை என்பது அவர்களின் உண்மை முகத்திரையை எப்போதோ கிழித்தெறிந்துவிட்டது.

அதுபோக.. 

ரஜனி திரணகம.. விடுதலைப்புலிகளால்.. எதிரியாகப் பார்க்கப்பட்டதை விட.. ஹிந்திய ஆக்கிரமிப்பு படைகளாலும்.. அதன் ஒட்டுக்குழுக்களாலும் பார்க்கப்பட்டத்தை.. இந்த புலி எதிர்ப்பு வாந்திகள் கொள்கை அளவில் கூட ஏற்க இன்றும் தயாரில்லை என்பதற்கு.. இக்கட்டுரை நன்கு சாட்சியம் அளிக்கிறது. 

இவரின் கொலை தொடர்பான சாட்சியத்தை அற்புதன்.. ஈழமுரசில் எப்பவோ வெளியிட்டு விட்டார். இவர் ஹிந்திய படைகளின் ஒட்டுக்குழு ஒன்றினால்.. சுட்டுக்கொல்லப்பட்டதை அந்த சாட்சியம் கூறி நின்றதை.. இன்றும் மறைக்க முற்படுகிறார்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கொலை[தொகு]

செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.[4][5][6]

ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://ta.wikipedia.org/wiki/ராஜினி_திராணகம

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

கொலை[தொகு]

செப்டம்பர் 21, 1989 அன்று பணியில் இருந்து வீடு திரும்பும் வழியில் அடையாளம் தெரியாத ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். முறிந்த பனை நூலின் ஏனைய ஆசிரியர்களும் ராஜினியின் சகோதரி நிர்மலாவும் இக்கொலையை விடுதலைப் புலிகளே செய்ததாக குற்றம் சாட்டியிருந்தனர்.[4][5][6]

ஆயினும் விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டு இந்திய படையினராலும் வரதராஜப் பெருமாளாலும் திட்டமிட்டுப் பரப்பட்டதாகவும் ராஜினியும் மற்றும் நான்குபேரும் இணைந்து வெளியிட்ட முறிந்தபனை ஆவணத்தில் இந்தியப் படைகளின் கொலைகள் சுட்டிக்காட்டப்பட்டதால் அவர்களில் ஒரு பிரிவினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பினரும் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாகவும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடரில் தினமுரசு ஆசிரியர் அற்புதன் குறிப்பிட்டுள்ளார்.கார்த்திக்,தோமஸ் என்ற இரண்டு ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களே யாழ் மாவட்ட ஈபிஆர்எல்எப் பொறுப்பாளரின் உத்தரவின் பெயரில் அந்தக் கொலையை செய்ததாகவும் அதில் ஈடுபட்டவர்களில் ஒருவரான கார்த்திக் பின்னர் ஈபிடிபியில் இணைந்து செயற்பட்டதாகவும் அந்தத் தொடரில் தெரிவித்துள்ளார்.அற்புதன் ஈபிடிபி அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://ta.wikipedia.org/wiki/ராஜினி_திராணகம

 

அற்புதன் எழுதியவை எல்லாம் உண்மையா? அற்புதனின் எழுத்தை ஒரு நீதிமன்றத்தில் சான்றாக காண்பிக்கமுடியுமா?

கொலையை செய்த தோமஸ் என்பவர் வெளிநாட்டில் உள்ளாராம். 

அப்படியாயின் தோமஸை ஏன் விசாரிக்க முடியாது?

///

http://padippakam.com/document/EelamHistory/Thinamurasu/The176.pdf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.