Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1. வட காஸாவை விட்டு மக்களை வெளியேற அறிவிக்குமாறு ஐ நா வுக்கு இஸ்ரேல் அறிவிப்பு

2. இந்த அறிவிப்பை மீளப் பெறுமாறு இஸ்ரேலிடம் ஐ நா கோரிக்கை

3. இந்த அறிவிப்பின் படி வெளியேற வேண்டாம் என மக்களுக்கு ஹமாஸ் அறிவிப்பு.

Edited by goshan_che
இஸ்ரேலிடம் ஐநா என்பது விடுபட்டு விட்டது. சேர்த்துள்ளேன்

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி சவுதிஅரேபியா   ஈரான்  பாகிஸ்தான்......போன்ற  நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு வழங்குகிறது பாலஸ்தீனம் முஸ்லிம் நாங்களும் முஸ்லிம்   என்பதற்காக அல்லது   மனித உயிரிழப்பு தவிர்க்க வேண்டும்  என்ற  ????   மேற்சொன்ன நாடுகள் 2009 ஆண்டு முள்ளிவாய்க்கால்   படுகொலைகளின் போது  ஏன் குரல் கொடுக்கவில்லை   நாங்கள் முஸ்லிம்கள் இல்லை  எனவே…  வகை தொகை இன்றி இறக்கலாம்.  அது பிழையில்லை..மாறாக ரொம்ப சரியானதாகும்...இந்த பாலஸ்தீனனர்கள். முஸ்லிம்களில்லை என்றால்  உதாரணமாக இந்துக்கள் அல்லது கிறித்தவர்கள்  என்றால் இறக்கலாம். அழிக்கப்படலாம்.  இஸ்ரேல்  பாலஸ்தீனர்களுக்கு   கத்தார்   எகிப்து.  துருக்கி....போன்ற நாடுகள்   [பாலஸ்தீனத்துக்கு ] உதவிகள். வழங்க அனுமதியளித்துள்ளது   ஆனால் இலங்கை  2009 இல்  வணங்க முடி  கப்பலை   தமிழருக்கு உதவிகளை வழங்க அனுமதிக்கவில்லை     பாலஸ்தீனர்கள்  பலமுடையவர்கள். என்றால்   இஸ்ரேலை விட  மிக மிக   அதிகமான நாச வேலைகளை செய்வார்கள்  இது என்னுடைய அனுமனம். மற்றும் இஸ்ரேல் தன்னுடைய பூர்விக பூமியில்தான் இருக்கிறது  ...பாலஸ்தீனனருடைய நாட்டில் இல்லை   ஆனால் அனேகருடைய எண்ணம்  இஸ்ரேல் பாலஸ்தீனருடைய பூமி ....நாடு என்பது   இது மிகவும் பிழையான கருத்து ஆகும்   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலுக்கு சவாலாக விளங்கும் ஹமாஸ் குழுவினரின் நூறு அடி ஆழ ரகசிய சுரங்கங்கள்

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், டேவிட் கிரிட்டன்
  • பதவி, பிபிசி நியூஸ்
  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த சனிக்கிழமையன்று (அக்டோபர் 7) ஹமாஸ் குழுவின் எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் இயக்கத்தினரால் காசா பகுதிக்குக் கீழே ரகசியமாக பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க அறைகளில் சில பகுதிகளைத் தாக்குவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது.

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்த ரகசிய நிலத்தடி அறைகளின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

“இருபது ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கில் இருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்த சுரங்க கட்டமைப்புகளை அமைத்தனர்,” என்றார் அவர்.

மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி. ஒன்று தரைக்கு மேல் பொது மக்களுக்கானது, மற்றொன்று நிலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது என்றார்.

 

எவ்வளவு நீளமானவை இந்தச் சுரங்கங்கள்?

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

அவர் மேலும் கூறுகையில், "இந்த சுரங்கப்பாதைகள் இவை காசா குடிமக்களுக்கான பதுங்கு குழிகள் அல்ல என்றும், ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக்குழுவினர் தொடர்ந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசவும், தாக்குதல்களைத் திட்டமிடவும் பயன்படுத்தும் கட்டுமானங்கள்," என்று கூறினார்.

இஸ்ரேலால் ‘காசா மெட்ரோ’ என்றழைக்கப்படும் இந்த சுரங்க கட்டமைப்பின் பரப்பை மதிப்பிடுவது மிகவும் கடினம். ஏனெனில் இது 41 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் மட்டுமே கொண்ட ஒரு பகுதியின் அடியில் பரந்திருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த ஒரு மோதலைத் தொடர்ந்து, வான்வழித் தாக்குதல்களில் 100 கிலோமீட்டருக்கும் அதிகமான சுரங்க அறைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கூறின. ஆனால், ஹமாஸ் தனது சுரங்கப்பாதைகள் 500 கி.மீ. நீளம் கொண்டதாகவும், அவற்றில் 5% மட்டுமே தாக்கப்பட்டதாகவும் கூறியது.

 
இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காசா பகுதியில் இருக்கும் இந்த சுரங்க கட்டமைப்புகள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த சுரங்க அறைகள் எப்போது கட்டப்பட்டன? எதற்குப் பயன்பட்டன?

கடந்த 2005ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருந்து தனது படைகள் மற்றும் குடியேறியவர்களை திரும்பப் பெறுவதற்கு முன்பு காசாவில் சுரங்கப்பாதை கட்டுமானத்தைத் தொடங்கியது.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹமாஸ் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இந்த சுரங்க அறைகள் மேம்படுத்தப்பட்டன. இதனால் இஸ்ரேலும் எகிப்தும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மக்கள் அதன் வழியாகச் சென்று வருவதையும் பொருட்களைக் கொண்டு செல்வதையும் கட்டுப்படுத்தின.

இந்த சுரங்கங்களின் செயல்பாடு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட 2,500 சுரங்க கட்டமைப்புகள் ஹமாஸ் மற்றும் பிற குழுக்களால், வணிகப் பொருட்கள், எரிபொருள், மற்றும் ஆயுதங்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2010ஆம் ஆண்டில் இஸ்ரேல் எல்லைகளைக் கடந்து பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்லப்பட அனுமதித்த பிறகு, கடத்தலுக்கான தேவையும் குறைந்துவிட்டது. சுரங்கப்பாதைகளில் தண்ணீரைச் செலுத்தியும் அவற்றைத் தகர்த்தும் எகிப்து கடத்தலைக் கட்டுப்படுத்தியது.

தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படும் சுரங்க கட்டமைப்புகள்

இதைத்தொடர்ந்து, ஹமாஸும் பிற குழுக்களும் இஸ்ரேலிய படைகளைத் தாக்குவதற்காக இந்த சுரங்கங்களைத் தோண்டத் தொடங்கின.

ஆயுதமேந்தியப் போராளிகள் 2006ஆம் ஆண்டில், இஸ்ரேலுடனான எல்லைக்கு அடியில் இருந்த ஒரு சுரங்கத்தைப் பயன்படுத்தி இரண்டு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர். மேலும் மற்றொரு வீரரைக் கைப்பற்றி, அவரை ஐந்து ஆண்டுள் சிறைபிடித்து வைத்திருந்தனர்.

மேலும், 2013ஆம் ஆண்டில், இஸ்ரேலிய குடியிருப்புப் பகுதி ஒன்றில் விசித்திரமான ஒலிகள் கேட்டதையடுத்து, அதைச் சோதித்த இஸ்ரேலிய பாதுகாப்புக் குழுவினர், அங்கு 1.6 கி.மீ. நீளமும், 18 மீட்டர் ஆழமும் கொண்ட சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர். அது கான்கிரீட் கூரை மற்றும் கான்கிரீட் சுவர்களைக் கொண்டிருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு, காசாவின்மீது ஒரு பெரிய வான் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்த, இத்தகைய ‘பயங்கர சுரங்கங்களின்’ மூலம் நடத்தப்படும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதைக் காரணமாகச் சொன்னது இஸ்ரேல்.

போரின்போது 30க்கும் மேற்பட்ட சுரங்கங்களை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ஆனால் ஒரு போராளிக் குழுவும் ஒரு சுரங்கப்பாதையைப் பயன்படுத்தி நான்கு இஸ்ரேலிய வீரர்களைக் கொன்றனர்.

 

அனைத்து வசதிகளையும் கொண்ட சுரங்க கட்டமைப்புகள்

ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

எல்லைகளைக் கடந்து இஸ்ரேலுக்குள் செல்லும் சுரங்கப் பாதைகள் தற்காலிகமானவை. அவை அவ்வப்போது இஸ்ரேலின் பகுதிகளைக் கைப்பற்றவே கட்டமைக்கப்படுகின்றன. ஆனால், "காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் அதிக நாட்களுக்குத் தங்கும் வகையிலான வசதிகளோடு கட்டப்பட்டிருக்கின்றன," என்கிறார் இஸ்ரேலின் ரெய்க்மன் பல்கலைக்கழகத்தில் நிலத்தடிப் போர்முறைகள் குறித்த வல்லுநராக இருக்கும் டாஃப்னே ரீஷ்மண்ட்-பராக்.

“ஹமாஸின் தலைவர்கள் இந்த சுரங்கங்களில் பதுங்கியுள்ளனர். அங்கு அவர்கள் கட்டுப்பாட்டு மையங்களை நிறுவியுள்ளனர். அங்கு மின்சாரம், மின்விளக்குகள், மற்றும் தண்டவாளங்கள் உள்ளன. அதற்குள் வசதியாக நிற்கவும் நகரவும் முடியும்,” என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், சிரியாவின் போராளிக் குழுக்கள், மற்றும் ஐ.எஸ் குழுவினர் ஆகியோரின் முறைகளைப் பார்த்து தங்கள் சுரங்கக் கட்டுமான உத்திகளை மேம்படுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

இந்த சுரங்கங்கள் எப்படி கட்டப்பட்டன?

காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்கள் பூமிக்குக் கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அவை கண்டறியப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவற்றின் நுழைவாயில்கள் வீடுகள், மசூதிகள், பள்ளிகள் மற்றும் பிற பொதுக் கட்டடங்களுக்கு அடியில் அமைந்திருக்கின்றன.

காசாவிற்கு உதவியாக வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான டாலர்களை இந்தச் சுரங்கங்களை அமைக்க ஹமாஸ் அமைப்பு மக்களிடமிருந்து பெற்றதாக இஸ்ரேலிய ராணுவம் குற்றம் சாட்டுகிறது. முந்தைய போர்களில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காகக் கொடுக்கப்பட்டப் பல்லாயிரக்கணக்கான டன் சிமெண்டை பயன்படுத்தி இந்தச் சுரங்கங்கள் கட்டப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறது.

 
ஹமாஸ் குழுவின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து தகர்க்கும் இஸ்ரேல்

கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதல்களின்போது ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் எல்லை தாண்டிய சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இஸ்ரேலின் கஃபார் ஆசா பகுதிக்கு அருகே ஒரு சுரங்கப்பாதையின் வெளியேறும் வழி கண்டுபிடிக்கப்பட்டதாக சில செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அது உறுதி செய்யப்பட்டால், 2021ஆம் ஆண்டின் இறுதியில் இஸ்ரேல் நிறுவி முடித்த, சுரங்கப்பாதைகளைக் கண்டறியும் அதிநவீன சென்சார்கள் பதிக்கப்பட்ட நிலத்தடி கான்கிரீட் தடுப்புக்கு அடியில் இந்த சுரங்கப்பாதை கட்டப்பட்டிருக்க வேண்டும்.

இது உறுதிசெய்யப்பட்டால், பேரதிர்ச்சியாக இருக்கும் என்று ரீஷ்மண்ட்-பராக் கூறுகிறார். எந்த சுரங்கப்பாதை கண்டறியும் அமைப்பும் முழுமையானது அல்ல என்று அவர் கூறிகிறார்.

"அதனால்தான் சுரங்கப்பாதைகள் பண்டைய காலங்களில் இருந்தே போர்களில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வழி இல்லை," என்கிறார் அவர்.

இந்த சுரங்கங்களை முற்றிலுமாக அழிக்க முடியுமா?

மேலும் பேசிய ரீஷ்மண்ட்-பராக், இந்த சுரங்கங்களை முற்றிலும் அழிப்பது சாத்தியப்படாது என்கிறார்.

“சில பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற மாட்டார்கள். சில சுரங்கங்கள் எங்கிருக்கின்றன என்பதே தெரியாது. மேலும் சில பகுதிகளை அழிப்பது மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

இவற்றை அழிப்பது, இஸ்ரேல் ராணுவம், பணயக் கைதிகள், பாலத்தீன மக்கள் ஆகிய முத்தரப்பிலும் பல மரணங்களை ஏற்படுத்தும் என்கிறார் அவர்.

இஸ்ரேல், பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,AFP

படக்குறிப்பு,

2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவிலிருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் தாக்குதல் நடத்தினால், ஹமாஸ் குழு, பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும், பணயக் கைதிகளை சுரங்கப் பாதைகளுக்குள் அனுப்பி வைக்கும் என்கிறார் அவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு இஸ்ரேல் காசாவில் இருக்கும் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தங்கும் மூன்று கட்டடங்களின் அஸ்திவாரம் இடிந்து 42 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சுரங்கங்கள் எவ்வளவு ஆபத்தானவை?

மேலும், இந்தச் சுரங்கங்களுக்குள் செல்வது மிகவும் ஆபத்தானதாகவும் அமையக்கூடும் என்கிறார் ரீஷ்மண்ட்-பராக்.

ஹமாஸ் குழுவினர், மொத்த சுரங்கப்பாதை வலைப்பின்னலிலும் வெடிகளை வைக்கலாம், என்கிறார் அவர். “அவற்றில் இஸ்ரேலிய ராணுவத்தினரை நுழையவிட்ட பிறகு அதை வெடிக்க வைக்கலாம்.”

இல்லையேல், ஹமாஸ் குழுவினர் பதுங்கியிருந்து இஸ்ரேலியப் படையினரைச் சிறைபிடிக்கலாம் அல்லது இஸ்ரேலிய வீரர்களுக்கு ஆக்சிஜன் இல்லாமல் போகலாம், என்கிறார்.

சுரங்கத்துக்குள் செல்லாமல், கண்ணுக்குத் தெரியாத அவற்றை தரைக்கு மேலிருந்துச் சுற்றி வளைப்பதும் சிக்கலானது என்கிறார் அவர்.

ஆனால், இஸ்ரேல் ராணுவம் வேறு வகையான உத்திகளைப் பின்பற்றலாம், என்கிறார் சூஃபான் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் இயக்குநரான காலின் க்ளார்க். உதாரணத்திற்கு டிரோன்கள் அல்லது ஆளில்லா வாகனங்களை அனுப்பி இந்தச் சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களையும், அங்கிருக்கும் வெடிகுண்டுகளையும் கண்டறியலாம், என்கிறார் அவர்.

பூமியைத் துளைத்துச் சென்று பங்கர் சுரங்கங்களைத் தாக்கும் குண்டுகளையும் இஸ்ரேல் பயன்படுத்தாலாம். ஆனால் அவை கட்டுமானங்கள் நிறைந்த காசா பகுதியில் பெருமளவில் சேதத்தை விளைவிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/cn3927d12lmo

  • கருத்துக்கள உறவுகள்

"காஸா ஒரு கல்லறை" என மகிழ்ச்சியில்  குதூகலிக்கும் இஸ்ரேலியர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

அராஸ் எனும் பிரெஞ் நக்ரில் இறை கோசத்தை எழுப்பிய படி பள்ளிகூடம் ஒன்றில் ஆசிரியரை குத்து கொன்றுளாராம் ஒருவர். மேலும் இருவர் காயமாம்.

இன்று வெள்ளி கிழமை ஜும்மாவின் பின் போராட்டங்கள் வலுவாகும் என நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போரை நிறுத்த அமெரிக்கா முயற்சி

இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரினால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள இராணுவ அமைச்சில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் ஜோர்டான் சென்றடைந்தார்.

அவர் ஜோர்டான் மன்னர் அப்துல்லா மற்றும் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போர் நிறுத்தம் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் அதிபரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/276862

  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்ரேல் தூதர ஊழியர் பீஜிங்கில் தாக்கப்பட்டார்.

இலண்டனில் யூத பள்ளிகள் சில இன்று மூடல்.

https://x.com/MarioNawfal/status/1712792965314166941?s=20

👆🏼வீடியோ. இளகியமனமிருப்போர் தவிர்க்கவும்.

1 hour ago, goshan_che said:

 

இஸ்ரேல் தூதர ஊழியர் பீஜிங்கில் தாக்கப்பட்டார்.

இலண்டனில் யூத பள்ளிகள் சில இன்று மூடல்.

https://x.com/MarioNawfal/status/1712792965314166941?s=20

👆🏼வீடியோ. இளகியமனமிருப்போர் தவிர்க்கவும்.

பலஸ்தீன மக்களுக்கு உலக அளவில் இருக்கும் ஆதரவையும், அனுதாபத்தையும் இப்படியான முஸ்லிம்களில் இருக்கும் அடி முட்டாள்கள் இல்லாமல் செய்து கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலும் இதைத்தான் எதிர்பார்க்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

பலஸ்தீன மக்களுக்கு உலக அளவில் இருக்கும் ஆதரவையும், அனுதாபத்தையும் இப்படியான முஸ்லிம்களில் இருக்கும் அடி முட்டாள்கள் இல்லாமல் செய்து கொண்டு இருக்கின்றனர். இஸ்ரேலும் இதைத்தான் எதிர்பார்க்கின்றது.

அதே….

அரபாத் காலத்தில் மதச்சார்பற்ற பலஸ்தீன கோரிக்கையை கையாண்டதை விட ஐசில் தனமாக நடக்கும் ஹமாஸ் அதன் வெளிநாட்டு வால்களை கையாள்வது இஸ்ரேலுக்கு இலகு.

அதுவும் சீனாவில் போய் செய்துள்ளார்கள் பாருங்கோ. புத்திசாலித்தனத்தின் உச்ச கட்டம்.

அமெரிக்க செனேட்டர் ரொன் போல் இஸ்ரேல்தான் ஹமாசை உருவாக்கியது என்று பேசியுள்ளார். அப்படியாயின் அவர்கள் கணக்கு நன்றாகவே பலிக்கிறது.

 

பேசியது2009 இல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

இஸ்ரேல் தூதர ஊழியர் பீஜிங்கில் தாக்கப்பட்டார்.

இலண்டனில் யூத பள்ளிகள் சில இன்று மூடல்.

https://x.com/MarioNawfal/status/1712792965314166941?s=20

👆🏼வீடியோ. இளகியமனமிருப்போர் தவிர்க்கவும்.

பயங்கரவாதிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

சற்று முன் இஸ்ரேலினுள் வீழ்ந்த ஹமாஸ் ரொக்கேட்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 



இஸ்ரேலில் உர்சுலா. காஸா போகவில்லை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

பயங்கரவாதிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?

100 வீதம் உண்மை :)

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது.

பேசாமல் திரியின் தலைப்பை “இஸ்ரேல் கமாஸ் மோதலில் நன்னியின் வகிபாகம்” என மாற்றிவிடுமாறு கோரலாம் என நினைக்கிறேன்🤣.

நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது.

எனக்கு அவர் மேல் இருந்த/இருக்கும் விம்பம் ஒன்றேதான்.

இந்த தளத்திலேயே இளையவர், எமது போராட்டத்தின் வரலாற்றை மிகுந்த சிரத்தை எடுத்து, தன்னளவில் நேர்மையாக தொகுக்கிறார். 2009 இன் பின் “நீ என்ன செய்தாய்” என ஆளை ஆள் கேட்டு வாயால் வடை சுட்டு கொண்டிருந்த நம் மத்தியில் இந்த தளத்தை உருப்படியான வகையில் பயன்படுத்தியுள்ளார். இன்னும் 50 வருடத்தில் வந்து பார்த்தால் இங்கே அவர் பதிவுகள் மட்டுமே பிரயோசனமானவையாக இருக்கும்.

இது மட்டுமே நான் நன்னியின் மீது வைத்திருக்கும் விம்பம். இது அப்படியேதான் இருக்கிறது.

இதை தவிர அவர் நல்லவர், வல்லவர், முஸ்லிம்களை வெறுக்கமாட்டார், சிகெரட், தண்ணி அடிக்கமாட்டார், ஜல்சா படம் பார்க்கமட்டார், பீடா போட மாட்டார் ….இப்படி எந்த விம்பமும் அவர் மேல் எனக்கு இருந்ததில்லை. இனியும் இராது.

"நீங்கள் எல்லாம் நன்னியை ஏதோ யேசு, புத்தர் ரேஞ்சில் விம்பம் கட்டி வைத்திருந்தீர்கள் போல் உள்ளது." 

நான் அந்தளவு முட்டாள் இல்லை என்று தான் இன்று வரை நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். 

எல்லோரின் நீண்ட கருத்துக்களையும் முழுமையாக வசிப்பது இல்லை.  சிலரின் கருத்துக்களை வசிப்பதுண்டு.  அந்த மாதிரியான விம்பமேயன்றி வேறொன்றும் இல்லை.

"உண்மையில் ஒரு கருத்தாளரை பலர் சேர்ந்து ரவுண் கட்டி அடிப்பதும், அத்தோடு என்னை இழுத்து, இழுத்து விடுவதும் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கிறது."

இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Sabesh said:

இதுவும் எனது நோக்கமோ ஆர்வமோ இல்லை.

உங்கள் நோக்கம் இது என நானும் கருதவில்லை. ஆனால் நான் அசெளகரியமாக உணர்தேன்.🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உருக்குலைந்த காசா நகரம்: உணவு இல்லாமல் தவிக்கும் மக்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள போர் இன்று 7 ஆவது நாளை எட்டியுள்ளது.

ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.

இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது. 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது.

Capture-1-4.jpg

காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர்.

காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள்.

காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர்.

காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு விநியோக பகுதிகளில் குவிந்துள்ளனர்.

இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.

காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.

4-8.jpg

தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர்.

அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.

காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 இலட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என கருதப்படுகிறது.

https://thinakkural.lk/article/276930

  • கருத்துக்கள உறவுகள்+

Israel's Flotilla 13 special forces storm Hamas stronghold and rescue 250 hostages

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2023 at 05:18, goshan_che said:

இப்ப என்ன?

ரஸ்யா உக்ரேனில் போட்டது அனுமான்

மத்தாப்பு….

இஸ்ரேல் காசாவில் போட்டது வெள்ளை பொஸ்பரஸ் ….

சரி ஓக்கே விடுங்கோ🤣.

https://www.cbc.ca/news/world/israel-white-phosphorous-gaza-lebanon-1.6994539

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோ

இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணை கைதிகளாக பிடித்து சென்று கொன்று வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு ஹமாஸ் அமைப்பின் 60க்கும் அதிகமான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி 250 பணயக்கைதிகளை பத்திரமாக மீட்ட த்ரில் வீடியோ வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

Israeli military forces kill 60 Hamas terrorists and rescue 250 hostages near Gaza, video released

இதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அங்கு வந்திருந்த வெளிநாட்டு மக்களை அவர்கள் பணயக்கைதிகளாக(பிணைக்கைதிகள்) பிடித்து சென்றனர். இது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது.

இருதரப்புக்கும் இடையே இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இஸ்ரேல் நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களை இஸ்ரேல் படைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தற்போது வரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்தது. இப்போது தரைவைழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் பேரை உடனடியாக தெற்கு பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணிநேரம் டைம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

 

இந்நிலையில் தான் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் மீட்க முயற்சித்து வருகிறது. ஐடிஎப் எனும் இஸ்ரேலிய ராணுவத்தினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பணயக்கைதிகளாக உள்ள தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் சுபா மிலிட்டரி கேம்ப் பகுதியில் உள்ள கட்டடத்தில் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பு மிரட்டி வருவது தெரியவந்தது.

இதையடுத்து பணயக்கைதிகளாக உள்ள 250 பேரையும் பத்திரமாக மீட்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டடது. அதன்படி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு பணயக்கைதிகளை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்டநேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இறுதியாக 60 ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று பணயக்கைதிகளாக இருந்த 250 பேரை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் எப்படி பணயக்கைதிகளை மீட்டனர் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛60க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹமாசின் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதியான முகம்மது அபு அலி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/international/israeli-military-forces-kill-60-hamas-terrorists-and-rescue-250-hostages-near-gaza-video-released-547879.html?story=1

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேலியர்களின் சரித்திரத்தில் பயணக்கைதிகளை மீட்பது முதல் முறையல்ல. உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய “ஒப்பரேஷன் தண்டபோல்ட்” 

1976 ல் செய்து காட்டினார்கள். 

 

Edited by island

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுக்கு நூறாக உடையும் இஸ்ரேல்! பெரும் நெருக்கடியில் அமெரிக்கா(Video)

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையில் போர் நிலை வலுப்பெற்று வரும் சூழலில் அமெரிக்கா தனது நாட்டுக்குள்ளேயே பெரும் சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது என கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரத்னம் தெரவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது நடைபெற்று வரும் இந்த போர் விரிவாக்கம் அடைவதற்கான வாய்ப்புக்களை நிறையவே கொண்டிருக்கின்றது.

எதிர்பாராத நேரத்தில் இந்த யுத்தம் வெடித்திருக்கின்றது. மேலும், இஸ்ரேலை எந்தவொரு சூழ்நிலையிலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

https://tamilwin.com/article/israel-palestine-war-update-usa-action-1697201650

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, வைரவன் said:

அவர் உருவாக்கிய பல ஆவணக்காப்பு திரிகளிலும், நல்ல திரிகளிலும் நீங்கள் அவற்றை வரவேற்று ஒரு பதில் தானும் எழுதியதை நான் கண்டில்லை. தவறை மட்டும் தான் கண்டு பிடிப்பீர்களோ ஐயா?

இது தான் ஈனத்தமிழ் குணம்.

சிங்களவர் தம் இனத்துக்கு ஆதரவாக இருக்கும் ஒருவரை எக்காலத்திலும் குறை சொல்லார், ஆனால் தமிழர்கள் தம் இனத்திற்கு மினக்கெடும் ஒருவர் ஒரு தவறு விட்டால், ஓடோடி வந்து அதை சொல்லி சொல்லியே அவரை முடக்கி விடுவர்.

இப்படியே நடத்துங்கோ

இந்த அவசர யுகத்தில் தம் பெறுமதியான மணித்துளிகளை லாபம் எதுவுமில்லாமல் செலவழிப்பவர்களையும் முடக்குங்கோ. 

உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ...நீங்களே அவர் பிழை விட்டு விட்டார் என ஒத்துக் கொள்கிறீர்கள் ...என்னால் உங்கள மாதிரி பிழையை பார்த்து கொண்டு இருக்க முடியாது...அது பிழை என்று சுட்டிக்  காட்டினேன்.. செய்வது பிழை என்று தெரிந்தும்,ஏதோ ஒரு காரணத்திற்குக்காய்  அவர்களை ஊக்கப்படுத்துவதால் அல்லது கண்டும் காணாமல் விடுவதால் தான் அவர்கள் இல்லாமற் போகிறார்கள் அல்லது மென் மேலும் பிழை விடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

Israel's Flotilla 13 special forces storm Hamas stronghold and rescue 250 hostages

 

 

 

இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா?

ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன்.

1 hour ago, Sabesh said:

ஓம். நான் எப்போதும் இஸ்ரேல் இதை பாவித்தது என்பதை மறுக்கவில்லை. ரஸ்யாவும் பஹ்மூத் போன்ற மக்கள் வாழும் நகரங்களில் இதை பாவித்தது என்பதே என் கூற்று.

HRW மட்டும் அல்ல, ஆம்னெஸ்டி இண்டெர்னேசனலும் இதை உறுதி செய்துள்ளது.

1 hour ago, ஏராளன் said:

செம துணிச்சல்.. 60 ஹமாஸ் தீவிரவாதிகளை கொன்று 250 பிணைகைதிகளை மீட்ட இஸ்ரேல் ராணுவம்! த்ரில் வீடியோ

இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணை கைதிகளாக பிடித்து சென்று கொன்று வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் ராணுவம் ஸ்கெட்ச் போட்டு ஹமாஸ் அமைப்பின் 60க்கும் அதிகமான தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி 250 பணயக்கைதிகளை பத்திரமாக மீட்ட த்ரில் வீடியோ வெளியாகி உள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது. கடந்த 7 ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது 7 ஆயிரம் ஏவுகணை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.

Israeli military forces kill 60 Hamas terrorists and rescue 250 hostages near Gaza, video released

இதுமட்டுமின்றி இஸ்ரேல் மற்றும் அங்கு வந்திருந்த வெளிநாட்டு மக்களை அவர்கள் பணயக்கைதிகளாக(பிணைக்கைதிகள்) பிடித்து சென்றனர். இது இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதோடு இஸ்ரேலும் பாலஸ்தீனத்தின் காசா மீது போரை தொடங்கியது.

இருதரப்புக்கும் இடையே இன்று 7 வது நாளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் தற்போது வரை 2,500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இதுதவிர இஸ்ரேல் நாட்டு மக்களை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. இவர்களை இஸ்ரேல் படைகள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தற்போது வரை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் மட்டுமே நடத்தி வந்தது. இப்போது தரைவைழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 10 லட்சம் பேரை உடனடியாக தெற்கு பகுதிக்கு இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்காக 24 மணிநேரம் டைம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவில் மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

 

 

இந்நிலையில் தான் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை மீட்க அந்நாட்டு ராணுவம் மீட்க முயற்சித்து வருகிறது. ஐடிஎப் எனும் இஸ்ரேலிய ராணுவத்தினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து பணயக்கைதிகளாக உள்ள தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா எல்லையில் சுபா மிலிட்டரி கேம்ப் பகுதியில் உள்ள கட்டடத்தில் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்து ஹமாஸ் அமைப்பு மிரட்டி வருவது தெரியவந்தது.

இதையடுத்து பணயக்கைதிகளாக உள்ள 250 பேரையும் பத்திரமாக மீட்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டடது. அதன்படி இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டு பணயக்கைதிகளை மீட்க முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவ வீரர்களும் துப்பாக்கியால் சுட்டனர். நீண்டநேரம் இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் ஹமாஸ் தீவிரவாதிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.

இறுதியாக 60 ஹமாஸ் தீவிரவாதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் கொன்று பணயக்கைதிகளாக இருந்த 250 பேரை பத்திரமாக மீட்டனர். இதற்கிடையே ஹமாஸ் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ வீரர்கள் எப்படி பணயக்கைதிகளை மீட்டனர் என்பது தொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த மீட்பு நடவடிக்கை குறித்து இஸ்ரேல் ராணுவம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛60க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஹமாசின் தெற்கு கடற்படை பிரிவின் துணை தளபதியான முகம்மது அபு அலி உள்பட 26 பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/international/israeli-military-forces-kill-60-hamas-terrorists-and-rescue-250-hostages-near-gaza-video-released-547879.html?story=1

இந்தச் செய்தி இந்திய ஊடகங்கள் அவித்த செய்தி போல உள்ளது. ஏனெனில் BBC, CNN, Al Jazeera போன்ற தளங்களிலும் கனடிய பிரதான ஊடகங்களிலும் மீட்புப் பற்றி எந்த செய்தியும் வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இது நடந்த இடம் இஸ்ரேல் உள்ளயா? அல்லது காஸாவிலா?

ஏன் என்றால் காஸாவுக்குள்ளும் பலர் கொண்டு போக பட்டார்கள் என நினைக்கிறேன்.


இது இஸ்ரேலின் முழு இராணுவ ஆளுமைக்குள்,  எல்லை. அனால் நிலம் ஒருபகுதி காஸா.

அனால், தொடக்க 2-3 நாட்களில் நடந்து இருக்க வேண்டும்.

ஹமாஸ் கொண்டுபோனதே 100 - 150 என்றே இஸ்ரேல் இதுவரை வெளியில் சொல்லியிருக்கிறது.
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.