Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி பெரியபரந்தனில் இரு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 OCT, 2023 | 09:23 PM
image

“ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை  (16) பிற்பகல் இரண்டு மணியளவில்  இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுரேஸ்குமார் தனிகை  வயது 17, லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரு மாணவிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். 

இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார்  சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். 

அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/167038

  • கருத்துக்கள உறவுகள்

“ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை"

யாருக்குத்தான் வாழ்க்கையில் பிடிப்போடு வாழ்கிறார்கள் ?
17 வயதில் இவர்களுக்கு எதோ ஒரு வெளி அழுத்தம் இல்லாமல் 
இவ்வாறான ஒரு முடிவை எடுத்திருப்பார்கள் என்று எண்ணவில்லை 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அண்மைக்கால செய்திகளை உன்னிப்பாக அவதானித்தால் கிளிநொச்சி மோசமான ஒரு நிலையில் உள்ளதோ என எண்ணத்தோன்றும். 

பாடசாலை/பல்கலைக்கழக மாணவர் என்றால் தற்கொலை செய்தி வெளியில் தெரியவரும். சாதாரண குடும்பஸ்தர்கள், வயது சற்று கூடினவர்கள் என்றால் அவை வெளியில் வருவது குறைவு. சிறிது காலம் முன் பொறியியல் பிரிவு பல்கலைக்கழக மாணவன் கிளிநொச்சியில் தற்கொலை செய்தான். 

மேலும், குற்றவாளிகளை பின் தொடர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டார். 

பேருந்தில் சென்ற தம்பதியை இறக்கி வாளால் வெட்டினார்கள். (வெட்டு வாங்கியவர் தந்தை/மகனின் காதல் பிரச்சனையாம்).

அங்கு கொலை/தற்கொலை சாதாரணம் ஆகிவிட்டது.

ஒரு சமூகம் அழிந்துகொண்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நினைப்பதை எழுத விரும்பவில்லை.

இந்த சமூகம் தனிமனித விருப்புகளில் தலையிடாமல்  இருக்கட்டும்.

ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாளைக்கு குறைந்தது  5 தமிழ்சனம் மடிகிறது... எஙுகுபோய் முடியுமோ..ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை தேவை . இளம் மாணவிகளின் இந்தத்தவறான முடிவு எமது கல்வி அமை;ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல ஒன்றும் இல்லை 😭

8 hours ago, goshan_che said:

நினைப்பதை எழுத விரும்பவில்லை.

இந்த சமூகம் தனிமனித விருப்புகளில் தலையிடாமல்  இருக்கட்டும்.

ஆத்மா சாந்தி அடையட்டும் 🙏.

அதே...😭

இவற்றை எல்லாம் தாண்டி தான் மேற்கு நாடுகள் வளர்ந்துள்ளன. அந்தந்த வயதுகளில் சில விடயங்களை கண்டும் காணாமலும் செல்ல தயாராக இல்லாத பெற்றார் மற்றும் சமூகம் இன்னும் விலைகளை கொடுக்கும் கொடுத்து கொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

சொல்ல ஒன்றும் இல்லை 😭

அதே...😭

இவற்றை எல்லாம் தாண்டி தான் மேற்கு நாடுகள் வளர்ந்துள்ளன. அந்தந்த வயதுகளில் சில விடயங்களை கண்டும் காணாமலும் செல்ல தயாராக இல்லாத பெற்றார் மற்றும் சமூகம் இன்னும் விலைகளை கொடுக்கும் கொடுத்து கொண்டே இருக்கும். 

ம்ம்ம்…🥲

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது காலமாக நம்கண் முன்னே வாழவேண்டிய இளம் சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது.மிகவும் கவலைக்கிடமான விடயம்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறிது காலமாக நம்கண் முன்னே வாழவேண்டிய இளம் சமுதாயம் அழிந்து கொண்டிருக்கிறது.மிகவும் கவலைக்கிடமான விடயம்.

 

இன்று இன்னுமொரு செய்தி. உயிரினதும் வாழ்வினதும் பெறுமதி தெரியாத, பெற்றோர்களின் கண்ணீர் பற்றி கொஞ்சமும் யோசிக்க முடியாதவர்களாக இவர்கள்....

 

காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

எம்,றொசாந்த் 

"தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் " என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த காதலன் தன் உயிரை மாய்த்துள்ளார். 

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே  திங்கட்கிழமை (16) தன்னுயிரை உயிர் மாய்த்துக்கொண்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் காதலி திருமண வயதை அடைந்திருக்காத நிலையில் இரு வீட்டிலும் அவர்களின் காதல் விவகாரம் தெரிந்துள்ளது. காதலுக்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 

அந்நிலையில் " என்னை உடனே திருமணம் செய். இல்லையென்றால் நான் சாகிறேன் " என காதலி காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.  அதனை பார்வையிட்ட காதலன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

Tamilmirror Online || காதலனின் உயிரைக் குடித்த காதலியின் எஸ்.எம்.எஸ்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

அந்தந்த வயதுகளில் சில விடயங்களை கண்டும் காணாமலும் செல்ல தயாராக இல்லாத பெற்றார் மற்றும் சமூகம் இன்னும் விலைகளை கொடுக்கும் கொடுத்து கொண்டே இருக்கும். 

எப்படி நடக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ?
பிள்ளைகள் கன்பேர்  தங்களுக்கு பாலியல் அல்லாத சுதந்திரத்திரத்தை விரும்புகிறார்கள் ( சிலர்) அதற்கு பணம் வேண்டும் பணத்துக்கு பெற்றோர் என்ன செய்வார்கள் இலங்கை மீண்டும் பாதாளத்தில் விழுந்து வருகிறது அதற்கு உழைப்பு இல்லாத குடும்ப நிலை என்னாகிறது அந்த பிள்ளைகளின் ஆசைகளுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள்

நேற்று  நான் பஸ்ஸில்வரும் போது இரு பெண்பிள்ளைகள் அடியே அவளின்ற 21வயது பிறந்த நாள் போட்டோ எல்லாம் சூப்பாராக இருக்கிறதென்றும்  முகநூலில் பார்த்தேன் என சொல்லும் போது அந்த பிள்ளையின் ஆசையும் அதில் அடங்கியுள்ளது ( அவளுக்கும் ஆசை ( உலகம் இன்று பணத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது  பணம் இருந்தால் வீட்டில் பிரச்சினை இல்லை ) அதிகம் எழாது 
பணம் அதிகம் இருந்தாலும் பிரச்சினை எழுகிறது இன்னும் நாம் கையாளத்தெரியாமல் பல பிரச்சினைகளை கைகளுக்கும் வைத்து பிரட்டிக்கொண்டிருக்கிறோம் புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்கள் அந்த படிப்பை ஈழத்தில் இன்னும் பயன் படுத்த வில்லை மாறாக உழைத்த பணத்தை யே இங்கு பயன் படுத்துகிறார்கள் இது நான் உங்கள் மீது வைக்கும் குற்றம் இல்லை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் புலத்து   மூளையால் செய்யப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிடவும்  கோவில் சாமர்த்திய வீடுகள்  கல்யாண வீட்டு நிகழ்வுகளை  தவிர்த்து ???..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 புலம் பெயர்ந்தவர்கள் அதிகம் படித்தவர்கள் அந்த படிப்பை ஈழத்தில் இன்னும் பயன் படுத்த வில்லை மாறாக உழைத்த பணத்தை யே இங்கு பயன் படுத்துகிறார்கள் இது நான் உங்கள் மீது வைக்கும் குற்றம் இல்லை சற்று சிந்திக்க வேண்டிய தருணம் புலத்து   மூளையால் செய்யப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிடவும்  கோவில் சாமர்த்திய வீடுகள்  கல்யாண வீட்டு நிகழ்வுகளை  தவிர்த்து ???..........................

 ராசா வாய் திறந்தால் நாறிடும்

நாங்கள் எத்தனை முறை ஏமாற்றப்பட்டோம் என்றாவது தெரியுமா?? 😭

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 ராசா வாய் திறந்தால் நாறிடும்

நாங்கள் எத்தனை முறை ஏமாற்றப்பட்டோம் என்றாவது தெரியுமா?? 😭

 

அதென்னவோ தெரியாது புலத்து தமிழர்கள் ஏமாந்து தான் போகிறார்கள் 

எத்தனையோ வைத்தியர்கள் இருக்கிறார்கள்  புலத்தில்   அவர்கள் ஓர் வைத்திய  முகாம் நடாத்தினாலே சிலரின் வைத்தியச்செலவுகளை குறைக்கலாம் இன்று இந்தியா சாயி பாபாவுக்கு சொந்தமான அமைப்பு ஒன்று வந்து கிழக்கில் காணி வாங்கி அங்கே மருத்துவனை ஒன்றை நிறுவி இதய சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறது இதற்கு முதல் யாழில் செய்த கன இதய சிகிச்சைகள் இன்று மட்டக்களப்பில் செய்யப்படுகிறது கிரான் குளம் பகுதியில் அமைந்துள்ளது அந்த வைத்திய சாலை.  நம்மவர்கள் கதைச்சு கதைச்சு காலத்தை ஓட்டுவார்கள் 

அண்மையில் புலத்து வைத்தியர் ஒருவர் வந்து கோடி கொடுத்து காணி வாங்கினார் தனியார் மருத்துவனை ஒன்றை நடாத்த என்னத்த சொல்ல மருத்துவ தொழில் இப்ப அமோகமாக நடக்கிறது . 

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 09:19, புலவர் said:

இளம் மாணவிகளின் இந்தத்தவறான முடிவு எமது கல்வி அமை;ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

தமிழ்நாட்டில் கூட பரீட்சை முடிவுக்காக தற்கொலைகள் நடைபெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதென்னவோ தெரியாது புலத்து தமிழர்கள் ஏமாந்து தான் போகிறார்கள் 

எத்தனையோ வைத்தியர்கள் இருக்கிறார்கள்  புலத்தில்   அவர்கள் ஓர் வைத்திய  முகாம் நடாத்தினாலே சிலரின் வைத்தியச்செலவுகளை குறைக்கலாம் இன்று இந்தியா சாயி பாபாவுக்கு சொந்தமான அமைப்பு ஒன்று வந்து கிழக்கில் காணி வாங்கி அங்கே மருத்துவனை ஒன்றை நிறுவி இதய சிகிச்சைகள் செய்து கொண்டிருக்கிறது இதற்கு முதல் யாழில் செய்த கன இதய சிகிச்சைகள் இன்று மட்டக்களப்பில் செய்யப்படுகிறது கிரான் குளம் பகுதியில் அமைந்துள்ளது அந்த வைத்திய சாலை.  நம்மவர்கள் கதைச்சு கதைச்சு காலத்தை ஓட்டுவார்கள் 

அண்மையில் புலத்து வைத்தியர் ஒருவர் வந்து கோடி கொடுத்து காணி வாங்கினார் தனியார் மருத்துவனை ஒன்றை நடாத்த என்னத்த சொல்ல மருத்துவ தொழில் இப்ப அமோகமாக நடக்கிறது . 

ராசா

எதையும் பேசலாம் எழுதலாம்

ஆனால் செயல்???

ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட.

அதாவது புலம்பெயர் தமிழர்கள் கல்வி மற்றும் காசை கொண்டு வந்து அங்கே நின்று அத்தனை சவால்களையும் (நீங்கள் தான் அதிகம் சிரமம் தருவீர்கள்) சமாளித்து செய்யணும். எவ்வளவு சுயநலமான அநியாயமான கற்பனை இது???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

ராசா

எதையும் பேசலாம் எழுதலாம்

ஆனால் செயல்???

ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட.

அதாவது புலம்பெயர் தமிழர்கள் கல்வி மற்றும் காசை கொண்டு வந்து அங்கே நின்று அத்தனை சவால்களையும் (நீங்கள் தான் அதிகம் சிரமம் தருவீர்கள்) சமாளித்து செய்யணும். எவ்வளவு சுயநலமான அநியாயமான கற்பனை இது???

ஏனெனில் அங்கே செய்ய எவருமில்லை நீங்கள் உட்பட.............................................

 

உண்மைதான் இன்னும் சில காலங்கள் கழிந்தால் செய்வதற்குக் கூட யாரும்  இருக்க மாட்டார்கள் இன்னும் சிறு பான்மையாக இருப்போம் வடக்கு தப்பினாலும் கிழக்கில் ......................

20 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் கூட பரீட்சை முடிவுக்காக தற்கொலைகள் நடைபெறுகின்றது.

இன்னும் பரீட்சை முடிவுகள் வெளிவரவில்லையே பிறகு எப்படி ஒரு வேளை அனைத்திலும் பாஸாகி இருந்தால்?

  • கருத்துக்கள உறவுகள்
On 19/10/2023 at 06:06, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் பரீட்சை முடிவுகள் வெளிவரவில்லையே பிறகு எப்படி ஒரு வேளை அனைத்திலும் பாஸாகி இருந்தால்?

அது அல்ல. யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை இப்படி இலங்கையில் தமிழ் பகுதிகளில் மாணவர் இளம் ஆட்கள் தற்கொலைகள் பல செய்வதை செய்திகளில் காணகூடியதாக இருந்தது. புலவர் சொன்னார் தானே இந்த தவறான முடிவு எமது கல்வி அமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.அவர் சொன்னதை சரி என்று நான் ஆதரிக்கிறேன்.

On 18/10/2023 at 09:45, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் கூட பரீட்சை முடிவுக்காக தற்கொலைகள் நடைபெறுகின்றது.

தமிழ்நாட்டில் பரீட்சையில் தோல்வி என்று தற்கொலை செய்கிறார்கள் என்று செய்திகள் படித்து இருக்கிறேன். அவர்களது  கல்வி அமைப்பிலும் அவசியம் மாற்றங்களைச் செய்யபட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தற்கொலைகள் பரீட்சை முடிவகளுக்காய் இருக்காது 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த தற்கொலைகள் பரீட்சை முடிவகளுக்காய் இருக்காது 
 

எனக்கு கிடைத்த ஒரு தகவல் பிரகாரம் இந்த இரட்டை தற்கொலைக்கான காரணம் பரீட்சை/முடிவு இல்லை.

On 17/10/2023 at 03:19, புலவர் said:

தன்னம்பிக்கை தேவை . இளம் மாணவிகளின் இந்தத்தவறான முடிவு எமது கல்வி அமை;ப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

தற்கொலை சம்மந்தமாக பாடசாலையில்/பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு கல்வி நிச்சயம் அவசியம்.

மற்றையது, பெற்றோருக்கும் அறிவூட்டல் தேவைப்படுகின்றது. பெற்றோருக்கு பிள்ளைகளுடன்  கனதியான விடயங்களை பக்குவமாக கதைக்கும் மனநிலை தேவை. தூக்கி உடைப்பது போல பேசுவது எப்படியான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய எச்சரிக்கை அவசியம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.