Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காசா: மூன்று வாரங்களில் 3,195 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 7 முதல், காசாவில் குறைந்தது 3,195 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா மற்றும் இஸ்ரேலில் உள்ள சுகாதார அமைச்சகங்கள் தெரிவிக்கின்றன. காசாவில் மூன்று வாரங்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளாக, ஒரு வருடம் முழுவதும், உலகளவில் – 20க்கும் மேற்பட்ட நாடுகளில் – ஆயுத மோதலில் கொல்லப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 7,703 பேரில் 40% க்கும் அதிகமானோர் குழந்தைகள். காசாவில் மேலும் 1,000 குழந்தைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்டதாகக் கருதப்படுவதால், இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசத்தில் உள்ள சேவ் தி சில்ட்ரன் இயக்குநர் ஜேசன் லீ இதுகுறித்து கூறியதாவது:

“மூன்று வார வன்முறைகள் குடும்பங்களில் இருந்து குழந்தைகளைப்  பறித்துள்ளன மற்றும் கற்பனை செய்ய முடியாத விதத்தில் அவர்களின் வாழ்க்கையை கிழித்தெறிந்துள்ளன. எண்ணிக்கைகள் பயங்கரமானவை மற்றும் வன்முறை தொடர்வது மட்டுமல்லாமல் காஸாவில் விரிவடைந்து வருவதால், இன்னும் பல குழந்தைகள் பெரும் ஆபத்தில் உள்ளனர்.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி போர் நிறுத்தம்தான். சர்வதேச சமூகம் இதில் தலையிட வேண்டும் – விவாதத்தில் செலவிடும் ஒவ்வொரு நாளும் குழந்தைகளைக் கொன்று காயப்படுத்துகிறது. குழந்தைகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும்,

காசாவில் குறைந்தது 6,360 குழந்தைகளும், மேற்குக் கரையில் குறைந்தது 180 குழந்தைகளும், இஸ்ரேலில் குறைந்தது 74 குழந்தைகளும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட நபர்கள் காசாவில் பணயக்கைதிகளாக உள்ளனர்.

காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் விரிவுபடுத்தப்பட்ட தரைப்படை நடவடிக்கை அதிக குழந்தைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று சேவ் தி சில்ட்ரன் பெரிதும் கவலை கொண்டுள்ளது.

சேவ் த சில்ட்ரன் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. குழந்தைகளின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், மேலும் சர்வதேச சமூகம் அந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், அவர்களின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/279158

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Kapithan said:

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

நீதி நியாயங்கள் மனிதாபிமானங்கள் எல்லாம் இடத்திற்கிடம் மாறுபடும், 😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

நீதி நியாயங்கள் மனிதாபிமானங்கள் எல்லாம் இடத்திற்கிடம் மாறுபடும், 😎

நம்மாளுகளுக்கு உது புரியாது கண்டியளோ..😏

  • கருத்துக்கள உறவுகள்

காமாஸ் போன்ற பயங்கரவாதிகள் ஆடசி செய்யும் இடத்தில 
ஏன் இவர்கள் குழந்தைகளாக பிறந்தவர்கள்?

அமெரிக்காவோ  பிரித்தானியவோ இவர்களை பிறக்க சொல்லி வலுக்கட்டாயம் செய்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

உக்ரேனுக்காக மனிதாபிமானக் கண்ணீர் வடித்தவர்களெல்லாம்,காஸா மீதான படையெடுப்பிற்கு மெளனம். 

உக்ரேனுக்காக அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டதோ...🥺

காஸா மீதான படையெடுப்புக்கு முன்னர் கண்ணீர் வடிக்கும் விதமாக கமாஸ் நடந்தது. அதற்கு கண்ணீர் வடித்து இன்னும் முடியவில்லை. அத்துடன் மகிந்தவின் பெயர்ப்பலகை காஸாவில் இன்னும் உடைக்கப் படவில்லை. அதனால் இருக்கும்😭

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நீதி நியாயங்கள் மனிதாபிமானங்கள் எல்லாம் இடத்திற்கிடம் மாறுபடும், 😎

👍

12 hours ago, Kapithan said:

நம்மாளுகளுக்கு உது புரியாது கண்டியளோ..😏

எனக்கும்தான்

6 hours ago, விசுகு said:

காஸா மீதான படையெடுப்புக்கு முன்னர் கண்ணீர் வடிக்கும் விதமாக கமாஸ் நடந்தது. அதற்கு கண்ணீர் வடித்து இன்னும் முடியவில்லை. 

ஹமாஸின் அக்டோபர் தாக்குதலுக்கு முன்னால் பல நூறு மடங்கு ஆயிரம் மடங்கு, பாலஸ்தீன மக்களுக்கு அழிவை ஏற்படுத்தி இஸ்ரேலின் கொடூரத்துக்கு அழுத கண்ணீர் வற்றி விட்டதா?


 

6 hours ago, விசுகு said:

அத்துடன் மகிந்தவின் பெயர்ப்பலகை காஸாவில் இன்னும் உடைக்கப் படவில்லை. அதனால் இருக்கும்😭

பிரான்ஸில் இலங்கைத் தூதரகம் உள்ளது தானே? அதை என்ன செய்யப் போகின்றீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

ஹமாஸின் அக்டோபர் தாக்குதலுக்கு முன்னால் பல நூறு மடங்கு ஆயிரம் மடங்கு, பாலஸ்தீன மக்களுக்கு அழிவை ஏற்படுத்தி இஸ்ரேலின் கொடூரத்துக்கு அழுத கண்ணீர் வற்றி விட்டதா?


 

பிரான்ஸில் இலங்கைத் தூதரகம் உள்ளது தானே? அதை என்ன செய்யப் போகின்றீர்கள்? 

அங்கே இரு நாடுகள். அவை தத்தமது இறைமைகளை மதிக்கணும் என்பதே எனது நிலைப்பாடு 

கோழியா முட்டையா என்று இனி வாதிட்டு எந்த பிரயோசனமும் இல்லை.

கமாஸ் இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்கி இருக்கக்கூடாது அத்துடன் தன் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து இருக்கணும். 

நான் பாலஸ்தீனத்தை நண்பனாக பார்த்து வளர்ந்தவன். அதனால் முதுகில் குத்தியதை மறக்க முடியவில்லை முடியாது.

18 minutes ago, விசுகு said:

 

கமாஸ் இஸ்ரேல் பொதுமக்கள் மீது தாக்கி இருக்கக்கூடாது அத்துடன் தன் மக்களை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து இருக்கணும். 

 

புலிகள் மாவிலாறில் தண்ணீரை தடுத்து இருக்க கூடாது, சரத் பொன்சேக்கா மீது தற்கொலைத் தாக்குதல் முயற்சி செய்து இருக்க கூடாது,  திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டுக்குள் சில நாட்கள் வைத்து இருந்து இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து யுத்தத்ததை ஆரம்பித்தமையால்தான் நாலாம் கட்ட போரில் பொது மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும் போட்டு குழந்தைகள் உட்பட பல்லாயிரம் தமிழ் மக்களை கொல்ல வேண்டி வந்தது என்று சிங்களவர்கள் கூறுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் சொல்வதை பிரான்ஸ் உட்பட மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டாலும்,  என்னால் எக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 

Quote

நான் பாலஸ்தீனத்தை நண்பனாக பார்த்து வளர்ந்தவன். அதனால் முதுகில் குத்தியதை மறக்க முடியவில்லை முடியாது.

அப்படி எனில் கியூபா, வியட்னாம் தொடங்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரைக்கும் ஒரு காலத்தில் எமக்கு நண்பர்களாக தெரிந்தவர்கள் ஈற்றில் முதுகில் குத்தியது உங்களுக்கு பிரச்சினை இல்லை போல.
 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

புலிகள் மாவிலாறில் தண்ணீரை தடுத்து இருக்க கூடாது, சரத் பொன்சேக்கா மீது தற்கொலைத் தாக்குதல் முயற்சி செய்து இருக்க கூடாது,  திருகோணமலை மாவட்டத்தில் மூதூரை கைப்பற்றி தம் கட்டுப்பாட்டுக்குள் சில நாட்கள் வைத்து இருந்து இருக்கக் கூடாது. இவ்வாறு செய்து யுத்தத்ததை ஆரம்பித்தமையால்தான் நாலாம் கட்ட போரில் பொது மக்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளையும் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும் போட்டு குழந்தைகள் உட்பட பல்லாயிரம் தமிழ் மக்களை கொல்ல வேண்டி வந்தது என்று சிங்களவர்கள் கூறுகின்றனர். 

இவ்வாறு அவர்கள் சொல்வதை பிரான்ஸ் உட்பட மேற்கு நாடுகள் ஏற்றுக் கொண்டாலும்,  என்னால் எக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
 

அப்படி எனில் கியூபா, வியட்னாம் தொடங்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரைக்கும் ஒரு காலத்தில் எமக்கு நண்பர்களாக தெரிந்தவர்கள் ஈற்றில் முதுகில் குத்தியது உங்களுக்கு பிரச்சினை இல்லை போல.

எனக்கு தெரியும் இவ்வாறு உங்களிடம் இருந்து அடுத்த கேள்வி வரும் என்று.

ஆனால் தவறு தவறு தான்.

திருத்தப்படணுமே தவிர ஊக்குவிக்கக்கூடாது. முடியாது 

கியூபா வியட்நாமும் துரோகிகள் தான்.

பகைவரை விட துரோகி ஆபத்தானவன் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நீதி நியாயங்கள் மனிதாபிமானங்கள் எல்லாம் இடத்திற்கிடம் மாறுபடும்😎

உங்களுக்கு, ஆம்😎 - இடத்துக்கிடம் வேறுபடுகிறது. அனேகமானோருக்கு அப்படியல்ல.

ஏனெனில், இஸ்ரேல் பொது மக்களைக் குறி வைப்பது அறத்தவறும், முட்டாள் தனமும் என பலரும் இது தொடர்பான திரிகளில் எழுதி வருகிறார்கள். அதனை வாசிக்காதோர், "இப்ப நான் நிக்கிற திரியில வந்து ஒப்பாரி வையி பாப்பம்😅!" என்று போடுகிற அரசியல் கூச்சலுக்காக கண்டனம் தெரிவிக்க யாழ் களத்தில் அரசியல் வாதிகள் இல்லை என நினைக்கிறேன்.

ரஷ்யா நோக்கி தாக்குதல் எதுவும் செய்யாமல் இருந்த உக்ரைனுக்குள் ரஷ்யா புகுந்து செய்தவை தவறு, அதற்கான எதிர் நடவடிக்கைகள் 100% நியாயமானவை.

இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் சிவிலியன்களைக் கொன்றது தவறு- அதற்கான இஸ்ரேலின் எதிர் நடவடிக்கை நியாயமானது. ஆனால், சிவிலியன்களைக் கொல்வது தவறு.

இவையிரண்டிலும் முரண்பாடெதுவும் உக்ரைன் ஆதரவாளர்களிடம் இல்லை! ஆனால், ரஷ்ய ஆதரவாளர்களுக்கு இரு பிரச்சினைகளினதும் ஒற்றுமைகள், வேற்றுமைகள் *****************! 

Edited by நிழலி
கருத்தாளர்களை மட்டமாக எழுதியமைக்காக நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
55 minutes ago, விசுகு said:

 

மேற்குலக நாடுகள் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்கின்றனர். அதே போல்தான் விடுதலைப்புலிகளையும்  பயங்கரவாதிகள் என்றனர். சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றனர். பொது மக்களை குண்டுவைத்து கொலை செய்தவர்கள் என்றனர்.அரசியல்வாதிகளை கொலை செய்தவர்கள் என்றனர்.அனால் எமக்கோ உண்மை நிலவரம் தெரிந்தபடியால் அவர்களை போராளிகள் என்கிறோம். மதிக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகள் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்கின்றனர். அதே போல்தான் விடுதலைப்புலிகளையும்  பயங்கரவாதிகள் என்றனர். சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றனர். பொது மக்களை குண்டுவைத்து கொலை செய்தவர்கள் என்றனர்.அரசியல்வாதிகளை கொலை செய்தவர்கள் என்றனர்.அனால் எமக்கோ உண்மை நிலவரம் தெரிந்தபடியால் அவர்களை போராளிகள் என்கிறோம். மதிக்கின்றோம்.

ம‌க்க‌ள் தான் புலிக‌ள் 
புலிக‌ள் தான் ம‌க்க‌ள்

சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சை விட‌ இஸ்ரேல் அர‌சு ப‌ல‌ நூறு ம‌ட‌ங்கு இன‌வாத‌ அர‌சு தாத்தா

யுத்த‌ம் இல்லா உல‌கில் எல்லாரும் ஒற்றுமையா வாழ நாம் விரும்பினாலும் அர‌சிய‌ல் வாதிக‌ள் என்ர‌ கூ முட்டைக‌ளால் உல‌க‌ம் அழிவ‌தை யாரால் த‌டுக்க‌ முடியும்

தாத்தா கேட்க்கிறேன் என்று குறை நினைக்க‌ வேண்டாம் உந்த‌ கோதாரி பிடிச்ச‌ ஜ‌யா ச‌வை என்ன‌த்துக்காக‌ எத‌ற்காக‌ உருவாக்க‌ப் ப‌ட்ட‌து..............

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

மேற்குலக நாடுகள் ஹமாஸ் பயங்கரவாதிகள் என்கின்றனர். அதே போல்தான் விடுதலைப்புலிகளையும்  பயங்கரவாதிகள் என்றனர். சிறுவர்களை படையில் சேர்த்தார்கள் என்றனர். பொது மக்களை குண்டுவைத்து கொலை செய்தவர்கள் என்றனர்.அரசியல்வாதிகளை கொலை செய்தவர்கள் என்றனர்.அனால் எமக்கோ உண்மை நிலவரம் தெரிந்தபடியால் அவர்களை போராளிகள் என்கிறோம். மதிக்கின்றோம்.

நீங்கள் கூறும் அத்தனையையும் புலிகள் போக போக தவிர்த்தனர். ஏன் அண்ணா??

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனின் தொடர் தோல்வியும் மத்தியகிழக்கில் புதிய யுத்தத்தின் ஆரம்பமும் பலருக்கு  பிறரின் சுயபுத்தி தொடர்பான கேள்விகளை/சந்தேகங்களை எழுப்புகிறதோ?

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

உக்ரேனின் தொடர் தோல்வியும் மத்தியகிழக்கில் புதிய யுத்தத்தின் ஆரம்பமும் பலருக்கு  பிறரின் சுயபுத்தி தொடர்பான கேள்விகளை/சந்தேகங்களை எழுப்புகிறதோ?

நல்ல விடயம்

உங்களை சுயவிமர்சனம் செய்ய தொடங்கி இருப்பது.. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒம்..நான் சற்று தெளிவாக, நாகரீகமாக எழுதியிருக்க வேண்டும், என் தவறு தான்.

 இரு பிரச்சினைகளுக்கிமிடையிலான ஒற்றுமைகள் எவை, வேற்றுமைகள் எவை என்பதை விளங்கிக் கொள்வதில் ரஷ்ய ஆதரவாளர்களுக்குச் சவால்கள் இருக்கின்றன. அந்தச் சவால்களை இனங்கண்டு நிவர்த்தி செய்வதை விட, எதிர் கருத்துடையோரை  நோக்கி fபோகஸ் லைற் அடித்து விடுவதில் நேரம் விரயமாகிறதென நான் நினைக்கிறேன். 

1 hour ago, Justin said:

இவையிரண்டிலும் முரண்பாடெதுவும் உக்ரைன் ஆதரவாளர்களிடம் இல்லை! ஆனால், ரஷ்ய ஆதரவாளர்களுக்கு இரு பிரச்சினைகளினதும் ஒற்றுமைகள், வேற்றுமைகள் *****************! 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நல்ல விடயம்

உங்களை சுயவிமர்சனம் செய்ய தொடங்கி இருப்பது.. 

சுய விமர்சனம் எல்லோருக்கும் தேவை. தங்களது கருத்துடன் உடன்பட முடியாதவர்களை மட்டும் சுயவிமர்சனம் செய்யக்கேட்பது சரியான வழிமுறை அல்ல . நாகரீகமாக உரையாடுவது என்பது எல்லோருக்கும் உரிய தேவைதானே?

அது தவிர, பிழைகளை ஏற்றுக்கொள்ளுதல் வரவேற்கத்தக்கது. அதவிட நன்மையானது, பிழைகளைத் தவிர்ப்பது. 

(பி.கு.; இதுவரை எவரது எழுத்துக்களையும் நிர்வாகத்திடம் நான் முறையிட்டதில்லை 😉)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இஸ்ரேல் பொது மக்களைக் குறி வைப்பது அறத்தவறும், முட்டாள் தனமும் என பலரும் இது தொடர்பான திரிகளில் எழுதி வருகிறார்கள். அதனை வாசிக்காதோர், "இப்ப நான் நிக்கிற திரியில வந்து ஒப்பாரி வையி பாப்பம்😅!"

👆🏼இதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை.

இதுவரைக்கும் உக்ரேன்-ரஸ்யா விடயத்தில் ரஸ்யாவை எதிர்த்து எழுதியோர் அனைவரும், இஸ்ரேலின் மித மிஞ்சிய வன்முறையையும் கண்டித்தே உள்ளனர்.

நானறிய இஸ்ரேலை முற்றாக ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருவர்தான் யாழில் உளர். அவர்கள் இருவரும் உக்ரேன் விடயத்தில் பக்கம் சார்ந்து எழுதவில்லை.

உண்மை இப்படி இருக்கையில்…

ஏதாவது ஒரு திரி காத்தாடினால் உடனே அங்கே ஓடி வந்து…ஐயோ காஸா குழந்தைகளை கண்டு மனமிரங்க மாட்டீர்களா பாவிகளே என கதறுவது….

Attention seeking.

  • கருத்துக்கள உறவுகள்

@நிழலி @விசுகு உங்கள் கருத்தாடலில் மூக்கை நுழைக்கும் எண்ணம் இல்லை.

விசுகு அண்ணையின் நிலைப்பாடு நான் அனுமானித்தவரை 2009 இன் பின் யார் மீதும் கருணை இல்லை. குறிப்பாக எம்மை தாக்க ஏதோ ஒரு வழியில் உதவியோருக்கு.

இதே நிலையைதான் அவர் உக்ரேன் மீதும் எடுதார் (ரஸ்யாவை எதிர்த்தார் ஆனால் உக்ரேனை ஆதரிக்கவில்லை).

நானும் 2009 இன் பின் சில வருடம் இப்படி இருந்தேன். காலம், நிகழ்வுகள் மனதை இளக்கியது. இந்த இளகலுக்கான கால எல்லை, அவரவர் பட்ட அடியின் அளவில் தங்கியுள்ளது என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை கிலோ, கிறாம் அல்லது மீற்றர், கிலோமீட்டர் அல்லது அளவான வன்முறை/ அதிக வன்முறை  என அளக்கப்படுகிறதா? 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

நீங்கள் கூறும் அத்தனையையும் புலிகள் போக போக தவிர்த்தனர். ஏன் அண்ணா??

புலிகள்  தவிர்த்த விடயங்களையும் புலிகள் செய்த நல்ல விடயங்களையும் அன்று குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இன்றுவரை வெளியே சொல்லவேயில்லை. அவர்கள் சார்பானவர்களும் அதற்கு முயற்சிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரியர் கடிதம் எழுதவில்லையோ.. யுனிசப் ஒட்டுன்னுவர் வன்னி ஓடியாந்து புலிகள் சிறுவர்கள் போராளிகள் என்று அறிக்கை விட்டதோடு... எப்படி தமிழீழத்தில் பள்ளிப் பிள்ளைகள் மீது விமானக் குண்டு வீசிக் கொல்ல கப் சிப்பாக இருந்து ரசித்தவர்களுக்கு.. இதெல்லாம் யு யு பி.

எல்லாம் அமெரிக்கனும் அவன் அடிவருடிகளும்.. அடியெடுத்துக் கொடுத்தால்.. தான்.. மனிதாபிமானமும்.. யுனிசெப்பும்.. மண்ணாங்கட்டியும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

புலிகள்  தவிர்த்த விடயங்களையும் புலிகள் செய்த நல்ல விடயங்களையும் அன்று குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இன்றுவரை வெளியே சொல்லவேயில்லை. அவர்கள் சார்பானவர்களும் அதற்கு முயற்சிக்கவில்லை.

என்ன ஆச்சு அண்ணா

கேள்வி என்ன?

பதில் என்ன??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.