Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பக்தாத்தில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் - ஈரான் சார்பு குழுவின் முக்கிய தளபதி பலி

Published By: RAJEEBAN   08 FEB, 2024 | 10:48 AM

image

ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான் சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது எனவும்  பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

iraq_drone_attack11.jpg

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் தெரிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்றவேளை அமெரிக்காவே பெரும் தீமை என மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் அந்தவாகனத்தை நெருங்க முயன்றவேளை அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களிற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

நீங்கள் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களே இதற்கு காரணம் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/175861

ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது.

அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் பாகிஸ்தான் மீது மட்டும் தான் ஒரு சிறு தாக்குதலைச் செய்தது.

தன் நாட்டில் உள்ள மக்களில், முக்கியமாக பெண்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் இராணுவக் கரம் கொண்டு நசுக்கி, மீறும் பெண்களை அடித்தே கொல்லும் ஈரானிய அரசு, மற்ற விடயங்களில் வெறும் வாய்சவடால்களுடன் காலத்தைக் கடத்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

ஈரான் வெறும் வாய் சவடால் அடிக்காத தான் சரி. இஸ்ரேல் காசா நோக்கி படையெடுத்தால் தாம் சும்மா இருக்கப் போவதில்லை என்று முதலில் சூளுரைத்தனர். இஸ்ரேல் படையெடுப்புத் தொடங்கி மூன்று மாதம் முடியப் போகுது, ஆனால் ஈரான் பம்மிக் கொண்ஂடு இருக்கின்றது.

அதே போல், சிரியா / ஈராக்கில் உள்ள தன் சார்பு அமைப்புகள் மீது தாக்குதல் தொடுத்தால், சும்மா இருக்க மாட்டேன் என்றது. ஆனால் அமெரிக்காவும் பிரித்தானியாவும் , "இந்தா அடிக்கப் போறம்" என்று கால அவகாசம் கொடுத்து தாக்குதல் செய்யும் போதும், அடியை வாங்கிக் கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் பாகிஸ்தான் மீது மட்டும் தான் ஒரு சிறு தாக்குதலைச் செய்தது.

தன் நாட்டில் உள்ள மக்களில், முக்கியமாக பெண்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் இராணுவக் கரம் கொண்டு நசுக்கி, மீறும் பெண்களை அடித்தே கொல்லும் ஈரானிய அரசு, மற்ற விடயங்களில் வெறும் வாய்சவடால்களுடன் காலத்தைக் கடத்துகின்றது.

ஆனால், அதனை சுற்று உள்ள எல்லா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதமும், பயிட்சியும் , பணமும் வழங்கி தனது கடமையை செய்கின்றது. மத்திய கிழக்கு கொந்தளிப்புக்கு ஈரான்தான் முக்கிய காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை அல்லது பிரிட்டனை ஒருக்கால் ஈரானுக்குள் இறங்கி அடிக்க பார்க்க ஆசையாக உள்ளது. வாழ்நாளில் நடக்காது போலுள்ளது. 🙃
அது சரி இஸ்ரேலுக்குள் கார் குண்டு தாக்குதல் நடாத்தியது யார்? (ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்). மேற்கு ஊடகங்கள் பம்மியது நினைவில் உள்ளது.🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

ஆனால், அதனை சுற்று உள்ள எல்லா பயங்கரவாதிகளுக்கும் ஆயுதமும், பயிட்சியும் , பணமும் வழங்கி தனது கடமையை செய்கின்றது. மத்திய கிழக்கு கொந்தளிப்புக்கு ஈரான்தான் முக்கிய காரணம். 

பாவம் சிறு குழந்தை அமெரிக்கா விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது. 

(உங்கள் இலங்கை தொடர்பான practical நடைமுறை சார் பதிவுகள் எல்லாம் பக்கச் சார்பான/ உண்மையற்ற மேற்குலகு சார் நிலைப்பாட்டால் அடிபட்டுப்போகின்றன.)

🤨

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

பாவம் சிறு குழந்தை அமெரிக்கா விரல் சூப்பிக்கொண்டிருக்கிறது. 

(உங்கள் இலங்கை தொடர்பான practical நடைமுறை சார் பதிவுகள் எல்லாம் பக்கச் சார்பான/ உண்மையற்ற மேற்குலகு சார் நிலைப்பாட்டால் அடிபட்டுப்போகின்றன.)

🤨

உள்நாடு என்பது வேறு, வெளிநாடு என்பது வேறு. பயங்கரவாதிகளை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அது சிலருக்கு வெறுப்பை ஏட்படுத்தலாம். ஒன்றும் செய்வதட்கில்லை. 😛

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Cruso said:

உள்நாடு என்பது வேறு, வெளிநாடு என்பது வேறு. பயங்கரவாதிகளை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அது சிலருக்கு வெறுப்பை ஏட்படுத்தலாம். ஒன்றும் செய்வதட்கில்லை. 😛

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

வெறுப்பது என்றால்  உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 

😉

38 minutes ago, Kapithan said:

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

 

😉

அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

பயங்கரவாதத்தின் தொட்டில் மேற்குலகுதானே 😀 

வெறுப்பது என்றால்  உங்கள் கோபம் மேற்கை நோக்கியே இருக்க வேண்டும். 

😉

இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் . ஆனால், மேட்குலகை மட்டும் குற்றம் சாடட முடியாது. இலங்கையில் என்ன நடந்தது? பயங்கரவாதம் என்பது அரச பயங்கரவாதமாக இருக்கலாம் அல்லது இன குழுமங்களின் பயங்கரவாதமாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக நாடுகள் தமது சுயநலனின் அடிப்படையில் தமது படைகளை வேறு நாடுகளில் நிலைநிறுத்துகிறது, அதற்கு இந்தியா கூட விதிவிலக்கில்லை, தற்ப்போது அமெரிக்கபடைகள் உல்கெங்கிலும் ஏறத்தாழ 800 நிலைகள் அளவில் கொண்டுள்ளது என கருதுகிறேன்.

அமெரிக்க நிலைகள் இவ்வாறு உலகளவில் பரந்திருப்பது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகிறது, உதாரணமாக இரண்டாம் உலகப்போரின் போது தனது பிரத்தான் வழ்ங்கல் பாதையில் முள்ளாக இருந்த முத்து துறைமுகத்தினை ஜப்பான் அழித்தது.

தனிய தேசிய பாதுகாப்பு மட்டுமன்றி பொருளாதார நலனடிப்படையிலும் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் அந்த படையினருக்கான செலவினை அந்தந்த நாடுகளே பொறுப்பேற்கவேண்டும் அதே நேரம் அந்த தொகை குறித்த நாடுகளின் படை செலவினை விட அதிகமாகும் என நாடுகள் குறைபட்டாலும் அந்த தொகையினை செலுத்த முன்வருவதன் நோக்கம் குறித்த நாட்டின் எதிரிகள் தாக்கும்போது அமெரிக்க படையினன் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அமெரிக்கா ஒரு முழு அளவிலான போர் பிரகடந்த்துடன் எதிரி நாட்டுடன் மோதும் என்ற எதிர்பார்ப்பு.

இந்த படைகள் குறித்த நாட்டில் பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுகின்ற நிலையில் உள்ளூர் மக்களின் எதிர்ப்புகளினிடையே படைகள் தங்கியுள்ளன, கடந்த காலத்தில் போதைவஸ்து போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் ஊடாக வரும் பணத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் நாடுகளில் குழப்பத்தினை ஏற்படுத்தும் குழுக்களை போசித்தது.

நாடுகளின் ஜனநாயக அரசுகள் கூட கவிழ்க்கப்பட்டு, தற்போதுள்ள சர்வாதிகார சூழ்நிலைக்கு வித்திட்டு தனது நலஙளை பின்னர் அவர்களுடனும் மோதும் நிலையில் அமெரிக்கா இருந்து வருகிறது, இதனை குறையாக கூறவில்லை யதார்த்தினை கூறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

அந்த தொட்டிலில் தான் நீங்கள் வாழ்கின்றீர்கள். உங்கள் குழந்தைகள் நிம்மதியாக வள்ர்கின்றார்கள்.

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

சும்மா கதை விட்டு நம்மை துடைக்க வேண்டாம்.

அரசு என்பதே மக்களுக்கானதே. அதில் தான் நமக்கு உணவு உறையுள் கல்வி மருத்துவம் எல்லாமே. பிழைகளை சொல்ல முதல் இவற்றை மறுக்க வேண்டும். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது.

உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

யேசுநாதரின் மூதாதையர் எனும் காரணத்திற்காக யூத ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கும் ஒரு சிலர் இங்கு உலவுகிறார்கள். ஆனால், 1980 களின் நடுப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட் ஈழத்தமிழர் விடயத்தின் என்ன செய்துகொண்டிருந்தது என்பதை இந்த அடிவருடிகள் அறிந்துகொள்வது நல்லது.

மணலாற்றில் சிங்கள மயமாக்கலினைச் செய்யுமுன் நெடுங்கேணியில் இருந்து தமிழர்களை மொசாட்டின் ஆலோசனனியின்படி எப்படிச் சிங்களப் பேரினவாதம் விரட்டியது என்பதற்கான சிறிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று,

"MOSSAD’s plan was nothing but the classic counterinsurgency program – complete evacuation and destruction of villages supporting the insurgents along with destruction of crops and prevention of cultivation.  The British implemented that scheme in Malaya (Malaysia) during the communist insurgency of the ‘fifties and Israel modified it to suit its needs by establishing Jewish border settlements to plug the infiltration and movement of Palestinian guerillas.  MOSSAD advised Athulathmudali to do the same: plug the routes and dry up the supplies.  Israeli advice suited Athulathmudali’s mission of destroying the territorial base of Tamil Eelam and his ambition of becoming Jayewardene’s successor". 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா.. மத்திய கிழக்கு எங்கும் தனது இராணுவ பிரசன்னத்தை வைச்சிருக்குது. அண்மையில் அபுடாபி விமான நிலையம் போனப்போ.. அங்கு சர்வதேச விமான நிலையத்தை அண்டி அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுக்கி விடப்பட்டுள்ளதுடன் அடிக்கடி பறப்புகளில் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிகிறது.

வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டுக்கு மத்திய கிழக்கில் என்ன வேலை. அமெரிக்கா ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்க ஒரு அருகதையும் கிடையாது. ஏனெனில்.. அமெரிக்கா எந்த நாட்டினதும்.. சுயாதிபத்தியத்தையும்.. தன் ஏகாதிபத்தியத்திற்கு முன் மதிப்பதில்லை. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சும்மா கதை விட்டு நம்மை துடைக்க வேண்டாம்.

அரசு என்பதே மக்களுக்கானதே. அதில் தான் நமக்கு உணவு உறையுள் கல்வி மருத்துவம் எல்லாமே. பிழைகளை சொல்ல முதல் இவற்றை மறுக்க வேண்டும். 

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

1 hour ago, ரஞ்சித் said:

இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது.

உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. அத்துடன் தங்கள் பொதுமைப்படுத்தல், ஈழப் போராட்டத்தில் கிறீஸ்தவர்களின் பங்களிப்பை தாங்கள் கிஞ்சித்தும் அறியாமல் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

அதுதவிர, 

Cruso கத்தோலிக்கர் இல்லை. 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. 

சிலரது பெயரைக் குறிப்பிடும் அளவிற்கு அவர்களை நான் உயர்த்த விரும்பவில்லை. மற்றும்படி எவருக்கும்  பயந்துபோய் நான் பெயரைத் தவிர்த்து எழுதவில்லை.

அவரது கருத்துக்களைப் பார்த்தும், அவர் வாழும் பிரதேசத்தை ஊகித்துமே அவர் கத்தோலிக்கராக அல்லது கிறீஸ்த்தவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம்

இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம்

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரஞ்சித் said:

சிலரது பெயரைக் குறிப்பிடும் அளவிற்கு அவர்களை நான் உயர்த்த விரும்பவில்லை. மற்றும்படி எவருக்கும்  பயந்துபோய் நான் பெயரைத் தவிர்த்து எழுதவில்லை.

அவரது கருத்துக்களைப் பார்த்தும், அவர் வாழும் பிரதேசத்தை ஊகித்துமே அவர் கத்தோலிக்கராக அல்லது கிறீஸ்த்தவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன். 

ஏற்றுக்கொள்கிறேன்.

முகமறியாத ஒருவருடைய குறியீட்டுப் பெயரைக் குறிப்பிடுவதால் ஒருவர் பெரியவர் /சிறியவர் ஆகலாம் என்பது கேள்விக்குறியே. 

15 minutes ago, உடையார் said:

 

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

100% உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

இந்த மேற்கின் சதியால்தான் நாம் சொந்த ஊரைவிட்டு இடம் பெயர வேண்டியிருந்த து, இல்லாவிட்டில் சொந்த மண்ணில் மானத்துடன் வாழ்ந்திருப்போம்

இங்கு வந்து இப்படியொரு கேள்விக்கு ஆளாகியிருக்கமாட்டோம்

பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்கள்👍🙏

இது எமக்கு மட்டுமன்றி இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் அத்தனை சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.. அது மட்டுமின்றி  இந்தியா போன்ற பல தனித்துவ இனங்களை நசுக்கி மேற்குலகி விட்டுச்செல்லும்போது நாடாக உருவாக்கப்பட்டிருக்கும் பெரிய நாடுகளில் மொழியை கலாச்சாரத்தை காக்கப்போராடும் சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்..

உடையார் எழுதியது இந்த நூற்றாண்டில் உலகம் முழுவதும் நசுக்கப்பட்டும் அளிக்கப்பட்டும் கொண்டிருக்கும் சிறுபான்மை இனங்களின் வரலாற்று துயரத்தின் விதை/வேர்..

இந்த நூற்றாண்டில் விடுதலைக்காக போராடும் மற்றும் போராடிய இனங்களின் அந்த போராட்ட தேவையின் ஆரம்ப புள்ளியை தேடிப்போனால் உடையார் எழுதியதில்தான் வந்து நிற்கும்..

இன்று உணவும் உடையுளும் தந்து நம்மை வாழவிட்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் உட்பட பலநூறு சிறிபான்மை இனக்குழுக்களின் கட்டப்பொம்மன்களாக நாம் மாறி மேற்கை சகட்டுமேனிக்கு போற்ற முடியாது.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

அதுவும் உண்மைதான்.  அதற்காக பிழையான ஒன்றைச் சரியென்று கூற முடியாது அல்லவா? 

தனது நலனுக்காக அரசுகள் எதையும் செய்ய ஆயத்தமாகவே உள்ள. 

உண்மை. உலகில் உள்ள எல்லா அரசுகளும் அப்படிதான். அப்படி என்றால் நீங்கள் ஒரு பக்கத்தை மட்டும் குற்றம் சாடட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரஞ்சித் said:

கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும்

கத்தோலிக்க மதத்தவர்களைவிட பெரும்பான்மை இந்து ஈழதமிழர்கள் மேற்குலகுசார்ந்த பாதுகாப்பு உரிமைகள் கொண்ட பொருளாதார சிறப்பு வாழ்கை பெற்றுள்ளார்கள் அண்ணா. அவர்கள் நீங்கள் குறிப்பிடுகின்ற அவர்களின் இயல்பான சார்பு இந்து நாடுகளிடமோ அல்லது முஸ்லிம் நாடுகளிலோ ஈரானிலோ நிரந்தரமாக வாழ தயாராக இல்லை.

உடையார் பிரச்சனைகளை சமாளித்து ஈழத்தில் வாழ்பவர்களை பாராட்டி உள்ளார் அதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.ஈழத்தில் வாழ்பவர்கள் மேற்குலகை திட்டினால் அதை அவதானமாக கேட்கலாம்.
ஊருக்கு உபதேசம் எனக்கு இல்லை என்று இங்கே இருப்பவர்களுடையதை  இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

உங்களுக்கு அவர் பெயரைச் சொல்லும் துணிச்சல் இல்லையென்றால் பிறகெதற்கு அதனை இங்கே சுட்டிக்காட்டுகிறீர்கள்? 

நான் ஒரு கத்தோலிக்கன். Cruso வின் மேற்கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு நேரெதிரானவன். எனவே Cruso வின் நிலைப்பாட்டை கத்தோலிக்கர்களின் நிலைப்பாடாக பொதுமைப்படுத்தத் தேவையில்லை. அத்துடன் தங்கள் பொதுமைப்படுத்தல், ஈழப் போராட்டத்தில் கிறீஸ்தவர்களின் பங்களிப்பை தாங்கள் கிஞ்சித்தும் அறியாமல் இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. 

அதுதவிர, 

Cruso கத்தோலிக்கர் இல்லை. 

இங்கு சில எனது பெயர் குறிப்பிடாமல் ஏதேதோ எழுதுகிறார்கள். எனக்கு இங்கு கருது எழுதுபவர்களின் மன நிலையும் அவர்கள் எப்படியான கருத்துக்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எனக்கு நன்றாகவே விளங்கும். அப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்த எழுதவும் முடியும். நிச்சயமாக அப்படி எழுத மாடடேன்.

இங்கு நிறைய down vote எனக்கு கிடைத்தது என்று சொல்லலாம். அதற்ககாக நான் எனது கொள்கையையோ, கருத்தையோ மாற்ற வேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்கள் உங்கள் கருத்தை எழுதுகிறீர்கள், நான் எனது கருத்தை எழுதுகிறேன். அதட்கு மேல் சொல்வதட்கு ஒன்றுமில்லை.

எமது மூதாதையர் இந்துவாக இருந்து கத்தோலிக்கராக மாறியவர்கள். இதனால்தான் சங்கிலியன் அங்கு வந்து மக்களை வெட்டி கொன்றதை சரித்திரம் தெரிந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். நான் ஒரு கிறிஸ்தவன். கத்தோலிக்கர் கிறிஸ்தவர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2024 at 12:27, Kapithan said:

ஸாரி விசுகர், 

சரி பிழைகளைச் சுட்டிக்காட்டுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமை. 

வியட்னாம்அ-மெரிக்கப் போரின் போது அமெரிக்கர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டும்போது அவர்கள் தமக்கான தேவைகளை மறுக்கவில்லை. பிரஞ்சுப் புரட்சியின்போதும் மக்கள் பட்டினி கிடக்கவில்லை. 

எனது உழைப்பில் நான் உண்கிறேன். எனது வரியில் எனக்கான சேவைகளை அரசு வழங்குகிறது. இவற்றை மறுக்க வேண்டிய தேவை எங்கிருந்து வருகிறது? 

ஊரில் இருந்த ஆண்டான் அடிமை முறையில்தான் அடிமை வாய் பொத்தி ஆண்டானுக்கு சேவகம் செய்தது. தாங்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்து மாறவில்லை போலத் தெரிகிறது. 

மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை  வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

மரக்கிளையில் இருந்தபடி மரக்கிளையை வெட்டும் பைத்தியமும் அதற்கு ஒரு காரணத்தை  வைத்திருக்கும். நாம் பாவம் இன்னும் கொஞ்ச நேரத்தில் புரிந்து விடும் என்று விட்டு நமது நேரத்தை வீணாக்காமல் நகர்வது நல்லது. 

எனது கருத்தைக் கூறும்போது அதற்குப் பைத்தியம் எனப் பூடகமாகக் கூறுவது பொருத்தமற்ற செயல். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.