Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

நானும் பதிந்துவிட்டே சென்றேன்.

என்னிடம் எதுவுமே கேட்கவில்லை.

கோசான் கொஞ்சம் பழமைவாதி😁.

  • Replies 76
  • Views 4.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • விசுகு
    விசுகு

    குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தினால் முன்னர் முன்னெடுக்கப்பட்டு வந்த வீசா வழங்கும் முறை நேற்று முதல் வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் 

  • பெருமாள்
    பெருமாள்

    Beggars can’t be choosers , தமிழனிற்கு எதையும் வழங்க விடக்கூடாதென தம் நாட்டையே படுகுழியில் தள்ளி இன்றும் சிந்திப்பதாக தெரியவில்லை.  பத்திரம் பத்திரம் பானை பத்திரம் என மாதான முத்தாவின் பானையும் போய்

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    Zubin Karkaria CEO and Founder of VFS Global    

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தரக்குறைவாக ந்டக்குமளவிற்கு முட்டாள்களாகவா இருப்பார்கள்?

உங்களுக்கு, முன்னர் விமான நிலையத்துள் படையினர் சோதனைகளை மேற்கொள்ளும் சமயம் (சென்னை விமானத்தில், போர்ட்டிங் பாஸ் எடுத்த பின் பொதி, உடல் சோதனை செய்வார்கள்)  மொழி தெரியாத தமிழர்கள் இதே சர்வதேச விமான நிலையத்தில் வைத்து எப்படி நடத்தப்பட்டார்கள் என்பது ஒன்றில் தெரியவில்லை அல்லது மறந்து விட்டீர்கள்.

அதேபோல் திரும்பி செல்லும் சமயம் அங்கே தமக்கு நிகழ்ந்த அலுப்புகள் பற்றியும் இங்கே பலர் எழுதியுள்ளனர்.

இராணுவத்தின் அளவை குறைக்க கேட்பதுதான் நாம் செய்ய வேண்டியது.

மேலும் மேலும் இராணுவ மயப்படுத்துவதை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

கணனியில் பதிவு செய்து சென்றேன், கடமையில் இருந்த பெண்மணி குடிவரவு அட்டையினை கேட்டார் கனனியில் பதிந்தாகக்கூறினேன் எந்த தொல்லையுமில்லை.

நீங்கள் முன்னர் சொன்னதை நான் சரியாக விளங்கவில்லை. நீங்கள் டிஸெம்பார்கேசன் கார்டை ஏலவே ஒன்லைனில் பதிந்து விட்டு போயுள்ளீர்கள். ஈழப்பிரியன் அண்ணை போல.

அப்படியானோருக்கு பிரச்சனை இராது என நினைக்கிறேன்.

நான் இந்த கார்ட்டையே மறந்து போனேன். அங்கே போனதும் கார்ட்டை பார்த்ததும்தான் நினைவு வந்தது.

பேனா - எப்போதும் பயணத்தில் பேனா எடுத்து செல்வது அவசியம். குறிப்பாக 3ம் உலக நாடுகளுக்கு போகும் போது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

4 - 5 நாள்கள் பயணமாக இலங்கை சென்றிருந்தேன் மிக நீண்டகாலத்தின் பின்னர்,

மன்னிக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு.

4 நாளில் எவராலும் எந்த நாட்டை பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது.

குறிப்பாக மத்திய தரை கோட்டை அண்டிய 3ம் உலக நாடுகளுக்கு மேற்கில் இருந்து போனால், அதுவும் நீங்கள் நீண்ட காலத்தின் பின் போயுள்ளீர்கள் - அந்த சூழலுக்கு இசைவாக்கம் அடையவே 3 நாள் எடுக்கும்.

எனக்கெல்லாம் இந்தியா போனால் முதல் மூன்று நாள் “ஏன் இங்கே வந்தோம்” என இருக்கும். ஆனால் மூன்று கிழமை முடிந்து இலண்டன் திரும்பும் போது, போகத்தான் வேண்டுமா என இருக்கும்.

நீங்கள் 4 நாள் துயர நிகழ்சி, ஒரு மாசு நிறைந்த நகரத்தில் ஓடி திரிந்து விட்டு - வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை வைத்து ஒரு நாட்டின் நிலையை எடை போட முடியாது.

அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் டேஸ்ட் வேறுபடுவதும் உண்டு.

உதாரணமாக நான் சொன்ன கொழும்பு புதுக்கடை தெருவோர கடைகளில் எனது வீட்டில் என்னை தவிர ஏனையோர் சாப்பிட மாட்டார்கள். அந்த சூழலையே பார்த்து முகம் சுழிப்பார்கள்.

அதே போல் ஒரு மண் கடையில் ரொட்டியும் பருப்பும் - பலர் இதில் என்ன இருக்கு என யோசிப்பார்கள்.

ஆனால் அதையே பலர் அசலான இலங்கை அனுபவம் என அனுபவிப்பார்கள்.

சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு.

சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா இலங்கையில் அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் இப்படி எழுதுவதற்கு.

4 நாளில் எவராலும் எந்த நாட்டை பற்றியும் ஒரு முடிவுக்கு வர முடியாது.

குறிப்பாக மத்திய தரை கோட்டை அண்டிய 3ம் உலக நாடுகளுக்கு மேற்கில் இருந்து போனால், அதுவும் நீங்கள் நீண்ட காலத்தின் பின் போயுள்ளீர்கள் - அந்த சூழலுக்கு இசைவாக்கம் அடையவே 3 நாள் எடுக்கும்.

எனக்கெல்லாம் இந்தியா போனால் முதல் மூன்று நாள் “ஏன் இங்கே வந்தோம்” என இருக்கும். ஆனால் மூன்று கிழமை முடிந்து இலண்டன் திரும்பும் போது, போகத்தான் வேண்டுமா என இருக்கும்.

நீங்கள் 4 நாள் துயர நிகழ்சி, ஒரு மாசு நிறைந்த நகரத்தில் ஓடி திரிந்து விட்டு - வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். இதை வைத்து ஒரு நாட்டின் நிலையை எடை போட முடியாது.

அதே போல் ஒவ்வொரு மனிதருக்கும் டேஸ்ட் வேறுபடுவதும் உண்டு.

உதாரணமாக நான் சொன்ன கொழும்பு புதுக்கடை தெருவோர கடைகளில் எனது வீட்டில் என்னை தவிர ஏனையோர் சாப்பிட மாட்டார்கள். அந்த சூழலையே பார்த்து முகம் சுழிப்பார்கள்.

அதே போல் ஒரு மண் கடையில் ரொட்டியும் பருப்பும் - பலர் இதில் என்ன இருக்கு என யோசிப்பார்கள்.

ஆனால் அதையே பலர் அசலான இலங்கை அனுபவம் என அனுபவிப்பார்கள்.

சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு.

சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா இலங்கையில் அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.

நீங்கள் கூறுவது சரிதான், நான் முதல் தடவையாக இலங்கை விமான நிலையத்தினூடாக பயணித்தேன் அத்துடன் அது ஒரு சுற்றுலா பயணமும் இல்லை, அத்துடன் நான் பழழையதை மறந்த மோசமான மனிதனாகிவிட்டேன் என நினைக்கிறேன்.

நான் இலங்கையினை விட்டு வரும்போது ஒரு வெளிநாட்டவர் நான் இலங்கையர் என கருதி விமானநிலையத்தில் அவருக்குள்ள அசெளகரியங்களை குறிப்பிட்டார் (அது உண்மையில் எனக்கு பேரிய விடயமாக இருக்கவில்லை) அதில் ஒன்று கழிவறை சுத்தமற்று ஈரமாக இருப்பதும், கை உலர்த்துவதற்கு வசதி இல்லை எனவும் குறிப்பிட்டார், அதற்கு இலங்கையர்களின் பார்வையில் ஏன் அவ்வாறு இருக்கிறது என விபரித்தேன், கழிவறையில் தண்ணீர் வசதி இருப்பதால் ஒவ்வொருவரும் அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் தாமாக சுத்தம் செய்வதும், ஒவ்வொருவரும் கைகுட்டை பாவிப்பதும் காரணமாக இருக்கலாம் என.

ஒவ்வொருவரது அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் வேறுபடலாம், ஆனால் மேலே நான் நகைசுவையாகவே பதிவிட்டேன் ஆனால் அந்த பதிவு ஒரு பதற்றநிலையினை ஏற்படுத்தும் என நம்பவில்லை (நீங்கள் சிறீலங்கன் விமானத்தரை இறக்கம் பற்றிய செய்திக்கான பதிவினை இதில் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்).

அத்துடன் சுற்றுலா பயணங்களில் பெரிதாக ஆர்வமும் இல்லை, முன்பு சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது அதுவும் இப்போது இல்லை, பெரிதாக சுற்றுலா போவதற்கே விருப்பம் இல்லை, குழந்தைகளுக்காக போவது மட்டுமே, இவ்வாறான அனுபவங்கள் என பெரிதாக ஆர்வம் இல்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, நிழலி said:

இந்த நிறுவனம் நேற்று கால தாமதம் ஏற்பட விடாமல். காசையும் குறைத்து வாங்கி இருந்தால், வாயையும் *** ம் மூடிக் கொண்டு உல்லாசப் பயணிகளில் இருந்து சிங்களவர்களை வரை பேசாமல் போய் இருப்பார்கள் என்பதுடன் ஏன் இந்தியா (அல்லது இன்னொரு நாடு) என்ற கேள்வி கூட எவருக்கும், முக்கியமாக சிங்களவருக்கு ஏற்பட்டே இருக்காது.

முழு நாட்டையும் தமிழர் அல்லாத எந்த வெளி நாட்டவர்களுக்கு விற்றாலும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கவலை இல்லை. ஆனால், அது இலவசமாகவோ அல்லது கட்டணம் குறைவானதாகவோ இருக்க வேண்டும்.

சவூதிக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ, அவ்வளவு ஏன், ஆப்கனின் தாலிபான்களுக்கோ கொடுப்பதாக இருந்தால், இதே வாய் மாறி கதைத்து இருக்கும்.

இவர்கள் தான் கனடா விசா விண்ணப்பங்களையும் ஏற்பது, மீள கடவுச் சீட்டை ஒப்படைப்பது, கூரியரில் அனுப்பி வைப்பது ஆகிய வேலைகளை கொழும்பில் செய்கின்றனர் (வீசா தகுதி யை கனடிய தூதரகம் மேற்கொள்ளும்)

இங்கும் கனடாவில் ஒன்ராரியோவில் இந்திய பாஸ்போர் விண்ணப்பங்களை ஏற்பதும், விண்ணப்பதாரிகளுக்கு ஒப்படைப்பது தொடர்பான வேலைகளை செய்வதும் இவர்கள் தான் (VFS global)

 

விண்ணப்ப படிவங்கள் எப்படியென்றால்

கனடா விசா விண்ணப்பிக்கும்போது கனடா செர்வீஸ் இணய தளத்திலேயே செய்யவேண்டும், எல்லா விபரங்களையும் பதிவு செய்து "அனுப்பு' பொத்தானை அழுத்திய பின்பு இவை பிரிடிஸ் கொலம்பியாவில் உள்ள பிரதான க‌னடிய எல்லை கட்டுப்பாட்டு காரியாலயத்திற்கு செல்லும், சில நாட்களின் பின் கைரேகை பதிவுக்காக VFS போகச்சொல்லி மின்னஞல் கடிதம் வரும். (இந்த முகவர் VFS) முதலில் கைகளிள் இரண்டையும் விரித்து கமராவில் காட்டிய பின் ஒவ்வொரு விரலாக ஸ்கான் செய்வார்கள். 

பிறகு சில வாரங்களின் பின் விசா அப்ரூவல் ஆனவுடன் மின்னஞல் கடிதம் வரும் அதை எடுத்துக்கொண்டு, பாஸ்போட்டுடன் இடம் கொடுத்தால் இவர்கள் இதை கனேடியன் ஹைகமிசனுக்கு அனுப்பி விசாவை குத்தி வைத்திருப்பார்கள் 5 நாட்களின் பின் பெற்றுக்கொள்ளாலாம். பொதுவாக இன்டெர்வியூ நடைபெறுவதில்லை.

அமெரிக்க விசாவும் இவ்வாறே ஆனால் ஒன்லைனில் விண்ணப்பித்த பின் சிஸ்டம் தானாக இன்டெர்வியு நேரத்தை எடுக்க சொல்லும், எடுத்தவுடன் ஒதுக்கப்பட்ட அந்த நேரத்திற்கு கட்டாயமாக செல்லவேண்டும். எம்பஸியெலேயே கைவிரல் பதிவு செய்யப்படும்.

கவுண்டருக்கு அந்தப்பக்கத்தில் இருக்கும் வீசா ஆபீசாருடன் 
2 ‍தொடக்கம் 3 நிமிடங்கள் வரை அவர் கேட்க்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும், இது மிகவும் சவாலுக்குறியது, அது முடிதவுடன் அவர் பாஸ் என்றால் பாஸ்போட்டை கொடுக்க சொல்வார், பெயில் என்றால் முகத்திற்கு சொல்லிவிடுவார். அதேபோல் அமெரிக்க வீசா விண்ணபம் ஒர் மிக நீண்ட கேள்விக்கொத்து, Facebook, LinkedIn போன்ற சமூக தளங்களின் தரவுகளையும் கேட்பார்கள். மேலும் அமேரிக்க விசா இருந்தால் மெக்ஸிகோ, போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம் என்பதும் ஒரு காரணமாகும்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும்.

💯 உண்மை  எனக்கு இலங்கையும் பிடிக்கும் சுவிஸ்சும் பிடிக்கும். லண்டனைவிட எடின்பேர்க்கிற்கு மேலே உள்ள இடங்கள் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

 

சுற்றுலாக்கள் எல்லாம் ஒன்றல்ல - 3ம் உலக நாடுகளில் உள்ள அனுபவம், வேறு சுவிஸ், நோர்வே அனுபவம் வேறு.

சிலருக்கு இரெண்டும் பிடிக்கும். சிலருக்கு சுவிஸ்தான் பிடிக்கும். அவர்களை கொண்டு போய் இந்தியா அதுவும் 4 நாள் விட்டால் திணறித்தான் போவார்கள்.

நான் இந்தியா போதாததற்கு இது தான் காரணம் முக்கியமாக வாகன ஓட்டிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

வீசா நடைமுறையில் தலையிடுமாறு ரணிலிடம் கோரியுள்ள சுற்றுலாத்துறையினர்

Screenshot-2024-05-04-at-10.30.58%E2%80%

சுற்றுலா விசா நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தில் தலையிடுமாறு இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பங்குதாரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) வலியுறுத்தியுள்ளனர்.

2024 ஏப்ரல் 17 முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய ஒழுங்குமுறையின்படி, அனைத்து சுற்றுலா விசா விண்ணப்பங்களையும் ஒரு தனியார் நிறுவன இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது முன்னர் பயன்படுத்தப்பட்ட அரசாங்கத்தால் இயக்கப்பட்ட மின்னணு பயண அங்கீகார (ETA) அமைப்பை மாற்றுகிறது.

இந்நிலையில், புதிய செயன்முறையில் சுற்றுலாப் பங்குதாரர்கள் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மின்னணு பயண அங்கீகார அமைப்பு மூலம் முன்பு கிடைத்த ஒற்றை நுழைவு 30 நாள் விசா இனி வழங்கப்படாது. தற்போது, ஆறு மாத பல நுழைவு விசா மட்டுமே 100.77 டொலர் கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த விசா கட்டணம், ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணமாகும்.

இது, இலவச அல்லது மலிவான விசாக்களை வழங்கும் பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுக்கிறது.

அத்துடன், புதிய இணையத்தளத்தின் விண்ணப்பச் செயல்முறை சிக்கலானது என்று தொழில்துறை பங்குதார்கள் விமர்சித்துள்ளனர்.

இதன் காரணமாக. 2024ஆம் ஆண்டில் தொழில்துறையின் 2.3 முதல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் என்ற எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கு பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்

 

https://akkinikkunchu.com/?p=275698

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, vasee said:

நீங்கள் கூறுவது சரிதான், நான் முதல் தடவையாக இலங்கை விமான நிலையத்தினூடாக பயணித்தேன் அத்துடன் அது ஒரு சுற்றுலா பயணமும் இல்லை, அத்துடன் நான் பழழையதை மறந்த மோசமான மனிதனாகிவிட்டேன் என நினைக்கிறேன்.

நான் இலங்கையினை விட்டு வரும்போது ஒரு வெளிநாட்டவர் நான் இலங்கையர் என கருதி விமானநிலையத்தில் அவருக்குள்ள அசெளகரியங்களை குறிப்பிட்டார் (அது உண்மையில் எனக்கு பேரிய விடயமாக இருக்கவில்லை) அதில் ஒன்று கழிவறை சுத்தமற்று ஈரமாக இருப்பதும், கை உலர்த்துவதற்கு வசதி இல்லை எனவும் குறிப்பிட்டார், அதற்கு இலங்கையர்களின் பார்வையில் ஏன் அவ்வாறு இருக்கிறது என விபரித்தேன், கழிவறையில் தண்ணீர் வசதி இருப்பதால் ஒவ்வொருவரும் அதனை பயன்படுத்துவதற்கு முன்னர் தாமாக சுத்தம் செய்வதும், ஒவ்வொருவரும் கைகுட்டை பாவிப்பதும் காரணமாக இருக்கலாம் என.

ஒவ்வொருவரது அனுபவங்களும் எதிர்பார்ப்புகளும் வேறுபடலாம், ஆனால் மேலே நான் நகைசுவையாகவே பதிவிட்டேன் ஆனால் அந்த பதிவு ஒரு பதற்றநிலையினை ஏற்படுத்தும் என நம்பவில்லை (நீங்கள் சிறீலங்கன் விமானத்தரை இறக்கம் பற்றிய செய்திக்கான பதிவினை இதில் இட்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்).

அத்துடன் சுற்றுலா பயணங்களில் பெரிதாக ஆர்வமும் இல்லை, முன்பு சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் இருந்தது அதுவும் இப்போது இல்லை, பெரிதாக சுற்றுலா போவதற்கே விருப்பம் இல்லை, குழந்தைகளுக்காக போவது மட்டுமே, இவ்வாறான அனுபவங்கள் என பெரிதாக ஆர்வம் இல்லை.

 

கவலையை விடுங்கள் எந்த பதட்ட நிலையும் உருவாகவில்லை🤣. ஆனால் எனது எழுத்தை “மிகைப்படுத்தல்” என விபரித்தால் அது என் integrity சார்ந்த விடயம் என்பதால் பதில் கொஞ்சம் காரமாக வரும் 🤣.

இரெண்டு திரிகளிலும் ஒரே விடயத்தையே அலசுவதால் overlap சகஜம்.

ஆனால் இங்கே நீங்கள் எழுதியதை பார்க்க இவை typical first world complaints என்பதாக படுகிறது. மீண்டும் சொல்கிறேன் இந்தியாவுக்கு கீழே இருக்கும் தீவு 3ம் உலக நாடான இலங்கை - நியூசிலாந்து இல்லை🤣.

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

எடின்பேர்க்கிற்கு மேலே உள்ள இடங்கள் பிடிக்கும்.

உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம்.

55 minutes ago, விசுகு said:

நான் இந்தியா போதாததற்கு இது தான் காரணம் முக்கியமாக வாகன ஓட்டிகள். 

நானும் இந்தியாவிலோ, இலங்கையிலோ வாகனம் ஓட்டுவதில்லை.

போய் இறங்கியதும் முதலில் முகத்தில் அடிப்பது வெக்கை, அடுத்தது வியர்வை நாற்றம். பயணக்களைப்பு, சீதோசண மாற்றம் - நிச்சயமாக முதல் மூன்று நாள் கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கும்.

ஆனால் இவை அந்த நாடுகளின் அடிப்படை பண்புகள்.  சுற்றுலா போகும் நாம் தான் அவருக்கு பழக வேண்டும் அல்லது வேறு எங்காவது போக வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

கோசான் கொஞ்சம் பழமைவாதி😁.

யானைக்கும் அடி சறுக்கும்.

எனக்கும் யாழில் செய்தியாக வந்தபடியாலேயே விழிப்பாக இருந்தேன்.

எனக்கு தெரிந்த பலர் போகும்போதும் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தேன்.

அத்துடன் நான் போனநேரம் ஒரே கட்டணத்தில் 6 மாதகாலம் நிற்கலாம்.எனவே ஒரு மாதத்துக்கு சற்று கூடுதலாகவே நின்று வந்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்காவில் இணைய வீசா: தொடரும் சர்ச்சை

பண்டாரநாயக்க சர்வதேச விமான (Bandaranaike International Airport) நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் வீசாக்களின் முக்கிய தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் (VFS Global) அமைப்பை இணைத்தமை தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

தேசிய பாதுகாப்பு மீதான அச்சுறுத்தல் மற்றும் நாட்டின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையில் வெளிநாட்டினரிடமிருந்து அதிகரித்த கட்டணங்கள் என்பனவே இதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தனிப்பட்ட விபரங்கள்

 

முன்னதாக உள்ளூர் நிறுவனமான மொபிடெலின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் அமைப்பை உருவாக்கி, சிக்கனமான விகிதத்தில் இலங்கை குடிவரவுத்துறை எந்த சிரமமும் இல்லாது இந்த பணியை கிரமமாக கையாண்டு வந்தது.

இந்நிலையில் மேலும், 150இற்கும் மேற்பட்ட நாடுகளில் வீசா ஆவணங்களை கையாளும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸினால் (Tiran Alies) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் இணைய வீசா: தொடரும் சர்ச்சை | Online Visa In Katunayake Controversy Continues

எவ்வாறாயினும், இந்த முழுப் பிரச்சினையின் பின்னணியில் சில மறைமுக நிகழ்ச்சி நிரல் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதோடு அதை விரிவாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரஜைகளின் தனிப்பட்ட விபரங்களை குறித்த வெளிநாட்டு நிறுவனம் வைத்திருப்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதேநேரம், சுற்றுலாப்பயணிகளாக வரும் வெளிநாட்டு பிரஜைகளின் தனிப்பட்ட பின்னணியை இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளால் முழுமையாக மதிப்பிட முடியாததால், அதுவும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும குடிவரவு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிகரித்த கட்டணங்கள்

 

அத்துடன், இலங்கை குடிவரவு அதிகாரிகள், வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து வீசா கட்டணத்தை மட்டுமே வசூலித்து வந்துள்ளனர்.

ஆனால் செயல்முறை அவுட்சோர்ஸ் (மூன்றாம் தரப்பு) செய்யப்பட்ட பிறகு கூடுதல் சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், வருகை தரும் வீசா கட்டணம் 100 டொலர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்காவில் இணைய வீசா: தொடரும் சர்ச்சை | Online Visa In Katunayake Controversy Continues

இந்த சூழலில் அதிகரித்த கட்டணங்கள் சுற்றுலாத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் உள்ளூர் நிறுவனத்தின் முன்மொழிவைக் கண்டுகொள்ளாமல், 'GBS டெக்னொலஜி சேர்வீசஸ்' மற்றும் 'IVS Global FZCO' ஆகிய நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கியுள்ளது.

புதிய இணைய வீசா தளத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் உள்ளது. இதன்படி ஏப்ரல் 17 முதல், இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் வீசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 18.5 டொலர்கள் சேவைக் கட்டணம் மற்றும் 7.27 டொலர்கள் வசதிக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளனர்.  

https://tamilwin.com/article/online-visa-in-katunayake-controversy-continues-1714795048

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

இதன்படி, மின்னணு பயண அங்கீகார அமைப்பு மூலம் முன்பு கிடைத்த ஒற்றை நுழைவு 30 நாள் விசா இனி வழங்கப்படாது. தற்போது, ஆறு மாத பல நுழைவு விசா மட்டுமே 100.77 டொலர் கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த விசா கட்டணம், ஆசியாவிலேயே மிக அதிகமான கட்டணமாகும்.

கூடுதலாக 18 டாலர் கட்டணம் கேக்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

Please note: All eVisa categories will be charged an additional USD 18.50 service fee. Does not include charges towards payment gateway, taxes and other transaction fees

31 minutes ago, பெருமாள் said:

புதிய இணைய வீசா தளத்தை செயற்படுத்துவதற்கான தொழில்நுட்ப பங்காளியாக வி.எப்.எஸ் குளோபல் உள்ளது. இதன்படி ஏப்ரல் 17 முதல், இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் வீசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 18.5 டொலர்கள் சேவைக் கட்டணம் மற்றும் 7.27 டொலர்கள் வசதிக் கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளனர்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

யானைக்கும் அடி சறுக்கும்.

எனக்கும் யாழில் செய்தியாக வந்தபடியாலேயே விழிப்பாக இருந்தேன்.

எனக்கு தெரிந்த பலர் போகும்போதும் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்று சொல்லி அவர்களையும் செய்ய வைத்தேன்.

அத்துடன் நான் போனநேரம் ஒரே கட்டணத்தில் 6 மாதகாலம் நிற்கலாம்.எனவே ஒரு மாதத்துக்கு சற்று கூடுதலாகவே நின்று வந்தேன்.

🤣 இதில் அடி சறுக்க என்ன இருக்கிறது என்பதுதான் எனக்குத் தெரியவில்லை. நான் என்ன சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவா.

தெரிந்ததை எழுதுவதும், தெரியாததை அறிவதும்தானே கருத்துக்களத்தின் நோக்கம்.

இப்போ உங்கள் தயவால் இதை அறிந்து கொண்டேன். என் குடும்ப உறுப்பினர் விரைவில் போகிறார். உதவியாக இருக்கும்.

அதே போல் யாழ்கள உறவுகளுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் விசா கட்டணம் அதிகரிப்பு : வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றத்தினால் உருவாகியுள்ள பாரபட்சம் தொடர்பிலும் தெரியப்படுத்தினேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

தொம்பே(Dombe) பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

சீரழிந்த அரசியல் கலாசாரம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இதுவரை நான் சொன்னது எதுவும் தவறாகவில்லை. 2019 இல் தோற்றாலும் 2020, 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் பெண்களின் ஆரோக்கியத்துவாய் குறித்து பேசினேன். ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு, தேர்தல் ஆண்டில் இது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டு, பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு  வசதிகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளனர்.

Increase in visa fees levied on expatriates

 

அரசியல் பொறாமையை மையமாக வைத்து தேர்தல் வருடத்தில் மாத்திரம் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தினால் முக்கியமானதொரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இப்போதாவது இந்த சீரழிந்த அரசியல் கலாசாரத்தில் இருந்து விலகி செயற்பட வேண்டும்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டவர்களிடம் இருந்து அறவிடப்படும் விசா கட்டண அதிகரிப்பு குறித்து குரல் எழுப்பினேன். விசா வழங்கும் நடைமுறைமையில் நடந்துள்ள மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள பாரபட்சம் குறித்து கடந்த வாரம் சுட்டிக்காட்டினேன்.

அரசியல் ஆதாயத்துக்காக தாம் கூறிய கருத்து தவறானது என அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் கூறினர், ஆனால் தான் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்த விடயம் இன்று யதார்த்தமாகியுள்ளது.

நான் சொல்வதைக் கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்திருக்க முடியுமாக இருந்திருக்கும். ஆனால் அரசியல் பொறாமைத்தனத்தால் அவ்வாறு செய்யாது விட்டனர். தற்போது அவர்கள் கொண்டு வந்த சட்டங்களை கைவிட தீர்மானம் எடுத்துள்ளனர்.

இதே வழியில், கோவிட் ஆரம்ப காலப்பிரிவிலே முகக்கவசம், கோவிட் தடுப்பூசி, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நல்ல முன்மொழிவுகளை முன்வைத்தபோது எனக்கு எதிராக சேறு பூசினர். என்ன நடந்தது, இறுதியில் உண்மை வென்றது. தாம் கூறிய பல விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/increase-in-visa-fees-levied-on-expatriates-1714835528

  • கருத்துக்கள உறவுகள்

https://eservices.immigration.gov.lk/emb/eEmbarkation/'#/home-page
 

இலங்கை போக இருப்பவர்கள் மேலே உள்ள சுட்டியை அழுத்தி   Embarkation Card நிரப்பினால்  அங்கே போய் மினக்கெட தேவையில்லை.

ஆனால் போவதற்கு 4-5 நாட்கள் இருக்கும் போதே நிரப்ப அனுமதித்தார்கள்.

இப்போது எப்படியோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:
15 hours ago, விளங்க நினைப்பவன் said:

எடின்பேர்க்கிற்கு மேலே உள்ள இடங்கள் பிடிக்கும்.

உலகில் என் அபிமான நகரம் என்றால் எடின்பரோதான். அதே போல் நீங்கள் சொல்லும் Highlands ரம்மியமான இடம்.

மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மகிழ்ச்சி

நீங்க சொல்வது ஈஸ்கொட்லாண்ட்   தகவல் ஆக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

004-750x375.jpg

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரம் – முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம் !

சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது, இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாகவும், அக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் அறவிடப்பட்டது.

அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு, இவ்வாண்டு ஆரம்பத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து நீக்கி தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அமைச்சரவையின் அனுமதியுடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilanka e-visa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

https://athavannews.com/2024/1381145

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2024 at 20:20, goshan_che said:

இப்போ சற்று முன், பழைய வீசா வழங்கும் IT சிஸ்டத்தை மேற்பார்வை செய்த ஒரு மேலதிகாரியிடம் பேசினேன். 

இது முழுக்க முழுக்க அரச பணத்தை கொள்ளை அடிக்கும் செயல் என்கிறார்.

தாம், இதுவரை எந்த பெரிய பிரச்சனையும் இல்லாமல் 1 டாலருக்கு வழங்கிய, தொடர்ந்தும் வழங்க முன் வந்த சேவையை, புதிய கம்பெனி 18 டாலருக்கு செய்கிறதாம்

2ம் திகதி யாழில் பகிரப்பட்ட தகவல்👆🏼…..

5ம் திகதி இலங்கை சண்டே டைம்சில் செய்தியாக👇

 

 

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!

சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அதிகபட்சமாக 50 டொலர்களை அறவிடுமாறு ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டு நாணயத்தை ஈட்ட வேண்டுமாயின் அவ்வாறான கட்டணங்கள் இருக்க வேண்டும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1381183

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம்!

சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அதிகபட்சமாக 50 டொலர்களை அறவிடுமாறு ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டு நாணயத்தை ஈட்ட வேண்டுமாயின் அவ்வாறான கட்டணங்கள் இருக்க வேண்டும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

https://athavannews.com/2024/1381183

மிக சரியான கணிப்பு. 4 பேர் உள்ள ஒரு குடும்பம் 400 டொலரை வீசாவுக்கு மட்டும் அழ வேணும்.

பேசாமல் தாய்லாந்து போய் விடுவார்கள்.

இந்த விலைக்கும் வீசா எடுத்து போவதெண்டால் அது புலம்பெயர் தமிழராகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

நாட்டுக்கு பயணிகள் வராவிட்டால் பரவாயில்லை கமிசன் ஒழுங்கா வந்தா சரி.

  • கருத்துக்கள உறவுகள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.