Jump to content

5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

15 வருடமாக கோமாளிவேலைதான் செய்கின்றார்கள். இவர்கள் எந்த ஜனநாயக முறைப்படி தங்களை நாடுகடந்த அரசாங்கம் என்றும் சொல்லமுடிகின்றது?

large.IMG_6549.jpeg.6effad9e128c018cf196

  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kavi arunasalam said:

large.IMG_6549.jpeg.6effad9e128c018cf196

ஏன் உயிர் அற்ற. ஓடாத. குதிரையில். ஏறி இருக்கிறார்??  அதுநின்ற இடத்திலேயே நிற்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மற்றவர்களை பார்த்து என்ன புடுங்கினீர்கள் என கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசுபவர்களே! 😎
நீங்கள் விசுவாசிக்கும்,ஆதரிக்கும் தலைவர்கள் இதுவரை என்ன புடுங்கினார்கள் என்பதை பஞ்சபுராணமாக பாடவும்.🤣

Edited by குமாரசாமி
புடுங்கினீர்கள் இணைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களை பார்த்து என்ன புடுங்கினீர்கள் என கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசுபவர்களே! 😎
நீங்கள் விசுவாசிக்கும்,ஆதரிக்கும் தலைவர்கள் இதுவரை என்ன புடுங்கினார்கள் என்பதை பஞ்சபுராணமாக பாடவும்.🤣

இதுக்கு இலகுவான பதில். தலைவருக்குப் பிறகு தமிழரிடம் நேர்மையான தலைவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள். அதை இந்தப் பதினைந்து வருடங்களில் புரியாமல் இருப்பவர்களின் மண்டைகளைக் கழுவி இன்னும் தங்களின் சுயநல வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பதற்கு நிதி சேர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் தாம் ஏமாறவில்லை என்று நம்ப நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

 

 

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

இதுக்கு இலகுவான பதில். தலைவருக்குப் பிறகு தமிழரிடம் நேர்மையான தலைவர்கள் ஒருவரும் இல்லை. எல்லோரும் பிழைப்புவாதிகள். அதை இந்தப் பதினைந்து வருடங்களில் புரியாமல் இருப்பவர்களின் மண்டைகளைக் கழுவி இன்னும் தங்களின் சுயநல வாழ்க்கையில் சுகபோகமாக இருப்பதற்கு நிதி சேர்ப்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் ஏமாறுபவர்கள் தாம் ஏமாறவில்லை என்று நம்ப நாம் சொல்வதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அம்மா மாதிரி பொம்பிளை இருந்தால் தான் கலியாணம் கட்டுவன் எண்டு பிள்ளையார் அடம்பிடிச்சதாக ஒரு சமய கதை இருக்குது.🤪

அது போல தலைவரை மாதிரி ஒரு தலைவன் இனி இந்த யுகத்தில் வரப்போவதில்லை. அப்படி வந்தாலும் மற்றவர்கள் விடப்போவதும் இல்லை.

இருப்பதை வைத்து சுளிவு நெளிவுகளாக வெல்வதே புத்திசாலித்தனம். அவன் காசடிக்கிறான் இவன் காசடிக்கிறான் என்றால் இன்றைய உலகில் எந்த அரசியல்வாதிதான் காசடிக்கவில்லை?

மக்களுக்கு சேவை செய்யவென வரும் ஒவ்வொரு  அரசியல்வாதிகளும் வைத்தியர்களுமே இன்றைய மகா கொள்ளையர்கள்.

எனவே.... 
காசு தரலாம் எனக்காக/எமக்காக இதை செய்  அதை செய் என பேரம் பேசும் அரசியல் ரயில் தான் இன்று உலகம் முழுக்க ஓடுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

காசு தரலாம் எனக்காக/எமக்காக இதை செய்  அதை செய் என பேரம் பேசும் அரசியல் ரயில் தான் இன்று உலகம் முழுக்க ஓடுகின்றது.

இப்படிப் பேரம் பேசித்தான் @விசுகு ஐயா அள்ளி வழங்குகின்றார் போலிருக்கு.. 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இப்படிப் பேரம் பேசித்தான் @விசுகு ஐயா அள்ளி வழங்குகின்றார் போலிருக்கு.. 🙃

நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுகபோக வாழ்கை வாழ்வதற்காக காசு கொள்ளை அடிப்பதற்காக அரசியல்  செய்கின்ற மகா கொள்ளையர்களுக்கு ஒரு போதும் சந்தர்பம் கொடுக்க கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம்.
அந்த  உண்ணாவிரதம் நாடகம்.
அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள்.

கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் எதை சொன்னாலும் இந்தியாவலே. தமிழ்நாட்டாலே   அல்லது இந்தியாவையே தமிழ்நாட்டை யே.  ஆளும் ஆளப்போகும் எந்தவொரு தலைவர்களும் இலங்கை தம்ழருக்கு சுயாட்சி அல்லது தனிநாடு பெற்றுதர முடியாது    தமிழ்நாடு இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது   இது நேரடி அனுபவம் சொந்த அனுபவம்  கண்ணாலே பாரத்தோம்.   தனியாக கருணாநிதியை  தூற்றக்கூடாது   மற்றவர்கள் என்ன செய்தார்கள்  இந்த 15 ஆண்டுகள் செய்தது என்ன??  இந்தியாவுக்குள்.  இருக்கும் தமிழ்நாடு ..   இந்தியாவாக இருக்கும் தமிழ்நாடு   நம்பலாமா ??   கூடாது ஒருபோதும் கூடாது   அங்கே நடக்கும் தேர்தல் திருவிழாவில் யாரும் வெல்லாலம்.  எவரும் தோற்க்கலாம்.  இது தமிழ்நாட்டு மக்களின் தீர்மானங்கள்   அதை மனப்பூர்வமாய்ப் ஏற்ப்போம். இலங்கை தமிழர்கள்  தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

முள்ளிவாய்க்கால் அழிவு. கடைசி யுத்தம்.
அந்த  உண்ணாவிரதம் நாடகம்.
அது வரை ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டு ஒரு சில அரசியல்வாதிகளை தூற்றியதும் இல்லை.திட்டியதும் இல்லை.மாறாக எல்லா அரசியல்வாதிகளையும் கடவுள் போலவே மதித்தார்கள்.

கடற்தளபதி சூசை அவர்களின் கடைசி உரையாடல் எதை சொன்னது? ஏன் அப்படி சொன்னார்? யாராவது பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.

சூசை அவர்கள் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் சொன்னது பொதுவான ஒரு கருத்து என்பது என் அபிப்பிராயம். அதை ஒலிப்பதிவு செய்து வைத்தது சீமானுக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. எனவே "கப்பில் கிடா வெட்டிய கில்லாடியாக" சீமான் வெளிப்படுகிறார். அவர் பின்னால் மண்டை கழுவிய செம்மறி ஆடுகளாக பலர் தொடர்கிறார்கள்!
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்வ சாதாரணமாக  ஒரு தேர்தல் வந்துவிட்டால் யார் ஆட்சி அமைக்கின்றார்கள்/ யார் ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை விட யார்,எந்த கட்சி இந்த தேர்தலில் முன்னேறி இருக்கின்றார்கள் என்பதையே பலர் கவனத்தில் எடுப்பார்கள். அதை வைத்தே சர்வதேச விமர்சனங்களும் இருக்கும்.
ஆனால் இங்கு...????? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கீகாரம். இது தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தன்னைத்தானே ஆழவேண்டும் என்று சீமான் சொன்னது பலருக்கு வேப்பங்காய். 

ஏன்? 

இராச விசுவாசம். 

கட்டப்பா தோற்றார் போங்கள்,..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தமிழன் தன்னைத்தானே ஆழவேண்டும் என்று சீமான் சொன்னது பலருக்கு வேப்பங்காய். 

ஏன்? 

இராச விசுவாசம். 

கட்டப்பா தோற்றார் போங்கள்,..🤣

சீமான் தமிழனா.??  மேலும்  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும்  இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது  மத்திய அரசு  விரும்பினால் மாநில அரசை  கலைக்க முடியும்   இந்தியாவை தமிழன் ஆளா முடியாது   எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்??  தமிழனுக்கு நாடு இருக்கிறதா??  இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்  முதல்வராவது   தமிழன் தன்னை தானே  ஆள்வாது  என்று ஆகி விட முடியாது   மத்தியில் உள்ள வடக்கன். தான்  ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு  கட்டுப்பட்டு .....அடங்கி.  வாழ வேண்டும்   இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல்  மத்திய அரசை விட்டு விலகவில்லை    விலகி என்ன செய்ய முடியும்??  கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நடப்பதற்கு முன்பு தான் சமூகவலைத்களங்களில் காட்டபடுகின்ற சீமான் விம்பத்தை 💪 வைத்து  சீமான் கட்சி தான் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் சீமான் முதல்வர் என்று நம்புகிறார்கள் என்று பார்த்தால் தேர்தல் முடிவு வந்த பின்பும் சீமான் கட்சி தான் வெற்றி வாகை சூடியது என்கின்றார்களே🙄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீங்களும் நானும் மட்டுமே இங்கே கருத்தாடுகின்றோம். விசுகுவின் கருத்தையும் இங்கே திணிப்பது உங்களால் என் கருத்திற்கு பதில் இல்லை என்பதே நிரூபணம்.

அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? 

என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

அங்கத்தவர் பணம் எவ்வளவு? ஏன் அது கொடுக்கப்படுகிறது? 

என்பது கூட தெரியாமல் இருக்கும் எம் இனம்????

 

கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃

👇🏾

https://tgte-us.org/?page_id=480

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

கொடுக்கிறவர் நீங்கள். இதில் சொல்லப்பட்டவைக்கா கொடுக்கின்றீர்கள் அல்லது தெரிந்தவர்கள் என்பதற்கா கொடுக்கின்றீர்கள்?😃

👇🏾

https://tgte-us.org/?page_id=480

இங்கே தமிழ் மக்களின்  உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, விசுகு said:

இங்கே தமிழ் மக்களின்  உரிமைகள் மற்றும் சுய அமைதி வாழ்வியல் சார்ந்து எதையாவது செய்யும் எல்லோரையும் எனக்கு தெரியும். அப்படியானால் அவர்களை எனக்கு தெரிந்ததால் செய்கின்றனரா? அவர்கள் ஏதாவது செய்வதனால் எனக்கு அவர்களை தெரிந்திருக்கிறதா???

@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை.

புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.

பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான்  வந்தவை.

இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன.

ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உங்களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄

Edited by கிருபன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

@விசுகு ஐயா, இப்படியே தொடர்ந்து உரையாடலாம். ஆனால் ஒரு பிரயோசனமும் இல்லை. மாற்றமும் இல்லை.

புலம்பெயர் அமைப்புக்கள், ஏன் தாயக அமைப்புக்களும் கூட, மக்களிடம் நேரடித் தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அவர்கள் இயங்குவதற்குத் தேவையான நிதியை மக்களிடம் இருந்து திரட்டுவதில்லை. அப்படித் திரட்ட வந்தால்தான் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டும். செயற்திட்டங்களை விளக்கவேண்டும். இவையெல்லாம் 2009 க்கு முன்னர் நடந்தவை. கேள்விகளுக்கு பொறுமையாகப் பதில் அளித்தவர்களும் இருக்கின்றார்கள். ஆத்திரம் கொண்டு பொங்கினவர்களும் ஒரு சிலர் இருக்கின்றார்கள்.

பலர் அமைப்புக்களில் இருந்து ஒதுங்கியபின்னரும் 2009க்குப் பின்னர் பல அமைப்புக்கள் புலம்பெயர் நாடுகளில் இப்போதும் இயங்குகின்றார்கள். இந்த அமைப்புக்கள் செயற்படத் தேவையான நிதிபலத்தை அவர்களின் சொந்த முதலீட்டில் உள்ள வியாபாரங்கள் மூலமும், அவர்களுக்கு இணக்கமான வியாபாரிகள் மூலமும் பெற்றுக்கொள்கின்றார்கள். அவர்களின் சொந்த முதலீடுகள் ஒரு காலத்தில் போராட்டத்திற்கு மக்களால் கொடுக்கப்பட்ட நிதிகளில் இருந்துதான்  வந்தவை.

இப்படித் தேவையான நிதிபலம் ஒவ்வோர் அமைப்புக்களுக்கும் இருப்பதால்தான் அவர்களால் தனித்தனியே தொடர்ந்தும் செயற்படமுடிகின்றது. ஒன்றிணையவேண்டிய தேவையும் இல்லை என்பதைத்தான் ஏட்டிக்குப் போட்டியாக வைக்கும் நிகழ்வுகள், சம்மர் விளையாட்டுப் போட்டிகள் உட்பட, காட்டுகின்றன.

ஆக மொத்தத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் என்பது வியாபாரிகளின் கைகளில் சென்றுவிட்டது. சாதாரண மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டது. இதுவும் உன் களுக்கு வக்கிரமாகத் தெரியலாம்😄

ஒவ்வொருவருடைய எழுத்துக்கள் அவர் அவரது செயல்களை,  செயலற்ற தன்மையை காட்டி விடும்.

எனவே உங்களின் இடத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 

ஒரு சின்ன அனுபவ குறிப்புடன் முடிக்கிறேன்.

சாதாரண மக்களை தொடர்ந்து துன்புறுத்த முடியாது கூடாது என்பதற்காகவே நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. +அவை ஆரம்பித்து வைக்கப்பட்டபோது நானும் அங்கே இருந்தேன்.)

இதனை சொல்வதன் ஊடாக அவர்களது இன்றைய போக்கை ஆதரித்து எழுதினேன் என்று அர்த்தம் இல்லை. நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kandiah57 said:

சீமான் தமிழனா.??  மேலும்  இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும்  இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது  மத்திய அரசு  விரும்பினால் மாநில அரசை  கலைக்க முடியும்   இந்தியாவை தமிழன் ஆளா முடியாது   எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்??  தமிழனுக்கு நாடு இருக்கிறதா??  இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில்  முதல்வராவது   தமிழன் தன்னை தானே  ஆள்வாது  என்று ஆகி விட முடியாது   மத்தியில் உள்ள வடக்கன். தான்  ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு  கட்டுப்பட்டு .....அடங்கி.  வாழ வேண்டும்   இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல்  மத்திய அரசை விட்டு விலகவில்லை    விலகி என்ன செய்ய முடியும்??  கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா?? 

தமிழ்நாட்டு அரசிற்கும்,அது சார்ந்த மக்களுக்கும் இருக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருக்கின்றதா?
மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க அவர்களால் முடியும்.
எம்மவர்களால் ......?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டு அரசிற்கும்,அது சார்ந்த மக்களுக்கும் இருக்கும் அதிகாரங்களும் உரிமைகளும் இலங்கை தமிழர் பிரதேசத்தில் இருக்கின்றதா?
மத்திய அரசு செய்யும் நடவடிக்கைகளை எதிர்க்க அவர்களால் முடியும்.
எம்மவர்களால் ......?

இல்லை    நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டவர்கள்   இந்தியாவிலுள்ள. தமிழ்நாட்டு தமிழருக்கு நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டு தமிழர்கள்  தமிழ்நாட்டு தமிழர்கள்  வெளிநாட்டு கொள்கையில் ஒரு துரும்பைக்கூட.  எடுத்து போடமுடியாது ..அந்த உரிமையை இந்தியா சட்டம் இவரகளுக்கு. வழங்கவில்லை   இவரகளின் உரிமை  தமிழ்நாட்டுடன். மட்டுப்படுத்ப்பட்டுள்ளது எங்களை விட. இவர்களுக்கு உரிமை உண்டு தான்  ....என்ன ஒரு மத்திய அரசால் கலைக்ககூடிய.  சட்டமன்றம் வைத்துள்ளார்கள்    

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2024 at 20:21, Justin said:

ஓணாண்டியார், சுகமா? கனகாலம் கண்டு.

 

வணக்கம் ஜஸ்ரின் அண்ணா.. நான் நலம் நீங்கள் நலமா..? இப்ப கொஞ்ச நாளா யாழ் லோடாக நிறைய நேரம் எடுத்திச்சு அப்பிடி லோடாகி உள்ளவந்தாலும் திரியை திறந்தா பாதி திரி வரும் மீதி திரி லோடாகி பிளாங்கா நிக்கும்.. கடுப்பாகும்..எழுதக்கிடைக்கிறதேகொஞ்ச நேரம் இதுல திரிவேற லோட்டாகி சாவடிச்சா எப்பிடி எழுத முடியும்.. அதான் கடுப்பில எழுதுறேல்ல.. பேசாம மூடிட்டு வேற நியூஸ் சைட்ட பாத்திட்டு போயிடுறது.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் ஓப்பின் பண்ணி பாப்பன் போட்டாலும் பாதியிலையே விட்டிட்டு போயிடுவன்.. இப்ப ரெண்டு நாளாதான் பழைய படி பாஸ்ற்ரா திறக்குது அதான் எழுதக்கூடியதா இருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Naam Tamizhar Performance Analysis: டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் இந்த தேர்தலில் சாதித்தது என்ன?

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யுத்தநிறுத்த காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒபரேஷன் கிறீன் அரோ நடவடிக்கை   புரட்டாதி மாதத்தின் நடுப்பகுதியில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி திருகோணமலை மாவட்டத்தில் ஒப்பரேஷன் க்றீன் அரோ (Operation Green Arrow) எனும் பெயரில் வலிந்த தாக்குதல் நடவடிக்கை ஒன்றினை இலங்கை இராணுவம் முன்னெடுத்திருப்பதாகக் கூறினர். போராளிகளை இன்னும் மூன்று மாத காலத்திற்கு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை நீட்டிக்குமாறு வலியுருத்தி வந்த ரோ அதிகாரிகளிடம் பேசிய அவர்கள், உலகையும், இந்தியாவையும் ஏமாற்றவே ஜெயவர்த்தன பேச்சுக்களில் ஈடுபட விரும்புவது போல பாசாங்கு செய்கிறார் என்றும், உண்மையிலேயே யுத்தம் ஒன்றின் மூலமே தமிழர்களின் பிரச்சினையினை அவர் தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவும் கூறினர். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களில் இருந்து அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு வருவதனால் அதனைத் தடுத்து, தமிழ் மக்களைக் காப்பற்ற தாம் நடவடிக்கையில் இறங்கவேண்டியது அவசியம் என்றும் அவர்கள் கூறினர். இராணுவத்தினரின் தாக்குதலை திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து வழிநடத்திய தேசிய பந்தோபஸ்த்து அமைச்சர் லலித் அதுலத் முதலி, பத்திரிக்கையாளரிடம் பேசும்போது, "இப்பகுதியில் தொற்றுநோய்போல பரவியிருக்கும் பயங்கரவாதிகளைத் தேடியழித்து வருகிறோம்" என்றும், "பயங்கரவாதிகளை இங்கிருந்து விரட்டி வருகிறோம்" என்றும் கூறினார். லலித் மேலும் பேசும்போது, திருகோணமலையைச் சுற்றியும், வடமத்திய மாகாணத்தின் வடக்கு எல்லைகளிலும் இராணுவத்தால் நடத்தப்படும் தாக்குதல் தமிழ்ப் பயங்கரவாதிகளின் ஊடுருவலில் இருந்து இப்பகுதிகளை விடுவிக்கவே நடத்தப்படுவதாக அவர் கூறினாலும், இப்பகுதியில் அமைந்திருக்கும் பல தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை அப்புறப்படுத்துவதே இத்தாக்குதலின் உண்மையான நோக்கம் என்பதை அவர் வெளிப்படுத்த மறுத்திருந்தார்.  1940 ஆம் ஆண்டுகளில் இருந்து சிங்கள அரசுகளால் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நன்கு கொள்மையப்படுத்தப்பட்ட, அரச ஆதரவிலான சிங்கள மயமாக்கலுக்கு ஜெயவர்த்தன அரசாங்கத்தின் பங்களிப்பாக தமிழர் தாயகத்தின் வடமாகாண‌ எல்லைகளின் நீளத்திற்கு நன்கு ஆயுதம் தரிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை  அமர்த்துவதென்பது அமைந்தது. சிங்கள இனவாதிகளின் இந்நோக்கம் இன்றுவரை வடக்குக் கிழக்கில் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்பது இங்கு நினைவுகொள்ளத் தக்கது. இதன்மூலம் தமிழ் மக்களை வெகுவாகப் பலவீனப்படுத்தி, ஈற்றில் முற்றான ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவரவே தொடர்ந்துவரும் சிங்கள் ஆட்சியாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.  வவுனியா மாவட்டத்தில் தமிழ்க் கிராமங்களை அகற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா எனும் தனிச்  சிங்களக் கிராமத்தின் சிங்கள ஊர்காவல்ப் படையினர் - 1999 ஆம் ஆண்டு. சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு பக்கபலமாக நிற்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் ‍- சிங்களக் குடியேற்றக் கிராமம் ஒன்றில் அமர்த்தப்பட்டிருக்கும் இராணுவத்தின் கவச வாகனம், 1999 தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கல் 1940 களின் ஆரம்பத்தில் குடியேற்றத் திட்டங்கள் எனும் பெயரில் தெற்கில் கணியற்ற சிங்களவர்களை கிழக்கு மாகாணத்திலும், வட மாகாணத்தில் தென் எல்லைகளிலும் சிறப்பான‌ நீர்வசதியும், செழிப்பான வளமும் கொண்ட நிலங்களில் அரசு குடியேற்றத் தொடங்கியிருந்தது. ஆனால், ஆரம்பக் குடியேற்றங்களின் வெற்றியினால் உற்சாகமடைந்த சிங்கள அரசுகள், பின்னர் வந்த வருடங்களில் இக்குடியேற்றங்களை இப்பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவும், தமிழர்களின் இருப்பைப் பலவீனமாக்குவதற்காகவும் பாவிக்கலாயினர். இவ்வாறான குடியேற்றங்களில் மிகவும் பாரிய முன்னெடுப்புக்களுடன் நடத்தப்பட்ட குடியேற்றங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட கல்லோயாக் குடியேற்றம், திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட அல்லை மற்றும் கந்தளாய் சிங்களக் குடியேற்றங்கள், வவுனியா மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட பதவியா சிங்களக் குடியேற்றம் என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூற முடியும். இக்குடியேற்றங்கள் உருவாக்கப்படுவதே தமிழரின் இருப்பை பலவீனப்படுத்துவது எனும் நோக்கில்த்தான் என்று சிங்கள அரசுகள் திட்டமிட்டு செயற்பட்டு வந்தமையினால் இதுகுறித்த தமிழரின் எதிர்ப்பை தெற்கின் அரசுகள் தொடர்ச்சியாக உதாசீனம் செய்தே வந்திருந்தன. சிங்களக் குடியேற்றம்   கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் உருவாக்கம். கல்லோயா சிங்களக் குடியேற்றத்தின் பிதாமகர்கள் திட்டமிடலின்பொழுது ‍- டி எஸ் சேனநாயக்கவுடன் சிங்கள இனவாத அதிகாரிகள் http://www.sundaytimes.lk/190526/uploads/Untitled-19.jpg வவுனியா மாவட்டத்தில் அமைந்திருக்கும் பதவியா சிங்களக் குடியேற்றத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் புரண‌ கம ‍ சிங்களவர்கள் இப்பகுதியில் புராதன‌ காலத்திலிருந்து வாழ்ந்துவருவதாக வரலாற்றை மாற்றியெழுதும் சிங்களவர்கள்  தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்துவேன் என்று தமிழர்க்கு வாக்குறுதியளித்து அவர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன தனது ஆட்சிக்காலம் நெடுகிலும் செய்தது தமிழர் மீது திட்டமிட்ட இராணுவத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டதுதான். தமிழர் மீதான ஜெயவர்த்தனவின் முதலாவது இனவாதத் தாக்குதல்கள் 1977 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்டன. இத்தாக்குதலின்பொழுது சிங்கள மக்கள் மத்தியில் வாழ்ந்துவந்த பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவழித் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவ்வாறு அடித்துவிரட்டப்பட்ட பல இந்திய வம்சாவழித் தமிழர்களில் ஒருபகுதியினர் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஏற்கனவே பாதுகாப்பாகக் குடியேறி வாழ்ந்துவந்த தமது உறவினர்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டனர். தமிழ் மக்களின் ஒருபகுதியினரான இம்மக்களின் அவலங்களினால் அனுதாபம் கொண்ட பல தமிழ் தொழில் வல்லுனர்கள், சமூக சேவையாளர்கள், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் போன்றோர் இம்மக்களை வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதிகளில் குடியேற்றினர். தமிழர் தாயகத்தின் இதயப்பகுதி நோக்கி முன்னேற எத்தனித்து வந்த சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கும் நோக்கிலேயே மலையகப்பகுதியில் இருந்து அகதிகளாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை இம்மாவட்டங்களில் எல்லைகளில் குடியேற்ற இவர்கள் முடிவெடுத்தனர். இந்த நடவடிக்கைகள் 1982 ஆம் ஆண்டுவரை நடந்து வந்தன. 1982 ஆம் ஆண்டளவில் தமிழ் ஆயுத அமைப்புக்கள் தோற்றம்பெறத் தொடங்கியிருந்தன. இராணுவம் மீதான தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்திருந்தன. தமிழர்களுக்கென்று தனியான சுதந்திர நாடொன்று தேவை என்கிற கோஷம் வலுபெறத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு பொலீஸாரும் இராணுவத்தினரும் வழங்கிய தகவல்களின்படி வவுனியா மாவட்டத்தில் தமிழ்ப் போராளிகளின் செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகக் கூறப்பட்டிருந்தது. தமிழ் சமூக ஆர்வலர்களால் வவுனியா மாவட்டத்தில் மலையகத் தமிழ் மக்களைக் குடியேற்றி உருவாக்கப்பட்ட காந்தியம் பண்ணையில் தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடு அதிகரித்துக் காண‌ப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.  ஆகவே தமிழ் ஆயுத அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு காந்தியம் பண்ணையிலிருந்து மலையகத் தமிழர்கள் முற்றாக விரட்டியடிக்கப்பட்டு, இப்பண்ணைகள் அழிக்கப்படுவதும், இப்பகுதிகளின் தெற்கின் சிங்களவர்களைக் குடியேற்றி வடக்கு நோக்கிய சிங்கள விரிவாக்கம் முடுக்கிவிடப்படுவதும் அவசியம் என்றும் அவர்கள் ஜெயாரிடம் வலியுறுத்தினர்.   இதனையடுத்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சரானா ஜனதிபதி ஜெயார், காணி மற்றும் மகாவலி அமைச்சரான காமிணி திசாநாயக்கா ஆகிய இருவரும் இணைந்து வடக்குக் கிழக்கிலிருந்து மலையகத் தமிழர்களை முற்றாக அப்புறப்படுத்தும் தமது நோக்கத்திற்கான அடித்தளத்தினை இதுதொடர்பான பிரச்சாரங்களை சிங்கள மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டதன் மூலம் உருவாக்கிக்கொண்டனர்.  
    • உலகம் பூராவும் இஸ்லாம் பரவ வேணும் என்ற அவர்களின் இன்னொரு நோக்கமும் அடங்கும்.   இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 
    • பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்கிற எனது விருப்பு (எனக்கு வாக்களிப்பில் பங்கில்லை என்கிற போதும்) அவர்களது நிலைப்பாட்டில் இருந்தே உருவானது. இதுவரையில் தமிழர் சார்பாக இருந்த தமிழ் அரசியல் வாதிகளின் கையாலாகத்தன்மையும், தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான விடுதலையினை முன்னெடுக்காமையும், சிங்கள் ஆட்சியாளர்கள் தொடர்பான அவர்களின் சிநேகமான பார்வையும்தான். அதனாலேயே தமிழரின் அரசியல் அபிலாஷைகளை மீண்டும் பேசுகின்ற, அவலங்களைப் பேசுகின்ற, உரிமைகளை நினைவுபடுத்துகின்ற ஒருவர் வருகின்றபோது அவரை ஆதரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.மேலும் இதுவரை காலமும் சிங்களத் தலைவர் ஒருவருக்கு தமிழர்கள் கொடுத்துவந்த ஆதரவினால் இதுவரையில் நாம் அடைந்தது எதுவும் இல்லையென்பதும் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் சிங்களத் தலைவர்களுக்கு தமிழர்களின் அரசியல் உங்களை அண்டி வாழ்வதல்ல என்பதைக் காட்டுவதற்கும் பொதுவேட்பாளர் தேவை என்று எண்ணினேன். அதனாலேயே பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டின் பின்னால் நின்ற அரசியல்வாதிகள் குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்களின் கடந்தகால அரசியலும், பின்னணியும் எப்படியிருப்பினும் நோக்கம் சரியானதாக எனக்குப் பட்டது. அதனாலேயே அக்கோட்பாட்டை ஆதரித்தேன். இப்போதும் அக்கோட்பாட்டினை ஆதரிக்கிறேன், அதில் எனக்கு எந்த ஐய்யமும் இல்லை. ஆனால் இவ்வுன்னத கோட்பாட்டின் பின்னால் ஒளிந்துநின்று தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்ள முயன்ற அதே அரசியல்வாதிகளின் முகங்களை இப்போது பார்க்கும்போது வருத்தமடைகிறேன். சுரேஷ், விக்கி, சிறீதரன் என்று அதே பழைய முகங்கள். பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு இவர்களின் சுய ரூபங்களைப் புதுப்பிக்கவில்லை, இவர்களை மாற்றவில்லை. பொதுவேட்பாளரின் பின்னால் நின்ற அதே அரசியல்வாதிகளின்  இன்றைய செயற்பாடுகளும், பேரம்பேசல்களும் இவர்களின் இணைப்பினாலேயே பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கருவிற்கான தமிழ் மக்களின் ஆதரவு குறைவடைவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் எண்ணத் தோன்றுகிறது.  இவர்களிடையே உண்மையான இனம் சார்ந்து செயற்பட்டு, பொதுவேட்பாளர் எனும் கோட்பாட்டிற்கு உயிர் கொடுத்த சிவில் சமூக அமைப்புக்கள், நிலாந்தன் ஆகியோரின் முயற்சிகளை நாம் மறக்கவில்லை. அவர்களின் நோக்கம் உண்மையானது, சமூக நலன் சார்ந்தது. அவர்கள் எடுக்கும் தமிழர் நலன்சார்ந்த எந்த முயற்சிக்கும் எப்போதும் எனது ஆதரவு இருக்கும்.   
    • அங்கேயும் சிவப்பு ஆட்சி  எங்கன்ட காலகஸ்டத்திற்😅கு அமெரிக்காரனை தேடி சீனா வந்திட்டால்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.