Jump to content

சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அத்தியட்சகராக இராமநாதன் அர்சுனா நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு சேவைகளை இலகுபடுத்தியும், வசதிகளை ஏற்படுத்தியும் கொடுத்திருந்த நிலையில் பிரதேச மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்த நிலையில் பேராதனை மருத்துவ மனைக்கு தற்காலிக நியமனம் வழங்கப்பட்டமையால் மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

 

ஊழல் செய்த அனைத்து நபர்களும் அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

பதிவிடுவதும், அதற்கு வரும் லைக்குகளும் மனிதர்களை இலகுவாக அடிமையாக்குகின்றன போல. இது ஒரு போதை.

இவர் பேராதனை மருத்துவமனை என்றில்லை, இனி எங்கேயும் ஒரு மருத்துவராக வேலை செய்யும் மனப்பாங்கை இழந்து விட்டார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது. மருத்துவமனை நிர்வாகப் பணி இவருக்கு ஒத்து வரலாம், ஆனால் இலங்கையில் எந்த மருத்துவமனையில் இவரை ஒரு நிர்வாகியாக உள்ளே விடுவார்கள்.............

பேராதனை மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களின் மற்றும் நிர்வாகத்தினரின் பெயர்களையும் விபரங்களையும் அந்த மருத்துவமனையின் இணைய தளத்தில் சென்று பார்த்தேன். பலர் மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். உலகின் பல நாடுகளிற்கு இலகுவாகச் சென்று அங்கேயே வசதியாக வாழக் கூடிய நிலையில் இருப்பவர்கள். ஆனாலும் பேராதனை மருத்துவமனையில் இருக்கின்றனர். ஒருவர் தமிழர், சிலர் இஸ்லாமியர், ஏனையோர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோர் போன்று தெரிகின்றது. அங்கேயும் இவர் குற்றம் தேடி பதிவிடுவதை விடுத்து, மக்களுக்கு சேவை செய்வது தான் இலட்சியம் என்றால், அங்கேயே மருத்துவ சேவையினூடே செய்யலாம்.

  

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நியாயம்

மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்

நியாயம்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன்.  மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை து

Ahasthiyan

25+ வைத்தியர்கள் இருந்தும் முக்கிய மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கபடவில்லை என்றால், நிர்வாகத்தில் குளறுபடிகள் இருக்கின்றது. பணியாளர்களை விட வைத்தியர்கள் தொகை அதிகம் போல் தெரிகிறது.   

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

பொறுமை. முக்கியம்,.   ....... அர்ச்சுனா   சின்ன பையன் இந்த சமூகத்தில் அடிபட்டு  உருண்டு பிரண்டு   காயம்பட்டு அனுபவங்களை பெற்றுக் கொண்டு வரட்டும்   .... ஒரு இருபது ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் விருப்பம் போல் பொது வேட்பாளர். ஆவார் 🙏

அப்ப சுமந்திரன் அரசியலுக்கு வரேக்கை கடல் அளவு அனுபவம்..... :hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

அப்ப சுமந்திரன் அரசியலுக்கு வரேக்கை கடல் அளவு அனுபவம்..... :hurra:

இல்லை தான்   இப்ப படிப்படியாக கிடைக்கிறது     தமிழரசு கட்சியை உடைத்தார்.    நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார்     நீதிமன்றத்திலிருந்து  வெளியில் வந்தார்   

படிப்படியாக வளர்கிறார்     🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இல்லை தான்   இப்ப படிப்படியாக கிடைக்கிறது     தமிழரசு கட்சியை உடைத்தார்.    நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார்     நீதிமன்றத்திலிருந்து  வெளியில் வந்தார்   

படிப்படியாக வளர்கிறார்     🤣

என்னதான் குத்தி முறிஞ்சாலும் நம்ம பெரியவர் சம்பந்தர்ர றெக்கோர்ட்ட உங்க ஒருத்தராலையும் அடிக்கேலாது :gutenmorgen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

படிப்படியாக வளர்கிறார்  

No No No

படிப்படியாக உடைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

No No No

படிப்படியாக உடைக்கிறார்.

நான் சொன்னது அவர் வளர்கிறார்.  என்று   நீங்கள் சொல்வது கட்சியை உடைக்கிறார். என்பது   இதுகுள்.   

No No.  No.  தேவையில்லை 🤣😂😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொக்டர் அர்ச்சுனாவை பொது வேட்பாளரா போட்டால் என்ன என்று யாழ்களத்தில் பேசப்படுகின்றது
அவர் தான் ஒரு நேர்மையான மக்களுடைய உண்மையான அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்துள்ளார்.  தன்னை ஒரு யதார்த்தவாதி என்ற அப்படிபட்டவர்  ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற இவர்களது பகிடி வேலையில்  இறங்க மாட்டார் என்று நம்புகிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன். 

மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை துணிகரமாக செயற்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். 

இங்கே அவர் புகழுக்காகவும், பேஸ்புக் லைக்ஸ் இற்காகவும் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கின்றார் எனும்படியாக பின்னூட்டங்கள் உள்ளன. 

உண்மையில் அவரது நிலையில் நின்று பார்த்தால் தனது இருப்பை தக்க வைக்க சமூக ஊடகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பை பேணவேண்டியது தனிப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் ஒன்றாகவும் காணப்படலாம். அவருக்கு எதிராக எத்தனை எதிரிகள் உள்ளார்களோ தெரியாது.  இந்தவகையில் பார்த்தால் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை அவர் இடுவதும், நேரலைக்கு வருவதும் தவறாக தெரியவில்லை. 

சமூகத்திற்காக குரல் கொடுக்க வந்த ஒருவரை பைத்தியக்காரன், தலை சுகமில்லாதவர், அங்கோடை கேஸ் என சிலர் விளிப்பது, கதை கட்டிவிடுவது எமது சமூகத்தின் தரத்தை காண்பிக்கின்றது.

காலங்காலமாக தாத்தா, பாட்டா, அம்மா, அப்பா என சாகவச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்த சரித்திரம் மாற்றப்பட்டு ஆறு மாதங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரசவங்களே நடந்தன எனும்போது இந்த அசமந்த போக்கை, அக்கறையீனத்தை மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டியது பலருக்கு கெளரவ பிரச்சனையாகிவிட்டது.

தமது கெளரவங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர் அர்ச்சனாவிற்கு தலை சுகம் இல்லை, இவர் புகழிற்கு அடிமையாகிவிட்டார் என பிரச்சாரம் செய்தால் தாம் தப்பிக்கொள்ளலாம் என தவறுகள் செய்தவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ. 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ மாபியாவுக்கு எதிராக போராட்ட நாடகம் அரங்கேற்றிய யாழ் வைத்தியர் அர்ச்சுனா கட்சி ஆரம்பிக்கிறார்!

மக்களிடம் நிதியுதவியும் கோருகின்றார்.   
 

காசு தரட்டாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

மங்குசனி
பொங்குசனி
மரணசனி.

டாக்ரருக்கு இனித்தான் பொங்குசனி.
ஆனபடியால் பயப்படத் தேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

மருத்துவ மாபியாவுக்கு எதிராக போராட்ட நாடகம் அரங்கேற்றிய யாழ் வைத்தியர் அர்ச்சுனா கட்சி ஆரம்பிக்கிறார்!

மக்களிடம் நிதியுதவியும் கோருகின்றார்.   

இவருடைய வழி இதுதான் என்று நான் கணித்திருந்தேன்

large.IMG_6889.jpeg.3bc17c67d39c8e33c91b

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, Kavi arunasalam said:

இவருடைய வழி இதுதான் என்று நான் கணித்திருந்தேன்

large.IMG_6889.jpeg.3bc17c67d39c8e33c91b

 

அவ்வப்போது மருத்துவர் அர்ச்சனா பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். கட்சி தொடங்குவது என அவர் முடிவெடுத்து நிதி ஆதரவு கேட்டால் எனது சிறிய பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். 

சாவகச்சேரி/தென்மாராட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை; மக்கள் மக்களின் தேவைகளுக்கு உழைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளார். 

இவர் போன்று துணிவாக கதைக்கக்கூடிய, வீதியில் இறங்கி போராடக்கூடிய ஒருவர் கட்சி தொடங்கினால் அதற்கு நாம்ஆதரவை வழங்குவது சிறப்பு. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றி இங்கே உண்மையான கரிசனை கொண்ட ஒருவர் உழைக்கின்றேன் என திடசங்கற்பம் செய்யும்போது நாம் அதை நையாண்டி செய்தால் எங்களில் ஏதோ   குறைபாடு உள்ளது என்பது தவிர வேறு ஏதும் இல்லை. 

Edited by நியாயம்
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயம் said:

 

அவ்வப்போது மருத்துவர் அர்ச்சனா பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். கட்சி தொடங்குவது என அவர் முடிவெடுத்து நிதி ஆதரவு கேட்டால் எனது சிறிய பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். 

சாவகச்சேரி/தென்மாராட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை; மக்கள் மக்களின் தேவைகளுக்கு உழைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளார். 

இவர் போன்று துணிவாக கதைக்கக்கூடிய, வீதியில் இறங்கி போராடக்கூடிய ஒருவர் கட்சி தொடங்கினால் அதற்கு நாம்ஆதரவை வழங்குவது சிறப்பு. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றி இங்கே உண்மையான கரிசனை கொண்ட ஒருவர் உழைக்கின்றேன் என திடசங்கற்பம் செய்யும்போது நாம் அதை நையாண்டி செய்தால் எங்களில் ஏதோ   குறைபாடு உள்ளது என்பது தவிர வேறு ஏதும் இல்லை. 

எமது இனத்தின் சாபக்கேடு இது. தாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். ஆனால் ஒருத்தர் செய்ய என்று வந்து விட்டால் படை எடுத்து வருவார்கள் குறை பிடித்து ஓட ஓட விரட்ட. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எமது இனத்தின் சாபக்கேடு இது. தாங்கள் ஒன்றுமே செய்ய மாட்டார்கள். ஆனால் ஒருத்தர் செய்ய என்று வந்து விட்டால் படை எடுத்து வருவார்கள் குறை பிடித்து ஓட ஓட விரட்ட. 

 

படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. 

அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை. 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன்.

இவர் பேராதனை பட்டதாரி.

படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இவர் பேராதனை பட்டதாரி.

படிக்கும் போதே ஒரு விளையாட்டு வீரராக (Basket ball)இருந்திருக்கிறார்.

இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர்.  பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார்.

எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாலி said:

இல்லை இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தான் படித்தவர்.  பேராதனைக்கு பல்மருத்துவத்துக்கு தெரிவாகி பின்னர் யாழ் பல்கலைகழகத்துக்கு மருத்துவம் கற்க மாற்றலாகி வந்தார்.

எங்கண்ட ஜப்னா ஹிண்டு ஓல்ட்போய்!

தகவலுக்கு நன்றி வாலி.

பிழையான தகவலுக்கு வருந்துகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

 

படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. 

அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை. 

ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக உங்கள் கருத்து உள்ளது, இவ்வாறு சிந்திக்கவில்லை, வாழ்க்கை அனுபவம் ஒரு Implicitly learning என்பார்கள், இதனாலேயே எமது கல்விசார் சமூகம்(Explicitly learning environment) மிகவும் தவாறான முடிவுகளை எடுப்பவர்களாக இருக்கிறார்களோ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் வந்தடைந்த மருத்துவர் அர்ச்சுனா!

587794566.JPG

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பேராதனை மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து இன்று சாவகச்சேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்தடைந்துள்ளார்.

இவ்வாறாக மருத்துவமனைக்கு முன் நின்று கொண்டு "மீண்டும் எனது வீட்டுக்கு" என்ற ஒரு செய்தியை தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அத்துடன் இன்று மாலை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கூடைப்பந்து ஆட்டத்தில் ஸ்புட்னிக் அணிக்காக தான் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.  (ப)

https://newuthayan.com/article/மீண்டும்_வந்தடைந்த_மருத்துவர்_அர்ச்சுனா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 24/7/2024 at 13:57, தமிழ் சிறி said:

இவருக்கு... நாக்கிலை, சனி பகவான் உட்கார்ந்து  இருக்கின்றார் போலுள்ளது. 😂

எந்த மக்கள் ஆதரித்தார்களோ அவர்களே வைத்தியரை கலைக்கும் காலம் வரப்போகிறது போலுள்ளது..அவரது தற்போதைய பேச்சுக்கள் நடைமுறைகள் மக்களுக்கு பயனற்றவையாகவே இருக்கிறது..பணம் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கொஞ்சம் யோசித்து செய்யுங்கள்..உங்கள் விருப்பங்களை தடுக்கவில்லை.நல்ல முறையில் செயல்படுத்துவாரா என்பதை தற்போதைய பதிவுகளைப் பார்த்து விட்டு முடிவெடுங்கள்..

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, யாயினி said:

எந்த மக்கள் ஆதரித்தார்களோ அவர்களே வைத்தியரை கலைக்கும் காலம் வரப்போகிறது போலுள்ளது..அவரது தற்போதைய பேச்சுக்கள் நடைமுறைகள் மக்களுக்கு பயனற்றவையாகவே இருக்கிறது..

நண்பர் ஒருவர் இந்தியன் 2 படம் திரையரங்கில் பார்த்தவர் படம் எப்படி என்று கேட்டேன் ஒரு விசர்  படம் என்றார். கதாநாயகன்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடுகின்றாராம் ஆனால் படத்தின் இறுதியில்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடி அவரை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்களாம்.அந்த படத்தில் வருவது போன்றா ஊழல் மோசடிக்கு எதிராக போரடிய டொக்டர் அர்ச்சுனாவை யாழ்பாணத்து மக்கள் கலைக்க போகின்றார்கள். டொக்டர் அர்ச்சுனாவின் பேச்சுக்கள் நடைமுறைகள் பயனற்றவையாக இருந்தால் கலைக்க வேண்டுமா சிறிதரன் விக்னேஸ்வரன் & Co. வின் பேச்சுகள் எந்தவிதமான பயனும் அற்றவையும் தீமையானவையும். இது வரை ஊழல் மோசடிகாரர்களையும்  கள்ள அரசியல்வாதிகளையும்  அவர்கள் கலைக்க இல்லை தானே.

டொக்டர் அர்ச்சுனா போராட்டத்தால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு  நிரந்தர மின் உற்பத்தி யந்திரம் வந்துவிட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

நண்பர் ஒருவர் இந்தியன் 2 படம் திரையரங்கில் பார்த்தவர் படம் எப்படி என்று கேட்டேன் ஒரு விசர்  படம் என்றார். கதாநாயகன்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடுகின்றாராம் ஆனால் படத்தின் இறுதியில்  ஊழல் மோசடிக்கு எதிராக போராடி அவரை மக்கள் துரத்தி துரத்தி அடிக்கிறார்களாம்.அந்த படத்தில் வருவது போன்றா ஊழல் மோசடிக்கு எதிராக போரடிய டொக்டர் அர்ச்சுனாவை யாழ்பாணத்து மக்கள் கலைக்க போகின்றார்கள். டொக்டர் அர்ச்சுனாவின் பேச்சுக்கள் நடைமுறைகள் பயனற்றவையாக இருந்தால் கலைக்க வேண்டுமா சிறிதரன் விக்னேஸ்வரன் & Co. வின் பேச்சுகள் எந்தவிதமான பயனும் அற்றவையும் தீமையானவையும். இது வரை ஊழல் மோசடிகாரர்களையும்  கள்ள அரசியல்வாதிகளையும்  அவர்கள் கலைக்க இல்லை தானே.

டொக்டர் அர்ச்சுனா போராட்டத்தால் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு  நிரந்தர மின் உற்பத்தி யந்திரம் வந்துவிட்டது

சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து  கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி.


அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..?

போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது...

பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில்  தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன்.

இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான்
 யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.?

சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும்.

எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, யாயினி said:

போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?

நான் வீடியோ பார்க்கவில்லை  தெரிந்தவர்கள் சொன்னார்கள் போதை பாவிப்பது தவறு இல்லை என்கின்ற மாதிரி அவர் சொன்னதாக. தவறே தான் 😟

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய ராணுவ ஆக்கிரமிப்பு காலத்தில், ஹர்த்தால் என்று அறிவித்தும் கடையை திறந்தவர்களுக்கு இயக்கத்தால் பச்ச மட்ட அடி விழுந்ததை யாம் கண்ணால் கண்டோம். அநுரவின் வெற்றி என்பது, தற்போது அநுர நினைத்தால் கூட நிறுத்த முடியாது.
    • ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.       
    • ஏறேறு சங்கிலி “என்னவாம்” எண்டு மனிசி கேக்க “இல்லை, மூத்தவளுக்கு நாள் வைச்சிருக்காம் எல்லாரையும் கட்டாயம் வரட்டாம் எண்டு சொல்லக் கந்தன் வந்தவன் , உன்னைக் கேட்டவன் நான் தான் நீ வேலையா இருக்கிறாய் எண்டு சொன்னான்”எண்டு சொல்லி முடிக்க முதல் , “நான் அப்பவும் சொன்னான் எங்கடை மூத்தவனுக்கு கேளுங்கோ எண்டு , நீங்க வாய் பாக்க எவனோ ஒருத்தன் தூக்கீட்டான்” எண்டு என்டை இயலாமையை மனிசி சுட்டிக்காட்ட அதைக்கவனிக்காம சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டன்.  அடுத்த கிழமை மூண்டு நாள் கொண்டாட்டத்தோடு கலியாணம் சிறப்பா நடந்து முடிஞ்சுது. கட்டி முடிச்சு மூண்டு மாசத்தில முழுகாம மகள் இருக்கிறா எண்டு கந்தன் சொல்ல வீட்டில இருந்து கோழிமுட்டை கொண்டேக் குடுக்கப் போனன். போனால் கந்தன்டை மருமோன் “வாங்கோ” எண்டு சொல்லீட்டு விடியவே சீவல் வேலைக்கு வெளிக்கிட்டுப் போனான்.  திருப்பி வீட்டை வந்து மனிசிக்கு விசயம் சொல்ல “உவன் நடுவிலான் படிப்பும் இல்லை சும்மா பந்தடிச்சுக் கொண்டு திரியிறான், அவனுக்கு தொழிலைப் பழக்குங்கோ உங்களுக்கும் அடிக்கடி நாரிப் பிடிப்பு வரூது” எண்டு சொன்னதைக் கேட்டு அவனைக் கூட்டிக் கொண்டு போனன்.  எப்பிடியும் கள்ளமா எங்கயாவது ஏறி இருப்பான் எண்டு தெரிஞ்சாலும் தெரியாதது மாதிரி “ ஏறத் தெரியுமோ “ எண்டு கேக்க, “அப்பப்ப இளநி புடுங்க தென்னை ஏறினான் இதுகும் ஏறுவன்” எண்டான் நடுவிலான். “பனை அப்பிடி இல்லை இது பாத்து ஏறோனும்” எண்டு சொன்னதைக் கேக்காமல் எல்லாம் தெரியும் எண்ட மாதிரி அந்தரப்பட்டவனை சரி ஏறிப்பட்டாத்தான் தெரியும் எண்டு போட்டு ஏறி ஓலையை வெட்டு எண்டு விட்டன். சடசடவெண்டு முதல் பத்தடி ஏறினவன் பிறகு அப்பிடியே இறங்கீட்டான் . இறங்கினவன் தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் கிட்ட வந்தான்.  ஏறிறது எண்டால் சும்மா இல்லை. ஏற முதல் இறுக்கமா கச்சையைக்கட்டி, இருந்தால் shorts ஐப்போட்டிட்டு சாரத்தை மடிச்சுக் கொடுக்குக் கட்டு கட்டோணும். உனக்கெண்டு சாமாங்கள் எல்லாம் வேணும். ஏறு பட்டி பழசு தான் வெட்டாது அதோட அடிக்கால் சிராய்ப்பு வராது, எண்டாலும் இழுத்துப் பாத்திட்டு அளவு சரி எண்டாத்தான் காலில போடோணும். தளைநாரைப் பாத்து அம்மாட்டைக் கேட்டுப் பின்னி எடுத்து வை. தொழில் இல்லாட்டியும் பாளைக் கத்தியை ஒவ்வொருநாளும் தீட்டி வைக்கோணும், தொழிலுக்கு கொண்டு போறதை வேற ஒண்டுக்கும் பாவிக்கப்படாது, பழைய கருங்காலித் தட்டுப்பொல்லு ஒண்டிருக்கு பாளையைத்தட்டக் கட்டாயம் தேவை. சுத்திச் சுத்தி தட்டோணும், அப்ப தான் நுனி நசிஞ்சு நல்லா கள்ளு வடியும் எண்டு முறை ஒவ்வொண்டாச் சொல்லத் தொடங்கினன்.   ஏற முதல் மனசுக்கு அம்மனைக் கும்பிட்டிட்டி ஏறோணும். “ஏறு பட்டி வெட்டுதா எண்டு பாத்து , இடுப்புப்பட்டியை இறுக்கிக் கொண்டு பறீக்க சாமான் எல்லாம் இருக்கா எண்டு பாத்து, ஏறேக்க பறிக்கால கீழ விழாம சரியா வைச்சிட்டுத்தான் ஏறத்தொடங்கோணும். பிரதட்டைக்குக் கால் ரெண்டையும் சேத்துக் கீழ்க்கட்டு கட்டிற மாதிரித் தான் கால்ரெண்டையும் சேத்தபடி தளைநாரைப் போடோணும். கட்டிப்பிடிச்சு ரெண்டடி ஏறீட்டுப் கொடுக்கு மாதிரி ரெண்டு காலாலேம் மரத்தைப் பிடிச்சிட்டுக் கையை உயத்தி மரத்தைச் சுத்திப் பிடிச்சபடி உடம்பை நிமித்தி எழும்ப வேணும். எழும்பீட்டு திருப்பியும் காலால மரத்தை கொடுக்குப்பிடி பிடிச்சபடி கையை இன்னும் மேல எடுத்து பிறகு மரத்தைக் ஒரு கையால கட்டிப் பிடிச்சபடி balance பண்ணிக்கொண்டு மற்றக்கையை மரத்தோட கவிட்டுப்பிடிச்சு கையைக்குத்தி கால் ரெண்டையும் சேத்தபடியே எடுத்து மேல எடுத்து வைக்க வேணும் . அப்பிடிக் காலை உயத்தேக்க உடம்பு மரத்தோட சாயாம சரிவாத்தான் இருக்கோணும் இல்லாட்டி காலை உயத்திறது கஸ்டம் . மரத்தைக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு மரத்தோட சேத்துக் காலை இழுத்தாக் கை கால் நெஞ்செல்லாம் சிராயப்புத் தான் வரும்” எண்டு சொல்லப் பேசாம கேட்டுக் கொண்டு நிண்டான் இந்த முறை சரியாப் பழகோணும் எண்ட விருப்பத்தோட.  முதலில வெறும் ஏத்தம் இறக்கம் தான் பயிற்சி. ஓலை வெட்டி, நொங்கு புடுங்கி , சீவின பாளையில பானை மாத்தி இறக்கப் பழகி கடைசீல தான் சீவத் தொடங்கிறது. பிளேன் ஓடிற மாதிரித்தான் இதுகும் ஏற முதலே check list மாதிரி எல்லாம் இருக்கா எண்டு விபரமாய்ப் பாக்கோணும், ஏறீட்டு முட்டீல ஓட்டை, கத்தி மொட்டை எண்டு சொல்லக்கூடாது. “தொடக்கத்தில ஏறினாப்பிறகு பாளை வெட்டி முட்டி கட்டேக்க இடுப்புக்கயித்தைப் போட்டுக் கொண்டு நிக்கோணும், போகப்போக மட்டைக்குள்ள ஏறி நிண்டு வெட்டிலாம்”, எண்டு திருப்பித்தருப்பிச் சொல்லிக் குடுக்க இதிலேம் இவ்வளவு விசயம் இருக்கிறது அவனுக்கு விளங்கத் தொடங்கினது . “அதோட ஏறேக்க நேராப் பாக்கோணும் இல்லாட்டிப் பக்கத்து மரத்தைப் பாக்கலாம். மேல போகேக்க மேகத்தைப் பாத்தாலோ இல்லாட்டி இறங்கேக்க நிலத்தைப் பாத்தாலா சரி தலைசுத்தத் தொடங்கப் பயம் வந்திடும். ஆனால் கொஞ்ச நாளில பழகினாப் பிறகு ஏறி நிண்டபடி கீழ என்ன நடக்குது எண்டு பாக்க நல்லா இருக்கும் எண்டு சொன்னன். காத்துக்க ஏறி இறங்கேக்க பனைசாயிறதுக்கு எதிர்ப் பக்கமா ஏறு மற்றப்பக்கம் நிண்டா மரம் முறிஞ்சு விழப்போற மாதிரி இருக்கும். ஒரு நாளும் பனை ஆக்கள் ஏறேக்க விழாது. ஆளைத் தாங்கிற சத்தில்லாட்டி பனை சோடைபத்தீடும். முதலில ஓலை விழுந்து, நுனி பட்டு பிறகு தான் அடி பழுதாப் போகும் ஆனபடியா நுனி பழுதாப்போன மரங்களில ஏறிரேல்லை. அதோட ஒருநாளும் விக்கிற சாமானை வாயில வைச்சுப் பாக்காத. மரம் ஒருக்காலும் கலப்படம் செய்யாது. அது தன்டை சாறைத்தான் தாறது. சாறு கெட்டதில்லை, இனிப்பும் புளிப்பும் தண்ணிக்கு, மண்ணுக்கு, மழைக்கு எண்டு மாறும்” எண்டு கள்ளுபதேசம் செய்யக் கேட்டுக் கொண்டிருந்தான்.  ஒலை வெட்டக்கேட்டா கவனம் ஒண்டைவிட்டொரு வருசம் தான் வெட்டிறது, காண்டாவனம் நடக்கேக்க வெட்டிறேல்லை. அப்பிடி ரெண்டு வருசம் வெட்டாத மரம் எண்டால் கவனம் காவோலை வெட்டேக்க குளவி இருக்கும் எண்டு அனுபவத்தை அப்பா சொல்லக் கவனாமாக் கேட்டான் சின்னவன்.  மூண்டு மாசம் அப்பரோட போனவன் , தனக்கெண்டு மூண்டு மரம் தேடிப்பிடிச்சு தனிச்சுத் தொழில் தொடங்கினான்.  காலமைத் தொழிலுக்கு நாலு நாலரைக்குப் போறாக்களும் இருக்கினம். இரவல் காணீல பேசிக் காசு குடுத்து ஏறிப் பாளை வெட்டி நுனி கொத்தி , முட்டி கட்டி இறக்கி , எல்லா மரத்தையும் ஒரு can இல ஊத்திக் முழுசா நிரப்பிக் கொண்டு போக வழி மறிச்சுக் கேட்டவனுக்கும் முட்டீல இருக்கிறதை குடுத்திட்டு மிச்சத்தை தவறணைக்கு கொண்டு போக , அவன் சும்மா விலையைக் குறைக்க “ என்ன நேற்றைக்கு கொஞ்சம் புளிச்சிட்டு” எண்டிற புளிச்சல் கதையையும் கேட்டிட்டு , திருப்பி வந்து மனிசி விடிய கட்டித் தந்ததை விழுங்கீட்டு திருப்பி அடுத்த வளவுக்க ஏறி இறக்க பத்து மணி ஆகீடும். வெய்யில் ஏறக் கள்ளுப் புளிச்சிடும் எண்டதால மத்தியானக் கள்ளை ஆரும் கிட்ட இருக்கிற ஆக்களுக்கு வீடு வளிய போய்க்குடுத்தா கொஞ்சம் கூடக்கூறையத் தாறதோட வெறுந்தேத்தண்ணியும் கிடைக்கும். போய்ச் சாப்பிட்டிட்டுப் படுத்தாஅடுத்த இறக்கம் பின்னேரம் நாலு மணிக்குத்தான்.  “என்ன மாமா வெளீல இருந்து வந்திருக்கிறார் போல, எங்களுக்கு ஏதும் போத்திலைக் கீத்திலைக் கொண்டந்தவரே” எண்டு கேட்ட படி வாறவருக்கு ஓம் ஒரு party ஐப் போடுவம் ஆனால் , “ அவருக்கு நல்ல கூழ்வேணுமாம் அதோடரெண்டு கிடாய்ப் பங்கும் வேணுமாம், பங்கு போட்டிட்டு ரத்தவறை வறுத்து முடிய உடன் கள்ளும் வேணுமாம்” எண்ட சம்பாசணை எல்லா வீட்டையும் கேட்டிருக்கும் .   இக்கரைக்கு அக்கரைப் பச்சையாய் எங்கடை சனத்துக்கு அவை கொண்டாற போத்தில தான் நாட்டம் இருக்கும் , ஆனா அவை குடிச்சா ஒரு பனைக்கள்ளுத் தான் குடிப்பன் எண்டு தேடிக் குடிப்பினம். அவையோட ஊருக்குப் புதுசா வாறதுகள் இறக்கிறவனை ஏறவிட்டு நிமிந்து பாத்துப் வீடியோ எடுத்து ஊரெல்லாம் “எங்கள்” புகழைப் பரப்ப வெளிக்கிடுவினம் . வந்தவை இறக்கினதை குனிஞ்ச படி குடிச்சிட்டு “எண்டாலும் பழைய taste இல்லை” எண்டு ஒரு கதை விட்டு ஆனாலும் அடி மண்டி வரை குடிப்பினம். இறக்கினதை மட்டும் பாக்கிறவைக்கு ஒருநாளும் இறக்கிறவனைத் தெரியாது . நெஞ்சு மடிப்போட சேத்தா 8 packs பனங்கட்டி நிறத் தேகம், பிறப்புக்கு முதலே எழுதப்பட்ட விதியால் பிரியோசனமில்லாமல் போய் ஏறிஏறியே அழிக்கப்பட்ட கைரேகை,  காலமை குளிச்சாப்பிறகு உடம்பைத் துடைச்சிட்டுத் தலையில கட்டின துவாயத்துண்டு, எப்பவுமே மடிச்சுக்கட்டின சாரம், இடுப்பில கட்டின சாரத்தை இறுக்கிக் கொண்டிருந்த இடுப்புப் பட்டியில இயனக்கூடு, சைடில தொங்கிற தளைநார், அதோட சேந்த முட்டி , சாரத்துக்க செருகின பாளைக்கத்தி, tyre less ரியூப் மாதிரி இருக்கிற வழுவழுப்பான tyreஓட முன்னுக்கும் பின்னுக்கும் பழைய can தொங்கவிட்ட கறள் கட்டின சைக்கிளில வாறவனின்டை கள்ளு மட்டும் எங்களுக்கு இனிக்கும், ஆனாலும் இன்னும் இறக்கிறவனை மட்டும் ஏனோ இனிக்கேல்லை இன்றைக்கும்.   Dr. T. கோபிசங்கர் யாழப்பாணம்.
    • ஒரு கையில் வாங்கி, மறுபக்கத்திலுள்ள குப்பைக்கூடையில் போட்டிருப்பார், இதுதானே இருவரும் சேர்ந்து எழுதிய உடன்படிக்கைகளுக்கும் நடந்தது. அதில் என்ன எழுதியிருக்கிறது என்றறிய தெரியாது, அதை தெரிந்து கொள்ள விருப்பமுமில்லை, தெரிந்து என்னதான் செய்யப்போகிறார்கள்? ஏதோ சந்தர்ப்ப சூழ் நிலையால் வந்தவரை இப்படி பிடி என்று கையில கொடுத்தால் என்ன செய்யிறது அவர்? ஒருவேளை முதல் ஓலையை வழங்கி ஆசி பெற்று அடுத்து அவர் கட்சியில் சேரப்போகிறாரோ யாராவா? அதை, அவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கல்லவா தெரியப்படுத்த வேண்டும்? தமிழ் தெரியாத ஒருவருக்கு கொடுப்பதால் ஒரு பிரயோசனமுமில்லை, வெறும் பித்தலாட்டம், எல்லோரையும் ஏமாற்றும் செயல்!  இதுவரை இல்லாத புதுக்கலாச்சாரம், தேர்தல் பிரச்சார மேடையில் கோமாளிக்கூத்து.  உதுதான் முதலும் கடைசியுமான இதழோ தெரியவில்லை? அவ்வளவு கைராசி, முதற் பிரதி குப்பைக்கூடையில். சுமந்திரனை பாத்து பல்லிளிக்கும்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.