Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   26 JUL, 2024 | 11:35 PM

image

கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் சற்று முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார்.

அவரை மீட்ட பொலிசார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/189485

  • கருத்துக்கள உறவுகள்

காதலி இல்லாத ஆட்கள்.... எரிச்சலில் வாள்  வெட்டு நடத்தியுள்ளார்கள் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

காதலி இல்லாத ஆட்கள்.... எரிச்சலில் வாள்  வெட்டு நடத்தியுள்ளார்கள் போலுள்ளது.

அண்ணை இவர் வருகிறார் என தெரியப்படுத்தியவர் யார்?!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஏராளன் said:

அண்ணை இவர் வருகிறார் என தெரியப்படுத்தியவர் யார்?!

நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்  ஏராளன்.

வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல்  விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து  வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்  ஏராளன்.

வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல்  விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து  வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂

இருக்கலாமண்ணை...

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

அண்ணை இவர் வருகிறார் என தெரியப்படுத்தியவர் யார்?!

 

4 minutes ago, ஏராளன் said:

இருக்கலாமண்ணை...

இந்த விசயத்திலை @suvy  பெரிய அனுபவசாலி. கன  காதலை பார்த்தவர். 😂
அவரின் அபிப்பிராயத்தையும் கேளுங்கோ ஏராளன். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

 

இந்த விசயத்திலை @suvy  பெரிய அனுபவசாலி. கன  காதலை பார்த்தவர். 😂
அவரின் அபிப்பிராயத்தையும் கேளுங்கோ ஏராளன். 🤣

அண்ணை கதைகதையா எழுதுவதெல்லாம் அவருடைய காதல் கதைகள் தானோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அண்ணை கதைகதையா எழுதுவதெல்லாம் அவருடைய காதல் கதைகள் தானோ?!

அப்படித்தான் இருக்கும். 😂
இல்லாட்டி... இவ்வளவு யதார்த்தமாக எவரும் காதல் கதைகளை எழுத மாட்டார்கள். 😍 🥰

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா .......இன்றைக்கு அரை படுவதற்கு நானா கிடைத்தேன்.......!

அவருக்கு  முதன்முதல் காதல் போலிருக்கு.......அதுதான் காதலி கூப்பிட்டதும் முன்பின் யோசிக்காமல் வீட்டிக்கு போயிருக்கிறார்...... பார்க்கிற சந்திக்கலாம், பஸ்ராண்டில சந்திக்கலாம் ஆனால் வீட்டில போய் சந்திக்கலாமோ...... அனுபவம்தான் ஆசான்......அத்தான் அடுத்தடுத்து வரும் காதல்களில் விவரமாய் தேறி விடுவார்.......!

நான் ஒரு காதலை சேர்த்து வைக்கப் போய் 3 வருடத்துக்கு மேல் பெண் வீட்டுப்பக்கமே போகவில்லை.....பின் மருதடி விநாயகர் தேரில் அன்றுதான் நண்பனையும் அந்தப்பெண்ணையும் கையில் குழந்தையுடன் சந்தித்தனான்......!  😂

இந்தக்கதையில சில காதல்களும் இருக்கு படித்துப்பார்க்கவும்.......!   

 

  • கருத்துக்கள உறவுகள்

உயிரைக் கொடுத்துக் காதலிக்கிறார்  😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்  ஏராளன்.

வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல்  விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து  வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂

ஏன். ?? இப்படி முடிவுக்கு வந்தீர்கள்???   இது யாழ்ப்பாணம் 

எனவே சாதி  பிரச்சனை இருக்கலாம் 

ஏழையாக இருக்கலாம் 

படிப்பு குறைவாக இருக்கும் 

வேலை வெட்டி இல்லாதவன் ஆகவும் இருக்கும் 

பெண்  அழகுகாகவுமிருக்கும்  

பெண் பெரிய சொத்துக்கள் உடையவள். ஆக இருக்கும் 

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை ஒரே ஒரு காரணம் போதாது 🤣😂😂🙏

2 hours ago, தமிழ் சிறி said:

 

இந்த விசயத்திலை @suvy  பெரிய அனுபவசாலி. கன  காதலை பார்த்தவர். 😂
அவரின் அபிப்பிராயத்தையும் கேளுங்கோ ஏராளன். 🤣

அவரை ஒருவரும். காதலிக்கவில்லை  அவர் தான்   பலரையும் காதலித்தவர். 😂😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை காலை 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.

அட நம்ம ஊர் பஸ்சங்களாக இருக்கே.

ஏன்டா ஊர் மானத்தை வாங்கிறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

அட நம்ம ஊர் பஸ்சங்களாக இருக்கே.

ஏன்டா ஊர் மானத்தை வாங்கிறீங்க.

கிளிநொச்சிக்கு கயிட்ட காலமுங்க...இங்கை வாழ்வெட்டு..பரிசிலை  ...புரோக்கர்மூலம் ...மலையக யுவதியை பேசி..இவரே ஒரு கோடி 40 லட்சம் அவவுக்கு சீதனமும் கொடுத்து..கடைசியில் போன் கதைக்கையில் வந்த பிரச்சினையில் ..கிளிநொச்சித் தம்பி தற்கொலை செய்து விட்டாராம்.... இன  அழிவு 

எப்படிப்போகுது..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

காதலி இல்லாத ஆட்கள்.... எரிச்சலில் வாள்  வெட்டு நடத்தியுள்ளார்கள் போலுள்ளது.

இப்ப‌த்த‌ பெண்க‌ளையும் ந‌ம்ப‌ முடியாது த‌மிழ் சிறி அண்ணா

ஒன்றுக்கு இர‌ண்டு போன் வைச்சு விளையாடும் கூட்ட‌ம் 2009க்கு பிற‌க்கு அதிக‌ம்......................உண்மையான‌ காத‌ல் என்றால் அந்த‌ பெடிய‌னுக்கும் அந்த‌ பெண்ணுக்கும் தான் தெரிந்து இருக்க‌னும்.................அடித‌டி கும்ப‌லுக்கு எப்ப‌டி தெரிய‌ வ‌ந்த‌து.............................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

இப்ப‌த்த‌ பெண்க‌ளையும் ந‌ம்ப‌ முடியாது த‌மிழ் சிறி அண்ணா

ஒன்றுக்கு இர‌ண்டு போன் வைச்சு விளையாடும் கூட்ட‌ம் 2009க்கு பிற‌க்கு அதிக‌ம்......................உண்மையான‌ காத‌ல் என்றால் அந்த‌ பெடிய‌னுக்கும் அந்த‌ பெண்ணுக்கும் தான் தெரிந்து இருக்க‌னும்.................அடித‌டி கும்ப‌லுக்கு எப்ப‌டி தெரிய‌ வ‌ந்த‌து.............................

பையா.... சின்ன விஷயங்களுக்கும் வாழை தூக்கும் இப்போதைய சமுதாயத்தை நினைக்க எரிச்சல் தான் வருகின்றது. சிங்கள, முஸ்லீம்களில் இப்படியான செய்திகளை கேள்விப்படுபடுவது அரிது. தமிழ் மக்களின் சனத்தொகையை குறைக்க  இதற்குப் பின் பொலிஸ்,   இராணுவம் போன்றவை மறைமுக ஊக்கம் கொடுக்கின்றார்கள் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

பையா.... சின்ன விஷயங்களுக்கும் வாழை தூக்கும் இப்போதைய சமுதாயத்தை நினைக்க எரிச்சல் தான் வருகின்றது. சிங்கள, முஸ்லீம்களில் இப்படியான செய்திகளை கேள்விப்படுபடுவது அரிது. தமிழ் மக்களின் சனத்தொகையை குறைக்க  இதற்குப் பின் பொலிஸ்,   இராணுவம் போன்றவை மறைமுக ஊக்கம் கொடுக்கின்றார்கள் போலுள்ளது. 

இருக்க‌லாம் அண்ணா

புல‌ம்பெய‌ர் நாட்டில் இருக்கும் எங்க‌ளுக்கு புரியுது ஊரில் வ‌சிக்கும் ம‌க்க‌ளுக்கு புரிய‌ வில்லை என்ப‌து தான் வேத‌னை.........................இப்ப‌ கோயில் ச‌ண்டை கூட‌ ந‌ட‌க்குது ...................கோயில‌ புதிப்பிச்சு பார்த்தியா எங்க‌ட‌ கோயில் எப்ப‌டி இருக்கு உங்க‌ட‌ கோயில் உப்பிடி  இருக்கு என்று ஒரு ஊர் பெடிய‌ங்களே கோயில் விடைய‌த்தில் போட்டி பொறாமை ப‌டுவ‌து அழ‌க‌ல்ல‌.....................ஒரு ஊரில் முன்றுக்கு மேல் கோயில் இருந்தால்   அல்ல‌து அத‌ற்க்கு மேலையும் இருந்தா பொதுவாய் எல்லா கோயிலையும் ஒரே கோன‌த்தில் பார்க்க‌னும் திருத்த‌ ப‌ணிய‌ அந்த‌ ஊரில் உள்ள‌ எல்லா கோயிலுக்கும் எல்லாரும் ஒற்றுமையா சேர்ந்து செய்ய‌னும்🙏🙏🙏................

 

எங்க‌டைய‌ல‌ எப்ப‌டி திருத்துவ‌து என்று ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது த‌மிழ்சிறி அண்ணா....................

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாட்டைக் கேழுங்க வாள்வெட்டு ஏன் என்று புரியும்.🥴

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

அட நம்ம ஊர் பஸ்சங்களாக இருக்கே.

ஏன்டா ஊர் மானத்தை வாங்கிறீங்க.

நீங்கள் இருபாலை அல்லவா??

3 hours ago, வீரப் பையன்26 said:

இப்ப‌த்த‌ பெண்க‌ளையும் ந‌ம்ப‌ முடியாது த‌மிழ் சிறி அண்ணா

அனுபவம் உண்டா??    அதாவது உங்களை பெண்கள் ஏமாற்றினாரா??? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

நீங்கள் இருபாலை அல்லவா??

இருபாலை கோப்பாயில் ஒரு சிறிய இடம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்  ஏராளன்.

வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல்  விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து  வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂

ம்ம்,  ரொம்பத்தான் அனுபவம் பேசுது! அடி வாங்கினீர்களோ, கொடுத்தீர்களோ? என்றதையும் விலாவாரியா எடுத்து விடுறது...... ரசிப்போமேல்ல.

7 hours ago, வீரப் பையன்26 said:

இப்ப‌த்த‌ பெண்க‌ளையும் ந‌ம்ப‌ முடியாது த‌மிழ் சிறி அண்ணா

ஒன்றுக்கு இர‌ண்டு போன் வைச்சு விளையாடும் கூட்ட‌ம் 2009க்கு பிற‌க்கு அதிக‌ம்......................உண்மையான‌ காத‌ல் என்றால் அந்த‌ பெடிய‌னுக்கும் அந்த‌ பெண்ணுக்கும் தான் தெரிந்து இருக்க‌னும்.................அடித‌டி கும்ப‌லுக்கு எப்ப‌டி தெரிய‌ வ‌ந்த‌து.............................

ஒருவேளை முகநூலில் வந்த காதலாக இருந்தால், அந்தப்பக்கம் பெண்போல யாராவது இந்த தாக்குதலாரி ஒருவன்  ஏமாற்று நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் அல்லது அந்தப்பெண் கதைக்கும்போது உறவினரிடம் மாட்டுப்பட்டோ, தெரிவித்தோ இருக்கலாம் இல்லையெனில் பெண்ணே ஏமாற்றியிருக்கலாம்.  அப்பாவிப்பையன் மாட்டுப்படுள்ளான். விசாரணை நேர்மையாக நடந்தால் விபரம் வெளிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ம்ம்,  ரொம்பத்தான் அனுபவம் பேசுது! அடி வாங்கினீர்களோ, கொடுத்தீர்களோ? என்றதையும் விலாவாரியா எடுத்து விடுறது...... ரசிப்போமேல்ல.

எனக்கும் காதலுக்கும் வெகுதூரம் சாத்தான்.
நண்பர்கள் வட்டத்தில் நிறைய காதல் சமாச்சாரங்கள் இருந்தது.
அதுகளை பார்த்த, அனுபவம்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கும் காதலுக்கும் வெகுதூரம் சாத்தான்.

ம், பெற்றோர் பேச்சுத்தட்டாத பிள்ளையாக்கும். இப்பவும் காதலிக்கலாம், வீட்டுக்காரி சம்மதித்தால்...... ? முறைக்க வேண்டாம், நான் சொல்லுறது  உங்கள் வீட்டுக்காரியையே, அடுத்த வீட்டுக்காரியையல்ல.     

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இருபாலை கோப்பாயில் ஒரு சிறிய இடம்.

ஆமாம்  தெரியும்   எனது சித்தப்பா.  முறையான ஒருவர்   இருபாலையில். திருமணம் செய்தவர்   1975 ஆண்டில் இருக்கலாம் சரியாக தெரியாது    அவர் வேலை அற்றவர்   காப்பீடு நிறுவனத்தின் முகவர்.     அவரின் மனைவி   பதவி உயர்வுகள். பெற்று    கடைசியா கோப்பாய் அரசாங்க அதிபர் ஆக இருந்தவர்   இப்போது இருவரும் உயிருடன் இல்லை    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  தெரியும்   எனது சித்தப்பா.  முறையான ஒருவர்   இருபாலையில். திருமணம் செய்தவர்   1975 ஆண்டில் இருக்கலாம் சரியாக தெரியாது    அவர் வேலை அற்றவர்   காப்பீடு நிறுவனத்தின் முகவர்.     அவரின் மனைவி   பதவி உயர்வுகள். பெற்று    கடைசியா கோப்பாய் அரசாங்க அதிபர் ஆக இருந்தவர்   இப்போது இருவரும் உயிருடன் இல்லை    

ஐயா, பிரதேச செயலர்(AGA) என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக காதலியாக இருக்காது என நினைக்கின்றேன்.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்  ஏராளன்.

வாள்வெட்டுக்காரரில் ஒருவர் இந்தப் பெண்ணுக்கு நூல்  விட்டுப் பார்த்திருப்பார். அப்பெண் இவரின் காதலை நிராகரித்து இருக்கும், அந்த ஆத்திரம்தான்... தனக்கு கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கப் படாது என்று, ஆட்களை சேர்த்து  வாள்வெட்டில் இறங்கி இருப்பார். 😂

எனது காதலி ஸ்ரான்லி கொலேச்சில் படித்தார். நான் ஊரில் இருந்து வந்து சின்னக்கடையில் கடை வைத்திருந்த ஒன்றுவிட்ட அண்ணரின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து கூட்டிக் கொண்டு சுத்தி விட்டு நாவலர் வீதி கச்சேரி நல்லூர் வீதியால் கொண்டு போய் வீட்டில் விட்டு விட்டு போய் விடுவது வழமை. 

ஒருவர் இங்கே மினக்கெடுகிறார். கண்ட இடத்தில் காலை முறிச்சு போட்டு விடுவேன் என்று அவா மேல் கண் வைத்திருந்த ஒரு பொடி சொன்னதாக ஒருநாள் காதலி என்னிடம் சொன்னார். நான் அதை போய் சின்னக்கடை  அண்ணரின் காதில் போட்டேன். அடுத்த நாள் 4 சைக்கிள்களில் 8 பேர் கச்சேரி நல்லூர் வீதி முழுவதும் புகுந்து விளையாடி இருந்தார்கள் யாரடா என் தம்பியின் காலை உடைப்பன் என்று சொன்னவன் என்று. அந்த வீதியில் இருந்த ஒரு கடையை கூட விட்டு வைக்கவில்லை. நாங்க அப்பவே வேற மாதிரி. 

Edited by விசுகு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.