Jump to content

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24-66cd64a68195b.webp

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி 

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு! | Amali Thumali At The Canada Tamil Street Festival

தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

 

 

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள  அதேவேளை  நிகழ்வுக்கு வந்திருந்த சிலர்  அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.   

https://canadamirror.com/article/amali-thumali-at-the-canada-tamil-street-festival-1724736677

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அற

ரசோதரன்

👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள்

ஈழப்பிரியன்

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர் பேரவையால் நடாத்தப் பட்ட தெரு திருவிழா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hq720.jpg?sqp=-oaymwEhCK4FEIIDSFryq4qpAx


 'தமிழர் தெரு விழா' என்றொரு நிகழ்ச்சி 21./22.´ம் திகதி  (சனி, ஞாயிறு) கனடாவிலுள்ள மார்கம் நாரில் இடம்பெற்றுள்ளது.
 
இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களாக கனடியத் தமிழர் பேரவையால் (Canadian Tamil Congress - CTC) நடத்தப்பட்டு வருவது பலருக்கும் தெரிந்த விடயம். ஆனால், இம்முறை நடைபெறும் இந்நிகழ்வானது, கனடாவிலுள்ள தமிழர்களை கொதிநிலைக்கு இட்டுச்சென்று மேற்படி நிகழ்ச்சிக்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க வைத்துள்ளது.
 
இதற்கான காரணங்களை அறிந்துகொள்வதற்கு நாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றினை மேலோட்டமாகப் பார்ப்பது தகுந்தது.
 
2008ஆம் ஆண்டுக் காலப் பகுதிக்கு முன்னராக, கனடாவில் 'உலகத் தமிழர் அமைப்பு' (World Tamil Movement - WTM) செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், கனடாவிலுள்ள ஈழத் தமிழர்களுக்காக, உலகத் தமிழர் அமைப்பினால் தமிழீழ விடுதைப் புலிகளின் ஆலோசனைக்கிணங்க ஈழத் தமிழர்களுக்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் தேவையின்பொருட்டு உருவாக்கப்பட்டதே இந்தக் 'கனடியத் தமிழ்க் காங்கிரஸ்' எனும் கனடித் தமிழர் பேரவையாகும்.
 
வன்னித் தலைமையின் கட்டளைக்கமைய செயற்பட்டுவந்த இவ்வமைப்பானது, 2009 ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர், அதனை அப்போது பொறுப்பேற்று நடத்திவந்த நபர்களின் தன்னதிகார தலைமையின் கீழான நிர்வாகத்தில் இயங்க ஆரம்பித்தது. எனினும், இம்மாறுதலுக்குப் பின்னரான இவ்வமைப்பின் அவ்வப்போதான செயற்பாடுகள், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கும் குறிப்பிட்ட நபர்கள் தன்னதிகார நிர்வாக நிலைமையிலிருந்து, அதனை அவர்களின் தன்னிச்சையான நிர்வாக நிலைக்கு நகர்த்திச் செல்கின்றனரா என்னும் கேள்வியை மக்கள் மத்தியில் தோற்றுவித்திருந்தது; காரணம், ஏனைய உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அல்லது அவர்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படாமல் பல முடிவுகள் அவ்வமைப்பில் தன்னிச்சையாக எடுக்கப்படுட்டமை மற்றும் கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு கேள்வியெழுப்பும் உரிமைகள் முக்கப்பட்டமை போன்றன பொதுமக்களால் மட்டுமன்றி அமைப்பு உறுப்பினர்களாலேயே விமர்சனங்களுக்குள்ளாகியிருந்தன.
 
இதனையும் தாண்டி இவ்வமைப்பின் அண்மைக் கால செயற்பாடுகள் இவ்வமைப்பின் கட்டுப்பாடும் அதன் தலைமைத்துவமும் தமிழர் விரோத இயக்குசக்திகளின் ஆளுமைக்குள் சென்றுவிட்டதா என்னும் வலுவான ஐயப்பாட்டை எழுப்பி நிற்கின்றது. நடைபெற்றுவரும் நிகழ்வுகளும் அதையே நிரூபிக்கின்றன.
 
இங்குதான் இவ்வமைப்பு நடத்தும் நிகழ்வுக்கெதிரான பொதுமக்களின் ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
 
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இயங்கும் ஒருசில அமைப்புகள் சிறிலங்காவின் சிங்கள பெளத்த பிக்குகளின் தலைமையின் கீழ் 'இமயமலைப் பிரகடனம்' என்ற செயற்பாட்டு வரைவில் கைச்சாத்திட்டிருந்தன. இத்திடமானது சிறிலங்கா அரச, மற்றும் இந்திய கொள்கைவகுப்புத் தரப்பினரின் மறைமுக அனுசரணையுடன், புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள ஈழத் தமிழர்களின் கோரிக்கையான சிறிலங்கா அரசை இன அழிப்புக் குற்றங்களுக்காக பொறுப்புக்கூற வைப்பதற்கான நீதி கோரும் செயற்பாடுகளை முடக்குவதற்கும், தமிழீழ விடுதலைக்கான வீரியத்தை நீர்த்துப்போக வைப்பதற்குமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாகவே தமிழர்களால் பார்க்கப்பட்டது. இதில் கனடியத் தமிழர் பேரவை தன்னிச்சையாக எடுத்த அதன் முடிவும், 'இமாலயப் பிரகடனத்தில்' அதன் வகிபாகமும் கனடியத் தமிழர்களால் மட்டுமன்றி உலகெங்குமுள்ள தமிழர்களாலும் பரவலாக கண்டனத்துக்குள்ளாகியிருந்தன. தமிழ் மக்களும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கனடியத் தமிழர் பேரவையை விளக்கம் கோரியிருந்த போதிலும், கனடியத் தமிழர் பேரவையானது தக்க விளக்கமளிக்காது மழுப்பலாக பதில்களையே கூறி வந்ததுடன், தமது அமைப்புக்கும் 'இமாலயப் பிரகடனத்துக்கும்' எவ்வித நேரடியான சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்து வந்தது.
 
இது இப்படியிருக்க, கனடாவிலுள்ள சிறிலங்காவின் தூதர் துஷர றொட்றிக்கோவினால், மே 03, 2024 அன்று தேதியிடப்பட்டு, பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த கடிதமொன்று அண்மையில் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அக்கடிதத்தில், பிரம்டன் நகரமுதல்வர் பற்றிக் பிரவுண் அவர்களால் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் அடிக்கல் நாட்டப்படவிருந்த தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்துக்கான அடிக்கல்நாட்டு விழாவை நிறுத்தும்படியும், இந்நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டால், அது இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுவரும் 'இமாலயப் பிரகடனத்தின்' அடிப்படையிலான இன நல்லிணக்கத்தினைச் சீர்குலைக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அது மட்டுமல்லாது, 'இமாலயப் பிரகடனத்தில்' சிறிலங்காவின் பௌத்த பிக்குகளின் தலைமையில் கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து செயற்பட்டு வருவதால், இன நல்லிணக்க முயற்சிகளுக்கான கனடாத் தமிழர்களின் ஆதரவை இழக்க இது வழிகோலும் எனவும் சிறிலங்காவின் தூதரால் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்காத் தூதரின் இந்த உத்தியோகபூர்வ ஒப்புதல் வாக்குமூலமானது, கனடியத் தமிழர் பேரவையின் போலிமுகத்தையும், அது வெளியே தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறிக்கொண்டு, தொடர்ந்தும் சிறிலங்கா அரசுடன் அது திரைமறைவில் இணைந்து செயற்பட்டு வருவதை வெளிச்சமிட்டுக் காட்டியிருந்தது. அத்துடன், சிறிலங்கா அரசாங்கம் கனடிய உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்வதற்குக் கனடியத் தமிழர் பேரவையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது என்ற உண்மையையும் வெளிக்காட்டியிருந்தது.
மேற்படிக் காரணிகளே கனடியத் தமிழ் மக்கள் கனடியத் தமிழர் பேரவை மீது கொதித்தெழுவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
 
இதைவிட, நேற்றைய தினம் (சனிக்கிழமை) மக்களின் கவனத்தினைத் திசைதிருப்ப கனடியத் தமிழர் பேரவை அதன் மேடை நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தியிருந்த பாடல் நிகழச்சியானது, மக்களைக் கடுங்கோபமுறச் செய்ததுடன், கனடியத் தமிழர் பேரவையை தலைமை தாங்கி நடத்துபவர்கள் தங்களின் அரசியலுக்காக எவ்வித கீழான இழிநிலைக்கும் இறங்கத் தயாராக உள்ளனர் என்பதைக் காட்டியது.
 
அதாவது, வெளியில் மக்கள் நின்று போராட்டம் செய்துகொண்டிருந்த வேளையில், மக்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், கரும்புலி வீரர்கள் தம் இலக்கை நோக்கிச் செல்லும்போது தாயகத்தின் எழிலை வர்ணித்து விடைபெற்றுப் பாடும் வகையில் அமைந்த பாடலான, 'பச்சை வயலே, பனங் கடல் வெளியே...' எனும் கரும்புலிகள் பாடல் உள்ளிட்ட பாடல்களை மேடைப் பாடகர்களைக்கொண்டு மேடையில் பாட வைத்திருந்தனர்.
 
கனடியத் தமிழர் பேரவையால் 'தமிழர் தெரு விழா' ஆரம்பித்த காலந்தொட்டு இற்றை வரைக்கும், அதன் மேடைகளில் தமிழீழத் தேசியப் பாடல்களையும் இணைத்துப் பாடும்படி பலராலும் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் அனைத்துமே அதன் தலைமைகளாலும், விழா அமைப்பாளர்களாலும் புறந்தள்ளப்பட்டு வந்தன.
ஆனால், நேற்றைய நாளில் மக்களை முட்டாள்களாக்க எண்ணி இவர்கள் மக்களின் உணர்வுகளுடன் விளையாடுவதற்கு விலைமதிப்பற்ற விடுதலையின் உச்சங்களைக் கைள எத்தனித்தமையானது ஒன்றை மட்டும் தெளிவுபடுத்துகிறது: இவர்கள் ஆட்டுவிக்கப்படும் வெறும் நிழற் கதாபாத்திரர்களே.
 
எனவே, அறியட்டும் இவர்கள் தாம் நிஜக் கதாநாயகர்களல்ல, வெறும் நாடகர்களே என்பதை மக்கள் அறிவரென்று.
 
https://www.facebook.com/share/p/F6A3VQcZWiQoJzrY/?mibextid=oFDknk

Link to comment
Share on other sites

  • தமிழ் சிறி changed the title to கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

24-66cd64a68195b.webp

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!

கனேடியத் தமிழர் பேரவை வருடந்தோறும் தமிழர் தெருவிழா எனும் நிகழ்வினை நடத்திவருகின்ற நிலையில், இதன் பத்தாவது வருடமாக இந்த மாதம் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் குறித்த விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம்முறை இடம்பெற்ற கனேடிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் விழாவைப் புறக்கணிக்க வேண்டும் என கனடாவில் உள்ள சில தமிழ் அமைப்புகளும் சில செயற்பாட்டாளர்களும் கனடா வாழ் தமிழ் மக்களைக் கோரியிருந்தனர்.

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி 

தமிழர் தெருவிழா 2024 நிகழ்ச்சி வழமை போல அல்லாது இந்த வருடம் முதன்முதலாக மாபெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு! | Amali Thumali At The Canada Tamil Street Festival

தென்னிந்தியாவிலிருந்து பாடகராக இணைந்து கொண்ட பிரபல பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது பாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாளர்கள் முட்டைகளை வீசி எதிர்ப்பை வலுப்படுத்தினர்.

 

 

இதன் காரணமாக நிகழ்வு இடைநிறுத்தம் செய்யப்பட்டதுடன் அங்கிருந்த பொலிஸார் தென்னிந்திய பாடகரை பாதுகாப்பாக அழைத்து செல்லும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள  அதேவேளை  நிகழ்வுக்கு வந்திருந்த சிலர்  அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.   

https://canadamirror.com/article/amali-thumali-at-the-canada-tamil-street-festival-1724736677

அறிவு இல்லாத பைத்தியங்கள்  .....இது தான் ஒற்றுமையா  ?? சிங்களவனுடன்.  அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு  இனி   தமிழன் தமிழனுடன்.   அடிபாடு       இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி.    😀🤣🤣🤣

இதுக்கு யாழ் கள.  உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அறிவு இல்லாத பைத்தியங்கள்  .....இது தான் ஒற்றுமையா  ?? சிங்களவனுடன்.  அடிபட்டு தோல்வியும் கண்டாச்சு  இனி   தமிழன் தமிழனுடன்.   அடிபாடு       இதில் தமிழன் வெற்றி பெறுவது உறு.தி.    😀🤣🤣🤣

இதுக்கு யாழ் கள.  உறுப்பினர் தான் தலைவரே,.......? கனடாவிலுள்ள

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

உண்மை தான்   தமிழர்கள் இரண்டு பகுதியும்  நடந்த விதம் பிழை   எந்தவித பிரயோஜனம் அற்றது    சிங்களவர்கள். திறமைசாலிகள்……………… சும்மா இருந்து அலுவல்கள் பார்க்கிறார்கள்   

தமிழனைக்கொண்டு   தமிழனை அடிக்கிறார்கள்.  நாங்களே’ எங்களை பிரிக்கிறோம்     கவலையளிக்கிறது ஒரு போத்தலை உடைப்போம் 😂

குறிப்பு,......அண்ணை  நீங்களும் ஒன்றை உடையுங்கள்.  😂🙏

  • Like 3
Link to comment
Share on other sites

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அறிவித்து விட்டு, பின் இலங்கை சென்று, யுத்த குற்றங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் புத்த பிக்குகளை மாத்திரம் அல்ல, ரணில் அரசுடன் மட்டுமல்ல,  மகிந்தவுடனும் கைகுலுக்கி U turn அடித்தது.

இப்படி புலம்பெயர் அமைப்புகள் செய்வது ஒன்றும் எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. அப்படி செய்யாமல் விட்டால் தான் ஆச்சரியம்.

இந்த தமிழர் தி(தெ)ருவிழாவை CTC தான் நடாத்துவதால், சில தமிழ் அமைப்புகள் இதனை புறக்கணிக்க சொல்லிக் கேட்டு இருந்தன. முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார் (இவரது கட்சியான கொன்சர்வேட்டி தான் புலிகளை கனடாவில் தடை செய்தது என்பது வேறு விடயம்). 
வழக்கமாக இப்படியான தெருவிழாவுக்கு செல்லும் பல தமிழர்கள் இந்த நிகழ்வை இம்முறை புறக்கணித்தும் இருந்தனர்.

நான் இவ்வாறான கூத்துகளுக்கு செல்வதில்லை என்பதால் இதற்கு இம்முறையும் செல்லும் எண்ணத்தில் இருக்கவில்லை.

நிற்க, 

தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது?

ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)

  • Like 7
  • Thanks 5
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, நிழலி said:

தமிழ் மக்கள் நாகரீகமாக புறக்கணிப்பில் மட்டும் ஈடுபட்டிருப்பின் வரவேற்கத்தக்க விடயமாக இது இருந்திருக்கும். ஆனால், நாம் அப்படி இல்லையே. அரசியல் ரீதியில் எதிர்ப்பதற்கும் அப்பால் சென்று, விழாவுக்கு போனவர்களை துரோகிகள் என்றும், விழாவுக்கு வந்திருந்த தென்னிந்திய கலைஞர்களுக்கு முட்டை வீசியும், செய்தி சேகரிக்க சென்று இருந்த தமிழ் வண் தொலைக்காட்சியினரின் வானுக்கு தீவைத்தும் எம் இரத்தத்தில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனங்களையும் காட்டாமல் விட்டால், இந்த உலகம் எம்மை மதித்துவிடுமல்லவா? அதற்கு எப்படி இடம் கொடுப்பது?

ஆகவே இப்படி வன்முறையிலும் நாம் ஈடுபட்டு, எம் எதிர்ப்பை கண்டிப்பாக தொடர்ந்து காட்டிக் கொண்டே இருப்போம் (ஆனால் இலங்கைக்கு சுற்றுலாவும் செல்வோம்)

🤣.........

சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக பார்த்து மகிழ்ந்த தமிழர்கள் விழாவையும் குழப்பிவிட்டார்கள் .குழப்பவாதிகளில் ஒருவர் சொன்னார் பொலிஸ் எமது பக்கம் மற்றய நாடுகளில் என்றால் இந்த தமிழர்விழாவை குழப்பியடிக்க பொலிஸ் அனுமதித்து இருக்காது என்கிறார்கள் இனி வேறுநாடுகளில் தான் தமிழர்கள் விழாவை பார்க்க வேண்டும்

4 hours ago, ரசோதரன் said:

சர்வதேசத்திற்கு ஒன்றாக, உரக்கச் சொல்லப் போகின்றோம் என்று சொல்லிக் கொண்டே இருக்காமால், உறைக்கத்தக்கதாக காட்டி விட்டோம்...........🫣.


தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் வெற்றிபெற்று ஜனாதிபதியாகி தான்  சர்வதேசத்திற்கு உரக்கச் சொல்ல வேண்டிய தேவை இனி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுதந்திர நாட்டை நிர்வகிக்கும் எந்த தகுதியும் இவர்களுக்கு இல்லை என்பதை  இயற்கை  உணர்த்தியதை புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்கள் மீண்டும் மீண்டும் அதை நிரூபிக்கின்றார்கள்.  இந்த தலைமுறையில் உள்ள இந்த கழிசடைகள் மரித்த பின்னர்,  புதிய தலைமுறை புதிய வார்ப்புகளாக வடிவம் பெறும் போதே தமிழருக்கு ஒரு விடியல் பிறக்கும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எந்த நாட்டிலும் ஏதாவது ஒரு சம்பவத்துக்கு எதிர்ப்புக்காட்ட வன்முறைகளில் இறங்குவது அறவே தவிர்க்கப்படவேண்டும்.

நீங்கள் வீரபோராட்டம் நடத்திவிட்டு வீட்டுக்குபோய் சமைச்சு சாப்பிட்டு அடுத்த வாரமே எல்லாமே மறந்து போவீர்கள், ஆனால் அரசாங்கங்கள் இது சம்பந்தமான அமைப்புக்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் கணனியில் போட்டு வைக்கும் அது உங்கள் சந்ததிகள் மாறியபின்னரும் அரசின் கண்காணிப்பில் இருக்கும். எங்கள் அமைப்புக்களின்  கோரிக்கைகளை பரிசீலிக்க அனுதாபத்துடன் நோக்க பல ஆயிரம் தடவை பல வருடங்கள் மீள மீள சரி பார்க்கும் 

தென்னிந்திய கலைஞர்களுக்கு  முட்டை வீசியது கேவலத்தின் உச்சம்,  நிகழ்வு ஏற்பாடு செய்தது யாரோ, இவர்கள் காசு வாங்கிட்டு பாட வந்தவர்கள் அவர்களுக்கு எங்கள் தகராறு தெரிந்திருக்க நியாயமில்லை. இத்தனைக்கும் இந்தியாவில்  ஸ்ரீனிவாஸ் எந்த நிகழ்விலும் புலம்பெயர் தமிழர்கள் பற்றி உயர்வாகவே பேசுவார். வீட்டுக்கு கூப்பிட்டு அசிங்கபடுத்தி அனுப்புவதுபோல் இருக்கிறது இவர்கள் செயற்பாடு.

சுவிசில் ஏற்கனவே ஒரு புடுங்குபாடு நடந்து முடிய இப்போது கனடாவில்,

இந்த லட்சணத்தில் புலிகளின் தடையை சர்வதேசத்தில் நீக்கவேண்டுமென்று  நம்மவர்கள் கூப்பாடு.

இறுதி நிமிடம்வரை ஒரே தலைவன் கீழ் ஒரே லட்சியத்துக்காக ஒரே மக்களின் விசுவாசமிக்க இயக்கமாக வாழ்ந்து மறைந்த இயக்கம் , தடை மட்டும் எடுக்கப்படும் நிலை வந்தால் பல புலிகள் இயக்கமாக பல தலைவர்களாக பல கொள்கைகளாக பிளவுபட்டு புலிகள் இயக்கத்தின் புனிதத்தையே சாக்கடையாக்கும் நிலமையே நிலையே தோன்றும். 

முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர்  புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது  போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும்.

அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள்.

புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, valavan said:

முடிவில் நாம்தான் உண்மையான புலம்பெயர்  புலி விசுவாசிகள் என்று காண்பிக்க முயல்வோர்கள் ஒருவருக்குள் ஒருவர் தமது மோதி போட்டி குழுவை பழிவாங்க கொழும்பு சென்று எந்த புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சிங்களவன் பயந்து நின்றானோ அவனுடன் கைகோர்த்து தமது  போட்டியாளர்களை பழிவாங்கி தாகம் தீர்த்துக்கொள்ளும்.

அதற்கு கண்முன்னே சாட்சியாக அண்மைய சம்பவங்கள்.

புலிகள் அமைப்பின் தடையை எடுக்க எதிர்ப்பு என்ற தவறான புரிதல் வேண்டாம், புலிகள் அமைப்பின் தடை நீக்கலின் பின்னர் தவறானவர்களின் கைகளிலேயே அதன் தொடர்ச்சி சென்று சேரும் என்பதே கருத்து.

இப்ப விளங்குது தலைவர் ஏன் சிலதை மண்டையில்  போட்டு அடித்து உட்காரவைத்தவர் என்று 
படித்தவனாக இருந்தால் சுமந்திரன் போல இருந்திருப்பான், படிக்காதவனாக இருந்தால் இந்த காவலிகள் போல இருந்திருப்பான் என்பது தலைவருக்கு முன்னமே தெரியும். இதில எத்தினை காவலிகள் யாழ்ப்பாணத்தில் தமனாவை காவாலாக்கிய கூட்டத்திற்கு அறிவுரை சொன்னார்களோ ...?. ஆனால் ஒன்றுமட்டும் தெரியுது இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. அரபிக்குதிரையானாலும் பிறவிக்குணம் போகாது. இந்தக்கூட்டம் சிங்கையில் இருந்திருக்கவேணும், புட்டம் வீங்க செமையா கொடுத்து இலங்கைக்கு திரும்ப அனுப்பியிருப்பினம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தமிழர் தெரு விழாவை  பகிஷ்கரிக்கக் கோரியவர்கள்... 
அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில், தென்னிந்திய  பின்னணி திரை இசை பாடகர் சிறிநிவாஸ் மீது  முட்டை   வீசியிருந்தால்.... மிக வன்மையாக கண்டிக்கப் பட வேண்டும். 

ஆனால்.. மேலே கூட்டத்திற்கு சென்றவர், அந்த நிகழ்வை மேடையின் முன் இருந்து பார்த்தவர்...  கூறும் கூற்றுப் படி எவருமே... முட்டை வீசியதை  காணவில்லை என்றும் அதற்கான சந்தர்ப்பம் இல்லை என்றே கூறுகின்றார். மேலும்  பாதுகாப்பு அதிகாரிகள் பாடகர் சிறிநிவாசை  அழைத்துச் செல்லும் காணொளியில்... அவரின் உடை மீது முட்டை பட்ட அறிகுறியும் இல்லை. அப்படியிருக்க நடக்காத ஒரு  செயலுக்கு.. வன்மம் கக்குவது ஏற்புடையது அல்ல. 

மேடை நிகழ்வை  படம் பிடித்துக் கொண்டு எத்தனையோ "யூ - ரியூப்"காரரும், அங்கு சமூகமளித்திருந்த பலரும்...  கைத்தொலை பேசியுடன் படம் பிடித்துக் கொண்டு இருந்த நிலையில்,  முட்டை  வீச்சு பதியப் படாமல் இருக்கும் போது...  இல்லாத ஒன்றை நாம் ஏன் கற்பனையில் நினைத்து கருத்து எழுத  வேண்டும்.
 
அத்துடன்... புலம் பெயர் தேசத்தில் தமிழர்களிடம்  குழப்பம் ஏற்படுத்த என்றே.. ஸ்ரீலங்கா, இந்திய தூதரகங்கள் தமது புலனாய்வுப் பிரிவை அதிக அளவில் பிரான்ஸ், சுவிஸ், கனடா போன்ற நாடுகளில்  ஊடுருவ விட்டுள்ளார்கள் என்பதை செய்தி ஊடகங்கள் வாயிலாகவும், சில சம்பவங்கள் மூலமும் கண்டு கொண்டோம்.   அதன் தொடார்ச்சியாகவும் இந்த அந்த அசம்பாவிதங்கள்  தோற்றுவிக்கப் பட்டு இருக்கலாம் என்பதும் சாத்தியமே. 

முட்டை  வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும்  போட்டு எழுதவும்.
அப்பதான்... நீங்கள் சொல்வதில்  அர்த்தம் இருக்கும். 

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. 

இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்!

ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. 

இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயம் said:

மக்கள் ஆதரவு உள்ள நிகழ்வை ஒரு பகுதி திட்டமிட்டு குழப்பி உள்ளதாக கருத வேண்டி உள்ளது. தமது புறக்கணிப்பு அறிவுறுத்தல்களை மக்கள் கேட்கவில்லை எனும் கோபத்தில் தமது இயலாமையின் வெளிப்பாடாக கீழ்த்தரமான வேலைகளில் சில பகுதி ஈடுபட்டுள்ளதாக கருத வேண்டி உள்ளது. 

இந்த புறக்கணிப்பின் பின்னால் உள்ள வியாபார போட்டிகள், அரசியல், மற்றும் அமைப்பு ரீதியான போட்டிகளை யார் அறிவார்!

ஒரு பொழுது போக்கு, மனதுக்கு இனிமையை ஏற்படுத்தும் நிகழ்வு ரவுடி கூட்டத்தினால் குழப்பம் செய்யப்பட்டு உள்ளது. 

இனி இந்த ரவுடி கூட்டத்திற்கு வக்காலத்து வாங்க தேசியத்தை முதுகில் சுமந்து கொண்டு திரிபவர்கள் சப்பை கட்டு கட்டுவார்கள். இதுவும் கடந்து போகும். 

கனேடியத் தமிழர்களை இரண்டாகக் கூறுபோட்டாயிற்று. 

மாவீரர் தினத்தையே இரண்டாகக் கூறுபோட்டவர்கள் அல்லவா நாம்? 

☹️

Link to comment
Share on other sites

கனடிய தமிழ் ஊடகவியளாலர் ரமணனின் பேட்டி இது. இந்த சம்பவங்கள் தொடர்பாக மிக தெளிவாக ஆராய்ந்து, பக்கச்சார்பற்று இந்தப் பேட்டி அமைந்துள்ளது.

இது தொடர்பான அக்கறை உள்ளவர்கள், கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு பேட்டி இது.

ஒருவர் மீது ஒருவர் சேறு பூசும், எம் இரத்ததில் ஊறிப் போய்க் கிடக்கும் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் கருத்தாடல்களும், உரையாடல்களும் நிறைந்து இருக்கும் தமிழ் சூழலில் இது போன்ற தெளிவான பேட்டிகளை காண்பது மனசுக்கு ஆறுதல் கொடுக்கின்றது.

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣.

இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். 

  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

முட்டை  வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும்  போட்டு எழுதவும்.
அப்பதான்... நீங்கள் சொல்வதில்  அர்த்தம் இருக்கும். 

இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா  ??   படம் எங்கே  ??   

தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இது ஒரு ஈகோ பிரச்சனை; இப்படி நடக்கும் என்று நாங்களே எதிர்பார்க்கவில்லை; எங்களின் கையை மீறிப் போய்விட்டது....................🫣.

இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். 

முடியாது    ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும்   😂.  மற்றும்  திருமணம் போன்ற விழாக்கள்   எப்படி செய்வது??    இரண்டு பேருடன்.    ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

முடியாது    ஏனென்றால் இலங்கை எதிர்க்கும்,..எனவே தீர்மானம் தோல்வி அடையும்   😂.  மற்றும்  திருமணம் போன்ற விழாக்கள்   எப்படி செய்வது??    இரண்டு பேருடன்.    ஒரு விழா செய்ய முடியுமா?? 😂🤣

🤣..........

நீங்கள் சொல்வது புரிகின்றது........ ஆனால் நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே...... 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரசோதரன் said:

நாங்கள் மூன்று பேர்கள் ஒன்றாய் நின்றாலே, இருவருக்கிடையில் ஈகோ பிரச்சனை வர, அந்தக் கலவரத்தில் மூன்றாதவர் கல்யாண மணவறையைக் கொளுத்திப் போடுவார் போலத் தெரியுதே...... 

மணவறையை  கொளுத்திப் போட்டு நியாயமும் கதைப்பார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடி பிடித்துக்கொண்டு நிற்பவர்கள் தீவிர தமிழ்த் தேசியவாதிகள். 

கொடி பிடிக்காதோர் துரோகிகள். 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆயுதங்கள் 2009 இல் மெளனிக்கப்பட்ட பின் கொடி பிடிப்பவர்களின் இமாலய சாதனை என்ன? கனடா பிரம்டன் நகரில் நினைவு தூபி நிர்மாணிப்பதா?

 

On 27/8/2024 at 21:02, நிழலி said:

முக்கியமாக ஒன்ராரியோ மாகாண சபையிற்கு தெரிவான Vijay Thanigasalam (இவர் ஒன்ராரியோவின் Associate minister of housing ஆகவும் உள்ளார்) இதனை கடுமையாக எதிர்த்து இருந்தார்

 

தனது வெற்றி நிகழ்வில் துரோகிகள் பற்றி அவதானம் தேவை என கூறியதை ஊடகம் வாயிலாக பார்த்தேன். இவரது ரெசுமி எந்த வகை என்பது அப்போதே விளங்கிவிட்டது. 

Edited by நியாயம்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
    • 50 புள்ளி வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தவாறு 100 புள்ளிகள் அதிகரிப்பினை  S&P 500 இல் ஏற்படுத்தியுள்ளது, இந்தவட்டி விகித அதிகரிப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்ட 25 புள்ளி அதிகரிப்பிற்கு பதிலாக 50 புள்ளி அதிகரிப்பு என்பது அமெரிக்க பொருளாதார மந்தநிலையினையினை குறிக்கிறது, அதனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்தவிலை அதிகரிப்பு ஒரு தற்காலிகமானதாக தெரியவில்லை (எனது கருத்து மட்டும்) குறித்த நாளில் ஏற்பட்ட விலை அதிகரிப்பின் விலை தளம்பல் ஏற்படவில்லை, ஆனால் பொதுவாக இவ்வாறன நிகழ்வு வார இறுதி விலை உச்சத்துடன் வார இறுதியினை எட்டும் ஆனால் விலை தற்போது மெதுவாக  இறங்குகிறது இவ்வாறு நிகழ்வது சற்று வித்தியாசமாக உள்ளது, ஆனால் Bullish flag போலொரு சந்தை அமைப்பினை ஒரு மணி நேர வரைபடத்தில் காட்சி அளிக்கிறது இந்த Bullish flag மேல் நோக்கி உடைத்தால் தற்போது உள்ள 5700 இலிருந்து 5800 வரை உயர வாய்ப்புள்ளது. 
    • இன்று இது பலிக்கடா! நாளை இது வளர்த்தகடா! இப்ப அரியத்தை ஆதரிக்கிற வாய்களெல்லாம் வெகு சீக்கிரத்தில் தூற்றுகின்ற காலம் வரும்!  
    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.