Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் இன்று!

September 10, 2024
01-12.jpg

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு இன்று வவுனியாவில் கூடவுள்ளது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், பா.சத்தியலிங்கம் ஆகியோர் கொண்ட குழுவே இன்று கூடுகின்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா பணிமனையிலேயே இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து அறிக்கையிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, இன்று கூடி ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியிலுள்ள குழப்பங்களுக்கு முடிவு காணும் பொருட்டே இன்று கூடும் சிறப்புக் குழு விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும். இந்த பரிந்துரைகளின்படி, எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் கட்சியின் மத்திய குழு இறுதி முடிவை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://eelanadu.lk/இலங்கை-தமிழ்-அரசுக்-கட்ச-2/

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசுக் கட்சியின்  இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை  வேண்டுகின்றேன்.    

  • கருத்துக்கள உறவுகள்

அவையில் அவை இல்லையெனில் அது கட்சிக் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை .........!  😎

நேற்று சுவிஸில் .....இன்று ........!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசுக் கட்சியின்  இன்றைய கூட்டம்... சட்டை கிழியாமல், வேட்டி அவிழாமல், மண்டை உடையாமல்... அமைதியாக நடக்க வேண்டும் என்று ஆண்டவனை  வேண்டுகின்றேன்.    

மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்குமோ?

6 hours ago, suvy said:

அவையில் அவை இல்லையெனில் அது கட்சிக் கூட்டமாக இருக்க வாய்ப்பில்லை .........!  😎

நேற்று சுவிஸில் .....இன்று ........!

அவையடக்கம் என்றால் என்னவென்று தலைவர்களே மறந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ilangai-thamilarasu-katchi-1.jpg?resize=

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம்! 15ஆம் திகதி முக்கிய அறிவிப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் விசேட கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றபோதும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற, உத்தியோகபூர்மான தீர்மானம் எட்டப்படாத நிலையில் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று விதமான நிலைப்பாட்டினை வெளியிட்டுள்ள நிலையில் கட்சியாக ஒருமித்து தீர்மானம் எடுப்பதில் குழப்நிலை காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள சி.சிறிதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு என நேற்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இன்று வவுனியாவில் கட்சியின் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது. கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் வைத்தியர், ப.சத்தியலிங்கத்தின் வவுனியா இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றிருந்தது.

சுமார் மூன்று மணித்தியாலங்கள் இடம்பெற்றிருந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் மற்றும் வடமகாண சபை அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் இன்றைய தினம் கலந்துகொள்ள முடியாமையினால் ஆறு பேர் கொண்ட குழுவில் 5 பேர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1398853

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ilangai-thamilarasu-katchi-1.jpg?resize=

சுமந்திரன் தலைமையிலான அணியினர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளபோதும் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும் 

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நிழலி said:

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

 

இவர்களுடன் பல கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பு என்ற ஒன்றும் உண்டாம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன்.

அப்புக்காத்து சுமந்திரன் என்பவர், முதலில்... சஜித்துக்கு ஆதரவு தெரிவிப்பாராம்.

பிறகு... 10 நாள் கழித்து, சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடி மக்களுக்கு அறிவிப்பாராம்.

மக்களை இவர் முட்டாள் பயலுகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாரா.

நீங்கள், ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் 😂. கட்சி தலைமைக்கு கட்டுப் பட்டு, வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அறிக்கை மரியாதைக்காக விடப்பட்டது என்று காவித் திரிந்தவர்கள் வரிசையில் வரவும் 

மாவைக்கு, வக்காலத்து வாங்கப் போய்.... மூக்கு, உடைபட்டது தான் மிச்சம். 😂

இவர்களுக்கு... மணி கட்டின மாடு சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

ஏனென்றால்... அவர்களின் "டிசைன்" அப்படி🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஒரு கட்சிக்குள்,

சஜித்துக்கு ஆதரவாக ஒரு அணி.

ரணிலுக்கு ஆதரவாக இன்னொரு அணி.

பொது வேட்பாளருக்காக மூன்றாவதாக ஒரு அணி.

சுமந்திரனுக்கு தான் சஜித்தை ஆதரிக்கின்றாரா அல்லது அனுரவை ஆதரிக்கின்றாரா என்பதில் அவருக்கே குழப்பம்.

தமிழ் சனம் ஒட்டுமொத்தமாக இவர்களுக்கு நாமம் போடப் போகினம்.

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடக்கில் வாக்குகளைப் பெறும்.

 

சம்பந்தன் இருந்திருந்தால்... நான்காவது அணியாக, பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து.... இருக்கின்ற குழப்பங்களுக்கு மணி மகுடம் வைத்திருப்பார்.

 

நீங்கள் சொன்ன மாதிரி... விரைவில் வடக்கில் இருந்து தேசியக்ட்சிகள் மூலமாக... சிங்களவனும், முஸ்லீமும் எம்.பி.யாகி வரப் போகும் காலம் வெகு விரைவில் நடக்கும்.

 

பிறகு... இவர்கள் உன்னாலை நான் கேட்டேன், என்னாலை நீ கெட்டாய் என்று, மாறி மாறி... முதுகு சொறிந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இப்ப இவர்களுக்கு, சிங்களவனிடம் இருந்து... பெட்டியும், வரும் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வாங்கும் போட்டியும் தான் நடக்குதே தவிர.. தமிழனின் நலன் சார்ந்து ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன்

10 Sep, 2024 | 05:01 PM
image
 

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கான காலவரையறைகள் தொடர்பில் அவருடன் நான் கலந்துரையாடி விசேட குழுவிற்கு அறிவிப்பேன். எனவே மத்திய செயற்குழு கூட்டமும் இரத்து செய்யப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் விசேட குழு கூட்டம் தொடர்பில் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் இன்றைய கூட்டம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

14 ஆம் திகதி நடைபெற இருந்த மத்திய செயற்குழு கூட்டம் இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 ஏற்கனவே நாங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு என தெரிவித்ததன் அடிப்படையில் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாண சபை விடயம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான விடயம் உட்பட பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை தொடர்பாக சஜித்துடன் பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது என முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் குறித்த கால வரையறைகள் தொடர்பாக சஜித் பிரேமதாசாவுடன் நான் கலந்துரையாடியதன் பின்னர் அதில் எட்டப்பட்ட தீர்மானங்களை இந்த விசேட குழுவிற்கு அறிவிப்பது எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

சஜித்துடன் காலவரையறை தொடர்பில் கலந்துரையாடி அறிவிப்பேன் ; மத்தியசெயற்குழு கூட்டமும் இரத்து என்கிறார் சுமந்திரன் | Virakesari.lk

நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான்   

பொதுசபை 

மத்திய குழு 

தமிழரசு கட்சி 

அனைத்தையும்  ரத்து செய்து விடலாம்     பத்திரிகையாளர் மாநாடும் தேவையில்லை 

ஒரு தலைவனாக இருக்க தகுதி அற்றவர் சுத்த பைத்தியம் 

குரங்கில். இருந்து மனிதன் தோன்றினான். என்பது பிழை  

மனிதனின் இருந்து தான் குரங்கு தோன்றியது என்பது தான் சரியானது 🤣🤪

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Kandiah57 said:

நீங்கள் அனைத்து முடிவுகளையும். எடுப்பது என்றால் கூட்டம் தேவையில்லை தான்   

பொதுசபை 

மத்திய குழு 

தமிழரசு கட்சி 

அனைத்தையும்  ரத்து செய்து விடலாம்  

இல்லை ஏன் என்றால் 👇

 

8 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஏற்கனவே கட்சியின் மத்திய செயற்குழு முடிவெடுத்ததன் காரணமாக மீண்டும் மத்திய செயற்குழுவை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்பதினால் அது இரத்த செய்யப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் பட்சத்தில் பின்னர் கூடலாம். தற்போது அதற்கான தேவை இல்லை என்பதன் அடிப்படையிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது   இன்று கூட்டம் என்று அறிவிக்க முதல்  தெரியும் தானே?? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.