Jump to content

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு, சிலர் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துவிட்டு கட்சியின் கூட்டங்களில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்குழு கூட்டம் 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கட்சியில் நாங்கள் கடந்த காலங்களில் எடுத்த முடிவுகள் குறித்து மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

இவ்வாறு, மக்கள் விரக்தியின் அமுக்கம்தான் தமிழ் பொது வேட்பாளர் என்றவொரு வடிகாலை திறந்து வைத்துள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இவ்வாறு தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவுகளுக்கு எதிராக தமிழரசுக் கட்சி தன்னிச்சயாக முடிவுகளை எடுத்தால் அது தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்களை மட்டும் அல்ல கட்சியிலிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தும் செயற்பாடாகும்.

இவ்வாறு இருக்கையில், வவுனியாவில் கூடிய மத்திய செயற்க்குழு கூட்டத்தில் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah), சிவஞானம் சிறீதரன், சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), மருத்துவர் சத்தியலிங்கம் (Sathyalingam), சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மேயர் என ஆறு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தென்பகுதி வேட்பாளர்களுடைய தேர்தலில் விஞ்ஞாபனங்கள் வெளிவந்ததும் அதில் எந்த கட்சி தமிழர்களுக்காக சிந்திக்கும் நோக்குடன் இருக்கின்றதோ அவர்களுக்கான ஆதரவு தொடர்பில் பரிசீலனை செய்யும் நோக்கில் குறித்த குழு நியமிக்கப்பட்டது.

ஆனால் அவ்வறான சிறப்புக் குழு கூடாமல் எவ்வாறான ஆலோசனைகளும் நடத்தாமல் நான் பிரித்தானியாவிற்கு (United Kingdom) சென்றிருந்த வேலை அவசர அவசரமாக குறித்த கூட்டமானது நடத்தப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

இந்தநிலையில், நினைத்து இருந்தால் 18 ஆம் திகதிக்கு முன்பதாக கூட அனைவரும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்து இருக்கலாம் இருப்பினும் அவசரமாக எடுக்கப்பட்ட குறித்த முடிவினால் கட்சியின் எதிர்காலமானது பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எடுக்கப்பட்ட இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதை நான் தெரிவித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்.

எடுக்கப்பட்ட முடிவு

நான் நடைப்பெற்ற அனைத்து கூட்டங்களிலும் தமிழ் பொது வேட்பாளருக்கு எனது ஆதரவினை தெரிவித்திருந்ததுடன் பிரித்தானியா சென்ற போதும் அதனை எழுத்து மூலமாக அறிவித்திருந்தேன்.

இந்தநிலையில், இது தொடர்பாக நாளை (16) சிறப்புக்குழுவுடன் கலந்துரையாட தயாராகவுள்ளோம்.

தமிழரசுக் கட்சி செய்த மாபெரும் தவறு : சிறீதரன் ஆதங்கம் | Srilanka 2024 President Election Updates

சுமந்திரன் எடுத்த முடிவானது அந்த நேரத்தில் அவரால் எடுக்கப்பட்ட முடிவு, நியமிக்கப்பட்ட விசேட குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே மத்தியகுழுவில் தீர்மானம் எடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு செய்யத்தவறியது கட்சி விட்ட மாபெரும் தவறு. எனவே தமிழ் இனத்திற்காக தமிழ் பொது வேட்ப்பாளருக்கே நான் ஆதரவை வழங்குகின்றேன்.

இந்தநிலையில், தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் பொது வேட்ப்பாளருக்கு ஆதரவளித்து தங்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு அறியத்தர வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

https://ibctamil.com/article/srilanka-2024-president-election-updates-1726405952

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவிலுள்ள அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் தனிப்பட்ட ரீதியில் சிலர் எடுத்த முடிவானது தமிழரசுக் கட்சி விட்ட மாபெரும் தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) குற்றம் சுமத்தியுள்ளார்.

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

அப்பன் குதிருக்குள் இல்லை

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் வருதென்று தெரிந்தும் நாசூக்காக நழுவிவிட்டு இப்போ மூக்கால் அழலாமா?

இவர் நடிகர் சிவாஜியை வென்று விட்டார் இவர் லண்டனுக்கு வரும்போதே ஏதோ நடக்க போகுது என்று சாதாரண யுடுப் அரசியல் ஆய்வாளரே புட்டு புட்டு வைத்து விட்டார் 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலமைக்கேற்ற ஆளுமையோ பக்குவமோ இல்லாதவர். கட்சிக்குள் இருந்து பேச வேண்டிய, போராட வேண்டிய விடயங்களை வெளியே வந்து பேசுகிறார் என்றால் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது. பேசாமல் இவரும் பொதுக்கட்டமைப்போடு சேர்ந்து கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

பேசாமல் இவரும் பொதுக்கட்டமைப்போடு சேர்ந்து கொள்ளலாம்.

பொது வேட்பாளர் மாபெரும் வெற்றியீட்டப் போகிறார் என தெரிந்து அவர்களின் ஆதரவாளராகி விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

அப்ப சுமந்திரன் சாணக்கியன் அங்கயன் டக்ளஸ் சிறியர் எல்லாம் செய்தது சரி எண்டுறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அப்ப சுமந்திரன் சாணக்கியன் அங்கயன் டக்ளஸ் சிறியர் எல்லாம் செய்தது சரி எண்டுறியள்..

சரி  எண்டு யார் சொன்னது.
நீங்கள் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லும் போது, மற்றையவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய தேவை உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

சரி  எண்டு யார் சொன்னது.
நீங்கள் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு சொல்லும் போது, மற்றையவர்களையும் அம்பலப் படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அது சரி..

சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்..

புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்…

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது..

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அது சரி..

சிறியரின் நான் அறிஞ்ச இன்னுமொரு வீரப்பிரதாபம்..

புலோப்பளை, கேரதீவு காற்றாலை மின்சார திட்டத்திற்கு எதிராக ஆள்களை ஆர்ப்பாட்டம் செய்வித்தார்…

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் மற்றைய தமிழ் அரசியல் திருடர்களைவிட பலமடங்கு திறமையானது.. தந்திரமானது..

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில்  தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

ஆனால் ஒண்டல்லே தமிழ்த் தேசியத்தை தன்ட தோள்களில்  தூக்கிச் சுமக்குதல்லே மனிசன்!😂

ஆரு வில்லங்கப்பட்டது இவர்தான் சுமக்கோனும் எண்டு.. ஓராமா இறக்கிவச்சிட்டு கிளம்புறது.. 

ஆனா செய்யமாட்டார்.. பச்சைக்கிளிக்கு புல்லட்டும், தொப்பியும் வாங்கிதரவும் எண்டு தமிழ்தேசியத்தை வாசித்து காட்டியே வாழ்ந்திடும்..

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

பின்பு 8% வாங்கி திட்டம் நிறைவேற விட்டார்…

இப்படி நிறைய டீல்கள் மூலமாக கோடான கோடி உழைத்து விட்டார்... இப்படி சிறிதரனின் டீல் அரசியல் 

ஊரில் சொல்லுவார்கள் நசுக்கிடாக்கள்ளன் எண்டு..

அந்த வார்த்தைக்கு பத்து பொருத்தமும் சரியானவர் சிறியர்..

நானே சாட்சி. 😭

Edited by விசுகு
எழுத்துப்பிழை
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு மூன்று பார் லைசன்ஸ், அதில் ஒன்று வல்வெட்டித்துறையில் உள்ளது. சாணக்கியனுக்கு கல்லடியில் ஒரு பார் லைசன்ஸ் உள்ளது. அங்கஜன், டக்ளஸ் என்று எல்லோருக்கு அண்மையில் பார் லைசன்ஸ் கொடுக்கப் பட்டுள்ளது. 
ஆக இங்கு உத்தமர்கள் என்று எவருமே இல்லை.

இலங்கையில் புதிய BAR license க்கு அனுமதி இல்லை என்று புரிதல்.

NEWS

Court order preventing Excise Dept. from issuing liquor licenses

19a4d957c367c5c8d0b60ad6c6c71e9f?s=96&d=mm&r=g

Published

 6 months ago 

on

 April 2, 2024
Court_1200px_22_10_18-1000x600.jpg

The Supreme Court today (02) has issued an interim injunction preventing the Excise Department from issuing liquor licenses in violation of the provisions of the Excise Act of Sri Lanka.

The court order will be in effect until May 10, 2024.

A three-member bench comprising Justices Yasantha Kodagoda, Janak de Silva and Arjuna Obeysekera delivered the interim injunction after taking into consideration 03 fundamental rights (FR) petitions filed by the Sri Lanka Liquor Licensees’ Association and several other parties.

Appearing on behalf of the petitioners, President’s Counsel Sanjeewa Jayawardena and several other legal counsels told the court that the Excise Department has been issuing liquor licenses in an irregular manner.

As such, the petitioning party requested the judge bench to deliver an injunction preventing the Excise Department from overriding the provisions of the Excise Act and regulations when issuing liquor licenses.

. 😉https://srilankamirror.com/news/court-order-preventing-excise-dept-from-issuing-liquor-licenses/?amp=1

Issuing of fresh liquor licenses challenged before Supreme Court

 
 

 

image_30578d02e1.jpgColombo, May 03 (Daily Mirror) - A Fundamental Rights petition has been filed before the Supreme Court seeking an order restraining authorities including the Excise Department from issuing any new excise licenses to any applicant in violation of the provisions of the Excise Ordinance.

Two members of the Sri Lanka Liquor Licensees Association filed this petition against the Commissioner General of Excise, several other officers of the Excise Department, Secretary to the Ministry of Finance, the Director General of the Department of Fiscal Policy, the Ministry of Finance and several others.

The petitioners, Dhananjaya Gunasekera and Nishantha Lakshman maintained that arbitrary and discriminatory grant of new liquor licenses are solely based on political motivations, political pressure or totally irrelevant factors.
They further stated that multiple liquor licenses have been granted to several private individuals and companies without following any rational, reasonable, objective, fair and transparent mechanisms.

https://www.dailymirror.lk/breaking-news/Issuing-of-fresh-liquor-licenses-challenged-before-Supreme-Court/108-281878

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்ரர் குண்டு வெடிக்கும்போது நாட்டை விட்டு வெளியேறி, தனது கைகள் சுத்தம் என்று  தனது கைகள் சுத்தம் என்று வாதிட்ட மைத்திரி நினைவுக்கு வருகிறது. சுரேஷ் பிரேமச்சந்திரன்  பேச்சாளராக இருந்த போது, ஜெனீவா கூட்டத்தொடருக்கு  போவதாக முடிவெடுத்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு  சுரேஷ் இந்தியாவுக்கு போன தருணத்தில் சம்பந்தரும் சுமந்திரனும் சிங்களத்தோடு கூடிக்குலாவி, சுரேஷ் இந்தியாவில் இருக்கும்போதே தாம் ஜெனீவாவுக்கு போவதில்லை என்று முடிவெடுத்து அறிவித்த வித்தகர்கள். நல்ல வேளை, ஒராள் இப்போது  குறையுது அல்லது அவரும் தன் பங்குக்கு அவிழ்த்து விட்டிருப்பார் புளுகு மூட்டையை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பார் லைசென்ஸ், தரணி சுப்பர் மார்க்கெற், கிளிநொச்சி உட்பட நாட்டின் பலபாகங்களில் சொத்து பத்து என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கு டப்பு குடுக்குமளவுக்கு வளர்ந்து விருட்சமாகி நிக்கிற மனுசனுக்கு இந்த நடிப்பெல்லாம் யுயுப்பி..

அதுக்காக சுமா செய்வதை நியாயப்படுத்துகின்றீர்களா 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் வன்னியன். சார்.   கல்லு. முள்ளு. புல்லு   இல்லாத ஐந்து ஆறு  நல்ல நிலம் பார்த்து   பருவத்தில் உழுது     விதைகளை போட்டு  தண்ணீர் ஊற்றி  முளைத்துவிட்டனவா என்று   பார்க்க ஆறு மாதங்கள் வேண்டாமா????? 🙏🙏😂 அண்ணை இதென்ன ஒட்டமாற்றிக். ..  சுயமாக இயங்கும் கத்தரிக்கோலாக இருக்கிறது   பாவிக்கிரவருக்கு அதாவது உபயோகிப்பாளருக்கு   வெட்டிப் போடும்   வேறு கத்தரிக்கோல் இல்லையா?? 🙏
    • ஆலோசனைகளுக்கு. நன்றி    எல்லாமே தெரிந்த விடயங்கள் தான்   ஏதாவது புதிதாக சொல்லுங்கள்     அதிபர்  புட்டினின்.  ஆலோசனைகள் தான் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙏🤣.  அது சரி கத்தரிக்கோலை   எடுத்துக் கொண்டு போய்   கொஞ்சம் தூரத்தில் நின்று கொடுங்கள்     கவனம்   பிறகு  இருப்பதும் இல்லாமல் போய்விடும்   
    • நவீன கவிதை / "விடுதலையின் வித்து"     "சரியான நேரத்தில், சரியான மண்ணில் சரியான விதை போட்டால், உரம் இட்டால் கிருமி நாசினி தெளித்தால், மரம் வளரும் பூ பூத்து பயன் தரும்! ஆனால் வித்து மண்ணோடு மண்ணாக போய்விடும்!!"     "நாம் வாழ்ந்தோம் இருந்தோம் என்று இல்லாமல், எங்கு வாழ்கிறோம், எப்படி இருந்தோம், எப்படி வாழ்கிறோம் சற்று சிந்தி உன் வரலாறு புரியும் உன் பெருமை தெரியும் உன் இன்றைய வாழ்க்கைக்கான விடுதலையின் வித்து அறிவாய்!"     "உலகத்தை தூக்கத்திலிருந்து ஒரு வித்து கிழித்தெறிந்தது அனைத்து உண்மை இதயங்களிலும் இரத்தம் சிந்தியது ஒருமுறை போராடி தெருவுக்கு கொண்டு சென்றான் விதையை விதைத்தான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் இவன் தான் மாண்டு தன் இனத்துக்கு மனிதனுக்கு தினை கொடுத்தான்! விடுதலையின் வித்தாக வீழ்ந்த இவன்!"     "ஒருமுறை நீங்கள் கொடுக்க வேண்டிய அனைத்தையும் கொடுத்தீர்கள், பெருமையுடன் அனைத்தையும் கொடுத்தீர்கள் அது தேர்தல் காலம்! ஒருமுறை எடுக்கக்கூடிய அனைத்தையும் நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள் அது அரசு அமைத்த காலம்!! அச்சமும் வெறுப்பும் எங்கும் கூத்தாடுகிறது! விதை விதைக்க விடுதலையின் வித்தாக இனி யார் வருவார்?"     "நாம் வாழ்ந்தோம் விதை விதைத்தோம் அது கனவாகி விட்டது நாங்கள் முடிக்கவில்லை என்பதை நீங்கள் காண்பீர்கள் இன்னும் சிலர் எரிகின்றனர் இன்னும் சில இதயங்களில் இரத்தம் வழிகிறது!!"     "நான் இந்த பூமிக்கு ஏக்கத்துடன் வந்தேன் ஏன் எதுக்கு, என்ன தேவை என்று தெரியாது? என்னைத் தாண்டிய ஒரு இணைப்புக்காக பசியோடு வருகிறேன் ஆன்மீக அம்சங்களுக்காக திறமையான வாழ்க்கை முறைக்காக விடுதலை உணவுகளுக்காக துக்கத்திலும் குற்ற உணர்ச்சியிலும் உள்ள ஒரு நாட்டுக்கு வருகிறேன் இழந்ததும் திருடப்பட்டதும் மறுக்கப்பட்டதும் அனைத்திற்கும் விதையாக விடுதலையின் வித்து ஆக வருகிறேன்!"     "சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு விதையாக சுரண்டி வாழ்க்கை வாழ்பவருக்கு அம்பாக உடைந்த இணைப்புகளுக்கு பூணாக உங்கள் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிகிறது உங்கள் வேதனையும் உங்கள் கண்ணீரும் என்னை மண்ணுக்கு இழுக்கிறது விடுதலையின் வித்தாக!!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]          
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.