-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
சனத்தொகை கூடிய கொழும்பு, களுத்துறை , கம்பஹா மாவட்டங்களில் தெளிவான வெற்றியாளர் இல்லை! அநுரவின் வாக்கு சதவீதம் மெதுவான இறங்குமுகத்திலும், சஜித்தின் வாக்கு சதவீதம் மெதுவான ஏறுமுகத்திலும் உள்ளன. எனினும் சஜித் 40% ஐ தாண்டுவது கடினம். Polling Division - Dehiwala BackColombo District ANURA KUMARA DISSANAYAKE NPP 19,338 Votes 41.73% SAJITH PREMADASA SJB 12,505 Votes 26.98% RANIL WICKREMESINGHE IND16 11,565 Votes 24.96% NAMAL RAJAPAKSA SLPP 1,163 Votes 2.51% DILITH JAYAWEERA SLCP 753 Votes 1.62% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 375 Votes 0.81% Polling Division - Kalkudah BackBatticaloa District SAJITH PREMADASA SJB 45,325 Votes 49.03% RANIL WICKREMESINGHE IND16 24,782 Votes 26.81% ARIYANETHIRAN PAKKIYASELVAM IND9 10,890 Votes 11.78% ANURA KUMARA DISSANAYAKE NPP 7,504 Votes 8.12% K.K. PIYADASA IND4 983 Votes 1.06%
-
By ஏராளன் · பதியப்பட்டது
ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ரீதியாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பாரிய வித்தியாசத்தில் அநுரகுமார திசாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். இந்திலையில் அடுத்த ஜனாதிபதியாக தமது கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் இந்நிலையில் திட்டமிட்ட வகையில் அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, செயற்குழு உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இதனை தெரிவித்துள்ளார். வேட்பாளர்கள் தோல்வி காலிமுகத்திடலிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாணம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் தமது தோல்வியை ஏற்றுக்கொள்வதாக தேர்தலில் போட்டியில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, சஜித் பிரேமதாஸவும் தோல்வி அடைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/president-election-2024-anura-won-the-race-1726975591#google_vignette -
மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதி வாக்கு முடிவுகள் Published By: DIGITAL DESK 3 22 SEP, 2024 | 11:16 AM மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 64,068 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கின்றார். சுயேட்சையாக போட்டியிட்ட ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 41,538 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசநாயக்க 24,168 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் பாக்கியசெல்வம் 12,758 வாக்குகளை பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/194448
-
கண்டிப்பாக இல்லை. மஹிந்த குடும்பம் விசாரணைகளை எதிர்கொள்ளும், தமிழருக்கு கொடுமை செய்ததற்காகவல்ல, பதுக்கிய சொத்துக்களை பறிப்பதற்காக. போர்க்குற்றம் தொடர்பாக உள்ளூர் கண்துடைப்பு விசாரணை செய்து, நடந்தது என்னவென்று காட்ட முயற்சிப்பார். அவர் ஏற்கெனவே கூறி விட்டார், அதாவது போரில் என்ன நடந்தது என அறியவே தமிழர் விரும்புகின்றனர், யாரையும் தண்டிக்க அவர்கள் விரும்பவில்லை, அது எனது வேலையுமில்லை, அதை நீதிமன்றம் கையாளும் என்று உறுதிபட கூறிவிட்டார். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்கிற நிலையில் தமிழர் இப்போ. இந்தியா மூக்கை நுழையா விட்டால் சரி.
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts