Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது.

  1. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠
  2. ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
  3. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
  4. குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.  
  5. ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது.
  6. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள்.
  7. எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
  8. எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
  9.  ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
  10. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும்.

https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220

ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?!
பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஏராளன் said:

கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

 

தமிழரசுக்கட்சி வாய்ப்பு கொடுக்க வேண்டும் என ஐ பி சி கருதும்பரிந்துரை செய்யும் வேட்பாளர்கள் யார்?

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஏராளன் said:


பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது........... 🤣.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக் கட்சியில் யார்யார் கேட்க வேண்டும் என்று சீட்டுக் கொடுக்கும் நிலையில் சுமந்திரன் இருக்கும்போது

சுமந்திரனுக்கே சீட்டுக் கொடுக்க வேண்டாமென்கிறார்களே?

இது திருப்பதிக்கே லட்டுக் கொடுக்கிற மாதிரி இருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

இதை எழுதியவர் லங்காசிறி அரசியல் சாணக்கியர் தமிழரசு (இவர் நிலாந்தன் மாஸ்டர் இளவல்). இவரது எழுத்து நடையை வைத்தே சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இதை எழுதியவர் லங்காசிறி அரசியல் சாணக்கியர் தமிழரசு (இவர் நிலாந்தன் மாஸ்டர் இளவல்). இவரது எழுத்து நடையை வைத்தே சொல்லலாம்.

இவர் சுமந்திரன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட நபர்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

இவர் சுமந்திரன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு அதிகம் பாதிக்கப்பட்ட நபர்!

சண் மாஸ்டர் என்று ஒருவர் ஆதன் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்திருந்தார். உரைநடை முதல் அனைத்தும் நிலாந்தன் மாஸ்ரர்ர போலவே இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது.

  1. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற இன்றைய காலகட்டத்தில், தமிழ் தரப்பு பலமான பிரதிநிதித்துவத்தை அந்த நாடாளுமன்றத்தில் பெறுவது என்பது தமிழ் மக்களின் இருப்புக்கு பெரிதும் இன்றியமையாத ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ⁠
  2. ⁠ஊழலற்ற, மாற்றத்திற்கான ஒரு அலை இலங்கை முழுவதும் படுவேகமாக வீச ஆரம்பித்துள்ள இன்றைய நிலையில், தமிழரசுக் கட்சியும்- ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற நபர்களை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்தல் களத்தில் குதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.
  3. ⁠தமிழ் மக்களின் அபிலாசைகளையும், நிலைப்பாடுகளையும் பிரதிபலிக்காத வரலாற்றைக்கொண்ட முன்நாள் பிரதிநிதிகளை இம்முறை நிச்சயமாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் விரும்புகின்றார்கள்.
  4. குறிப்பாக சுமந்திரன் போன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் கட்சியையும், தமிழ் மக்களையும் மையப்படுத்திச் செய்த பல காரியங்கள் தமிழ் மக்களின் அரசியல் நீரோட்டத்தில் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவருவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றார்கள்.  
  5. ⁠தமிழ் மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தி வருவது, தமிழ் மக்களின் போராட்டங்களின் நியாயப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டிய இடங்களில் தமிழ் மக்களை குற்றவாளிகளாக உலகிற்குக் காண்பிப்பது, தென்னிலங்கை மற்றும் சில தூதராலயங்களின் ‘தரகராக’ செயற்படுகின்ற நடவடிக்கைகள்..- இப்படி அவர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்ற பல காரியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த கண்டனத்துக்குள்ளாகி வருகின்றது.
  6. அதேபோன்று, ‘பார் லைசன்ஸ்’ உட்பட பல்வேறு தனிப்பட்ட சலுகைகளுக்காக யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்துவருகின்றார்கள்.
  7. எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா மீதும் மிகுந்த வெறுப்போடு தமிழ் மக்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
  8. எனவே மக்களின் வெறுப்புக்குள்ளாகியிருக்கின்ற இதுபோன்ற தலைவர்களை தமிழரசுக் கட்சி இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மக்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.
  9.  ⁠ஊழல்பேர்வழிகளையும், தரகர்களையும், உளறுவாயர்களையும் விட்டுவிட்டு, கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள இளைஞர்களுக்கு தமிழரசுக்கட்சி இம்முறை வாய்ப்பளித்து களமிறக்கவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
  10. அப்படியல்லாமல் புதிய மொந்தையில் பழைய கள்ளையே ஊற்றுவோம் என்று வளமை போலவே அடம்பிடித்தால், தமிழரசுக் கட்சி பாதகமான ஒரு மக்கள் ஆணையை களத்தில் சந்திக்கவேண்டி ஏற்படும்.

https://ibctamil.com/article/peoples-opean-letter-to-itak-1727382220

ஐபிசி தமிழ் தானே எழுதி வெளியிடுகிறதோ?!
பகிரங்க மடல் எழுதினவர்கள் யார் என குறிப்பிடப்படாததால் இங்கே இணைத்துள்ளேன்.

யார் எழுதினாலும் ...இந்த முறை. மாவையும். சுமத்திரனும். போட்டி இடக்கூடாது   என்பது சரி தான்    👍

இவர்கள் வேறு தொழிலை தேடி செய்யட்டும். 

உழைப்பதற்கு பாராளுமன்றம் போக வேண்டிய அவசியமில்லை 🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

எந்தவிதக் கொள்கையோ, தர்மமோ இல்லாமல் மூன்று வெவ்வேறு கொள்கைகளையுடைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு, வெட்கமே இல்லாமல் அதனை ஊடகங்களின் முன்பும் கூறிய மாவை சோனாதிராஜா

இந்த அறிவு கூட இல்லாமல் எப்படி இவ்வளவுகாலமும் தலைவராக இருந்தார் என்பதே உலக அதிசயம். அதனாற்தான் நேற்று நுழைந்த சுமந்திரன் இவ்வளவு சர்வாதிகாரம் செலுத்த முடிந்தது கட்சிக்குள். இனிவருங்காலத்தில் தேர்தல் வந்தால்; மாவையரின் இந்த நகைச்சுவையை மக்கள் மறக்க மாட்டார்கள்

8 hours ago, ரசோதரன் said:

பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது..

யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே!  காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம்.

ஆமா...... சுமந்திரன் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லையோ? ஒருவரும் அதை கூறியதாக தெரியவில்லை, அல்லது நான் தவறவிட்டு விட்டேனோ? பாராளுமன்றத்தில் தொண்டை கிழிய கத்திவிட்டு அதன் பின் அதற்காக பாராட்டுப்பெறுபவர்களை அனுரா கவனியாமலா இருந்திருப்பார்? கனடாவில் இருக்கிற தங்கமயிலே, சாணக்கியன் பேசியதை தனது அறையில் இருந்து கவனித்த கோத்தா, பின் அவரை அழைத்து பாராட்டியதாக புளகாங்கிதம் அடைந்தாரே. இவ்வளவுதான் அவர்களது உரை. பாராட்டப்பட வேண்டும் என்பதற்காக பேசுவார்கள், பாடுபடும் மக்களுக்காகவல்ல.

தங்கள் சாணக்கியத்தை காட்டுவதற்கு கிடைத்த அரங்கமே பாராளுமன்றம். இப்போ தங்கள் சொந்த  கட்சியையே விமர்ச்சிக்கிறார்கள் பாராளுமன்றில். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு விடிவு பெற்று தருகிரம் என்று கிளம்பிய அனைத்து அரசியல்வாதிகளும் முழு கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம் .

அரசியல் பிரிவு நடேசன் போன்றவர்களை கொல்ல சொன்னதும் இவர்களாக இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொள்ளைகாரர் ஆக இருந்து இருக்கினம்

கொள்கைக்காரர் என்று தவறுதலாக  மாற்றி வாசித்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சில  விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

அதே1972 jvp கிளர்சையில் இதே இந்திய ராணுவம் சிங்கள இளையோர்களை வீதியில் போட்டு நெரித்தார்காளே அப்படி இறந்து போன இளையயவர்களின் ஆன்மாக்கு இதே அனுரா என்ன பதில் சொல்ல போகிறார் ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

சில  விடயங்கள கதைக்கும் போது ஆயிரகணக்கான சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

இங்கு வெளிக்கும் அனுராவின்  தமிழர் எதிர்ப்பு முகம் ?

பார்ப்பம்  வழக்கம் போல் சிங்களவரா இல்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

சிங்கள போலிஸ் சிங்களஆமியை கூட போட்டு தள்ளிய கருணா பிள்ளையானை எப்படி அதே அனுரா அரவனைகிறார் ?

அப்படியா...... அரவணைத்து விட்டாரா? நான் அறியவில்லை. 

5 hours ago, பெருமாள் said:

பார்ப்பம்  வழக்கம் போல் சிங்களவரா இல்லை ?

இவர் சிங்களவரேதான். அதிலென்ன சந்தேகம்? தன்னை வித்தியாசமானவராக காட்ட முனைகிறார். தமிழர் அழிக்கப்படும்போது இவர் இரக்கம் காட்டவில்லை, முண்டு கொடுக்காவிட்டாலும் மௌனமாக இருந்து ரசித்தவர். அதைவிட தமிழர் தாயகத்தை இரண்டு படுத்தியவர். இனிமேல் இவரே நினைத்தாலும் பிரித்ததை இணைக்கமுடியாது. தமிழரின் முயற்சி, முன்னேற்றம் அவர்களை உறுத்திக்கொண்டே இருக்கும். 

 

5 hours ago, பெருமாள் said:

இங்கு வெளிக்கும் அனுராவின்  தமிழர் எதிர்ப்பு முகம் ?

அனுரா எங்கேயும் தான் தமிழருக்கு ஆதரவு என்று சொல்லவில்லை சொல்லவும் மாட்டார் ஆனால் அவர் அரசியலில் காலூன்றுவதற்கு தமிழரின் ஆதரவை எதிர்பார்ப்பார்.  "நம்ப நட, நம்பி நடவாதே." என்பதுதான் நமக்கு பொருந்தும். காலூன்றியபின்னே தன் சுய ரூபத்தை காட்டுவார்.   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பகிடி said:

இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான் 

அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ?

குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது .

இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை .

அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

யார் எழுதியிருந்தால் என்ன? சொல்லப்பட்ட விடயம் பலகாலமாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதே!  காரணம் சரி, எழுதியவர் பிழை என்கிறீர்களா? சரி ..... அவர் எழுதியதில் தவறு காண்கிறவர்கள், உங்கள் கையை உயர்த்திக்காட்டுங்கள். தவறை யாரும் சுட்டிக்காட்டலாம். ஒரு சமூகத்தின் நிமித்தம் ஒவ்வொருவருக்கும் அந்த பொறுப்புண்டு. ஒருவர் விடும் தவறால் பாதிக்கப்படுவது, விடியலை நோக்கி போராடும் ஒரு இனம்.

நாங்கள் சிறுவயதில் காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி என்று சோதனையில் வந்த கேள்விகளுக்கு ஏற்றமாதிரி கட்டுரை எழுதுவது போலத் தான் இருக்கின்றது இந்த பகிரங்கக் கடிதம். 

இதை எழுதியவர் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கச் சொன்னவராக இருக்கலாம், இல்லாவிட்டால் இலங்கைச் சிங்கள ஒற்றை ஆட்சிப் பாராளுமன்றம் தேவையில்லை, எங்களின் ஒற்றுமை மட்டுமே முக்கியம், அதை சர்வதேசத்திற்கு காட்டினால் போதும் என்று சொன்னவராக இருக்கலாம். ஒரு அணுக்கமான அரசியல் செய்வோம் என்று சொன்னவராக இருக்கலாம். இன்னும் சில வகைகளும் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் நியாயங்கள் இருக்கிறது தானே........... நாங்கள் எழுதிய காலை, மாலை, கடற்கரை காட்சிக் கட்டுரைகள் போலவே.

சொன்னவர் யார் என்று தெரிந்தால் தான், இதில் இருக்கும் சொற்களையும், வசனங்களையும் கடந்து, அதில் மறைந்திருக்கும் உட்பொருளை விளங்கிக்கொள்ள முடியும்.

நித்தியின், ஜக்கியின் மற்றும் பல குருக்களின் பக்தர்களும் இதையே தான் சொல்கின்றனர். குருவின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டு விட்டு, குரு சொல்வதை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள் என்று....... உங்கள் குருக்களே தங்கள் சுகபோக வாழ்க்கைகளுக்காக மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இறுதியில் உங்களையும், உங்கள் குடும்பங்களையும் நடுத்தெருவில் நிற்பாட்டுவார்கள் என்று தானே நாங்கள் அவர்களுக்கு எதிர்க் கருத்துகள் சொல்லுகின்றோம். இதை எழுதியவர் கூட அப்படியான ஒருவராக இருக்கலாம்.

இப்பொழுது பாராளுமன்றம் முக்கியம், அங்கு போவது முக்கியம், அதிகாரம் முக்கியம்............. என்கின்றனர். உண்மையே, இவை எல்லாம் முக்கியம். இவை எப்போதும் முக்கியமானவையாக இருந்தன. அத்துடன், இதைச் சொல்பவர் முன்னர் என்ன சொல்லியிருந்தார் என்று அறிதலும் முக்கியம் தானே............    

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அப்படியா எந்த பல்கலையில் எப்போ படித்தவர் என்ற விபரத்தை தர முடியுமா ?

குதிரை ஓடிய கூட்டம் கோட்டு மாட்டிகொண்டு திரிந்தால் படித்தவர் என்ற விம்பம் தோன்றுவதை தவிர்க்க முடியாது .

இங்கு ரணிலும் இவரும் கோட்டு மாட்டும் கூட்டம் ரணில் வெளிநாடுகாளில் படிக்கவில்லை .

அங்கு அடிக்கிற வெக்கைக்குள் இவங்கள் இரண்டு பேரும் சனத்தை ஏமாற்றும் தோற்றம் 

Hon. M. A. Sumanthiran, M.P.

pdf_button.png Print Email
3194.jpg
Party
Illankai Tamil Arasu Kadchi (ITAK)
Electoral District / National List
Jaffna
Date of Birth : 09-02-1964
Civil Status : Married
Religion : Christianity
Profession / Occupation : Attorney-at-Law

Contact Details

On Non-Sitting Days
phone_ico.png 0112559352
On Sitting Days
phone_ico.png 0112366314
email_ico.png sumanthiran_m@parliament.lk

Political Career

Academic Qualifications

 

B Sc (Physics), LLM (Internet and Electronic Law);

O./L  A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு  படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣

 

👍

  • கருத்துக்கள உறவுகள்

கொசிறுத் தகவல்: சட்டவாளர்களின் கல்வி தராதர குறியீடுகளில் சட்டம் (Law) என்பதை ஒருமையில் L என்றும் சட்டங்கள் (Laws) என்று பன்மையில் LL என்றும் குறியிடப்படும். உதாரணமாக LLB (அல்லது LL.B) படிப்பை Bachelor of laws என்றும் LLM (அல்லது LL.M) படிப்பை Masters of laws என்றும் வழங்கப்படும். அதேவேளை Bachelor of Civil Law என்று ஒருமையில் குறிக்கப்படும்போது BCL (அல்லது B.C.L) என்றழைப்பது வழமை.

  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2024 at 08:56, நியாயம் said:

கல்வி அறிவுள்ள, பண்புள்ள, துடிப்புள்ள, தேசியப் பற்றுள்ள

கல்வி அறிவு என்பது என்ன?

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பகிடி said:

கல்வி அறிவு என்பது என்ன?

 

மேற்கோளில் காண்பிக்கப்படுவது பற்றிய எனது அபிப்பிராயம் ஒருபுறம் கிடக்க, முதலில் இந்த மேற்கோளை நான் எழுதவில்லை. இது செய்தியில் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2024 at 14:41, Kapithan said:

 

Hon. M. A. Sumanthiran, M.P.

pdf_button.png Print Email
 
 
 

B Sc (Physics), LLM (Internet and Electronic Law);

O./L  A/L முடித்திரிருந்தால்தான் பொதுவாக மேற்படிப்பு  படிக்கலாம் என்பதால் அந்த விபரத்தை இங்கே இணைக்கவில்லை. 🤣

 

👍

இதில் ஒரு சிறிய திருத்தம்: இலங்கையில் சட்டக் கல்லூரியில் முடிக்கும் சட்டக் கல்வியின் பட்டம் LLB- இளமாணிப் பட்டம். இது இருந்தால் இலங்கையில் சட்டத் தொழில் செய்யலாம். மேலே தரப்பட்டிருக்கும் LLM என்பது சட்ட முதுமாணிப் பட்டம் - இதனை அவுஸ்திரேலிய மொனாஷ் பல்கலையில் பெற்றார்.

இன்னொரு தகுதியைக் குறிப்பிட மறந்திருக்கிறீர்கள். "ஜனாதிபதி சட்டத்தரணி-President's Counsel" என்ற கௌரவம் சும்மா "பள்ளிக் கூடம் ஒதுங்காத"😎 ஆட்களுக்குத் துக்கிக் கொடுக்கும் நிலை இன்னும் இலங்கையில் ஏற்படவில்லை. சுமந்திரன், கனக ஈஸ்வரன் , சிவா பசுபதி, கமலசபேசன் , எங்கள் விக்கி ஐயா ஆகிய சில தமிழ் சட்டத்தரணிகள் இந்த கௌரவம் பெற்றிருக்கிறார்கள்.

பி.கு: கல்வித் தகுதிகளில் ஆர்வம் மிகுந்த விசயகாரரான பெருமாள் transcripts கேட்பார்! றெடியாக வைச்சிருக்கிறீங்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பகிடி said:

கல்வி அறிவு என்பது என்ன?

 

கல்வியறிவு என்றால் என்ன என்பது தொடர்பாக திரு செல்வின் அவர்கள் தெரிவித்த கருத்தை இங்கே இணைத்திருக்கிறேன். 

தலைப்பிற்கும் இதற்கும் தொடர்பில்லாவிடினும் உபயோகமான காணொளி.

https://www.facebook.com/JaffnaJet/videos/1189968685601502/?mibextid=ngobeXctTp5pD3Zm

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பகிடி said:

கல்வி அறிவு என்பது என்ன?

 

கல்வி அறிவு என்றால் சரியான இடத்தில், சரியான நேரத்தில், ஏற்ற ஒரு கேள்வியையோ அல்லது பல் கேள்விகளை கேட்டுத் தெளிவதாக இருக்குமோ.........😀.

கணக்குப் பாடம் சுத்தமாக வரவே வராத சில இலக்கியவாதிகள் இருக்கின்றார்கள். அவர்களின் இலக்கணப்படி பாடசாலைகளில், பல்கலைகளில் கிடைப்பது கல்வியே இல்லை. அது வெறும் தொழிற்பயிற்சி.

பல்கலைகளில் படித்தவர்களைக் கேட்டால், அது தான் கல்வி அறிவு.

பாடசாலை ஆசிரியர்களைக் கேட்டால், ஆத்திசூடி தான் கல்வி அறிவு.

என்னைக் கேட்டால், இங்கு கிடைக்கும்/வழங்கப்படும் கல்விக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை...........🤣........... அதற்காக படிக்காதவர்கள் எல்லாம் வாழ்வில் மேதைகள் என்று திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்கக்கூடாது........... 

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.