Jump to content

அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

ஈழப்பிரியன், நடந்தவைகளை நினைவூட்டுவதில் தவறில்லை. அதற்காக ‘இனவெறியன்’ என்ற வார்த்தைப் பிரயோகம் தவறு. நாங்கள் கூட சிங்களவர்களின் பார்வையில் தமிழ் இனவெறியர்களாக இருக்கலாம்.

அதேநேரம் இப்பொழுதுதான் அவர் ஜனாதிபதியாகி ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  என்ன செய்யப் போகிறார் என காத்திருப்போம். அதற்கு கால அவகாசம் வேண்டும். அதற்குப்பின் பார்க்கலாம். இப்பொழுது அவசரமாக ஓடி வந்து வெறுப்பை அள்ளித் தெளிப்பதற்கான தேவை என்ன? அனுராவின் அலை வடக்கு கிழக்கிலும் பெரிதாக எழுந்து தமிழ் தேசியம் பேசுவோரை அழித்து விடும் என்ற பயமா? நீங்கள் குறிப்பிட்டுளதுபோல், ‘மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்’ என்றால் எதற்காக குழப்ப வேண்டும்?

நாட்டில் எனக்கான வாக்குகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழன் என்ற நிலையில்  உங்களைப் போல எனக்கும்  தேவை இருக்கிறது.

இந்த  உலகம்  எமக்காகக் காத்துக்கொண்டு இருக்காது என்பது பலருக்குப் புரிவதில்லை. 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 69
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

island

அநுர குமார திஸாநாயக்க இனவெறியனாகாக இருக்க வேண்டும் என்று  கடும் போக்கு தமிழ் இனவெறியர்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த தமிழ் இனவெறியர்களின் விருப்பம் ஈடேடக் கூடாது என்பதே தமிழ் மக்கள் எதிர

குமாரசாமி

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா? ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் மு

உடையார்

யாரையும் இப்போது நம்புவது கஷ்டம், இந்த கட்டத்தில் அநுரா வந்த து கிறப்பான தெரிவு, அவரின் தமிழ் ஆளுரின் தெரிவு அதைவிட சிறப்பு, எம்மைவிட இந்தியா மேற்குலகுதான் இவரை உன்னிப்பாக கவனிக்கின்ற போகின்றார்கள், அ

  • கருத்துக்கள உறவுகள்

1) அனுரா ஒன்றும் அரசியல்ப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை.. அதனால் அதை பேசுவதில் பலன் இல்லை.. நடந்தால் சந்தோசமே..

ஆனால்

2) மகிந்த யுகம் முடிந்து மைத்திரி யுகம் வந்தபோது அவுஸ்திரேலியாவில் கனடாவில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும் எங்கள் வாழ்க்கையை உயிர்ப்பயம் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து அவுஸ்த்திரேலியா கனடா ஜரோப்பாவில் இருப்பது போல் இல்லாமல் பிள்ளைகளை தமிழ்மொழியில் படிப்பத்து தமிழை பேசி பேரக்குழந்தைகளுக்கும் தமிழை கற்றுக்கொடுத்து தமிழையும் வளர்த்து தமிழ் இனத்தையும் சிறிது சிறுதாக பெருக்கினோம்..

2) இப்பொழுதும் அப்படி அனுராவின் கீழ் ஏதோ சாவுப்பயம் இல்லாமல் எங்கள் மண்ணில் வாழ்ந்திட்டு போறம்.. அதில் கொள்ளிக்கட்டையை செருகாதீர்கள்..

மொழிதான் இப்பொழுது இங்கு பெரிய பிரச்சினை.. தமிழர்கள் இரண்டாவது மொழியாக சிங்களத்தையும் கற்றுக்கொண்டால் அரசியல்ப்பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டாலும் விளங்காப்பிரச்சினைகளால் வரும் பாதிப்பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம்..

நீங்கள் ஜேர்மனி பிரான்ஸ் அவுஸ்த்திரேலியா என்று போய் அந்த நாட்டு மொழியை கற்று இரண்டு தலைமுறைக்குள் தமிழை மறந்து இன அடையாளத்தையும் இழந்து ஒரு தலைமுறையை புலம்பெயர்ந்து இன அழிப்பு செய்யும் புலம்பெயர் தமிழர்களுடன் ஒப்பிடும்போது ஊரில் இருந்து தமிழையும் கற்று வளர்த்து தாய்நிலத்தில் வாழ்ந்து தமிழ்பேசும் சந்தத்திகளையும் உருவாக்கிக்கொண்டு சிங்களத்தை இரண்டாவது மொழியாக கற்றுக்கொள்பவர்களின் காலில் வீழ்ந்து கும்பிடலாம்..

உங்களால் பிரஞ்சையும் டொச்சையும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு இனவெறி பேசினாலும் எல்லாவற்றையும் மறந்து மன்னித்து வெள்ளைகளோடு சந்தோசமாக வாழமுடியும் என்றால் ஊரில் இருப்பவர்கள் ஏன் சிங்களம் கற்று முஸ்லீம்கள் போல் உங்களைப்போல் சந்தர்ப்பவாதிகளாய் வாழமுடியாது..? வாழ்ந்தால்தான் என்ன தப்பு..? இனம் இருந்தால்தானே இடமே இருக்கும்..

ஆக நீங்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் உங்கள் பாடுகளை பார்ப்பதுபோல் ஊரில் இருப்பவர்களையும் அவர்கள பாடுகளை பார்க்கவிடுங்கள்.. 

ஊதி ஊதி அணைந்து போய் இருக்கும் நெருப்பை எரித்து தமிழர்களுக்கு என்று இருக்கும் ரெண்டு சின்ன மாகாணங்களை எப்பொழுதும் சுடுகாடாக வைத்திருக்க விரும்பாதீர்கள்..

அப்படி நினைப்பவர்கள் நல்லா இருக்க மாட்டீர்கள்.. நாசாமாப்போவீர்கள்.. 

வாழு வாழ விடு…

பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 6
Link to comment
Share on other sites

41 minutes ago, நிழலி said:

நுணா,

ஐலண்ட் முட்டுக்கட்டை போடவில்லை. தன் எதிர்க்கருத்தை பதிகின்றார். இது தான் ஆரோக்கியமான உரையாடல்களுக்கு அவசியம்.

எதிர்கருத்துகளே இல்லாத, அவற்றுக்கு சந்தர்ப்பம் கொடுக்காத அரசியல் எம்மை சூனியத்துக்குள் தள்ளிய வரலாறும் எம்மிடம் உண்டு.

 

சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. திருத்தியுள்ளேன்.

 

//பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்//

இந்த கருத்து இத்திரிக்குள் ஏன் வர வேண்டும்???

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இனவாதமற்ற ஆட்சி  எப்படிப்பட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றீர்கள் island? அதன் அம்சங்கள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

இனவாதமற்ற நாடு என்பது ஒவ்வொரு பிரஜைக்கும் சமநிலை, சம உரிமைகள் மற்றும் சமப்பாடு வழங்கப்படும் ஒரு சமூகமாக இருக்க வேண்டும். அத்தகைய நாடு மக்கள் மக்களின் இன, மத, மொழி, தோற்றம், கலாசாரம் அல்லது பிற தனிப்பட்ட அடையாளங்களின் அடிப்படையில் வேறுபாடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இனவாதமற்ற நாடு என்பது ஒற்றுமை, பன்மை, சமநிலை மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டு அமைப்பாக இருக்கும்.

இதை அடைவதற்கு அநுர என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்ன  அரசியலமைப்பு மாற்றங்களை செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது.  காலங்காலமாக புரையோடிப்போயிருக்கும் இனவாதத்தை ஒழிப்பது நிச்சயம் சவாலான விடயம்.  “நான்  மந்திரவாதியல்ல ஆனால் இதை ஒழிக்க நான் எனது பதவிக்காலத்தில் என்னால் முடிந்த அளவு பாடுபடுவேன்” என்று தெரிவித்துள்ளார். இனவாதத்தின் தீமைகள் பற்றி சிங்கள பிரதேசங்களிலும்  அவர்கள் மத்தியில் அதிகமாக உரையாடி உள்ளார். 

அவர் தனது ஆட்சியை ஆரம்பிக்க முதலே அவரை இனவெறியர் என்று கட்டமைத்த பிரச்சாரத்தை  ஆரம்பித்தது நிச்சயமாக  தீய நோக்கிலேயே!  

இனவாதம் என்பது,  தமிழர் மத்தியில் புரையோடிப்போயிருக்கும் சாதிவாதத்தையும் உள்ளடக்கியது.  சிங்கள இனவாதம் குறைந்தாலும் அது குறையுமா என்பது சந்தேகமே.  தமிழ் தேசியப் பரப்பில் தலைவர்களாக   இவ்வாறான பல இனவெறியர்கள் இருந்தும் அவர்களை “இனவெறியர்” என்று அழைப்பார்களா?  அதுவும் இனவாதம் தான் என்பதை,  வரலாற்றில் எமது தவறுகளை மறைத்து  எழுதும் அது பற்றி பேசுபவர்கள் மீது அவதூறுகளை பதிலாக தெரிவிக்கும் எம்மவர்  இங்கு ஒத்துக்கொள்ளப்போவதில்லை  என்பதோடு   அதை ஜஸ்ரின் கூறியபடி  சத்தமின்றி மொள்ள  கடந்து செல்லவே பலரும் இங்கு விரும்புவர். 

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வாழு வாழ விடு…

பாலைவனம் கடந்து வந்தோம்.. பாதங்களை ஆற விடு..🙏

❤️..........

மிகவும் தேவையான ஒரு கருத்தை தாயகத்திலிருந்து பதிந்திருக்கின்றீர்கள், ஓணான்டியார்..........👍.

நான் இந்த அவருடம் ஊருக்கு போயிருந்த போது வவுனியாவில் ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். அவர்களை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். இப்பொழுது மிகச் சாதாரண ஒரு வாழ்க்கையையே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கணவன், மனைவி, சில பிள்ளைகள். 

அந்த அக்கா சொன்னார், 'தம்பி, எங்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்றும் நாங்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.............'. அவர்களிடம் எதுவுமே இல்லை. ஒரு கூட்டில் 50 கோழிக் குஞ்சுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. அதனுடனேயே இவ்வளவு திருப்தியா......... நான் கண் கலங்கி விடக் கூடாதென்பதில் மிக உறுதியாக இருந்தேன். அவர்கள் என்னிடம் எதுவும் கேட்கவும் இல்லை.

இந்தச் சனங்களை அப்படியே வாழ விடுங்கள் என்று தான் நானும் கேட்கின்றேன். அவர்கள் கடந்து வந்த பாதை போதும்.

Edited by ரசோதரன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

பொது வேட்பாளர் என்ற மாயமானை ஏவி அதை வைத்து மக்களை உசுப்பேற்றி தமது எண்ணத்தை நிறைவேற்றலாம் என்று கனவு கண்ட இந்த கோஷடிகள்  அந்த கனவில் மண் விழுந்த வெப்பியாரத்தில் இப்போது அநுரவுக்கு எதிராக விஷத்தை கக்க தொடங்கியுள்ளார்கள்.  

புலிகளின் நடவடிக்கைகளை  விமர்சனத்துக்கு உட்படுத்த வேணும் என்று சொல்லி புலிகளை வசைபாடுவது உங்க ஸ்டைல் இங்கு அனுரா வின் கடந்த கால நடவடிக்கைககள் அவர் கட்சி சார்ந்த தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் போன்றவற்றை ரஞ்சித் எமது பார்வைக்கு நினைவு படுத்துகிறார் உங்களால் அவர் எழுதிய விடயங்களில் பிழை கண்டு பிடிக்க முடியவில்லை ஏனென்றால் அவர் எழுதுவது அனைத்தும் நடந்த விடயங்களே .பொது வேட்பாளர் அவர் உண்மையிலே யார் என்று தெரியாத போதிலும் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டுவதுதான் யாழில் உங்களின் 24 மணி நேர சேவை .

நல்ல கருத்துக்கள் வரவேணும் அதற்காக எப்ப பார்த்தாலும் பழம் சீல கிழிந்தது போல் தமிழ் தேசியத்தை கரித்து கொட்டிக்கொண்டு புலம்பெயர் தமிழரையும் திட்டிக்கொண்டு எழுதுவதை எல்லாம் நீங்கள் கருத்து என்று எடுத்து கொண்டது உங்கள் சிறுமைத்தனத்தை வெளிச்சம் போட்டு காண்பிக்குது .

 

அநேகமா இனி அனுரா திருந்தியும் இருக்கலாம் இரு இனமும் ஒன்று பட்டால் தான் அந்த தீவில் நல் வாழ்வு என்று அதற்கு முதல் ....................அறுத்து ஆடுகிரியல் உங்க வழக்கமான விளயாட்ட ?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள்.  அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள். 

என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான். 

Edited by விசுகு
  • Thanks 2
Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

2009க்கு முன்னர் இப்படி தான் புலிகளை அழித்தால் அல்லது புலிகள் இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் மற்ற அனைத்தும் சரியாகும் என்று ஒருசிலர் ஊரிலும் இங்கும் கூவித்திரிந்தார்கள்.  அதேபோல் தான் இன்று தமிழ்த்தேசியம் அழிந்தால் அல்லது இல்லாமல் ஆக்கப்பட்டால் போதும் அனைத்தும் சரியாகும் என்று அதே நபர்கள் கூவித் திரிகிறார்கள். 

என்ன விலை கொடுத்தும் புலிகளை அழிக்க துணை போனவர்களுக்கு தமிழர்களுக்கான தீர்வு என்பது இரண்டாம் பட்சமாக கூட இருக்கவில்லை. அதுவே இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. தமிழ்த் தேசிய அழிப்பும் அப்படித்தான். 

தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். 

புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர்.

ஆனால் புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர்.

எனவே தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர் என்பது கண்கூடு.

நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

தாயகத்தில் தமிழ் தேசியத்தை அழிக்க முனைவது, புலம்பெயர் தமிழ் அமைப்புகளில் உள்ள நாட்டாமைகளும் அவர்களின் எடுபிடிகளாக உள்ள வயது போயும் ஓய்வெடுக்க விரும்பாத கிழட்டு அரசியல்வாதிகளும் தான். 

புலிகள் அழிக்கப்பட்ட பின் அதை அழித்த மகிந்தவின் ஆட்சியை அகற்ற தாயக மக்கள் சரத் பொன்சேக்கா, மைத்திரி, சஜித் என்று மாறி மாறி வாக்களித்தனர்.

அதே நேரத்தில், புலிகள் அழியப் போகிறார்கள் என தெளிவாக புரிந்த பின் இறுதி யுத்ததிற்கென காசு சேர்த்து அதை ஆட்டையை போட்ட புலம்பெயர் அமைப்புகள் பல, புலிகள் அழிந்த பின் மகிந்தவுடன் டீல் பேசி அவருடன் கைகுலுக்கினர்.

தாயக மக்களின் நோக்கத்திற்கு எதிராகவே எப்பவும் இந்த புலம்பெயர் புண்ணாக்கு கோஷ்டிகள் இயங்கி வருகின்றனர்.

நீங்கள் மேலே குறிப்பிட்டது அப்படியானவர்களைத் தானே!

ஆம் 

தமிழ்த் தேசியத்தை அழிக்க வேண்டும் என்று எவர் செயற்பட்டாலும் பேசினாலும் எழுதினாலும் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் என்னை பெத்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன். மரியாதை தரமாட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

 

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
  • Like 7
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்த  உலகம்  எமக்காகக் காத்துக்கொண்டு இருக்காது என்பது பலருக்குப் புரிவதில்லை. 

சும்மா எதற்கெடுத்தாலும் பழசையே கிளறிக்கொண்டிருந்தால் ஒரு அடி கூட நகர முடியாது. சேர்ந்து கைகோர்த்து நடந்து போவோம். உதறினால் அதை  உலக சாட்சியாக்குவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. 

எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள்.

எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். 

யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன.

எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம்,  கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்.

என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை.

எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம்.

எல்லோருக்கும் நன்றி.

இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.

Edited by ரஞ்சித்
Spelling
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரஞ்சித் said:

என்னை இங்கு வந்து தனிப்பட்ட ரீதியில் தாக்கியும், என் மீது வசை மாறி பொழிந்தும் இன்புற்றவர்களுக்கு முதற்கண் எனது நன்றிகள். எனென்றால், உங்களின் எதிர்ப்பே என்னை இத்தொடரை இறுதிவரை இழுத்துச் சென்று முற்றாகப் பதியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. உங்களின் வசைகளும், "நாசமாய்ப் போவாய்" என்கிற "ஆசீர்வாதங்களும்" என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை. 

எனது கருத்துக்களுக்கு மதிப்பளித்து, ஊக்கமும் ஆதரவும் தரும் ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், பெருமாள் ஆகியோரிற்கு எனது இருகரம் குவிந்த நன்றிகள்.

எழுதுவதற்கான எனது உரிமையை ஏற்றுக்கொண்டபோதிலும், இனவாதியென்று என்னை அடையாளம் கண்டுகொண்ட இன்னும் சிலருக்கும் எனது நன்றிகள். 

யாழ் இணையம் என்னைத் தடை செய்யும் வரையில் எழுதுவேன். நான் எழுதுவது நடந்த சரித்திரத்தை. சரித்திரத்தில் இருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லையென்றால், சிங்கள இனவாதிகளிடம் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்படப்போகிறோம் என்கிற ஆதங்கத்தில்த்தான். அதை இங்கே செய்யவேண்டாம் என்றாலும் கவலைப்படப்போவதில்லை. எனது கருத்துக்களை வெளிக்கொணர வேறு மார்க்கங்களும் இருக்கின்றன.

எனது இனம் மீது இன்றுவரை நடத்தப்படுகின்ற திட்டமிட்ட இனக்கொலை, எனது தாயகம் மீது ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பெளத்த இராணுவம், நாள்தோறும் கபளீகரம் செய்யப்பட்டு, சிங்களமயமாகும் எனது தாயகம்,  கொல்லப்பட்ட எனது மக்களுக்கும், மாவீரர்களுக்குமான நீதி, அரசியல்கைதிகளுக்கான விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதி...இவை அனைத்திற்குமான நேர்மையான பதில்களும், தீர்வுகளும் எந்தவொரு சிங்களத் தலைவனிடமிருந்து உண்மையாக வருகின்றதோ, அன்றைக்கு நான் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன்.

என்னை இனவாதி என்று அழையுங்கள், சாதியில் குறைந்தவன் என்று முகத்தில் உமிழுங்கள், ஆங்கிலமும் தமிழும் தெரியாதவன் என்று எள்ளி நகையாடுங்கள், இந்திய விசுவாசி என்று அடையாளம் காணுங்கள், இந்துவெறியன் என்று அழையுங்கள்......எதுவுமே என்னை கலக்கமடையச் செய்யப்போவதில்லை.

எனது பணி தொடரும். முடிந்தால் யாழில், இல்லாவிட்டால் எனக்கு எங்கெல்லாம் எழுதமுடியுமோ, அங்கெல்லாம்.

எல்லோருக்கும் நன்றி.

இடதுசாரி எனும் போர்வைக்குள் ஒளிந்து நின்றுகொண்டு தனது தீவிர சிங்கள இனவாத முகத்தை மறைக்க எத்தனிக்கும் அநுரவுக்கெதிரான எனது கருத்துக்கள் மறுபடியும் இன்றிரவில் (சிட்னி நேரப்படி 8 மணி) இருந்து தொடரும். மறவாமல் உங்களின் வசைவுகளையும் அடிக்கடி இணையுங்கள், எழுத்துத்துணைக்கும் எனக்கு ஆள்த் தேவைப்படுகிறது.

தொடர்ந்து எழுதுங்கள், (வசை மொழிகள் எனக்கில்லை என்பதாலல்ல) உங்களுக்கு சரியாக தெரிந்த ஒரு விடயத்தினை செய்யாமல் விட்டால்தான், அது தவறாகும்(உங்களை போல விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே இவ்வாறான முழுமையான ஆராய்ச்சி தகவல்களை திரட்டி அதனை தொகுத்து கருத்திட கூடியவர்கள் உள்ளார்கள்) .

இவ்வாறான பதிவுகளால் கூட எதிர்மறையான விளம்பரம் மூலம் NPP ஆட்சியினை பிடிக்கப்போவதில்லை, ஜனாதிபதி தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு என கருதுகிறேன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை போல அல்லது அதற்கும் குறைவான வாக்கு பெற்றகட்சி 3 ஆசனங்களை கைப்பற்றிய கட்சி எவ்வாறு பெரும்பான்மை எடுக்க முடியும்?

இந்த பதிவினால் இலங்கை அரசியலில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை, ஆனால் தேவையற்ற எதிர்பார்ப்பினை தவிர்ப்பதற்காக பதியப்படுகிறது, இந்த கட்சி இந்த தடவை 35 ஆசனங்கள் அதிகபட்சமாக எடுக்க முடியும் என கருதுகிறேன் (அதுவும் சாத்தியமா எனத்தெரியவில்லை).

மொத்தம் 225 ஆசனக்கள் உள்ள தேர்தலில் 3 ஆசனக்கள் பெற்ற கட்சி 20 ஆசனங்கள் பெறுவதே சாதனைதான்.

சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினரது கருத்துக்கள் வலுப்பெறக்கூடும்.

இந்த் கட்சி தனிப்பெரும்பான்மை எடுத்து வென்றால் வரலாறு மீண்டும் நிகழும்! (அது இந்த பாராளுமன்ற தேர்தலில் நிகழாது என்பதே ஒரு ஆறுதலான விடயமாக இருக்கிறது).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, vasee said:

தொடர்ந்து எழுதுங்கள், (வசை மொழிகள் எனக்கில்லை என்பதாலல்ல) உங்களுக்கு சரியாக தெரிந்த ஒரு விடயத்தினை செய்யாமல் விட்டால்தான், அது தவறாகும்(உங்களை போல விரல் விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே இவ்வாறான முழுமையான ஆராய்ச்சி தகவல்களை திரட்டி அதனை தொகுத்து கருத்திட கூடியவர்கள் உள்ளார்கள்) .

இவ்வாறான பதிவுகளால் கூட எதிர்மறையான விளம்பரம் மூலம் NPP ஆட்சியினை பிடிக்கப்போவதில்லை, ஜனாதிபதி தேர்தல் வேறு, பாராளுமன்ற தேர்தல் வேறு என கருதுகிறேன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பை போல அல்லது அதற்கும் குறைவான வாக்கு பெற்றகட்சி 3 ஆசனங்களை கைப்பற்றிய கட்சி எவ்வாறு பெரும்பான்மை எடுக்க முடியும்?

இந்த பதிவினால் இலங்கை அரசியலில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை, ஆனால் தேவையற்ற எதிர்பார்ப்பினை தவிர்ப்பதற்காக பதியப்படுகிறது, இந்த கட்சி இந்த தடவை 35 ஆசனங்கள் அதிகபட்சமாக எடுக்க முடியும் என கருதுகிறேன் (அதுவும் சாத்தியமா எனத்தெரியவில்லை).

மொத்தம் 225 ஆசனக்கள் உள்ள தேர்தலில் 3 ஆசனக்கள் பெற்ற கட்சி 20 ஆசனங்கள் பெறுவதே சாதனைதான்.

சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினரது கருத்துக்கள் வலுப்பெறக்கூடும்.

இந்த் கட்சி தனிப்பெரும்பான்மை எடுத்து வென்றால் வரலாறு மீண்டும் நிகழும்! (அது இந்த பாராளுமன்ற தேர்தலில் நிகழாது என்பதே ஒரு ஆறுதலான விடயமாக இருக்கிறது).

உங்களின் ஆதரவிற்கு நன்றி வசி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

 

அண்ணா 

நீங்கள் சொல்வது கேட்க பார்க்க பரவசமாகத்தான் இருக்கிறது.

பல்லக்கில் தூக்கப்பட்டவன் தூக்கியவனிடம் கையேந்தி நிற்கும் போது இனவாதம் எங்கேயிருந்து தொடங்கியது என்று நாங்கள் சொல்லித் தான் உங்களுக்கோ அல்லது இங்குள்ளோருக்கோ புரியணும் என்று இல்லை.

ஆனால் இங்கே பேரினவாத சிங்களத்தில் ஒருவர் நல்லவர் அவரால் அனைத்தும் மாறும் என்கிற விசத்தை விதைக்கும் போது அவரது கட்சி மற்றும் அவரது தோழர்கள் தான் கிடைக்க இருந்த ஆகக் குறைந்த பாதுகாப்பை கூட அறுத்து எறிந்தனர் என்கிற வரலாற்று எச்சரிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. அதைக் கூட பதியக்கூடாது பார்க்கக்கூடாது என்பது தான் இனவாத உச்சம்.  இது தான் அநுர செய்ய விரும்புவதும். 

இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதுவரை செய்யப்பட்ட எந்த அழிவுகள் மற்றும் கொடூரங்களுக்கும் எந்த தீர்வோ விசாரணையோ மன்னிப்போ தரமுடியாது. எல்லாவற்றையும் மறந்து விட்டு அதைப்பற்றி பேசுவதையும் விட்டு விட்டு இலங்கையில் வாழ முயலுங்கள். அவ்வளவு தான். 

இரத்திணச் சுருக்கம் அண்ணை, மிக்க நன்றி !

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரஞ்சித் said:

இரத்திணச் சுருக்கம் அண்ணை, மிக்க நன்றி !

ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட  தமிழ் இளைஞர்கள்

அவர்களின் இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்

தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாடல்

------------------------------------------------------

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் NPP (JVP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை  குறித்து கவலை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் ஜே.வி.பி  யின் கடந்த கால கசப்பான இனவாத வரலாற்றைக் கற்றறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

2022 ஆம் ஆண்டு சிறீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் தவறான கொள்கைகயைால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிய ஜே.வி.பி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் எனும் கோசத்தோடு தனது கட்சிப் பெயரை தேசிய மக்கள் சக்தி என உருமாற்றம் செய்து மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததோடு 2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாாரளுமன்றத்தில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றியடைந்து அனுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகிய ஒரு சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலிற்கு திகதியிடப்பட்டது. 

இந்நிலையில் தான் வடக்கு இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் பிழையான வழி நோக்கிச் சென்று விட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்கவே தங்களது மீட்பர் என கூறும் அளவிற்கு 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களின் மூளையில் ஜே.வி.பி காய்ச்சல் கடுமையாக தொற்றியிருக்கிறது. 

இந்த ஜே.வி.பி காய்ச்சலில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் விடுபடவேண்டும் எனில் ஜே.வி.பியின் கடந்த கால வராலற்றைப் படிப்பதன் மூலமே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியும். 

2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போர்நிறுத்த இணக்கப்பாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது போர்நிறுத்தத்தையும் போர் நிறுத்த உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு போரைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தென்னிலங்கையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு இளைஞர்களுக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றக் காரணமாக இருந்த அனுரகுமார திசாநாயக்கதான் தலைமை தாங்கியிருந்தார் என்பது 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னை இடதுசாரித்துவக் கட்சியாகக் காட்டிக்கொண்ட ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆயுதங்களை மறைத்துவைக்கும் இடங்களாக பௌத்த பிக்குகளில் மடாலயங்களைத் தெரிவுசெய்ததோடு பௌத்த தேசியத்தை வளர்ப்பதன் மூலம் பௌத்த பீடங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முனைந்தது. அத்தோடு சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இனவாத அரசியலை வளர்த்ததன் மூலம் சிங்கள இனவாத பௌத்த துறவிகளினது ஆதரவினையும் பெறவும் முனைந்தது. 

சர்வதேச நிதி நிறுவனங்களையும், நோர்வேயின் மத்தியஸ்த பாங்கினையும் கடுமையாக விமர்சித்ததோடு சமாதானக் கொள்கைக்கு எதிராக யுத்தத்தினை நடாத்துவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு  2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினை வைத்தது அரசியல இலாபங்களைப் பெறமுனைந்தது. சுனாமி மீள் கட்டமைப்பிற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து இடைக்காலக் கட்டமைப்பு ஒன்றினை மேற்கொள்ள அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிய நிலையில் அதனைக் கடுமையாக எதிர்த்து அந்தக் கட்டமைப்பை இல்லாது ஒழித்தது. 

கொழும்பில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக்கலவரத்திற்கு ஜே.வி.பியினரே காரணமெனக் கூறி சிறீலங்கா அரசால் இரண்டாவது தடவையாக ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினுடைய அரசியற் கொள்கை ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அரசியற் கொள்கைகளோடு  ஒத்திருக்கவில்லை.  அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏனைய இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த சமஷ்டிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஷ்டிக் கொள்கை நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும் எனக்  குறிப்பிட்டனர்.  தமது கொள்கையான சோசலிச அரசு என்பது நடைமுறைக்கு வரும் போது எல்லா இன மக்களும் சமத்துவமாக மதிக்கப்படுவதால் இனப்பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும் என இவர்கள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை  அவர்கள் எதிர்த்து வந்தனர். 

இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த
நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து
தெளிவுபடுத்துகிறது.

தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் சிறீலங்கா ஆட்சி முறையைப் பாதுகாக்கும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல.

“13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2006 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும்
நீதிமன்றத்தை நாடி பிரித்தது.

அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது. 

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும்  ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதால் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. எனவே நாங்கள் அச்சப்படத் தேவையில்லை ” என தற்போதைய ஜனாதிபதியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 24 அக்டோபர் 2015 நாடாளுமன்றில் நடைபெற்ற ஜெனீவா பிரேணை விவாத்தில் கூறினார்.

இவ்வாறான நிலைப்பாடுடைய இனவாதம் கக்கும் ஜே.வி.பியைத்தான் மாற்றத்தின் நாயகர்கள் எனக் கொண்டாட முயல்வதோடு தமிழ்த் தேசிய அரசியலில் எழுந்துள்ள குழப்பங்களுக்கு ஜே.வி.பி தான் மாற்றுத் தீர்வு என சிந்திக்க முற்படுவது கோமாளித்தனம் மட்டுமல்ல கோளைத்தனம் என்றும் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் தனது வாராந்த அறிகையில் கடுமையாகச் சாடியுள்ளது.

நன்றி - உரிமை மின்னிதழ்

இந்த திரி யுடன் தொடர்புடையது என்பதால் இங்கே பதிகிறேன்.

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இனத்துவேஷம் இல்லாமல் ஆட்சி செய்த ஒரு சிங்கள  ஆட்சியாளரை யாராவது சொல்ல முடியுமா?

ஒரு சில  சிங்கள அரசியல்வாதிகள்  சிரித்த முகத்துடன் இனவாதம் செய்வர். மற்றும் சிலர் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டே இனவாதம் செய்வர். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த தேர்தலில் அனுர இனவாதம் பேசி தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை என நினைக்கின்றேன்.நாட்டின் சுபீட்சம்,ஊழல் பற்றியே அதிகமாக பேசப்பட்டது. அதை ஓரிரு நாட்களில் செய்கின்றார் என செய்திகளில் வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

இனவாதி என்று பார்த்தால் நானும் தமிழ் இனவாதிதான்.அது போல் அனுரவும் ஒரு இனவாதியே. மாற்றுக்கருத்தில்லை. அது எந்த நேரத்தில் எங்கு பேசப்படுகின்றது என்பதுதான் முக்கியம்.  இப்போது நான் அனுரவிற்கு வக்காளத்து வாங்கவில்லை. ஒருவரின் ஆட்சியைப்பற்றி நல்லது கெட்டது  கூற கிட்டத்தட்ட மூன்று மாதங்களாவது தேவைப்படும். அப்படி இருக்க இங்கே ஆடு அறுக்க முதல் ஏதோ அறுத்த கதையாக போகின்றது.

இன்று இலங்கையின் வரலாற்றில் இரு பெரும் கட்சிகளின்/அரசியல் தலைவர்களின் கைகளிலிருந்து ஆட்சி  கைமாறி வேறொரு கட்சிக்கும் புதிய முகத்திற்கும் போய் இருக்கின்றது. என்னதான் நடக்கின்றது என பார்க்கலாம். எமது தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் முன்னேறவில்லை என்பதற்காக சிங்கள அரசியலும் முன்னேறவில்லை என கட்டியம் கூறுவது எந்த  நியாயமில்லை.

அவன் இனவெறியன் இவன் இனவெறியன் என கூறுபவர்களே!

குண்டு சட்டிக்குள் தேர் இழுக்காமல்........☝

ஏனென்றால் அந்த சிங்கள இனவெறி அரசியல்வாதிகளுக்கு வாக்கிடும் தமிழர்கள் ஏராளமானோர் உள்ளனர்.புலத்திலிருந்து எதையும் எழுத முடியும். ஆனால் சாதிப்பதில்.....?

இனவெறியன் என தூபமிடுபவர்கள் இன்றுவரைக்கும் தம் மண்ணில் உறைந்திருக்கும் சாதிப்பிரச்சனையை தீர்க்கும் வழிமுறைகளை எழுதினார்களா? 
எம் மண்ணில் முதலில் சாதி பிரச்சனையை அகற்ற வழி செய்ய வேண்டும். அதன் பின்னர் தமிழர் ஒற்றுமைக்கு முயற்சி செய்ய வேண்டும்.

விடுதலைப்புலிகளின் வெற்றிகளுக்கு சாதி வேற்றுமையின்மையும் ஒரு முக்கிய காரணம்.

 

வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌ ப‌திவு தாத்தா

உண்மை தான் எங்க‌ட‌ போராட்ட‌த்தில் ஜாதி இருந்த‌தில்லை அதோட த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஜாதி மெது மெதுவாய் ஈழ‌ ம‌ண்ணில் அழிந்து கொண்டு வ‌ந்த‌து 2009க்கு பிற‌க்கு ஜாதி வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது

த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்

சொகுசு வாழ்க்கை வாழ‌ ப‌ழ‌கின‌வை அவ‌ர்க‌ளுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ளின் நிலை தான் ப‌ரிதாவ‌ நிலை.......................

எல்லாம் போலிக‌ள் த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் நேர்மையா செய‌ல் ப‌ட்ட‌வை பின்னைய‌ கால‌ங்க‌ளில் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டை ந‌க்கி கொண்டு வேச‌ம் போட்ட‌வை

 

என‌க்கு தெரிந்து  த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ள்  எங்க‌ளுக்கு  இதை க‌ட்டி த‌ந்தவ‌ர்க‌ள்  எங்க‌ட‌ வாழ்வாதாரத்துக்கு இதை செய்து த‌ந்த‌வை என்று பொது ம‌க்க‌ள் சொல்லி  நான் கேள்வி ப‌ட‌ வில்லை

 

ஈழ‌ ம‌ண்ணில் வறுமையின் கீழ் வாழும் மக்களை தூக்கி விட்ட‌தே புல‌ம்பெய‌ர் நாட்டு எம் உற‌வுக‌ள் தான்.................த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் வீடுக‌ள் வாக‌ன‌ங்க‌ள் என்று அவை ந‌ல்ல‌ வ‌ச‌தியாக‌ வாழுகின‌ம்

 

அனுரா இப்ப‌ தானே ஆட்சிக்கு வ‌ந்து இருக்கிறார் ஊழ‌லை இல்லாம‌ செய்து அவ‌ர் சொன்ன‌ ப‌டியே செய்தால் அவ‌ருக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் ஆத‌ர‌வு கூடும்..................நான் சோச‌ல் மீடியாவை அவ‌தானித்த‌ ம‌ட்டில் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் அனுரா பின்னால் போவ‌த‌ பார்க‌ முடியுது........................

 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ப‌ முடியாது............ஈழ‌த்து அர‌சிய‌ல் வாதிக‌ளையும் ந‌ம்ம‌ முடியாது.............. எல்லாம் ஒட்டையில் ஊறிய மட்டையல்😁😛..........................கிழ‌டு க‌ட்டைய‌ல‌ வீட்டுக்கு அனுப்பி விட்டு😡 இளைஞ‌ர்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அர‌சிய‌லில் செய்ய‌ விட‌னும் அப்ப‌ தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஏதேனும் விடிவு கால‌ம் பிற‌க்கும் தாத்தா🙏...............................

Edited by வீரப் பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள பார்வையாளர்கள்

தமிழ் சிங்கள இனவாதிகளுக்கு இனப்பிரச்சினை என்பது பிச்சைக்காரனின் புண் போன்றது, தாம் செல்லும் கருத்துக்களுக்கு ஓசன்னா சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது பாசிசம் ஆகும்.

1989 இல் ரோஹன விஜேவீராவை சுட்டு, குறை உயிராக போறணையில் போட்டு எரித்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய இராணுவ அதிகாரி கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி மேடைகளில் அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை செய்திருந்தார். கடந்த காலங்களில் வாழ்பவர்களை நிகழ் காலம் நிராகரிக்கும் என்பது வரலாறு.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடது சாரி அரசினால் உண்மையாக இலங்கையில் மாற்றம் ஏற்படுத்த முடியும், ஆனால் இந்த அரசிற்குள்ள சவால்கள்
1. அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சிறுபான்மை இன மக்கள் எதிர் கொண்ட பிரச்சினை சமூக நீதியின்மை, அதனடிப்படையான அடக்குமுறை உதாரணமாக ஒரு இனக்கலவரம் மேற்கொள்ளப்பட்டால் அதனை சட்ட ரீதியாகக்கூட எதிர்கொள்ள முடியாது, அதனை உறுதிப்படுத்டுவதற்காகவே சிறுபான்மையினர் அதிகார பரவலாக்கம்  மூலம் அதனை பெற முனைகிறார்கள் (அதாவது  நிலையான உறுதித்தன்மை) ஆனால் இப்போதுள்ள ஜனாதிபதி அதற்கு எதிரானவராக உள்ளார் ஆனால் பேச்சளவில் உறுதி மொழியினை வழங்குகிறார், இதனை ஏற்று சிறுபான்மையினர் தமது ஆகக்குறைந்த உறுதித்தன்மை எதிர்பார்ப்பை கைவிட வேண்டும்.

2.கடந்த கால தவறுகளை களைய நடவடிக்கை.

கடந்த கால தவறுகளை களைய நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்கால தவறுகளை தவிக்க முடியும் எனும் நடைமுறையான அடிப்படையில் ஊழல்களுக்கு எதிராக நடத்தப்படும் விசாரனை போல ஒரு உண்மையான ஜனநாயக நாட்டில் நிகழ்த்தப்பட்ட தவறுகளுக்கு (பல சிங்கள் இளையோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்) விசாரணை செய்ய வேண்டும்

3. அரசியலைமைப்பு சட்டம் சீர்திருத்தப்படுவதன் மூலம் எதிர்கால தவறுகளை களைய நடவடிக்கை எடுத்தல்.

இந்த விடயத்திற்கு அதிகார பரவலாக்கம் இன்றியமையாதது ஆனால் வெறும் பேச்சினால் அனைவரும் சமம் என பேச்சளவில் கூறி மறுபுறம் அதற்கெதிரான நிலைப்பாட்டினை எடுத்தால் மக்கள் நம்பிக்கையின இழப்பார்கள்.

அடிப்படையில் இலங்கை முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டுமாயின் தேர்தல் மேடையில் பேசும் பேச்சினை விட அதன் செயற்படுத்தும் செயற்பாட்டிற்கே மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், செய்ல் ரீதியான உறுதிப்பாட்டை வழ்ங்க முடியாது (அதிகார பரவலாக்கம் இல்லை) முடியாது என தெளிவாக கூறியதன் மூலம் மீண்டும் ஒரு தீவிர ஒரு பக்க சார்பான நிலைப்பாட்டை எடுக்கின்ற நிலை காணப்படுகிறது.

இங்கு சிறுபான்மையினர் தமக்கு இன்னொரு ஜூலை கலவரம் போல்வோ அல்லது 2019 நிகழ்வு போலவோ நிகழ கூடாது என்பதற்கான உறுதி மொழியாக அரசியல், சட்ட சீர்திருத்தங்களை எதிர்பார்க்கிறார்கள், அதனை இனவாதமாக பார்க்கும் மனிதனை என்ன சொல்வது?

என்னை பொறுத்தவரை இலங்கையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.😪

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேலை தாக்க நடந்த இரகசியத் திட்டம்! Hassan Nasrallah மரணம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்!! ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நசரல்லாவைத் தாக்கி அழிக்க இஸ்ரேல் எதற்காக இந்தக் காலகட்டத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது? ஹிஸ்புல்லாக்களுக்கு அருகில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு உள்ளே நீண்டகாலமாகச் செயற்பட்டுவந்த இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு நினைத்திருந்தால்- Hassan Nasrallahவை முன்னரேயே அகற்றி இருக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இந்தத் தருனத்தைத் தேர்ந்தெடுத்திருந்தது இஸ்ரேல்?  
    • 30 SEP, 2024 | 01:31 PM காலித் ரிஸ்வான் அதிநவீன AI மற்றும் ரோபோ தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானம்,  போக்குவருத்து, பொழுதுபோக்கு, கல்வி மற்றும் மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளிலும் சவூதி அரேபியா தொடர்ந்தும் புதிய சாதனைகளைப் படைத்துவருகிறது.  அண்மையில் நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் AIஇனால் இயக்கப்படும் ரோபோக்களின் பயன்பாடு மற்றும் மன்னர் சல்மான் மெடிக்கல் சிட்டியில் வெற்றிகரமான ரோபோ உதவி மூலமான முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அண்மைய தொழில்நுட்ப ரீதியான மருத்துவ மற்றும் கல்வி ஆகிய துறைகளில் சவூதியின் சாதனைகள் மற்றும் ஆர்வம் போன்றவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.  இவ்வாண்டு நடைபெற்ற ரியாத் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சவூதியின் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில்  AI மூலமான சேவைகளை அறிமுகப்படுத்தி செயற்படுத்தி இருந்தது.  அந்த வகையில் பல்வேறு மொழிகளில் தொடர்புகொள்ளும் திறன் கொண்ட AI மூலம் இயங்கும் ரோபோக்கள் கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு விதிவிலக்கான துல்லியத்துடன் வழிகாட்டும் வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன.  இந்த ரோபோக்கள் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் வெளியீட்டு நிறுவனங்களைக் கண்டறிய உதவுவனவாக இருந்ததோடு, பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு பல மொழிகளிலான உதவிகளை, வழிகாட்டல்களை வழங்கின.  மேலும் இந்த ரோபோக்கள் புத்தகங்களுக்கான ஆடியோ  (Audio) வடிவிலான சுருக்கங்களை வழங்குகின்றன. முக்கிய கருப்பொருள்கள் மற்றும் காண்பிக்கப்படும் புத்தகங்களின் உள்ளடக்கத்தையும் வழங்குகின்றன. புத்தக ஆர்வலர்களுக்கான சிறந்த ஒரு அனுபவத்தை இந்த திட்டமானது வழங்குகின்றது.  இக்கண்காட்சியின் சகல அரங்குகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்ததோடு, ஊடாடும் சாதனங்கள், தேவைக்கேற்ப கதை அச்சிடுவதற்கான அச்சியந்திரங்கள் வைக்கப்படல் மற்றும் தகவல் திரைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம் கண்காட்சியின் கவர்ச்சி மேலும் அதிகரிக்கப்பட்டது. சுகாதாரத்துறையை பொருத்தமட்டில், மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மெடிக்கல் சிட்டி, 70  வயதான ஒரு பெண்ணுக்கு முதல் முதலாக ரோபோ உதவியுடன் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து வரலாறு படைத்துள்ளது.  சிறப்பு எலும்பியல் மற்றும் மூட்டு மாற்றுக் குழுவால் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சை, மதீனா சுகாதாரத் தொண்டு நிறுவனத்துக்கு (Madina Health Cluster) ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.  மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் ரோபோ அமைப்புகளின் பயன்பாடானது எலும்பு சீரமைப்பு மற்றும் எழும்பு மாற்று செயற்பாடுகளில் துல்லியத்தை உறுதி செய்கிறது.  அத்தோடு இது சிறந்த அறுவை சிகிச்சை விளைவுகளுக்கும் விரைவான குணமடைதலுக்கும் வழிவகுக்கிறது.  இந்த புதுமையான செயல்முறையின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டும் வண்ணமாக நோயாளி பூரண ஆரோக்கியத்துடன் வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளிலுமான இந்த முன்னேற்றங்கள் தொழில்நுட்பத்தை முக்கிய துறைகளில் ஒருங்கிணைப்பதற்கான சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. அத்தோடு இவ்வாறான முயற்சிகள் பிராந்திய ரீதியாகவும் உலகளவிலும் சவூதியை புதுமை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு முன்னோடியாக நிலைநிறுத்தியிருக்கின்றன. https://www.virakesari.lk/article/195126
    • சூரிய ஆற்றலின் நன்மை தீமைகள்   சூரியன் பூமிக்கு ஒரு மணி நேரம் அளிக்கும் ஆற்றல் ஒரு வருடத்திற்கான உலகளாவிய ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சந்தேகத்திற்கு இடமின்றி, சூரியன் ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் மூலமாகும், மேலும் இந்த ஆற்றலின் ஒரு பகுதியை நம்மால் சேகரிக்க முடியாவிட்டாலும், சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் இந்த சக்தியைப் பயன்படுத்துவது கிரகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இது விலை உயர்ந்தது அல்லது திறமையற்றது என்று பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், சூரிய ஆற்றல் இப்போது மிகவும் நன்மை பயக்கும் - சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, தனியார் பொருளாதாரத்திற்கும்.   நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?   கிடைக்கக்கூடிய சோலார் பேனல் மானியங்கள் மற்றும் சந்தையில் பெருகிய முறையில் போட்டி விலைகள் காரணமாக, சூரிய ஆற்றல் அதிக குடும்பங்களுக்கு ஆற்றலின் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. தொழில்நுட்பம் கடந்த ஆண்டுகளில் வெகுவாக மேம்படுத்தப்பட்டு, சூரிய மின்கல சேமிப்பு அமைப்புகளால் நிரப்பப்பட்டு, சூரிய சக்தியை தூய்மையான ஆற்றலின் குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாற்றுகிறது. இருப்பினும், நீங்கள் பகுப்பாய்வு செய்யத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் மூலத்தைப் பொருட்படுத்தாமல் எப்போதும் குறைபாடுகள் உள்ளன. சூரிய ஆற்றலின் முக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் முக்கியமாக பின்வரும் புள்ளிகளில் பிரதிபலிக்கின்றன:     சூரிய ஆற்றலின் நன்மைகள்     1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரம் சோலார் பேனல்களின் அனைத்து நன்மைகளிலும், மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஆற்றல் உண்மையிலேயே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமாகும். இது உலகின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தப்படலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். மற்ற சில ஆற்றல் ஆதாரங்களைப் போலல்லாமல், சூரிய சக்தியை நம்மால் இயக்க முடியாது. சூரியன் இருக்கும் வரை சூரிய சக்தியை அணுக முடியும், எனவே விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் இறக்கப் போகும் போது குறைந்தது 5 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரிய ஒளி நமக்குக் கிடைக்கும். 2. மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கிறது உங்கள் சூரிய குடும்பம் உருவாக்கிய மின்சாரம் மூலம் உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை நீங்கள் பூர்த்தி செய்வதால், உங்கள் ஆற்றல் கட்டணம் குறையும். உங்கள் பில்லில் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது சூரியக் குடும்பத்தின் அளவு மற்றும் உங்கள் மின்சாரம் அல்லது வெப்பப் பயன்பாட்டைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, நீங்கள் வணிகரீதியான சோலார் பேனல்களைப் பயன்படுத்தும் வணிகமாக இருந்தால், இந்த சுவிட்ச் பெரிய பலன்களைப் பெறலாம், ஏனெனில் பெரிய சிஸ்டம் அளவு உங்கள் ஆற்றல் பில்களின் பெரிய பகுதிகளை உள்ளடக்கும். மேலும், நீங்கள் மின்சாரக் கட்டணத்தைச் சேமிப்பது மட்டுமின்றி, ஸ்மார்ட் ஏற்றுமதி உத்தரவாதம் (SEG) மூலம் மின்கட்டணத்திற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் உபரி ஆற்றலுக்கான கட்டணங்களைப் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. நீங்கள் பயன்படுத்துவதை விட அதிக மின்சாரத்தை நீங்கள் உற்பத்தி செய்தால் (உங்கள் சோலார் பேனல் அமைப்பு கட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு). 3. பல்வேறு பயன்பாடுகள் சூரிய சக்தியை பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம். நீங்கள் மின்சாரம் (ஒளிமின்னழுத்தம்) அல்லது வெப்பம் (சூரிய வெப்ப) உருவாக்க முடியும். சூரிய ஆற்றலை ஆற்றல் கிரிட் அணுக முடியாத பகுதிகளில் மின்சாரம் தயாரிக்கவும், குறைந்த சுத்தமான நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் தண்ணீரை வடிகட்டவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக்கோள்களை இயக்கவும் பயன்படுத்தலாம். கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களிலும் சூரிய சக்தியை ஒருங்கிணைக்க முடியும். நீண்ட காலத்திற்கு முன்பு ஷார்ப் வெளிப்படையான சூரிய ஆற்றல் ஜன்னல்களை அறிமுகப்படுத்தியது. 4. குறைந்த பராமரிப்பு செலவுகள் சூரிய ஆற்றல் அமைப்புகளுக்கு பொதுவாக அதிக பராமரிப்பு தேவையில்லை. நீங்கள் அவற்றை ஒப்பீட்டளவில் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், எனவே வருடத்திற்கு இரண்டு முறை சுத்தம் செய்வது வேலையைச் செய்யும். சந்தேகம் இருந்தால், நீங்கள் எப்பொழுதும் பிரத்யேக துப்புரவு நிறுவனங்களை நம்பலாம், அவை சுமார் £25-£35 வரை இந்தச் சேவையை வழங்குகின்றன. மிகவும் நம்பகமான சோலார் பேனல் உற்பத்தியாளர்கள் 20-25 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்குகிறார்கள். மேலும், நகரும் பாகங்கள் இல்லாததால், தேய்மானம் இல்லை. இன்வெர்ட்டர் பொதுவாக 5-10 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட வேண்டிய ஒரே பகுதியாகும், ஏனெனில் இது சூரிய சக்தியை மின்சாரம் மற்றும் வெப்பமாக மாற்றுவதற்கு (சோலார் பி.வி. வெர்சஸ் சோலார் தெர்மல்) தொடர்ந்து வேலை செய்கிறது. இன்வெர்ட்டரைத் தவிர, உங்கள் சூரிய சக்தி அமைப்பு அதிகபட்ச செயல்திறனில் இயங்குவதை உறுதிசெய்ய கேபிள்களுக்கும் பராமரிப்பு தேவைப்படுகிறது. எனவே, சோலார் சிஸ்டத்தின் ஆரம்ப செலவை உள்ளடக்கிய பிறகு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு மிகக் குறைந்த செலவை எதிர்பார்க்கலாம். 5. தொழில்நுட்ப வளர்ச்சி சூரிய சக்தி துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருகிறது மற்றும் எதிர்காலத்தில் மேம்பாடுகள் தீவிரமடையும். குவாண்டம் இயற்பியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் உள்ள கண்டுபிடிப்புகள் சோலார் பேனல்களின் செயல்திறனை அதிகரிக்கலாம் மற்றும் சூரிய சக்தி அமைப்புகளின் மின் உள்ளீட்டை இரட்டிப்பாக அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கலாம்.   சூரிய ஆற்றலின் தீமைகள்     1. செலவு ஒரு சோலார் சிஸ்டத்தை வாங்குவதற்கான ஆரம்ப செலவு மிகவும் அதிகமாக உள்ளது. சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர், பேட்டரிகள், வயரிங் மற்றும் நிறுவலுக்கு பணம் செலுத்துவது இதில் அடங்கும். ஆயினும்கூட, சூரிய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, எனவே எதிர்காலத்தில் விலைகள் குறையும் என்று கருதுவது பாதுகாப்பானது. 2. வானிலை சார்ந்தது மேகமூட்டம் மற்றும் மழை நாட்களில் சூரிய சக்தியை இன்னும் சேகரிக்க முடியும் என்றாலும், சூரிய குடும்பத்தின் செயல்திறன் குறைகிறது. சோலார் பேனல்கள் சூரிய சக்தியை திறம்பட சேகரிக்க சூரிய ஒளியை சார்ந்துள்ளது. எனவே, சில மேகமூட்டமான, மழை நாட்கள் ஆற்றல் அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சூரிய சக்தியை சேகரிக்க முடியாது என்பதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மறுபுறம், இரவில் அல்லது குளிர்காலத்தில் வேலை செய்ய உங்கள் நீர் சூடாக்கும் தீர்வு தேவைப்பட்டால், வெப்ப இயக்கவியல் பேனல்கள் கருத்தில் கொள்ள ஒரு மாற்றாகும். 3. சூரிய ஆற்றல் சேமிப்பு விலை அதிகம் சூரிய சக்தியை இப்போதே பயன்படுத்த வேண்டும், அல்லது பெரிய பேட்டரிகளில் சேமிக்கலாம். ஆஃப்-தி-கிரிட் சோலார் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் இந்த பேட்டரிகள், பகலில் சார்ஜ் செய்யப்படலாம், இதனால் ஆற்றல் இரவில் பயன்படுத்தப்படுகிறது. நாள் முழுவதும் சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும், ஆனால் இது மிகவும் விலை உயர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பகலில் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதும், இரவில் கிரிட்டில் இருந்து ஆற்றலை எடுத்துக்கொள்வதும் சிறந்ததாகும் (உங்கள் கணினி கட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும்). அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆற்றல் தேவை பொதுவாக பகலில் அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி பெரும்பாலானவற்றைச் சந்திக்கலாம். 4. நிறைய இடத்தைப் பயன்படுத்துகிறது நீங்கள் எவ்வளவு அதிக மின்சாரம் உற்பத்தி செய்ய விரும்புகிறீர்களோ, அவ்வளவு சூரிய ஒளியை நீங்கள் சேகரிக்க விரும்புவதால், உங்களுக்கு அதிகமான சோலார் பேனல்கள் தேவைப்படும். சோலார் PV பேனல்களுக்கு நிறைய இடம் தேவைப்படுகிறது மற்றும் சில கூரைகள் நீங்கள் வைத்திருக்க விரும்பும் சோலார் பேனல்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் அளவுக்கு பெரியதாக இல்லை. உங்கள் முற்றத்தில் சில பேனல்களை நிறுவுவது ஒரு மாற்றாகும், ஆனால் அவை சூரிய ஒளியை அணுக வேண்டும். நீங்கள் விரும்பிய அனைத்து பேனல்களுக்கும் இடம் இல்லை என்றால், உங்கள் ஆற்றல் தேவைகளில் சிலவற்றை இன்னும் பூர்த்தி செய்ய சிலவற்றை நிறுவுவதைத் தேர்வுசெய்யலாம். 5. மாசுபாட்டுடன் தொடர்புடையது மற்ற ஆற்றல் ஆதாரங்களுடன் ஒப்பிடும்போது சூரிய ஆற்றல் அமைப்புகளுடன் தொடர்புடைய மாசுபாடு மிகவும் குறைவாக இருந்தாலும், சூரிய ஆற்றல் மாசுபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம். கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்துடன் சூரிய மண்டலங்களின் போக்குவரத்து மற்றும் நிறுவல் தொடர்புடையது. சூரிய ஒளிமின்னழுத்த அமைப்புகளின் உற்பத்தி செயல்முறையின் போது சில நச்சு பொருட்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை சுற்றுச்சூழலை மறைமுகமாக பாதிக்கலாம். ஆயினும்கூட, சூரிய ஆற்றல் மற்ற மாற்று எரிசக்தி ஆதாரங்களை விட மிகக் குறைவாகவே மாசுபடுத்துகிறது. https://tamil.hyliess.com/தொழில்-அறிவு/சூரிய-ஆற்றலின்-நன்மை-தீமைகள்
    • Published By: RAJEEBAN   30 SEP, 2024 | 02:35 PM நேபாளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் தலைநகர் காத்மண்டுவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளம் தலைநகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக ஆறுகள பெருக்கெடுத்துள்ளதால் தலைநகரின் பல நகரங்கள் நீரின் கீழ் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. வெள்ளம் மண்சரிவு காரணமாக 100க்கும் மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன, நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன, மின்கோபுரங்கள் வீழ்ந்துள்ளன என நேபாள தகவல்கள் தெரிவிக்கின்றன. காலநிலை நெருக்கடி காரணமாகவே நேபாளம் மிக அதிகளவான ஆபத்தான மழையையும் வெள்ளத்தையும் எதிர்கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களையும், தொலைதூர பகுதியில் வெள்ளத்தினால் சிக்குண்டுள்ளவர்களையும் தேடிகண்டுபிடித்து மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காத்மண்டுவின் தென்பகுதியில் உள்ள லலித்பூரே மிக மோசமான பாதிப்புகளை  எதிர்கொண்டுள்ளது. பெருக்கெடுத்து ஓடும் ஆற்றின் ஊடாக இராணுவத்தினரும் மீட்பு பணியாளர்களும் ஆபத்தான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த நகரில் சேற்றில் அல்லது வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம் என கருதப்படுபவர்களை மீட்பதற்காக மீட்பு பணியாளர்கள் தங்கள் கரங்களால் அந்த பகுதிகளை தோண்டிவருகின்றனர். கூரைகளின் மேல் தஞ்சமடைந்துள்ள மக்களை மீட்பதற்கு ஹெலிக்கொப்டர்களையும் படகுகளையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமை முதல் 192 பேர் உயிரிழந்துள்ளனர் 92 பேர் காயமடைந்துள்ளனர் பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3700 பேரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொலைதூரத்தில் உள்ள துண்டிக்கப்பட்டுள்ள பகுதிகளை மீட்பு பணியாளர்கள் சென்றடைந்ததும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொலிஸார் அச்சம் வெளியிட்டுள்ளனர். நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளும் வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. காத்மண்டுவின் முக்கிய வீதியொன்றால் சென்றுகொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மண்சரிவில் சிக்குண்டன  எனதெரிவித்துள்ள அதிகாரிகள் குறிப்பிட்ட பேருந்திலிருந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் பேருந்து மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணாப்படுவதை  காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. டொலாக்கா மாவட்டத்தின் பிமேஸ்வரில் இடிந்து விழுந்த வீட்டிலிருந்து இரண்டு வயது பையன் உயிருடன் மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/195133 கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணிவெடியாக இருக்கே!!
    • Published By: DIGITAL DESK 3   30 SEP, 2024 | 12:54 PM முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, கைத்துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற அதிகாரிகள் தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளதாக, மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முன்னாள் எம்.பி.க்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக குறைந்தபட்சம் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிப்பதாக முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து இந்த சமீபத்திய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறை போக்குவதற்காக முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/195122
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.