Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விமலின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை

adminOctober 10, 2024

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியான  தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என   அறிவித்துள்ளது. ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின்  ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின், எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என  வீரவன்ச  விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கட்சியின் அனைத்து மட்டத்தினருடனும் கலந்தாலோசித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த வீரவன்ச, எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அடுத்த சில நாட்களில் கட்சி வெளியிடும் எனவும் தொிவித்துள்ளாா்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை  இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், அவ்வாறான முயற்சிகளில் தேசிய சுதந்திர முன்னணியும்  ஒரு கட்சியாக இருக்காது எனவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளாா்.
 

 

https://globaltamilnews.net/2024/207329/

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதை உறுதிசெய்வதை இலக்காகக் கொண்டு, பெரும்பான்மையை அடையாத பட்சத்தில் முடிவுகளைப் பாதிக்கக்கூடிய ஏனைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்காமல் ஆட்சியமைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பச்சை இனத் துவேசம் கொண்ட  விமலின் செயல் நன்றாக இருந்தாலும்... 
அனுராவுடன் போய் மீண்டும் ஒட்டமால் இருந்தால்தான் தமிழருக்கு நல்லது.

வெற்றி பெற்ற பக்கம் சாய்வதற்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருக்கும். நல்ல முறையில் ஆட்சியமைக்க வந்தவர்களை, இந்தப் புல்லுருவிகள் கெடுத்துவிடும் போல் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

462465976_944342107730762_17021972427657

வாசுதேவ நாணயக்கார முதல் ஆளாகப் போய்... அனுரவுடன் ஒட்டிக் கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

பச்சை இனத் துவேசம் கொண்ட  விமலின் செயல் நன்றாக இருந்தாலும்... 
அனுராவுடன் போய் மீண்டும் ஒட்டமால் இருந்தால்தான் தமிழருக்கு நல்லது.

வெற்றி பெற்ற பக்கம் சாய்வதற்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருக்கும். நல்ல முறையில் ஆட்சியமைக்க வந்தவர்களை, இந்தப் புல்லுருவிகள் கெடுத்துவிடும் போல் உள்ளது. 

நீங்கள் இதை கவனிக்கவில்லை சிறி.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், 

அவர் தான் மீண்டும் கம்பீரமாக வலம் வர ஒரு புளியம் கொம்பை வைத்திருக்கிறார். சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பும் போது அடுத்த ஜனாதிபதி இவராகக்கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில்இ ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த மக்களின்  ஆணையைப் பாதுகாப்பதற்கும் அந்த ஆணையை வழங்கிய மக்களின்இ எதிர்பார்ப்புகளுக்கு ஆதரவாக நிற்பதற்கும் தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என  வீரவன்ச  விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.]

சரியாக சொல்லியுள்ளார் அவருக்கு பதிலாக அனுரகுமார திஸாநாயக்க வந்துள்ளார்

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நீங்கள் இதை கவனிக்கவில்லை சிறி.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இரண்டாம் கோட்டாபய ஆக்குவதற்கான ஏகாதிபத்திய சதியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாகவும், 

அவர் தான் மீண்டும் கம்பீரமாக வலம் வர ஒரு புளியம் கொம்பை வைத்திருக்கிறார். சிங்களம் மீண்டும் தனது உண்மையான முகத்தை காட்ட விரும்பும் போது அடுத்த ஜனாதிபதி இவராகக்கூட இருக்கலாம்.

விசுகு... சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது.

தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம்   கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது.

இப்போ... காட்டிக் கொடுத்த ஓட்டுக் குழுக்களும், ஒப்புக்கு சப்பாணிகளாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் செயலை நினைத்து வெட்கப் படுவது கூட இல்லை. இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வயிறை எப்படி வளர்க்கலாம் என்று திரிகின்றார்கள்.   

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பச்சை இனத் துவேசம் கொண்ட  விமலின் செயல் நன்றாக இருந்தாலும்... 
அனுராவுடன் போய் மீண்டும் ஒட்டமால் இருந்தால்தான் தமிழருக்கு நல்லது.

வெற்றி பெற்ற பக்கம் சாய்வதற்கு ஒரு கூட்டம் காத்துக் கொண்டு இருக்கும். நல்ல முறையில் ஆட்சியமைக்க வந்தவர்களை, இந்தப் புல்லுருவிகள் கெடுத்துவிடும் போல் உள்ளது. 

தமது கட்சியை வெளியே  நிறுத்தித் தமது குழந்தையான(பினாமி) NPP  யை வெல்லவைக்கும் நோக்கிலான தீர்மானம். வாக்குகள் பிரிந்து தனது தோழரான அ.கு.தி தோற்பதையோ, வேறுகட்சிகளின் தயவில் ஆட்சி அமைப்பதையோ விரும்பாது எடுத்துள்ள முடிவாகவே நோக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

தமது கட்சியை வெளியே  நிறுத்தித் தமது குழந்தையான(பினாமி) NPP  யை வெல்லவைக்கும் நோக்கிலான தீர்மானம். வாக்குகள் பிரிந்து தனது தோழரான அ.கு.தி தோற்பதையோ, வேறுகட்சிகளின் தயவில் ஆட்சி அமைப்பதையோ விரும்பாது எடுத்துள்ள முடிவாகவே நோக்கலாம்.

தானாடா விட்டாலும், தசை ஆடும் தருணம்.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

விசுகு... சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது.

தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம்   கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது.

இப்போ... காட்டிக் கொடுத்த ஓட்டுக் குழுக்களும், ஒப்புக்கு சப்பாணிகளாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் செயலை நினைத்து வெட்கப் படுவது கூட இல்லை. இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வயிறை எப்படி வளர்க்கலாம் என்று திரிகின்றார்கள்.   


உண்மை. ஆனால்,மாற்றம் என்பது சிங்களத்துககான மடைமாற்றமாக இருக்குமாயின் தமிழினத்தின் படைபலப் பேரழிவு2009இல், அரசியல் பேரழிவு 2024இல் என்று வரலாற்றுப் பதிவாகும். 

1 minute ago, தமிழ் சிறி said:

தானாடா விட்டாலும், தசை ஆடும் தருணம்.  😂 🤣

அதுதான் சிங்களத்தின் அரசியல், மதவியல்,மெய்யியல், சட்டவியல், கல்வியியல் மற்றும் பொருளியல் .....அனைத்து தரப்பினரதும்  ஒருங்கிணைந்த சிந்தனை. அதனைப் புரிந்துகொண்டு செயற்படாத தமிழர் செய்யும் தமிழர் விரோத அரசியல் மற்றுமொரு சாபக்கேடு. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள்.

ஒருவகையில் இந்த மூளைச் சலவை என்பது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கூட புலிகள், போராட்டம்… போன்றவற்றில் இருந்து இன்னமும் மீளவில்லை.

 

2 hours ago, nochchi said:

அனைத்து தரப்பினரதும்  ஒருங்கிணைந்த சிந்தனை. அதனைப் புரிந்துகொண்டு செயற்படாத தமிழர் செய்யும் தமிழர் விரோத அரசியல் மற்றுமொரு சாபக்கேடு. 

கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள்.

தமிழரை  இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள்.

“உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் - அதை

ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்

நாம் கதறி என்ன குழறி என்ன

 ஒன்றுமே  நடக்கவில்லை தோழா

ரொம்ப நாளா…”

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

தமது கட்சியை வெளியே  நிறுத்தித் தமது குழந்தையான(பினாமி) NPP  யை வெல்லவைக்கும் நோக்கிலான தீர்மானம். வாக்குகள் பிரிந்து தனது தோழரான அ.கு.தி தோற்பதையோ, வேறுகட்சிகளின் தயவில் ஆட்சி அமைப்பதையோ விரும்பாது எடுத்துள்ள முடிவாகவே நோக்கலாம்.

இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.

3 hours ago, தமிழ் சிறி said:

தானாடா விட்டாலும், தசை ஆடும் தருணம்.  😂 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kavi arunasalam said:

ஒருவகையில் இந்த மூளைச் சலவை என்பது உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கூட புலிகள், போராட்டம்… போன்றவற்றில் இருந்து இன்னமும் மீளவில்லை.

 

கண்ணாடி முன் நின்று கேட்டுப்பாருங்கள்.

தமிழரை  இன்னும் இன்னும் அழிவுக்கு கொண்டு செல்லும் உங்கள் சிந்தனைக்கு ஒற்றுமை ஒன்றும் தேவையில்லை. சிந்தித்து முன்னேற வழி சொல்லுங்கள்.

 

சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஈழப்பிரியன் said:

இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.

 

ஆமாம் கண்டிப்பாக   இவர் தான் தப்புவதற்கான.  வேஷம் தான்    தேர்தலில் பின்னர்  இவருக்கும். தண்டனை கிடைக்கும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!

இன்னும் கனக்க வரும். எதிர் பாருங்கள். கனக்க நாளைக்கு கொண்டையை மறைக்க முடியாது அல்லவா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றுக்கு நூறு வீதம் எம்மிடத்தில் பிழைகளை வைத்துக்கொண்டு சிங்கள அரசியல் தலைவர்களை திட்டுவதில்/வசைபாடுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Eppothum Thamizhan said:

சிந்தனை சிற்பி, அறிவுஜீவி சொல்லுறார் எல்லோரும் கேட்டு நடவுங்கோ! எம்மினத்தின் சாபக்கேடுகள்!!

 

40 minutes ago, விசுகு said:

இன்னும் கனக்க வரும். எதிர் பாருங்கள். கனக்க நாளைக்கு கொண்டையை மறைக்க முடியாது அல்லவா???

Wall Cat GIFs | Tenor

மதில் மேல்.... பூனைகள். animiertes-gefuehl-smilies-bild-0090

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இன்னும் கனக்க வரும். எதிர் பாருங்கள். கனக்க நாளைக்கு கொண்டையை மறைக்க முடியாது அல்லவா???

ஒருவரின் கருத்திற்கு எதிராக கருத்து எழுத முடியாத ஒருவர் (அவரால் இயலுமான ஒரே விடயமான) நக்கல் செய்கிறார். அதற்கு நீங்கள் வந்து சிரிப்புக் குறி போட்டு ஊக்குவிப்பு வேற.

இந்த லட்சணத்தில் நீங்களெல்லாம் "தேசிய தூண்கள்" என்ற நினைப்பு வேற! இப்பவாவது புரிகிறதா ஏன் தாயகத்தில் "புலம் பெயர் தேசியத் தூண்களை" மக்களும் வாக்காளர்களும் "அந்த" இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று? உங்கள் போன்றவர்கள் தான் காரணம்!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

ஒருவரின் கருத்திற்கு எதிராக கருத்து எழுத முடியாத ஒருவர் (அவரால் இயலுமான ஒரே விடயமான) நக்கல் செய்கிறார். அதற்கு நீங்கள் வந்து சிரிப்புக் குறி போட்டு ஊக்குவிப்பு வேற.

இந்த லட்சணத்தில் நீங்களெல்லாம் "தேசிய தூண்கள்" என்ற நினைப்பு வேற! இப்பவாவது புரிகிறதா ஏன் தாயகத்தில் "புலம் பெயர் தேசியத் தூண்களை" மக்களும் வாக்காளர்களும் "அந்த" இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்று? உங்கள் போன்றவர்கள் தான் காரணம்!

எனக்கு இரண்டரை லட்சம் பேரின் ஆதரவுண்டு. அது நூறால் பெருக்கும் அளவு பலமானது. அவர்களுக்காக நான் தொடர்ந்து தேசியம் பேசுவேன். எழுதுவேன். புலிகளையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் கிண்டல் செய்பவர்களை தட்டி குட்டிக்கேட்பேன். 

உங்களுக்கான மரியாதை என்பது கூட உங்களிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஆனது மட்டுமே. உங்கள் எழுத்துக்கள்  மிக மிக மட்டமானவை. தரங்குறைந்தவை. இதில் இன்னொருவரை நீங்கள் கூடாதவர் என்று பரிந்தூரைப்பது கேலிக்கூத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

Wall Cat GIFs | Tenor

மதில் மேல்.... பூனைகள். animiertes-gefuehl-smilies-bild-0090

இது தான்   மதிலா  ??? 🤣   ஜேர்மனியில் பூனைகள். மதிப்புடனும். 

உரிமையுடனும்.  வாழ்கின்றன 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

இது தான்   மதிலா  ??? 🤣  

நீங்கள்... முட்டையில், மயிர் புடுங்குகின்றீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நீங்கள்... முட்டையில், மயிர் புடுங்குகின்றீர்கள். 😂

ஒம்.    எப்பவாது   சந்தித்தால்   பிடுங்கிய. மயிரை உங்களிடம் தந்து விடுகிறேன்    🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

மதில் மேல்.... பூனைகள். animiertes-gefuehl-smilies-bild-0090

தமிழ்சிறி,

கருத்தாடல்களுக்கு எந்த வடிவத்திலும் பதில் தரலாம். ஆனால் அவை கருத்துக்கான பதில்களாக இருக்க வேண்டும். ஓடி ஓடி எல்லா இடத்திலும்  நீங்கள் பதில் அளிப்பதால் உங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன். நீங்கள் நின்று நிதானமாகப் பதில் தருவதுதான் உங்களுக்கு அழகு.

பாரதிதாசனின் பாடல் ஒன்றின் சில வரிகள்,

பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச்சொல்க

உன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும்

புதியதோர் உலகம் செய்வோம்

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

 

சரி விடயத்துக்கு வருவோம்,

அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள் என்று சொல்லி இருந்தீர்கள்.

நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை.

இப்பொழுது யேர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இனவெறிதான் ஊட்டப்படுகிறது. 2009க்குப் பிறகு தாயகத்தில் இருந்து வந்தவர்கள், அந்தப் பாடப் புத்தகங்களில் தமிழர்களது வரலாறு தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லி புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கி புதுப் புத்தகங்கள் அச்சடித்து தனியாகப் பாடசாலை நடாத்துகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

இன்றைய நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வதுதான் நல்லது. இரண்டாம் வகுப்பில்  தமிழ்ப் பாடப்  புத்தகத்தைப் படிக்கும் போதே, மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம்  இந்த மூன்றுமே பிரதானம் எனத் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகே மற்றவைகள் எல்லாம்.

இன்றுள்ள நிலையில் தாயகத்தில் உள்ளவர்களைக் கேட்டால், உரிமை,தீர்வு, நாடு, எல்லாமே நான் குறிப்பிட்ட அந்த மூன்றுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஒரு வலுவான சமுதாயம் தாயகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறதா?  இல்லையே! இன்னும் அடுத்தவர்களில் தங்கிக் கொண்டு, யாரேனும் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டுதானே அங்கு பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதாயின், ஏராளனின்புலர் தொண்டு நிறுவனம்’.

“யாரையும் எதிர்பார்த்திராது தாங்களே உழைத்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்இதைச் சொன்னது வேறு யாரும் இல்லை. பிரபாகரன்தான். அவர் மேலும் சொன்னார், “ஆயுதம் எங்கள் கையில் திணிக்கப்பட்டதுஎன்று. அவர் எதிர்பார்த்த  அந்தச் சமுதாயமும் இன்று இல்லை. ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது நாட்டில் இல்லை.

வாள் வீச்சுகளும் தேசிய வாய் வீச்சுகளும் போதைப் பொருளின் உச்சங்களும் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து தப்பி வர வேண்டிய தேவையும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோமா? இனப் பிரச்சினையைக் கிண்டிக் கிளறி இனங்களுக்குள் பிரிவுகளை வளர்ப்போமா? எது இப்பொழுது முக்கியம் என்பதைச் சிந்திப்பதுதான் அவசியம்.

நம்பி வந்த மக்களைஅம்போஎனக் கைவிட்டு விட்டு தலைவர்கள் சிலர் மாவீரர்களாகி விட்டார்கள். தப்பிய போராளிகளில் சிலர், வழிகாட்டல் வாழ்வாதாரம் இன்றி அலைந்து திரிந்து வாழ்வு தேடி பொது வாழ்க்கையில் தங்களை மெது மெதுவாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் வசதியும் ஆதரவும்  இருந்ததால்போதுமடா சாமிஎன்று வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கின்றது. ஓடி வந்தவர்களில் இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இலகுவாகக் கிடைத்தது. சாதாரண போராளிகள் நாதியற்றுப் போனார்கள்.

இரண்டு பக்ககமும் போரில் களைத்து விட்டன. பொருளாதாரத்தில் நாடு பாதாளத்தில் விழுந்து விட்டது.  இப்பொழுது அங்கே நீங்கள் குறிப்பிட்டஉரிமை,தீர்வு, நாடுஎன்ற குரல்கள் எல்லாம் இரண்டு தரப்பிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று  நீங்கள் சொன்னால், அதுதேசியம்பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினதும், எழுத்தார்களுடையதும்தான்.

ஆனால் புலத்தில்  அதுவும் குறிப்பாக நான் வாழும் யேர்மனியில், தேசியம் பேசும் வேசதாரிகளை மிக மிக நன்றாகவே நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மேலும் மேலும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்க வேண்டும்.

மக்களைச் சிரமப் படுத்தாதீர்கள். உங்கள் தேசிய சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் யாரிலேனும் தங்காது சுயமாக உழைத்து வாழும் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். அப்படி உருவானால் அந்தச் சமுதாயம் தங்களுக்கு உரிமை,தீர்வு, நாடு தேவையா என்பதைப் பின்னர் தீர்மானித்துக் கொள்ளும்.

இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kavi arunasalam said:

தமிழ்சிறி,

இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.

கவி அருணாசலம்.
மிக்க நன்றி, வணக்கம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எனக்கு இரண்டரை லட்சம் பேரின் ஆதரவுண்டு. அது நூறால் பெருக்கும் அளவு பலமானது. அவர்களுக்காக நான் தொடர்ந்து தேசியம் பேசுவேன். எழுதுவேன். புலிகளையும் தேசியத்தை நேசிப்பவர்களையும் கிண்டல் செய்பவர்களை தட்டி குட்டிக்கேட்பேன். 

உங்களுக்கான மரியாதை என்பது கூட உங்களிடம் உள்ள சான்றிதழ்களுக்கு ஆனது மட்டுமே. உங்கள் எழுத்துக்கள்  மிக மிக மட்டமானவை. தரங்குறைந்தவை. இதில் இன்னொருவரை நீங்கள் கூடாதவர் என்று பரிந்தூரைப்பது கேலிக்கூத்து மட்டுமே.

அரியநேத்திரன் அவர்களுக்குக் கிடைத்தவை இரண்டேகால் இலட்சம் வாக்குகள், இரண்டரை அல்ல, (கணக்கைச் சரி பாருங்கள்!). அந்த வாக்குகள் கூட உங்கள் "மண்டையில் போடும்" தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கு இனியொரு காலமும் கிடைக்காது. இது நவம்பர் மாதம் "சங்கு மார்க்கில்" போட்டி போடும் மண்டையன் குழுவினர் தூக்கியெறியப் பட்டால் (அதை நீங்கள் சதிக்கதைகளைத் தாண்டி நம்பினால்😎!) உங்களுக்கு உறைக்கலாம். அது வரை வாயை விடாதீர்கள்!

நீங்களோ , யாரோ மதிக்க வேண்டுமென்று நானுட்பட யாரும் சான்றிதழ் பெறுவதில்லை. அது பொன்னாடையல்ல யாரும் பணப்பையைக் கண்டதும் வந்து போர்த்தி விட😂! மாறாக உழைப்பினால் வந்தது, யாரும் தரவோ பறிக்கவோ இயலாது.

1 hour ago, Kavi arunasalam said:

தமிழ்சிறி,

கருத்தாடல்களுக்கு எந்த வடிவத்திலும் பதில் தரலாம். ஆனால் அவை கருத்துக்கான பதில்களாக இருக்க வேண்டும். ஓடி ஓடி எல்லா இடத்திலும்  நீங்கள் பதில் அளிப்பதால் உங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன். நீங்கள் நின்று நிதானமாகப் பதில் தருவதுதான் உங்களுக்கு அழகு.

பாரதிதாசனின் பாடல் ஒன்றின் சில வரிகள்,

பொதுமக்கள் நலம் நாடி புதுக் கருத்தைச்சொல்க

உன் கருத்தைச் சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்சவேண்டும்

புதியதோர் உலகம் செய்வோம்

கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

 

சரி விடயத்துக்கு வருவோம்,

அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள் என்று சொல்லி இருந்தீர்கள்.

நாங்கள் ஒன்றும் அவர்களுக்குச் சளைத்தவர்கள் இல்லை.

இப்பொழுது யேர்மனியை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கே புலிகள் என்று சொல்லிக் கொள்பவர்களால் நடாத்தப்படும் தமிழ்ப் பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இனவெறிதான் ஊட்டப்படுகிறது. 2009க்குப் பிறகு தாயகத்தில் இருந்து வந்தவர்கள், அந்தப் பாடப் புத்தகங்களில் தமிழர்களது வரலாறு தவறாகச் சித்தரிக்கப்படுகிறது என்று சொல்லி புதிதாக ஒரு அமைப்பைத் தொடங்கி புதுப் புத்தகங்கள் அச்சடித்து தனியாகப் பாடசாலை நடாத்துகிறார்கள். இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

இன்றைய நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்வதுதான் நல்லது. இரண்டாம் வகுப்பில்  தமிழ்ப் பாடப்  புத்தகத்தைப் படிக்கும் போதே, மனிதனுக்கு உணவு, உடை, உறைவிடம்  இந்த மூன்றுமே பிரதானம் எனத் தெரிந்து கொண்டோம். அதற்குப் பிறகே மற்றவைகள் எல்லாம்.

இன்றுள்ள நிலையில் தாயகத்தில் உள்ளவர்களைக் கேட்டால், உரிமை,தீர்வு, நாடு, எல்லாமே நான் குறிப்பிட்ட அந்த மூன்றுக்கும் அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஒரு வலுவான சமுதாயம் தாயகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறதா?  இல்லையே! இன்னும் அடுத்தவர்களில் தங்கிக் கொண்டு, யாரேனும் ஏதாவது தரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டுதானே அங்கு பலர் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்வதாயின், ஏராளனின்புலர் தொண்டு நிறுவனம்’.

“யாரையும் எதிர்பார்த்திராது தாங்களே உழைத்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும்இதைச் சொன்னது வேறு யாரும் இல்லை. பிரபாகரன்தான். அவர் மேலும் சொன்னார், “ஆயுதம் எங்கள் கையில் திணிக்கப்பட்டதுஎன்று. அவர் எதிர்பார்த்த  அந்தச் சமுதாயமும் இன்று இல்லை. ஆயுதம் தூக்க வேண்டிய அவசியமும் இப்பொழுது நாட்டில் இல்லை.

வாள் வீச்சுகளும் தேசிய வாய் வீச்சுகளும் போதைப் பொருளின் உச்சங்களும் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் இருந்து தப்பி வர வேண்டிய தேவையும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்வோமா? இனப் பிரச்சினையைக் கிண்டிக் கிளறி இனங்களுக்குள் பிரிவுகளை வளர்ப்போமா? எது இப்பொழுது முக்கியம் என்பதைச் சிந்திப்பதுதான் அவசியம்.

நம்பி வந்த மக்களைஅம்போஎனக் கைவிட்டு விட்டு தலைவர்கள் சிலர் மாவீரர்களாகி விட்டார்கள். தப்பிய போராளிகளில் சிலர், வழிகாட்டல் வாழ்வாதாரம் இன்றி அலைந்து திரிந்து வாழ்வு தேடி பொது வாழ்க்கையில் தங்களை மெது மெதுவாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். சிலர் வசதியும் ஆதரவும்  இருந்ததால்போதுமடா சாமிஎன்று வெளிநாடுகளுக்கு ஓடி வந்து விட்டார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விசயம் ஒன்று இருக்கின்றது. ஓடி வந்தவர்களில் இயக்கத்தில் முக்கிய இடத்தில் இருந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு இலகுவாகக் கிடைத்தது. சாதாரண போராளிகள் நாதியற்றுப் போனார்கள்.

இரண்டு பக்ககமும் போரில் களைத்து விட்டன. பொருளாதாரத்தில் நாடு பாதாளத்தில் விழுந்து விட்டது.  இப்பொழுது அங்கே நீங்கள் குறிப்பிட்டஉரிமை,தீர்வு, நாடுஎன்ற குரல்கள் எல்லாம் இரண்டு தரப்பிலும் இல்லை. அப்படி இருக்கிறது என்று  நீங்கள் சொன்னால், அதுதேசியம்பேசி பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளினதும், எழுத்தார்களுடையதும்தான்.

ஆனால் புலத்தில்  அதுவும் குறிப்பாக நான் வாழும் யேர்மனியில், தேசியம் பேசும் வேசதாரிகளை மிக மிக நன்றாகவே நான் அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் மேலும் மேலும் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இடைஞ்சல் தராமல் இருக்க வேண்டும்.

மக்களைச் சிரமப் படுத்தாதீர்கள். உங்கள் தேசிய சிந்தனைகளை அவர்களுக்குள் திணிக்காதீர்கள். உங்களால் முடிந்தால் யாரிலேனும் தங்காது சுயமாக உழைத்து வாழும் ஒரு வலுவான சமுதாயத்தை உருவாக்க உதவுங்கள். அப்படி உருவானால் அந்தச் சமுதாயம் தங்களுக்கு உரிமை,தீர்வு, நாடு தேவையா என்பதைப் பின்னர் தீர்மானித்துக் கொள்ளும்.

இதற்கு மேல் உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள எதுவுமே இல்லை. உங்களுக்காக நேரத்தைச் செலவழிக்கவும் விரும்பவில்லை.

நீங்கள் ஏற்கனவே அளவுக்கதிகமான நேரத்தை இவர்களுடன் செலவழித்து விட்டீர்கள் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2024 at 15:13, ஈழப்பிரியன் said:

இவரும் பல குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளார்.இவரின் மனைவி பாஸ்போட் மோசடியில் சிக்கியுள்ளார்.அதிலிருந்து தப்புவதற்கான வேடமாக இருக்கலாம்.

இதுதான் சிறிலங்காவின் சிங்கள மற்றும் சிங்களத்தமிழ் அரசியல்வாதிகளின் மனோநிலை. தமக்கொரு ஆபத்தெனில் மக்களையே அடகுவைக்கப் பின்னிற்கார். இதில் மக்களாவது  ராவது என்பதே வழமை. இதையும் மாற்றமாக எடுக்கலாமோ தெரியாது. இப்போது கருத்தெழுதவே பயமாக இருக்கிறது. சிறீமான் சிறிலங்காத் தேசியரின் மாற்றத்தை கேள்விக்குட்படுத்தலாமோ என்று வரலாம் அல்லவா? 

நட்பார்ந்த நன்றியுடன் 
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.