Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? 51 members have voted

  1. 1. திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?

    • ஆம்
      24
    • இல்லை
      25

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

100 வீதம்   
சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பிய பொன்னாள் இன்று. 🎇 🎆 🌠 👍🏽
பாராளுமன்றம்  போக வேண்டும் கடைசி மட்டும்… தகிடு தத்தம் பண்ணிக் கொண்டு இருந்தவரின்  கனவில் பாறங்க்கல்லை தூக்கி போட்டு விட்டார்கள்.
இந்த அவமானத்துடன் போவதை விட… தேர்தலில் தோற்ற செய்தி வந்தவுடன் போயிருந்தால் கொஞ்ச மரியாதையையாவது காப்பாற்றப் பட்டிருக்கும். 
விதி… வலியது. கடைசி வரை ஆசையை காட்டி அவமானப் படுத்தி அனுப்பும்.

விதி வலியதுதான். ஆனால் காலம் மிகக் கொடுமையானது.  கடந்த காலத்  தவறுகளில் இருந்து பாடம் கற்காவிட்டால் காலம் இன்னும்  மகா கொடுமையானது. 

சும்மை அரசியலில் இருந்து அகற்றினால் மட்டும்தான் உங்கள் கற்பிதம் முழுமையடையும். 

Edited by Kapithan

  • Replies 249
  • Views 14.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commite

  • உங்களிடம் இல்லாததை மற்றவரிடம் தேடும் பழக்கம்… உங்களின் கோவணம் தமிழ் மக்களால் புடுங்கி கிழித்தெறியப்பட்டுள்ளது🤣

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்ன பொலம்பல் ஜாஸ்தியா இருக்கு. ரிலாஸ் லா!!  என்சாய் தி எலக்சன் அவுட்டு கம்மு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

விதி வலியதுதான். ஆனால் காலம் மிகக் கொடுமையானது.  கடந்த காலத்  தவறுகளில் இருந்து பாடம் கற்காவிட்டால் காலம் இன்னும்  மகா கொடுமையானது. 

அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஏற்றுக் கொள்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

Sumanthiran is living rent-free in your mind 🤣

👍👍👍👍👍  சிரிப்பை அடக்க முடியவில்லை. Fitting room போகாமலே இங்கு  பலருக்கு கச்சிதமாக பொருந்தும்  ஆடையை தயாரித்த Designer போல  இந்த வசனத்தை உருவாக்கிய உங்களுக்கு வாழ்ததுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வாலி said:

இனி புலம்பெயர் பட்டாசு கோஸ்டி பாடும் கொஞ்சம் கஸ்டம்தான்!😂

அட்டமத்து சனி லேசிலை போகாது சத்தியலிங்கம் தேசிய பட்டியலில் போகிறார் என்று அறிக்கை விட்டது சுத்து மாத்துதான் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை அக்கட்சியின் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்சிக்குள் இவருக்கென்ன வேலை?

  • கருத்துக்கள உறவுகள்

 

நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், யாழ். மாநகர சபை முன்னாள் மேஜருமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு பண்பு உலகம் முழுவதும் இருக்கிறது. அவர்கள் சட்டங்களை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி ஆட்சியில் நீண்ட நாட்களுக்கு அகற்றப்பட முடியாதவர்களாக இருக்கும் பல வருடங்களாக இருக்கிறது.

வரலாற்று வெற்றியை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி தனக்கு ஏற்றது போல் சட்டங்களை மாற்றும், அரசியலமைப்பை மாற்றும், நாங்கள் வடக்கையும் கிழக்கையும் பறிக்கொடுத்து விட்டு எங்கள் மீது திணிக்கப்படும் திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நபராக மாறிவிடப்போகிறோம்.

நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் விரைவில் நடக்கவுள்ள மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தலையும் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என தெரிவித்தார்.


 

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196031

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் ப. சத்தியலிங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ளதாக சுமந்திரனால் வெளியிடப்பட்ட கருத்து பலர் தரப்பிலும் பேசுபொருளாகியுள்ளது. 

இந்நிலையில், "முன்னதாக கடந்த தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவாகாத யாரும் இந்த தேர்தலில் போட்டியிட கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமின்றி, இத்தேர்தலில் சிறீதரன் போட்டியிட கூடாது என்றும் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார். 

இவ்வாறிருக்கையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டு மக்கள் தெரிவில் தோல்வியடைந்துள்ள ப. சத்தியலிங்கத்தை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் மூலம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளமைக்கு சுமந்திரனே பதில் கூறியாக வேண்டும்” என கனேடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/udaruppu-today-lankasri-1731848186

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, island said:

👍👍👍👍👍  சிரிப்பை அடக்க முடியவில்லை. Fitting room போகாமலே இங்கு  பலருக்கு கச்சிதமாக பொருந்தும்  ஆடையை தயாரித்த Designer போல  இந்த வசனத்தை உருவாக்கிய உங்களுக்கு வாழ்ததுக்கள். 

நன்றி இது ஒரு பிரபலமான ஆங்கில சொலவடைத்தான். நான் சுமனின் பெயரை மட்டும் சொருகினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சத்தியலிங்கத்தின் இறுதிக் கையொப்பம் : காத்திருக்கும் அதிர்ச்சி

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

நாங்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் விரைவில் நடக்கவுள்ள மாகாண சபை தேர்தல், உள்ளுராட்சி தேர்தலையும் தமிழர் தரப்பு நிச்சயமாக இழக்கும் என தெரிவித்தார்

தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ.

மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ.

60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ.

மக்கள் மீள வருவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

👆  மேலே  உள்ள இரு தலைப்புகளும்... இந்தத் திரியுடன் சம்பந்தப் பட்டுள்ளதால், இங்கு  இணைத்துள்ளேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பகிடி said:

கேட்க நல்லா இருக்கும் ஆனால் மதம் சாதி பிரதேச பற்றை விட்டுட்டு எப்படி தனியே இன மொழி பற்றினை மட்டும் வலுப்படுத்த முடியம்?

ஆயிரம் கரும்புகளை ஒன்றாக சேர்த்து ஒரே கட்டாகக் கட்டினால் ஒரே வெட்டில் எல்லாம் அவிழ்த்து விழுந்து விடும். பத்துப்பத்துக் கட்டுக்களாக கட்டி எல்லாவற்றையும் சேர்த்து பிறகு ஒரு முழுக் கட்டாகக் கட்டினால்த் தான் பாதுக்காப்பாக இருக்கும்.

 

பொது வெளியில் காண்பிக்கப்படுவது தவிர்க்கப்படலாம். ஆனால் உள்ளுக்குள் நடப்பவை பற்றி ஒவ்வொருவருக்கும் தெரியும் தானே. 🤷‍♂️

20 hours ago, MEERA said:

உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். 

சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம்.

சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….

 

நீங்கள் யாரின் அல்லக்கை என்பதையும் கூறலாமே.

செல்வம்/சார்ள்ஸ் சுமந்திரனின் இடத்தில் நின்றார்களா? தமிழரசு கட்சியில் பெரிய குடும்பி யார் என்பதற்குத்தானே இவ்வளவு புடுங்குப்பாடுகள்?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

1948 இல் இருந்து இதுவரை வந்த அத்தனை ஜனாதிபதிகளிலும், திம்பு அடிப்படையான உரிமை கோரலுக்கு மிகவும் ஆபத்தானவர் அனுர.

சிங்களவாகளுடன் ஒருபோதுமே சேர்ந்து வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் இப்போது குத்து கரணம் அடித்து அனுரகுமார திசநாயக்கவுக்காக பிரசாரம் செய்து  ஜேவிபியின் பஸ்சில் ஏத்தி அனுப்பி புதைக்கும் அரசியல்  முயற்ச்சிகளை இந்த திரியில் அழகாக விளங்கபடுத்தியுள்ளீர்கள்றீர்கள்👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, island said:

ஏன்? லண்டனில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதா?

ஆனால் இந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பாக அநுர ஆட்சியில் விடுமுறையில் நாடு சென்று விடுமுறையை அனுபவித்து திரும்ப முடியும். அங்கு வாலாட்டினால் மட்டுமே அவர்களது வாலை அநுர ஒட்ட நறுக்குவார். 😂 அந்த வாலுகளுக்கும் அது தெரியும். அங்கு சென்றால் கம்மென்று இருந்துவிட்டு  இங்கு திரும்பியதும் வடிவேல் பாணியில்  துள்ளுவர். 

அவர்கள் சிறிசேன கோத்தபாய ரணில் காலங்களிலும்  அங்கே சென்று அனுபவித்துவிட்டு இங்கே வந்ததும் வீர முழங்கங்கள் செய்தவர்கள் இப்போது அனுரகுமார திசநாயக்க புகழ் பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தமிழருக்கு மிக மோசமான தீர்வு என நீங்கள் கூறும் ஏக்கிய ராஜ்ஜிய தீர்வை கூட தருவதாக சொல்லாத அனுரவுக்கு

  அவர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. தருவோம் என்று சொன்னவர்கள் தரவில்லை. இவர் எல்லாமக்களும் சமமாக வாழும் தீர்வை வரைந்து நடைமுறைப்படுத்துவோம் என்கின்றனர்.

11 hours ago, goshan_che said:

அந்த அணியின் தலைவரில்  குறைகள் இருந்தாலும், மயூரன் போன்ற தேசிய வழி நின்ற நல்ல மாற்றுக்கள் இருந்தன.

அவர் ஜனாதிபதியில்லை. மூன்றில் இரண்டிலும் அதிகமான ஆசனத்தைப்பெற்றவர் அனுரா. அத்தனை கை ஓசையில் மயூரனின் ஒரு கை ஓசை தனித்து  ஒலிக்க வாய்ப்பேயில்லை.

11 hours ago, goshan_che said:

சுமந்திரன் கள்ளன், சுமந்திரன் கள்ளன் என கூவியவாறு எல்லோரையும் கொண்டு போய் அனுரவின் பஸ்சில் ஏற்றி விடும் வேலையள் கேள்விக்குள்ளாகும்.

சுமந்திரன் கள்ளன் என்று நான் சொல்லவில்லை, சொன்னவர்களை கேளுங்கள். இப்போ புரியுது உங்கள் கொதி என்னவென்று. நான் யாரையும் அனுரா பஸ்ஸில் ஏற்றவில்லை. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அனுராவுக்கு யாழ்ப்பாணத்தில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் வெல்லவுமில்லை. கடைசி நேரத்தில் தமிழ் கொம்புகள் ஆடிய விசர் ஆட்டத்தாலேயே மக்கள் அனுரா கட்சிக்கு வாக்களித்தனர். அவர் செய்வார் என்று எதிர்பார்த்து போட்டார்களா இல்லையா என்பதும் அவர்களைத்தான் கேட்கவேண்டும். அவர் ஜனாதிபதியாகிவிட்டார், அதை யாராலும் மாற்ற முடியாது, அவர் நல்லது செய்வேன் என்கிறார் நம்புவதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்யாவிட்டால் அது அவருக்கு வாக்கு போட்ட மக்களின் பிரச்சனை. அதில் தலையிடவும் திட்டவும் எனக்கு அதிகாரமில்லை. எனக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அதை யார்மீதும் நான் திணிக்கவில்லை. எனது கருத்தை எழுத எனக்கு உரிமை உண்டு. ஏதோ நான்தான் அனுராவை வெல்ல வைத்ததுபோல் கற்பனை பண்ணி விளாசுகிறீர்கள்.

 

11 hours ago, goshan_che said:

அனுர எதுவும் செய்ய முன்பே அவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், ஒரே ஒரு மாவட்டத்திக் 25% மக்களின் வாக்கை மட்டும் கொண்டு தமிழ் தேசியத்துக்கு மரண சாசனம் எழுத விழைவதும் நீங்கள்தான்.

தமிழ்தேசியத்துக்கு மரண சாசனம் எழுதியது நானல்ல, மக்கள் வற்புறுத்தப்பட்டனர். தமிழ்த்தேசியத்தை வைத்து தாம் ஏமாற்றப்படுவதை சகிக்க முடியாமல், அதை வைத்து பிழைப்பவர்களை நிராகரித்தனர்.               

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, satan said:

அவர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. தருவோம் என்று சொன்னவர்கள் தரவில்லை. இவர் எல்லாமக்களும் சமமாக வாழும் தீர்வை வரைந்து நடைமுறைப்படுத்துவோம் என்கின்றனர்.

அந்த ஏக்கிய ராஜ்ஜிய குழுவில் அனுரவும் இருந்தார். 

11 minutes ago, satan said:

அவர் ஜனாதிபதியில்லை. மூன்றில் இரண்டிலும் அதிகமான ஆசனத்தைப்பெற்றவர் அனுரா. அத்தனை கை ஓசையில் மயூரனின் ஒரு கை ஓசை தனித்து  ஒலிக்க வாய்ப்பேயில்லை.

அப்போ மகிந்த, கோட்டா ஜனாதிபதியாக இருந்த போதே அவர்கள் கட்சிக்கு போட்டிருக்க்லாமே.

என்ன உருட்டு ஐயா இது.

ஒரு ஊழல் இல்லாத புதிய, வினைதிறன்னுள்ள தேசிய வழி நிற்கும் தமிழனை காட்டி அவருக்கு போட்டிருக்கலாமே என சொன்னால் - அவர் ஜனாதிபதி இல்லை என்கிறீர்கள்🤣.  

அப்போ செல்வநாயகம், அமிர்தலிங்கள், தலைவர் (அவர் கைகாட்டிய ததேகூ) இவர்கள் கடைக்கு எல்லாம் போட்டீர்களே அதன் தலைவர்கள் ஜனாதிபதிகளாகவா இருந்தானர்?

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அந்த ஏக்கிய ராஜ்ஜிய குழுவில் அனுரவும் இருந்தார். 

அது நானறியவில்லை. தான்தான் வரைந்தேன் என்று உரிமை கொண்டாடுபவர், தானும் வேறு ஒரு சிங்களவரின் பெயரையே சொன்னார். அனுராவை குறிப்பிடவில்லை, தான் இல்லாவிட்டாலும் கஜேந்திரன் பொன்னம்பலம் கையாள்வார், தன்னோடு கூட இருந்த அந்த நபரும் இருக்கிறார் என்றே குறிப்பிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, satan said:

சுமந்திரன் கள்ளன் என்று நான் சொல்லவில்லை, சொன்னவர்களை கேளுங்கள். இப்போ புரியுது உங்கள் கொதி என்னவென்று. நான் யாரையும் அனுரா பஸ்ஸில் ஏற்றவில்லை. நீங்களே சொல்லியிருக்கிறீர்கள் அனுராவுக்கு யாழ்ப்பாணத்தில் அதிக வாக்குகள் கிடைக்கவில்லை. அதனால் அவர் வெல்லவுமில்லை. கடைசி நேரத்தில் தமிழ் கொம்புகள் ஆடிய விசர் ஆட்டத்தாலேயே மக்கள் அனுரா கட்சிக்கு வாக்களித்தனர். அவர் செய்வார் என்று எதிர்பார்த்து போட்டார்களா இல்லையா என்பதும் அவர்களைத்தான் கேட்கவேண்டும். அவர் ஜனாதிபதியாகிவிட்டார், அதை யாராலும் மாற்ற முடியாது, அவர் நல்லது செய்வேன் என்கிறார் நம்புவதை தவிர வேறு வழியில்லை. அப்படி செய்யாவிட்டால் அது அவருக்கு வாக்கு போட்ட மக்களின் பிரச்சனை. அதில் தலையிடவும் திட்டவும் எனக்கு அதிகாரமில்லை. எனக்கு அவர்மேல் நல்ல அபிப்பிராயம், எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அதை யார்மீதும் நான் திணிக்கவில்லை. எனது கருத்தை எழுத எனக்கு உரிமை உண்டு. ஏதோ நான்தான் அனுராவை வெல்ல வைத்ததுபோல் கற்பனை பண்ணி விளாசுகிறீர்கள்.

இல்லை ஆனால் நீங்கள் ஆடுவது போல் அனுர காவடி யாழில் வேறு எவரும் ஆடுவதில்லை.

ஆகவேதான் விளாசல்.

அது சரி @satan @கிருபன்@ஏராளன்

யாழ் என் பி பி எம்பிகள் போய் புத்த பிக்கு காலில் விழுந்து புரளும் வீடியோ ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன்.

இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா?

2 minutes ago, satan said:

அது நானறியவில்லை. தான்தான் வரைந்தேன் என்று உரிமை கொண்டாடுபவர், தானும் வேறு ஒரு சிங்களவரின் பெயரையே சொன்னார். அனுராவை குறிப்பிடவில்லை, தான் இல்லாவிட்டாலும் கஜேந்திரன் பொன்னம்பலம் கையாள்வார், தன்னோடு கூட இருந்த அந்த நபரும் இருக்கிறார் என்றே குறிப்பிட்டார்.

சும் + ஜயம்பதி வரைந்த்தார்கள்.
ஆனால் மைத்திரியை பதவிக்கு கொண்டு வந்த ரணில், அனுர, மைத்திரி, ஆகியோர் இதில் ஈடுபட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அது எனது தனிப்பட்ட விருப்பம். அதை தடுக்கவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமையில்லை. இது எனது கருத்து சுதந்திரம்.  அவரது வெற்றியை என்னால் மாற்ற முடியாது எனவே ஏற்றுக்கொள்கிறேன். ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் என்னை திட்டுவதால் பயனில்லை, அவரது வெற்றியை மாற்றிக்காட்டுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்.         

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அது சரி @satan @கிருபன்@ஏராளன்

ஒன்றை வாட்சப்பில் பார்த்தேன்.

இதன் இணைப்பு இருந்தால் இணைக்க முடியுமா?

அண்ணை, தேடிப்பார்க்கிறேன், ரிக்ரொக்கில வந்த காணொளி பழுவேட்டரையர் என்பவரின் குரலில் கேட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அண்ணை, தேடிப்பார்க்கிறேன், ரிக்ரொக்கில வந்த காணொளி பழுவேட்டரையர் என்பவரின் குரலில் கேட்டது. 

அவர்கள் நான்கு மதத்தலைவர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றிருந்தனர். முகநூலில் படம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

அண்ணை, தேடிப்பார்க்கிறேன், ரிக்ரொக்கில வந்த காணொளி பழுவேட்டரையர் என்பவரின் குரலில் கேட்டது. 

தமிழர் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக புளுகு மூட்டையை  அவிழ்த்து விடுவது இந்த புளுகு வேட்டையர் என்ற ஜடி தான். 

  • கருத்துக்கள உறவுகள்

467421815_974729741358665_30554957242405

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். 
பின்னர் மரத்திலிந்து இறங்கி, அதனைச் சுமந்து கொண்டு செல்கையில் அதன் உள்ளிருந்த
வேதாளம் எள்ளி நகைத்து.... 
 “மன்னா.... இரவு, பகல் பாராமல்... இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? என்று கேட்டது. 😂
- அம்புலிமாமா - 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2024 at 10:23, island said:

தமிழர் சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக புளுகு மூட்டையை  அவிழ்த்து விடுவது இந்த புளுகு வேட்டையர் என்ற ஜடி தான். 

புளு வேட்டையர் ஒரு பக்கா பொய்யர்தான்.

ஆனால் செய்தி உண்மை. 

யாழில் பதிவை இணைத்துள்ளேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text

கௌசல்யாவிடம்... சுமந்திரன்,  படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.  

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.