Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு

இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது.

அத்துடன் புதிய அரசாங்க நிர்வாகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் தமது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றிவிட்டு, ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தியின் முன் இருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமது கடிதத்தில் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி | Ceylon Tamil Congress Congratulate Anura

 

தேர்தல் அறிக்கையின்படி, நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்போது, அனைவருக்கும் நீதி, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக எஞ்சியுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய நீண்டகால அநீதிகளை வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தியின், தமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அந்த சட்டத்தை ரத்து செய்வதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

 

இராணுவ ஈடுபாடு

தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன் சட்டவிரோத காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும், நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் சமூகத்தின் கலாசார மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க, தமிழ் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பௌத்த கோயில்கள் கட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கனேடிய காங்கிரஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி | Ceylon Tamil Congress Congratulate Anura

புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படும் வரை, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அந்த காங்கிரஸ் கோடிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சீரமைக்க வேண்டும்.

அத்துடன், உள்ளூர் வர்த்தகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாக விவசாயம் மற்றும் விருந்தோம்பல் போன்ற வர்த்தக முயற்சிகளில் இராணுவ ஈடுபாட்டை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. 

https://tamilwin.com/article/ceylon-tamil-congress-congratulate-anura-1731803743

 

தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க.

 @Kapithan னை உடனடியாக மேடைக்கு அழைக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டையெறி கோஸ்ரிகள் ஆயத்தமாகுக,....🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

முட்டையெறி கோஸ்ரிகள் ஆயத்தமாகுக,....🤣

இதுக்கு முட்டை சரிவராது

சக்கை சக்கை சக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

இதுக்கு முட்டை சரிவராது

சக்கை சக்கை சக்கை.

Air Lanka Ticket  ஐ ஏற்கனவே போட்டுவிட்டார்கள். இப்போது புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனை யார் முதலில் அனுரவின் மூச்சா குடிப்பது என்பதுவே,..🤣

இப்போது புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் நிலை ""தொண்டையில் சிக்கிய முள்""

😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

Air Lanka Ticket  ஐ ஏற்கனவே போட்டுவிட்டார்கள். இப்போது புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனை யார் முதலில் அனுரவின் மூச்சா குடிப்பது என்பதுவே,..🤣

இப்போது புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் நிலை ""தொண்டையில் சிக்கிய முள்""

😁

இவர்களின் கையாள் ஒராள் இங்கு தான். (வட கரோலினா)இருக்கிறார்.

மாவீரர் தினத்துக்கு வந்தால் விசாரித்துப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான்.

கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது.

அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

Air Lanka Ticket  ஐ ஏற்கனவே போட்டுவிட்டார்கள். இப்போது புலம்பெயர்ஸ் டமில் தேசிய வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனை யார் முதலில் அனுரவின் மூச்சா குடிப்பது என்பதுவே,..🤣

இப்போது புலம்பெயர்ஸ் வியாபாரிகளின் நிலை ""தொண்டையில் சிக்கிய முள்""

😁

அவரின் சூ ... நக்கும் உமக்கு அவர்கள் போட்டியாக வந்த எரிச்சல் போலும். உங்கள் நிலைமை புரிந்து கொள்ள கூடியதே. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மகிந்தவை

அரசியல் வருகைக்கு முன்னர் மகிந்த ஜேவிபிக்காக பைல்களுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏறி இறங்கியவராமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவரின் சூ ... நக்கும் உமக்கு அவர்கள் போட்டியாக வந்த எரிச்சல் போலும். உங்கள் நிலைமை புரிந்து கொள்ள கூடியதே. 

"முள் தொண்டையில் சிக்கிக்கொண்டதோ? " 🤣
 

வியாபாரிகள் என்றவுடன் தாங்கள் தொப்பியைத் தூக்கி தலையில் போட்டுக்கொண்டால் அதற்கு யாம் பொறுப்பேற்கப்போவதில்லை. 

குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தங்களை வியாபாரக் காந்தங்களாக கற்பனை செய்துகொண்டால் அதற்கு யாம் என்ன செய்யும்? 

😏

(குறிப்பு; ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வியாபாரிகள் என்று கூறும்போது உங்களை குறிப்பிட்டு எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதையும் மீறி தாங்கள் உங்களை நோக்கித்தான் எழுதுகிறேன் என்று கருதிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்கப்போவதில்லை ) 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ஈழப்பிரியன் said:

அரசியல் வருகைக்கு முன்னர் மகிந்த ஜேவிபிக்காக பைல்களுடன் ஐக்கிய நாடுகள் சபை ஏறி இறங்கியவராமே?

அரசியலில் இருக்கும் போதுதான். பிரேமதாசா காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் சம்பந்தமாக அன்னையர் முண்ணனி, தொழில் சங்கங்களுடன் சேர்ந்து மகிந்த போராடினார், ஐநா வரைக்கும் போனார்.

ஆனால் அப்போதும் அவர் சு.க எம்பிதான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அரசியலில் இருக்கும் போதுதான். பிரேமதாசா காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள இளைஞர்கள் சம்பந்தமாக அன்னையர் முண்ணனி, தொழில் சங்கங்களுடன் சேர்ந்து மகிந்த போராடினார், ஐநா வரைக்கும் போனார்.

ஆனால் அப்போதும் அவர் சு.க எம்பிதான்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2024 at 20:57, ஈழப்பிரியன் said:

இதுக்கு முட்டை சரிவராது

சக்கை சக்கை சக்கை.

தங்களுக்குத் தாங்களே எறிந்து கொள்ளட்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

"முள் தொண்டையில் சிக்கிக்கொண்டதோ? " 🤣
 

வியாபாரிகள் என்றவுடன் தாங்கள் தொப்பியைத் தூக்கி தலையில் போட்டுக்கொண்டால் அதற்கு யாம் பொறுப்பேற்கப்போவதில்லை. 

குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தங்களை வியாபாரக் காந்தங்களாக கற்பனை செய்துகொண்டால் அதற்கு யாம் என்ன செய்யும்? 

😏

(குறிப்பு; ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வியாபாரிகள் என்று கூறும்போது உங்களை குறிப்பிட்டு எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன். அதையும் மீறி தாங்கள் உங்களை நோக்கித்தான் எழுதுகிறேன் என்று கருதிக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பேற்கப்போவதில்லை) 

பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதிகளை கடக்கெடுப்பதில்லை. அதை கையில் எடுப்பவனை செருப்பால் அடிக்க பின்னடிப்பதுமில்லை. 

இங்கே நான் எதிர்ப்பது அனைத்து புலம்பெயர் செயற்பாட்டாளர்களையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளப் பட்டம் கட்டி புலத்தையும் தாயகத்தையும் பிரித்தாளும் உங்கள் கள்ள நோக்கத்தை மட்டுமே. இந்த சூழ்ச்சி சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின் கடைசி அத்தியாயம். அதன் வெற்றியில் உங்கள் போன்றோரின் பங்களிப்பு மிகவும் ஆபத்தானது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதிகளை கடக்கெடுப்பதில்லை. அதை கையில் எடுப்பவனை செருப்பால் அடிக்க பின்னடிப்பதுமில்லை. 

இங்கே நான் எதிர்ப்பது அனைத்து புலம்பெயர் செயற்பாட்டாளர்களையும் ஒரே சாக்கில் போட்டு கள்ளப் பட்டம் கட்டி புலத்தையும் தாயகத்தையும் பிரித்தாளும் உங்கள் கள்ள நோக்கத்தை மட்டுமே. இந்த சூழ்ச்சி சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலின் கடைசி அத்தியாயம். அதன் வெற்றியில் உங்கள் போன்றோரின் பங்களிப்பு மிகவும் ஆபத்தானது. 

உங்களுக்கு என்னால் ஒன்றைத்தான் சொல்ல முடியும்  விசுகர்,.. தயவுசெய்து  பள்ளிக்கூடம் போங்கோ. 

அதற்குப் பின்னராவது பிறர்  எழுதுவதில் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா என்று  பார்ப்போம். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

உங்களுக்கு என்னால் ஒன்றைத்தான் சொல்ல முடியும்  விசுகர்,.. தயவுசெய்து  பள்ளிக்கூடம் போங்கோ. 

அதற்குப் பின்னராவது பிறர்  எழுதுவதில் ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா என்று  பார்ப்போம். 

😏

ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன். பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதி பற்றி எழுதினால் செருப்பால் மட்டுமே பேசுவேன் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

ஏற்கனவே மேலே எழுதியுள்ளேன். பணம் கல்வி மற்றும் தொழில் சார்ந்த சாதி பற்றி எழுதினால் செருப்பால் மட்டுமே பேசுவேன் என்று. 

தாங்கள் பாடசாலை செல்ல வேண்டும் என்பதன் அவசியத்தை உங்கள் எழுத்து  (மொழி) மீண்டும் ஒருமுறை  நிறுவுகிறது. 

😏

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kapithan said:

தாங்கள் பாடசாலை செல்ல வேண்டும் என்பதன் அவசியத்தை உங்கள் எழுத்து  (மொழி) மீண்டும் ஒருமுறை  நிறுவுகிறது. 

😏

நான் அதையே பரிந்துரை செய்யமாட்டேன். ஏனெனில் மற்றவரை பள்ளி செல் என்பவர் அதிகம் படித்திருக்க வேண்டும்.  அவருக்கே ஓர் விடயத்தை பலமுறை சொன்னாலும் ஏறுதில்லை. அப்படியானால் உங்கள் பாடசாலை அறிவுப் படி அவரை வைத்தியம் செய்ய மட்டுமே பரிந்துரைக்க முடியும். 

எனவே தயவு செய்து வைத்தியசாலை போங்க..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

நான் அதையே பரிந்துரை செய்யமாட்டேன். ஏனெனில் மற்றவரை பள்ளி செல் என்பவர் அதிகம் படித்திருக்க வேண்டும்.  அவருக்கே ஓர் விடயத்தை பலமுறை சொன்னாலும் ஏறுதில்லை. அப்படியானால் உங்கள் பாடசாலை அறிவுப் படி அவரை வைத்தியம் செய்ய மட்டுமே பரிந்துரைக்க முடியும். 

எனவே தயவு செய்து வைத்தியசாலை போங்க..

 நன்றி புரோ,  தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு.  😁,..

பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா?  அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை.  Rejected. 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

எனவே தயவு செய்து வைத்தியசாலை போங்க..

அய்யா ...இதிலை எழுத்துபிழை ஒன்றுமே இல்லையா...🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

1 hour ago, விசுகு said:

நான் அதையே பரிந்துரை செய்யமாட்டேன். ஏனெனில் மற்றவரை பள்ளி செல் என்பவர் அதிகம் படித்திருக்க வேண்டும்.  அவருக்கே ஓர் விடயத்தை பலமுறை சொன்னாலும் ஏறுதில்லை. அப்படியானால் உங்கள் பாடசாலை அறிவுப் படி அவரை வைத்தியம் செய்ய மட்டுமே பரிந்துரைக்க முடியும். 

எனவே தயவு செய்து வைத்தியசாலை போங்க..

Expand  

 நன்றி புரோ,  தாங்கள் பாடசாலைப் பக்கமே ஒதுங்காதவர் என்பதை ஏற்றுக்கொண்டதற்கு.  😁,..

பிறருக்கு பரிந்துரை செய்வதற்கு என்று ஒரு தராதரம் வேண்டுமல்லவா?  அந்தத் தரம் உங்களுக்கு இல்லை என்று உங்கள் எழுத்தின் மூலம் தெரிகிறது. அதனால் உங்கள் பரிந்துரை ஏற்கப்படவில்லை.  Rejected. 

🤣

 

நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

நாங்க 5ம் வகுப்புவரை விளையாடியதை இருவரும் நினைவு படுத்துகிறீர்கள்.

நான்  5ம் வகுப்பு பாஸ் சிச்சுவேசன் கொமடி,...... 🤣

இடையில் தலையை நுழைத்த ஈழப்பிரியனுக்கு இதனால் வரப்போகும் பாதிப்பிற்கு நான் பொறுப்பல்ல,.....🤣

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

அறிவாளிக்கு Air Lanka Ticket  எல்லாம் 2024இலும் கிடைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றாக பொங்கல் பொங்க வாருங்கள். ஒன்றாக கயிரிழுகும் போட்டிக்கும் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன - விமல்வீரவன்ச

image
 

கனேடிய தமிழ் காங்கிரஸ் போன்ற அமைப்புகள் இனவாத மத பிரிவினைவாத கோரிக்கைகளை முன்வைக்கின்றன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வடக்கில் தேசியமக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகள் இனவாதத்திற்கு எதிரானவை மாத்திரமல்ல பிரிவினைவாதத்திற்கும் எதிரானவை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத ஆதரவு தமிழ்தேசியகூட்டமைப்பு போன்றவற்றை தெரிவுசெய்வதற்கு பதில் தமிழ் மக்கள் ஜேவிபியை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்துள்ளனர் இதன் மூலம் பிரிவினைவாதம் இனவாதத்தை நிராகரித்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே கனடா தமிழ் அமைப்புகளின் விருப்பத்திற்கு  ஏற்ப செயற்படுவதற்கு பதில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களின் அபிலாசைகளை சமமாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் ஆணை என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளாhர்.

https://www.virakesari.lk/article/199128

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.