Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது.

இரண்டு ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.இரண்டு ஆயுதப்போராட்டங்களும் நியாயபூர்வமானவை.

மக்கள் ஏன் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன.

அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம், ஆனால் இந்தநியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவுகூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை.

நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை.

உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது.

அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட  நீங்கள் எப்படி நினைவுகூரல்களை முன்னெடுக்க  முடியும் என தெரிவிக்கும் சுற்றுநிரூபத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது அது முற்றாக நியாயமற்ற விடயம்.

இந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பொலிஸார் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரே மாதிரியானவை - இரு தரப்பினரும் நியாயபூர்வமாக கோரிக்கைக்காக போராடினார்கள் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு கூரலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுருகிறது தானே. முன்பு மகிந்த கோட்டபாய காலத்தில் இதை கேட்கும. துணிச்சல் கஜேந்திரகுமாருக்கு இருக்கவில்லை. 

நினைவு கூரலுக்கு அனுமதி அளித்த அரசாங்கம்  புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் தன் இலட்சனைகளை பாவிப்பது சட்ட மீறல் என்பதையே குறிப்பிட்டனர்.  ஜேவிபி யை போல புலிகளுக்கும் இரு முறை தடை நீக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சியே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டது.  அது புலிகளாலேயே கலைக்கப்பட்டு விட்டது. அதன் தலைவரும் கொல்லப்பட்டு விட்டார். 

கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான  அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். 

அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த  போராளிகளுக்கு ஜேவிபி போல  தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். 

செய்வாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, island said:

 

கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான  அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். 

அவர்கள் படிப்படியாக தமது அரசியல் முதிர்சசி மூலம் கட்சியை கட்டியெழுப்பி ஒரு காலத்தில் தமது மடிந்த  போராளிகளுக்கு ஜேவிபி போல  தமது அடையாளங்களுடன் நினைவு வணக்கம் செய்யும் நிலையை உருவாக்க முடியும். 

செய்வாரா? 

முன்னாள் போராளிகள் கடந்த தேர்தலில் ஏனைய கட்சிகளின் தயவில் நாலாம் ஐந்தாம் நிலையில் நிற்கவைக்கப்பட்டார்கள் இந்த நிலை மாறி ...நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு தனிக்டசியை உருவாக்கி  ஆளுமையுள்ள தரப்பாக மாற்ற வேண்டும் அடுத்த தேர்தலில் இதை செய்வார்களா?

முன்னாள் பெண்போராளி பட்டதாரி ...கடந்த தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்

 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, putthan said:

முன்னாள் போராளிகள் கடந்த தேர்தலில் ஏனைய கட்சிகளின் தயவில் நாலாம் ஐந்தாம் நிலையில் நிற்கவைக்கப்பட்டார்கள் இந்த நிலை மாறி ...நீங்கள் கூறுவது போல அவர்களுக்கு தனிக்டசியை உருவாக்கி  ஆளுமையுள்ள தரப்பாக மாற்ற வேண்டும் அடுத்த தேர்தலில் இதை செய்வார்களா?

முன்னாள் பெண்போராளி பட்டதாரி ...கடந்த தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்டவர்

 

அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, island said:

அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா? 

உண்மை.. அதை முன் நின்று செய்ய வேண்டும் இவர்...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும்  நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை. வித்தியாசங்கள் இருக்க முடியாது.

அப்படி நாங்கள் நினைக்கிறோம், ஆனால் சிங்களவர்கள் நினைப்பதில்லை.

ஜேவிபி, புலிகள் அழிப்பில் முன்னணியில் நின்ற பிரேமதாச ,ரஞ்சன் விஜேரட்ண கொல்லப்பட்டபோது பெரும்பாலான சிங்களவர்கள் புலிகளை குற்றம் சொல்லவில்லை, அந்த இருவரும் செய்த பாவத்திற்கு  உரிய தண்டனை பெற்றார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களை இப்போதும் திட்டி தீர்க்கிறார்கள். 

மொழிபெயர்ப்பின்மூலம் அவர்கள் பின்னூட்டங்களைகொஞ்சம் படியுங்கள், அப்படியே பிரேமதாச கொலையையும் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று படியுங்கள்

 

 

அவர்கள் இறப்பில் சிங்களவார்கள் மகிழ்ச்சியடைவதற்கு காரணம் ஜேவிபியை அழித்தார்கள் என்பதற்காகவே. அதுவே புலிகளையும் தமிழர்களையும் அவர்கள் அழித்ததுக்கு யுத்த கதாநாயகர்களாக போற்றப்படுவார்கள்.

அதே பிரேமதாசதான் தென் தமிழீழத்தில் கொத்து கொத்தாக எம் மக்கள விஷேட அதிரடிபடைமூலம் கொன்று குவித்தான் அதுபற்றி ஒருவரிகூட சிங்களவர்கள் மனம் வருந்தவில்லை

ஆக சிங்கள இனம் புலிகளையும் ஜேவிபியையும் ஒன்றாக ஒருபோதும் நோக்காது. தமிழர்கள்மீது அவர்கள் மேலாதிக்கத்தை திணிப்பதே கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.

புலிகள் அழிவை கொண்டாடும் சிங்கள இனம் புலிகளால் கொல்லப்பட்ட தமது தலைவர்களின் மரணத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறதென்றால் காரணம் இனவெறி என்ற ஒன்றேதான்,

அவர்களது இளைஞர்கள் அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் வீரர்கள், அதுவே தமிழ் இளைஞர்கள் அதே அரசபடையினால் கொல்லப்பட்டால் அவர்கள் பயங்கரவாதிகள்.

பிற இனம்மீது மேலாதிக்கத்தை திணிக்க துடிக்கும் ஒரு இனத்தின்  மனது  அந்த மேலாதிக்கத்தை எதிர்த்து இறந்தவர்களை ஹீரோக்கள் என்று கொண்டாட மனதார ஒருபோதும் அனுமதிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, island said:

அதை தான் கூறுகிறேன். முன்னர் புலிகளால் தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட  வி. பு. ம.மு கட்சியை மீண்டும் விண்ணப்பபிப்பதன் மூலம் புதுப்பிப்பதற்கான அனுமதியை எடுத்து அக்கட்சியில் அரசியல் போராளிகள் இயங்கும் போது அது சிறப்பாக இருக்குமல்லவா? 

அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல.

வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. 

என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும்.

அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை

இது ரத்து செய்ய வேண்டும்    புதிய சுற்றறிக்கை வெளியிட வேண்டும்    இல்லையா?? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, goshan_che said:

அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல.

வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. 

என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும்.

அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.

தம்பி! அர்ச்சனா ஒண்டையும் விட்டுக்குடுக்காத மாதிரித்தானே பாராளுமன்றத்தில பேசியிருக்கார்..... புலி ஜேவிபி எண்டு மரணித்த அனைவருக்கும் அஞ்சலிகள்.........:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

தம்பி! அர்ச்சனா ஒண்டையும் விட்டுக்குடுக்காத மாதிரித்தானே பாராளுமன்றத்தில பேசியிருக்கார்..... புலி ஜேவிபி எண்டு மரணித்த அனைவருக்கும் அஞ்சலிகள்.........:cool:

இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.

சம்பந்தன் இழுத்து இழுத்து இன்னும் நூறு வருசம் உயிரோட இருந்திருக்கலாம்  😃

எல்லாம் தலையெழுத்து.....வாறவன் போறவன் எல்லாரையும் எதிர்த்துக்கொண்டே சாக வேண்டியதுதான் 😃

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

இன்னும் உரையை பார்க்கவில்லை. வீட்டில் பனடோல் கையிருப்பில் இல்லை. இனி போய் வாங்கி வந்து 2 போட்டபிந்தான் பார்ப்பேன்🤣.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரு முனைப்போட்டிதான், அனுர எதிர் அர்ச்சுனா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

கஜேந்திரகுமார் வழக்கு பதிவு செய்வதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு காலாவதியான  அந்த கட்சியை மீள பதிவு செய்ய அனுமதி பெற்று முன்னாள் போராளிகளில் அறிவுசார் ஆளுமை உள்ளவர்களை கொண்டு அக் கட்சியை இயக்கும்படி செய்யலாம். அவர்கள் காலத்திற்கு ஏற்ப தம்மை தகவமைத்து அரசியல் செய்வது சிறப்பாக இருக்கும். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , ஸ்ரீதரனுக்கு அப்படி முயற்சி வயிற்றில் புலியை கரைக்காதா

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர்கள் முன்னாள் போராளிகள் முன்னால் தலைவர்கள் அல்ல.

வெளிநாட்டில் கூட கொடி பிடிப்பது எதிர்மறை விழைவை தரும்போது, ஊரில் விபுமமு வை மீள உயிர்பிப்பது எல்லாம் தேவையா என்ன. 

என்னை கேட்டால், 1990 இற்கு பின் பிறந்தவர்கள்தான் இனி முன்னுக்கு வர வேண்டும்.

அவர்கள் தேசியத்தை விட்டுகொடாதவர்களாயும், இலங்கைக்குள் வாழ இஸ்டப்படுபவர்களாயும் இருக்க வேண்டும்.

நான. கூறியது வெளி நாட்டில் உள்ளவர்களை போல் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறும. கொடி பிடிக்கும் அரசியலை செய்வது பற்றி அல்ல. ஜேவிபி யை போல தம்மை காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அறிவார்ந்த அரசியல் செய்வது பற்றியே. 

சும்மா தோன்றிய ஐடியா மட்டுமேயொழிய வேறொன்றும் இல்லை. அது தப்பாய் போய்விடுமென்றால் விட்டுடுங்க.   ஆனால், கஜனுக்கு ஒருக்கா  அறிவிச்சு  அதை stop பண்ண சொல்லுங்கோ.  அந்தாள் நான் சொன்னதை கேட்டுட்டு காலை எழும்பி முதல் வேலையா வழக்கு போட நீதிமன்றம் தேர்தல் திணைகளம் என்று அலைந்து அந்த கட்சியை இயங்க அனுமதி கேட்டாலும் கேட்டுடும். 😂 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் இரு முனைப்போட்டிதான், அனுர எதிர் அர்ச்சுனா.

 

2 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் இழுத்து இழுத்து இன்னும் நூறு வருசம் உயிரோட இருந்திருக்கலாம்  😃

எல்லாம் தலையெழுத்து.....வாறவன் போறவன் எல்லாரையும் எதிர்த்துக்கொண்டே சாக வேண்டியதுதான் 😃

 

38 minutes ago, island said:

நான. கூறியது வெளி நாட்டில் உள்ளவர்களை போல் எந்த ஐடியாவும் இல்லாமல் வெறும. கொடி பிடிக்கும் அரசியலை செய்வது பற்றி அல்ல. ஜேவிபி யை போல தம்மை காலத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு அறிவார்ந்த அரசியல் செய்வது பற்றியே. 

சும்மா தோன்றிய ஐடியா மட்டுமேயொழிய வேறொன்றும் இல்லை. அது தப்பாய் போய்விடுமென்றால் விட்டுடுங்க.   ஆனால், கஜனுக்கு ஒருக்கா  அறிவிச்சு  அதை stop பண்ண சொல்லுங்கோ.  அந்தாள் நான் சொன்னதை கேட்டுட்டு காலை எழும்பி முதல் வேலையா வழக்கு போட நீதிமன்றம் தேர்தல் திணைகளம் என்று அலைந்து அந்த கட்சியை இயங்க அனுமதி கேட்டாலும் கேட்டுடும். 😂 

🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.