Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

யாரது?

யாரை கோட் பண்ணி பத்தி பத்தியாக எழுதினேன்? அக்னிக்கு.

 

11 hours ago, goshan_che said:

ஆனால் உங்களை போல அல்ல இவர்கள். புத்தர் சிலை முளைத்தாலும் கெம்புகிறார்கள், அனுர இனவாதியாக செயல்பட்டார் என்பதையும் ஏற்கிறார்கள்.

ஆனால் புதிதாக முயல்வோம் என்கிறார்கள். அவகாசம் கொடுப்போம் என்கிறார்கள்.

👆 இது உங்களுக்கு.

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் புதிய ஜனாதிபதி  டொனால்ட்  ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே

டிரம்ப் வரமுதலே சும்மா லகலகலகலகலக ... என்று அதிருதல்ல, தூள் பறக்குதில்ல  

ஹொந்தாய் வேணும் என்றால் ரம்ப் சொந்தத்தில் இருக்க வேண்டும்.  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்ரேலிய பழங்குடியினரே எங்களுக்கு சொத்தம் என்றாகிவிட்ட போது உங்கள் புதிய ஜனாதிபதி  டொனால்ட்  ரம்பும் எங்களுக்கு சொந்தம் தானே

🙆‍♂️...............

ட்ரம்பும் சொந்தம் தான் என்ற விசயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தேன்.......... இப்ப அதுவும் தெரிந்துவிட்டது. அவரைச் சொந்தம் என்று சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கின்றது...........😜.

பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்................

ஆஸ்திரேலியாப் பழங்குடிகளை முதன் முதலில் நேரே பார்த்த போது, 'காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்....................' என்று தான் தோன்றியது. அவர்கள் நாங்களே தான்.......... அவர்களின் சடாமுடிகளும், சாம்பல் பூச்சுகளும், குழாய் இசைக்கருவிகளும்,................ அநியாயமாக நம் மக்களை அங்கேயும் அழித்துவிட்டார்கள்.................. 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இதனை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை, அது ஒரு தவிர்க்க முடியாத இயற்கையியல் விதி, அதில் பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக இருக்கும்.

பேசுவதில் பயனிருந்த ஒரு காலம் இருந்தது. கந்தன் கருணை முதல், அருணா, நாவாலி கண் நோய் டெலோ போராளிகள், மாத்தையா குரூப் போராளிகள் என பலதை இதே யாழில் எழுதி, வாதிட்டு பத்து வருடத்துக்கும் மேல் ஆகிறது.

இதற்கான தேவையும், காலமும் இப்போ முடிந்தே விட்டது.

இல்லை என்றால் சங்கிலியன் 600 பேரை கொண்டது தவறா இல்லையா என வாதடலாம்.

பிரித்தானியாவில் 30 வருடம் கழிய பெரும்பாலான அரச ரகசியங்களையே வெளியிடுவார்கள்.

2024-1986 =38 வருடங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 hours ago, goshan_che said:

இப்போ நீங்கள் எமது மக்களுக்கு பரிதுரைக்கும் “நடக்க வேண்டியது வேலை” என்ன?

இன்றைய உலக அரசியல் நிலையில் ஒரு விடயத்தை பரிந்துரைக்க யாராலும் முடியாது. அதற்குரிய பலமும் எம் அரசியலில் அறவே இல்லை.

நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும்.

நிற்க...

நடந்தவைகளை கிளறிக்கொண்டிருந்தால் எந்த விமோசனமும் இல்லை. எந்த முன்னேற்பாடுகளும் வராது.

நடந்தவைகளை கனவாக மறக்க வேண்டும். இல்லையேல் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

எது சரி என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

இது ஏன் உங்களுக்குப் புதிராக இருக்கிறதென விளங்கவில்லை😂. புலிகளுக்கே டிமிக்கி கொடுத்த ஒருவரை "இவர் தான்" என்று சுட்டிக் காட்டும் ஒருவர் ஊர் போய் பாதுகாப்பாகத் திரும்ப இலங்கை, அவுஸ், அமெரிக்கா போல இன்னும் வளர்ந்து விடவில்லை. ஆனாலும், அவர் ஒரு துப்பு தந்திருக்கிறார் என நினைக்கிறேன். மகளை அறிந்தால், தகப்பனை அறிவது கஷ்டமா ஐயா?

 

6 hours ago, அக்னியஷ்த்ரா said:

யாழ் கள உறவுகள் சில பேருக்கு நான் யாரென்று தெரியும்

ஜஸ்டின்,

ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, 

புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர்  இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

----------------------------------------------------------------------------------------

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன்  வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள்.

அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், 

புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள்  பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது.

பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்?

யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா?

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

எதிர்கருத்துக்களை விதைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டால்..

எதுவேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டுபோகலாம் என்ற நிலை எடுத்துவிட்டால், பொத்தாம் பொதுவாய் கருத்தை விதைத்துக்கொண்டே போகலாம், ஆனால் பொட்டில் அடித்தமாதிரி இதுதான், இவர்தான், இப்படித்தான் என்று சொல்லி முடிக்க முடியாது. 

ஒரு இனத்தின் இருப்புக்காக உயிரை தவிர வேறு எதையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்த ஒரு அமைப்பின்மீது போறபோக்கில் சேறு வீசி செல்வதை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அப்படி இருந்துவிட்டால் எம் வாழ்வுக்காகவும் சேர்த்தே தம் வாழ்வை அழித்த அந்த போராளிகூட்டம் பிறந்த மண்ணில் உயிராக பிறந்தது மட்டுமல்ல, ஒரு மயிராக காற்றில் பறந்தால் கூட அது பெரும் பாவம்.

இங்கே புலிகளுக்காக முக்கி முக்கி பேசுவதால் போன புலிகள் வரபோவதில்லை, அல்லது புலிகளுக்கு சார்பாக பேசிவிட்டால் நீ மட்டும்தான் புலிகள் விசுவாசி என்று யாரும் முண்டாசு கட்டிவிட போவதுமில்லை, மாறாக மனசில் உள்ளதெல்லாம்

புலிகள் வாழ்ந்தபோது எம் இனத்துக்காக அவர்கள் இறந்தது எம் இனத்திற்கான நன்றிக்கடன். அவர்கள் இல்லாதபோது

அவர்களுக்காக நாங்கள் பேசுவது ,,அவர்கள் நினைவாகவே இருப்பது  எமக்காக எல்லாம் செய்த பாவத்திற்காக இல்லாமலே போய்விட்ட புலிகளுக்கான எம் நன்றிக்கடன்.

இதுகூட ஒரு இனம் செய்யவில்லையென்றால், எமக்காக அந்த போராளி கூட்டம், பிறக்காதும் போயிருக்கலாம், பிறந்து இறக்காதும் போயிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, valavan said:

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

தமிழர்களின் தாகம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நடக்க வேண்டிய வேலை சிங்களத்துடன் மட்டுமே நம்மவர்கள் கதைக்க வேண்டும்.

அனைவருடனும் கதைக்க வேண்டும், 

சிங்களத்துடன் உடன்பாடு எட்டப்படும் போது மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும், சிங்களம் எப்போதும் ஒப்பந்தங்களை சின்னப்பிள்ளைகள் பேப்பரை கிழிப்பது போல கிழித்துவிடுவார்கள், அப்படி கிழிக்கும் போது யாராவது பக்கத்திலிருந்து ஒரு போடு போடுவதற்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இருக்க வேண்டும்.

தற்போது இலங்கை அதிபர் இந்தியாவிற்கு ஓடோடி போய் இந்திய பாதுகாப்பிற்கு எதிராக செயற்படமாட்டோம் என கூறி இந்தியாவினை மகிழ்விக்க இந்திய நலத்திட்டத்தினை இலங்கையில் செயல்படுத்துவதிற்கு தயாரக உள்ளோம் என கூறியுள்ளார், பொதுவாக எமது நலனிற்காக மற்றவர்களை நாடி செல்லுகின்ற நிலையில்  இந்திய நலனிற்க்காக இந்தியாவிற்கு ஓடிப்போன இலங்கை அதிபரை வழிக்கு கொண்டுவர இந்தியா போன்ற மூன்றாம் தரப்பு வேண்டும்.

உக்கிரேன் இரஸ்சிய போரில் சம்பந்தப்பட்ட இரண்டாம் தரப்பான இரஸ்சியாவினை விட்டு விட்டு அமைதி முயற்சியில் ஈடுபடுகின்ற உலகில் சிங்களத்துடன் மட்டுமே பேசுவோம் என இருந்தால் எமக்கு எதுவும் கிடைக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஜஸ்டின்,

ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, 

புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர்  இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

----------------------------------------------------------------------------------------

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன்  வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள்.

அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், 

புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள்  பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது.

பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்?

யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா?

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார்.
அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக  சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை. அதாவது பூனைக்கு மணியை கட்டுவது உங்கள் பொறுப்பு மணியை எடுத்து தருவது எனது பொறுப்பு. அதைவிடுத்து சும்மா பொதுஅறிவுக்காக கேட்கிறேன் 
மக்களுக்கு அறிவூட்டுவதற்காக கேட்கிறேன் என்ற இந்த சடையல்களுக்கு  எனக்கு நேரமில்லை. 
கோதாவில் இறங்கத்தயாரா ...?
டிஸ்கி2: இறுதியுத்தத்தில் 53,58,59 ம் டிவிஷன் உட்பட முன்னரங்கில் போர்புரிந்த பல பட்டாலியன்களின்   அதிகாரிகளாக இருந்த பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் 
தேவையான அனைத்துத்தகவல்களும் உங்கள் இல்லம் வந்து சேரும் but only if you agreed upon above condition .
இல்லை 
ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது  என்னுடைய வேலை அல்ல  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் நீங்கள் எப்படி...? இல்லை அடி முடி கண்டேயாகவேனும் என்று நீங்கள் முடிவெடுத்தால் 

 

14 hours ago, அக்னியஷ்த்ரா said:

புலிகளுக்கே தெரியாது அவர் புலிகளின் பணத்தை தான் ஏப்பம் விட்டு சுத்தலில் விடுகிறார் என்று அப்படியான எமகாதகன்.

பல சிங்களவர்கள் திடீர் கோடீஸ்வரர்களாக மாற்ற உதவாமல் ஒரு தமிழன் கோடீஸ்வரனாக ஆகுவதற்காவது இந்த உலையில் போட்ட பண மூட்டைகள் உதவியதே என்று இதை நான் கடந்து செல்கிறேன் என்று குறிப்பிடும் நீங்கள் அப்புறம் எதுக்கு அவரை எமகாதகன் என்றீர்கள்?

இப்போ அவரு உங்கள் பார்வையில் தமிழனா எமகாதகனா?

34 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆபத்து எந்தவடிவில் வந்தாலும் இந்தவிடயத்தில் உங்களுடன் களமிறங்க தயார்.
அதற்க்கு முன் உங்களிடமிருந்து ஒரு உறுதி மொழி வேண்டும். எந்த அளவிற்கு போயும் குறிப்பிட்ட நபருக்கு எதிராக  சட்டத்திற்குட்பட்ட அதிகபட்ச தண்டனையை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் நான் முயற்சித்தேன் முடியவில்லை என்ற சால்ஜாப்புகளுக்கெல்லாம் இடமில்லை.

என்னுடன் எதுக்கு களமிறங்க தயாராக இருக்கிறீர்கள்? அல்லது மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்பற்றி முன்பே நான் அறிந்திருந்து தகவல் இங்கு பகிர்ந்தேனா? 

நானா இப்படி ஒருவர் மூட்டை மூட்டையாக இருந்த புலிகள் பணத்தை கொள்ளையடித்து பெட்ரோல் ஸ்ரேஷன் கடைகள் எல்லாம் போட்டு பண முதலையா இருக்கிறார் என்று சொன்னேன்?

ஆரம்பித்தது நீங்கள், அவர் முழு விபரங்களை வெளியில் சொன்னால்  உங்களுக்கு ஆபத்து வருமென்று பயப்பிடுகிறீர்களா?  அப்புறம் ஏன் ஆரம்பித்தீர்கள்? உயிருக்கு பயமில்லையா அப்படியென்றால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 

39 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஒரு ஹைகோர்ட்டுக்கும் உதவாத மக்களை அறிவூட்டும் உங்கள் செயல்திட்டங்களை நீங்கள் தனியாக முன்னெடுக்கலாம். அது  என்னுடைய வேலை அல்ல

சரி அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் ஒரு தகவலை வெளிக்கொண்டுவந்தது எந்த ஹைகோர்ட்டுக்கு  அறிவூட்டும் செயல் திட்டம்  என்று அறிந்து கொள்ளலாமா?

பந்தாவாக ஆரம்பித்தீர்கள், இப்போது பந்தை வேறு பக்கம் திருப்பிவிட முயற்சிக்கிறீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இப்போ அவரு உங்கள் பார்வையில் தமிழனா எமகாதகனா?

எமகாதக தமிழன்

1 hour ago, valavan said:

சரி அவர் அப்படி செய்தார் என்று நீங்கள் ஒரு தகவலை வெளிக்கொண்டுவந்தது எந்த ஹைகோர்ட்டுக்கு  அறிவூட்டும் செயல் திட்டம்  என்று அறிந்து கொள்ளலாமா?

சார் பொதுமக்களை அறிவூட்டும் செயற் திட்டத்தை முன்னெடுத்தது நீங்கள் நானல்ல  

👇

17 hours ago, valavan said:

ஆக குறைந்தது  பொதுவெளியில் அறிவித்தால் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

 

1 hour ago, valavan said:

அல்லது மூட்டை மூட்டையாக கொள்ளையடித்தவர்பற்றி முன்பே நான் அறிந்திருந்து தகவல் இங்கு பகிர்ந்தேனா? 

நானா இப்படி ஒருவர் மூட்டை மூட்டையாக இருந்த புலிகள் பணத்தை கொள்ளையடித்து பெட்ரோல் ஸ்ரேஷன் கடைகள் எல்லாம் போட்டு பண முதலையா இருக்கிறார் என்று சொன்னேன்?

ஆரம்பித்தது நீங்கள், அவர் முழு விபரங்களை வெளியில் சொன்னால்  உங்களுக்கு ஆபத்து வருமென்று பயப்பிடுகிறீர்களா?  அப்புறம் ஏன் ஆரம்பித்தீர்கள்? உயிருக்கு பயமில்லையா அப்படியென்றால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்? 

சொல்வதை அறிந்து  உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள் அதன் பிறகு சொல்வது வெர்த்தா இல்லையா என்பதை நான் முடிவெடுக்கிறேன். இதை அறிவதால் உங்களுக்கு its just another case இல்லை இப்படியொன்று நடக்கவில்லை, புலிகள் தவறே செய்யாத உத்தமர்கள் என்று நிறுவ வேண்டிய கட்டாயம் மட்டுமே. ஆனால் அவரை அடையாளம் காட்டுவதால் வரக்கூடிய நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியது நான் மட்டுமே.ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டிருந்தேன் என் நிலையறிந்து நான் எப்போதும் பயர் விட்டதே கிடையாது என்று. பயர் மட்டும் விடமாட்டேனே தவிர உண்மையை பேசாமல் இருக்கமாட்டேன்.  

 

1 hour ago, valavan said:

பந்தாவாக ஆரம்பித்தீர்கள், இப்போது பந்தை வேறு பக்கம் திருப்பிவிட முயற்சிக்கிறீர்கள்.

இல்லையே அதிகபட்ச பனிஷ்மென்ட் வரை கொண்டுபோவோம். முன்னெடுக்க நீங்கள்  தயாரா என்று தான்   கேட்டேன். எங்களுக்கு இந்த புலம்பெயர்சை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக தெரியும். பொருமிக்கொண்டு பொங்கியெழுப்பவர்கள் எல்லோரிடமும் பொறுப்பை கொடுத்து முன்னாள் விட்டால் எப்படி பம்மிக்கொண்டு படங்கினுள் பதுங்குவார்கள் என்று.

சாராம்சம்: புலிகள் உமது  பிராந்தியத்தில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டார்களா....? 
                       ஆம் ஈடுபட்டார்கள் (கடத்தல் , போராட்டத்திற்கான பங்களிப்பென்ற  பெயரில் கப்பம்  பெற்றார்கள்)   

                      புலிகளினால் சேகரிக்கப்பட்ட பணம் தப்பாக உபயோகிக்கப்பட்டதா ...?
                       ஆம் தப்பாக உபயோகிப்பட்டது , கண்முன்னே சாட்சியம் உண்டு

                      அப்படியெனில் ஏன் நீங்கள் கையாடல் செய்த  நபருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கவில்லை ...?
                      மன்னிக்கவும் அது என்னுடைய வேலை இல்லை.  

                       அது உங்கள் வேலை இல்லை எனும்போது ஏன் புலிகளை பற்றி தவறாக பேசுகிறீர்கள் ..?
                       தண்டனை வாங்கிக்கொடுக்கும் ஒருவர் தான் தனது அனுபவத்தை வெளியே  பேசவேண்டும் என்ற அவசியம் உள்ளதா...?

                      இவர் தண்டிக்கப்படவேண்டும் என்று கருதும் ஒருவருடன் நீங்கள் ஒத்துழைப்பீர்களா...?
                       நிச்சயமாக , ஆனால் அது தண்டனையின் கடுமையை பொறுத்தது யாழ் இணையத்தளத்தில் அவரது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்து வழங்கும் அதியுச்ச கொடுந்தண்டனையை அவருக்கு வழங்கவேண்டாமே என்று யோசிக்கிறேன். அதைவிடுத்து இலங்கை அரசு மூலம் அவருடைய வியாபார முதலீட்டிற்கான Source of income தொடர்பான புலனாய்வு முதல் புலிகளின் ஸ்டைலில் சாம தான பேத தண்ட 
முறையில் பணிய வைப்பதென்றாலும் சரி, இல்லை ஒரு படி மேல் போய் பொட்டு வைப்பதென்றாலும் சரி 

டிஸ்கி3: நம்ம எமகாதகன் தான் மூன்று பேரோட இறப்புக்கும் காரணம் என்றும் ஒரு உத்தியோகபூர்வமற்ற தகவல் அந்த நாட்களில் பரவியது. ஆதாவது சொல்லிவைத்தாற்போல் ஒன்றுசேர்க்கப்பட்ட மூட்டைகளை கைமாற்றும் நாளுக்கு முந்தைய நாள் இரவு மூவரையும் கொத்தாக ஒரே இடத்தில் அள்ள வைத்த அம்புஷ்
தற்ச்செயலாக இருக்கும் என்று ஒருவரும் நம்பவில்லை 

 

Edited by அக்னியஷ்த்ரா
diski added

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அக்னியஷ்த்ரா said:

சொல்வதை அறிந்து  உங்களால் என்ன புடுங்கமுடியும் என்பதை முதலில் சொல்லுங்கள்

என்ன புடுங்கி என்று போகிறீர்கள் ரொம்ப பதட்டமாயிருக்கிறீர்களா?

சரி உங்கள் பாஷையில் பதிவிடுவதே பொருத்தமானதாயிருக்கும்.

இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்று நீங்களாவே வாயை கொடுத்து அவர் யாரென்று கேட்டால் அது சொல்லமுடியாதென்று நீங்களே உருட்டி என்ன புடுங்க முனைந்தீர்களோ அதேபோல மற்றவர்களும் ஏதும் புடுங்க முடியும் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

அவர்பற்றி சொன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது நீங்கள் மட்டுமே என்று  தெரிந்தும் எதுக்கு அவர்பற்றி ஆரம்பித்தீர்கள்? 

அவர்பற்றி நீங்கள் எதுவும் எழுதாதுவிட்டால் எவருக்காவது இங்கு அதுபற்றி தெரிந்திருக்குமா? அப்போ மக்களுக்கு அவர்பற்றி தெரிவித்தது யார்? 

சரி அதெல்லாம் ஒரு ஓரமாய் வைப்போம்,

அப்புறம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திசைமாற்றி பந்தி பந்தியாக எழுதுகிறீர்களே 

இப்போவாவது அந்த நபர் யாரென்று சொல்லிவிடுவீர்களா?

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

இப்படி ஒருத்தர் இருக்கிறார் என்று நீங்களாவே வாயை கொடுத்து அவர் யாரென்று கேட்டால் அது சொல்லமுடியாதென்று நீங்களே உருட்டி என்ன புடுங்க முனைந்தீர்களோ அதேபோல மற்றவர்களும் ஏதும் புடுங்க முடியும் என்று எடுத்துக்கொள்ளுங்களேன்.

அவர்பற்றி சொன்னால் பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டியது நீங்கள் மட்டுமே என்று  தெரிந்தும் எதுக்கு அவர்பற்றி ஆரம்பித்தீர்கள்

இல்லையே அவரை கப்பென்று தூக்கும் அளவுக்கு துப்பு கொடுத்திருக்கிறேனே. ஐஸ்டின் அண்ணை கற்பூரம் மாதிரி கப்பென்று பிடித்துவிட்டார்.

உங்கள் புலநாய்வு அமைப்பு வீக்காக இருப்பதற்கு நான் என்ன செய்வது. உங்கள் புலநாய்வு அமைப்பால் ஆளை கொண்டு வந்து நான் முன்னே நிறுத்தினாலும் எதுவும் புடுங்க முடியாது என்பது தான் உண்மை.

எமது போராட்டத்தின் தவறுகளை sweeping under the rug  செய்வதாலும் எதுவும் புடுங்க முடியாது

சிம்பிள் Output எப்படியிருக்கும் என்று சொல்லுங்கள் Input சிந்தாமல் சிதறாமல் வரும். 

இன்னும் ஒரு படிமேல் போய் நீங்கள் ஒருவர் மட்டும் புலிகளுக்காக குய்யோ முறையோ என்று இங்கே ஒப்பாரி வைப்பதால் நான் மசியவேண்டியதில்லை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, valavan said:

சரி அதெல்லாம் ஒரு ஓரமாய் வைப்போம்,

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

போனது ஹைகோர்ட் என்று என்னிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் என் அடையாளத்தையும் வெளிப்படுத்தி எழுத ஆரம்பித்தேன் என்றால் திரி திரியாக திறந்து நீங்கள் ஒப்பாரி வைக்கும் நிலை வரும். வேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்

@அக்னியஷ்த்ரா @valavan

இதற்கு இவ்வளவு பெரிய விவாதம் எதற்கு?  புலம் பெயர் நாடுகளில் புலிகளின் நேரடி உறுப்பினர்களாக நீண்ட காலம் இருந்தவர்களே இப்படியான எமகாதகர்களாக இருந்திருக்கும் போது ஊரில் ஒரு உதவியாளர் அப்படி இருந்தது புரிந்து கொள்ளக்கூடிய விடயமே.  அதாவது யுத்த காலத்தில் ஊரில் குடும்ப உறுப்பினரை பிடித்தை வைத்து வெளி நாட்டில் காசு அறவிட்ட பின்னர் அந்த குடும்ப உறுப்பினர் விடுதலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது   அப்படி காசு அறவிட்டு அதை ஊருக்கு உறுதிப்படுத்திய நீண்ட கால உறுப்பினரே  எப்படிப்பட்ட எம காதகர்கள் என்பது யுத்த முடிவில் தெரியவந்தது.  அப்படியிருக்க அக்னியேஷரா  கூறிய இந்த தமிழர்கள் அனைவராலும் சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய  சிம்பிள் மற்றர்.   

12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

போனது ஹைகோர்ட் என்று என்னிடம் உள்ள எல்லா ஆதாரங்களையும் என் அடையாளத்தையும் வெளிப்படுத்தி எழுத ஆரம்பித்தேன் என்றால் திரி திரியாக திறந்து நீங்கள் ஒப்பாரி வைக்கும் நிலை வரும். வேண்டாமே

உண்மை, புலிகள் உட்பட அனைத்து ஆயுத இயக்கங்களும் போராட்டம், புனிதம் என்ற பெயரில் செய்த   இவ்வாறான வேலைகள் பல. இதை மறுக்க நாம் ஒன்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து நேற்று தான் வந்து பூமியில் குதித்தவர்கள் அல்ல.  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

நான் சொன்ன குடும்பங்கள்  இதை மூடி, கடந்து விட்டன.

பெயர் சொல்லலாம் என்றாலும், எழுத்தில் பதிவதை தவிர்க்கிறேன்.

ஏனெனில், என்ன விளைவுகள் ஏற்படலாம் அல்லது பிரச்சனைக்குள் சிக்கலாம் என்பதை எதிர் கூற முடியாது   


குறிப்பிட்ட நபர்களை தவிர, வேறு எவருக்கும் நான் சொன்னது தெரியாது.

இப்போது, அவர்களை பொறுத்தவரையில், இயக்க பின்னணி அவர்களுக்கு கிட்டத்தட்ட இல்லை.

இங்கே பதியப்போனால், இயக்க பின்னணியை உருவாக்குவதாக  முடியும்.


ஒருமுறை சிந்திக்கவும், அந்த பிள்ளைகளில் (அல்லது மூத்த 1-2 பிள்ளைகளின் பிள்ளைகள்) ஒருவர் அரச வேலைக்கு விண்ணப்பித்து, பின்னணியை தேடும் போது இங்கே பதியப்பட்டதை பின்ணணி தேடும் மென்பொருள் பிடிக்கும் என்றால் (அனால் நிச்சயம் பிடிக்கும்), அவரின் விண்ணப்பம் அதோடு சரி.  

அப்படியே, வெளிநாட்டு விசா, புலமைப்பரிசில் போன்றவையும். 

சிலவேளை பயங்கராயத்தை பிரிவு வந்தாலும் ஒரு புதினமும் இல்லை. 


அதனால் எவர் என்றாலும், கடந்த காலா வரலாற்றில் நடந்ததை இங்கு பதியும் போது மிக ஆழமாக சிந்தித்து பெயர்கள், இடம் போன்றவற்றை  பதிவதை தவிர்க்கவும்..

 

(

ஏனெனில், முன்பு பதிவு (record) என்பது, சிங்கள படைகளுக்கு தெரிய வந்தாலே.

இப்பொது பதிவு (record) என்பது ... 

அதுகுதானே ibm மென்பொருள் செய்கிறது  (i2 என்ற மென்பொருளின் விபரத்தை தேடி பார்க்கவும்.)

வேறு மென்பொருளும்  இருக்கிறது.

)

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அக்னியஷ்த்ரா said:

இனி எல்லாவற்றையும் ஓரமாய் வைப்பது உங்களுக்கும் எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நல்லது

டிஸ்கி4: நானும் மாவீரர் குடும்பம் தான்

இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இத்தனை பக்கம் மற்றும் இத்தனை வதை இல்லாமல் இருந்திருக்கும். இதை வைத்தே குளிர்காயும் கூட்டத்திற்கு இனி இங்கே வாந்தி எடுக்க வயிறு நிரம்பாதிருந்திருக்கும் 😭

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இதை முதலிலேயே சொல்லி இருந்தால் இத்தனை பக்கம் மற்றும் இத்தனை வதை இல்லாமல் இருந்திருக்கும். இதை வைத்தே குளிர்காயும் கூட்டத்திற்கு இனி இங்கே வாந்தி எடுக்க வயிறு நிரம்பாதிருந்திருக்கும் 😭

யாரும் வாந்தி எடுக்கவில்லை என்றால் - அந்த வாந்தியை induce பண்ணி வரவழைக்க மாத்திரைகள் இருக்கிறது.

இந்த திரியில் பாவிக்கப்பட்ட மாத்திரை…

விடுதலை புலிகள் - மாற்று இயக்க போராளிகளின் குடும்பங்களை கைது செய்தார்கள்….அவர்களது தலைவரின் இருப்பு பற்றிய paranoia வால் அவதிபட்டார்கள்….இவற்றால் அவர்களும் அசாத் போல நடந்து கொண்டார்கள்….

இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது.

ஆனால் இந்த மாத்திரை தனது induce பண்ணும் வேலையை செவ்வனே செய்துள்ளது.

 

13 hours ago, Kadancha said:

அப்போது, எனது உறவின் அம்மாவும், மதிவதனின் தகப்பனும் (ஏரம்பு) கிட்டத்தட்ட ஒரேநேரத்தில்  ஒருவரை ஒருவர் குறுக்கிட்டு மதிவதனியை  சுட்டி சொல்கிறார்கள், இது உன் வீடு எப்போதும் வந்து போகலாம், ஏரம்பு சொல்கிறார் நீ  (மவதனியை  சுட்டி) என்னிடம் எதுவும் சொல்லவேண்டியதில்லை இங்கு வரும் போது என்று .

படம் அல்லவா?  

நீங்கள் காட்டிய படம் பிளாக்பாஸ்டர் ரேஞ்சில் இருந்தது.

மதிவதனி உங்கள் உறவின் சகோதரி என்றால்….

அருணா அன்ரியும் உங்கள் உறவின் சகோதரிதான்….சரிதானே?

ஒரு ஜெனரல் நாலேஜுக்காக கேட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

ட்ரம்பும் சொந்தம் தான் என்ற விசயம் வெளியே தெரியக்கூடாது என்று நினைத்தேன்.......... இப்ப அதுவும் தெரிந்துவிட்டது. அவரைச் சொந்தம் என்று சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருக்கின்றது...........😜.

பல தலைமுறைகளாக எங்கள் குடும்பத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.........

🤣

 சிரித்து முடியவில்லை 👍

சொந்தம் கொண்டாடும் எமது நிலை 🙆‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது.

 

பின்பு கதைக்கலாம்  என்று தான் இருந்தேன். சுருக்கமாக சொல்கிறேன் 

நான் பாவித்த வார்த்தைகள் நிலைமைக்கு வேண்டியதை விட கனதியாக இருக்கலாம், அனால் அது அடிப்படையை மாற்றாது. 

(அசாத்தை கொண்டுவர வேண்டாம். அதை பின்பு கதைப்போம்.)

1. அப்போது tna இல் எந்த அடிப்படையில் மற்ற இயக்கங்கள் சேர்த்து கொள்ளப்பட்டது?

மற்ற இயக்கங்கள் , சிங்களத்தின் யாப்பை ஏற்று, சிங்கள பாதுகாப்பில் அல்லவா?

அது போராட்டத்தை ...

அனால், அநாத நிலையில் அவர்கள் புலிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இல்லை (அல்லது மிக குறைவு).

ஆக குறைந்தது, புலிகள் சொன்னதுக்கு முரண் அல்லவா?

2. அனால், பாலசிங்கம் சொன்னதில் கூட effect ஐ  எடுத்து விட்டு, cause தவிர்த்து விட்டீர்கள். 

 ஏன் என்று சிந்தித்து பார்க்கவும்.

மற்ற போராட்டங்களிலும் இப்படி நடந்து இருக்கிறது (big fish .. small fish விழுங்கி இருக்கிறது) என்பதும் விளைவே தவிர ....

வேறு எவரும் big fish ... ஏன் முழுங்க எத்தனிக்கிறது என்பதை  அதில் பொதிந்து உள்ள அர்த்தத்தை விட மாட்டார்கள் (சுருக்கமாக 1. வெளிப்படையாக உணவு சங்கிலி 2. முன்பே சொன்னது, இரண்டுமே சுட்டுவது big fish இன் survival)  


3. எத்தனையோ அரசியல் மற்றும் தத்துவ அறிஞர்கள் theoretical, மற்றும் practical ஆக அவதானித்து, ஆய்வு செய்து அடைந்த முடிவை (அதாவது இருப்பே அடிப்படை காரணம்), புலிகள் முறித்து உள்ளார்கள் என்றால், புலிகள் மனித  வர்க்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று வரும் (இது நான் சொல்வது)  

4. மாறாக, அப்படி புலிகள் செய்து இருந்தால், அது அது அரசு சாரா (ஆயுத மற்றும் ஆயுதம் அற்ற) ஒழுங்குபடுத்தப்ட்ட அமைப்பு அரசியலில் ஓர் paradigm shift. நிச்சயம்  பதிவு செய்யப்பட்டு இருக்கும்.


5. புலிகள் வெளியில் சொன்னது அவர்களுக்கு வசதி. (பொய்  என்ற வார்த்தையை பாவிக்கவில்லை). புலிகள் அதை நம்பியும் இருக்கலாம்.


6. புலிகள் இதை சுகந்திரமாக ஆய்ந்து பார்க்கவில்லை. 

 

7. புலிகள் செய்தது  - பாட்டும் நானே, பாவமும் நானே, பாடும் உனை நான் பாடவைத்தானே  ... நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்ற போக்கு.

 

8. இதனால் தான் ஆகக்குறைந்தது முரண்பாடு எழுகிறது.

   

உணர்ச்சிகளை தள்ளி வைத்து பார்க்கவும்.

 

இதனால் போராட்டம் மீது புலிகள் வைத்து இருந்த பற்றுறுதியை நான் மறுக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அருணா அன்ரியும் உங்கள் உறவின் சகோதரிதான்….சரிதானே?

 

நான் சொன்னேன் அல்லவா இரத்த அல்லது தூர  உறவு அக்கா - தம்பி அல்ல என்று.

2 உறவும்,  எரம்பு - எனது உறவின் அம்மா , மதிவதனி - எனது உறவு , அறிமுகமாகி, நட்பு வளர்ந்து, அக்கா - தம்பி என்ற நிலைக்கும், இணைபிரியா சகோதரிளுக்கு (உணர்திறன் மிக்க விடயங்களை சொல்லுவூ சரி அல்ல) இடையில் இருக்கும் நட்பான உறவாக  உருமாறியது என்று.

இதில் அறிமுகம் என்பது முக்கியம்.

இப்படியான  கருத்து வெளியில் வந்திருக்காவிட்டால் மன்னிக்கவும்.

அருணா மதிவதனியின் சகோதரியாக இருந்தால் - ஆம் அருணா மஹிவதானியின் சகோத்தாரி என்ற எல்லை வரைக்கும் . அதன் மேல் அன்னியோன்னியம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, valavan said:

 

ஜஸ்டின்,

ஒரு இணையதளத்தில் உரையாடும் அக்னியை ஒரு சிலருக்கு தெரியும் என்ற நிலை இருக்கும்போது, 

புலிகளின் பணத்தை கையாடி வியாபார நிலையங்கள் , நிறுவனங்கள் என வைத்து கொழித்திருக்கும் நபர்  இவர்தான் என்று பொதுவெளிதளத்தில் துப்பு கொடுக்கும் அக்னியை குறிப்பிட்ட அந்த பணம் அரசியல் செல்வாக்குள்ள அந்த கொழித்த நபர் எந்தகாலமும் யாரென்று கண்டுபிடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்களா?

முகம் தெரியா இணையத்தில் தலை வரை ஒருவரை வெட்ட முடியும் ஆனால் முடியை வெட்டினால் அது பாதுகாப்பு பிரச்சனை என்று உங்களால் மட்டுமே சொல்ல முடியும்.

----------------------------------------------------------------------------------------

முடிவாக, முன்னாள் போராளிகளின் குடும்பத்தை புலிகள் கடத்தி சென்றார்கள் என்று கருத்து பகிர்ந்தார்கள், பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் பெயரைவாது பகிருங்கள் என்று கேட்டால் அதை தவிர்த்து வேறு எது எல்லாமோ பேசிக்கொண்டு போகிறார்கள்,

பணம் வசூலித்த போராளியை கொடூரமாக கொன்று சிங்களவன்  வாகனத்தில் கட்டி இழுத்து சென்றபோது ஊரே ஆரவாரித்து மகிழ்ந்தது என்கிறார்கள், பின்பு நானும் புலிகளின் ஆதரவாளர் என்கிறார்கள்.

அந்த போராளி வசூலித்த பணத்தை மூட்டை மூட்டையாக கட்டி வைத்தார் அதை இன்னொருவர் ஆட்டைய போட்டு இன்று ஆஹா ஓஹோ என்று இருக்கிறார் என்று பதிவிடுகிறார்கள், 

புலிகளின் சேமிப்புக்கள், களஞ்சிய படுத்தல்கள், நடவடிக்கைகள்,தங்குமிடங்கள்  பல கூட இருக்கும் தளபதிகள் போராளிகளுக்கே தெரிவதில்லை. ஆனால் புலிகள் அறவிட்ட பணத்தை ஒரு இடத்தில் மூட்டை மூட்டையாக கட்டி வைத்திருந்தார்கள் என்பது துல்லியமாக தெரிந்திருக்கிறது.

பொதுமக்களிடம் பணம் வசூலித்த போராளியின் சாவில் மகிழ முடியுமென்றால், அப்படி அறவிட்ட பணத்தை அப்படியே முழுங்கிய தனிநபரை பொது வெளியில் சொல்ல என்ன தயக்கம்?

யாரினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் வரும், புலிகளாலா? அரச படைகளாலா? அல்லது முன்னாள் ஆயுத குழுக்களாலா அல்லது பணத்தை களவாடிய அந்த நபரினாலா?

இன்றுள்ள ஆட்சி மாற்ற நிலவரத்தில் புலிகளின் நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில்பங்கெடுத்தவர்கள் மட்டுமல்ல, புலிகளின் நிதியை கொள்ளையடித்து  செழித்து நிற்கும் தனிநபர்கள்மீதும் சட்டம் பாய வாய்ப்பிருக்கு ,பெரும் சிங்கள தலைகளே அதில் உருளும் நிலை இருக்கும்போது  அந்த தனிநபர்களின் தலை எம்மாத்திரம்? அந்த   தனிநபர்களின் ஆதாரங்களை தர எது மறுக்கிறது?

எதிர்கருத்துக்களை விதைத்தே ஆகவேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டால்..

எதுவேண்டுமென்றாலும் சொல்லிக்கொண்டுபோகலாம் என்ற நிலை எடுத்துவிட்டால், பொத்தாம் பொதுவாய் கருத்தை விதைத்துக்கொண்டே போகலாம், ஆனால் பொட்டில் அடித்தமாதிரி இதுதான், இவர்தான், இப்படித்தான் என்று சொல்லி முடிக்க முடியாது. 

ஒரு இனத்தின் இருப்புக்காக உயிரை தவிர வேறு எதையும் விட்டு கொடுக்காமல் வாழ்ந்த ஒரு அமைப்பின்மீது போறபோக்கில் சேறு வீசி செல்வதை எதிர்வினையாற்றாமல் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

அப்படி இருந்துவிட்டால் எம் வாழ்வுக்காகவும் சேர்த்தே தம் வாழ்வை அழித்த அந்த போராளிகூட்டம் பிறந்த மண்ணில் உயிராக பிறந்தது மட்டுமல்ல, ஒரு மயிராக காற்றில் பறந்தால் கூட அது பெரும் பாவம்.

இங்கே புலிகளுக்காக முக்கி முக்கி பேசுவதால் போன புலிகள் வரபோவதில்லை, அல்லது புலிகளுக்கு சார்பாக பேசிவிட்டால் நீ மட்டும்தான் புலிகள் விசுவாசி என்று யாரும் முண்டாசு கட்டிவிட போவதுமில்லை, மாறாக மனசில் உள்ளதெல்லாம்

புலிகள் வாழ்ந்தபோது எம் இனத்துக்காக அவர்கள் இறந்தது எம் இனத்திற்கான நன்றிக்கடன். அவர்கள் இல்லாதபோது

அவர்களுக்காக நாங்கள் பேசுவது ,,அவர்கள் நினைவாகவே இருப்பது  எமக்காக எல்லாம் செய்த பாவத்திற்காக இல்லாமலே போய்விட்ட புலிகளுக்கான எம் நன்றிக்கடன்.

இதுகூட ஒரு இனம் செய்யவில்லையென்றால், எமக்காக அந்த போராளி கூட்டம், பிறக்காதும் போயிருக்கலாம், பிறந்து இறக்காதும் போயிருக்கலாம்.

நீங்கள் அதிகம் பக்தி முத்திப் பேசுவதாக எனக்குப் படுகிறது.

சில சமயங்களில் உங்கள் போன்றோரின் புலிகள் கால சம்பவங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கையில், உண்மையிலேயே வடக்கு கிழக்கில் பிறந்து , அங்கேயே பல வருடங்கள் வசித்தவர்களுடன் தான் பேசுகிறோமா, அல்லது வடக்கு கிழக்கின் வர்ணமே தெரியாமல் சின்னத் திரையில் பார்த்து விட்டு புளகாங்கிதம் அடைந்தவர்களோடு பேசுகிறோமா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.

புலிகளின் கொள்கையாக கப்பம், கடத்தல், மிரட்டல், சுருட்டல் என்பன இருக்கவில்லை. இதையே தான் அக்னியும் சொல்லியிருக்கிறார்.

ஆனால், அடிப்பொடிகளால் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. யாழில் இருக்கும், அங்கே வசித்த அனைவருக்கும் - அவர்கள் முட்டைக் கோதுக்குள் இழுத்துப் போர்த்திக் கொண்டு வசித்திருந்தால் ஒழிய- சில சம்பவங்கள் தெரிந்திருக்கும். இதெல்லாம் அப்போதிருந்த செய்தித் தாள்களில் கூட வந்திருக்காது, ( இருந்தவை எல்லாமே  புலிகளின் செய்தித் தாள்கள் என்பதால்). இதை இங்கே அசாத்தின் தனிமனித சர்வாதிகாரத்தோடு ஒப்பிட்டது தான் தவறு.

"இப்படி எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சாதிப்பது புலிகள் மீதான பக்தியின் வெளிப்பாடு. எல்லாம் 100% வீதம் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உடையாமல் பாதுகாக்க முயலும் self-preservation மனநிலை. இது உங்கள் இஷ்டம், உரிமை.  

 "நடந்தால் ஏன் பெயர் சொல்லி தண்டனை வழங்கத் தயங்குகிறார் அக்னி?" என்று கேட்பது இலங்கையில் இருக்கும் சட்ட ஒழுங்கு நிலை தெரியாத ஒரு அப்பாவி கோயிந்தனின் மனநிலை😂. இது உங்களிடம் இருப்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது.     

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நடக்கும் சம்பாசனைகளுக்கும் தலையங்கத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை.

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!

சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறை என்பதற்கு பதிலாக புலிகளின் என்று போட்டால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

"இப்படி எதுவும் நடக்கவில்லை" என்று நீங்கள் சாதிப்பது புலிகள் மீதான பக்தியின் வெளிப்பாடு.

அப்படி எதுவும் நடக்கவில்லையென்று எங்காவது நான் ஒருவரி சொல்லியிருக்கிறேனா காட்டுங்கள், நானும் அறிய ஆவலாக உள்ளேன்.

தனிப்பட்ட ரீதியில்  புலிகளுக்கே தெரியாமல் நடந்த சுருட்டல் செய்தவர்களை நாம் அறிவோம் என்று சொன்னவர்களை , அது யாரென்று சொல்லுங்கள் அவர் வாழும் பிரதேச மக்கள் அறிந்து கொள்ளவும், அவரின் யோக்கியத்தை தெரிந்து கொள்ளவும் உதவும் என்ற ரீதியிலேயே கேட்டேன்.

 

10 hours ago, Justin said:

சில சமயங்களில் உங்கள் போன்றோரின் புலிகள் கால சம்பவங்களைப் பற்றிய பதிவுகளைப் பார்க்கையில், உண்மையிலேயே வடக்கு கிழக்கில் பிறந்து , அங்கேயே பல வருடங்கள் வசித்தவர்களுடன் தான் பேசுகிறோமா,

நிதி அறவீடுகளிலிருந்து மாற்று இயக்க போராளிகள் வேட்டைவரை புலிகள் சில தவறிழைத்தார்கள் என்று பலதடவை சொல்லியிருக்கிறேன், இந்த பதிவிலும் சொல்லிருக்கேன், அதை முழுதாய் படித்தீர்களா? 

புலிகளின்  சரியையும் தவறையும் பேசுவதால் வடக்கு கிழக்கில் பிறந்தேன் என்பதை ஆதாரப்படுத்தியிருக்கிறேன், நீங்கள் தவறுகளை மட்டும் தூக்கி பிடிப்பதால் நீங்கள் எங்கே பிறந்தீர்கள் என்று ஆராயபோவதில்லை அது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

பதிவுகளை முழுசாக படித்த பின்னர் விமர்சனங்களையும், குழு ஆதரவு கருத்துக்களுக்கும் முனையுங்கள்

10 hours ago, Justin said:

 "நடந்தால் ஏன் பெயர் சொல்லி தண்டனை வழங்கத் தயங்குகிறார் அக்னி?" என்று கேட்பது இலங்கையில் இருக்கும் சட்ட ஒழுங்கு நிலை தெரியாத ஒரு அப்பாவி கோயிந்தனின் மனநிலை😂

அக்னியை அவர்களுக்கு தண்டனை வழங்க சொல்லியிருக்கிறேனா அல்லது தண்டனைக்குரியவர்களை பற்றி தெரிந்த அக்கினி தெரிந்த ஒருவரின் பெயரை வெளியில் ஏன் சொல்ல தயங்குகிறார் என்று கேட்டிருக்கிறேனா?

இணையத்தில் சொன்னால் தனக்கு  பாதுகாப்பு அச்சுறுத்தல் என்கிறார். அவ்வளவு பாதுகாப்பில் அக்கறையுள்ளவர் அப்போ எதற்கு அந்த பேச்சை ஆரம்பித்தார்?

அரச அதிகாரத்திலிருந்த டக்ளசை , கருணாவை லட்சக்கணக்கானோர் இணையவெளியில் மணல் கடத்தல்காரன் , பொம்பள பொறுக்கி, பொதுமக்கள்/புலிகள் பணத்தை சுருட்டியவன் என்றெல்லாம் இன்றுவரை விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள், உள்நாடு வெளிநாடு போய் வந்திருக்கிறார்கள்  இதில் எத்தனைபேர் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர் கொண்டிருக்கிறார்கள்?

எனக்கு விருப்பமில்லாத அணுகுமுறை  என்றாலும் உங்கள் பாணியிலேயே முடிக்க விரும்புகிறேன், கருத்துக்களுக்கு கருத்து மட்டுமே எழுந்துங்கள், கோயிந்தன், கொம்பேறி மூக்கன் என்றெல்லாம் போனால்.

குத்துமதிப்பாக கருத்துக்களை படித்து பதிலளிக்கும் குப்புசாமி ரேஞ்சில் நீங்களிருப்பதாக உங்கள் பாணியில் நானும் அறிவிக்கலாம்.

நீங்கள் ஜஸ்டினாக இருப்பதில் ஆர்வமா இல்லை குத்துமதிப்பு குப்புசாமியாக இருப்பது விருப்பமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டுவிடுகிறேன்.

குப்புசாமி உங்கள் சாய்ஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2024 at 10:39, goshan_che said:

யாரும் வாந்தி எடுக்கவில்லை என்றால் - அந்த வாந்தியை induce பண்ணி வரவழைக்க மாத்திரைகள் இருக்கிறது.

இந்த திரியில் பாவிக்கப்பட்ட மாத்திரை…

விடுதலை புலிகள் - மாற்று இயக்க போராளிகளின் குடும்பங்களை கைது செய்தார்கள்….அவர்களது தலைவரின் இருப்பு பற்றிய paranoia வால் அவதிபட்டார்கள்….இவற்றால் அவர்களும் அசாத் போல நடந்து கொண்டார்கள்….

இது பொய் என எப்பவோ இந்த திரியில் நிறுவபட்டு விட்டது.

ஆனால் இந்த மாத்திரை தனது induce பண்ணும் வேலையை செவ்வனே செய்துள்ளது.

நீங்கள் அறியாதது அல்ல சகோ.

விடுதலைப் புலிகளிடம் நல்ல விடயங்கள் பல கோடி உண்டு. பல விடயங்களில் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக வழி காட்டிகளாக 

பெண் சுதந்திரம் பாதுகாப்பு, ஊழல் லஞ்சம் மற்றும் சிபாரிசு அற்ற அவர்களது நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரியும். அது கனாக்கால வாழ்க்கை. அதை அவர்கள் செய்து காட்டினார்கள். வாழ்ந்து காட்டினார்கள். அது அவர்களால் மட்டுமே முடியும் முடிந்தது என்று இன்று மேலும் மேலும் உணர்கிறோம். இன்னும் உணர்வோம். 

நல்லவற்றை பொறுக்காத கூட்டத்தில் நான் ஒரு போதும் இருந்ததில்லை இருக்க போவதுமில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.