Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இன்று அவரது பெயர் கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாளை சபாநாயகர் பதவி வெற்றிடத்தை அறிவிக்கும் போது, நாடாளுமன்ற கூட்டத் தொடரின் தொடக்கத்தில் முன்மொழியப்படும்.

கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார்.

அவர் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51,391 விருப்பு வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/313777

  • கருத்துக்கள உறவுகள்

தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர். 

நீங்கள்... அவரின், சேர்டிபிக்கட் பார்த்தீங்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள்... அவரின், சேர்டிபிக்கட் பார்த்தீங்களா? 😂

பிரதி ஒருவரும் உதேசர்டிபிக்கடுடன் இருக்கிறார்  என்று அவங்க பர்ட்டி மேளம்  அடிச்சிட்டு இருந்தாங்களே....அதுவும் அம்போதானா...அந்த பார்ட்டிகளுகு ..சனிமாற்றம் சரியில்லையோ😄

  • கருத்துக்கள உறவுகள்

ரனில் கிண்டி எடுத்து உள்ளதை சொல்வார். அமைதி. அமைதி.🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

ரனில் கிண்டி எடுத்து உள்ளதை சொல்வார். அமைதி. அமைதி.🙂

ரணிலுக்கு இப்ப உதுதானே வேலை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

ரணிலுக்கு இப்ப உதுதானே வேலை

ஆம். ஜனாதிபதி தேர்தலில் இருந்து அவரின் வேலை ஜே வி பியை கிளறுவதில் காலத்தை கடத்துகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, alvayan said:

பிரதி ஒருவரும் உதேசர்டிபிக்கடுடன் இருக்கிறார்  என்று அவங்க பர்ட்டி மேளம்  அடிச்சிட்டு இருந்தாங்களே....அதுவும் அம்போதானா...அந்த பார்ட்டிகளுகு ..சனிமாற்றம் சரியில்லையோ😄

வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, 
பேராசிரியர் பீரிஸை வைத்து  குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும்,
பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும்,
அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்....
எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை   ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂

அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது.
அனுபவம் காணாது போலுள்ளது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை.
அனுபவம் காணாது போலுள்ளது. 🤣

இனி ஒரு பிரச்சினையும் வராது...இப்ப அவர் நிக்கிறநாட்டில் ..கனக்க சேர்ட்டிபிக்கற்றும் கொடுத்து விடுவினம்...அவை அதிலை எக்ஸ்பர்ட்😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது.

இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி   க்கு    அல்லது மக்கள் சக்திக்கு    கிழவன் ரணில்   இருக்க கதிரை. தேடுகிறார்.  அவ்வளவு தான்    இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை   மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள்   பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள்   பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣

நீங்கள் சொல்லாவிட்டாலும்…. எங்களுக்கு யார், யார் எந்த குரூப் என்று தெரியும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி   க்கு    அல்லது மக்கள் சக்திக்கு    கிழவன் ரணில்   இருக்க கதிரை. தேடுகிறார்.  அவ்வளவு தான்    இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை   மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள்   பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣

ரணிலின் லக்குக்கு கதிரையில் இருந்தாலும் இருந்து விடுவார். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

சபாநாயகர் பதவிக்கு கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொண்டு வந்தால் கலாநிதியாகத்தான் கொண்டு வருவோம் என்று அடாத்தாகா இருக்கின்றார்கள் தேசிய மக்கள் சக்தி.............................

ஆனால் இந்தக் கூட்டம் பல்கலையில் படிக்கும் காலத்தில் தாங்களும் படிக்கவில்லை, எங்களையும் படிக்க விடவில்லை................... பரவாயில்லை, மாற்றம் இப்பவாவது வந்ததே...........  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர். 

கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா?

இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் முஸ்லிம்கள். இதிலையும் ஏமாற்றம்தான் மிச்சம்.  பிரதி சபாநாயகர் தனக்கு சபாநயகர் பதவி கிடைக்கும் என்று நினைச்சிருப்பார்! வடைபோச்சே!😂

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா?

இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?

கல்வித் தகைமைகள் பிரத்தியேகமாக தேவை இல்லை.
சபையை கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும்,  ஆளுமையும், மிதமான பொது அறிவும் போதும் என நினைக்கின்றேன்.
முன்னைய சபாநாயகர் இடைச் செருகலாக போலியான கலாநிதி பட்டம் போட்டதுதான் பிரச்சினையாகி விட்டது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா?

இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?

இன்றைய நிலையில் தேவை தான்    காரணம்,..... 

1,.    பட்டதாரிகள்.   எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும்  10. ஆவது 12 ஆவது   வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம்    

2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ???  அப்படி வந்தால் வெளியில் இருக்கும்  பட்டதாரிகள்.  சபாநாயகர் 10  வகுப்புகள் கூட.  படிக்க வில்லை என்பார்கள் 

3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும்    

4,  .தமிழ் மக்கள்   1977 இல்.  எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள்  படித்தவர்கள்.  என்பார்கள்   ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள்.     படித்தவர்கள்.  எங்கள் தலைவர்கள் என்பார்கள்   🤣

5,... இன்று 2024.  இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது  அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும்   ......சமூகம் படித்த சமூகம்     பாராளுமன்றமும்.  அப்படி தான் இருக்கும்   நீங்கள் சபாநாயகராக  போட்டி போட. போகிறீர்களா  ?? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

கலாநிதி இல்லாமல் சபாநாயகர் ஆக முடியாதா?

இதற்கு கட்டாயம் கல்வித் தகமைகள் தேவையா?

அப்படி ஒரு பெஞ்ச் மார்க்கை அமைக்க முயலுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கல்வித் தகைமைகள் பிரத்தியேகமாக தேவை இல்லை.
சபையை கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும்,  ஆளுமையும், மிதமான பொது அறிவும் போதும் என நினைக்கின்றேன்.
முன்னைய சபாநாயகர் இடைச் செருகலாக போலியான கலாநிதி பட்டம் போட்டதுதான் பிரச்சினையாகி விட்டது.

 

1 hour ago, Kandiah57 said:

இன்றைய நிலையில் தேவை தான்    காரணம்,..... 

1,.    பட்டதாரிகள்.   எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும்  10. ஆவது 12 ஆவது   வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம்    

2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ???  அப்படி வந்தால் வெளியில் இருக்கும்  பட்டதாரிகள்.  சபாநாயகர் 10  வகுப்புகள் கூட.  படிக்க வில்லை என்பார்கள் 

3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும்    

4,  .தமிழ் மக்கள்   1977 இல்.  எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள்  படித்தவர்கள்.  என்பார்கள்   ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள்.     படித்தவர்கள்.  எங்கள் தலைவர்கள் என்பார்கள்   🤣

5,... இன்று 2024.  இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது  அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும்   ......சமூகம் படித்த சமூகம்     பாராளுமன்றமும்.  அப்படி தான் இருக்கும்   நீங்கள் சபாநாயகராக  போட்டி போட. போகிறீர்களா  ?? 🤣

 

1 hour ago, RishiK said:

அப்படி ஒரு பெஞ்ச் மார்க்கை அமைக்க முயலுகிறார்கள். 

தகவல்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை

அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு சொல்லுவம்🤣 

9 hours ago, ஏராளன் said:

விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார்.

கலாநிதியா, மருத்துவரா (வைத்தியகலாநிதி).

2 hours ago, ரசோதரன் said:

கொண்டு வந்தால் கலாநிதியாகத்தான் கொண்டு வருவோம் என்று அடாத்தாகா இருக்கின்றார்கள் தேசிய மக்கள் சக்தி.............................

ஆனால் இந்தக் கூட்டம் பல்கலையில் படிக்கும் காலத்தில் தாங்களும் படிக்கவில்லை, எங்களையும் படிக்க விடவில்லை................... பரவாயில்லை, மாற்றம் இப்பவாவது வந்ததே...........  

ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது.

எஞ்சினியர் என்பதை பெயருக்கு முன்னால் போடும் எனக்கு தெரிந்த ஒரே நாடு இலங்கை😆

1 hour ago, Kandiah57 said:

இன்றைய நிலையில் தேவை தான்    காரணம்,..... 

1,.    பட்டதாரிகள்.   எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும்  10. ஆவது 12 ஆவது   வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம்    

2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ???  அப்படி வந்தால் வெளியில் இருக்கும்  பட்டதாரிகள்.  சபாநாயகர் 10  வகுப்புகள் கூட.  படிக்க வில்லை என்பார்கள் 

3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும்    

4,  .தமிழ் மக்கள்   1977 இல்.  எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள்  படித்தவர்கள்.  என்பார்கள்   ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள்.     படித்தவர்கள்.  எங்கள் தலைவர்கள் என்பார்கள்   🤣

5,... இன்று 2024.  இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது  அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும்   ......சமூகம் படித்த சமூகம்     பாராளுமன்றமும்.  அப்படி தான் இருக்கும்   நீங்கள் சபாநாயகராக  போட்டி போட. போகிறீர்களா  ?? 🤣

சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, RishiK said:

அப்படி ஒரு பெஞ்ச் மார்க்கை அமைக்க முயலுகிறார்கள். 

தேவையில்லாத பென்ச்மார்க்.

பாராளுமன்றம் என்பதே சாதாரண குடிகளின் இல்லம்தான் (house of Commons, House of Representatives). அப்படி இருக்க பா . உ என்ற தகுதி மட்டுமே போதுமானது.

தம்மை ஒரு technocratic அரசாங்கம் என பாவனை செய்யும் பில்டப் இது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது.

 

ஜெயக்கொடி படித்து முடித்தார் என்றே நினைக்கின்றேன். அவரும் நானும் பல்கலையில் ஒரே வகுப்பே. அந்த வருடம் இரண்டு வகுப்புகளை பல்கலைக்கு உள்ளே எடுத்திருந்தனர், 1986 மற்றும் 1987ம் ஆண்டுகளில் பாடசாலை உயர்தர பரீட்சை எழுதியிருந்தவர்களை. ஜெயக்கொடி 1986ம் ஆண்டு வகுப்பைச் சேர்ந்தவர், நான் 87ம் ஆண்டு.

பேராதெனியாவில் மிக இலகுவாக இந்த தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம். எல்லா தரவுகளிலும் மிக வெளிப்படையாக அவர்களின் இணையத்தில் இருக்கின்றன.

நம்ப முடியாத விடயம் இவரும் அவர்களில் ஒருவர் என்று.............. 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.

 

அதுவும் சரி  தான் ........படிப்புக்கும் மதிப்பு உண்டு இல்லை என்று சொல்ல முடியாது   இலங்கையில் ஒருபோதும் சொல்ல முடியாது   

16 minutes ago, goshan_che said:

அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு

சொல்லுங்கள்   அது ஒரு   முழுப் பொய்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

படிப்புக்கும் மதிப்பு உண்டு இல்லை என்று சொல்ல முடியாது   

உண்மைதான். 

7 minutes ago, ரசோதரன் said:

ஜெயக்கொடி படித்து முடித்தார் என்றே நினைக்கின்றேன். அவரும் நானும் பல்கலையில் ஒரே வகுப்பே. அந்த வருடம் இரண்டு வகுப்புகளை பல்கலைக்கு உள்ளே எடுத்திருந்தனர், 1986 மற்றும் 1987ம் ஆண்டுகளில் பாடசாலை உயர்தர பரீட்சை எழுதியிருந்தவர்களை. ஜெயக்கொடி 1986ம் ஆண்டு வகுப்பைச் சேர்ந்தவர், நான் 87ம் ஆண்டு.

பேராதெனியாவில் மிக இலகுவாக இந்த தகவல்களை உறுதி செய்து கொள்ளலாம். எல்லா தரவுகளிலும் மிக வெளிப்படையாக அவர்களின் இணையத்தில் இருக்கின்றன.

........ 

 

வதந்தியாம். மனிசன் சேர்பிக்கேட்டும் கையுமா வந்து சி ஐ டி யிடம் கம்பிளைண்ட் கொடுத்துள்ளார்.

https://www.newswire.lk/2024/12/16/energy-minister-shows-his-degree-certificate/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றார்.

 

15 minutes ago, goshan_che said:

தேவையில்லாத பென்ச்மார்க்.

பாராளுமன்றம் என்பதே சாதாரண குடிகளின் இல்லம்தான் (house of Commons, House of Representatives). அப்படி இருக்க பா . உ என்ற தகுதி மட்டுமே போதுமானது.

தம்மை ஒரு technocratic அரசாங்கம் என பாவனை செய்யும் பில்டப் இது.

வைத்திய கலாநிதியா? அல்லது ஏதாவது துறை சார் கலாநிதியா.?

வழமையா இதை வலதுசாரிகள் தான் செய்வார்கள் ...இடதுகள் இதை(பட்டங்களை) செய்வது ஆச்சரியமாக இருக்கு ..
மருத்துவர்கள் அரைவாசி பேர் பாராளுமன்றில் இருந்தால் யாரப்பா மக்களுக்கு மருத்துவ‌ சேவை செய்வது 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.