Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: Vishnu

18 Mar, 2025 | 03:53 AM

image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்.

கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

Published By: Vishnu

18 Mar, 2025 | 03:53 AM

image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்.

கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk

\

அடுத்த கிழக்கு மாகாணசபை

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, பிழம்பு said:

Published By: Vishnu

18 Mar, 2025 | 03:53 AM

image

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (16) புத்தளம் - கற்பிட்டி நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ரவுப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் குளறுபடிகள் காரணமாக, குறிப்பாக பல அங்கத்தவர் தொகுதிகளில் ஒரு வாக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் அனைத்து ஆசனங்களும் அந்த கட்சிக்கே உரித்தாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே அந்தந்த தொகுதிகளிலுள்ள இன விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழரசு கட்சியும் நாமும் கலந்தாலோசித்து சில இடங்களில் அவர்கள் சார்பில் தமிழ் வேட்பாளர்களையும், எம் சார்பில் முஸ்லிம் வேட்பாளர்களையும் அவர்களது சின்னத்திலேயே களமிறக்கத் திட்டமிட்டுள்ளோம்.

அந்தந்த தொகுதிகளில் எமக்கு கிடைக்கக் கூடிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த உடன்பாட்டின் உண்மையான நோக்கமாகும். தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்.

கொழும்பு மாநகரசபையில் கட்சியின் சொந்த சின்னமான மர சின்னத்தில் போட்டியிடவுள்ளோம். அதேபோன்று புத்தளத்திலும் மர சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ் | Virakesari.lk

இரு இன நல்லிணக்கத்துக்கான முன்னேற்றகரமான விடயம், சோனக வாக்கிற்காக ஈன தமிழ் அரசியல்வியாதிகள் சொந்த இனத்தை விற்று மண்டியிடாத வரை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

தமிழரசு கட்சிக்கு அந்தந்த தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவையும் வழங்குவோம். புத்தளம் நகரசபையிலும் மாநகசபையிலும், கொழும்பு, கண்டி மாநகரசபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் போட்டியிடவுள்ளது. கண்டி மாநகரசபையில் தராசு சின்னத்தில் களமிறங்கவுள்ளோம்

இவர் கூறும் பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு கிளைகளே இல்லை பிறகு எப்படி வாக்குக்கள் கிடைக்கும்..1977 ஆம் ஆண்டில் இருந்த நிலை இப்ப இல்லை என்பதை இவர் அறிவார் என நம்பலாம் .😇

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, putthan said:

இவர் கூறும் பகுதிகளில் தமிழரசு கட்சிக்கு கிளைகளே இல்லை பிறகு எப்படி வாக்குக்கள் கிடைக்கும்..1977 ஆம் ஆண்டில் இருந்த நிலை இப்ப இல்லை என்பதை இவர் அறிவார் என நம்பலாம் .😇

மலையக தமிழ் கட்சிகளுக்கு விழும் வாக்கை பிரிப்பதற்காக.. சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சி செய்யும் கீழ்த்தரமான செயல்.

தமிழரசு கட்சி… கொழும்பு, கண்டியில் போட்டியிட்டு இருக்காவிடில், அங்கு வசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்… தமிழர் என்ற முறையில் மலையக தமிழ் கட்சிகளுக்கே இதுவரை வாக்களித்து வந்தவர்கள்.

இம்முறை… சுமந்திரன் என்னும் சகுனியின் வேலையால் சிங்களப் பகுதியில் உள்ள தமிழ் வாக்குகள் சிதறுண்டு உள்ளூராட்சி மன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது.

இது… மனோ கணேசன், செந்தில் தொண்டமான் மீது… சுமந்திரனுக்கு இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளும் செய்கையாகவே கருதப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மலையக தமிழ் கட்சிகளுக்கு விழும் வாக்கை பிரிப்பதற்காக.. சுமந்திரன் தலைமையிலான தமிழரசு கட்சி செய்யும் கீழ்த்தரமான செயல்.

தமிழரசு கட்சி… கொழும்பு, கண்டியில் போட்டியிட்டு இருக்காவிடில், அங்கு வசிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள்… தமிழர் என்ற முறையில் மலையக தமிழ் கட்சிகளுக்கே இதுவரை வாக்களித்து வந்தவர்கள்.

இம்முறை… சுமந்திரன் என்னும் சகுனியின் வேலையால் சிங்களப் பகுதியில் உள்ள தமிழ் வாக்குகள் சிதறுண்டு உள்ளூராட்சி மன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவம் குறையப் போகின்றது.

இது… மனோ கணேசன், செந்தில் தொண்டமான் மீது… சுமந்திரனுக்கு இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்ளும் செய்கையாகவே கருதப்படுகின்றது.

அது தானே பார்த்தேன் ,வன்னி,யாழ் நக‌ரில் இல்லாத ஒற்றுமை ஏனைய பிரதேசத்தில்...அதாவது தமிழர் என்ற அடையாளத்துடன் ஒருத்தனும் அர்சியல் செய்யக் கூடாது என்பது இவரின் கொள்கை போல‌

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

அடுத்த கிழக்கு மாகாணசபை

கிழக்கில் சம்பந்தருக்கு ஆப்படித்தது போலவே மீண்டும் ஆப்பை செருக கக்கீம் தயார் நிலையில் உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nunavilan said:

கிழக்கில் சம்பந்தருக்கு ஆப்படித்தது போலவே மீண்டும் ஆப்பை செருக கக்கீம் தயார் நிலையில் உள்ளார்.

யாழ்மாநகராட்சி ..இனி கக்கிமின் கையில்தான்....சுல்தான் நகர் ...மஸ்தான்வீதி...அசுரப்பு பூங்கா எல்லாம் இனி விழிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

இலங்கை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. கண்டியில் தராசு சின்னத்திலும் கொழும்பு மற்றும் புத்தளத்தில் மர சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்

ஹக்கீம் தெரிவித்துள்ள இந்த விடயம் பற்றி தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியப்படுத்தவில்லையே. இதில் அதிக நன்மை அடைவது முஸ்லிம் கட்சிதான். சம்மாந்துறையில் கோவிலுக்கு முன்னால் வளைவு வைக்க முற்பட்டவேளை சண்டித்தனம் காட்டியவர்கள், கல்முனை வடக்குபிரதேச செயலகத்தின் அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்பவர்கள், தங்களுக்கு நன்மையில்லா விடயத்தில் கால் வைக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரி இவர்கள்தான் என்பதை தமிழரசுக்கட்சி அறியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டணி தமிழர்களின் தீர்வை பெற்று தராது ஆனால் சில அங்கத்தவர்களை பெற்று தரலாம் எங்களுக்கு ஏன் அங்கத்துவம் ?? அதுவும் வடக்கு கிழக்கு வெளியில் மேலும் தமிழர்கள் விரும்பினால் முஸ்லிம்கள். கூட்டணி வைக்க மாட்டார்கள் ஆனால் முஸ்லிம் விரும்பும் போது தமிழர்கள் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் இது தான் தமிழர்கள் பலம்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம்.

இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தி said:

ஹக்கீம் தெரிவித்துள்ள இந்த விடயம் பற்றி தமிழரசுக்கட்சி, தமிழ் மக்களுக்கு ஏதும் தெரியப்படுத்தவில்லையே. இதில் அதிக நன்மை அடைவது முஸ்லிம் கட்சிதான். சம்மாந்துறையில் கோவிலுக்கு முன்னால் வளைவு வைக்க முற்பட்டவேளை சண்டித்தனம் காட்டியவர்கள், கல்முனை வடக்குபிரதேச செயலகத்தின் அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டையாக நிற்பவர்கள், தங்களுக்கு நன்மையில்லா விடயத்தில் கால் வைக்க மாட்டார்கள். தமிழர்களுக்கு எதிரி இவர்கள்தான் என்பதை தமிழரசுக்கட்சி அறியவில்லை .

கொழும்பில் போட்டியிடவில்லை என்று சொன்னது சுமந்திர தேரர் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

கொழும்பில் போட்டியிடவில்லை என்று சொன்னது சுமந்திர தேரர் தான்.

அதற்கு முதல்… கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடும் என்று சொன்னதும் “சுமந்திர தேரர்” தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அதற்கு முதல்… கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடும் என்று சொன்னதும் “சுமந்திர தேரர்” தான். 😂

சுமந்திரனின் அறிவு புலமை பற்றி பேசியவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு முஸ்லீமும்… தமிழர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். ஆனால் எமது வாக்கை பெற்று அவர்கள் பதவி பெற்று விடுவார்கள் இது கடந்த காலம் எமக்கு கற்றுத் தந்த பாடம்.

இதனை புரிந்து கொள்ள தமிழரசு கட்சிக்கு அறிவு போதாது. இன்னும் மக்களை முட்டாளாகவே நினைத்துக் கொண்டு உள்ளது.

நசீர் கொடுத்த மாட்டுபிரியாணியில் தவண்டு கிடந்து உருண்டதில் கிழக்கு மாகாணத்தை கோட்டை விட்டது காணாது என்று , அடுத்த பிரியாணிக்கு அடி போடுகின்றனர் தேசிக்காய்ஸ், தேசிக்காய்ஸா கொக்கா

3 hours ago, நந்தி said:

தமிழர்களுக்கு எதிரி இவர்கள்தான் என்பதை தமிழரசுக்கட்சி அறியவில்லை .

தமிழர்களுக்கு எதிரியே தமிழரசு கட்சிதான் என்பதை தமிழர்களே அறியாதபோது , இது மட்டும் எப்படி சாத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நசீர் கொடுத்த மாட்டுபிரியாணியில் தவண்டு கிடந்து உருண்டதில் கிழக்கு மாகாணத்தை கோட்டை விட்டது காணாது என்று , அடுத்த பிரியாணிக்கு அடி போடுகின்றனர் தேசிக்காய்ஸ், தேசிக்காய்ஸா கொக்கா

சொல்கிறவர் யாரு?

வடக்கு வாழ் தமிழர்களை தம் பிரதேசவாதம் காரணமாக

எதிரிகளாக அவர்களை கட்டமைத்த

முரளிதரனுக்கும் பிள்ளையானுக்கும் யாழில்

காவடி தூக்கிய

சந்தர்ப்பவாதி!

அண்ணை உங்கள் கோவணத்தை

மேலும் உரிக்கட்டா?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வைரவன் said:

சொல்கிறவர் யாரு?

வடக்கு வாழ் தமிழர்களை தம் பிரதேசவாதம் காரணமாக

எதிரிகளாக அவர்களை கட்டமைத்த

முரளிதரனுக்கும் பிள்ளையானுக்கும் யாழில்

காவடி தூக்கிய

சந்தர்ப்பவாதி!

அண்ணை உங்கள் கோவணத்தை

மேலும் உரிக்கட்டா?

எப்பூடி சார் ...கொஞ்சம் இங்க வாங்க

தேசியம் சொட்டச்சொட்ட இனப்படுகொலையாளன் பொன்சிக்கு காவடி தூக்கி சந்தர்ப்பவாத தேசிய கோவணம் உரிந்தது போலவா. அக்மார்க் சந்தர்ப்பவாத கம்**** வந்திட்ட்டார்கள் அடுத்தவன் கோவணத்தை உரிய. நீங்கள் தாராளமாக என்னோடதை உரிக்கலாம் நீங்கள் உரித்தாலும் இல்லாவிட்டாலும்

கூத்தமைப்பு என்ற பெயரை கேட்டாலே தாறுமாறாய் கூத்தமைப்பையும் உரிப்பேன் அதன் வால்கள் தேசிக்காய்களையும் உரிப்பேன். ஏனென்றால் இங்கே சிலருக்கு சீமான் போபியா இருப்பது போல் எனக்கிருப்பது கூத்தமைப்பு போபியா. என்று கூத்தமைப்பானுகளுடன் சேர்ந்து கூத்தாடி தேசியம் உரத்து இனக்கொலையாளனுக்கு காவடியெடுத்து குத்தோ குத்தென்று குத்தினார்களோ அன்றோடு தேசிய்க்காய்களின் தேசியத்தின் அடிநாதமே காலி. இதற்குள் பிரதேசவாதம் சந்தர்ப்பவாதம் என்று யாருக்கு ஓட்டுரிங்கோ ரீலு

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் கைவிடப்பட்ட கட்சிதான் தமிழரசுக்கட்சி. அது யாரோடு கூட்டு வைத்தாலென்ன நமக்கு? நாங்களே தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்கிறார்கள், பெரிய, ஆரம்ப கால கட்சி என்றார்கள். தமிழரசு, தமிழ்த்தேசியம் என்றால் சிங்களவருக்கு கோபம், பயம் என்றார்கள், அந்த கட்சியை ஏகபோகமாக்கி அக்குவேறு ஆணிவேறாகப்பிரித்தார்கள், தாங்கள் தனித்து போட்டியிடப்போகிறோமென்றார்கள், எங்களுக்கு கீழ் இணையுங்கள், எங்களை விமர்சிக்க கூடாது என்றார்கள். இப்போ அங்குமில்லை இங்குமில்லை. தேர்தல் சொல்லும் செய்தி என்னவென்று பொறுத்திருந்து பாப்போம். சட்டமேதை எடுக்கும் முடிவு சரியாத்தானிருக்கும். இடையனால கெட்டானாம் மடையன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.