Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எல்லோரும் சொல்வதில் கொஞ்சம் நியாயம் உள்ளது என்றே நினைக்கின்றேன்

யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது

இன்னொருவர் உணர்வினை மற்றொருவர் மதிக்க வேண்டும், காயப்படுத்துவது தவறு. இது இரு பக்கமும் சரியான விகிதத்தில் நடைபெறும் பொழுது பிரச்சனைகள் வலுப்பது குறையும்

வலது மற்றும் இடது சாரிகள் விசித்திரமானவர்கள், அமெரிக்காவில் மாட்டு இறைச்சியை முறையே ஆதரித்தும் எதிர்த்தும் போராடும் அவர்கள் இலங்கை இந்தியாவில் அதை மாற்றிச் செய்கிறார்கள்.உணவை அரசியல் ஆக்குவதால் அவர்கள் அதிகாரம் அடைக்கிறார்கள்

கனவு காணும் போழுது மிருகம் துரத்துவது போலோ அல்லது கிழே விழுவது போன்றோ வரும் காட்சிகள் எல்லாம் பல ஆயிரம் வருடம் முன் எம் முன்னோர்கள் வாழ்ந்த, பட்ட, வாழ்வின் நினைவுகள் என்று சொல்வார்கள், அது போல் நாமும் ஆதி காலத்தில் உண்ட இறைச்சி வத்தலை விட்டுவிட்டு விடாப் பிடியாக சைவ உணவோடு மட்டும் வாழ்ந்து விட்டு போக முடியாது, நான் 20 வயது வரைக்கும் மச்சம் சாப்பிட வில்லை, இன்று மச்சம் இல்லாமல் உணவு இறங்குவதும் இல்லை. நீங்கள் மாறா விட்டாலும் உங்கள் பிள்ளைகள் மாறி விடும். ஆகவே விடாப் பிடியாக ஒரே பிடியில் நிற்பது தோல்வியையும் விரக்தி நிலையையும் உருவாக்கும்.

ஒரு மனிதன் தான் பிறந்து வளர்ந்த சமூகம், சாதி, மனநிலை, உண்ட உணவு, அவனுக்குள் காலா காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கடந்து உடனடியாகவெல்லாம் வந்து விட முடியாது. அதற்கு காலம் எடுக்கும். சில நேரம் பரம்பரைகள் தாண்டித் தான் தாம் இதுவரை நம்பியதில் கோளாறு உண்டு என்று தெரிய வரும். சமூகத்தை திருத்தி எடுக்கின்றேன் என்று புறப்படும் புரட்சியாளர்களுக்கு இந்தப் புரிதல் முக்கியம். உடனடிப் புரட்சி வன்முறையில் முடியும்.

அரசியலில் மதம் கலக்கக் கூடாது. வேலன் சுவாமிக்கு இது தேவை இல்லாத வேலை. அவரே பார்க்க காட்டுக்கு வேட்டை நாயோடு உடும்பு பிடிக்கப் போகும் ஆள் போல் உள்ளார். அவரின் உடம்புக்கும் முக லட்ஷணத்துக்கும் அவர் எடுத்த அரசியல் தேவை இல்லாத ஆணி.

சரி இது போன்ற பிரச்சனைகளுக்கு எது தான் தீர்வு?

இது போன்ற பிரச்சனைகள் இடைக்கிட நடப்பதே தீர்வு.

Edited by பகிடி

  • Replies 218
  • Views 9.1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Justin
    Justin

    இங்கே வேலன் விசிறிகளாக இருப்போருக்கு விளங்காத ஒரு விடயம்: தனி மனித எல்லைகள் - boundaries. மற்றவன் உணவு, மற்றவனின் மத நம்பிக்கை/ நம்பிக்கையின்மை, மற்றவனின் படுக்கையறையில் யார் போன்ற விடயங்களில் மூக்கை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Sasi_varnam
    Sasi_varnam

    இப்பொழுதுதான் Barista நிறுவனத்தின் தலைமை நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்துப்பேசினேன். என்னுடன் பேசிய விளம்பர பகுதியின் இயக்குனர் Ms.திலந்தி ஏற்கனவே தாங்கள் இந்த நிகழ்வு பற்றி அறிந்து கொண்டதாகவும்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள்.

எனக்கு தெரிந்த வரையில்

1,... படிக்க

2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம்

இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன்

கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

நீங்க வேற, இதை அறிந்ததில் இருந்து எனக்கு கந்தையா அண்ணை மேல் உள்ள மதிப்பு பலமடங்கு எகிறி உள்ளது.

மேளகாரருக்கே இந்த உபசரிப்பு எண்டால் நாங்கள் விருந்தினராக போனால் தடல்புடல் பண்ணி விடுவார் என நினைக்கவே வாயூறுது🤣.

மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும்

பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪.

குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, goshan_che said:

ஆதாரத்துடன், சமய நூல்களின் பின் புலத்துடன் விளக்க முடியுமா?

நக்கல் இல்லை. உண்மையான கேள்வி.

நாங்கள் எல்லா விடயங்களையும் சீரியஸ்சாக கதைக்க முடியாது. மத விடயங்களில் ஆதாரம் என்று பார்த்தால் எதுவுமே மெய்யானது இல்லை.வாதம் விதண்டாவாதம் செய்யலாமே தவிர நிறுவப்போவது யாருமில்லை.

கலிகை கந்தனுக்கு ஒரு நக்கல் கதை இருக்கும்.

கதிர்காம கந்தனுக்கு இன்னொரு நக்கல் கதை இருக்கும்.

செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும்.

பணக்கார கந்தன் நல்லூரானுக்கு இன்னொரு நக்கல் இருக்கும்.

மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து.மற்றும் படி அந்த இயற்கையை நோக்கி அரோகரா சொல்வதில் எந்த தவறுமில்லை.

இயற்கை வலிமையானது.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை

100% சரியான கருத்து.

அதாவது மத நம்பிக்கை என்பது வெறும் நம்பிக்கை.

ஆகவே அது அந்த நம்பிக்கைக்குரியவர்களை மட்டும்தான், அதன் எல்லைக்குள் மட்டும்தான் கட்டுப்படுத்த வேண்டும்.

எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது.

கேம் ஓவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

எனக்கு தெரிந்த வரையில்

1,... படிக்க

2,..தொழில் அல்லது தொழில் தொடங்க ...அனேகமாக வியாபாரம்

இந்த இரண்டையும் புங்குடுதீவு கொடுத்து இருந்தால் அவர்கள் ஒருபோதும் புங்குடுதீவை விட்டுட்டு வெளியேறியிருக்க. மாட்டார்கள் இது எனது கருத்துகள் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்த நிலையிலும் அவர்களின் வருங்காலச்சந்ததி கல்வி வேலைவாய்ப்பு பெறக்கூடியதாக. புங்குடுதீவு மாற்றி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளவில்லை மாறாக ஆயிரத்க்கணக்கான. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து கோவில் கட்டுகிறார்கள் என்ற செய்திகளை பார்த்தேன்

கடலை ஆழமாக்கி நிலமட்டத்தை உயர்த்தி பல தொழில் நிறுவனங்களையும் கல்வி நிலையங்களையும் உருவாக்கி வெளி ஊரிலுள்ள மக்களை புங்குடுதீவில். குடியேறச்செய்யமுடியும். ஆனால் அப்படி ஒரு அறிகுறியும். தெரியவில்லை பெரிய கோவில் கட்டுவதில். தான் குறியாகயிருக்கிறார்கள்.

பள்ளிகூடத்துக்கு சுற்று மதில் கட்டி உள்ளார்கள். நாலு கால் பிராணிகளுக்கு தாக சாந்தி குட்டைகள் கட்டி உள்ளார்கள்.

அவர்கள் இடம் பெயர்வதை பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.

அதே போல் ஏனைய ஊர்கள் போலத்தான் அவர்களும் கோயில், அலங்கார வளளவு என வேலை திட்டங்களை செய்கிறார்கள்.

இவை எதையும் நான் சொல்லவில்லை.

நான் சொன்னது நல்லூரும், தீவகமும் அயல் அல்ல. ஆகவே புதிதாக வருபவர்களுக்கு அதாவது வந்தான் வரத்தானுகளுக்கு நல்லூரின் வழமை தெரியாது இருப்பது ஆச்சரியமல்ல.

58 minutes ago, Kandiah57 said:

மேளகாரருக்கு விருந்து வைத்தது நான் இல்லை எனது அப்பா என்பதை மீண்டும் மீண்டும்

பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏🙏🤪.

குறிப்பு,.....அப்படி தப்பித்தேன் 🤣

குட்டி 16 அடி பாய்ந்து அப்பாவின் பெயரை நிலைநாட்ட வேண்டும்.

அப்படி செய்தால் கிடா விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு…

இவன் தந்தை என்நோற்றான் கொல் என்று சொல்லுவோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அவர்களும் கோயில்,

கோயில் ஆயிரம் கோடியில் கட்டுவதாக. அறிந்தேன். அம்மன் கோயில் இது தான் மிகப்பெரிய கோவில் இந்த தகவல்கள் பிழையா ???

6 hours ago, goshan_che said:

நான் சொன்னது நல்லூரும், தீவகமும் அயல் அல்ல. ஆகவே புதிதாக வருபவர்களுக்கு அதாவது வந்தான் வரத்தானுகளுக்கு நல்லூரின் வழமை தெரியாது இருப்பது ஆச்சரியமல்ல.

ஆம் உண்மை தான்

6 hours ago, goshan_che said:

அப்படி செய்தால் கிடா விருந்தை ஒரு பிடி பிடித்து விட்டு…

எல்லோரும் வேலை வெட்டி இல்லாமல் இருந்து சாப்பிட பார்க்கிறார்கள் 🤣

இதை விட அந்த வேலன். பறுவாயில்லை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

மத விடயத்தில் அவரவர் நம்பிக்கையை தவிர வேறெதும் இல்லை.மத நூல்களும் மத வரலாறுகளும் பொய்யானவை என்பது என் கருத்து

இது தான் என் கருத்தும். நீங்கள் ஜேர்மனியில் கோயில் கட்டவில்லையா???? அல்லது நிர்வாகிக்கவில்லையா.???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, goshan_che said:

எனவே எந்த மதத்தின் வணக்க தலத்தின் எல்லைக்கு அப்பால் நடப்பவை எதிலும் எந்த மதமும் தலையிட கூடாது.

கேம் ஓவர்.

உந்த வெட்டொண்டு துண்டு இரண்டு கதையெல்லாம் அரபுநாடுகளிலை சரிவராது. பன்றி படத்தையே கண்ணிலை காட்டக்கூடாதாம்.😂

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

யார் எதை உண்பது என்பதை வேறொருவர் தீர்மானிக்கக் கூடாது

இதில் தனிப்பட்ட தடுப்பு இல்லை.

பொதுக அங்கு இருப்பவர்கள் திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை. கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வீட்டில் உண்பதை ஒருவரும் தடுப்பது இல்லை. அனால், பொதுவாக அவர்களும் அப்படியே. ஒன்றும் வலுக்கட்டாயமாக இல்லை.

அப்படி திருவிழா காலத்தில் சமைப்பது இல்லை என்பது, மிகவும் பெரிய பிரதேசம், இருபாலையையும் தாண்டி அந்த (பொது) வழக்கம் இருக்கிறது.

அதே போல அங்கேயே பூர்வீகம் என்றால் திருமணம் கூட செய்வது இல்லை. முருகனுக்கு பூங்காவனத்தில் திருமணம் முடிந்ததே திருமணம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை.

ஒன்றில் திருவிழா ஆரம்பம் ஆக முதல் அல்லது திருவிழா முடிந்து திருமணங்கள் நடப்பது.

வெளியில் இருந்து வந்தவர்களுக்கு அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருக்கலாம்.

சொன்னது போல, சமயம், கலாசாரம், சூழல், நம்பிக்கை கலந்த பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்
On 24/5/2025 at 06:05, goshan_che said:

இது எந்த தனி நபருக்குமான கருத்து அல்ல.

உண்மையிலே உங்களை எல்லாம் பார்க்க பரிதாமாக இருக்கிறது.

சுமந்திரன் பார் வைக்கிறார், பாறிஸ்டா வைக்கிறார் என பொய்களை காவி திரிகிறீர்கள், அவர் அரசியல்வாதி அதையாவது அரசியல் எதிர்ப்பு என விளங்கி கொள்ளலாம்.

சசி வர்ணம் கருத்து வறுமை ஏற்பட்டதும், கருத்தாண்மை அற்ற தனமாக நான் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்ல, அந்த பச்சை பொய்யை காவி திரிவதும் மட்டும் இல்லாமல், என் மீது பிரதேசவாத முத்திரை குத்தி அதனால் மனம் புண்பட்டதாக வேறு சொல்கிறீர்களே?

வெட்கமாக இல்லையா?


உண்மைக்கு நன்றி.

அபாய அறிவிப்பு

நல்லூரில் எனது அக்கா வீட்டில் மச்சம் சமைக்க மாட்டார்கள், அல்லது எனது அண்ணா வீட்டில் மாதம் ஒரு முறைதான் மச்சம் சமைப்பார்கள் ரீதியில் எழுதும் நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.

ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன்.

17 hours ago, goshan_che said:

தீவகமும் நல்லூரும் அயற்கிராமங்கள் இல்லை 🤣. அப்படி எண்டால் தீவக மக்கள் நல்லூருக்கு ஏன் குடி பெயர்கிறார்கள்.

யாராவது தான் வாழும் கிராமத்தை விட்டு பக்கத்து கிராமத்துக்கு இடம் பெயர்வார்களா?

மறுபடியும் பச்சை பொய்.

இப்படி நான் எழுதவில்லை.

ஆதாரம் காட்டவும் அல்லது மன்னிப்பு கேட்கவும்.

மீண்டும் பச்சை பொய்!

நான் இங்கே இவர்கள் இருவரும் 600 வருடத்துக்கு முன் வந்தவர் என எங்கும் எழுதவில்லை. நீங்கள் எதிர்க்கும் தெலுங்கு வம்சாவழியினர் பல விஜய நகர அரசோடு வந்தவர்கள். அதைதான் சொல்லி உள்ளேன்.

இவர்கள் இருவரும் எப்போ வந்தார்கள் என எனக்கு தெரியாது.

பொய்யே உன் மறுபெயர்தான் விசுகு அண்ணா வா?

1 minute ago, விசுகு said:

ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன்.

நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.

இந்தளவுக்கு சீமான் கூட பேசியதில்லை. டொட்.

  • கருத்துக்கள உறவுகள்

வெளி மாநிலப் பயணம், வேலைகள் என்று தள்ளி நின்று விட்டு ஒரு வாரம் கழித்து வந்து பார்த்தால், திரியை "வாய்க்கால்" வெட்டி வேறு திசையில் ஓட விட்டிருக்கிறார்கள்😂! மடை மாற்றுவதில் தானே பல வேடங்களை மறைக்க இலகுவான வழி இருக்கிறது😎?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

உந்த வெட்டொண்டு துண்டு இரண்டு கதையெல்லாம் அரபுநாடுகளிலை சரிவராது. பன்றி படத்தையே கண்ணிலை காட்டக்கூடாதாம்.😂

அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் …

அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம்.

6 hours ago, விசுகு said:

ஆனால் அவர்களுக்கு நல்லூரின் வரலாறு தெரியாமல் இருப்பது வியப்பல்ல என்றே கூறினேன்.

நல்லூரின் வந்தான், வரத்தானுகள் உங்களுக்கும் பிரதேசவாத முத்திரை குத்த கூடும்.

இந்தளவுக்கு சீமான் கூட பேசியதில்லை. டொட்.

பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு ….

உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள்.

இப்போதும் சொல்கிறேன் …

நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே….

எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி…

ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் …

அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம்.

பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு ….

உண்மையின் உக்கிரம் தாங்காமல் டொட் வைத்துள்ளீர்கள்.

இப்போதும் சொல்கிறேன் …

நல்லூருக்கு தீவக பகுதியில் இருந்து 50 வருடத்தில் வாழ வந்தவர்கள் வந்தான் வரத்தான்களே….

எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி…

ஆகவே இவர்களுக்கு நல்லூரின் நடைமுறை தெரியாமல் இருந்தால் அது ஆச்சரியமான விடயம் அல்ல.

இனிமேல் தமிழகத்தை ஆள வந்தான் வரத்தானுக்கு அருகதை இல்லை அவர்களுக்கு இந்த மண் மற்றும் மக்கள் சார்ந்த அறிதல் இருக்கவாய்ப்பில்லை என்பதை சாட உங்களால் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இனிமேல் தமிழகத்தை ஆள வந்தான் வரத்தானுக்கு அருகதை இல்லை அவர்களுக்கு இந்த மண் மற்றும் மக்கள் சார்ந்த அறிதல் இருக்கவாய்ப்பில்லை என்பதை சாட உங்களால் முடியாது.

நான் நல்லூரில் இருக்கும் தீவக மக்கள் அங்கே அரசியல் செய்ய கூடாது என சொல்லி இருந்தால் - நீங்கள் சொல்வது சரி.

ஆனால் தமிழகத்தை பற்றி 50 வருடம் முன் குடி பெயர்ந்த வட இந்தியருக்கோ, தெலுங்கருக்கோ அதிகம் தெரியாது இருக்க வாய்புண்டா என கேட்பின் என்பதில் உண்டு என்பதே.

இதை முன்பே பியூஸ் மானுஷ் விடயத்தில், பாண்டே விடயத்தில் கூறி உள்ளேன். இருவரும் அண்மையை குடியேறிகள். ஆகவே அவர்களுக்கு மண்சார்ந்த புரிதல் குறைவு என.

அடிக்கடி மொழிவழி மாநில பிரிப்புக்கு முன், பின் என நான் வகுப்பதை நீங்கள் முன்னர் அவதானித்திருக்க கூடும்.

இதே காரணம் தான்.

ஆனால் இதே காரணத்தை வைத்து தமிழில் பேசி, 600 வருடமாக தமிழ் நாட்டில் வாழ்வோர் மீது நாம் பயன்படுத்த கூடாது. ஏன் என்றால் அவர்கள் வந்தான் வரத்தான் அல்ல. தமிழர்கள்.

இன்னும் 100 வருடத்தில் தீவகத்தோடு தொடர்பே அற்று போய், தம்மை நல்லூரான்களாக அவர்கள் உணரும் போது உங்கள் உறவினரின் சந்ததியும் வந்தான் வரத்தானாக இருக்காது. அவர்களுக்கு அப்போ நல்லூரின் வழமை அல்லது வழமை என ஏற்கபட்டவை பற்றி தெளிவு இருக்கும்.

11 hours ago, குமாரசாமி said:

உந்த வெட்டொண்டு துண்டு இரண்டு கதையெல்லாம் அரபுநாடுகளிலை சரிவராது. பன்றி படத்தையே கண்ணிலை காட்டக்கூடாதாம்.😂

இதில் பாதியளவு தான் உண்மை.

ஐக்கிய அரபு நாட்டில் (UAE) முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு பன்றி இறைச்சி விற்கின்றனர். அதற்கென்றே தனி அறை போன்ற ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சில பல்பொருள் அங்காடிகளில் விற்கின்றனர். நான் வாங்கி சமைத்துள்ளேன்.

UAE தவிர கட்டார், பஹ்ரெயின், எகிப்து, ஓமான், லெபனான் ஆகிய அரபு நாடுகளிலும் விற்கின்றனர். முஸ்லிம் நாடுகளில் பெரிய நாடான இந்தோனேசியாவிலும் விற்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அதுதான் அவர்களை தாலிபான்ஸ் என்றும் …

அதே மடைமையை நாமும் பின் பற்ற வேண்டும் எனும் தமிழர்களை தமிழ் தாலிபான்ஸ் என்றும் அழைக்கிறோம்.

நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.

தலைப்புக்கு பொருந்தாதுவிடினும் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானது!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

பொய்களை உருட்டியது வேலைக்கு ஆகவில்லை என்பதால் - அர்த்தமே இல்லாமல் சீமானை இழுத்து இரெண்டு வரியை சொல்லி விட்டு ….

அர்த்தமேயில்லாமல் அல்ல, பொய் என்றால் சைமன், சைமன் என்றால் பொய்!!!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.

3 hours ago, வாலி said:

தலைப்புக்கு பொருந்தாதுவிடினும் இந்தக் கருத்து முற்றிலும் உண்மையானது!

அவர்கள் சேர்சசை தாண்டி வெளியே வந்து மக்களின் வாழ்வியலின் தனிப்பட்ட சுதந்திரங்களின் தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாமிய, இந்து, சைவ தலிபான்கள் அப்படியல்ல.

மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் தலையிடுபவர்களே தலிபான்கள் ஆவர்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

நீங்கள் அடிக்கடி தலிபான்ஸ் எனும் சொல்லை பாவிப்பதால் உங்கள் உருட்டல் பிரட்டல்களை வறட்டல்களை வத்திக்கான் நோக்கியும் திசை திருப்ப வேண்டியுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

கூட்டி கழித்து பார்த்தால் பெரிய தலிபான்கள் வத்திக்கானில் தான் இருக்கின்றார்கள்.

கூட்டி கழித்து எல்லாம் பார்க்கத்தேவையில்லை - நேரடியாக பார்த்தாலே உலக வரலாற்றில் மதத்தின் பெயரால் நடந்த மனிதகுல விரோத நடவடிக்கைகளில் பாரிய பங்கு வத்திகானுக்கும் உள்ளது.

எமது ஊரில் நல்லூர் ஏன் அதன் பூர்வீக அமைவிடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் உள்ளது, கேதீஸ்வரம், கோணேஸ்வரம் என்ன ஆகின. சந்திரசேகர ஈச்சரம் எங்கே? மாத்தறையில் இருந்த விஷ்ணுகோவில் எங்கே? தென்னமரிக்க சுதேச மொழி, கலாச்சாரம், இனங்கள் எங்கே?

இப்படி பலதில் இதை காணலாம். இதுகூட கொஞ்சம்தான், இன்னும் சிலுவையுத்தம், ஐரோப்பாவில் பேகன் குடிகளின் அழிப்பு என பலது உள்ளது.

இது உலகபோர்களில் ஜேமனிக்கு கண்டும் காணாத ஆதரவு வரை தொடர்ந்தது.

ஆனால் இன்றைய உலகில் வத்திகான் காலமாற்றப்படி அடக்கியே வாசிக்கிறது.

ஆனால் தாலிபான்ஸ், சங்கிகள் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கே நிற்கிறார்கள்.

நிற்க,

தாலிபான்ஸ், வத்திகான்ஸ் அப்படி என்பதால்….நாமும் தமிழ் தாலிபான்கள் போல் நடக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களில் தலையிடுபவர்களே தலிபான்கள் ஆவ

அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம்.

மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே.

ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது.

குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

அவர்களும் சேர்ச்சை தாண்டி தலையிட முடிந்தால், வாய்ப்பு இருப்பின் கலையிடுவார்காள்…அண்மையில் கூட சில தனிமனித சுதந்திர விடயங்களில் இலங்கையில் பிக்குகளும், மெளலவிகளும், மல்கம் ரஞ்சித்தும் ஒரே குரலாக ஒலித்ததை கண்டோம்.

மதம் என்பதே by definition தனிமனித சுதந்திரத்துக்கு எதிரான ஒரு பிற்போக்குவாத கட்டமைப்பே.

ஆகவேதான் அவரவர் மதங்களின் பிற்போக்கை அவரவர் எதிர்ப்பதும், அதற்கு ஏனையோர் துணை நிற்பதும் அவசியமாகிறது.

குறிப்பாக இல்லாத ஒன்றை உருவாக்கி, அதை ஊர் வழமை என காதில் பூவைக்க முனைந்தால் - அந்த பின்னோக்கி செல்லும் முயற்சியை, அல்லது தமிழ் சங்கி மயப்படுத்தலை, அல்லது தமிழ் தாலிபான்களின் செய்கையை எதிர்க்க வேண்டியது நாகரீகம் அடைந்து விட்ட ஒவ்வொரு தமிழனதும் கடமை.

அவர்கள் விரும்பினாலும் அவ்வாறு தனிமனித சுதந்திரத்தில் தலையிட முடியாத அளவுக்கு அந்த மதத்தை பின்பற்றும் மக்களிடையே விழிப்புணர்வும் அறிவியலும் மேம்பட்டுள்ளது. அதனால் அவர்களால் தலிபான்களாக மாற முடியாமல் உள்ளது.

ஆனால் எம்மவரிடையே காவியையும பட்டையையும் போட்டாலே வேலன் போன்ற டுபார்கூர் பயல்களாலேயே எளிதாத சொந்த மக்களுக்கே பட்டை நாமம் சூட்டக் கூடிய நிலையே இன்னும் உள்ளது. இந்த தலிபான்களின் வாலும் ஒட்ட நறுக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2025 at 22:46, குமாரசாமி said:

செல்வசந்நிதியானுக்கு இன்னொரு பட்டப்பெயர் இருக்கும்.

(பொதுவானது)

முதலில் பெயரை சரியாக அறியவும்.

செல்லச்சன்னதி. (சந்நிதி சம்ஸ்கிருத மயப்படுத்தப்பட்ட வடிவம்)

(செல்வச்சந்நிதி - எம்மவார்கள் திரித்தது)

செல்லச்சன்னதி / செல்லச்சந்நிதி - சொல்லின் கருத்தே (பிரியாணிக்கும் போது) சென்ற அல்லது வந்தடைந்த இடத்தில் (முருகனுக்கு) சன்னதி (சந்நிதி).

புராணா வரலாறு - வீரவாகுத் தேவர் சூரனிடம் தூது வந்து, அதிலும் சண்டை வந்து, (திருச்செந்தூர்) திரும்பும் போது சந்தி காலம் (மாலைக்கும், இரவுக்கும் இடைப்பட்ட காலம் - நாம் மைம்மல் பொழுது என்பது) ஆகிவிட்டது.

(சந்தி காலம் - (பிரம்ம முகூர்த்த காலம் போல) மிகவும் சக்தி உள்ள காலம் இறைபணிகளுக்கு)

வீரவாகுத்தேவர் முருகனுக்கு பூசை செய்ய வேண்டிய கட்டாயத்தில்.

அப்போது முருகனுக்கு வீரவாகுத்தேவர் சன்னதி (சந்நிதானம்) வைத்து பூசை செய்த இடமே செல்லச்சன்னதி, இலங்கைத்தீவில் (அப்படி புவியியல் இருந்து இருந்தால்) முருகனுக்கு உருவாகிய முதல் சன்னதி.

( சந்தி (காலம்) சன்னதி / சந்நிதியாக மருவியதாக ஓர் நம்பிக்கை இருக்கிறது),

இப்போதும் அந்த இடத்தில் கல்லோடை (என்று அழைப்பது,), வீரவாகுத் தேவர் பாதச்சுவடுகள் என்று இருக்கிறது, பூசையும் செய்யப்படுவது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

எப்படி நான் இலண்டனில் ஒரு வந்தான்வரத்தானோ அப்படி…

ஆமாம் நீங்கள் வந்தான்வரத்தான் தான் ஏனென்றால் இலங்கை என்ற நாட்டிலிருந்து

பிரித்தானியா என்ற நாட்டுக்கு குடியேற்றி உள்ளீர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.