Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.

சீமான் விஜயலட்சுமி வழக்கு

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது.

கைது செய்ய தடை இல்லை

அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

தவறாக பேச கூடாது

எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

  1. இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள்.

  2. அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  3. அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே.

  4. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால்

    மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.

இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தமையால் தானா சீமான் ரகசியமாக சபரீசனை அண்மையில் சந்தித்தார் (இவ்வாறு ரகசியமாக சந்தித்தார் என ஜூனியர் விகடன் கழுகார் பக்கத்தில் எழுதியுள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சென்னை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் அவரை கைது செய்ய தற்போது விதிக்கப்பட்டு உள்ள தடை நீக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறி உள்ளது. அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன.

சீமான் விஜயலட்சுமி வழக்கு

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சீமான் செப்டம்பர் 24-க்குள் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. விஜயலட்சுமிக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவரிடம் கொடுத்த வாக்குறுதிகள், அதன்பின் அவரை பற்றி பொதுவெளியில் தவறாக பேசியதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

அவர் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவரது கைதுக்கான தற்போதைய தடை நீக்கப்பட்டு, அவர் எந்தப் பாதுகாப்பும் இன்றி விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிமன்றம் எச்சரித்தது.

கைது செய்ய தடை இல்லை

அதாவது சீமானை கைது செய்ய உள்ள தடை நீக்கப்படும், அவர் கைது செய்ய அனுமதிக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. மேலும், இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்க்க இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. சட்டச் செயல்முறைக்கு விஜயலட்சுமி உரிய உத்தரவாதங்களை வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் நடிகையைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சீமான் நீதிமன்றத்திற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.

தவறாக பேச கூடாது

எதிர்காலத்தில் அந்த எதிர்காலத்தில் நடிகையை பற்றி தவறாக பேச கூடாது. இரு தரப்பினரும் தங்கள் குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும். சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீமான் மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் நடிகை வழக்கை வாபஸ் வாங்கலாம் என்றும் இது நீதிக்கும் மரியாதைக்கும் உகந்த சமரசம் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

சீமான் மீதான கைதுக்கான, விசாரணைக்கான இடைக்கால தடை அடுத்த விசாரணை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டு, அன்று சீமானின் பதிலையும், அடுத்தகட்ட நடவடிக்கையையும் நீதிமன்றம் பரிசீலிக்கும். தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்த நீண்டகால சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளது.

அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/news/chennai/naam-tamilar-seeman-should-apologize-to-vijayalakshms-orders-sc-735115.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

டிஸ்கி

  1. இனி வழக்கு வாபஸ்/தள்ளுபடி ஆனால் - சீமான், விஜி அண்ணியிடம் மன்னிப்பு கேட்டார் என்பதே அதன் பொருள்.

  2. அப்படி கேட்காவிடில் தா நா அரசு வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  3. அப்படி மன்னிப்பு கேட்பின் - விஜி அண்ணி இதுவரை சொன்னது உண்மை என்றாகிறது. சீமான் மட்டும் அல்ல, விஜி அண்ணியை கேவலமாக எழுதிய யாழ் கள ஆண் சிங்கங்களும் தார்மீக ரீதியில் மன்னிப்பு கேட்க வேண்டியோரே.

  4. ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால்

    மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.

வாங்கோ, வந்ததோட தொடர்ந்து எழுதுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான (முதல்) மனைவியிடம் மன்னிப்புக் கேட்க என்ன வெட்கம்.?

கமோன் கமோன் செண்ட் டமிழன் சீமான் அண்ணா! ஒரு மன்னிபோடு விஜி அண்ணியையும் வீட்ட கூட்டீட்டு வந்திடுங்க!

பேபி அய் டோண்ட் நீட் டொலர் பில்ஸ் டு ஹவ் பfன் டுநைட்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இப்படி தீர்ப்பு வரும் என எதிர்பார்த்தமையால் தானா சீமான் ரகசியமாக சபரீசனை அண்மையில் சந்தித்தார் (இவ்வாறு ரகசியமாக சந்தித்தார் என ஜூனியர் விகடன் கழுகார் பக்கத்தில் எழுதியுள்ளது)

  1. உங்களுக்கு நினைவிருக்கும், சபரீசன் இலண்டனில் ஊழல் செய்யதார் என்பதாக நாதமுனி ஒரு ஆதாரமற்ற கட்டுகதையை (சுஜ ஆக்கம்🤣) எழுதி அதை நிர்வாகம் தூக்கியது. அதே சபரீசனைத்தான் ஏதோ தகாத உறவு காதலியை போய் பார்ப்பதுபோல் ஒழிச்சு போய் சந்தித்துள்ளார் அண்ணன் சீமான்.

  2. இதை ஜூவி கிழித்து தொங்க போட்டபின், ஒரு காலத்தில் சீமானை அண்ணா, தம்பி என ஆரத்தழுவிய சவுக்கு சங்கர் அங்கே என்ன நடந்தது என மிக விபரமாக இந்த வீடியோவில் சொல்கிறார் (சுட்டி கீழே).

  3. சீமானுக்கும், தூசண துரைமுருகனுக்கும் விஜையை பிராண்டும் கொந்திராத்தை, ஸ்டாலின் வழங்கி உள்ளாராம் (மு க முத்து இறந்த நேரம் அவரின் குடும்பத்தை பார்க்காமல், ஸ்டாலினை சீமான் பார்த்த போது இந்த டீல் ஓக்கே ஆனாதாம்).

  4. இந்த டீலின் படியேதான் சபரீசன் சீமானுக்கு பணத்தை பட்டுவாடா செய்தாராம்.

  5. இந்த பேட்டியில் சவுக்கு சீமான், அவரின் கட்சி நடத்தும் உண்மை நோக்கம், ரஜீவ் காந்தி என பலதை போட்டு உடைக்கிறார்.

  6. இவை எல்லாம் சவுக்கு சீமானோடு கூடி குலாவவிய காலத்துக்கு முன்பே, யாழில் தெட்ட தெளிவாக எழுதபட்ட விடயங்கள்.

  7. சீமானை நம்பி மோசம் போன யாழ்கள, புலம்பெயர் தம்பிகளை நினைக்கதான் ஒரே அழுகையா வருது 🤣. ஒருசிலர் தோசை கடை என, தேத்தண்ணி கடை என எஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் சில பாவப்பட்ட உயிர்கள், கடைசிவரை தொண்ட தண்ணி வத்த கத்தி கொண்டு இருந்தவயள்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் ஊகம் நிஜமான தருணம்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

அடுத்த விசாரணைக்கு முன் சீமான் தனிப்பட்ட வகையில் விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கு நீக்கப்படும். இல்லையென்றால் சீமான் கைதாகும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வழக்கு வாபஸ் ஆகும் பட்சத்தில் சீமான் விஜயலட்சுமியிடம் தனிப்பட்ட வகையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

8 hours ago, goshan_che said:

ஒரு வழியாக, பிஜேபி ஆதரவுடன், சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்க்க, விஜி அண்ணியை மிரட்டி, தாஜா பண்ணி சீமான் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தப்பி விடக்கூடும். ஆனால்

மக்கள் மன்றில் இனி அவர் எப்போதும் “பாலியல் சைக்கோ சீமான்”தான்.

இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நீதிபதிகள் எவ்வாறு செயற்படுவார்கள்...

யார் யார் எல்லாம் நீதித்துறைக்குள் தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள்...

ஒவ்வொரு முறையும் மாநில அரசு மாறிய பின்னர் யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்....

தண்டனை பெறறார்கள் ( அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் )

என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.

சீமான் திராவிடத்திற்கும் மதச் சார்பான பா ஜ க விற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கையில் அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்

யார் யார் எல்லாம் எப்படி யோசிப்பார்கள் என்பது எங்களுக்கும் விளங்கும்

உங்கள் டிஸ்கி மூலம் உங்களின் ஏக்கம் புரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சபரீசன் என்பவர் யார்? இதுவரை அவரை பற்றி நான் யாழ்களத்தில் படிக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நீதிபதிகள் எவ்வாறு செயற்படுவார்கள்...

யார் யார் எல்லாம் நீதித்துறைக்குள் தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள்...

ஒவ்வொரு முறையும் மாநில அரசு மாறிய பின்னர் யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்....

தண்டனை பெறறார்கள் ( அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் )

என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.

சீமான் திராவிடத்திற்கும் மதச் சார்பான பா ஜ க விற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கையில் அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்

யார் யார் எல்லாம் எப்படி யோசிப்பார்கள் என்பது எங்களுக்கும் விளங்கும்

உங்கள் டிஸ்கி மூலம் உங்களின் ஏக்கம் புரிகின்றது

இன்னும் 7 மாசம்தான்…🤣

#பந்தயம்


அதே நீதிதுறையைத்தான் டெல்லியில் பாஜக முதன்மை வக்கீலை வைத்து வளைத்து, தனது செல்வாக்கால் - பாலியல் வன்முறை, கட்டயா கருக்கலைப்பு வழக்கை, வெறும் மன்னிப்போடு முடித்து வைத்துள்ளார் சீமான்.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சபரீசன் என்பவர் யார்? இதுவரை அவரை பற்றி நான் யாழ்களத்தில் படிக்கவில்லை.

ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர்.

இன்றைய திமுகவின் அதிகார மையங்களில் ஒருவர், திரைமறைவு நகர்வுகளில் முதன்மை வகிபாகம் உள்ளவர்.


👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக.

#வாடகை வாய்

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைனர் குஞ்சு சீமான், டெல்லி உச்ச நீதிமன்றில் அட்வான்ஸ் புக்கிங்கில் ரேப் செய்ய தருணம் 👇

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

சீமானை நம்பி மோசம் போன யாழ்கள, புலம்பெயர் தம்பிகளை நினைக்கதான் ஒரே அழுகையா வருது 🤣. ஒருசிலர் தோசை கடை என, தேத்தண்ணி கடை என எஸ் ஆகிவிட்டார்கள். ஆனால் சில பாவப்பட்ட உயிர்கள், கடைசிவரை தொண்ட தண்ணி வத்த கத்தி கொண்டு இருந்தவயள்.

large.IMG_9028.jpeg.4447e11f016c39c6b26c

  • கருத்துக்கள உறவுகள்

நான் மன்னிக்கத் தயார் விஜி அண்ணி அதிரடி! 😁

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வாத்தியார் said:

இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் நீதிபதிகள் எவ்வாறு செயற்படுவார்கள்...

யார் யார் எல்லாம் நீதித்துறைக்குள் தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள்...

ஒவ்வொரு முறையும் மாநில அரசு மாறிய பின்னர் யார் யார் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்....

தண்டனை பெறறார்கள் ( அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் )

என்பது சிறு குழந்தைகளுக்கும் தெரியும்.

சீமான் திராவிடத்திற்கும் மதச் சார்பான பா ஜ க விற்கும் எதிர்வினை ஆற்றிக் கொண்டிருக்கையில் அதுவும் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்

யார் யார் எல்லாம் எப்படி யோசிப்பார்கள் என்பது எங்களுக்கும் விளங்கும்

உங்கள் டிஸ்கி மூலம் உங்களின் ஏக்கம் புரிகின்றது

இங்க வந்தா ... பீயை சுத்தி இலையான் மொய்ப்பது மாதிரி ஒரு பீலிங்😁

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

இன்னும் 7 மாசம்தான்…🤣

#பந்தயம்

😂😅

நான் ஒதுங்குவதால் களத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை .

ஆனால் நீங்கள் இல்லாத களம்

வற்றிப்போன நதியாக.....

மாறி விடும் என்று....... யோசிக்கின்றேன்......🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

இங்க வந்தா ... பீயை சுத்தி இலையான் மொய்ப்பது மாதிரி ஒரு பீலிங்😁

அதுதான் gutter language பேச (எழுத) நீங்கள் வந்தீர்களோ😂

12 hours ago, வாத்தியார் said:

😂😅

நான் ஒதுங்குவதால் களத்திற்கு எந்த நஷ்டமும் இல்லை .

ஆனால் நீங்கள் இல்லாத களம்

வற்றிப்போன நதியாக.....

மாறி விடும் என்று....... யோசிக்கின்றேன்......🤣

அண்ணா, நீங்களோ, நாணோ தோற்ப்பின் - ஒதுங்குவது இல்லையே பந்தயத்தின் கோரிக்கை.

ஆகவே சீமான் ஒதுங்கும் வரை கோஷா(ம்) அதிரும்🤣

14 hours ago, வாலி said:

நான் மன்னிக்கத் தயார் விஜி அண்ணி அதிரடி! 😁

மண்டியிடாத மானம் ….

மானம் மண்டிதான் இடாது….ஆனால்🤣

19 hours ago, Kavi arunasalam said:

large.IMG_9028.jpeg.4447e11f016c39c6b26c

இது ஆயிரம் காலத்து பயிர் அறுவடைக்கு தயாராகும் நேரம்.

அறுத்துட வேண்டியதுதான்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

இங்க வந்தா ... பீயை சுத்தி இலையான் மொய்ப்பது மாதிரி ஒரு பீலிங்😁

சசி என்னுடைய தமிழ் வகுப்பை தவற விட்டுவிட்டார்

என நினைக்கின்றேன்.

இடக்கரடக்கல் அடுத்த முறை கவனிக்கவும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

சசி என்னுடைய தமிழ் வகுப்பை தவற விட்டுவிட்டார்

என நினைக்கின்றேன்.

இடக்கரடக்கல் அடுத்த முறை கவனிக்கவும்

பகரவி, பவ்வி - என்ன படிப்பிதாலும், மாணவர்கள் தமக்கு பிடித்தமானதை மட்டுமே எடுப்பார்கள் - கவ்வி 🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 13/9/2025 at 01:06, goshan_che said:

👆சீமான் கேட்ட தொகையை கொடுக்க இயலாத அதிமுக, ஆனால் அதே தொகையை கொடுத்து ஆளை வாங்கி போட்ட திமுக

சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா.

நம்ம தம்பி இடும்பன் கார்த்திக் போன்றவர்களை சீமான் கழட்டி விட்டுள்ளார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீமா ஸ்டாலின் சந்திப்பில் இடம்பெற்ற அரசியல் ஊழல் புரோக்கர் தேவா.

யு டியூப் சானல்களை நம்பும் ஆள் நான் இல்லை

திட்டம் இட்டு அவர்களே கேள்விகளைக் கொடுத்து கேட்க வைத்துப் பாடமாக்கிய பதில்களை வழங்குவது தான் அங்கே நடக்கின்றது.

இந்தத் தேவா அடி பிடிக் கேஸ் ஆச்சே

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

யு டியூப் சானல்களை நம்பும் ஆள் நான் இல்லை

திட்டம் இட்டு அவர்களே கேள்விகளைக் கொடுத்து கேட்க வைத்துப் பாடமாக்கிய பதில்களை வழங்குவது தான் அங்கே நடக்கின்றது.

இந்தத் தேவா அடி பிடிக் கேஸ் ஆச்சே

இதில் எனக்கும் உடன்பாடே.

குறிப்பாக சவுக்கு சீமானை விட மோசமான அங்கிறு தட்டி. குறிப்பான அமவுண்டை கொடுத்தால் அவிச்ச மீன் துடிக்கும் என்பார்.

இங்கே ரிக்ரொக் ஆய்வுகளை இணைக்கும் பலருக்கு ஜஸ்டீன் அண்ணா கொடுக்கும் அறிவுரைகள் போலத்தான் யூடியூப் வீடியோக்களும்.

ஆனால் இயற்கை நமக்கு பகுத்தறிவை வெறும் ஒப்பனைக்கான தரவில்லை, அதை நாம் பயன்படுத்தவும் வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

இங்கே, தேவாவை ஸ்டாலின் சந்திப்புக்கு சீமான் கூட்டி போன படம்…

அவர் சசிகலா குடும்பத்தோடு, அதிமுகவோடு நெருக்கமாக இருந்த படங்கள் காட்டப்படுகிறன.

பல முண்ணனி கட்சி நிர்வாகிகள், இடும்பாவனம் போல உண்மையிலேயே இனமான உணர்வில் திமுகவை எதிர்க்கும் தம்பிகளை எல்லாம் விட்டுவிட்டு, இவரை ஏன் சீமான் ஸ்டாலினிடம் கூட்டி போனார் என்ற கேள்வியை நாம் கேட்காவிடில் நமது பகுத்தறிவை ஷோகேசில்தான் வைக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

காணொளியை முழுமையாக பார்த்தேன். இணைப்பிற்கு நன்றி. இவர்கள் பிணக்குகள் பற்றிய செய்திகளை நான் தொடர்வது இல்லை. அவ்வப்போது மேலோட்டமாக இங்கு பகிரப்படும் சில கருத்துக்களை வாசித்துள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார்.

SKK Legal
No image preview

Supreme Court: False Promise to Marry Not Rape | SKK Legal

The Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.

👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇.

கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது.

இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது.

அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும்.

ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட்.

பிகு

இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣.

நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம்

  1. பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது

  2. 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர்.

  3. சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர்.

    நீதி மன்ற தீர்ப்பு

  4. பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

  5. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை.

  6. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை.

  7. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும்,

இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை.

அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நான் விடியோவை பாக்கவும் இல்லை, பாக்கிற நோக்கமும் இல்லை.

என்னடா தேர்தல் நெருங்குது இன்னும் விஜயலட்சுமியை காணலையே என்று பார்த்தேன்.

தேர்தல் முடியிற வரைபொறுத்திருப்பம். அந்தம்மா பிறகு காணாமல் போய் அடுத்த தேர்தலுக்கு திரும்பி வருவா.

பிஜேபி, திமுக இந்த ரெண்டும் இந்த வழக்கை முடிக்கவே விடாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.