Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

02 Jan, 2026 | 01:15 PM

image

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/235025

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

02 Jan, 2026 | 01:15 PM

image

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/235025

விகாராதிபதி ...தன்னிடம் காணிக்கான பேப்பர் உறுதிகள் இல்லையாம் ...தனிய பிளான் பேப்பர் மட்டும்தான் இருக்காம் ....இது யாருடைய காதில் பூ சுத்தலோ..

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, alvayan said:

விகாராதிபதி ...தன்னிடம் காணிக்கான பேப்பர் உறுதிகள் இல்லையாம் ...தனிய பிளான் பேப்பர் மட்டும்தான் இருக்காம் ....இது யாருடைய காதில் பூ சுத்தலோ..

யாருடைய காணியிலும் நாம பிளான் போடலாம் தானே

இலங்கையில் அரைவாசி மேற்ப்பட்ட புத்த விகாரைகளுக்கு உறுதிகள் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??!

இவர் நயினாதீவில் அடாத்தாப் பிடிச்சதை எப்ப விடப்போறார்..????!

இவர் இனக்கொலைஞன் மகிந்தவின் விசுவாசி...!

இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றுவதும் தனித் தமிழீழத்துக்கான ஐநா மேற்பார்வையின் கீழ் நீதியான தேர்தலை வடக்குக் கிழக்கில் நடத்துவதுமாகும்.

இல்ல இந்தப் பிரச்சனை தொடரும். புங்குடுதீவில் விகாரை,.. நாவற்குழியில் விகாரை... கிளிநொச்சியில் விகாரை.. யாழில் விகாரைகள் என்று.. தமிழர் தாயகம் எங்கும் விகாரைகள் தீர்வின்றி எதிர்ப்புகளையும் தாண்டி முளைத்தே வருகின்றன.

இதற்கு முடிவு... சர்வதேச தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்ட தமிழர் தேசத்தை சர்வதேசத்தின் தலையீட்டின் கீழ் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி நீதி நிர்வாக பொருண்மிய அதிகாரங்களை தமிழர்களிடம் வழங்குவது மட்டுமே ஆகும்.

மற்றும்படி.. இதற்கு நிரத்தர தீர்வை எவரும் பெற முடியாது என்பதே கள நிஜமாகும்.

இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

இவருக்கு எப்படி இங்க நிலம் கிடைத்தது... எம்மவர்கள் விற்றார்களா..???! இல்ல இவர் இடையில் புகுந்து விளையாடுறரோ.. ??!

ஆண்டு சரியாக நினைவிலில்லை, ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது நான்காம் ஆண்டாக இருக்கலாம். ஒரு தமிழர் அன்பளிப்பாக அப்போதிருந்த விகாராதிபதிக்கு கொடுத்ததாக தகவல், அவரோடிருந்த இந்த நயினாதீவு பிக்கு அவருக்கு பிறகு சொந்தம் கொண்டாடினார், அதன் பின் ஒரு பிக்கு இங்கு விகாரை கட்ட முற்பட்ட போது, இவர் மறுப்புத்தெரிவிக்கவில்லை. அவரும் பிழைக்கட்டும் என்று விட்டு விட்டாராம். அதன்பிறகு வேறொரு பிக்குவுக்கு கைமாறியதாம், அவர் இன்னொரு பிக்குவுக்கு கொடுக்க, அவர் பிக்குவிலிருந்து விலகியபோது ஒரு இளம் பிக்கு பொறுப்பானாராம், அவர் பல்கலைக்கழகம் போவதால் இப்போதைய திஸ்ஸ விகாராதிபதி கையில் போயிருக்கிறதாம், இப்படி பல கதைகள். தனது காணி, உறுதியிருக்கிறது, என்றெல்லாம் கதைவிட்டவர் இப்போ பின் வாங்குகிறார். இந்தப்பிக்கு தலைமை பிரச்சனையில் ஏதேதோ பேசி குழப்புகிறார். திஸ்ஸ விகாராதிபதிக்கு பதவி வழங்கிய பின்னே தீவிரமாக இந்தப்பிரச்சனை பற்றி பேசினார். விகாரை கட்டும்பொழுதே இவருக்குத் தெரியும். அப்போ இவர் அதை கண்டிக்கவோ, தடுக்கவோ, அனுமதி பெற்று கட்டுங்கள் என்று அறிவுத்தவோ இல்லை. அதிலும் இப்போதைய காணிக்காரர் ஒருவர் அந்த விகாரைக்கு ஐந்து பரப்பு விட்டுக்கொடுத்திருக்கிறாராம். எல்லாம் நம்முன்னோர் விட்ட தவறு. அவர்கள் நல்லிணக்கத்தோடு பேதம் பாராட்டாமல் வாழ்ந்தார்கள், இப்போ அதுவே இனத்துக்கு மதத்திற்கு பேரிடராக மாறியுள்ளது.

2 hours ago, nedukkalapoovan said:

இந்தப் பிரச்சனை சர்வதேச மயப்படாமல்... தமிழர்களுக்கு விடிவில்லை...!!

அதுதான் ஒரே தீர்வு. ஆனால் அது ஒரு இனப்பிரச்னையுமில்லை, அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும் நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர். அது நடப்பதென்றால் எப்பவோ நடந்திருக்கும், அது நடக்க வாய்ப்பேயில்லை. பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்; நாமே நம்மை ஆண்டிருப்போம். இப்போ இந்தப்பிரச்சனை அவர்களுக்கு பொழுதுபோக்கு, பேசுபொருள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

நம்மில் சிலரும் அடித்துக்கூறுகின்றனர்.

அவர்களைத்தான் யாழில் அனுர காவடிகள் என்போம்.

1 hour ago, satan said:

அப்படியொரு பிரச்சினையும் நாட்டில் இல்லை, சர்வதேசம் தலையிடத்தேவையில்லை என்று சிங்களமும்

அதென்ன சிங்களம்? அனுர எண்டு சொல்ல வாய் வருதுகுதில்லையோ?

1 hour ago, satan said:

பிரித்தானியா நம் நாட்டுக்குள் நுழைந்து நமது அரசியல் அதிகாரங்களை, நிலங்களை குழப்பாமல் இருந்திருந்தால்;

இங்கே இருந்த 100 வருட போத்துகேய ஆட்சி, 100 வருட டச்சு ஆட்சி எங்கே காணோம்?

இன்னொரு திரியில் சொன்னேன்…

தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி. குறைந்தபட்சம் பிரிவேனா பள்ளிகூடமாவது வரும்.

என்னமாரி? மலையக மக்களை கூப்பிட்டு இருத்துவோமா?

நத்தங் அபி ஒக்கமலா பெளத்த சிங்க-லே வெலா, நாதாயோ வாகே ஒக்கட்டம ஜீவத் வெமுத?

  • கருத்துக்கள உறவுகள்

களத்திற்கு கொசு மருந்து அடிக்கவேணும், கொசு பெருகி தொல்லை தாங்க முடியவில்லை. இது தென்பகுதியில் இருந்து வந்த கொசுபோல் தெரிகிறது, விளங்காத கிணுகிணுப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.