Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி குறித்த வதந்திகள்!

Featured Replies

கடந்த வாரங்களில் சிங்கள தேசத்தின் ஊடகங்களிலும், சிங்களத்திற்கு சார்பான தமிழ் ஊடகங்களிலும் வன்னி குறித்து இரண்டு பரபரப்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டது என்பது ஒன்று, தேசியத் தலைவர் விமானக் குண்டுவீச்சில் காயமடைந்து விட்டார் என்பது மற்றொன்று.

இந்த இரண்டு செய்திகளும் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் சிலரிடம் குழப்பங்களை ஏற்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது. இந்தச் செய்திகள் மிகவும் திட்டமிட்டு திறமையான முறையில் வெளிக்கொணரப்பட்டிருந்தன.

கடந்த வாரங்களில் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் பணியகங்களின் தொலைபேசிகள் செயலிழந்து போயிருந்தன. சில பணியகங்களில் தொலைபேசி மணி அடித்தும் யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து ஒரு சில நாட்கள் நிலைமை இப்படித்தான் இருந்தது.

வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் சில பொறுப்பாளர்களுடைய தொலைபேசி இலக்கங்கள் பல ஊடகவியலாளிடம் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர், படைத்துறைப் பேச்சாளர் என்று பலருடைய தொலைபேசி இலக்கங்கள் ஊடகவியலாளர்களிடம் இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயமும் அல்ல. அதே போன்று விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் பலருடைய தொலைபேசி இலக்கங்களை சிறிலங்கா புலனாய்வுத் துறையும் பல தரப்பிடம் இருந்து பெற்று வைத்திருக்கிறது.

இந்த நிலையில் வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் பணியகங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் இருப்பது உடனடியாக சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு தெரிய வந்தது. இதை வைத்துத்தான் வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் செயலிழந்து விட்டது என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை கதை கட்டி விட்டது.

வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளின் காவல்துறை, நீதித்துறை போன்றன இயங்கவில்லை என்றும், விடுதலைப் புலிகளின் நடமாட்டம் எதுவும் நகரப் பகுதிகளில் காணப்படவில்லை என்றும், எல்லோரும் வன்னிக்காட்டுக்குள் ஓடிவிட்டார்கள் என்றும் சிங்கள சார்பு ஊடகங்கள் பரபரப்புச் செய்திகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டன.

கிழக்கைப் போன்று சிறிலங்கா இராணுவம் வன்னியையும் கைப்பற்றி விடும் என்ற அச்சத்தில் விடுதலைப் புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கிவிட்டதாக பல அப்பாவிச் சிங்கள மக்கள் நம்பவும் செய்தார்கள். இந்த நேரத்தில் மகிந்த ராஜபக்ஸவும் விரைவில் தன்னுடைய படையினர் கிளிநொச்சியையும், முல்லைத்தீவையும் கைப்பற்றி விடுவார்கள் என்று மீண்டும் ஒருமுறை அறிவித்தார்.

முன்னைய ஜனாதிபதிகளைப் போன்று விடுதலைப் புலிகளை போரில் வென்றுவிடலாம் என்று மகிந்தவும் அப்பாவித்தனமாக நம்புவதுதான் இதில் பெரிய வேடிக்கை.

வன்னியில் ஒரு சில நாட்கள் விடுதலைப் புலிகளின் பணியகங்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனதற்கு காரணமே வேறு. வன்னியில் சிறிலங்காப் வான்படையினர் மேற்கொண்டு வரும் வான்தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.

இம் முறை நடந்து வரும் போரில் சிறிலங்கா வான்படை பல வல்லரசு நாடுகளின் புலனாய்வு, தொழில்நுட்ப உதவிகளை பெற்று தாக்குதலை நடத்தி வருகின்றது. ஆரம்பத்தில் வான்தாக்குதலில் கொல்லப்படும் போராளிகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. பின்பு மாற்று வழிகளை கையாண்டு, வான்தாக்குதலால் போராளிகளுக்கு ஏற்படும் இழப்புக்களை விடுதலைப் புலிகளை பெருமளவு குறைப்பதில் வெற்றி கண்டார்கள். ஆயினும் சில நேரங்களில் பிரிகேடியர் தமிழ்செல்வனுடைய வீரச் சாவு போன்ற சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றது.

சாமாதான காலத்தை பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் பணியகங்களை இனம் கண்டு வைத்திருக்கும் சிறிலங்கா அரசு தன்னுடைய வான்படை மூலம் அப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்துகின்றது. தொலைபேசி அழைப்புக்களையும் ஒட்டுக் கேட்டு விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களின் நடமாட்டங்களை அறியும் முயற்சியிலும் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு ஈடுபட்டுள்ளது.

சிறிலங்கா அரசின் இந் நடவடிக்கைகளை குழப்பும் முகமாகவே வன்னியில் பல மாற்றங்கள் கடந்த வாரங்களில் நடந்தன. அப்பொழுது தொலைபேசிகள் தொடர்பு அற்று இருந்ததை வைத்தே, சிறிலங்கா புலனாய்வுத்துறை தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டதாக கதையை திரித்தது.

விடுதலைப் புலிகளின் காவல்துறை இயங்கவில்லை என்ற கதையையும் சிறிலங்கா புலனாய்வுத்துறை பரப்பியது. தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளராக இருந்த பா. நடேசன் தற்பொழுது அரசியற்துறைப் பொறுப்பாளராக இருக்கின்றார். தமிழீழ காவல்துறையின் புதிய பொறுப்பாளராக இளங்கோ என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழீழ காவல்துறை வன்னியில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

இதில் தமிழீழ நிர்வாகம் செயலிழந்து விட்டது என்று சிறிலங்கா புலனாய்வுத்துறையால் பரப்பப்பட்ட செய்தியை விட தேசியத் தலைவர் காயமடைந்து விட்டார் என்று பரபரப்பட்ட செய்தியே பல மட்டங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், தமிழ்நாட்டிலும் இந்தச் செய்தியின் தாக்கம் உணரக் கூடியதாக இருந்தது.

தேசியத் தலைவர் நின்றிருந்த பங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பங்கர் சரிந்து விழுந்ததில் தேசியத் தலைவர் காயமடைந்ததாகவும், அவருக்கு திலீபன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் செய்தி பரப்பப்பட்டது. தேசியத் தலைவர் பற்றி வதந்திகளை எதிரிகள் பரப்புவது இது முதன் முறையல்ல. அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்று கூட இந்திய இராணுவம் முன்பு ஒரு பொய்யான செய்தியை பரப்பியிருந்தது.

இந்திய இராணுவம் தேசியத் தலைவர் பற்றி பரப்பிய செய்தியை அன்றைக்கு ஈழத்தில் வாழ்ந்த மக்கள் யாரும் நம்பவில்லை. அதை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. ஆனால் அப்பொழுது புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும், தமிழ்நாட்டு மக்களும் இந்தச் செய்தியால் குழப்பம் அடைந்து காணப்பட்டார்கள். இம் முறையும் தேசியத் தலைவர் காயமடைந்தார் என்று செய்தி புலம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மத்தியில்தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் உண்மை உடனடியாக வெளிவந்து விட்டது. தேசியத் தலைவர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட திலீபன் மருத்துவமனை பொதுமக்கள் சென்று வருகின்ற ஒரு பொது மருத்துவமனையாகும். அங்கே தேசியத் தலைவர் சிகிச்சை பெற்றுதாக சொல்லப்பட்டதானது, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்பதைக் காட்டிவிட்டது.

அத்துடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவுதினத்தில் தேசியத் தலைவர் அஞ்சலி செலுத்தும் காட்சி ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இவைகள் அனைத்தும் உண்மையை மக்களுக்கு புரிய வைத்தது. மேலதிகமாக தேசியத் தலைவர் காயமடையவில்லை என்று விடுதலைப் புலிகளாலும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் தேசியத் தலைவர் காயமடைந்தார் என்ற செய்தியை சிறிலங்கா புலனாய்வுத்துறை வெளிக்கொணர்ந்த விதம் சில விடயங்களை சிந்திக்கத் தூண்டுகிறது. அண்மைக்காலமாக எமது ஊடகங்களுக்கு, குறிப்பாக இணைய ஊடகங்களுக்கு ஒரு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிங்கள தேசத்திற்கு சார்பான ஊடகங்களில் வரும் ஆய்வுக் கட்டுரைகளை தமிழ்படுத்தி மறுபிரசுரம் செய்கின்ற "கெட்ட" பழக்கம்தான் அது.

சண்டைகளில் சிறிலங்காப் படைகளுக்கு ஏற்படும் இழப்புக்களை விடுதலைப் புலிகள் முன்பு போல் வெளியிடுவது இல்லை. சிறிலங்காப் பாதுகாப்புத் தரப்பு சொல்கின்ற தரவுகள்தான் சொல்லப்படுகின்றன. இந்த நிலையில் சிறிலங்காப் படைகளுக்கு ஏற்படும் உண்மையான இழப்புக்களை சிங்கள தேசத்து ஊடகங்கள்தான் வெளியிடுகின்றன.

இந்த நிலையில் இந்த ஊடகங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு கட்டுரையின் பெரும் பகுதி தமிழீழ தேசியத்திற்கு சார்பான ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மறுபிரசுரம் செய்வது அடிக்கடி நடக்கின்றது. சிறிலங்காப் படைகளுக்கு ஏற்படும் இழப்புக்களை வெளியிடும் இந்தக் கட்டுரைகள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை உற்சாகமூட்டும் பொருட்டே தமிழாக்கம் செய்யப்படுகின்றது.

சிங்கள தேசத்தின் ஊடகங்களில் வெளிவரும் கட்டுரைகளை அடிக்கடி தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் வெளியிடுவது என்பது, சிங்கள தேசத்து ஊடகங்கள் "உண்மையை சொல்கின்ற நடுநிலை ஊடகங்கள்" என்ற தோற்றத்தை கொடுத்துவிடும் என்பதை பலர் சிந்திக்கத் தவறிவிட்டனர்.

தேசியத் தலைவர் காயமடைந்தார் என்ற பொய்யான செய்தியை கொண்ட கட்டுரையை கொழும்பில் இருந்து வெளிவரும் "நேசன்" பத்திரிகையில்தான் முதலில் வெளிவந்தது. இந்த "நேசன்" பத்திரிகை இதற்கு முதல் சிங்கள இராணுவத்திற்கு ஏற்படும் இழப்புக்களை குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. அவைகளை எல்லாம் எமது தமிழ் ஊடகங்கள் "நேசன்" பத்திரிகையின் பெயரைக் குறிப்பிட்டு தமிழாக்கம் செய்து வெளியிட்டும் இருந்தன.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி சிறிலங்கா வான்படையின் மிக் விமானம் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக வெளிவந்த செய்தியும் "நேசன்" பத்திரிகையில்தான் வெளிவந்தது.

இவைகளை எல்லாம் எமது தமிழ் ஊடகங்கள் உற்சாகமாக மறுபிரசுரம் செய்தன. ஆனால் "தேசியத் தலைவர் காயமடைந்தார்" என்ற செய்தயை "நேசன்" பத்திரிகை வெளியிட்ட போது, எங்களுடைய ஊடகங்கள் வாயடைத்துப் போயின. இங்கேதான் சிறிலங்காப் புலனாய்வுத்துறை எவ்வாறு திறமையாக செயல்படுகின்றது என்பது தெரிகின்றது.

எதிரிகளை எமக்கு சாதகமாக பயன்படுத்துவது என்பது நல்ல விடயம்தான். எதிரி நாட்டு ஊடகங்கள் வெளியிடுகின்ற தகவல்கள் எமக்கு சார்பாக இருக்கின்ற போது, அதை பயன்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லைத்தான். ஆனால் அதை அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் ஒரு அளவோடும் செய்ய வேண்டும்.

நாம் எதிரியை பயன்படுத்துவது போய், எதிரி எம்மை பயன்படுத்தினான் என்ற நிலை வரக்கூடாது.

Edited by சபேசன்

சபேசன் உதுக்குத்தான் முந்தி சாதுரியமாக "தென்னிலங்கை ஊடகம்" "தென்னிலங்கை ஆங்கில ஊடகம்" "தென்னிலங்கை முன்னணி ஊடகம்" என்று சாதுரியமா மொழி பெயர்ப்பு செய்தனாங்கள். பிறகு காப்புரிமை கத்தரிக்கை எண்டு வெளிக்கிட்டு... <_<

இனி முந்தினமாதிரி பெயரை குறிப்பிடாது மொழிபெயர்ப்பு செய்து போடுறது தான் நல்லம் போல கிடக்கு. நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறியள்;?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைபேசி அழைப்புக்களையும் ஒட்டுக் கேட்டு விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களின் நடமாட்டங்களை அறியும் முயற்சியிலும்

சிறிலங்கா அரசு இந் நடவடிக்கைகளை குழப்பும் முகமாகவே வன்னியில் பல மாற்றங்கள் கடந்த வாரங்களில் நடந்தன. அப்பொழுது தொலைபேசிகள் தொடர்பு அற்று இருந்ததை வைத்தே, சிறிலங்கா புலனாய்வுத்துறை தமிழீழ நிர்வாகம் வன்னியில் செயலிழந்து விட்டதாக கதையை திரித்தது.

இதைதானே நாங்கள் சொல்லும் போது புலிகளுக்கு ஆலோசனை சொல்ல வேண்டாம் என்று சிலபேர் இங்கே துள்ளினவை :(

ஆ ஒன்று சொல்ல மறந்து போனேன் இந்த குத்தி காசுகளையும் (சில்லறை) கொண்டு திரியாமல் இருக்கிறது நல்லம் பாருங்கோ. உதாரணமா உங்களுக்கு தெரியாமலேயே குத்தி காசு உங்கள் வாகனத்துக்குள்ளே இருந்தால் அதுவே போதும்.....

இனிவருவினம் காசுகிசு லுசு என்று எழுத சிலபேர் <_<<_<

தொலைபேசி மற்றும் கைபேசி உதவியுடன் ஒருவரின் இருப்பிடத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம்....

முன்பு ரஷ்யா இத்தகைய தொழில் நுட்பத்தை பயன் படுத்தியே பல செச்னிய போராளித் தலைவர்களை கொன்றது........

அதைப்போலவே பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்கள் பல நிருபர்கள் மற்றும் வெளி நாட்டவரிடம் ... அடிக்கடி தொடர்பு கொண்ட படி இருந்ததால் அவரது இருப்பிடத்தை எளிதாக கண்டு பிடித்திருக்கலாம்.

எனவே புலிகள் தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்து பல மாற்றங்கள் செய்திருக்கலாம்.....

என்னத்த சொல்ல........ கண்ணைகட்டி காட்டுல விட்டமாதிரி இருக்கு.

விடிவு ஒன்று வரும்... வரவேண்டும்.. கட்டயம் வரும். காலத்தின் இயல்பே மாறுவதுதான். பொறுப்போம்.

போற போக்கைப் பார்த்தால் தாங்கள் சொல்லித்தான் அங்கை மாற்றங்கள் வந்தது என்று சொல்வார்கள் போல் இருக்கிறது. எங்களுக்குள்ள கடமையை நாங்கள் ஒழுங்காச் செய்தால் அங்கு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும். அதை விட்டிட்டு, சும்மா இருந்து கதைப்பதால் ஒரு பயனும் இல்லை. முதலில் எங்கள் கடமையை நாங்கள் செயலில் காட்டி விட்டுப் பேசுவோமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போற போக்கைப் பார்த்தால் தாங்கள் சொல்லித்தான் அங்கை மாற்றங்கள் வந்தது என்று சொல்வார்கள் போல் இருக்கிறது. எங்களுக்குள்ள கடமையை நாங்கள் ஒழுங்காச் செய்தால் அங்கு எல்லாம் மிகவும் நன்றாக இருக்கும். அதை விட்டிட்டு, சும்மா இருந்து கதைப்பதால் ஒரு பயனும் இல்லை. முதலில் எங்கள் கடமையை நாங்கள் செயலில் காட்டி விட்டுப் பேசுவோமே.

அந்த காலம் மலையேறிவிட்டது. இந்திய அடிமைகள் ஈழத்தமிழரை பலவிதங்களிலும் முட்டாளாக்குவது எமக்கு தெரியும். இவைகளின் செயற்பாடுகள் எழுத்துவடிவங்கள் எமக்கு புரியாதவை அல்ல.

புலிகளை புகழ்பாடுவது போல இருக்கும் இவர்களின் எழுத்து வடிவம். ஆனால் உற்று நோக்கினால் அவை ஈழத்தமிழரை புதை குழிக்குள் தான் தள்ளும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே நேரடி ஒலி ஒளி பரப்புக்களையும் முன்னெச்சரிக்கையா தவிர்த்தாச்சு தானே?...

  • கருத்துக்கள உறவுகள்

ஓயா! நேரடி(!) ஒலிபரப்பு - அப்படி ஒன்று என்றுமே இருந்ததில்லை.

அதைப்பற்றி எமக்கு எந்த பயமும் வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
ஏற்கனவே நேரடி ஒலி ஒளி பரப்புக்களையும் முன்னெச்சரிக்கையா தவிர்த்தாச்சு தானே?...

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

. புதிய நிலமையில் கள தகவல் இல்லாமல் எதிரி தொழில் நுட்ப துப்பை பகுத்தாய்ந்து (decode) புரிந்துகொள்ளமுடியாது. இதனால் அண்மைக்காலங்களில் எதிரிக்கு ஏற்பட்டிருந்த பல அனுகூலங்கள் இனி இல்லாதொழியும்.

இதில் நீங்கள் கூறிப்பிடுவது தகவல் பரிவர்தனையா? அல்லது வேறு ஏதாவதா?

  • கருத்துக்கள உறவுகள்
இதில் நீங்கள் கூறிப்பிடுவது தகவல் பரிவர்தனையா? அல்லது வேறு ஏதாவதா?

Edited by poet

சபேசனது வாதங்கள் மறுக்கப்படுவதற்கில்லை. வன்னியில் நடைபெறும் மாற்றங்களை அறிந்து கொள்வதற்கு எதிரி கைக்கொள்ளும் தந்திரங்கள், அதற்குத் துணைபோகிறவர்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் வன்னிக்கு தேவைகளுண்டு. அவை இங்கு விவாதிக்கப்படும்போது அதிலிருந்து சிலர் எதையோ தேடமுயல்கின்றார்கள். :rolleyes:

இதில் துள்ளி விழப்போகிறவர்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்துக்கள் யதார்த்தமானதும், தேவையானதும் கூட. புலிகள் என்ன செய்ய வேண்டுமென்பதை நாங்கள் சொல்லத் தேவையில்லை. எது நடக்கப் போகிறதோ அது சரியாகவே நடக்கும்.

சிங்கள ஊடகங்களில் வரும் "உண்மைச் செய்திகள்" தமிழர் படிப்பதற்காக வருவதில்லை. சிங்களவர் எங்கே பிழை விடுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி அதைத் திருத்துவதற்காக எழுதப்படுபவை. அதில் வரும் வன்னி சம்பந்தமான செய்திகள் சிங்களவரை மகிழ்ச்சிப்படுத்தவும், தமிழரின் உளவுரனைக் குறைக்கவும் எழுதப்படுபவை. இதை தூக்கிப் பிடித்துக்கொண்டு தமிழாக்கம் செய்து தமிழரைக் குழப்புவதை ஏற்றுக்கொள்ளமுடியாது !

அதை விடுத்து" சிங்களப் பேப்பரில கருணா குழு உடைவைப்பற்றி எழுதினால் வாயை மூடிக் கொண்டு நம்புறியள், அனால் தலைவர் காயப்பட்டு விட்டார் என்று எழுதினால் இல்லையென்று துள்ளிக் குதிக்கிறியள் " என்று புதிய விளக்கம் தேட நினைப்பதெல்லாம் பம்மாத்து !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது நடக்கப் போகிறதோ அது சரியாகவே நடக்கும்.

புலிகளுக்கு சார்பாகவா? அல்லது பாதகமாகவா நடக்கும்?

அவசிய அறிக்கை

''ஆமியும் நாங்களும்'' :rolleyes:

Edited by Netfriend

அப்பாட உண்மையோ பொயோ மனதுக்கு ஓரளவு நின்மதியை தருகிற மாதிரி ஆய்வாளர் எழுதி இருக்கிறார்

எதுற்க்கும் மதில் சுவர் பூனை மாதிரி கருத்து எழுதுவோம் அப்ப தான் சந்தர்பத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாட உண்மையோ பொயோ மனதுக்கு ஓரளவு நின்மதியை தருகிற மாதிரி ஆய்வாளர் எழுதி இருக்கிறார்

எதுற்க்கும் மதில் சுவர் பூனை மாதிரி கருத்து எழுதுவோம் அப்ப தான் சந்தர்பத்துக்கு ஏற்ற மாதிரி மாறிக்கலாம்.

:huh::D:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்-லினக்ஷ், நான் சொன்னது புலிகள் நடத்தவிருப்பதைப் பற்றி. புலிகளுக்கு நடக்கப் போவதைப் பற்றியல்ல !

ஆகா... வசி அண்ணா.... யாழ் களத்தில நிறயப் பேர் மதிலில இருக்கிற மாதிரித்தான் எளுதுறாங்கள்...கேட்டால், எல்லாமாதிரியும் அலசீனமாம்.. ஆனால் துணிவா சொன்னது நீங்கள் மட்டும்தான்... உங்கள் வீரத்துக்கு முன்னால் அடியேன் சிறுமையடைகிரேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.