Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓரத்தில் சில கூச்சல்கள்

Featured Replies

அவர்கள்

சூரியனை தேடிநடக்கவில்லை

சூரியனாக மாறினார்கள்

இருள் மறைய தொடங்கியது

என்னும்

அவர்கள் மாறுகின்றார்கள்

புளியமர இடுக்கினூடே

நிலவு மேறகில் இருந்து

இறுமாப்புடன் வேகமாக எழும்பியது

நிலவுக்கு எதிர்ப்புறமாக

கிழக்கு நோக்கி நடந்தார்கள்

நிலவும் சில கிளிகளும்

கெக்கட்டம் விட்டு சிரித்தது

கேட்டது

விடியலை நோக்கி

நடந்தார்கள்

நடுங்கிய தேகத்திலும்

வன்மம் வான்வரை எட்டி நின்றது

தள்ளாடி தடுமாறினார்கள்

இருந்தும்

பசியும் தாகமுமும் வலியும்

முன்னேற சக்தி தந்தது

செவிப்பறைகளில்

வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு

தாலாட்டின

தொடர்ந்து வந்தது நிலவு

சிரித்துக்கொண்டே வந்தது

ஏளனம் செய்தது

எள்ளிநகையாடியது

என்ன ஒரு இறுமாப்பு

இது யார் தந்தது?

சூரியன் இல்லை என்றால்

நீ குருடன் என்பதை

எப்படி மறந்தாய்

உனக்கெல்லம் சிரிப்பு ஒரு கேடா

குறையில் இருந்தும்

கறையில் இருந்தும்

என்றும் மீள முடியாத நிலவு

கதிரவனின் முழுமையில்

முகம்பார்த்து

அறிவாளி என்றது

ஆனால் ஏன் என்று கேட்டு

குரைக்க

நாயும் அங்கில்லை

உன்னை உவமை சொல்லி

சோறூட்ட தாயும் அங்கில்லை

மீறி ஊட்டினாலும்

குழந்தையும் ஊட்டிய சோற்றை

உன்னை நோக்கி

துப்பி விடுகின்றது.

தோட்டக்காரன் பாடுபட்ட

கெய்யாத்தோப்பில்

கனிகளை மட்டும்

களவாடி உண்டு கொழுத்து

கிளிகள் சில கூச்சல் போடுது

சொண்டு மட்டும் தடித்த

பச்சைக் கிளிகளின்

சேட்டைகள் கூடிப்போச்சு

பனை வடலிக்குள்

இருக்கும் பச்சோந்திகள்

பசியாற பூச்சி பிடிக்க

நிறம் மாறிக்கொள்ளும்

சாப்பாடு இருந்தால்

அது நிறம் மாறது

பனி பெய்யும் நாடுகளுக்கு

பறந்து வந்த பச்சோந்திகள்

வைன் குடிக்க நிறம் மாறுது

சாராயக்கடையில் இருந்து

திரும்பிய ஒன்று

சந்துக்குள் சிந்து பாடுது

ஊரான் வீட்டு மரவெள்ளியில்

மரம் நிற்க கிழங்கை மட்டும்

நோண்டி உண்ட பன்றிகள் சில

வெள்ளை மெத்தையில் புரண்டபடி

கமக்காரனின் நலத்திற்கு

சித்தாந்தம் பேசுது.

நிலவின் ஒளியில்

பன்றிகளும் பச்சோந்திகளும்

கிளிகளும் சேர்ந்து

மனித உரிமை பேசிய

பகிடிகளும் நிறைய

ஏரோட்டினவனின்

கோவணத்தை அவிட்டு

நோகாமல் ரை கட்டின காலமல்ல இது

விழித்து விட்டார்கள்

ஏர் முனையாலே

எழுதவும் பழகி விட்டார்கள்

இனி கோவணத்தை அல்ல

கொழுவில் புரளும் புதியமண்ணை

தொட்டு பொட்டு வைக்கவும்

முடியாது

Edited by sukan

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் எங்கிருந்து எதை எடுத்து இங்கு நான் விமர்சிப்பது?

அத்தனை வரிகளும் அருமையான செதுக்கல். சூரியப்பந்தின் ஒளியில் மிளிரும் நிலாக்கும், சொண்டு வளைந்த கொழுத்த பச்சைக்கிளிகளுக்கும், பனைவடலிப் பச்சோந்திகளுக்கும் சரியான சாட்டை. கிழக்கை நோக்கிய பயணத் தொடர்ச்சியில் ஏர்முனையால் எழுதவும் பழகிவிட்டார்கள் என்று சொல்லிச் செல்லும் கருத்தின் ஆழம் வரிகள் கோர்த்துப் புலம்பும் காதற்கிறுக்கர்களுக்கு வராது. வலிகள் தாண்டும் வாய்மை புலவனுக்கே சாத்தியம். வாழ்த்துக்கள். மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

தோட்டக்காரன் பாடுபட்ட

கொய்யாதோப்பில்

கனிகளை மட்டும்

களவாடி உண்டு கொழுத்து

கிளிகள் சில கூச்சல் போடுது

சொண்டு மட்டும் தடித்த

பச்சைக் கிளிகளின்

சேட்டைகள் கூடிப்போச்சு

உண்மைதான் சுகன்.நல்லவற்றையே விதைத்துக்கொண்டு போவோம். நல்லதையே அறுவடை செய்வோம். கவிதையால் சாடிய விதம் அருமையிலும் அருமை.பாராட்டுக்கள்.

சுகன் நல்லதொரு கவிதை. விடயத்தை சிறப்பாக முன்வைத்திருக்கிறீர்கள். இறுதி வரிகள் சிறப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சூரியனை தேடி நடக்கவில்லை, சூரியனாக மாறினார்கள்.இருள் மறைய தொடங்கியது

என்னும் அவர்கள் மாறுகின்றார்கள்.

வசனங்களை உடைச்சுப் போட்டிட்டு கவிதை என்றால்...........????! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஏரோட்டினவனின்

கோவணத்தை அவிட்டு

நோகாமல் ரை கட்டின காலமல்ல இது

விழித்து விட்டார்கள்

ஏர் முனையாலே

எழுதவும் பழகி விட்டார்கள்

இனி கோவணத்தை அல்ல

கொழுவில் புரளும் புதியமண்ணை

தொட்டு பொட்டு வைக்கவும்

முடியாது

நல்ல வரிகள் சுகன் ஆனால் எனக்கு கொழுவில் புரளும் என்கிற வரியில் அந்த கொழுபுரியவவில்லை ஏர் முனையா??

  • கருத்துக்கள உறவுகள்

பனி பெய்யும் நாடுகளுக்கு

பறந்து வந்த பச்சோந்திகள்

வைன் குடிக்க நிறம் மாறுது

சாராயக்கடையில் இருந்து

திரும்பிய ஒன்று

சந்துக்குள் சிந்து பாடுது

சுகன் நல்ல கவிதை

அத்தனை வரிகளும் அழகு.

திரும்பவும் படித்து பார்த்தேன் சுகன்.

குறையில் இருந்தும்

கறையில் இருந்தும்

என்றும் மீள முடியாத நிலவு

கதிரவனின் முழுமையில்

முகம்பார்த்து

அறிவாளி என்றது

இந்த வரிகள் பலபேருக்கு பொருத்தமாகப் படுகிறது.

தத்துவார்த்த வரிகள்.

இன்னும் நிறையவே தொடர்ந்து எழுதுங்கள்.

காலத்துக்கேற்ற வரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டியதை அழகாகவே சொல்லும் வரிகள்..

நல்ல வரிகள் சுகன் ஆனால் எனக்கு கொழுவில் புரளும் என்கிற வரியில் அந்த கொழுபுரியவவில்லை ஏர் முனையா??

கலப்பையின் கொழு ஆணி (ploughshare)

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வேண்டியதை அழகாகவே சொல்லும் வரிகள்..

கலப்பையின் கொழு ஆணி (ploughshare)

நன்றிகள் கிருபன் எங்கள் வீட்டிலும் ஒரு கலப்பை இருந்தது ஆனால்்எங்களிற்கு நினைவு தெரிந்த நாளில் இருந்்து உழவுஇயந்திரம் வீட்டில் பாவனையில் இருந்தது. ஆனாலும் தைப்பொங்கலன்று வழிபாட்டில் அந்த கலப்பையை வைத்து வழிபட்டதுஞாபகம் . ஆனாலும் மாட்டு வண்டிலில் கொழுவாணி ஞாபகம் இருக்கு என்றாலும் சுகனின் சிந்தனை பாராட்டத்தக்கது

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா என்ன ஒரு ரௌத்திரம். ஆதங்கம்.

இதெல்லாம் யார்மீது? சமூகத்தின் மீதா? :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.